Jump to content

உலகில் ஒருவரைப் போல மற்றொருவர் இருக்க என்ன காரணம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் ஒருவரைப் போல மற்றொருவர் இருக்க என்ன காரணம்?

 

ஜெர்மன் கால்பந்து வீரர் மெசுட் ஓசில் மற்றும் ஃபெராரி அணியின் நிறுவனர் என்சோ ஃபெராரி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஜெர்மனி கால்பந்து வீரர் மெசுட் ஓசில் மற்றும் ஃபெராரி அணியின் நிறுவனர் என்சோ ஃபெராரி

18 நவம்பர் 2022

ஆக்னஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, அவரை அணுகிய ஓர் ஆண் ஆக்னஸிற்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

அந்த நபர் நினைக்கும் நபர் நாம் இல்லை என்று உணர ஆக்னஸிற்கு அதிக நேரம் எடுக்கவில்லை.

அதை அவர் தெளிவுபடுத்தியதும், ஆக்னஸை போன்று இருக்கும் ஒருவரை தனக்கு தெரியுமென அந்த நபர் கூறினார். தன்னைப் போன்று இருக்கும் எஸ்டர் என்ற பெயர் கொண்ட அந்த நபரை முதலில் ஃபேஸ்புக் வழியாக ஆக்னஸ் சந்தித்தார். பின்னர், இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டனர்.

“தோற்றம் மட்டுமல்ல, எங்களுடைய பண்புகளும் ஒரே மாதிரியாக இருந்தன” என்கிறார் எஸ்டர்.

 

தன்னில் ஒரு பகுதியை மற்றொருவரிடம் பார்ப்பது எஸ்டருக்கு வினோதமாகவும் விசித்திரமாகவும் இருந்தது.

“ஆக்னஸும் நானும் குணத்திலும் ஆர்வத்திலும் ஒரே மாதிரியாக இருந்தது மேலும் சிறப்புமிக்கதாக இருந்தது. எங்களுக்கு இசை, உடைகள், டாட்டூ ஆகியவற்றில் ஒரே மாதிரியான ரசனை இருந்தது” என்றும் எஸ்டர் கூறுகிறார்.

எஸ்டருக்கு 32 வயது, ஆக்னஸிற்கு 28 வயது. அவர்கள் இருவரும் கனடாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஃபிராங்கோயிஸ் ப்ருனெலின் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். அவர் தான் பிபிசி முண்டோ சேவையிடம் இவர்கள் கதையைப் பகிர்ந்தவர்.

அவர்களைப் பார்த்தபோது, அவர்கள் ஒரே மாதிரியாக இருப்பதைக் கண்டு தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக ஃபிராங்கோயிஸ் ப்ருனெல் நினைவுகூர்ந்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள எந்தவித தொடர்பும் இல்லாத ஒத்த தோற்றம் கொண்டவர்களைக் காட்சிப்படுத்துவதற்காக பல ஆண்டுகளை அவர் செலவழித்துள்ளார்.

கீழேயுள்ள ஆக்னஸ் மற்றும் எஸ்டரின் இந்தப் படம்தான் 2015ஆம் ஆண்டு அவர் எடுத்தது.

 

ஆக்னஸ் மற்றும் எஸ்டர்

பட மூலாதாரம்,FRANÇOIS BRUNELLE

 

படக்குறிப்பு,

ஆக்னஸ் மற்றும் எஸ்டர்

‘ஐம் நாட் ஏ லுக் அலைக்’(I'm not a look-alike) என்ற ப்ரூனெல்லின் திட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானவர்களில் ஆக்னஸ் மற்றும் எஸ்டரும் அடங்கும்.

சாதாரண நபர்கள் பிரபலங்களைப் போல இருப்பது தொடர்பாக நூற்றுக்கணக்கான கட்டுரைகள் இணையத்தில் இருப்பதால் இது குறித்து நீங்கள் முன்னரே அறிந்திருக்கலாம்.

ஃபெராரி அணி நிறுவனர் இத்தாலியைச் சேர்ந்த என்சோ ஃபெராரி மற்றும் துருக்கி வம்சாவளி ஜெர்மன் கால்பந்து வீரர் மெசுட் ஓசில் ஆகியோரின் தோற்ற ஒப்பீடு சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமானது.

ப்ரூனெல் தனது திட்டத்தைத் தொடங்கியபோது, இது அறிவியல் ஆராய்ச்சிக்கு முன்னோடியாக மாறும் என்று நினைத்துப் பார்க்கவில்லை.

குடும்ப உறவுகள் அல்லாத நபர்களுக்கு இடையேயான உடல் ஒற்றுமையைப் புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டிருந்த பார்சிலோனாவில் உள்ள ஜோசப் கரேராஸ் லுகேமியா ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் குழு ப்ருனெல்லை தொடர்புகொண்டது.

