Jump to content

2022 ஆண்டின் சிறந்த மனிதர் - டைம் சஞ்சிகை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 வருடம்தோறும் டைம் சஞ்சிகை ஆண்டின் சிறந்த மனிதர் என ஒருவரை தெரிவு செய்யும்.

இந்த ஆண்டு உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் செலன்ஸ்கியையும்  உக்ரேனிய ஓர்மத்தையும் ஆண்டின் சிறந்த மனிதராக தெரிவுசெய்துள்ளது டைம்.

ஒப்பிட முடியாத பெரும் எதிரிக்கு எதிராக, பெரும் உலக ஆதிக்க சக்திகளின் தன்னலனை, உக்ரேனிற்கு ஆதரவாக திசைதிருப்பி, இராஜதந்திரத்திலும், பேச்சு திறமை மூலம் மக்களை போரில் ஆர்வமாக ஈடுபடசெய்து, உத்வேகத்தை கட்டி எழுப்பி தலைமைதுவத்திலும், இன்னும் பிற அரிய தலைமைத்துவ பண்புகளை வெளிகொணர்ந்தும் போரின் போக்கை, நாட்டின் தலைவிதியை, உலக வராற்றின் ஒரு கணப்பொழுதை தீர்மானிப்பதில் கணிசமான பங்கை செலன்ஸ்கி வகித்தார் என்கிறது டைம் (நேரடி மொழி மாற்றம் அல்ல).

இந்த கெளரவத்திற்கு பரிசீலிக்கப்பட்ட இன்னுமொரு நபர்/குழு “ஈரானின் பெண் ஆர்பாட்டகாரர்கள்” ஆவர். அவர்களுக்கு ஆண்டின் கதாநாயகர்கள் கெளரவம் வழங்கப்படுகிறது. 

https://time.com/person-of-the-year-2022-volodymyr-zelensky/

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறு புறமாக

உலகுக்கே அதிக  பயத்தையும் வைராக்கியத்தையும் காட்டிவந்த  ரசியா???😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

ஒப்பிட முடியாத பெரும் எதிரிக்கு எதிராக, பெரும் உலக ஆதிக்க சக்திகளின் தன்னலனை, உக்ரேனிற்கு ஆதரவாக திசைதிருப்பி, இராஜதந்திரத்திலும், பேச்சு திறமை மூலம் மக்களை போரில் ஆர்வமாக ஈடுபடசெய்து, உத்வேகத்தை கட்டி எழுப்பி தலைமைதுவத்திலும், இன்னும் பிற அரிய தலைமைத்துவ பண்புகளை வெளிகொணர்ந்தும் போரின் போக்கை, நாட்டின் தலைவிதியை, உலக வராற்றின் ஒரு கணப்பொழுதை தீர்மானிப்பதில் கணிசமான பங்கை செலன்ஸ்கி வகித்தார் என்கிறது டைம் (நேரடி மொழி மாற்றம் அல்ல).

இது அமெரிக்காவால் நன்கு திட்டமிட்டு ரஷ்யாவிற்கு எதிராக நடத்தப்படும் ஒரு கேவலம் கெட்ட யுத்தம். இதே போல் தான் இலங்கையில் இந்தியாவால் நடத்தப்பட்ட யுத்தத்தில் மகிந்தவும் கோத்தபாயவும் போர் வீரர்களாக சித்தரிக்கப்பட்டார்கள்.

கோமாளி செலென்ஸ்கிக்கு அடுத்தது நோபல் பரிசுதான் இலக்கு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

இது அமெரிக்காவால் நன்கு திட்டமிட்டு ரஷ்யாவிற்கு எதிராக நடத்தப்படும் ஒரு கேவலம் கெட்ட யுத்தம். இதே போல் தான் இலங்கையில் இந்தியாவால் நடத்தப்பட்ட யுத்தத்தில் மகிந்தவும் கோத்தபாயவும் போர் வீரர்களாக சித்தரிக்கப்பட்டார்கள்.

கோமாளி செலென்ஸ்கிக்கு அடுத்தது நோபல் பரிசுதான் இலக்கு...

