Jump to content

சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறது பா.ஜ.க - இது உண்மையா? வரலாறு சொல்வதென்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறது பா.ஜ.க - இது உண்மையா? வரலாறு சொல்வதென்ன?

9 பிப்ரவரி 2020
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சாவர்க்கர்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

(சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதியது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சித்துப் பேசியது சர்ச்சை ஆவதை ஒட்டி இக்கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது)

விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடம் எப்போதாவது மன்னிப்பு கேட்டாரா இல்லையா என்பது போன்ற பதிவுகள் ஏதும் அரசிடம் இல்லை என்று இந்திய கலாச்சார அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒருமுறை கூறப்பட்டது.

அரசு கூறுவது என்ன?

ஆனால் தகவல் அறிந்தவர்களின் கருத்துப்படி, சாவர்க்கர் பல முறை ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டார். அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் அரசிடமிருந்து மாதந்தோறும் அறுபது ரூபாய் ஓய்வூதியமும் பெற்றார் சாவர்க்கர்.

சாவர்க்கர் அந்தமான் செல்லுலார் சிறையிலிருந்தபோது பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டாரா என்ற கேள்வி நாடாளுமன்றத்தில் எழுந்தது.

 

அப்போது இது குறித்துப் பேசிய மத்திய கலாசார அமைச்சர் பிரஹ்லாத் படேல், சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டாரா இல்லையா என்பதை தெளிவுபடுத்தும் பதிவுகள் ஏதும் அந்தமான் -நிக்கோபார் நிர்வாகத்திடம் இல்லை என்று கூறியிருந்தார்.

"அந்தமான் மற்றும் நிக்கோபார் நிர்வாகத்தின் கலை மற்றும் கலாசாரத் துறையிலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, செல்லுலார் சிறையில் இருந்தபோது, அவர் மன்னிப்பு கேட்டார் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களோ அல்லது கருணை மனு கொடுத்ததாகவோ எந்த பதிவும் இல்லை" என்று அமைச்சர் கூறியிருந்தார்.

பாரத ரத்னா விருது

இந்து மதத் தலைவர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நேரத்தில் மத்திய அரசின் இந்த கருத்து வெளிவந்தது. ஆளும் பாஜக அரசும் அதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன.

2019 ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போதும், சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜகவினர் எழுப்பி, தேர்தல் களத்தை சூடாக்கினார்கள்.

இருப்பினும், மகாத்மா காந்தி படுகொலையில் தொடர்புடையவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்று கோருவது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. மறுபுறம், இந்த வழக்கில் சாவர்க்கர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.

சாவர்க்கர் மற்றும் அவர் தொடர்பான சர்ச்சைகள் பற்றி பிபிசி செய்தியாளர் ரெஹான் ஃபஸல் தனது கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். அதிலிருந்து சில பகுதிகள்…

 

சாவர்க்கர்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

சாவர்க்கர் கடலில் குதித்து தப்பித்தார்

சாவர்க்கர் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ள நிரஞ்சன் தக்லே இவ்வாறு கூறுகிறார்: "நாசிக் மாவட்ட ஆட்சியர் ஜாக்சனின் கொலை தொடர்பாக சாவர்க்கரின் சகோதரர் 1910 இல் முதன்முதலில் கைது செய்யப்பட்டார்".

"படுகொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு துப்பாக்கியை லண்டனில் இருந்து தனது சகோதரருக்கு அனுப்பியதாக சாவர்க்கர் மீது குற்றம் சாட்டப்பட்டு, 'எஸ்.எஸ். மெளர்யா' என்ற கப்பல் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். கப்பல் பிரான்சில் உள்ள மார்ஸ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டபோது, கப்பலின் கழிப்பறை ஜன்னல் வழியாக சாவர்க்கர் கடலில் குதித்து தப்பித்தார். "

தனது அரசியல் கருத்துக்களுக்காக புனேவின் பெர்குசன் கல்லூரியில் இருந்து சாவர்க்கர் வெளியேற்றப்பட்டார். 1910 ஆம் ஆண்டில், நாசிக் கலெக்டர் கொலை வழக்கில் லண்டனில் அவர் கைது செய்யப்பட்டார்.

