Jump to content

செம்மணி பகுதியில் ஏழு அடி உயரமான  சிவலிங்கம் பிரதிஷ்டை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி பகுதியில் ஏழு அடி உயரமான  சிவலிங்கம் பிரதிஷ்டை!

சிவபெருமான் யாருடைய ஆள்? – யாழில் படையினர் விசாரணை!

சிவபெருமானின்அடையாளமான சிவலிங்கத்தினை வைப்பதில் கூட இடர்பாடுகளுக்கு முகம் எடுக்க வேண்டியுள்ளதாக தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

இன்றைய தினம் நாவற்குழியில் 7 அடி சிவலிங்க பிரதிஷ்டையின் பின் உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கடந்த மாத இறுதிப் பகுதியில் நாவற்குழி பகுதியில் சிவலிங்கத்தினை வைக்க நிரந்தரமான கட்டடம் ஒன்று அமைக்க வேண்டும் என சிவ பூமி அறக்கட்டளையினர் தீர்மானித்திருந்தோம்.

அதனடிப்படையில் அதற்குரிய பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போது பாதுகாப்பு தரப்பினர் வந்து பலதடவை விசாரணை மேற்கொண்டார்கள்.

நாங்கள் கூறினோம் இது ஒரு கோவில் சைவ கோவில் இந்துகளின் தெய்வமாகிய சிவபெருமானின் அடையாளமாக சிவலிங்கம் தான் இங்கே வைக்கப் போகின்றோம் எனகூறினோம் அப்போது கேட்டார்கள் சிவபெருமான் என்றால் அவர் யாருடைய ஆள் என்று நாங்கள் கூறினோம்.

அவர்தான் எங்களுடைய பரம்பொருள் என்று கூறினோம். அதையும் இரண்டு பக்கங்களில் எழுதிச் சென்றார்கள் அவ்வாறு பல விசாரணைகளுக்கு நாங்கள் முகம் கொடுத்தோம் ஒரு சிவபெருமானின் அடையாளமான சிவலிங்கத்தினை யாழ்ப்பாணத்தில் வைப்பதற்கு பல இடர்பாடுகளை எதிர் நோக்க வேண்டி இருக்கின்றது.

குறிப்பாக விழ விழ எழும்புவோம் யாழ்ப்பாணத்தவர்கள் என்றால் அவ்வாறுதான் யுத்த காலத்தில் கூட எமது இந்து மதத்தை கட்டி காத்து வந்த நாம் தற்போது சிவன் சிலைகளை பல இடங்களில் வைப்பதன் மூலமே இந்து மதத்தின் அடையாளங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

குறிப்பாக இந்த பகுதியில் மூன்று ஏக்கர் காணியினை கொள்வனவு செய்துள்ளோம் அதற்கு உதவிய அரச திணைக்கள அதிகாரிகளுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

அத்தோடு இந்தவீதியினால் பயணிக்கும் அடியவர்கள் சிவலிங்கத்தை வழங்கி யாழ்ப்பாண நகருக்குள் பிரவேசிப்பதற்கு ஏற்ற வாறாக ஒரு புனிதத் தன்மையோடு இந்த இடத்தினை பேணுவதற்காகவும் இந்த இடத்தில் ஒரு நிரந்தர கட்டடத்தை அமைத்து 7 அடி சிலையினை அதாவது கருங்கல்லிளான 7 அடி சிவலிங்கத்தினை அமைத்து  நித்தம் ஒரு பூஜை வழிபாடுகளும் இடம் பெறக்கூடியவாறு ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம்” என்றார்.

https://athavannews.com/2022/1314515

Link to comment
Share on other sites

  • Replies 50
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Nathamuni

கனடா செல்ல அமெரிக்க விசா எடுத்து, போகும் வழியி்ல், உறவினர்களைப் பார்கலாம் என்று சுவிஸ் விசா எடுக்கப்போன இடத்தில், அங்கிருந்த சிங்கள பெண் இவரது ஆவணமொன்றில் தவறை கண்டுபிடித்து, அமெரிக்க தூதரலாயத்துக்கு

Kapithan

செம்மணியென்றால் முன்னர் கொன்று புதைக்கப்பட்டவர்கள் மட்டுமே நினைவிற்கு வரும்.  இது யாருக்காவது நினைவில் நிற்கிறதா என்று பார்க்கத்தான் கேட்டேன்.  செம்மணிப் புதைகுழிகளை இனி சிங்களவனே மறைக்க வேண்டியத

MEERA

எங்கள் சொந்த மண்ணுடன்  தொடர்பேயில்லாத மேரி மாதாவுக்கும் யேசு நாதருக்கும் வானளாவ தேவாயலங்கள் உள்ளனவே? என்ன செய்வதாக முடிவெடுத்துள்ளீர்கள்? நாளுக்கு நாள் மூலை முடுக்கெல்லாம் முளைவிடும் அல்லேலூயா திர

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி பகுதியில் ஏழு அடி உயரமான  சிவலிங்கம் பிரதிஷ்டை!

