Jump to content

தமிழ்ப்படகு மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப்படகு மக்கள் 

15 NOV, 2022 | 01:31 PM
image

 

 

படகு மக்கள் என்று சொன்னால் ஒரு காலத்தில் வியட்நாமியர்களே நினைவுக்கு வருவர்.வியட்நாம் போரில் 1975 ஆம் ஆண்டு அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டதன் பிறகு ஆயிரக்கணக்கான வியட்நாமியர்கள் (பெரும்பாலானவர்கள் சீன வம்சாவளியினர்) தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.பலவீனமான படகுகளில் பயணம் செய்த அவர்கள் ஆழ்கடலில் அனுபவித்த அவலங்கள் தொடர்பான விபரங்கள் நடுக்கம் தருபவை. ஆபிரிக்காவில் இருந்தும்  மத்திய கிழக்கில் இருந்து ஐரோப்பாவுக்கு  மத்திய தரைக்கடலின் ஊடாக  படகுகளில் சென்ற படகு மக்களின் அவலங்கள் தனியான வரலாறு.

உலகின் படகு மக்களின் வரலாற்றுக்கு  இலங்கைத் தமிழர்களும் தங்கள் சொந்தத்தில் அத்தியாயங்களை சேர்த்துவந்திருக்கிறார்கள்.1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு இலங்கையில் இருந்து தீவிரமடையத்தொடங்கிய தமிழர்களின் வெளியேற்றம் இன்னும் முடிவுக்கு வருவதாக இல்லை.

பாக்கு நீரிணையைக் கடந்து படகுகளில் தமிழகத்துக்கு அகதிகளாக செல்லத்தொடங்கிய தமிழர்கள் நடுக்கடலில் அனுபவித்த அவலங்களை விபரிப்பின் அது பெருகிக்கொண்டே போகும்.சொந்த மண்ணில் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் புகலிடம் தேடிச் செல்கையில் கடலில் மாண்டுபோன தமிழர்களின் சரியான எண்ணிக்கை இதுவரையில் எவருக்கும் தெரியாது.

K05-03.jpg

பழைய றோமானியர்களினால் இஸ்ரேலில் இருந்து விரட்டப்பட்டதன் பின்னர் உலகம் பூராவும் அலைந்து திரிந்த புராதன யூதர்கள் போன்று இன்று இலங்கைத் தமிழர்கள் உலகின் பல நாடுகளிலும் பரந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது பாதுகாப்புத் தேடி இலட்சக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தனர்.அதிகப் பெரும்பான்மையான தமிழர்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமே வாழ்கிறார்கள். உலகில் புலம்பெயர் தமிழர்களைக் கூடுதல் எண்ணிக்கையில் கொண்ட நாடாக இன்று கனடா விளங்குகிறது.நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான கால புலம்பெயர்வை அடுத்து தற்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 15 இலட்சத்துக்கும் அதிகமானதாகும் என்பதில் சந்தேகமில்லை.

போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட தமிழர்களின் அகதி வாழ்க்கை முடிவுக்கு வரவில்லை.படகுகளில் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த பல தமிழர்கள்  இந்தோனேசியாவினதும் அவுஸ்திரேலியாவினதும் கடற்படைகளினால் இடைமறிக்கப்பட்டு தீவுகளில் அடைத்துவைக்கப்பட்ட சம்பவங்கள் ஏராளம்.

இப்போது மீண்டும் தமிழ்ப்படகு மக்கள் பற்றிய செய்திகள் சர்வதேச ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கின்றன.தென்கிழக்காசிய நாடான மியன்மாரில் இருந்து கனடா நோக்கி பலவீனமான கப்பலில் பயணம் செய்தவேளையில் வியட்நாமுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான ஆழ்கடலில் தத்தளித்த குழந்தைகள்,சிறுவர்கள், பெண்கள் உட்பட 300க்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் கடந்தவாரம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பானிய கப்பல்களினால் காப்பாற்றப்பட்டு வியட்நாமிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

வியட்நாமில் மூன்று முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இந்த அகதிகள் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புடன் (International Organisation for Migration) தொடர்பில் இருப்பதாகவும் தங்களை இலங்கைக்கு திருப்பயனுப்பவேண்டாம் என்றும் மூன்றாவது நாடொன்றில் அகதிகளாக தங்கவைக்குமாறும் அவர்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகத்திடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தங்களது விவகாரத்தில் ஐக்கிய நாடுகளின் தலையீட்டையே இந்த அகதிகள் நாடி நிற்கிறார்கள் என்று தெரிகிறது.