'பிரேவ்ஹார்ட் சாவர்க்கர்' என்ற சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தக்கத்தை எழுதிய அசுதோஷ் தேஷ்முக் பல விஷயங்களை கூறுகிறார். "சாவர்க்கர் திட்டமிட்டு தனது இரவு கவுனை அணிந்திருந்தார். கழிப்பறையில் இருக்கும் கைதியை கண்காணிப்பதற்காக கழிப்பறையில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. சாவர்க்கர் தனது கவுனை கழற்றி கண்ணாடியை மூடிவிட்டார்."

"அவர் ஏற்கனவே கழிப்பறையின் ஜன்னலை அளவிட்டிருந்தார். அதன் வழியாக வெளியேறி தப்பித்துவிடலாம் என்றும் கணித்து வைத்திருந்தார். அதேபோல், சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு மெலிந்த உடல்வாகைக் கொண்டிருந்த சாவர்கர், ஜன்னலில் வழியாக லாவகமாக இறங்கி கடலில் குதித்துவிட்டார்."

 

1910 மார்ச் 13 அன்று விக்டோரியா நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட சாவர்க்கரின் புகைப்படம்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

 

படக்குறிப்பு,

1910 மார்ச் 13 அன்று விக்டோரியா நிலையத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட சாவர்க்கரின் புகைப்படம்

தேஷ்முக் மேலும் எழுதுகிறார், "கடலில் நீந்தும்போது சாவர்க்கருக்கு காயம் ஏற்பட்டு, ரத்தம் வரத் தொடங்கியது. அவர் தப்பித்ததை அறிந்த பாதுகாப்புப் படையினரும் கடலில் குதித்து நீந்தியவாறே அவரைத் துரத்திக் கொண்டு சென்றனர்."

"சுமார் 15 நிமிடங்கள் நீந்திய பிறகு கரையை அடைந்தார் சாவர்க்கர். முதல் முறை அவர் வழுக்கி விழுந்தார். ஆனால் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்று தரைப்பகுதிக்கு சென்ற அவர் வேகமாக ஓடத் தொடங்கினார், ஒரு நிமிடத்தில் அவர் 450 மீட்டர் தூரத்தை கடந்தார்."

"டிராம்களும் கார்களும் இருபுறமும் ஓடிக்கொண்டிருந்தன. கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்த சாவர்க்கர் ஒரு போலீஸ்காரரைப் பார்த்ததும் அவரிடம் சென்று ' அரசியல் தஞ்சம் கோரி வந்திருக்கிறேன். மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் செல்லுங்கள்' என்று ஆங்கிலத்தில் கூறினார். அவரை துரத்திக் கொண்டு ஓடி வந்த பாதுகாப்புப் பணியாளர்கள், "திருடன்! திருடன்! அவரைப் பிடியுங்கள்" என்று கூச்சலிட்டனர். சாவர்க்கர் கடுமையாக எதிர்த்த போதிலும், பலரும் சேர்ந்து அவரைப் பிடித்துவிட்டனர்."

 

சாவர்க்கர்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

அந்தமான் செல்லுலர் சிறை செல் எண் 52

இப்படி சாவர்க்கரின் தப்பிக்கும் முயற்சி சில நிமிடங்களில் முடிவடைந்தது, அடுத்த 25 ஆண்டுகளுக்கு அவர் ஏதோ ஒரு வடிவத்தில் ஆங்கிலேய அரசின் கைதியாகவே இருந்தார் சாவர்கர்.

25-25 ஆண்டுகள் என இரண்டு தனித்தனி தண்டனை விதிக்கப்பட்டு, அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார் சாவர்க்கர். செல்லுலர் சிறை, காலா பானி என்றும் அறியப்படும் அந்தமான் சிறைச்சாலை, நாடு கடத்தப்பட்டவர்களை அடைத்து வைக்கும் சிற்றறை சிறைச்சாலை.