போற போக்கில புட்டின் கையால Hero of Russia அவார்ட்டு வாங்கினாலும் வாங்கிடுவார்.

#கோமாளி கிட்ட அடி வாங்கிற பேமானி

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

.

#கோமாளி கிட்ட அடி வாங்கிற பேமானி

 

முடியலயப்பு

சிரிச்சு  முடியல🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

 வருடம்தோறும் டைம் சஞ்சிகை ஆண்டின் சிறந்த மனிதர் என ஒருவரை தெரிவு செய்யும்.

இந்த ஆண்டு உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் செலன்ஸ்கியையும்  உக்ரேனிய ஓர்மத்தையும் ஆண்டின் சிறந்த மனிதராக தெரிவுசெய்துள்ளது டைம்.

ஒப்பிட முடியாத பெரும் எதிரிக்கு எதிராக, பெரும் உலக ஆதிக்க சக்திகளின் தன்னலனை, உக்ரேனிற்கு ஆதரவாக திசைதிருப்பி, இராஜதந்திரத்திலும், பேச்சு திறமை மூலம் மக்களை போரில் ஆர்வமாக ஈடுபடசெய்து, உத்வேகத்தை கட்டி எழுப்பி தலைமைதுவத்திலும், இன்னும் பிற அரிய தலைமைத்துவ பண்புகளை வெளிகொணர்ந்தும் போரின் போக்கை, நாட்டின் தலைவிதியை, உலக வராற்றின் ஒரு கணப்பொழுதை தீர்மானிப்பதில் கணிசமான பங்கை செலன்ஸ்கி வகித்தார் என்கிறது டைம் (நேரடி மொழி மாற்றம் அல்ல).

இந்த கெளரவத்திற்கு பரிசீலிக்கப்பட்ட இன்னுமொரு நபர்/குழு “ஈரானின் பெண் ஆர்பாட்டகாரர்கள்” ஆவர். அவர்களுக்கு ஆண்டின் கதாநாயகர்கள் கெளரவம் வழங்கப்படுகிறது. 

https://time.com/person-of-the-year-2022-volodymyr-zelensky/

 

தகுதியான ஆளுக்குத் தான் கொடுத்திருக்கிறார்கள். இந்த வேளையில் சொந்தக் காலுக்கும் இரவல் காலுக்கும் இடையிலான வேறுபாட்டை சுட்டிக் காட்ட வேண்டும்:

21 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செலவழித்த தொகை 2.3 ட்ரில்லியன் டொலர்கள்!- ஆண்டுக்கு 100 பில்லியனுக்கும் அதிகம்! இந்த ஆண்டுக்கு 100 பில்லியன் செலவில், 750 மில்லியன் டொலர்கள் ஆப்கான் இராணுவத்தின் (அரிக்கன் ஆடுகள்😂?) சம்பளத்திற்கான செலவு. இறுதியில், அந்தச் சம்பளக் காசு ஊழல் தலைகளின் வங்கியில் சேர்ந்தாகக் கண்டு கொண்ட பின்னர் தான் பிளக்கைப் பிடுங்கி விட்டு வெளியேறினர். பின்னர் நடந்தது உலகப் பிரபலச் செய்தி!

பெப்ரவரி 2022 முதல் இன்று வரை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய தொகை ஏறத்தாழ 18 பில்லியன் டொலர்கள் (மிகுதி நேட்டோ நாடுகள் இதை விட மிகக் குறைவாக வழங்கியிருக்கின்றன). இதை எடுத்துக் கொண்டு, ஊழல்களை பின் தள்ளி விட்டு உக்ரைன் புட்டின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது.

