Jump to content

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதனையின்போது சிக்கிக் கொண்ட 124 பேர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதனையின்போது சிக்கிக் கொண்ட 124 பேர்!

By T. SARANYA

07 DEC, 2022 | 01:27 PM
image

கொழும்பு கோட்டை  ரயில்  நிலையத்தில் நேற்று (06) காலை 06.30 மணி முதல் 10.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட  விசேட பயணச்சீட்டு சோதனையின்போது செல்லுபடியான பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்த 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பயணச்சீட்டு பரிசோதகர்கள் மற்றும் கோட்டை ரயில்  நிலைய ஊழியர்கள் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டதாக  ரயில்வேயின் வர்த்தக பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

இதன்போது  கைது செய்யப்பட்ட 78 பேர் உரிய அபராதத் தொகையை உடனடியாகச்  செலுத்தியுள்ளனர். ஏனைய 46 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய அபராதத் தொகை 39,840 ரூபா எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பயணச்சீட்டு  இன்றி கைது செய்யப்பட்ட 124 பேரிடமிருந்து அறவிடப்பட்ட மொத்த அபராதத் தொகை 3 இலட்சத்து 78,610 ரூபா என தெரிவிக்கப்படடள்ளது.

https://www.virakesari.lk/article/142431

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சீட் பிடிக்கும் ஆட்களுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாதோ?

இரவு கொழும்பில் ஏறி காலையில் திருகோணமலை இறங்கும் புகையிரதம் ஒன்றில் ஏறினேன்.  அன்றுடன் ரயில் பயணம் வெறுக்காத  குறை. ஆசனம் முன்பதிவு செய்தும் அல்லோல கல்லோலப்பட்டேன். 

இரயில் பிளாட்போமில் வந்து நின்றதும் எல்லோரும் சீட் பிடிக்க பாய்ந்தடித்து ஓடியது முன்பு ஊரில் விமானம் குண்டுவீசவரும் போது பதுங்கு குழியினுள் விழுந்தடித்து ஓடுவதை நினைவுபடுத்தியது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

வந்து நின்றதும் 

என்ன சார் வந்து நின்றதும் என்கிறீர்கள்?

புகையிரதம் நிற்க முன்பே அத்தனை பேரும் உள்ளே இருப்பார்கள்.

அப்பாவிகள் முதியவர்கள் பெண்கள் தான் புகையிரதம் நின்ற பின்பு ஏறுபவர்கள்.

முன்பதிவு செய்துமா அல்லோல கல்லோலம்?

7 hours ago, ஏராளன் said:

இதன்படி, பயணச்சீட்டு  இன்றி கைது செய்யப்பட்ட 124 பேரிடமிருந்து அறவிடப்பட்ட மொத்த அபராதத் தொகை 3 இலட்சத்து 78,610 ரூபா என தெரிவிக்கப்படடள்ளது.

இதிலே இலஞ்சமாக எவ்வளவு தள்ளினார்கள் என்பது கணக்கிலில்லை யுவர் ஆனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன சார் வந்து நின்றதும் என்கிறீர்கள்?

புகையிரதம் நிற்க முன்பே அத்தனை பேரும் உள்ளே இருப்பார்கள்.

அப்பாவிகள் முதியவர்கள் பெண்கள் தான் புகையிரதம் நின்ற பின்பு ஏறுபவர்கள்.

முன்பதிவு செய்துமா அல்லோல கல்லோலம்?

 ரயிலோட ஓடி ஏறி சீற் பிடிச்ச ஞாபகம் இருக்கோ? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

 ரயிலோட ஓடி ஏறி சீற் பிடிச்ச ஞாபகம் இருக்கோ? 😁

2017 இல் இலங்கை போனபோது மச்சான் முதலே 3ம் வகுப்பு சீட்டை எடுத்து தந்துவிட்டு கடைக்கு போய் வருகிறேன் என்று போய்விட்டார்.

புகையிரதம் வரும் நேரமாகியும் அவர் வரவில்லை.

நிறைய கூட்டமாக இருந்தது.ஆனபடியால் மறுபக்கம் போய் நின்று நல்ல இருக்கைகள் பிடித்தோம்.

முன்னரெல்லாம் வெள்ளி இரவு போய் ஞாயிறு இரவு கொழும்பு வாறது.அந்த நேரங்களில் முதல் ஏறி இருக்கைகள் பிடிப்போரில் நானும் ஒருவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

2017 இல் இலங்கை போனபோது மச்சான் முதலே 3ம் வகுப்பு சீட்டை எடுத்து தந்துவிட்டு கடைக்கு போய் வருகிறேன் என்று போய்விட்டார்.

புகையிரதம் வரும் நேரமாகியும் அவர் வரவில்லை.

நிறைய கூட்டமாக இருந்தது.ஆனபடியால் மறுபக்கம் போய் நின்று நல்ல இருக்கைகள் பிடித்தோம்.

முன்னரெல்லாம் வெள்ளி இரவு போய் ஞாயிறு இரவு கொழும்பு வாறது.அந்த நேரங்களில் முதல் ஏறி இருக்கைகள் பிடிப்போரில் நானும் ஒருவன்.

இரவு  மெயில் ரயில் எண்டால் நான் சில வேளைகளில் KKS  போய் சீற் பிடித்து வந்திருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன சார் வந்து நின்றதும் என்கிறீர்கள்?