698 அறைகளைக் கொண்ட செல்லுலார் சிறையில் 13.5க்கு 7.5 அடி கொண்ட தனியறைகள் உண்டு. அதில் சிறை எண் 52 இல் சாவர்க்கர் சிறை வைக்கப்பட்டார்.

வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றில், அந்தமானில் சாவர்கரின் சிறை வாழ்க்கையைப் பற்றி அசுதோஷ் தேஷ்முக் இவ்வாறு எழுதுகிறார், "அந்தமானில் உள்ள அரசு அதிகாரிகள் வண்டிகளில் செல்வார்கள், அரசியல் கைதிகள் இந்த வண்டிகளை இழுத்துச் செல்லவேண்டும்".

" மலைப்பாங்கான நிலப்பரப்பைக் கொண்ட அந்தமானில் முறையான சாலை வசதிகள் இல்லை. வண்டிகளை கைதிகளால் இழுக்க முடியாதபோது, அவர்கள் தாக்கப்பட்டனர். பிரச்சனை செய்யும் கைதிகள் மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டனர்."

 

சாவர்க்கர்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

 

சாவர்க்கர்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு

ஆனால் சாவர்க்கரின் இரண்டாவது வாழ்க்கை இங்கிருந்து தொடங்குகிறது. செல்லுலார் சிறையில் அவர் கழித்த 9 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்களும், அவரது ஆங்கிலேய எதிர்ப்பை மழுங்கடித்துவிட்டது.

இதை நிரஞ்சன் தக்லே விளக்குகிறார், "நான் சாவர்க்கரின் வாழ்க்கையை பல பகுதிகளாக பார்க்கிறேன். அவரது வாழ்க்கையின் முதல் பகுதி ஒரு புரட்சியாளரின் வாழ்க்கை, அதில் அவர் 1857 போரைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதினார். அதில் அவர் மதச்சார்பின்மையை மிகச் சிறந்த முறையில் ஆதரித்தார்."

"கைது செய்யப்பட்ட பின்னர் யதார்த்தத்தை எதிர்கொண்டார் சாவர்கர். 1911 ஜூலை 11 ஆம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதினார். அதன்பிறகு 9 ஆண்டுகளில், அவர் 6 முறை மன்னிப்புக் கடிதங்களை கொடுத்தார். "

"மாதந்தோறும் மூன்று அல்லது நான்கு கைதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்று அந்தமான் சிறைச்சாலை பதிவுகள் காட்டுகின்றன. மரணதண்டனை வழங்கப்பட்ட இடம், சாவர்கர் இருந்த அறைக்குக் கீழே இருந்தது. இதுவும் சாவர்க்கரை பாதித்திருக்கலாம். ஜெயிலர் பைரி, சாவர்க்கருக்கு பல சலுகைகளை வழங்கியதாகவும் சிலர் கூறுகின்றனர். "

"சாவர்க்கர் சகோதரர்கள் சிறைச்சாலைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய எங்களை ரகசியமாக தூண்டிவிடுவார்கள். ஆனால் எங்களுடன் வெளிப்படையாக இணைந்து கொள்ள சொன்னால் பின்வாங்கிவிடுவார்கள். சாவர்கர் சகோதரர்களுக்கு கடின உழைப்பு கொண்ட வேலைகள் வழங்கப்படவில்லை" என்று பரிந்திர கோஷ் என்ற மற்றொரு கைதி பின்னர் ஒரு சமயம் தெரிவித்தார்.

 

சாவர்க்கர்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

நிரஞ்சன் தக்லேவின் கருத்துப்படி, "15 நாட்களுக்கு ஒருமுறை கைதிகளின் எடை அளவிடப்படும். சாவர்க்கர் செல்லுலார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 112 பவுண்டுகள் எடை இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சர் ரெஜினோல்ட் கிரீடோக்கிடம் அவர் நான்காவது முறை மன்னிப்பு கேட்டபோது, அவரது எடை 126 பவுண்டுகளாக அதிகரித்திருந்தது. அதாவது அவர் சிறையில் தண்டனை அனுபவித்தக் காலத்தில் அவரது எடை 14 பவுண்டுகள் அதிகரித்திருந்தது. "

"தன் மீது கருணை காட்டுமாறும், தன்னை இந்தியாவில் உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திந்தார். பதிலுக்கு, அவர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்திற்காக பணியாற்ற தயாராக இருந்தார்."

