Jump to content

வெளியாகிறது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' - வடிவேலு ரசிகர்களின் ஆவலை இந்த படம் தீர்க்குமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளியாகிறது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' - வடிவேலு ரசிகர்களின் ஆவலை இந்த படம் தீர்க்குமா?

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

பட மூலாதாரம்,NAAI SEKAR RETURNS - OFFICIAL TRAILER

2 மணி நேரங்களுக்கு முன்னர்

நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுவின் நடிப்பில் உருவாகியிருக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது.

இந்தப் படம் அவரது ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுமா?2017ஆம் ஆண்டில் விஜய்யுடன் இணைந்து வடிவேலு நடித்த மெர்சல் திரைப்படம் வெளியானது.

இதற்குப் பிறகு ஐந்தாண்டுகளுக்கு அவர் நடித்து எந்தப் படமும் வெளியாகவில்லை.

இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசியின் அடுத்த பாகமான இம்சை அரசன் இருபத்து நான்காம் புலிகேசி படத்தை சங்கர் தயாரித்து வடிவேலு நடிப்பதாக இருந்தது.

 

அந்தப் படத்திற்கான செட்கள் எல்லாம் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், படத்தில் நடிக்க வடிவேலு மறுத்ததால், செட் அமைத்ததற்கான செலவைத் திருப்பித் தரும்படி சங்கர் கோரினார். அதை வடிவேலு ஏற்காததால், அவருக்கு 'ரெட் கார்ட்' விதிக்கப்பட்டது.

முடிவுக்கு வந்த பஞ்சாயத்து

சங்கரின் தயாரிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் முதல் காப்பி அடிப்படையில் லைகா நிறுவனத்திற்காகத்தான் தயாரிக்கப்பட இருந்தது.

ஆகவே, அதற்குப் பதிலாக லைகாவுக்கு ஒரு படத்தை நடித்துக்கொடுக்க முன்வந்தார் வடிவேலு. இதன் மூலம் நான்கு ஆண்டுகளாக இருந்த வடிவேலு மீதான ரெட் கார்ட் விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் அவர் நடிப்பதாக செய்தி வெளியானபோது அவரது ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்குப் போனார்கள்.

இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, தலைநகரம் படத்தில் வடிவேலு ஏற்று நடித்திருந்த நாய் சேகர் கதாபாத்திரம் பெரும் பிரபலமான ஒன்று என்பதோடு, நினைத்தாலே சிரிப்பு ஏற்படுத்தும் வகையில் அதில் நகைச்சுவைக் காட்சிகள் இருந்தன.

இரண்டாவதாக, சுராஜுடன் வடிவேலு இணைந்த தலைநகரம், மருதமலை படங்களில் எல்லாம் அவரது காமெடி காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன.

கத்தி சண்டை படத்தில்கூட, முந்தைய அளவுக்கு இல்லாவிட்டாலும் நகைச்சுவை சிறப்பாகவே இருந்தது.

ஆகவேதான், சுராஜும் வடிவேலுவும் இணையும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. முதலில் இந்தப் படத்திற்கு நாய் சேகர் என்றுதான் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

ஆனால், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதற்கு முன்பாகவே சதீஷை வைத்து நாய் சேகர் என்ற பெயரில் படத்தைத் துவங்கியிருந்தது.

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், பெயரைத் தர ஏஜிஎஸ் விரும்பாத நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என இந்தப் படத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது.

இந்த படத்தில் வடிவேலுதான் கதாநாயகன். ஆனால், வடிவேலுவுடன் வழக்கமாக நடிக்கும் கூட்டணி இந்தப் படத்தில் இல்லை.

முனீஸ்காந்த், ரெடின் கிங்க்ஸ்லி, 'லொல்லு சபா' மாறன், 'லொல்லு சபா' சேஷு, 'கலக்கப்போவது யாரு' ராமர், 'குக் வித் கோமாளி' சிவாங்கி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

Naai Sekar Returns

பட மூலாதாரம்,NAAI SEKAR RETURNS - OFFICIAL TRAILER

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.இந்தப் படம் நாளை வெளியாகிவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.

ஆனால், டீசரில் இருந்த காட்சிகள், அவரது முந்தைய படங்களோடு ஒப்பிட்டால் பெரிதாக சிரிப்பை ஏற்படுத்தாத வகையிலேயே இருந்தன.

இதற்கு முன்பும் கூட, இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி படத்தை விட்டுவிட்டால், வடிவேலு கதாநாயகனாக நடித்த இந்திர லோகத்தில் நா. அழகப்பன், தெனாலிராமன், எலி போன்ற திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதோடு, ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு நகைச்சுவையும் இல்லை.

மேலும், இந்திரலோகத்தில் நா. அழகப்பன், தெனாலிராமன் ஆகிய படங்களில் நிறைய அறிவுரை சொல்லும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர், டீசர் காட்சிகளும் ரசிகர்களிடம் கலவையான மனநிலையை ஏற்படுத்தியிருக்கின்றன.

இதையெல்லாம் தாண்டி முந்தைய போக்கை முறியடித்து, மீண்டும் ஒரு கலகலப்பான வடிவேலு திரைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம். இது நிறைவேறியதா என்பது நாளை தெரிந்துவிடும்.

https://www.bbc.com/tamil/articles/cxerkz14jg1o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.