("ஆப்கானிஸ்தான் அரிக்கன் ஆடுகளை அமெரிக்கா உக்ரைன் போல கவனிக்கவில்லை" என்று அடிக்கடி குறைப்படும் நுணாவிற்கு இது சமர்ப்பணம்!😁)

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

முடியலயப்பு

சிரிச்சு  முடியல🤣

🤣 ஒத்தகையால பென்ஸ் S கிளாஸ்ச சுத்தி சுத்தி ஓடுற ஒரு பெரும் தலைவன் - இந்தளவு கூட கலாய்க்காட்டில் என்ன மரியாதை🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தகுதியான ஆளுக்குத் தான் கொடுத்திருக்கிறார்கள். இந்த வேளையில் சொந்தக் காலுக்கும் இரவல் காலுக்கும் இடையிலான வேறுபாட்டை சுட்டிக் காட்ட வேண்டும்:

21 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செலவழித்த தொகை 2.3 ட்ரில்லியன் டொலர்கள்!- ஆண்டுக்கு 100 பில்லியனுக்கும் அதிகம்! இந்த ஆண்டுக்கு 100 பில்லியன் செலவில், 750 மில்லியன் டொலர்கள் ஆப்கான் இராணுவத்தின் (அரிக்கன் ஆடுகள்😂?) சம்பளத்திற்கான செலவு. இறுதியில், அந்தச் சம்பளக் காசு ஊழல் தலைகளின் வங்கியில் சேர்ந்தாகக் கண்டு கொண்ட பின்னர் தான் பிளக்கைப் பிடுங்கி விட்டு வெளியேறினர். பின்னர் நடந்தது உலகப் பிரபலச் செய்தி!

பெப்ரவரி 2022 முதல் இன்று வரை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய தொகை ஏறத்தாழ 18 பில்லியன் டொலர்கள் (மிகுதி நேட்டோ நாடுகள் இதை விட மிகக் குறைவாக வழங்கியிருக்கின்றன). இதை எடுத்துக் கொண்டு, ஊழல்களை பின் தள்ளி விட்டு உக்ரைன் புட்டின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது.

("ஆப்கானிஸ்தான் அரிக்கன் ஆடுகளை அமெரிக்கா உக்ரைன் போல கவனிக்கவில்லை" என்று அடிக்கடி குறைப்படும் நுணாவிற்கு இது சமர்ப்பணம்!😁)

அழுதழுதும் பிள்ளையை அவள்தான் பெறவேண்டும்.

சுதந்திரம், இறையாண்மை, மக்களாட்சி, ஜனநாயகம் - வாடகைதாய் பிரசவிக்க முடியாத குழந்தைகள்.

எத்தனை செவிலியர் அருகில் நின்று ஆதரவு தந்தாலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1938ல் Adolf Hitler க்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1930 மகாத்மா காந்திக்ஜும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1992 ல் பில் கிளின்ரன், 2004 ஜோஜ் புஸ் ஜூனியருக்கும், 2007,2008 ல் பராக் ஒபாமாவுக்கும் 2008ல் புட்டினுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

1938ல் Adolf Hitler க்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1930 மகாத்மா காந்திக்ஜும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1992 ல் பில் கிளின்ரன், 2004 ஜோஜ் புஸ் ஜூனியருக்கும், 2007,2008 ல் பராக் ஒபாமாவுக்கும் 2008ல் புட்டினுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

இடி அமீன்,  ஒசாமா பின்லாடன்…. ஆகியோர்
இன்னும் கொஞ்சக் காலம் உயிருடன் இருந்திருந்தால்…
டைம் சஞ்சிகை, அவர்களுக்கும் இந்தப் பரிசை கொடுத்திருக்கும். 😎

அதி உத்தமர் புட்டின் அவர்கள், 2008’ம் ஆண்டிலேயே வாங்கிய பரிசைத் தான்…
கோமாளி நடிகர் செலென்ஸ்கி 2022’ம் ஆண்டு வாங்கியுள்ளார்.
கோமாளி படித்த பள்ளிக்கூடத்தில்… அதி உத்தமர் பிரின்சிப்பால்(டா) 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

1938ல் Adolf Hitler க்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1930 மகாத்மா காந்திக்ஜும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 1992 ல் பில் கிளின்ரன், 2004 ஜோஜ் புஸ் ஜூனியருக்கும், 2007,2008 ல் பராக் ஒபாமாவுக்கும் 2008ல் புட்டினுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. 

