Jump to content

2022 ஆண்டின் சிறந்த மனிதர் - டைம் சஞ்சிகை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

ஊரில் தாக்கத்தைக் கொண்டுவந்தான் (அது நல்லதோ கெட்டதோ) என்பதற்காக திருடனை யாரும் கெளரவிப்பதில்லை. 

மீண்டும் சொல்கிறேன் இங்கேதான் புரிதல் குறைபாடு ஆரம்பிக்கிறது.’

தாக்கத்தை கொண்டு வந்தார் என அங்கீகரிக்கபட்ட திருடந்தான் - ஹிட்லர்.

மேலே சிறி அண்ணா விளங்கி சொல்லவில்லை என நினைக்கிறன். ஆனால்,

உலகளாவிய தாக்கத்தை கொடுத்திருந்தால் - இடி அமீனும், பொல்பொட்டும் கூட இந்த லிஸ்டில் வந்திருப்பார்கள். அந்த வருடம் வேறு பெரிய தாக்க காரணிகள் இல்லை என்றால்.

உலகத்தின் பெரும்பாலானோர் கருத்தில், மேற்கின் அறுதி பார்வையில் உலகில் கிட்லரை வென்ற ஒரு மிலேச்சன், திருடன் இல்லை.

ஆனால் ஒரு காலகட்டத்தை அவர் கட்டி போட்டார் இல்லையா? ஆகவே அந்த ஆண்டு அவர்.

இன்னும் கொஞ்சம் புரியும் படியாக.

2022 பெப்ரவரியில் புட்டின் 3 நாளில் கீவை பிடித்து. பின்லாந்த்தை CSTO வில் சேர்த்து. உக்ரேனை ரஸ்யாவுடன் இணைத்து, நேட்டோவை நோஸ்கட் பண்ணி இருந்தால் …..

2022 இலும் அவர்தான் person of the year ஆக வந்திருப்பார். காரணம் அப்படி அவர் செய்திருந்தால் அதன் தாக்கம் பெரிது.

ஆனால் நடந்ததோ எதிர்மாறு. ஆகவே அங்கிகாரம் புட்டினுக்கும், ரஸ்யாவின் வல்லரசு பெருமைக்கும், ஐரோப்பிய ஆதிக்க கனவுக்கும் நோஸ்கட் கொடுத்த செலன்சிக்கு போகிறது.

இங்கே தாக்கம் மட்டுமே கருது பொருள். 

சுருங்க சொல்லின் இந்த லிஸ்டில் திருடனும் வரலாம் - அந்த திருட்டு பெரிய தாக்கத்தை தந்திருந்தால்.

இப்படி தாக்கத்தை மட்டும் கருதுவது இந்த லிஸ்டிக்கு இழுக்கு அல்ல ஏனென்றால் இது தாக்கத்தை மட்டுமே கருதும் லிஸ்ட். நன்மை தீமையை இது பொருட்டாக எடுப்பதே இல்லை.

இதைதான் புரியாமல் அல்லாடுகிறீர்கள்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

ஒரு நீலகட்சி ஆதரவாளராக உங்கள் ஆசையை புரிந்து கொண்டாலும்.

ஒரு மேற்கின் அடிவருடியாக, வெள்ளை தோல் அடிமையாக (🤣),

அமெரிக்காவின், சீன கொள்கைபோல், புட்லரின் ரஸ்யவை வெளுத்து கட்டவேண்டும் என்ற கொள்கையும் கட்சி பேதத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு.

புட்டினின் கைப்பாவை டிரம் அமரிக்க அரசியலில் வந்திராவிட்டால் - ரஸ்ய விடயத்தில் நீல கட்சியை விட சிவப்பு கடும் போக்கை எடுத்திருக்கும் என நான் நினைக்கிறேன்.

Where is Dubya when you need him 🤣

உண்மை. ஒரு வெள்ளைத் தோல் அடிமையாக நானும் பிளவு படாத புட்டின் எதிர்ப்பை அமெரிக்க தலைவர்களிடம் எதிர்பார்க்கிறேன், யாசிக்கிறேன்.😂

ட்ரம்ப் இல்லாமல் வேறு யாரும் வந்திருந்தால் சிவப்புக் கட்சியினர் புட்டின் காதலர்களாக இருந்திருக்க மாட்டார்களென்பதும் உண்மை. சதிக் கதைகளை நான் அதிகம் கணக்கெடுப்பதில்லையாயினும் இந்த ட்ரம்பின் புட்டின் காதலுக்குப் பின்னால் ஏதோ இருக்க வேண்டுமென நானும் ஊகிக்கிறேன். அது ஊகமாகவே இன்னும் இருக்கிறது.

ஆனால், அமெரிக்க மக்கள் ஏன் அமெரிக்கா உக்ரைனில் முதலிட வேண்டுமென்பதைப் புரிந்தே இருப்பதால், சிவப்புக் கட்சி பெரிதாக உதவிக் குறைப்பைச் செய்ய முயலமாட்டார்கள். சில சமயங்களில் ட்ரம்ப் முயன்ற  "பைடனை விசாரிக்க உதவினால் நிதியுதவி" என ஏதாவது செய்ய முயல்வர். ஆனால், அப்படி செய்தாலும் 2024 வெற்றியைப் பணயம் வைத்தே செய்ய வேண்டியிருக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

என் ஆசை: சிவப்புக் கட்சி உக்ரைன் உதவியை வெட்டும் முயற்சியை எடுக்க வேண்டும், இதன் மூலம் யோசிக்கும் புத்தியுள்ள சுதந்திர வாக்காளர்கள் 2024 இல் ட்ரம்ப் வென்றால் என்ன நடக்கும் என்று யோசிக்க வைக்க முடியும்!