"பிரிட்டிஷார் எடுத்த நடவடிக்கைகள், அரசியலமைப்பு முறைமையில் தனக்கு நம்பிக்கையை உண்டாக்கியுள்ளதாகவும், இப்போது வன்முறையின் பாதையை விட்டுவிட்டதாகவும் சாவர்க்கர் கூறினார். இதன் விளைவாகத்தான், 1919 மே 30 மற்றும் 31ஆம் தேதிகளில் அவருடைய மனைவி மற்றும் தம்பியைப் பார்க்க அந்தமான் சிறையில் இருந்த சாவர்கருக்கு அனுமதி வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது."

 

பிபிசி அலுவலகத்தில் ரெஹான் ஃபசலுடன் மூத்த பத்திரிகையாளரும் இந்திரா காந்தி கலை மையத்தின் தலைவருமான ராம் பகதூர் ராய்

 

படக்குறிப்பு,

பிபிசி அலுவலகத்தில் ரெஹான் ஃபசலுடன் மூத்த பத்திரிகையாளரும் இந்திரா காந்தி கலை மையத்தின் தலைவருமான ராம் பகதூர் ராய்

சிறையில் இருந்து வெளியேறவே இந்த உத்தி செய்யப்பட்டது

பின்னர் சாவர்க்கரும் அவரது ஆதரவாளர்களும் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கோருவதை நியாயப்படுத்தியிருந்தனர். இது தங்களுடைய தந்திர திட்டத்தின் ஒரு பகுதி என்றும், இதன் காரணமாக சில சலுகைகளைப் பெற முடியும் என்றும் கூறியிருந்தனர்.

சாவர்க்கர் தனது சுயசரிதையில், "நான் சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தால், இந்தியாவுக்கு கடிதம் அனுப்பும் உரிமையை என்னிடம் இருந்து பறித்திருப்பார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

பகத் சிங்கிற்கும் மன்னிப்பு கேட்கும் தெரிவு இருந்தது, ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இந்த நிலையில் சாவர்க்கருக்கு மட்டும் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது? இதற்கு பதிலளிக்கிறார் மூத்த பத்திரிகையாளரும் இந்திரா காந்தி கலை மையத்தின் தலைவருமான ராம் பகதூர் ராய். "பகத்சிங்கிற்கும் சாவர்க்கருக்கும் இடையே மிகப்பெரிய அடிப்படை வேறுபாடு உள்ளது. பகத்சிங் குண்டு வீச முடிவு செய்த போதே, தூக்கு தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை என்று நினைத்து உயிர்த் தியாகம் செய்ய முடிவு எடுத்திருந்தார். மறுபுறம், வீர் சாவர்க்கரோ ஒரு புத்திசாலி புரட்சியாளர் ஆவார். "

"ரகசியமாக வேலை செய்வதற்கும், சிறப்பாக பணியாற்றுவதற்குமான வாய்ப்புகள் கிடைத்தால் அதை ஒருபோதும் சாவர்க்கர் தவறவிட்டதில்லை. தான் மன்னிப்பு கேட்டால் மக்கள் என்ன சொல்வார்கள் என்று சாவர்க்கர் கவலைப்படவில்லை என்றே நான் நம்புகிறேன். அவர் சிறையில் இருந்து வெளியில் வந்தால்தான், தான் விரும்பியவற்றை செய்ய முடியும் என்று நினைத்தார். "

 

பிபிசி ஸ்டுடியோவில் நீலஞ்சன் முகோபாத்யாய்

 

படக்குறிப்பு,

பிபிசி ஸ்டுடியோவில் நீலஞ்சன் முகோபாத்யாய்

சாவர்க்கரின் இந்து மதம் பற்றிய கருத்து

அந்தமானில் இருந்து திரும்பிய பிறகு, 'இந்துத்துவா - இந்து யார்?' என்ற புத்தகத்தை சாவர்க்கர் எழுதினார். அதில் தான் முதல் முறையாக இந்துத்துவத்தை ஒரு அரசியல் சித்தாந்தமாகப் பயன்படுத்தினார் சாவர்க்கர்.