 

1938 இல் "ஆண்டின் மனிதர்" (TIMES Man of the Year) ஹிற்லருக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அது   புகழ்ந்து  வழங்கப் பட்டதல்ல என்பதை நீங்கள் ஆழ வாசித்தறிந்திருக்க மாட்டீர்கள்! கீழே இணைப்பில் சென்று வாசியுங்கள். மொழி மாற்றம் அவசியமில்லையென நினைக்கிறேன்!👇

"......Hitler was chosen in 1938 because of his negative impact" Others included former Soviet Union leader Joseph Stalin, former Soviet premier Nikita Khrushchev and Iran's former supreme leader Ayatullah Khomeini"

https://www.usatoday.com/story/news/factcheck/2021/08/19/fact-check-hitler-time-magazine-man-year-1938-not-honor/8149799002/

 

2022 செலன்ஸ்கிக்கு ஏன் வழங்கப் பட்டதென கூறும் குறிப்பையும் வாசியுங்கள்.

வாசிப்பு நல்லது, அடிக்கடி உங்கள் கருத்துக்கள் மொக்கேனத்துற்குள்ளாவ்தைத் தடுக்கும் சக்தி வாசிப்பிற்குண்டு கப்ரன்!

https://time.com/person-of-the-year-2022-volodymyr-zelensky/?utm_source=twitter&utm_medium=social&utm_campaign=person-of-the-year&utm_term=world_ukraine&linkId=192718440

https://twitter.com/TIME/status/1600470652363866113/photo/1

 

Edited by Justin
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

1938 இல் "ஆண்டின் மனிதர்" (TIMES Man of the Year) ஹிற்லருக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால், அது   புகழ்ந்து  வழங்கப் பட்டதல்ல என்பதை நீங்கள் ஆழ வாசித்தறிந்திருக்க மாட்டீர்கள்! கீழே இணைப்பில் சென்று வாசியுங்கள். மொழி மாற்றம் அவசியமில்லையென நினைக்கிறேன்!👇

"......Hitler was chosen in 1938 because of his negative impact" Others included former Soviet Union leader Joseph Stalin, former Soviet premier Nikita Khrushchev and Iran's former supreme leader Ayatullah Khomeini"

https://www.usatoday.com/story/news/factcheck/2021/08/19/fact-check-hitler-time-magazine-man-year-1938-not-honor/8149799002/

யார் யாருக்குக்.கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளேன் என்பதைக் கவனித்திருந்தீர்களாக இருந்தால் இதை இங்கே குறிப்பிட்டிருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

யார் யாருக்குக்.கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளேன் என்பதைக் கவனித்திருந்தீர்களாக இருந்தால் இதை இங்கே குறிப்பிட்டிருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். 

சும்மா தகவலுக்காகத் தான் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்பதை நம்புகிறேன்!

பட்டியலில் இருக்கும் ஒபாமா, புட்டின், பின்னர் நான் சேர்த்த ஸ்ராலின், குருஷேவ், அல் கொமெய்னி - இவர்கள் யாவரும் ஒன்றே என்பதைக் குறிப்பிடுவதற்காக அல்ல என்பதையும் நம்புகிறேன்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

#கோமாளி கிட்ட அடி வாங்கிற பேமானி

நான் விழுந்து விழுந்து சிரிச்சதிலை முழங்கால் சில்லு உடைஞ்சு போச்சுது கண்டியளோ.....🤪

வியாபார டைம் சஞ்சிகை தனக்கு பிடித்த ஆக்களை தூக்கி பிடிப்பதிலை ஆச்சரியம் ஒண்டுமில்லை பாருங்கோ :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

சும்மா தகவலுக்காகத் தான் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்பதை நம்புகிறேன்!

பட்டியலில் இருக்கும் ஒபாமா, புட்டின், பின்னர் நான் சேர்த்த ஸ்ராலின், குருஷேவ், அல் கொமெய்னி - இவர்கள் யாவரும் ஒன்றே என்பதைக் குறிப்பிடுவதற்காக அல்ல என்பதையும் நம்புகிறேன்!😎

சும்மா  தகவலுக்காக குறிப்பிடவில்லை. யார் யாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அவர்களின் செயல்களுக்கிடையேயான முரண்பாட்டையும் காட்டுவதற்காக இங்கே குறிப்பிட்டிருந்தேன்.  