இப்போ டிரம்புக்கு உள்ளுக்குள் இருந்தே எதிர்ப்புகள் கிழம்புதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உண்மை. ஒரு வெள்ளைத் தோல் அடிமையாக நானும் பிளவு படாத புட்டின் எதிர்ப்பை அமெரிக்க தலைவர்களிடம் எதிர்பார்க்கிறேன், யாசிக்கிறேன்.😂

 

ஒரு அடிமையின் மனது இன்னொரு அடிமைக்குத்தான் தெரியும் என்பது சரியாகத்தான் இருக்கு🤣.

 

1 hour ago, Justin said:

ட்ரம்ப் இல்லாமல் வேறு யாரும் வந்திருந்தால் சிவப்புக் கட்சியினர் புட்டின் காதலர்களாக இருந்திருக்க மாட்டார்களென்பதும் உண்மை. சதிக் கதைகளை நான் அதிகம் கணக்கெடுப்பதில்லையாயினும் இந்த ட்ரம்பின் புட்டின் காதலுக்குப் பின்னால் ஏதோ இருக்க வேண்டுமென நானும் ஊகிக்கிறேன். அது ஊகமாகவே இன்னும் இருக்கிறது.

Sometimes truth is stranger than fiction. என்று அதிகாரிகள் யாரும் இல்லாமல் டிரம்ப் புட்டினை சந்தித்தாரோ அன்று முதல் இது சதிகோட்பாட்டை தாண்டி, சந்தரப்ப சாட்சிய வழக்கு என்ற எல்லைக்குள் வந்து விட்டதாக நான் கருதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஆனால், அமெரிக்க மக்கள் ஏன் அமெரிக்கா உக்ரைனில் முதலிட வேண்டுமென்பதைப் புரிந்தே இருப்பதால், சிவப்புக் கட்சி பெரிதாக உதவிக் குறைப்பைச் செய்ய முயலமாட்டார்கள்.

நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.

டிரம்ப் அவர் சார் கோமாளி populist ஐ தவிர ரிபப்ளிகன் கட்சி அமெரிக்காவின் நீண்ட கால நலனை முன்னிறுத்தியே செயல்படும் என நினைக்கிறேன். 

அது மட்டும் இல்லாமல் இன்று இவர்கள் உக்ரேனின் உதவிகளை வெட்டி, இன்னும் இரெண்டு வருடத்தில் ரஸ்யா அமெரிகாவின் பிராந்திய, பொருளாதார, பாதுகாப்பு நலனை பாதிப்புக்கு உள்ளாக்கினால் - அதன் பழி தம்மீது விழும், வாழ்நாளில் கட்சி படுத்து விடும் என்பதும் அவர்களை யோசிக்க வைக்கும்.

எல்லாவற்றையும் விட டிரம்ப்-ரஸ்யா ரகசிய ஆவண பரிமாறல் பற்றி மேலும் செய்திகள் கிளம்பினால் - உக்ரேனை உக்கிரமாக ஆதரிப்பதை தவிர சிவப்பினர்க்கு வேறு தெரிவுகள் இராது என நினைக்கிறேன்.

ஜனவரி 6 பொலிசாரின் குடும்பம் கைலாகு கொடாமை, ஜார்ஜியாவில் தோல்வி - கட்சியில் பலரை 2024 பற்றி சிந்திக்க வைத்திருக்கும்.

நாம் நினைப்பதற்கு மாறாக - இல்லை ரிபக்ளிகன்ஸ் மிக கடுமையான உக்ரேன் எதிர் நிலை எடுப்பார்கள் என யாரும் நினைத்தால் அவர்கள் கருத்தை கேட்க ஆவலாய் உள்ளேன் (echo chamber effect). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மீண்டும் சொல்கிறேன் இங்கேதான் புரிதல் குறைபாடு ஆரம்பிக்கிறது.’

தாக்கத்தை கொண்டு வந்தார் என அங்கீகரிக்கபட்ட திருடந்தான் - ஹிட்லர்.

மேலே சிறி அண்ணா விளங்கி சொல்லவில்லை என நினைக்கிறன். ஆனால்,

உலகளாவிய தாக்கத்தை கொடுத்திருந்தால் - இடி அமீனும், பொல்பொட்டும் கூட இந்த லிஸ்டில் வந்திருப்பார்கள். அந்த வருடம் வேறு பெரிய தாக்க காரணிகள் இல்லை என்றால்.

உலகத்தின் பெரும்பாலானோர் கருத்தில், மேற்கின் அறுதி பார்வையில் உலகில் கிட்லரை வென்ற ஒரு மிலேச்சன், திருடன் இல்லை.

ஆனால் ஒரு காலகட்டத்தை அவர் கட்டி போட்டார் இல்லையா? ஆகவே அந்த ஆண்டு அவர்.

இன்னும் கொஞ்சம் புரியும் படியாக.

2022 பெப்ரவரியில் புட்டின் 3 நாளில் கீவை பிடித்து. பின்லாந்த்தை CSTO வில் சேர்த்து. உக்ரேனை ரஸ்யாவுடன் இணைத்து, நேட்டோவை நோஸ்கட் பண்ணி இருந்தால் …..