வியட்நாமிய அதிகாரிகளுடனும் அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்துடனும்  ஒருங்கிணைந்து அகதிகளை சோதனை செய்யும் நடவடிக்கைகளை புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மேற்கொள்ளும் என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சு சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமில் உள்ள எமது  தூதரகங்களுடன் தொடர்புகொண்டு இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து ஆராய்ந்துவருவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வியட்நாம் அகதிகளை ஏற்றுக்கொள்கின்ற ஒரு நாடு அல்ல. மியன்மார் கரையில் தங்களை கப்பலில் ஏற்றியவர்கள் கனடாவுக்கு கூட்டிச்செல்வதாக றுதியளித்தார்கள் என்று அகதிகள் கூறியதற்காக கனடா அவர்களைப் பற்றி கவனத்தில் எடுக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது.கனடிய கரையோரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மைர்களுக்கு அப்பால் நடந்திருக்கின்ற சம்பவம் இது. புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகமும் சம்பந்தப்பட்ட நாடுகளும் இந்த விவகாரத்தை எவ்வாறு கையாளப்போகின்றன என்பதை எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

அகதிகள் இலங்கைக்கு திரும்புவதற்கு மறுத்தால் அவர்கள் விசாரணைகளின் முடிவில் பலவந்தமாக நாடுதிருப்பியனுப்பப்படக்கூடிய சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை.மூன்றாவது நாடொன்றில் தங்களை அகதிகளாக தங்கவைக்குமாறு அகதிகள் கேட்கிறார்கள் என்பதற்காக எந்தவொரு  நாடும் தானாக முன்வந்து அவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழ்நிலை உருவாகும் என்பது சந்தேகமே.அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் சென்ற இலங்கையர்கள் இடைமறிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டதைப் போன்ற கதியே வியட்நாமில் உள்ள தமிழர்களுக்கும் ஏற்படுமோ?

வியட்நாம் கடலில் கடந்த வாரம் இடம்பெற்ற  சம்பவம் எமக்கு 1980 களின் நடுப்பகுதியில் கனடாவின் நியூபவுண்ட்லாந்து கரையோரமாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக 155 இலங்கைத் தமிழர்கள் இரு படகுகளில் நெருங்கியடித்துக்கொண்டு சென்ற சம்பவத்தை நினைவூட்டுகிறது.

அன்றைய மேற்கு ஜேர்மனியில் இருந்து கனடாநோக்கிய பயணத்தில் அகதிகள் ஐந்து நாட்கள் கடலில் தத்தளித்தனர்.அந்த படகு மக்களின் விவகாரம் உலகம் பூராவும் பெரும் பரபரப்புச் செய்தியாகியது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடையத் தொடங்கிய காலகட்டம் அது.இலங்கையின் நிலைவரங்கள் வெளியுலகிற்கு அம்பலமாகிவிடக்கூடாது என்பதில் அக்கறை கொண்டிருந்த சிங்கள இனவாத சக்திகள் அந்த படகு மக்களுக்கு கனடிய அரசாங்கம் தஞ்சம் வழங்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்தன.அன்பு , கருணை பற்றி உபதேசம் செய்யும் பௌத்த பிக்குமார் கூட அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை.

கனடாவிலும் படகுமக்கள் விவகாரம் ஒரு அரசியல் சர்ச்சையாக மாறியது.ஆனால்,கனடாவின் அன்றைய பிரதமர் பிறையன் மல்றோனி மிகவும் நிதானமான அணுகுமுறையை கடைப்பிடித்தார்.

" கனடா குடியேற்றவாசிகளினால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாடு. படகுகளில் வந்துசேர்ந்த மக்களுக்கு நாம் தவறிழைப்போமேயானால், நாம் கருணை தரப்பிலும் தவறிழைத்தவர்களாவோம் " என்று கூறிய அவர் அந்த படகு மக்களுக்கு தனது நாட்டில் தஞ்சம் வழங்கினார்.இன்று அப்படி ஒரு மல்றோனி எந்த நாட்டிலாவது  இருக்கிறாரா?தமிழ்ப்படகு மக்கள்  | Virakesari.lk

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nochchi said:

1.வியட்நாம் கடலில் கடந்த வாரம் இடம்பெற்ற  சம்பவம் எமக்கு 1980 களின் நடுப்பகுதியில் கனடாவின் நியூபவுண்ட்லாந்து கரையோரமாக ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக 155 இலங்கைத் தமிழர்கள் இரு படகுகளில் நெருங்கியடித்துக்கொண்டு சென்ற சம்பவத்தை நினைவூட்டுகிறது.

2அன்றைய மேற்கு ஜேர்மனியில் இருந்து கனடாநோக்கிய பயணத்தில் அகதிகள் ஐந்து நாட்கள் கடலில் தத்தளித்தனர்.அந்த படகு மக்களின் விவகாரம் உலகம் பூராவும் பெரும் பரபரப்புச் செய்தியாகியது.

🤔

கட்டுரையாளர் இதபற்றி மேலும் விளக்கமாக தெரியபடுத்தி இருக்கலாம்.

மேற்கு யேர்மனியில் இருந்தா அல்லது முன்பு கொம்யுளிச நாடாக இருந்த யேர்மன் டெமொகிறரிக் றிபப்ளிக் என்ற கிழக்கு யேர்மனியில் இருந்தா வெளிகிட்டனர்.

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாசிபருப்பில் ஒரு இனிப்பான அல்வா .........!  👍
    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.