செம்மணி பகுதியில் ஏழு அடி உயரமான  சிவலிங்கம் பிரதிஷ்டை!

சிவபூமி அறக்கட்டளையினால், செம்மணி பகுதியில் “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் ஏழு அடி உயரமான  சிவலிங்கம் இன்றைய தினம் (புதன்கிழமை) காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும்.

அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர் பாதுகாப்பாக இறை பக்தியோடு பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் இந்த சிலை உருவாக்கப்பட்டதாக சிவ பூமி அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.

IMG-20221207-WA0007-600x338.jpgIMG-20221207-WA0010-600x338.jpg

 

 

https://athavannews.com/2022/1314503

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி ஆறுதிருமுருகன் சிறப்பான வேலைகள் பலவும் செய்கின்றார்.......அன்னார் நீடூழி வாழவேண்டும்.......!   🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

கலாநிதி ஆறுதிருமுருகன் சிறப்பான வேலைகள் பலவும் செய்கின்றார்.......அன்னார் நீடூழி வாழவேண்டும்.......!   🙏

கனடா செல்ல அமெரிக்க விசா எடுத்து, போகும் வழியி்ல், உறவினர்களைப் பார்கலாம் என்று சுவிஸ் விசா எடுக்கப்போன இடத்தில், அங்கிருந்த சிங்கள பெண் இவரது ஆவணமொன்றில் தவறை கண்டுபிடித்து, அமெரிக்க தூதரலாயத்துக்கு அறிவிக்க, அமெரிக்கவிசா ரத்தாகி, துர்க்கையம்மனால் தடுத்தாற்கொள்ளப்பட்டவர். பின்னர் ஆன்மீகவாதியாக, கனடா, சுவிஸ், இலண்டன் வந்து போனார்.

Edited by Nathamuni
  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிங்களப் பெண்ணுக்கு நன்றி......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, suvy said:

அந்த சிங்களப் பெண்ணுக்கு நன்றி......!  😁

அந்தப் பெண்ணின் பெயர்; லக்சுமி திசநாயக்கா!! 😁

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட......அந்தப் பெண்னின்ர நேம் எல்லாம் க்நோ (know)பண்ணி வைத்திருக்கிறீங்கள்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

அட......அந்தப் பெண்னின்ர நேம் எல்லாம் க்நோ (know)பண்ணி வைத்திருக்கிறீங்கள்.......!  😂

அவர் இனத்துவேசமாக செயல்படுகிறார் என்ற, பெட்டிசம் காரணமாக, விசா பகுதியில் இருந்து, மாத்தப்பட்டார்... 🤦‍♀️ 😎

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருசாந்தி புதைக்கப்பட்ட இடத்திலிருந்து இந்தக் கட்டடம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கிருசாந்தி புதைக்கப்பட்ட இடத்திலிருந்து இந்தக் கட்டடம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? 

 

500 மீட்டருக்குள் வரும்.

ஏன் கேட்டீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

500 மீட்டருக்குள் வரும்.

ஏன் கேட்டீர்கள்?

செம்மணியென்றால் முன்னர் கொன்று புதைக்கப்பட்டவர்கள் மட்டுமே நினைவிற்கு வரும்.  இது யாருக்காவது நினைவில் நிற்கிறதா என்று பார்க்கத்தான் கேட்டேன். 

செம்மணிப் புதைகுழிகளை இனி சிங்களவனே மறைக்க வேண்டியதில்லை. நாமே  மறைத்துவிடுவோம். 

நாங்களே எல்லவற்றையும் மறந்து, மறைத்து வருகிறோம்.

கவலைக்குரிய விடயம். 

  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

செம்மணியென்றால் முன்னர் கொன்று புதைக்கப்பட்டவர்கள் மட்டுமே நினைவிற்கு வரும்.  இது யாருக்காவது நினைவில் நிற்கிறதா என்று பார்க்கத்தான் கேட்டேன். 

பள்ளி மாணவி கிருசாந்தியை மறக்க முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

செம்மணியென்றால் முன்னர் கொன்று புதைக்கப்பட்டவர்கள் மட்டுமே நினைவிற்கு வரும்.  இது யாருக்காவது நினைவில் நிற்கிறதா என்று பார்க்கத்தான் கேட்டேன். 

செம்மணிப் புதைகுழிகளை இனி சிங்களவனே மறைக்க வேண்டியதில்லை. நாமே  மறைத்துவிடுவோம். 