சுருக்கமாகச் சொல்லுவதானால், முரண்பாட்டின் மொத்த வடிவமே இந்த Man of the Year தெரிவு. 

அந்தப்பக்கம் புடின், இந்தப்பக்கம்  செலண்ஸ்கி. இவர்கள் இருவருக்குமே இந்த்க் கெளரவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இப்போது இந்த தெரிவின் பெறுமதி என்ன? 

😉

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

சும்மா  தகவலுக்காக குறிப்பிடவில்லை. யார் யாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அவர்களின் செயல்களுக்கிடையேயான முரண்பாட்டையும் காட்டுவதற்காக இங்கே குறிப்பிட்டிருந்தேன்.  

சுருக்கமாகச் சொல்லுவதானால், முரண்பாட்டின் மொத்த வடிவமே இந்த Man of the Year தெரிவு. 

அந்தப்பக்கம் புடின், இந்தப்பக்கம்  செலண்ஸ்கி. இவர்கள் இருவருக்குமே இந்த்க் கெளரவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இப்போது இந்த தெரிவின் பெறுமதி என்ன? 

😉

 

 

உங்களுக்கு உண்மையிலேயே அடிப்படை புரிதலில் பாரிய குறைபாடு உள்ளது கற்ப்ஸ்.

இது ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்பதை குறிக்கும் விருது இல்லை.

 உண்மையில் இது ஒரு விருதே அல்ல. அங்கீகாரம்.

ஒரு வருடத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நபர் யார் என்ற அங்கீகாரம்தான் இது. அதனால்தான் ஹிட்லருக்கும், காந்திக்கும், டிரம்புக்கும், கிரேட்டாவுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

உங்களுக்கு உண்மையிலேயே அடிப்படை புரிதலில் பாரிய குறைபாடு உள்ளது கற்ப்ஸ்.

இது ஒருவர் நல்லவரா, கெட்டவரா என்பதை குறிக்கும் விருது இல்லை.

 உண்மையில் இது ஒரு விருதே அல்ல. அங்கீகாரம்.

ஒரு வருடத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நபர் யார் என்ற அங்கீகாரம்தான் இது. அதனால்தான் ஹிட்லருக்கும், காந்திக்கும், டிரம்புக்கும், கிரேட்டாவுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

எனக்கு "பாரிய புரிதல் குறைபாடு" என்பது ஒருபக்கம் இருக்க்ட்டும் கோசான். அதப் பின்னர் கவனிப்போம். 😉

 

இங்கே எந்த இடத்திலும் நான் விருது என்று குறிப்பிடவில்லை.

Justin க்கு கொடுக்கப்பட்ட விளக்கத்தில் எனது நோக்கத்தைத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன். 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kapithan said:

அந்தப்பக்கம் புடின், இந்தப்பக்கம்  செலண்ஸ்கி. இவர்கள் இருவருக்குமே இந்த்க் கெளரவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.  இப்போது இந்த தெரிவின் பெறுமதி என்ன? 

இந்த பந்தி உங்கள் புரிதல் குறைபாட்டை விளக்கி நிக்கிறது கற்ப்ஸ்.

நான் சொன்னதைதான் ஜஸ்டீன் அண்ணாவும் தன்மையாக சொன்னார் ஆனால் நீங்கள் உங்கள் ஏலவே எடுத்த தவறான முடிவில் அறுதியாக இருப்பதால் அவர் சொன்னதை காதில் போட்டு கொள்ளவே இல்லை.

புட்டின் ஒரு வருடத்தில் (2007) அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார் - அவரை குறிப்பிட்டார்கள்.

2022 இல் செலன்ஸ்கி.

இது தனியே “தாக்கம்” (impact) தின் அடிப்படையிலான தெரிவு. ஒழிய நியா/அநியாய, நல்லது/கெட்டது பற்றிய தெரிவு அல்ல.

