Jump to content

உலகில் ஒருவரைப் போல மற்றொருவர் இருக்க என்ன காரணம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் ஒருவரைப் போல மற்றொருவர் இருக்க என்ன காரணம்?

 

ஜெர்மன் கால்பந்து வீரர் மெசுட் ஓசில் மற்றும் ஃபெராரி அணியின் நிறுவனர் என்சோ ஃபெராரி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஜெர்மனி கால்பந்து வீரர் மெசுட் ஓசில் மற்றும் ஃபெராரி அணியின் நிறுவனர் என்சோ ஃபெராரி

18 நவம்பர் 2022

ஆக்னஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவரை அணுகிய ஓர் ஆண் ஆக்னஸிற்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

அந்த நபர் நினைக்கும் நபர் நாம் இல்லை என்று உணர ஆக்னஸிற்கு அதிக நேரம் எடுக்கவில்லை.

அதை அவர் தெளிவுபடுத்தியதும், ஆக்னஸை போன்று இருக்கும் ஒருவரை தனக்கு தெரியுமென அந்த நபர் கூறினார். தன்னைப் போன்று இருக்கும் எஸ்டர் என்ற பெயர் கொண்ட அந்த நபரை முதலில் ஃபேஸ்புக் வழியாக ஆக்னஸ் சந்தித்தார். பின்னர், இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டனர்.

“தோற்றம் மட்டுமல்ல, எங்களுடைய பண்புகளும் ஒரே மாதிரியாக இருந்தன” என்கிறார் எஸ்டர்.

 

தன்னில் ஒரு பகுதியை மற்றொருவரிடம் பார்ப்பது எஸ்டருக்கு வினோதமாகவும் விசித்திரமாகவும் இருந்தது.

“ஆக்னஸும் நானும் குணத்திலும் ஆர்வத்திலும் ஒரே மாதிரியாக இருந்தது மேலும் சிறப்புமிக்கதாக இருந்தது. எங்களுக்கு இசை, உடைகள், டாட்டூ ஆகியவற்றில் ஒரே மாதிரியான ரசனை இருந்தது” என்றும் எஸ்டர் கூறுகிறார்.

எஸ்டருக்கு 32 வயது, ஆக்னஸிற்கு 28 வயது. அவர்கள் இருவரும் கனடாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஃபிராங்கோயிஸ் ப்ருனெலின் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். அவர் தான் பிபிசி முண்டோ சேவையிடம் இவர்கள் கதையைப் பகிர்ந்தவர்.

அவர்களைப் பார்த்தபோது, அவர்கள் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டு தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக ஃபிராங்கோயிஸ் ப்ருனெல் நினைவுகூர்ந்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள எந்தவித தொடர்பும் இல்லாத ஒத்த தோற்றம் கொண்டவர்களைக் காட்சிப்படுத்துவதற்காக பல ஆண்டுகளை அவர் செலவழித்துள்ளார்.

கீழேயுள்ள ஆக்னஸ் மற்றும் எஸ்டரின் இந்தப் படம்தான் 2015ஆம் ஆண்டு அவர் எடுத்தது.

 

ஆக்னஸ் மற்றும் எஸ்டர்

பட மூலாதாரம்,FRANÇOIS BRUNELLE

 

படக்குறிப்பு,

ஆக்னஸ் மற்றும் எஸ்டர்

‘ஐம் நாட் ஏ லுக் அலைக்’(I'm not a look-alike) என்ற ப்ரூனெல்லின் திட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானவர்களில் ஆக்னஸ் மற்றும் எஸ்டரும் அடங்கும்.

சாதாரண நபர்கள் பிரபலங்களைப் போல இருப்பது தொடர்பாக நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இணையத்தில் இருப்பதால் இது குறித்து நீங்கள் முன்னரே அறிந்திருக்கலாம்.

ஃபெராரி அணி நிறுவனர் இத்தாலியைச் சேர்ந்த என்சோ ஃபெராரி மற்றும் துருக்கி வம்சாவளி ஜெர்மன் கால்பந்து வீரர் மெசுட் ஓசில் ஆகியோரின் தோற்ற ஒப்பீடு சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமானது.

ப்ரூனெல் தனது திட்டத்தைத் தொடங்கியபோது, இது அறிவியல் ஆராய்ச்சிக்கு முன்னோடியாக மாறும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.

குடும்ப உறவுகள் அல்லாத நபர்களுக்கு இடையேயான உடல் ஒற்றுமையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருந்த பார்சிலோனாவில் உள்ள ஜோசப் கரேராஸ் லுகேமியா ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் குழு ப்ருனெல்லை தொடர்புகொண்டது.