அதன் இயக்குநரும், பார்சிலோனா பல்கலைக்கழக மருத்துவத்துறையின் மரபியல் பேராசிரியருமான மானெல் எஸ்டெல்லர், ஆய்வுக்கு தலைமை தாங்கினார். அவர் பிபிசி முண்டோ சேவையிடம் சில சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறினார்.

என்ன ஆய்வு?

2016ஆம் ஆண்டு தொடங்கிய இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், கடந்த ஆகஸ்ட் மாதம் Cell Reports என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டன.

'Look-alike humans identified by facial recognition algorithms show genetic similarities' என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரையில், ஒரே மாதிரியான முகத்தோற்றம் கொண்ட தொடர்பில்லாத நபர்களை அடையாளம் காணுவதை இந்த ஆராய்ச்சி நோக்கமாக கொண்டிருந்ததாக அதன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சியாளர்கள் ப்ரூனெல்லை தொடர்புகொண்டபோது, அவருடைய திட்டத்தில் பங்கேற்ற 32 தன்னார்வ ஜோடிகள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.

அவர்களின் புகைப்படங்கள் முகத்தை அடையாளம் காணும் மூன்று நவீன மென்பொருள் கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டன.

 

ஆய்வு

பட மூலாதாரம்,FRANÇOIS BRUNELLE

"இவை ஒரு முகத்தை மற்றொன்றுடன் ஒப்பிடும்போது எவ்வளவு ஒற்றுமை உள்ளது என்பதைக் கண்டறியும் முறை" என்று எஸ்டெல்லர் கூறினார்.

உதாரணமாக, இந்த முறை இரட்டையர்களிடம் பயன்படுத்தப்பட்ட போது ஒற்றுமை விகிதம் 90 முதல் 100 சதவிகிதம் வரை இருந்தது.

தொடர்பில்லாத நபர்களிடம் முக ஒற்றுமையைக் கண்டறிய நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அதிக ஒற்றுமை விகிதம் கண்டறியப்பட்டது.

75 சதவிகித ஜோடிகள் ஒற்றுமை கொண்டிருப்பதாக குறைந்தபட்சம் இரண்டு மென்பொருள் கூறுவதாக அந்நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த முறை இரட்டையர்களை அடையாளம் காணக்கூடிய மனிதர்களின் திறனுக்கு மிக நெருக்கமானது என்று எஸ்டெல்லர் கூறுகிறார்.

ஆய்வில் கலந்துகொண்ட 16 ஜோடிகள் மிகவும் ஒத்த அடையாளம் கொண்டிருப்பதாக மூன்று மென்பொருள் சோதனையில் தெரியவந்தது.

ஆய்வு முடிவுகள்

பங்கேற்பாளர்களின் உயிரியல் மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு நாடுகளில் இருப்பதால் அதைப் பெறுவது சற்று கடினமாக இருந்ததாக எஸ்டெல்லர் கூறுகிறார்.

எனவே உமிழ்நீரில் இருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

“நாங்கள் உயிரியல் மாதிரிகள், ஜீனோம், எபிஜீனோம், மைக்ரோபயோம் ஆகியவற்றை ஆய்வு செய்தோம்” என்று எஸ்டெல்லர் கூறுகிறார்.

 

டிஎன்ஏ

பட மூலாதாரம்,GETTY IMAGES

மரபியல் அவர்களை ஒன்றாக இணைத்தது. அதே சமயம் எபிஜெனெடிக்ஸ் மற்றும் மைக்ரோபயோம் அவர்களை தூரப்படுத்தியது.

“அவர்களுக்கு இடையே எந்தவித தொடர்பும் இல்லாத போதும் ஒரே மாதிரியான மரபணு மற்றும் டிஎன்ஏ வரிசைகள் இருந்தது இந்த ஆய்வு முடிவுகளில் கிடைத்த முக்கிய விஷயம். இந்த தன்னார்வலர்களின் குடும்ப வரலாறை சில நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்று ஆராய்ச்சியாளர்கள் பார்த்த போதிலும் அவர்களுக்கு இடையே பொதுவான உறவினர்கள் யாரும் இல்லை” என்றும் அவர் கூறுகிறார்.

நிபுணர்கள் குறிப்பிடும் அந்தக் குறிப்பிட்ட டிஎன்ஏ வரிசைகள் நம் முகத்தின் சிறப்பியல்பு அம்சங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவை.

இருவர் மிகவும் ஒத்திருப்பது லாட்டரி வாங்குவது போன்றது. நீங்கள் பரிசை வெல்வது மிகக் கடினம், ஆனால் திடீர் அதிர்ஷ்டம் வரலாம்.

"இரண்டு நபர்களுக்கும் இடையே தொடர்பில்லாத போதிலும், முடிவில் அவர்களுக்கு ஒரே வடிவத்தை அளிக்கக் கூடிய மரபணு மாறுபாடுகள் உள்ளன" என்கிறார் எஸ்டெல்லர்.

