Jump to content

இளவாலையில் வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடியவர் ஹெரோயினுடன் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இளவாலையில் வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடியவர் ஹெரோயினுடன் கைது 

By NANTHINI

19 NOV, 2022 | 04:01 PM
image

ளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உயரப்புலம் மற்றும் இளவாலை பகுதிகளில் உள்ள வீடுகளை உடைத்து 16 இலட்சம் ரூபா தங்க நகைகளை திருடிய நபர் நேற்று வெள்ளிக்கிழமை (நவ 18) இளவாலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரிடமிருந்து 130 மில்லி கிராம் ஹெரோயின், நகைகள், நகை அடகு வைத்த ஆவணம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் முதலியன மீட்கப்பட்டுள்ளன.

IMG-20221119-WA0064.jpg

அதன் அடிப்படையில் சந்தேக நபர் தான் திருடிய நகைகள் சிலவற்றினை நகைக் கடையில் அடகு வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் இளவாலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார். 

இந்த குற்றச் செயல்கள் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சந்தேக நபர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/140545

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரே…. நகைத் திருட்டு, நகை அடைவு பிடிப்பு, ஹெரோயின் வியாபாரம் என்று…
ஒய்வில்லாமல் பல தொழில்களை செய்வது ஆச்சரியமளிக்கின்றது. 🤣
இவருக்கு… அரசு, சிறந்த உழைப்பாளி என்ற விருதை கொடுத்து கௌரவிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இளவாலையில் வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடியவர் ஹெரோயினுடன் கைது 

 

7 minutes ago, தமிழ் சிறி said:

ஒருவரே…. நகைத் திருட்டு, நகை அடைவு பிடிப்பு, ஹெரோயின் வியாபாரம் என்று…
ஒய்வில்லாமல் பல தொழில்களை செய்வது ஆச்சரியமளிக்கின்றது. 🤣
இவருக்கு… அரசு, சிறந்த உழைப்பாளி என்ற விருதை கொடுத்து கௌரவிக்க வேண்டும்.

குற்றம் செய்யாதவர்கள் மீதும் தனிப்பட்ட கோபதாபங்களை தீர்த்துக் கொள்ள வில்லங்கமாக அவர்களது உடமைகளில் வைத்துவிட்டு எடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

குற்றம் செய்யாதவர்கள் மீதும் தனிப்பட்ட கோபதாபங்களை தீர்த்துக் கொள்ள வில்லங்கமாக அவர்களது உடமைகளில் வைத்துவிட்டு எடுக்கலாம்.

ஆம் நம் நாட்டில், எதுவும் சாத்தியமே.
உண்மையான போதை வியாபாரி வெளியில் நடமாட,
அப்பாவிகளை கைது செய்து, காவல்துறை நல்ல பெயர் எடுக்க முனையலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஊர் போய் வந்த சிங்களத்திலும் சரளமாக பேசக்கூடிய ஒருவர் சொன்னார். நாட்டின் எந்த பகுதியாயினும், ஆட்டோக்காரர் முதல், அரச அலுவலகர் வரை, மக்கள் வெளிநாட்டு ஆவலில் உள்ளனர். அதன் காரணமாக இலகுவாக மோசடிக் கும்பல்களிடம் சிக்கி விடுகிறார்கள். அண்மையில் வியட்னாமில் 303 பேர் சிக்கி தவிக்க, கொழும்பு, தென்னாபிரிக்கா, பிரேசில், அமேரிக்கா ரூட்டில் கனடாவுக்கு என்று இன்னோரு கோஸ்ட்டி அலை மோதுகிறதாம்.

நிச்சயமாக இவர்களும் காசை கொடுத்து விட்டு எங்கோ தொங்கப்போகிறார்கள் என்கிறார்.

இவர் கொழும்பில் காபி கடை ஒன்றில் ஒரு சிங்களவரை வேலை ஒன்று விடயமாக சந்தித்துள்ளார். அவரும் பேசி முடித்த பின்னர், வெளிநாடு வரக்கூடிய வாய்ப்பு குறித்து பேசி உள்ளார். அவர் சென்றதும், பில் தர வந்த கடை ஓனர், சிங்களத்தில், மாத்தையா எமக்கு இங்கு மிகவும் சிரமமாக உள்ளது. என்னை, அல்லது எனது கணவரை, வெளிநாடு வர உதவ முடியுமா என்று கேட்டு அதிர வைத்துள்ளார். அவருடன், முதலில் பேசிய விபரத்தை கேட்டு கொண்டிருந்திருக்கிறார்.

இதுதான் ஊர் நிலைமை. 

Edited by Nathamuni
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தமிழ் சிறி said:

ஆம் நம் நாட்டில், எதுவும் சாத்தியமே.
உண்மையான போதை வியாபாரி வெளியில் நடமாட,
அப்பாவிகளை கைது செய்து, காவல்துறை நல்ல பெயர் எடுக்க முனையலாம்.

பழி வாங்கல்களுக்கு நல்ல தருணமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அண்மையில் ஊர் போய் வந்த சிங்களத்திலும் சரளமாக பேசக்கூடிய ஒருவர் சொன்னார். நாட்டின் எந்த பகுதியாயினும், ஆட்டோக்காரர் முதல், அரச அலுவலகர் வரை, மக்கள் வெளிநாட்டு ஆவலில் உள்ளனர். அதன் காரணமாக இலகுவாக மோசடிக் கும்பல்களிடம் சிக்கி விடுகிறார்கள். அண்மையில் வியட்னாமில் 303 பேர் சிக்கி தவிக்க, கொழும்பு, தென்னாபிரிக்கா, பிரேசில், அமேரிக்கா ரூட்டில் கனடாவுக்கு என்று இன்னோரு கோஸ்ட்டி அலை மோதுகிறதாம்.

நிச்சயமாக இவர்களும் காசை கொடுத்து விட்டு எங்கோ தொங்கப்போகிறார்கள் என்கிறார்.

இவர் கொழும்பில் காபி கடை ஒன்றில் ஒரு சிங்களவரை வேலை ஒன்று விடயமாக சந்தித்துள்ளார். அவரும் பேசி முடித்த பின்னர், வெளிநாடு வரக்கூடிய வாய்ப்பு குறித்து பேசி உள்ளார். அவர் சென்றதும், பில் தர வந்த கடை ஓனர், சிங்களத்தில், மாத்தையா எமக்கு இங்கு மிகவும் சிரமமாக உள்ளது. என்னை, அல்லது எனது கணவரை, வெளிநாடு வர உதவ முடியுமா என்று கேட்டு அதிர வைத்துள்ளார். அவருடன், முதலில் பேசிய விபரத்தை கேட்டு கொண்டிருந்திருக்கிறார்.

இதுதான் ஊர் நிலைமை. 

இங்குள்ள பலரும் பொருளாதார நெருக்கடியையும் காரணமாக்கி வெளிநாடு செல்லும் வழியையே தேடுகிறார்கள்.

  • Sad 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.