அதன் இயக்குநரும், பார்சிலோனா பல்கலைக்கழக மருத்துவத்துறையின் மரபியல் பேராசிரியருமான மானெல் எஸ்டெல்லர், ஆய்வுக்கு தலைமை தாங்கினார். அவர் பிபிசி முண்டோ சேவையிடம் சில சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறினார்.

என்ன ஆய்வு?

2016ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், கடந்த ஆகஸ்ட் மாதம் Cell Reports என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.

'Look-alike humans identified by facial recognition algorithms show genetic similarities' என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரையில், ஒரே மாதிரியான முகத்தோற்றம் கொண்ட தொடர்பில்லாத நபர்களை அடையாளம் காணுவதை இந்த ஆராய்ச்சி நோக்கமாக கொண்டிருந்ததாக அதன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சியாளர்கள் ப்ரூனெல்லை தொடர்புகொண்டபோது, அவருடைய திட்டத்தில் பங்கேற்ற 32 தன்னார்வ ஜோடிகள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

அவர்களின் புகைப்படங்கள் முகத்தை அடையாளம் காணும் மூன்று நவீன மென்பொருள் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன.

 

ஆய்வு

பட மூலாதாரம்,FRANÇOIS BRUNELLE

"இவை ஒரு முகத்தை மற்றொன்றுடன் ஒப்பிடும்போது எவ்வளவு ஒற்றுமை உள்ளது என்பதைக் கண்டறியும் முறை" என்று எஸ்டெல்லர் கூறினார்.

உதாரணமாக, இந்த முறை இரட்டையர்களிடம் பயன்படுத்தப்பட்ட போது ஒற்றுமை விகிதம் 90 முதல் 100 சதவிகிதம் வரை இருந்தது.

தொடர்பில்லாத நபர்களிடம் முக ஒற்றுமையைக் கண்டறிய நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அதிக ஒற்றுமை விகிதம் கண்டறியப்பட்டது.

75 சதவிகித ஜோடிகள் ஒற்றுமை கொண்டிருப்பதாக குறைந்தபட்சம் இரண்டு மென்பொருள் கூறுவதாக அந்நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த முறை இரட்டையர்களை அடையாளம் காணக்கூடிய மனிதர்களின் திறனுக்கு மிக நெருக்கமானது என்று எஸ்டெல்லர் கூறுகிறார்.

ஆய்வில் கலந்துகொண்ட 16 ஜோடிகள் மிகவும் ஒத்த அடையாளம் கொண்டிருப்பதாக மூன்று மென்பொருள் சோதனையில் தெரியவந்தது.

ஆய்வு முடிவுகள்

பங்கேற்பாளர்களின் உயிரியல் மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு நாடுகளில் இருப்பதால் அதைப் பெறுவது சற்று கடினமாக இருந்ததாக எஸ்டெல்லர் கூறுகிறார்.

எனவே உமிழ்நீரில் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

“நாங்கள் உயிரியல் மாதிரிகள், ஜீனோம், எபிஜீனோம், மைக்ரோபயோம் ஆகியவற்றை ஆய்வு செய்தோம்” என்று எஸ்டெல்லர் கூறுகிறார்.

 

டிஎன்ஏ

பட மூலாதாரம்,GETTY IMAGES

மரபியல் அவர்களை ஒன்றாக இணைத்தது. அதே சமயம் எபிஜெனெடிக்ஸ் மற்றும் மைக்ரோபயோம் அவர்களை தூரப்படுத்தியது.

“அவர்களுக்கு இடையே எந்தவித தொடர்பும் இல்லாத போதும் ஒரே மாதிரியான மரபணு மற்றும் டிஎன்ஏ வரிசைகள் இருந்தது இந்த ஆய்வு முடிவுகளில் கிடைத்த முக்கிய விஷயம். இந்த தன்னார்வலர்களின் குடும்ப வரலாறை சில நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்று ஆராய்ச்சியாளர்கள் பார்த்த போதிலும் அவர்களுக்கு இடையே பொதுவான உறவினர்கள் யாரும் இல்லை” என்றும் அவர் கூறுகிறார்.

நிபுணர்கள் குறிப்பிடும் அந்தக் குறிப்பிட்ட டிஎன்ஏ வரிசைகள் நம் முகத்தின் சிறப்பியல்பு அம்சங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவை.

இருவர் மிகவும் ஒத்திருப்பது லாட்டரி வாங்குவது போன்றது. நீங்கள் பரிசை வெல்வது மிகக் கடினம், ஆனால் திடீர் அதிர்ஷ்டம் வரலாம்.

"இரண்டு நபர்களுக்கும் இடையே தொடர்பில்லாத போதிலும், முடிவில் அவர்களுக்கு ஒரே வடிவத்தை அளிக்கக் கூடிய மரபணு மாறுபாடுகள் உள்ளன" என்கிறார் எஸ்டெல்லர்.