2022 இலும் அவர்தான் person of the year ஆக வந்திருப்பார். காரணம் அப்படி அவர் செய்திருந்தால் அதன் தாக்கம் பெரிது.

ஆனால் நடந்ததோ எதிர்மாறு. ஆகவே அங்கிகாரம் புட்டினுக்கும், ரஸ்யாவின் வல்லரசு பெருமைக்கும், ஐரோப்பிய ஆதிக்க கனவுக்கும் நோஸ்கட் கொடுத்த செலன்சிக்கு போகிறது.

இங்கே தாக்கம் மட்டுமே கருது பொருள். 

சுருங்க சொல்லின் இந்த லிஸ்டில் திருடனும் வரலாம் - அந்த திருட்டு பெரிய தாக்கத்தை தந்திருந்தால்.

இப்படி தாக்கத்தை மட்டும் கருதுவது இந்த லிஸ்டிக்கு இழுக்கு அல்ல ஏனென்றால் இது தாக்கத்தை மட்டுமே கருதும் லிஸ்ட். நன்மை தீமையை இது பொருட்டாக எடுப்பதே இல்லை.

இதைதான் புரியாமல் அல்லாடுகிறீர்கள்.

இப்போது நீங்கள் இரண்டி விடயங்களை  நிறுவ முற்படுகிறீர்கள். 

1) கப்பித்தானுக்கு பாரிய புரிதல் குறைபாடு இருக்கிறது. அதனால் அவர் அல்லாடுகிறார்  

2) New York Times ன் Man of the year தெரிவு (கவனிக்க; விருது அல்ல) மிகவும்  கெளவரம் மிக்கது. 

முதலாவதாக குறிப்பிட்டதையிட்டு பின்னர் கதைப்போம். ஓகேயா 😀

2) . நீங்களோ ரைம்ஸ் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளுகிறீர்கள். ஆப்கானிஸ்தானை அழித்த புஸ்சினையும், Middle East  மீது படையெடுத்து பாரிய அழிவுகளை ஏற்படுத்திய ஒபாமாவினையும், தனது நாட்டின் விடுதலைக்காக சாத்தீக ரீதியில் போராடிய காந்திய்யுயைம் ஒரே தராசில் வைத்து   தெரிவு செய்வதில் என்ன சிறப்பு வேண்டிக்கிடக்கு  (😏) என்று நான் கூறுகிறேன்.  உடனே உங்களுக்கு கோபம் பொசுக்குன்னு வருது 😏

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

இப்போது நீங்கள் இரண்டி விடயங்களை  நிறுவ முற்படுகிறீர்கள். 

1) கப்பித்தானுக்கு பாரிய புரிதல் குறைபாடு இருக்கிறது. அதனால் அவர் அல்லாடுகிறார்  

2) New York Times ன் Man of the year தெரிவு (கவனிக்க; விருது அல்ல) மிகவும்  கெளவரம் மிக்கது. 

முதலாவதாக குறிப்பிட்டதையிட்டு பின்னர் கதைப்போம். ஓகேயா 😀

2) . நீங்களோ ரைம்ஸ் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளுகிறீர்கள். ஆப்கானிஸ்தானை அழித்த புஸ்சினையும், Middle East  மீது படையெடுத்து பாரிய அழிவுகளை ஏற்படுத்திய ஒபாமாவினையும், தனது நாட்டின் விடுதலைக்காக சாத்தீக ரீதியில் போராடிய காந்திய்யுயைம் ஒரே தராசில் வைத்து   தெரிவு செய்வதில் என்ன சிறப்பு வேண்டிக்கிடக்கு  (😏) என்று நான் கூறுகிறேன்.  உடனே உங்களுக்கு கோபம் பொசுக்குன்னு வருது 😏

 

 

 

சிங்கம்,

புரிதல் குறைபாடுதான் எல்லாத்துக்கும் அடிப்படை.

இருங்கோ இன்னும் விபரமா சொல்லுறன்.

1. மேலே Time Magazine ஐயும் New York Times ஐயும் போட்டு குழப்பி உள்ளீர்கள். இரெண்டும் வேறு வேறு பிரசுரங்கள். ஒன்று வார்னர் கம்பனியிடையது, மற்றையது ஒரு PLC.

இப்படிதான் உங்கள் புரிதல், இருக்கும் சொற்ப அறிவை வைத்து, நுனிப்புல் மேய்வது அதுவும் RT போன்ற குப்பை மேடுகளில் மேய்வது.

பிறகு குறை விளக்கத்தால் வந்த குறை புரிதலுடன் வந்து ஏனைய கருத்தாளர் உயிரை எடுப்பது.

ஆகவே உங்கள் தவறான நிலைப்பாட்டுக்கு அடிப்படை காரணமே உங்கள் புரிதல் குறைபாடு.

ஆகவே அதை எடுத்து சொல்லி, நீங்களும் விளங்கி கொண்டு, முயற்சித்தால்தான் உங்கள் தவறான நிலைப்பாட்டை மாற்ற முடியும். 

2. மேலே மிக தெளிவாக சொல்லி விட்டேன். டைமின் இந்த அங்கீகாரம் நன்மை தீமைக்கு, நியாய, அநியாயத்துக்கு அப்பால் பட்டது. அதாவது colorblind என்போம் அது போல ethics-blind.  

