Jump to content

வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் தெரிவித்த எதிர்ப்பை திசைத்திருப்ப நீதியமைச்சர் சபையில் தெரிவித்த விடயம் பொய்யானது - செல்வராஜா கஜேந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் தெரிவித்த எதிர்ப்பை திசைத்திருப்ப நீதியமைச்சர் சபையில் தெரிவித்த விடயம் பொய்யானது - செல்வராஜா கஜேந்திரன்

By VISHNU

16 NOV, 2022 | 10:36 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகத்திற்கு எதிராக வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் தெரிவித்த எதிர்ப்பை மறைத்து நாங்கள் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக நீதியமைச்சர் சபையில் குறிப்பிட்ட விடயம் முற்றிலும் பொய்யானது.

இவரது கருத்தை முற்றாக கண்டித்து, நிராகரிக்கிறேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

தோல்வியடைந்த ஒற்றையாட்சி முறைமையை நீக்கி சுய நிர்ணயத்தை அங்கிகரிக்கும் வகையில் சமஷ்டியாட்சி முறைமை உருவாக்கப்பட வேண்டும். 

பூகோள அரசியல் செயற்பாட்டை இனவாதத்தை விடுத்து அரசாங்கம் விளங்கிக் கொள்ள வேண்டும். சமஷ்டியே பொருளாதார மீட்சிக்கான இறுதி தீர்வு எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கடந்த வாரம் எனது பெயரை குறிப்பிட்டு சபையில் உண்மைக்கு புறம்பான பொய் ஒன்றை முன்வைத்துள்ளார். கடந்த மாதம் 31ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடமாடும் சேவை ஒன்று இடம்பெற்றது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலம், இழப்பீட்டுக்கான அலுவலகம் ஆகியவற்றை உள்ளிடக்கிய வகையில் இந்த நடமாடும் சேவை இடம்பெற்றது. 

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் செயற்பாடுகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விமர்சிக்கிறார்கள், புறக்கணிக்கிறார்கள்.

நீதியமைச்சர் வருகை தந்த போது 'எமது உறவுகள் எங்கே' என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். போராட்டத்தில் கலந்துக் கொள்ளுமாறு எமக்கு அழைப்பு விடுத்தார்கள், அதற்கமைய நானும் போராட்டத்தில் கலந்துக் கொண்டேன்.

நீதியமைச்சர் யாழ்ப்பாண செயலக பிரிவில் ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டதை அறிந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் அங்கு சென்று அவரிடம் சில கேள்விகளை கேட்க முற்பட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். 

இவ்விடத்தில் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிராகவும், இழப்பீட்டு அலுவலகத்திற்கு எதிராக மாத்திரமே எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டதே இந்தியாவில் இருந்து வருகை தந்த இலங்கையர்களை மீள்குடியமர்த்தும் செயற்பாடுகளுக்கும், நடமாடும் சேவைக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் எவரும் போராட்டத்தில் ஈடுப்படவில்லை.

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் அவதானத்துடன் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். காணாமலாக்கபட்டோர் தொடர்பான அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கு எதிரான உறவுகளின் எதிர்ப்பை மறைத்து நீதியமைச்சர் நடமாடும் சேவைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தென்னிலங்கை மக்களிடமும், வடக்கு மக்களிடமும் அப்பட்டமான பொய்யுரைத்துள்ளார்.

நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த முயற்சிப்பாராயின் அவர் பொய்களை விடுத்து உண்மை தன்மையுடன் செயற்பட வேண்டும். 

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன என்பது குறித்து அவதானம் செலுத்தி அதற்கமைய செயற்பட வேண்டும், இல்லாவிடின் இந்த நாடும் மென்மேலும் பாதிக்கப்படும் ஆகவே நீதியமைச்சரின் பொய்யான கருத்தை வன்மையாக கண்டித்து நிராகரிக்கிறேன்.

ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயற்படும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வடக்கு மக்களின் காணிகளை இராணுவத்தினருக்கு சுபீகரித்துக் கொடுக்க முயற்சிக்கிறார். தேவையற்ற பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் வடக்கு மாகாண ஆளுநர் செயற்படுகிறார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சாதகமாக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை.

பாதுகாப்பு அமைச்சுக்கு இந்த வருடத்தை காட்டிலும் 50 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படைகளில் நான்கில் மூன்று பகுதியினர் வடக்கில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். இராணுவத்தினரால் வடக்கு மற்றும் கிழக்கு பொருளாதாரம் முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் இராணுவத்தினர் அதிகம் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் போதைப்பொருளின் மையமாக யாழ்ப்பாணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மகாவலி அபிவிருத்தி அதிகார சபை இன முரண்பாடுகளுக்கு வித்திட்டுள்ளது. ஆகவே மகாவலி அபிவிருத்தி அதிகார சபை முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும். தமிழ் மக்களின் விவசாய உரிமைகளும் தொடர்ந்து மறுக்கப்படுகிறது.

போரினாலும், இன அழிப்பினாலும் பாதிக்கப்பட்டுள்ள  தமிழ் மக்களுக்கு சார்பான எவ்வித திட்டங்களும் அரசாங்கத்திடம் கிடையாது.

புலம் பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்கும் அரசாங்கம் அதிகார பகிர்வு குறித்து அவதானம் செலுத்தவில்லை. தோல்வியடைந்துள்ள ஒற்றையாட்சி முறைமையை இல்லாதொழித்து சமஷ்டியாட்சி முறைமை உருவாக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

சுயநிர்ணய உரிமைக்கு அங்கிகாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினால் பொருளாதாரத்தை முன்னேற்ற முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராகவுள்ளோம்.

பூகோள போட்டி தன்மை தீவிரமடைந்துள்ள போது இனவாதம் தவிர்த்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.இந்த ஆட்சியில் வடக்கில் இராணுவ மயமாக்கல் தீவிரப்படுத்தப்படுகிறது. தமிழ் தேசத்தை அழிக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றார்.வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் தெரிவித்த எதிர்ப்பை திசைத்திருப்ப நீதியமைச்சர் சபையில் தெரிவித்த விடயம் பொய்யானது - செல்வராஜா கஜேந்திரன் | Virakesari.lk

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.