Jump to content

கர்நாடகாவில் மலர் சந்தை கடைகளுக்கு சீல் - ரூ. 100 கோடி நஷ்டத்தை எதிர்கொள்ளும் தமிழக விவசாயிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கர்நாடகாவில் மலர் சந்தை கடைகளுக்கு சீல் - ரூ. 100 கோடி நஷ்டத்தை எதிர்கொள்ளும் தமிழக விவசாயிகள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ஏ.எம். சுதாகர்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 18 நவம்பர் 2022
 

கர்நாடகா மலர் சந்தை

கர்நாடகாவில் மலர் சந்தை கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் அவற்றை நம்பி தமிழ்நாட்டில் இருந்து தினமும் லட்சகணக்கான ரூபாய் மதிப்புக்கு பூக்களையும் மலர்களையும் அனுப்பி வந்த விவசாயிகள் கடுமையான வருவாய் இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூபாய் ரூ. 100 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறுகின்றனர். என்ன நடக்கிறது அங்கே?  விரிவாக படிக்கலாம்.

தமிழ்நாட்டில் நீலகிரி, கொடைக்கானல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் மலர்கள், கர்நாடகா மாநிலம் பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியில் உள்ள மலர்ச் சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

குறிப்பாக, திருவண்ணாமலை, செங்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, மத்தூர், அத்திகானூர், சந்தூர், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி அணை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலர்கள் பெங்களூருக்கு அனுப்பப்படுகின்றன.

 

தினமும் அதிகாலை 4 மணி முதல் பூக்களை பறிக்கும் விவசாயிகள், காலை 6 மணி முதல் 11 மணி வரை 150-க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களில் பூக்களை பெங்களூருக்கு அனுப்பி வருகின்றனர்.

இதேபோல, ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரோஜா, ஜெர்பரா உள்ளிட்ட கொய்மலர்கள் அதிகளவில் பெங்களூரு மலர் சந்தைக்கு செல்கின்றன. இங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் , வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மலர் சந்தை கடைகளுக்கு  சீல்

 

கர்நாடக மலர் சந்தை

இந்நிலையில், கர்நாடக மாநிலம்  மலர்ச் சந்தையில் உள்ள கடைகளுக்கு அம்மாநில அலுவலர்கள் சீல் வைத்துள்ளனர். இதனால், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் இருந்து அங்கு விற்பனைக்கு செல்லும் மலர்கள் தேக்கம் அடைந்தன.

இந்த நடவடிக்கை காரணமாக தமிழக, கர்நாடக விவசாயிகளுக்கு தினமும்  ரூ.10 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

எங்கு தொடங்கியது பிரச்னை?

இது தொடர்பாக ஓசூரை சேர்ந்த தேசிய தோட்டக்கலைத்துறை வாரிய இயக்குநர் பால சிவ பிரசாத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்

"கர்நாடக மாநிலத்தில் உள்ளது வில்சன் கார்டன். இங்கு 300க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன. அதில் நூற்றுக்கணக்கான கடைகளை தமிழர்கள் வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இருந்து கிருஷ்ணகிரி, நீலகிரி, தருமபுரி, தஞ்சாவூர் சென்னை, சேலம் உட்பட பல மாவட்டங்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மலர்கள் இங்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

 

கர்நாடகா மலர் சந்தை

 

படக்குறிப்பு,

பால சிவ பிரசாத்

ஆனால் வில்சன் கார்டன் அமைந்துள்ளது குடியிருப்பு பகுதி அதனால் பூக்கடைகள் அதிகாலை இரண்டு மணி முதலே துவங்குவதால் அங்கு வாகனங்கள் அதிகமாக வந்து செல்கின்றன.

மேலும் பேக்கிங் செய்யும் போதும் அதிக சத்தம் எழுப்புவதாக கூறி வில்சன் கார்டன் வெல்ஃபேர் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் மார்க்கெட் கடைகளை மூன்று நாட்களுக்குள் காலி செய்யும்படி நீதிமன்றம் நவம்பர் 9ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.

ஆனால் அதற்கு முன்னதாக, ஐந்தாம் தேதியே நாளொன்றுக்கு 40 கடைகள், 50 கடைகள் வீதம் மாநகராட்சி நிர்வாகம் போலீஸ் துணையுடன் சீல் வைக்கத் தொடங்கியது.

இதனால் திருவண்ணாமலை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கர்நாடகா வில்சன் கார்டன் பூ மார்க்கெட்டிற்கு செல்லும் பூக்களை தமிழக விவசாயிகளால் அனுப்ப முடியவில்லை.

மேலும் சேலத்தில் இருந்து அரளிப்பூ  நீலகிரியில் இருந்து செல்லும் பூக்களும் விற்பனைக்கு செல்லவில்லை.