இப்படி - தனியே தாக்கத்தை மட்டும் கருதி, எதிரெதிர் துருவங்களுக்கு கொடுப்பது இந்த தெரிவு பொறி முறையின் நம்பகத்தன்மையை கூட்டுகிறதே ஒழிய குறைக்க வில்லை.

பிகு

இங்கே இந்த அங்கீகாரம் தனியே தாக்கம் (impact) அடிப்படையில் மட்டுமே கொடுக்கபடுகிறது என்பதை புரிந்து கொண்டால்,

ஹிட்லருக்கும், காந்திக்கும் கொடுத்தார்களே என்ற கேள்வியே எழாது.

ஆகவே

#அடிப்படை புரிதல் அவசியம் குமாரு

Edited by goshan_che
2007
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

பெப்ரவரி 2022 முதல் இன்று வரை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய தொகை ஏறத்தாழ 18 பில்லியன் டொலர்கள் (மிகுதி நேட்டோ நாடுகள் இதை விட மிகக் குறைவாக வழங்கியிருக்கின்றன). இதை எடுத்துக் கொண்டு, ஊழல்களை பின் தள்ளி விட்டு உக்ரைன் புட்டின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது.

2023 இல் இந் தொகைகள் காங்கிரசால் மட்டுப்படுத்தப்படலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

2023 இல் இந் தொகைகள் காங்கிரசால் மட்டுப்படுத்தப்படலாம்.

இருக்கலாம்.

டிசாண்டிசின் உக்ரேன் கொள்கை எப்படி?

சிலவேளை இதை அவர் ஒரு கட்சி அரசியல் விடயமாக மாற்றாமல் அமெரிக்கா, நேட்டோ என்ற ரீதியில் அணுகினால் - ரிபளிக்கன் கொள்கை மாறலாம்?

டிரம்பின் ரஸ்ய தொடர்புகள், ரகசிய கோப்புக்களை ரஸ்யாவிடம் கொடுத்தது, ஜனவரி 6 விசாரணை போகும் போக்கை வைத்து, ரிபக்ளிகன் கட்சி, டிரம்பை விரைந்து கைவிடுவதோடு, தாம் ரஸ்ய ஏஜெண்டுகள் என்ற வசையில் இருந்து தப்ப - டெமோகிரெட்சை விட பெரிய உக்ரேனிய அனுதாபிகளாக மாறக்கூடுமா?

அடுத்த 12 மாதங்களில் அமெரிக்க தேசிய அரசியல் மிக சுவாரசியமாக இருக்க போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

2023 இல் இந் தொகைகள் காங்கிரசால் மட்டுப்படுத்தப்படலாம்.

இருக்கலாம். ஆனால், செனட் நீலக்கட்சியிடம். கீழ்சபை செனட்டுடன் ஒரு உடன்பாட்டிற்கு வராமல் தனியே எதையும் செய்ய முடியாது.

என் ஆசை: சிவப்புக் கட்சி உக்ரைன் உதவியை வெட்டும் முயற்சியை எடுக்க வேண்டும், இதன் மூலம் யோசிக்கும் புத்தியுள்ள சுதந்திர வாக்காளர்கள் 2024 இல் ட்ரம்ப் வென்றால் என்ன நடக்கும் என்று யோசிக்க வைக்க முடியும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

இருக்கலாம். ஆனால், செனட் நீலக்கட்சியிடம். கீழ்சபை செனட்டுடன் ஒரு உடன்பாட்டிற்கு வராமல் தனியே எதையும் செய்ய முடியாது.

என் ஆசை: சிவப்புக் கட்சி உக்ரைன் உதவியை வெட்டும் முயற்சியை எடுக்க வேண்டும், இதன் மூலம் யோசிக்கும் புத்தியுள்ள சுதந்திர வாக்காளர்கள் 2024 இல் ட்ரம்ப் வென்றால் என்ன நடக்கும் என்று யோசிக்க வைக்க முடியும்!

ஒரு நீலகட்சி ஆதரவாளராக உங்கள் ஆசையை புரிந்து கொண்டாலும்.