நாங்களே எல்லவற்றையும் மறந்து, மறைத்து வருகிறோம்.

கவலைக்குரிய விடயம். 

எமது, எமக்கு முந்திய ஒரு பரம்பரைக்கு செம்மணி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது எப்போதும் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

ஆனால் அடுத்த சந்ததிக்கு சந்தேகம்தான்.

இதில் கிருசாந்திக்கு ஒரு நினைவுக்கல் எழுப்புவது சிவலிங்கத்தை எழுப்புவதை விட எவ்வளவோ அனுகூலமானது என்பதும் மிக சரியே.

ஆனால் அப்படி எழுப்ப விடுவார்களா?

இதில் புத்தர் சிலை வராமல் தடுக்க எதையாவது வைக்க வேண்டும் என ஒரு சாரார் சொல்கிறார்கள்.

இனம் சம்பந்தமாக எதையும் வைக்க விடமாட்டார்கள் எனும் போது மதம் சம்பந்தமாக எதையும் வைக்கலாமே? 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, goshan_che said:

எமது, எமக்கு முந்திய ஒரு பரம்பரைக்கு செம்மணி என்றதும் முதலில் நினைவுக்கு வருவது எப்போதும் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

ஆனால் அடுத்த சந்ததிக்கு சந்தேகம்தான்.

இதில் கிருசாந்திக்கு ஒரு நினைவுக்கல் எழுப்புவது சிவலிங்கத்தை எழுப்புவதை விட எவ்வளவோ அனுகூலமானது என்பதும் மிக சரியே.

ஆனால் அப்படி எழுப்ப விடுவார்களா?

இதில் புத்தர் சிலை வராமல் தடுக்க எதையாவது வைக்க வேண்டும் என ஒரு சாரார் சொல்கிறார்கள்.

இனம் சம்பந்தமாக எதையும் வைக்க விடமாட்டார்கள் எனும் போது மதம் சம்பந்தமாக எதையும் வைக்கலாமே? 

 

யாழ் நூலகத்திற்கும் இதுதான் நடந்தது. இப்போது யாரும் இது எரிக்கப்பட்ட நூலகமாகக் கொள்வதில்லை. 

புத்தர் சிலை விவகாரம் என்பது நியாயமான சந்தேகமாத் தோன்றினாலும், இப்படி ஒரு சமய தூபி ஒன்று வருமுன்னர் புத்தர் சிலை வருமாக இருந்திருந்தால் பலத்த எதிர்ப்பு எழுந்திருக்கும்.

இனிமேல் தாதுகோபுரம் அமைப்பதற்கு எந்தத் தடையும் இருக்கப்போவதில்லை. 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

யாழ் நூலகத்திற்கும் இதுதான் நடந்தது. இப்போது யாரும் இது எரிக்கப்பட்ட நூலகமாகக் கொள்வதில்லை. 

புத்தர் சிலை விவகாரம் என்பது நியாயமான சந்தேகமாத் தோன்றினாலும், இப்படி ஒரு சமய தூபி ஒன்று வருமுன்னர் புத்தர் சிலை வருமாக இருந்திருந்தால் பலத்த எதிர்ப்பு எழுந்திருக்கும்.

இனிமேல் தாதுகோபுரம் அமைப்பதற்கு எந்தத் தடையும் இருக்கப்போவதில்லை. 

யோசிக்க வேண்டிய, காத்திரமான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இதில் புத்தர் சிலை வராமல் தடுக்க எதையாவது வைக்க வேண்டும் என ஒரு சாரார் சொல்கிறார்கள்.

இனம் சம்பந்தமாக எதையும் வைக்க விடமாட்டார்கள் எனும் போது மதம் சம்பந்தமாக எதையும் வைக்கலாமே? 

போட்டிக்கு சிலைகளை வைத்து கொள்ளட்டும் அதற்கு ஏன் முஸ்லிம் நாடுகள் போன்று பயமுறுத்துகிறார்கள்.

[யாழ்ப்பாண நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும்.
அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர் பாதுகாப்பாக இறை பக்தியோடு பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் இந்த சிலை உருவாக்கப்பட்டதாக சிவ பூமி அறக்கட்டளையினர் தெரிவித்தனர். ]

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விளங்க நினைப்பவன் said:

போட்டிக்கு சிலைகளை வைத்து கொள்ளட்டும் அதற்கு ஏன் முஸ்லிம் நாடுகள் போன்று பயமுறுத்துகிறார்கள்.

[யாழ்ப்பாண நகருக்குள் நுழைவோர் சிவபெருமானை வணங்கி புனிதமாக நுழைய வேண்டும்.
அதேபோல் குறித்த வீதியில் பயணிப்போர் பாதுகாப்பாக இறை பக்தியோடு பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும் இந்த சிலை உருவாக்கப்பட்டதாக சிவ பூமி அறக்கட்டளையினர் தெரிவித்தனர். ]

 

🤣 போட்டிக்கு இல்லை.

