Jump to content

வதந்தி Review: சில பிரச்சினைகளைத் தாண்டி அழுத்தம், திருப்பம், விறுவிறுப்பு நிறைந்த வெப் தொடர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
909564.jpg  
 

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெலோனி என்கிற பெண் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார் என்ற விசாரணையில் காவல் துறை இறங்க, அதில் நிறைய குழப்பங்களும், மர்மங்களும் ஒவ்வொன்றாக அவிழத் தொடங்குகிறது. அதேபோல இறந்தப் பெண் குறித்த வதந்தியும் ஒருபுறம் காட்டுத்தீயாக பரவ, இறுதியில் வெலோனியைக் கொன்றது யார்? எதற்காக அவர் கொல்லப்பட்டார்? - இப்படி பல்வேறு கேள்விகளுக்கு பதில் சொல்லும் க்ரைம் - த்ரில்லர் வெப் தொடர் தான் ‘வதந்தி’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தத் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கியிருக்கிறார். இவர் ‘லீலை’, ‘கொலைகாரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். புஷ்கர் - காயத்ரி இந்த தொடரை தயாரித்துள்ளனர்.

மொத்தம் 8 எபிசோடு கொண்ட இந்தத் தொடரின் தொடக்கத்தில் மர்மங்கள் கூடிக்கொண்டே போக, அதே அளவிலான ஆர்வமும் அதிகரிக்கத் தொடங்குகிறது. கன்னியாகுமரியின் வட்டார வழக்கை பிரதியெடுத்து, மண்மனம் மாறாமல் இயக்குநர் ஓர் உலகை கட்டமைத்து, அதற்குள் ஒரு குற்றத்தை நிகழ்த்தி பார்வையாளர்களை பிரவேசிப்பதற்கான இடத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறார்.

கேரளாவை ஒட்டிய மண்வாசத்துடன் மலையாளம் கலந்த மொழிவாசமும் கூட‘ஓர்மையில்ல சார்’, ‘பேடிக்கில்லா’ போன்ற வார்த்தைகள் அசலை வார்க்கின்றன. முடிந்த அளவுக்கு களத்தை மொழிவழியில் யதார்த்தப்படுத்தி ஊருக்குள் பயணிக்கும் அனுபவத்தை கொடுக்க இயக்குநர் முயன்றிருக்கிறார்.

அந்த ஊரின் சாயலுக்கு உயிர் கொடுக்கிறது காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு. ‘மாநாடு’ படத்தில் போலீஸ் கதாபாத்திரத்திற்கும், இதற்கும் மலையளவு வித்தியாசம். குறிப்பாக 5-வது எபிசோட்டில் சிங்கிள் ஷாட்டில் அவர் பேசும் வசனம், தொடர் இறுதியை எட்டும்போது தனக்கேயுண்டான உடல்மொழியில் மிரட்டுவது, சென்டிமென்ட் காட்சிகளில் மெச்சூரிட்டி என மிகை நடிப்பின்றி கதாபாத்திரத்திற்கான மீட்டரில் கச்சிதம் காட்டியிருக்கிறார்.

 

 

 

வெலோனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சஞ்சனா தேர்ந்த சீனியர் நடிகையான லைலாவுடன் போட்டிப்போட்டு நடித்திருக்கிறார். அறிமுக நாயகி என்ற தடம் தெரியாதபடி நடிப்பில் தேர்ச்சி பெறுகிறார். இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் லைலா அழுத்தம் சேர்க்கிறார். தவிர, விவேக் பிரசன்னா, நாசர், ஹரீஷ் பேரடி, ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்டோரின் நடிப்பும் வட்டார மொழியும் கதைக்கு பலம்.

‘உண்மை நடக்கும்; பொய் பறக்கும்’, ‘ரொம்ப நல்லவனும், ரொம்ப கெட்டவனும் ஒரே மாதிரி பேசுவாங்க; அவங்கள கண்டுபிடிக்கவே முடியாது’ வசனங்கள் ஈர்ப்பு. தொடரின் இறுதியில் பேசும் அறம் சார்ந்த வசனங்கள் வெறும் க்ரைம் - த்ரில்லருடன் முடிவதை தவிர்த்து பிரசாரமில்லாத மெசேஜையும் புகுத்துகின்றன. வெலோனி கதாபாத்திரத்தின் ஆழமான எழுத்தும், குற்றத்தின் பின்னணியை அடுக்கிய விதமும் மொத்த தொடரின் விறுவிறுப்பை கூட்டி அடுத்தடுத்த எபிசோடுகளுக்கு நகர்த்துகிறது. எங்கேஜிங்கான திரைக்கதையில் சில எபிசோடுகள் பொறுமையாக நகர்வது, பார்வையாளர்களை ‘பொய் ட்விஸ்ட்’ வழியே ஏமாற்ற அதிக நேரம் எடுத்துக்கொள்வது சோதிக்கவே செய்கிறது. வட்டார மொழியை சில இடங்களில் புரிந்துகொள்ள ஆங்கில சப்டைட்டில் தேவைப்படுகிறது.

இதையெல்லாம் தாண்டி தொடர் பேச முனையும் கருத்து அழுத்தமானது. எந்தவித ஆதாரமும் இல்லாமல் எளிதாக ஒரு பெண்ணை குற்றப்படுத்திவிட முடியும் என்பதையும், தனது டிஆர்பி, பரபரப்பு பசிக்காக வதந்திகளை உண்டு செறிக்கும் ஊடகங்களின் கோரமுகத்தையும், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை, வழக்கை முடித்து கொடுக்க காவல் துறை மீதான அழுத்தம், சம்பந்தப்பட்டவரை பாதிக்கும் வதந்திகள் என பல்வேறு விஷயங்களை தொடர் பேசுகிறது.

இடையிடையே வரும் திருப்பங்களும் ரசிக்க வைக்கின்றன. ஒரு தனிப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை கேலிக்கூத்தாக்கி, பொய் பரப்பி இன்பம் காணும் சமூகத்தை சாடும் தொடரின் இறுதிக்காட்சி அழுத்தம் கூட்டியுள்ளது.

தொடரின் நீளம், பழங்குடியின மக்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கு, நாசர் கதாபாத்திரத்தின் குழப்பம், சுவாரஸ்யத்திற்காக கூட்டபட்ட தேவையில்லாத காட்சிகள் திரைக்கதை ஓட்டத்தை மட்டுப்படுத்துகின்றன. அதேபோல வெலோனிக்கு பதிலாக மற்றொரு பெண் பாதிக்கப்படும்போது அதை காவல் துறை கண்மூடி கடப்பதன் லாஜிக் புரியவில்லை. தவிர, கன்னியாகுமரியின் நிலமும், வனமும் சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவில் எழில் கூடியிருக்கின்றன. சைமன் கிங் பின்னணி இசை த்ரில்லருக்கான உலகத்தைக் கட்டமைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

மொத்தத்தில் சில பிரச்சினைகள் இருந்தாலும் அதையெல்லாம் கடந்து வார இறுதி நாட்களில் பொறுமையுடன் பார்க்க தமிழின் மற்றொரு சுவாஸ்ரய வெப் சீரிஸ் ‘வதந்தி’.

ட்ரெய்லர் வீடியோ:

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.