நீலாஞ்சன் முகோபாத்யாய் விளக்குகிறார், "அவர் இந்துத்துவாவை ஒரு அரசியல் சாதனமாகப் பயன்படுத்தினார். இந்துத்துவத்தை வரையறுத்து, இந்த நாட்டின் மக்கள் அடிப்படையில் இந்துக்கள் என்று கூறுகிறார். இந்த நாட்டை தனது மூதாதையர் நிலமாகவும், தாய் மண்ணாகவும் மற்றும் புனித பூமியாக நினைப்பவர்கள் தான் இந்நாட்டின் குடிமக்களாக இருக்க முடியும் என்பதே சாவர்கரின் உறுதியான நம்பிக்கை.

"மூதாதையர் மற்றும் தாய்வழி நிலம் யாருக்கும் வேண்டுமானாலும் சொந்தமானதாக இருக்கலாம், ஆனால் இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் மற்றும் சமணர்கள் மட்டுமே இந்தியாவை புனித நிலமாக கருதுவார்கள். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இது புனித நிலம் அல்ல. இந்த வரையறையின்படி, முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்த நாட்டில் இருந்தாலும் ஒருபோதும் குடிமக்களாக இருக்க முடியாது" என்கிறார் சாவர்கர்.

"அவர்கள் இந்துக்களாக மாறினால் மட்டுமே இங்கே அவர்கள் இருக்க முடியும் என்று நினைத்தார் அவர். ஒருவர் இந்துவாக இருந்தாலும் கூட இந்து மதத்தையோ, மத நம்பிக்கையையோ பின்பற்றாமல் இருக்கலாம் என்ற முரண்பாட்டை அவர் ஒருபோதும் புரிந்துக் கொள்ளவில்லை".

 

சாவர்க்கர்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

ஆங்கிலேயர்களுடன் ஒப்பந்தம்

எந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கக்கூடாது; ரத்னகிரி மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது என்ற இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் 1924 ஆம் ஆண்டில் புனேவில் உள்ள எர்வாடா சிறையில் இருந்து சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார்.

"காந்தி, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம்களை எதிர்ப்பதற்கு அவர்கள் இருவருக்கும் ஒரே நோக்கம் இருப்பதாக வைஸ்ராய் லின்லித்கோவுடன் சாவர்க்கர் எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்" என்று நிரஞ்சன் தக்லே விளக்குகிறார்.

"ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்? அவருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரனம் என்ன என பல கேள்விகள் எழுகின்றன. அதேபோல், இப்படிப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது" என்கிறார் நிரஞ்சன்.

 

சாவர்க்கர்

பட மூலாதாரம்,SAVARKARSMARAK.COM

கருப்பு தொப்பி மற்றும் வாசனை திரவியம்

தீவிரமான கருத்துக்களை கொண்டவராக இருந்தபோதிலும், அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல விஷயங்களை விரும்பினார். அவருக்கு சாக்லேட்டுகளும் 'ஜிண்டான்' பிராண்ட் விஸ்கியும் மிகவும் பிடித்தமானது.

அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய அசுதோஷ் தேஷ்முக் இவ்வாறு எழுதுகிறார்: "சாவர்க்கர் 5 அடி 2 அங்குல உயரம்கொண்டவர். அவர் அந்தமான் சிறையில் இருந்தபோது அவரது தலையில் முடிகள் உதிர்ந்து வழுக்கையாகிவிட்டது. அவருக்கு புகையிலை மெல்லும் பழக்கம் இருந்தது. அந்தமனின் சிறைச்சாலையில் புகையிலை கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக, சிறை சுவர்களில் இருந்த சுண்ணாம்பை சுரண்டி சாப்பிடப் பழகிக் கொண்டார். இதனால் அவரது ஆரோக்கியம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டது. "

"சாவர்க்கர் சிகரெட் மற்றும் சுருட்டுகளையும் புகைப்பார். ஆனால் அதில் அவருக்கு நாட்டம் இல்லை. எப்போதாவது மது அருந்துவார். காலை உணவில் வேகவைத்த முட்டைகள் இரண்டை சாப்பிடுவார், பகலில் பல முறை தேநீர் அருந்துவார். சாவர்க்கருக்கு காரசாரமான உணவுகள் அதிலும் குறிப்பாக மீன் மிகவும் பிடித்தமானது. "

அல்போன்சோ மாம்பழம், ஐஸ்கிரீம் போன்றவை சாவர்க்கருக்கு மிகவும் பிடித்தமானவை. எப்போதும் ஒரே மாதிரியான உடைகளை உடுத்துவார் ... கருப்பு தொப்பி, வேட்டி அல்லது கால்சராய், கோட் இதுதான் சாவர்க்கரின் ஆடை அணியும் பாணி. கோட் பாக்கெட்டில் ஒரு சிறிய ஆயுதம், ஒரு பாட்டில் வாசனை திரவியம், ஒரு கையில் குடை மற்றும் மறுகையில் மடித்து வைக்கப்பட்ட செய்தித்தாள் என்பதே சாவர்க்கரின் தோற்ற அடையாளம்.

 

1948 ஜனவரி 30ஆம் தேதியன்று, மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார் நாதுராம் கோட்சே

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

1948 ஜனவரி 30ஆம் தேதியன்று, மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றார் நாதுராம் கோட்சே

மகாத்மா காந்தி படுகொலையில் கைது

1949 இல் காந்தி படுகொலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு பேரில் சாவர்க்கரும் ஒருவர் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் இறுதியில் அவர் விடுவிக்கப்பட்டார்.

நிலஞ்சன் முகோபாத்யாய் கூறுகிறார், "காந்தி கொலை வழக்கில் தங்கள் மீது படிந்தக் கறையை நீக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ்க்கு நீண்ட காலம் எடுத்தது. இந்த வழக்கில் சாவர்க்கர் சிறைக்குச் சென்றார், பின்னர் வழக்கில் இருந்து விடுபட்டு 1966 வரை வாழ்ந்தார், ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை."

"ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கூட அவரை புறக்கணித்தது. அவர் எப்போதுமே ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். காந்தி கொலை தொடர்பாக சாவர்க்கர் மீதான சந்தேகம் எப்போதும் மறையவே இல்லை என்பதே காரணம். சாவர்கருக்கு தெரியாமல் காந்தி படுகொலை நடந்திருக்க முடியாது என்று கபூர் கமிஷன் அறிக்கையிலும் தெளிவாக கூறிவிட்டது."

 

நானா ஆப்தே, தாமோதர் சாவர்க்கர், நாதுராம் கோட்சே, விஷ்ணுபந்த் கர்கரே, திகம்பர் பட்கே, மதன்லால் பஹாவா (வலதுபுறம் நிற்பவர்), கோபால் கோட்சே, சங்கர் கிஸ்தய்யா (இடமிருந்து வலமாக அமர்ந்திருப்பது)

பட மூலாதாரம்,NANA GODSE

 

படக்குறிப்பு,

நானா ஆப்தே, தாமோதர் சாவர்க்கர், நாதுராம் கோட்சே, விஷ்ணுபந்த் கர்கரே, திகம்பர் பட்கே, மதன்லால் பஹாவா (வலதுபுறம் நிற்பவர்), கோபால் கோட்சே, சங்கர் கிஸ்தய்யா (இடமிருந்து வலமாக அமர்ந்திருப்பது)

சாவர்க்கரின் அரசியல் சித்தாந்தம்

சாவர்க்கரின் வாழ்க்கையின் கடைசி இரண்டு தசாப்தங்கள் தனிமையில் கழிந்தன. அவர் அரசியலில் இருந்தும் பொதுவாழ்க்கையில் இருந்து தனிமைப்படுத்தப்ப்ட்டார்.