இவ்வாறாக, ஒரு நாளைக்கு தமிழக கர்நாடக மலர் விவசாயிகளுக்கு ரூ 10 கோடி முதல் ரூ12 கோடி வரை மலர்  நஷ்டம் ஏற்படுகிறது. கர்நாடக அரசாங்கம் பூக்கடைக்காரர்களுக்கு நிரந்தரமாக ஒரு மார்க்கெட் அமைத்துக் கொடுத்திருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது. அதனால் கர்நாடக அரசாங்கம் அங்கிருக்கும் மலர் வியாபாரிகளை காக்க உடனடியாக நிரந்தர மார்க்கெட் ஒன்றை அமைத்துத் தர வேண்டும்.

அப்படி செய்தால் தான் இந்த தொழில் தொடர்ந்து நடக்கும். இந்த தொழிலை நம்பி கர்நாடக மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மட்டும் ஒரு லட்சம் பேர் இருக்கின்றனர் அவர்களுடைய வாழ்வாதாரமும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல தமிழக அரசும் கர்நாடக அரசுடன் பேசி  நிரந்தர மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் எந்த பிரச்னை என்றாலும் எப்போதும் பாதிக்கப்படுவது மலர் வியாபாரிகள் தான். உதாரணத்திற்கு கொரோனா காலகட்டங்களிலும் , காவிரி நீர் பிரச்சினையிலும் மற்றும் மொழிப் பிரச்சனை என எந்த பிரச்னை வந்தாலும் அதில்  முதலில்  பாதிக்கப்படுவது பூத்தொழில்தான்.eதமிழ்நாட்டில் ஓசூரில் அமைக்கப்பட்டுள்ள இன்டர்நேஷனல் ஃபிளவர் ஆக்ஷன் சென்டரை தமிழக அரசு உடனடியாக செயல்பட வைத்தால் இது போன்ற கடினமான காலங்களில் மலர் விவசாயிகள் மலர் வியாபாரிகள் மர தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் காக்க  முடியும் என்கிறார் பால சிவ பிரசாத்.

"நிலைமை இன்னும் மோசமாகும்"

 

கர்நாடகா மலர் சந்தை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூரைச் சேர்ந்த மலர் பண்ணை உரிமையாளர் மனோஜ் குமார், "கர்நாடகாவில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் வேறு வழியில்லாமல் உள்ளூர் சந்தையில் பூக்களை விற்கிறோம்," என்று கூறினார்.

"தற்போது திருமண சீசன் என்பதால் நேரடியாக சென்று விற்பனை செய்து வருகிறோம். ஆனால்  கர்நாடகாவுக்கு அனுப்பி அங்கு விற்பனை செய்த போது கிடைத்த லாபத்தில் தற்போது பத்து சதவீதம் கூட கிடைப்பதில்லை. மேலும் இந்த திருமண சீசன் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடைந்து விடும் பிறகு பூக்களே விற்க முடியாத நிலை வரும்," என்று அவர் தெரிவித்தார்.

 

 

கர்நாடகா மலர் சந்தை

 

படக்குறிப்பு,

மனோஜ் குமார்

"கடந்த ஒரு ஆண்டில் மட்டும் உரம் மற்றும் கெமிக்கல் விலை 150 சதவீதத்திலிருந்து 200 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது இதனால் நாங்கள் மலர்கள் உற்பத்தி செய்வதற்கு செலவு அதிகமாகின்றது இந்த நிலையில் தான் மலர்களை விற்பனைக்கு அனுப்ப முடியாத நிலையும் வந்திருக்கிறது.

கர்நாடக மாநில பூ மார்க்கெட் தான் தெற்கு இந்தியர்களுக்கு ஒரு மிகப்பெரிய வியாபார மையம் அங்கு நிரந்தர மார்க்கெட் இல்லாததால் தற்போது அங்குள்ள வியாபாரிகளும் இங்குள்ள உற்பத்தியாளர்களும் மற்றும் தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் . இது போன்ற கடின காலங்களைக் கடக்க அரசாங்கம் ஓசூர் இண்டர்நேஷனல் ஃபிளவர் ஆக்சன் சென்டரை உடனே செயல்படுத்த வைக்க வேண்டும்," என்கிறார் மனோஜ் குமார்.

"வேலையின்றி தவிக்கிறோம்"

மலர்களை பேக்கிங் செய்யும் தொழிலாளர் சுமதி, "பூக்களை கர்நாடகவுக்கு விற்பனைக்கு அனுப்பும்போது பேக்கிங் செய்யும் பணியில் நாங்கள் ஈடுபடுவோம் எங்கள் குடும்பத்திற்கு தேவையான அளவு அதில் ஊதியம் கிடைத்து வந்தது தற்போது ஒரு வாரத்துக்கும் மேலாக கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதால் வேலை இல்லாமல் தவிக்கிறோம். வேறு வழியின்றி உள்ளூர் சந்தையில் சென்று பூ விற்பனை செய்யும் மாற்று வேலையை செய்து வருகிறோம். இன்னும் சில நாட்களில்  இந்த  வேலையும் எங்களுக்கு பறிபோகும் நிலை வரும் என்கின்றனர். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை," என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c13kld30gm3o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.