Jump to content

வதந்தி Review: சில பிரச்சினைகளைத் தாண்டி அழுத்தம், திருப்பம், விறுவிறுப்பு நிறைந்த வெப் தொடர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
909564.jpg  
 

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெலோனி என்கிற பெண் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார் என்ற விசாரணையில் காவல் துறை இறங்க, அதில் நிறைய குழப்பங்களும், மர்மங்களும் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்குகிறது. அதேபோல இறந்தப் பெண் குறித்த வதந்தியும் ஒருபுறம் காட்டுத்தீயாக பரவ, இறுதியில் வெலோனியைக் கொன்றது யார்? எதற்காக அவர் கொல்லப்பட்டார்? - இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லும் க்ரைம் - த்ரில்லர் வெப் தொடர் தான் ‘வதந்தி’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தத் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கியிருக்கிறார். இவர் ‘லீலை’, ‘கொலைகாரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். புஷ்கர் - காயத்ரி இந்த தொடரை தயாரித்துள்ளனர்.

மொத்தம் 8 எபிசோடு கொண்ட இந்தத் தொடரின் தொடக்கத்தில் மர்மங்கள் கூடிக்கொண்டே போக, அதே அளவிலான ஆர்வமும் அதிகரிக்கத் தொடங்குகிறது. கன்னியாகுமரியின் வட்டார வழக்கை பிரதியெடுத்து, மண்மனம் மாறாமல் இயக்குநர் ஓர் உலகை கட்டமைத்து, அதற்குள் ஒரு குற்றத்தை நிகழ்த்தி பார்வையாளர்களை பிரவேசிப்பதற்கான இடத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறார்.

கேரளாவை ஒட்டிய மண்வாசத்துடன் மலையாளம் கலந்த மொழிவாசமும் கூட‘ஓர்மையில்ல சார்’, ‘பேடிக்கில்லா’ போன்ற வார்த்தைகள் அசலை வார்க்கின்றன. முடிந்த அளவுக்கு களத்தை மொழிவழியில் யதார்த்தப்படுத்தி ஊருக்குள் பயணிக்கும் அனுபவத்தை கொடுக்க இயக்குநர் முயன்றிருக்கிறார்.

அந்த ஊரின் சாயலுக்கு உயிர் கொடுக்கிறது காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு. ‘மாநாடு’ படத்தில் போலீஸ் கதாபாத்திரத்திற்கும், இதற்கும் மலையளவு வித்தியாசம். குறிப்பாக 5-வது எபிசோட்டில் சிங்கிள் ஷாட்டில் அவர் பேசும் வசனம், தொடர் இறுதியை எட்டும்போது தனக்கேயுண்டான உடல்மொழியில் மிரட்டுவது, சென்டிமென்ட் காட்சிகளில் மெச்சூரிட்டி என மிகை நடிப்பின்றி கதாபாத்திரத்திற்கான மீட்டரில் கச்சிதம் காட்டியிருக்கிறார்.

 

 

 

வெலோனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சனா தேர்ந்த சீனியர் நடிகையான லைலாவுடன் போட்டிப்போட்டு நடித்திருக்கிறார். அறிமுக நாயகி என்ற தடம் தெரியாதபடி நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார். இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் லைலா அழுத்தம் சேர்க்கிறார். தவிர, விவேக் பிரசன்னா, நாசர், ஹரீஷ் பேரடி, ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்டோரின் நடிப்பும் வட்டார மொழியும் கதைக்கு பலம்.

‘உண்மை நடக்கும்; பொய் பறக்கும்’, ‘ரொம்ப நல்லவனும், ரொம்ப கெட்டவனும் ஒரே மாதிரி பேசுவாங்க; அவங்கள கண்டுபிடிக்கவே முடியாது’ வசனங்கள் ஈர்ப்பு. தொடரின் இறுதியில் பேசும் அறம் சார்ந்த வசனங்கள் வெறும் க்ரைம் - த்ரில்லருடன் முடிவதை தவிர்த்து பிரசாரமில்லாத மெசேஜையும் புகுத்துகின்றன. வெலோனி கதாபாத்திரத்தின் ஆழமான எழுத்தும், குற்றத்தின் பின்னணியை அடுக்கிய விதமும் மொத்த தொடரின் விறுவிறுப்பை கூட்டி அடுத்தடுத்த எபிசோடுகளுக்கு நகர்த்துகிறது. எங்கேஜிங்கான திரைக்கதையில் சில எபிசோடுகள் பொறுமையாக நகர்வது, பார்வையாளர்களை ‘பொய் ட்விஸ்ட்’ வழியே ஏமாற்ற அதிக நேரம் எடுத்துக்கொள்வது சோதிக்கவே செய்கிறது. வட்டார மொழியை சில இடங்களில் புரிந்துகொள்ள ஆங்கில சப்டைட்டில் தேவைப்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி தொடர் பேச முனையும் கருத்து அழுத்தமானது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் எளிதாக ஒரு பெண்ணை குற்றப்படுத்திவிட முடியும் என்பதையும், தனது டிஆர்பி, பரபரப்பு பசிக்காக வதந்திகளை உண்டு செறிக்கும் ஊடகங்களின் கோரமுகத்தையும், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, வழக்கை முடித்து கொடுக்க காவல் துறை மீதான அழுத்தம், சம்பந்தப்பட்டவரை பாதிக்கும் வதந்திகள் என பல்வேறு விஷயங்களை தொடர் பேசுகிறது.

இடையிடையே வரும் திருப்பங்களும் ரசிக்க வைக்கின்றன. ஒரு தனிப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை கேலிக்கூத்தாக்கி, பொய் பரப்பி இன்பம் காணும் சமூகத்தை சாடும் தொடரின் இறுதிக்காட்சி அழுத்தம் கூட்டியுள்ளது.

தொடரின் நீளம், பழங்குடியின மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கு, நாசர் கதாபாத்திரத்தின் குழப்பம், சுவாரஸ்யத்திற்காக கூட்டபட்ட தேவையில்லாத காட்சிகள் திரைக்கதை ஓட்டத்தை மட்டுப்படுத்துகின்றன. அதேபோல வெலோனிக்கு பதிலாக மற்றொரு பெண் பாதிக்கப்படும்போது அதை காவல் துறை கண்மூடி கடப்பதன் லாஜிக் புரியவில்லை. தவிர, கன்னியாகுமரியின் நிலமும், வனமும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவில் எழில் கூடியிருக்கின்றன. சைமன் கிங் பின்னணி இசை த்ரில்லருக்கான உலகத்தைக் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

மொத்தத்தில் சில பிரச்சினைகள் இருந்தாலும் அதையெல்லாம் கடந்து வார இறுதி நாட்களில் பொறுமையுடன் பார்க்க தமிழின் மற்றொரு சுவாஸ்ரய வெப் சீரிஸ் ‘வதந்தி’.

ட்ரெய்லர் வீடியோ:

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.