அதாவது, அவர்கள் டிஎன்ஏவின் சில பண்புகள் ஒத்துள்ளன.

“தங்களின் புருவங்களை அடர்த்தியாக்கும் பண்பு கொண்ட ஒரு மரபணு, உதடுகளை தடிமனாக்கும் பண்பு கொண்ட ஒரு மரபணு மற்றும் சில குறிப்பிட்ட பண்புகள் கொண்ட மரபணுக்கள் தொடர்பில்லாத இருவரிடம் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இவை அனைத்தும் ஒன்றாக இணையும் போது, அவர்களின் முகம் ஒரே மாதிரியான தோற்றத்தில் உள்ளது” என்கிறார் எஸ்டெல்லர்.

உடலமைப்பைத் தாண்டி பிற ஒற்றுமைகள்

 

இரண்டு ஒத்த நண்பர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்மித்சோனியன் இதழில் சாரா குடா சுட்டிக்காட்டியுள்ளபடி, மரபியல் துறையில் இந்த ஆய்வு புதிய சாதனையைப் படைத்துள்ளது. தங்கள் பழக்கவழக்கங்களைப் பற்றிய 60க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கொண்ட வினாத்தாள் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டு, அதற்கு பதிலளிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

"அவர்கள் அதில் ஒத்திருக்கிறார்களா என்பதைப் பார்க்க இந்த ஆய்வு செய்யப்பட்டதாகவும், சில சமயங்களில் அதில் ஒற்றுமைகள் வெளிப்பட்டதாகவும் கூறும் பேராசிரியர், எடை, வயது, உயரம் போன்ற பிற உடல் அம்சங்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.

மிகவும் ஒரே மாதிரி இருந்த 16 ஜோடிகளில் செய்யப்பட்ட ஆய்வில், "பலர் ஒரே மாதிரியான எடை கொண்டிருந்தனர் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை பகுப்பாய்வும் ஒற்றுமைகள் இருப்பதைக் காட்டியது" என்றும் அவர் கூறுகிறார்.

"புகைபிடிக்கும் நடத்தை மற்றும் கல்வி நிலை ஆகியவற்றிலும் ஜோடிகளில் ஒற்றுமை இருந்ததாகவும், பகிரப்பட்ட மரபணு மாறுபாடு உடல் தோற்றத்துடன் தொடர்புடையது மட்டுமல்ல, பொதுவான பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தையிலும் தாக்கம் கொண்டிருக்கலாம் என்று அந்நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

 

பயோமெடிசினில் இதன் சாத்தியமான பயன்பாடு குறித்தும் எஸ்டெல்லர் ஆராய விரும்புகிறார்.

"முகத்தின் வடிவத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மரபணுக்கள் மற்றும் அவற்றின் மாறுபாடுகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். எனவே மூக்கு, வாய், நெற்றி, காதுகளின் மரபணுக்கள் நோயறிதலிலும் உதவலாம்” என்கிறார் எஸ்டெல்லர்.

"ஒருவர் முகத்தில் இருந்து அந்த நபரின் மரபணுவை நாம் ஓரளவு அறிய முடியும். இது மரபணு நோய்களின் ஆரம்பநிலை கண்டறிதலுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றும் அவர் கூறுகிறார்.

சிறிய அளவிலான ஆய்வு

இந்த ஆய்வு சிறிய அளவில் நடத்தப்பட்டது என்பதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இது சரியானது என்று நம்பும் அவர்கள், பெரிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டாலும் தங்களின் கண்டுபிடிப்புகள் மாறாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

"பெரிய அளவில் நடத்தப்படும் ஆய்வு, அதிக மரபணு மாறுபாடுகளை வழங்கும். மேலும், நமது முகங்களை வரையறுக்க உயிரியல் தரவுகளின் பிற அடுக்குகளின் பங்களிப்பை தெளிவுபடுத்துவதற்கும் அது பயனுள்ளதாக இருக்கும்" என எஸ்டெல்லர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“நம்மைப் போல 100 சதவிகிதம் ஒத்த நபர் இருப்பது கடினம். ஆனால், 75 சதவிகிதம், 80 சதவிகிதம் வேறுபாடு கொண்ட நபர்கள் உலகில் பலர் உள்ளனர். எனவே நாம் சரியான நேரத்தில் இருக்கிறோம்” என்று பிபிசி முண்டோ சேவையிடம் எஸ்டெல்லர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக ஒரே மாதிரியாக இருக்கும் அந்நியர்களை படம்பிடித்து அதில் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ள ப்ரூனெல், "ஒருமுறை உங்கள் மேற்பரப்பைக் கொஞ்சம் சுரண்டினால், அனைத்து இடங்களிலும் மக்கள் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நாம் எப்படி இருந்தாலும் நாம் ஓர் இனம்” என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c041982ymm0o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.