புகையிரதம் நிற்க முன்பே அத்தனை பேரும் உள்ளே இருப்பார்கள்.

அப்பாவிகள் முதியவர்கள் பெண்கள் தான் புகையிரதம் நின்ற பின்பு ஏறுபவர்கள்.

முன்பதிவு செய்துமா அல்லோல கல்லோலம்?

இதிலே இலஞ்சமாக எவ்வளவு தள்ளினார்கள் என்பது கணக்கிலில்லை யுவர் ஆனர்.

 

அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டை ஏப்பம் விட்டு தின்ற காசில், சொந்த வாகனங்களில் பவுசாய் திரியும்போது குடிமக்கள் எஞ்சிய மிச்சம் சொச்சத்தில் உருவாக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை பெற்றுக்கொள்ள மிருகத்தனமாய் போட்டி போடுகின்றார்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொல்வது அண்மைய பொருளாதார நெருக்கடிக்கு முன்னான நிலை.

£600-1200 தெண்டமாக அழுது, ஏதோ மரண தண்டனை கைதியின் எலெக்ரிக் கதிரையில் இருப்பது போல் 11 மணி நேரம் காலை மடக்கி வைத்து இருந்து, ஒரு பெட்டி போன்ற அறையில் உச்சா, கக்கா எல்லாம் போய், அதுக்கு பக்கத்தில் வைத்திருக்கும் சாப்பாடை கவ்வி மென்று முழுங்கி,

இலண்டனில் இருந்து போகும் விமான பயணத்தை விட ஊரில் இருக்கும் பலூன் பஸ்சிலோ அல்லது 1ம் வகுப்பு ரயிலிலோ போவது அவ்வளவு கடினம் இல்லை.

இலங்கையில் இப்போ 3ம் வகுப்பு (பழைய மர சட்ட இருக்கைகள்) இல்லை என நினைக்கிறேன். 2,1 தான்.

1ம் வகுப்பு முன் பதிவு செய்திருந்தால் யாரும் ஏறி சீட்டில் இருக்க மாட்டார்கள், இருந்தாலும் காவலாளியை விட்டு தூக்கி விடலாம்.

ஒரே பிரச்சனை - மலசலகூடம். நாசமறுப்பார் நாறி வச்சிருப்பார்கள்😷.

ஆகவே பயணம் முழுவதும் கழிவகற்றாமல் கடத்த முடிந்தால் போதும்.

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா?
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
    • 200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி தம்பதியினர் பற்றி குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதாவது ஜெயின் மதத்தைப் பின்பற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி. இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். இது குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், பவேஷ் பண்டாரியும், அவரின் மனைவியும் துறவறத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதற்காக தங்களின் ரூ.200 கோடி சொத்துகளையும் கடந்த பிப்ரவரி மாதம் தர்மம் செய்திருக்கின்றனர். ஜைன மதத்தில், ‘தீக்ஷா’ எடுப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்கத் துறவறமாகும் . இந்த துறவறத்தில் ஈடுபடும் தனிநபர் பொருள் வசதிகள் இல்லாமல், யாசகம் செய்து உயிர்வாழ வேண்டும். மேலும், நாடு முழுவதும் வெறுங்காலுடன் திரியவேண்டும். அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டுக்கென இரண்டு வெள்ளை ஆடைகள், யாசகம் செய்ய கிண்ணம், இருக்கும் இடத்தில் உள்ள பூச்சிகளை அப்புறப்படுத்த “ரஜோஹரன்” எனும் ஒரு வெள்ளை விளக்குமாறு இவற்றைத் தவிர வேறு பொருள்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை.. இதன் காரணமாக இந்த துறவற வாழ்வில் நுழைய ஏப்ரல் 22ஆம் திகதி இந்த தம்பதி உறுதிமொழி ஏற்கவிருக்கின்றனர். அவர்களின் உறுதிமொழி ஏற்புக்குப் பிறகு அனைத்து குடும்ப உறவுகளையும் துண்டித்து, துறவற வாழ்வை மேற்கொள்வார்கள். அபரிமிதமான செல்வத்திற்குப் பெயர் பெற்ற பவேஷ் பண்டாரி குடும்பத்தின் இந்த துறவற முடிவு, குஜராத் மாநிலம் முழுவதும் கவனம் ஈர்த்துள்ளது. https://thinakkural.lk/article/299196
    • இது துல்லியமான பார்வை என நினைக்கிறேன். Put your money where your mouth is  என்பார்கள் - ஹமாஸ் அடித்த நேரம், ஈரான்/ஹிஸ்புல்லா முறுக்கிய நேரம், கொஞ்சம் போல் எண்ணையில் முதலீடு செய்தேன். எப்படியும் கூடும் என நினைத்து. என் லக் தெரியும்தானே - அதன் பிறகு இத்தனை நாளும் எண்ணை விலை ஏறவே இல்லை. ஈரான் அடிக்க தொடங்க முதல் சட சட என ஏற, பாதியை விற்றேன். நேற்றைய சம்பாசணை, குறிப்பாக உங்களின் கருத்துக்கு பின், மிக குறைந்த இலாபத்தில் மீதியையும் விற்று விட்டேன். இனி நவம்பர் தேர்தல் வரை விலை ஏறாது என நினைக்கிறேன். யார் கண்டது என் லக்குக்கு நாளைகே உ.யு3 தொடங்கி, பரலுக்கு 300 ஐ தாண்டினாலும் ஆச்சரியமில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.