அது யூதரை கொன்ற, ஆப்கானை அழித்த, மத்தியகிழக்க்கை சிதைத்த, ஜோர்ஜியாவை நாசமாக்கிய, என்று எதையும் பார்ப்பதில்லை.

இந்த வருடம் அதிக தாக்கம் யார் செலுத்தினார்கள் என்பதே கருது பொருள்.

ஆகவேதான் சொன்னேன் - இது பின்லேடனுக்கும், இடி அமீனுக்கும், பொல் பொட், அல் பக்தாதி என யாருக்கும் கிடைத்திருக்ககூடும்.

குறித்த ஒரு வருடத்தில் அவர்களின் தாக்கம் எப்படி இருந்தது?

இது மட்டுமே கருது பொருள்.

இந்த அங்கீகாரம் Good Person of the Year அல்லது Nice Person of the Year அல்லது the Person who made a Positive Change in the year அங்கீகாரம் அல்ல.

சிம்பிளாக - Person of the Year.

ஒரு வருடத்தில் ஜனவரி 1 இல் இருந்து லிஸ்ட் வெளியிடப்படும் வரை - அந்த வருடத்தில் அதிக தாக்கத்தை (positive or negative) நபர் யார்? இதுதான் கேள்வி.

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தர் புலிகளுக்கு எதிராக விழுந்து விழுந்து எழுதினார். இப்போ உக்ரேனுக்கு ஆதரவாக விழுந்து விழுந்து எழுதுகிறார்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவர் தர்க நியாயம் முடிஞ்சதும் டபார் எண்டு இன்னொரு ஐடியில வந்து தனி நபர் தாக்குதலை ஆரபிப்பார்🤣

  • Haha 3
Link to comment
Share on other sites

10 hours ago, Justin said:

தகுதியான ஆளுக்குத் தான் கொடுத்திருக்கிறார்கள். இந்த வேளையில் சொந்தக் காலுக்கும் இரவல் காலுக்கும் இடையிலான வேறுபாட்டை சுட்டிக் காட்ட வேண்டும்:

21 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா செலவழித்த தொகை 2.3 ட்ரில்லியன் டொலர்கள்!- ஆண்டுக்கு 100 பில்லியனுக்கும் அதிகம்! இந்த ஆண்டுக்கு 100 பில்லியன் செலவில், 750 மில்லியன் டொலர்கள் ஆப்கான் இராணுவத்தின் (அரிக்கன் ஆடுகள்😂?) சம்பளத்திற்கான செலவு. இறுதியில், அந்தச் சம்பளக் காசு ஊழல் தலைகளின் வங்கியில் சேர்ந்தாகக் கண்டு கொண்ட பின்னர் தான் பிளக்கைப் பிடுங்கி விட்டு வெளியேறினர். பின்னர் நடந்தது உலகப் பிரபலச் செய்தி!

பெப்ரவரி 2022 முதல் இன்று வரை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கிய தொகை ஏறத்தாழ 18 பில்லியன் டொலர்கள் (மிகுதி நேட்டோ நாடுகள் இதை விட மிகக் குறைவாக வழங்கியிருக்கின்றன). இதை எடுத்துக் கொண்டு, ஊழல்களை பின் தள்ளி விட்டு உக்ரைன் புட்டின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறது.

("ஆப்கானிஸ்தான் அரிக்கன் ஆடுகளை அமெரிக்கா உக்ரைன் போல கவனிக்கவில்லை" என்று அடிக்கடி குறைப்படும் நுணாவிற்கு இது சமர்ப்பணம்!😁)

ப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்

 

 
afgaistan-n.jpg?resize=696%2C391&ssl=1
சியார் குல் மற்றும் அவருடைய இரு மகன்களும் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட இடம்

ப்கானிஸ்தானைச் சேர்ந்த நேங்கர்கார் (Nangarhar) மாநிலத்தில் ஒரு அப்பாவும் அவரது இரண்டு இளைய மகன்களும் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதையோர குண்டு வெடிப்பில் தங்களது வாகனம் சிக்கியதை அடுத்து கண்மூடித்தனமாக இந்த படுகொலையை நிகழ்த்தியுள்ளது அமெரிக்க இராணுவம்.

செங்கல் சூளை தொழிலாளியான சியார் குல்(Ziyar Gul) அவரது  மகன்களுடன் (8 வயது மற்றும் 10 வயது) வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த கொடுமை நிகழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். அவரது மூன்றாவது மகன் எப்படியோ துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பித்துவிட்டான்.

அமெரிக்க படையினரது கார் குண்டுவெடிப்பில் சிக்கிக் கொண்டதும் அவர்கள் சுட ஆரம்பித்து விட்டதாக மாநில ஆளுநரின் செய்தித் தொடர்பாளரான அட்டூல்லாஹ் கோகியானி (Attaullah Khogyani) கூறினார். இது தொடர்பான விசாரணையை தொடங்கியிருப்பதாகவும் கூறினார்.

தாங்கள் கொன்றவர்கள் குழந்தைகள் மற்றும் நிரயுதபாணியான மனிதன் என்பதை அவர்கள் [அமெரிக்க படையினர்] அறியவில்லையா? எப்படி அவர்கள் குழந்தைகளை நேரடியாக சுட்டுக்கொலை செய்யலாம்? தொடர்ச்சியான துப்பாக்கிச்சூட்டினால் அவர்களின் உடல்கள் கண்ட துண்டமாகி விட்டது என்கிறார் சியார் குல்லின் சகோதரர் நியாஸ் குல்(Neyaz Gul). இதுபோல அப்பாவி ஆப்கான் மக்களை கொன்றதற்காக இதுவரை இவர்கள் யாரும் பொறுப்பேற்பதில்லை என்றும் அவர் கூறினார்.