ஒரு மேற்கின் அடிவருடியாக, வெள்ளை தோல் அடிமையாக (🤣),

அமெரிக்காவின், சீன கொள்கைபோல், புட்லரின் ரஸ்யவை வெளுத்து கட்டவேண்டும் என்ற கொள்கையும் கட்சி பேதத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

புட்டினின் கைப்பாவை டிரம் அமரிக்க அரசியலில் வந்திராவிட்டால் - ரஸ்ய விடயத்தில் நீல கட்சியை விட சிவப்பு கடும் போக்கை எடுத்திருக்கும் என நான் நினைக்கிறேன்.

Where is Dubya when you need him 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

இந்த பந்தி உங்கள் புரிதல் குறைபாட்டை விளக்கி நிக்கிறது கற்ப்ஸ்.

நான் சொன்னதைதான் ஜஸ்டீன் அண்ணாவும் தன்மையாக சொன்னார் ஆனால் நீங்கள் உங்கள் ஏலவே எடுத்த தவறான முடிவில் அறுதியாக இருப்பதால் அவர் சொன்னதை காதில் போட்டு கொள்ளவே இல்லை.

புட்டின் ஒரு வருடத்தில் (2007) அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார் - அவரை குறிப்பிட்டார்கள்.

2022 இல் செலன்ஸ்கி.

இது தனியே “தாக்கம்” (impact) தின் அடிப்படையிலான தெரிவு. ஒழிய நியா/அநியாய, நல்லது/கெட்டது பற்றிய தெரிவு அல்ல.

இப்படி - தனியே தாக்கத்தை மட்டும் கருதி, எதிரெதிர் துருவங்களுக்கு கொடுப்பது இந்த தெரிவு பொறி முறையின் நம்பகத்தன்மையை கூட்டுகிறதே ஒழிய குறைக்க வில்லை.

பிகு

இங்கே இந்த அங்கீகாரம் தனியே தாக்கம் (impact) அடிப்படையில் மட்டுமே கொடுக்கபடுகிறது என்பதை புரிந்து கொண்டால்,

ஹிட்லருக்கும், காந்திக்கும் கொடுத்தார்களே என்ற கேள்வியே எழாது.

ஆகவே

#அடிப்படை புரிதல் அவசியம் குமாரு

எனக்கு அடிப்படைப் புரிதலில் குறைபாடு இருக்கிறதா என்பதைப்பற்றி பின்னர் பார்ப்போம் என ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டேன். 😉

👇

1) ""இது தனியே “தாக்கம்” (impact) தின் அடிப்படையிலான தெரிவு. ஒழிய நியா/அநியாய, நல்லது/கெட்டது பற்றிய தெரிவு அல்ல.""

👆இதுதான் விடயம்  கோசான். ஊரில் தாக்கத்தைக் கொண்டுவந்தான் (அது நல்லதோ கெட்டதோ) என்பதற்காக திருடனை யாரும் கெளரவிப்பதில்லை. 

ஆதல்லால்தான் புடினையும் செலன்ஸ்கியையும் குறிப்பிட்டு தெரிவின் பெறுமதி என்ன எனக் கேட்டிருந்தேன். 

🤦🏼‍♂️

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உக்கிரேன் என்றால் முதலில் எமக்கு தோன்றுவது செலன்ஸ்கியின் முகம்தான், அது எவ்வாறெனில் அப்பிள், அமேசன் என்றால் எப்படி ஒரு சில முகங்கள் மனதிற்குள் வருவது போலத்தான் இதுவும்.

இதனை (பிராண்ட்) திட்டமிட்டும் உருவாக்கலாம், அப்படி உருவாக்கினால் அப்படி உருவாகுபவர்களுக்கு என்ன இலாபம்? இங்கு செலன்ஸ்கி திட்டமிட்டு அவ்வாறு உருவாக்கப்படுகிறாரா? அப்படியாயின் இதனால் உக்கிரேனிற்கு என்ன பாதிப்பு? அல்லது இலாபம்? என ஏற்படுகின்ற கேள்விகளுக்கு உக்கிரேனியர்கள் விடை தேடவேண்டும். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.