சாவர்கரின் வாழ்க்கை சரிதத்தை மற்றுமொரு வரலாற்று ஆசிரியர் தனஞ்சய் கீர் என்பவரும் எழுதியிருக்கிறார். 'சாவர்க்கர் அண்ட் ஹிஸ் டைம்ஸ்' என்ற அந்த புத்தகத்தில் அவர் இவ்வாறு எழுதுகிறார்: "செங்கோட்டையில் நடைபெற்ற காந்தி கொலை வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது, நாதுராம் கோட்சே மற்றும் நாராயண் ஆப்தே ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து, சாவர்க்க்ரை நீதிபதி விடுவித்தார். அப்போது, சிலர் சாவர்க்கரின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள், 'இந்து - இந்தி - இந்துஸ்தான்; பாகிஸ்தான் ஒருபோதும் வராது' என்ற முழக்கங்களையும் எழுப்பினார்கள்".

"சாவர்க்கரின் வாழ்க்கையின் கடைசி நாட்களில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சட்டானது, ஒரு கறையாகவே படிந்துவிட்டது. உலகில் ஒரு சில புரட்சிக்காரர்கள்தான், நல்ல கவிஞராகவும், நல்ல எழுத்தாளர்களாகவும் இருப்பார்கள்" என்கிறார் ராம் பகதூர் ராய்.

"அந்தமான் சிறையில் வாழ்ந்தபோது, கல்லையே எழுத்தாணியாக்கி, சுவரில் 6000 கவிதைகளை எழுதி மனப்பாடம் செய்த தலைசிறந்த கவிஞர் அவர். ஐந்து புத்தகங்களை வீர் சாவர்க்கர் எழுதியுள்ளார். ஆனால் மகாத்மா காந்தியின் படுகொலையில் சம்பந்தப்படுத்தப்பட்டபோது, சாவர்க்கரின் பெருமை குறைந்தது, அவருடைய அரசியல் சித்தாந்தம் மங்கிப்போனது. "

 

சாவர்க்கர் குறித்து சிறப்பு ஆய்வுகளை மேற்கொண்ட நிரஞ்சன் தக்லே பிபிசி ஸ்டுடியோவில்

 

படக்குறிப்பு,

சாவர்க்கர் குறித்து சிறப்பு ஆய்வுகளை மேற்கொண்ட நிரஞ்சன் தக்லே பிபிசி ஸ்டுடியோவில்

வீர் சாவர்க்கர் 1966-ஆம் ஆண்டில் இறந்துவிட்டாலும், தற்போது பல தசாப்தங்களுக்குப் பிறகும் இந்திய அரசியலில் ஒரு முக்கியமான நபராகவே இருக்கிறார். கதாநாயகனாகவோ அல்லது வில்லனாகவோ இன்றும் பேசுபொருளாகவே இருக்கிறார்.

"2014 ஆம் ஆண்டில், சாவர்க்கரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்திற்கு வந்தபோது, அவர் மகாத்மா காந்திக்கு முதுகைக் காட்டியவாறு நிற்கவேண்டியிருந்தது. ஏனெனில் காந்திஜியின் உருவப்படமும் அதே இட த்தில் சாவர்க்கரின் படத்திற்கு முன்னால் இருந்தது" என்கிறார் நிரஞ்சன் தக்லே.

"இது இன்றைய அரசியலின் யதார்த்தத்தை காட்டுவதாகவே இருக்கிறது. நீங்கள் சாவர்க்கரை மதிக்க விரும்பினால், காந்தியின் சித்தாந்தத்தை முற்றிலும் பின்தள்ள வேண்டும். அதேபோல் காந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சாவர்க்கரின் சித்தாந்தத்தை நிராகரிக்க வேண்டும்" என்று முத்தாய்ப்பாக முடிக்கிறார் நிரஞ்சன் தக்லே.

https://www.bbc.com/tamil/india-51431488

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.