ஆப்கானில் இருக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரான டக்ளஸ் ஹை (Douglas High), ஆப்கான் + அமெரிக்க படையினர் வாகனங்களில் சென்ற போது நடைபெற்ற இந்த சாலையார குண்டு தாக்குதலை உறுதிபடுத்தினார். “பொதுமக்கள் சாவு குறித்து எங்களுக்கு அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகள் வரவில்லை, எங்களது வீரர்கள் தற்காப்பிற்காக மட்டும் திருப்பிச் சுட்டனர்” என்று கூறியிருக்கிறார்.

ஐநா கணக்குப்படி 2016-ம் ஆண்டில் மட்டும் ஆப்கானில் 3,498 மக்கள் கொல்லப்பட்டும், 7,920 மக்கள் காயமடைந்தும் இருக்கின்றனர். 2009-ம் ஆண்டிலிருந்து இதுவரை 11,418 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

afganistan-1-n.jpg?resize=400%2C225&ssl=
அமெரிக்க இராணுவத்திற்கு எதிராக அல்ல எதிரே யார் வந்தாலும் சுடுவார்கள்!

பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் நேங்கர்கார் மாநிலத்தில் சுமார் 800 ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதால் அமெரிக்க இராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது ஆப்கானில் சுமார் 8,500 அமெரிக்கத் துருப்புக்களும், நேட்டோ நாடுகளின் சார்பில் 5,000 துருப்புக்களும் இருக்கின்றனர். டிரம்ப் வந்த பிறகு மேலும் 5,000 வீரர்களை அனுப்ப அமெரிக்க அரசு முடிவு செய்திருக்கிறது.

2001-ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்க இராணுவம் கொன்றதற்கு மட்டுமல்ல தின்தற்கும் கணக்கு இல்லை. ஒரு சிறு சப்தம், சிறு சலனம் வந்தால் கூட உடனே சுட வேண்டும் என்பதே அமெரிக்க இராணுவத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பயிற்சி. உள்ளூர் மக்களைக் கொல்லக் கூடாது என்றோ இல்லை கொன்றால் தண்டனை என்றோ உத்தரவு இருந்தால் ஒரு அமெரிக்க இராணுவ வீரன் கூட அங்கே இருக்க விரும்ப மாட்டான்.

எல்லா ஆக்கிரமிப்பு இராணுவங்களும் இப்படித்தான் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளின் மக்களை கிள்ளுக்கீரைகளாக கருதி கொல்கின்றன. இங்கே வீடுகளைக் கட்டப் பயன்படும் செங்கல்களை தயாரிக்கும் ஒரு தொழிலாளியும் அவரது இரு மகன்களும் ஒழிக்கப்பட்டிருக்கின்றனர். ஐரோப்பாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லும் ஒவ்வொரு மனித உயிருக்கும் இந்த உலகமே கண்ணீர் வடிக்கிறது. ஆனால் ஆப்கானில் இந்த தொழிலாளியின் மரணத்திற்கு, இரண்டு இளம் துளிர்களின் அழிப்பிற்கும் கண்ணீர் இருக்கட்டும், அந்த செய்திகளை படிப்பதற்கு கூட கண்கள் இல்லையே?

செய்தி ஆதாரம்:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

சிங்கம்,

புரிதல் குறைபாடுதான் எல்லாத்துக்கும் அடிப்படை.

இருங்கோ இன்னும் விபரமா சொல்லுறன்.

1. மேலே Time Magazine ஐயும் New York Times ஐயும் போட்டு குழப்பி உள்ளீர்கள். இரெண்டும் வேறு வேறு பிரசுரங்கள். ஒன்று வார்னர் கம்பனியிடையது, மற்றையது ஒரு PLC.

இப்படிதான் உங்கள் புரிதல், இருக்கும் சொற்ப அறிவை வைத்து, நுனிப்புல் மேய்வது அதுவும் RT போன்ற குப்பை மேடுகளில் மேய்வது.

பிறகு குறை விளக்கத்தால் வந்த குறை புரிதலுடன் வந்து ஏனைய கருத்தாளர் உயிரை எடுப்பது.

ஆகவே உங்கள் தவறான நிலைப்பாட்டுக்கு அடிப்படை காரணமே உங்கள் புரிதல் குறைபாடு.

ஆகவே அதை எடுத்து சொல்லி, நீங்களும் விளங்கி கொண்டு, முயற்சித்தால்தான் உங்கள் தவறான நிலைப்பாட்டை மாற்ற முடியும். 

2. மேலே மிக தெளிவாக சொல்லி விட்டேன். டைமின் இந்த அங்கீகாரம் நன்மை தீமைக்கு, நியாய, அநியாயத்துக்கு அப்பால் பட்டது. அதாவது colorblind என்போம் அது போல ethics-blind.  

அது யூதரை கொன்ற, ஆப்கானை அழித்த, மத்தியகிழக்க்கை சிதைத்த, ஜோர்ஜியாவை நாசமாக்கிய, என்று எதையும் பார்ப்பதில்லை.

இந்த வருடம் அதிக தாக்கம் யார் செலுத்தினார்கள் என்பதே கருது பொருள்.