அதாவது, அவர்கள் டிஎன்ஏவின் சில பண்புகள் ஒத்துள்ளன.

“தங்களின் புருவங்களை அடர்த்தியாக்கும் பண்பு கொண்ட ஒரு மரபணு, உதடுகளை தடிமனாக்கும் பண்பு கொண்ட ஒரு மரபணு மற்றும் சில குறிப்பிட்ட பண்புகள் கொண்ட மரபணுக்கள் தொடர்பில்லாத இருவரிடம் இருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இவை அனைத்தும் ஒன்றாக இணையும் போது, அவர்களின் முகம் ஒரே மாதிரியான தோற்றத்தில் உள்ளது” என்கிறார் எஸ்டெல்லர்.

உடலமைப்பைத் தாண்டி பிற ஒற்றுமைகள்

 

இரண்டு ஒத்த நண்பர்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்மித்சோனியன் இதழில் சாரா குடா சுட்டிக்காட்டியுள்ளபடி, மரபியல் துறையில் இந்த ஆய்வு புதிய சாதனையைப் படைத்துள்ளது. தங்கள் பழக்கவழக்கங்களைப் பற்றிய 60க்கும் மேற்பட்ட கேள்விகளைக் கொண்ட வினாத்தாள் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டு, அதற்கு பதிலளிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

"அவர்கள் அதில் ஒத்திருக்கிறார்களா என்பதைப் பார்க்க இந்த ஆய்வு செய்யப்பட்டதாகவும், சில சமயங்களில் அதில் ஒற்றுமைகள் வெளிப்பட்டதாகவும் கூறும் பேராசிரியர், எடை, வயது, உயரம் போன்ற பிற உடல் அம்சங்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.

மிகவும் ஒரே மாதிரி இருந்த 16 ஜோடிகளில் செய்யப்பட்ட ஆய்வில், "பலர் ஒரே மாதிரியான எடை கொண்டிருந்தனர் மற்றும் அவர்களின் வாழ்க்கை முறை பகுப்பாய்வும் ஒற்றுமைகள் இருப்பதைக் காட்டியது" என்றும் அவர் கூறுகிறார்.

"புகைபிடிக்கும் நடத்தை மற்றும் கல்வி நிலை ஆகியவற்றிலும் ஜோடிகளில் ஒற்றுமை இருந்ததாகவும், பகிரப்பட்ட மரபணு மாறுபாடு உடல் தோற்றத்துடன் தொடர்புடையது மட்டுமல்ல, பொதுவான பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தையிலும் தாக்கம் கொண்டிருக்கலாம் என்று அந்நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

 

பயோமெடிசினில் இதன் சாத்தியமான பயன்பாடு குறித்தும் எஸ்டெல்லர் ஆராய விரும்புகிறார்.

"முகத்தின் வடிவத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் மரபணுக்கள் மற்றும் அவற்றின் மாறுபாடுகளை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். எனவே மூக்கு, வாய், நெற்றி, காதுகளின் மரபணுக்கள் நோயறிதலிலும் உதவலாம்” என்கிறார் எஸ்டெல்லர்.

"ஒருவர் முகத்தில் இருந்து அந்த நபரின் மரபணுவை நாம் ஓரளவு அறிய முடியும். இது மரபணு நோய்களின் ஆரம்பநிலை கண்டறிதலுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றும் அவர் கூறுகிறார்.

சிறிய அளவிலான ஆய்வு

இந்த ஆய்வு சிறிய அளவில் நடத்தப்பட்டது என்பதை ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். இது சரியானது என்று நம்பும் அவர்கள், பெரிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டாலும் தங்களின் கண்டுபிடிப்புகள் மாறாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

"பெரிய அளவில் நடத்தப்படும் ஆய்வு, அதிக மரபணு மாறுபாடுகளை வழங்கும். மேலும், நமது முகங்களை வரையறுக்க உயிரியல் தரவுகளின் பிற அடுக்குகளின் பங்களிப்பை தெளிவுபடுத்துவதற்கும் அது பயனுள்ளதாக இருக்கும்" என எஸ்டெல்லர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“நம்மைப் போல 100 சதவிகிதம் ஒத்த நபர் இருப்பது கடினம். ஆனால், 75 சதவிகிதம், 80 சதவிகிதம் வேறுபாடு கொண்ட நபர்கள் உலகில் பலர் உள்ளனர். எனவே நாம் சரியான நேரத்தில் இருக்கிறோம்” என்று பிபிசி முண்டோ சேவையிடம் எஸ்டெல்லர் தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக ஒரே மாதிரியாக இருக்கும் அந்நியர்களை படம்பிடித்து அதில் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ள ப்ரூனெல், "ஒருமுறை உங்கள் மேற்பரப்பைக் கொஞ்சம் சுரண்டினால், அனைத்து இடங்களிலும் மக்கள் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நாம் எப்படி இருந்தாலும் நாம் ஓர் இனம்” என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c041982ymm0o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.