ஆகவேதான் சொன்னேன் - இது பின்லேடனுக்கும், இடி அமீனுக்கும், பொல் பொட், அல் பக்தாதி என யாருக்கும் கிடைத்திருக்ககூடும்.

குறித்த ஒரு வருடத்தில் அவர்களின் தாக்கம் எப்படி இருந்தது?

இது மட்டுமே கருது பொருள்.

இந்த அங்கீகாரம் Good Person of the Year அல்லது Nice Person of the Year அல்லது the Person who made a Positive Change in the year அங்கீகாரம் அல்ல.

சிம்பிளாக - Person of the Year.

ஒரு வருடத்தில் ஜனவரி 1 இல் இருந்து லிஸ்ட் வெளியிடப்படும் வரை - அந்த வருடத்தில் அதிக தாக்கத்தை (positive or negative) நபர் யார்? இதுதான் கேள்வி.

 

புலி- புரிதல் குறைபாட்டை பிறகு கவனிப்போம். சரியா ? 😉

சிம்பிளாக = இந்த Time magazine  தெரிவால் யாருக்கு என்ன பயன் ? 

10 hours ago, nunavilan said:

ப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்

 

 
afgaistan-n.jpg?resize=696%2C391&ssl=1 சியார் குல் மற்றும் அவருடைய இரு மகன்களும் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட இடம்

ப்கானிஸ்தானைச் சேர்ந்த நேங்கர்கார் (Nangarhar) மாநிலத்தில் ஒரு அப்பாவும் அவரது இரண்டு இளைய மகன்களும் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதையோர குண்டு வெடிப்பில் தங்களது வாகனம் சிக்கியதை அடுத்து கண்மூடித்தனமாக இந்த படுகொலையை நிகழ்த்தியுள்ளது அமெரிக்க இராணுவம்.

செங்கல் சூளை தொழிலாளியான சியார் குல்(Ziyar Gul) அவரது  மகன்களுடன் (8 வயது மற்றும் 10 வயது) வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த கொடுமை நிகழ்ந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர். அவரது மூன்றாவது மகன் எப்படியோ துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பித்துவிட்டான்.

அமெரிக்க படையினரது கார் குண்டுவெடிப்பில் சிக்கிக் கொண்டதும் அவர்கள் சுட ஆரம்பித்து விட்டதாக மாநில ஆளுநரின் செய்தித் தொடர்பாளரான அட்டூல்லாஹ் கோகியானி (Attaullah Khogyani) கூறினார். இது தொடர்பான விசாரணையை தொடங்கியிருப்பதாகவும் கூறினார்.

தாங்கள் கொன்றவர்கள் குழந்தைகள் மற்றும் நிரயுதபாணியான மனிதன் என்பதை அவர்கள் [அமெரிக்க படையினர்] அறியவில்லையா? எப்படி அவர்கள் குழந்தைகளை நேரடியாக சுட்டுக்கொலை செய்யலாம்? தொடர்ச்சியான துப்பாக்கிச்சூட்டினால் அவர்களின் உடல்கள் கண்ட துண்டமாகி விட்டது என்கிறார் சியார் குல்லின் சகோதரர் நியாஸ் குல்(Neyaz Gul). இதுபோல அப்பாவி ஆப்கான் மக்களை கொன்றதற்காக இதுவரை இவர்கள் யாரும் பொறுப்பேற்பதில்லை என்றும் அவர் கூறினார்.

ஆப்கானில் இருக்கும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளரான டக்ளஸ் ஹை (Douglas High), ஆப்கான் + அமெரிக்க படையினர் வாகனங்களில் சென்ற போது நடைபெற்ற இந்த சாலையார குண்டு தாக்குதலை உறுதிபடுத்தினார். “பொதுமக்கள் சாவு குறித்து எங்களுக்கு அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகள் வரவில்லை, எங்களது வீரர்கள் தற்காப்பிற்காக மட்டும் திருப்பிச் சுட்டனர்” என்று கூறியிருக்கிறார்.

ஐநா கணக்குப்படி 2016-ம் ஆண்டில் மட்டும் ஆப்கானில் 3,498 மக்கள் கொல்லப்பட்டும், 7,920 மக்கள் காயமடைந்தும் இருக்கின்றனர். 2009-ம் ஆண்டிலிருந்து இதுவரை 11,418 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

afganistan-1-n.jpg?resize=400%2C225&ssl= அமெரிக்க இராணுவத்திற்கு எதிராக அல்ல எதிரே யார் வந்தாலும் சுடுவார்கள்!

பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் நேங்கர்கார் மாநிலத்தில் சுமார் 800 ஐ.எஸ் தீவிரவாதிகள் இருப்பதால் அமெரிக்க இராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. தற்போது ஆப்கானில் சுமார் 8,500 அமெரிக்கத் துருப்புக்களும், நேட்டோ நாடுகளின் சார்பில் 5,000 துருப்புக்களும் இருக்கின்றனர். டிரம்ப் வந்த பிறகு மேலும் 5,000 வீரர்களை அனுப்ப அமெரிக்க அரசு முடிவு செய்திருக்கிறது.

2001-ம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்க இராணுவம் கொன்றதற்கு மட்டுமல்ல தின்தற்கும் கணக்கு இல்லை. ஒரு சிறு சப்தம், சிறு சலனம் வந்தால் கூட உடனே சுட வேண்டும் என்பதே அமெரிக்க இராணுவத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பயிற்சி. உள்ளூர் மக்களைக் கொல்லக் கூடாது என்றோ இல்லை கொன்றால் தண்டனை என்றோ உத்தரவு இருந்தால் ஒரு அமெரிக்க இராணுவ வீரன் கூட அங்கே இருக்க விரும்ப மாட்டான்.

எல்லா ஆக்கிரமிப்பு இராணுவங்களும் இப்படித்தான் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளின் மக்களை கிள்ளுக்கீரைகளாக கருதி கொல்கின்றன. இங்கே வீடுகளைக் கட்டப் பயன்படும் செங்கல்களை தயாரிக்கும் ஒரு தொழிலாளியும் அவரது இரு மகன்களும் ஒழிக்கப்பட்டிருக்கின்றனர். ஐரோப்பாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் கொல்லும் ஒவ்வொரு மனித உயிருக்கும் இந்த உலகமே கண்ணீர் வடிக்கிறது. ஆனால் ஆப்கானில் இந்த தொழிலாளியின் மரணத்திற்கு, இரண்டு இளம் துளிர்களின் அழிப்பிற்கும் கண்ணீர் இருக்கட்டும், அந்த செய்திகளை படிப்பதற்கு கூட கண்கள் இல்லையே?

செய்தி ஆதாரம்:

ஆப்கானுக்குப் படைகளை அனுப்பிய ஜோச்வ்புஸ்சினையும் இந்த சஞ்சிகை man of the year ஆக தெரிவு செய்தது 🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

சிம்பிளாக = இந்த Time magazine  தெரிவால் யாருக்கு என்ன பயன் ? 

பயன் ஒவ்வொருவரும் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து அமையும். 

இதுக்கு மட்டும் அல்ல உலகத்தில் எல்லாவற்றிற்கும்.

8 minutes ago, Kapithan said:

ஆப்கானுக்குப் படைகளை அனுப்பிய ஜோச்வ்புஸ்சினையும் இந்த சஞ்சிகை man of the year ஆக தெரிவு செய்தது 🤣

ஏனென்றால் குறித்த வருடத்தில் அவர் செலுத்திய தாக்கம் அதிகம் என டைம் கணித்தது.

ஜோர் புஷ் நல்லவரா கெட்டவரா என டைம் சொல்லவில்லை. அவர் ஆப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்பி அதில் அப்பாவிகள் இறந்தது தர்மம்/அதர்மம் என்றும் டைம் சொல்லவில்லை.

உங்கள் புரிதல் குறைபாட்டை விடுங்கோ என நீங்கள் மீண்டும், மீண்டும் கதறினாலும் - அதை விட முடியாது- ஏனென்றால் உங்கள் தப்பான நிலைப்பாடு கட்டி எழுப்பபட்டுள்ளதே உங்கள் புரிதல் குறைபாடு என்ற அத்திவாரத்தின் மீதுதான்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அலங்கோலமாக கட்டிடத்தை இடித்தால் மட்டும் போதாது, பிழையான அத்திவாரத்தையும் உடைக்க வேண்டும். 

இல்லை என்றால் அடுத்த கட்டிடமும் அலங்கோலமாய் அமையும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

பயன் ஒவ்வொருவரும் அதை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து அமையும். 

இதுக்கு மட்டும் அல்ல உலகத்தில் எல்லாவற்றிற்கும்.

ஏனென்றால் குறித்த வருடத்தில் அவர் செலுத்திய தாக்கம் அதிகம் என டைம் கணித்தது.

ஜோர் புஷ் நல்லவரா கெட்டவரா என டைம் சொல்லவில்லை. அவர் ஆப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்பி அதில் அப்பாவிகள் இறந்தது தர்மம்/அதர்மம் என்றும் டைம் சொல்லவில்லை.

உங்கள் புரிதல் குறைபாட்டை விடுங்கோ என நீங்கள் மீண்டும், மீண்டும் கதறினாலும் - அதை விட முடியாது- ஏனென்றால் உங்கள் தப்பான நிலைப்பாடு கட்டி எழுப்பபட்டுள்ளதே உங்கள் புரிதல் குறைபாடு என்ற அத்திவாரத்தின் மீதுதான்.

நாணயத்திற்கு ஒரு பக்கம் இல்லை  கோசான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

நாணயத்திற்கு ஒரு பக்கம் இல்லை  கோசான். 

சரி அதுகிப்ப என்ன?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, kalyani said:

ஒருத்தர் புலிகளுக்கு எதிராக விழுந்து விழுந்து எழுதினார். இப்போ உக்ரேனுக்கு ஆதரவாக விழுந்து விழுந்து எழுதுகிறார்.

இல்லை அவர் உக்ரைனுக்கு போனபோது அவரின் பல சிநேகிதர்கள் சொன்னவையாம். செலென்ஸ்கியும் உக்ரைனும் பத்தரமாத்து தங்கம், உவன் புடினும் ரஸ்யாவும் சரியான மோசமானவர்கள் எண்டு!

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Eppothum Thamizhan said:

இல்லை அவர் உக்ரைனுக்கு போனபோது அவரின் பல சிநேகிதர்கள் சொன்னவையாம். செலென்ஸ்கியும் உக்ரைனும் பத்தரமாத்து தங்கம், உவன் புடினும் ரஸ்யாவும் சரியான மோசமானவர்கள் எண்டு!

🤣 பரவாயில்லை - வழமையாக எழுதுவது போல் அவர் தமிழ் தெரிந்த உக்ரேனியர் அல்லது அவரின் மனைவி உக்ரேனியர் என எழுதாமல் விட்டது முன்னேற்றம்தான்🤣.

நீங்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு முறை உக்ரேன் பற்றிய உங்கள் தர்கம் மண்ணை கவ்வியதும் இழுத்து வருவது புலிகளையும் தலைவரையும்.

அவர்கள் என்ன உங்கள் பிரமாஸ்திரமா?

கேவலம் கோசானை, அதுவும் கேவலம்கெட்ட உக்ரேன் பற்றிய தர்கத்தில் வெல்ல ஏன் அவர்களை சம்பந்தம் இல்லாமல் இழுத்து வருகிறீர்கள்?

இப்படி செய்ய வெட்கமாய் இல்லையா?

You guys are so predictable(மன்னிக்கவும் நீங்கள் அடிக்கடி திண்ணையில் கிரிகெட் பற்றி பீட்டர் விடுவதால் நானும் கொஞ்சம் இங்கிலீசில் எழுதி பார்த்தேன்) . 

14 hours ago, kalyani said:

ஒருத்தர் புலிகளுக்கு எதிராக விழுந்து விழுந்து எழுதினார். இப்போ உக்ரேனுக்கு ஆதரவாக விழுந்து விழுந்து எழுதுகிறார்.

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣 பரவாயில்லை - வழமையாக எழுதுவது போல் அவர் தமிழ் தெரிந்த உக்ரேனியர் அல்லது அவரின் மனைவி உக்ரேனியர் என எழுதாமல் விட்டது முன்னேற்றம்தான்🤣.

நீங்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு முறை உக்ரேன் பற்றிய உங்கள் தர்கம் மண்ணை கவ்வியதும் இழுத்து வருவது புலிகளையும் தலைவரையும்.

அவர்கள் என்ன உங்கள் பிரமாஸ்திரமா?

கேவலம் கோசானை, அதுவும் கேவலம்கெட்ட உக்ரேன் பற்றிய தர்கத்தில் வெல்ல ஏன் அவர்களை சம்பந்தம் இல்லாமல் இழுத்து வருகிறீர்கள்?

இப்படி செய்ய வெட்கமாய் இல்லையா?

You guys are so predictable(மன்னிக்கவும் நீங்கள் அடிக்கடி திண்ணையில் கிரிகெட் பற்றி பீட்டர் விடுவதால் நானும் கொஞ்சம் இங்கிலீசில் எழுதி பார்த்தேன்) . 

 

கோஷான் தேவையில்லாமல் தொப்பியை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டால் என்னால் எதுவும் செய்ய இயலாது. உக்கிரைன் விவகாரத்தில் உங்களுடன் நான் தர்க்கிக்கவே இல்லையே? என்னை ஏன்  இதற்குள் கோர்த்து விடுகிறீர்கள்?? நான் கிரிக்கெட் பற்றி பீட்டர் விடுவதில்லை. தெரிந்ததை எழுதுவேன் அவ்வளவுதான். சும்மா சவுடால் அடிப்பதில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

கோஷான் தேவையில்லாமல் தொப்பியை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டால் என்னால் எதுவும் செய்ய இயலாது. உக்கிரைன் விவகாரத்தில் உங்களுடன் நான் தர்க்கிக்கவே இல்லையே? என்னை ஏன்  இதற்குள் கோர்த்து விடுகிறீர்கள்?? நான் கிரிக்கெட் பற்றி பீட்டர் விடுவதில்லை. தெரிந்ததை எழுதுவேன் அவ்வளவுதான். சும்மா சவுடால் அடிப்பதில்லை!

நீங்கள் எழுதியதை வாசிக்கும் போதே நினைத்தேன் இது எனக்குரிய தொப்பி போல் இல்லை என்று. ஆனால் கல்யாணி போட்டது எனக்கானதுதான்.  நீங்கள் அதை தொடர்ந்து எழுதியதால் ஒரு கன்பூசன்.  குழப்பத்துக்கு மன்னிக்கவும்🙏🏾.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2022 at 17:00, goshan_che said:

இன்னொருவர் தர்க நியாயம் முடிஞ்சதும் டபார் எண்டு இன்னொரு ஐடியில வந்து தனி நபர் தாக்குதலை ஆரபிப்பார்🤣

உங்கள் தோலை உரித்தால் அது தனி நபர் தாக்குதலா??

நீங்கள் வராத மற்ற ஐடிகளிலா நான் வந்து விட்டேன்??   ஆதாரம் தர முடியும்?

நீங்கள் ஒரு ஜால்ரா உங்களுக்கு பின்னால் சில ஜால்ரா என பலருக்கு தெரியும். ஆங்கிலத்தில் அடித்து தப்பிக்க நினைக்காதீர்கள்.

  • Like 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, kalyani said:

உங்கள் தோலை உரித்தால் அது தனி நபர் தாக்குதலா??

நீங்கள் வராத மற்ற ஐடிகளிலா நான் வந்து விட்டேன்??   ஆதாரம் தர முடியும்?

நீங்கள் ஒரு ஜால்ரா உங்களுக்கு பின்னால் சில ஜால்ரா என பலருக்கு தெரியும். ஆங்கிலத்தில் அடித்து தப்பிக்க நினைக்காதீர்கள்.

நல்லது. அடுத்த ஞாயிறு சந்திப்போம் 🤣

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.