எங்கள் மண்ணில் எமது கடவுளார் மட்டுமே இருக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கைதானே. அதில் யேசுவும் மேரியும் உள்ளடங்கலே. புத்தர் வரமுன்னம் போய் நாங்களாய் இடம்பிடிக்கிறோம் என்பது இவர்கள் சொல்வது.

அதில் ஓரளவு நியாயம் இருப்பதாக தெரிந்தாலும், மேலே கற்பிதன் சொன்னது அதை விட நியாயாமாக படுகிறது எனக்கு.

 

அறக்கட்டளை சொன்னது - அது சும்மா கப்ஸா -அவர்களே சிலையை துறந்து போட்டு அங்கால போய் ஒரு மட்டன் ரோலை லபக்கி இருப்பார்கள் - சும்மா ஒரு மைக் கிடைத்தபடியால் புனிதம், சிவபெருமான், பயபத்தி எண்டு அடிச்சு விட்டுள்ளார்கள்.

சனம் உண்டியலில் ஒரு ரூபாய் குத்திய போட்டமா, தின்னூறு சாத்தினமா போனமா எண்டுதான் இருக்கும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

சனம் உண்டியலில் ஒரு ரூபாய் குத்திய போட்டமா, தின்னூறு சாத்தினமா போனமா எண்டுதான் இருக்கும்🤣

🤣

மைக் ஒன்று கிடைத்ததே எனபதற்காக சிவ பூமி அறக்கட்டளையினர் புனிதம், சிவபெருமான் , இறைபக்தி என்று அடிச்சு விட்டுள்ளார்கள் என்றால் மிகவும் நல்லது. பிரச்சனையே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவபூமியில்  சிங்கள இராணுவ வெற்றிச் சின்னங்களும்.. அல்லாவும் புத்தரும் எழும்பும் போது சிவன் எழுவது மட்டும் தான் பிரச்சனையா..?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nedukkalapoovan said:

சிவபூமியில்  சிங்கள இராணுவ வெற்றிச் சின்னங்களும்.. அல்லாவும் புத்தரும் எழும்பும் போது சிவன் எழுவது மட்டும் தான் பிரச்சனையா..?!

1) சிவ பூமி ? புரியவில்லை. யாழ்ப்பாணம் மட்டும்தான் சிவபூமியா? இந்த லிங்கத்தை பிரதிஸ்டை செய்திருக்க வேண்டிய இடம் பூனாவ தாண்டி வவுனியா வரும் எல்லைதான். 

2) இங்கே பிரச்சனை சிவலிங்கம் அல்ல. அதன் அமைவிடம் மட்டுமே. பல்வேறு, சைவ சமய, பிற சமயம் தொடர்பான கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அது தொடர்பாக யாரும் அலட்டிக்கொள்வதில்லை.  ஆனால் இங்கு செம்மணியில் எங்கள் இரத்த வரலாறு புதைக்கப்பட்டுள்ளது. 

 

குறிப்பு ;

அண்ணமாருக்கும் அவர் வழி பிற சிறு தெய்வங்களுக்கும் எங்கள் சொந்த மண்ணில் இடமில்லை. ஆனால் எங்கள் சமயத்துடன் தொடர்பேயில்லாத அனுமானுக்கும், ஐயப்பனுக்கும் வானளவான கோயிலை எழுப்புகிறோம். பாவம் அண்ணமாரும் அவர் வழி சிறு தெய்வங்களும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

அண்ணமாருக்கும் அவர் வழி பிற சிறு தெய்வங்களுக்கும் எங்கள் சொந்த மண்ணில் இடமில்லை. ஆனால் எங்கள் சமயத்துடன் தொடர்பேயில்லாத அனுமானுக்கும், ஐயப்பனுக்கும் வானளவான கோயிலை எழுப்புகிறோம். பாவம் அண்ணமாரும் அவர் வழி சிறு தெய்வங்களும். 

எங்கள் சொந்த மண்ணுடன்  தொடர்பேயில்லாத மேரி மாதாவுக்கும் யேசு நாதருக்கும் வானளாவ தேவாயலங்கள் உள்ளனவே? என்ன செய்வதாக முடிவெடுத்துள்ளீர்கள்?

நாளுக்கு நாள் மூலை முடுக்கெல்லாம் முளைவிடும் அல்லேலூயா திருச்சபைகளை என்ன செய்வது?

சிறு தெய்வ வழிபாட்டில் ஆர்வம் / நாட்டம் உள்ள உங்களின் வாகிபாகம் யாது இது தொடர்பாக?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

2) இங்கே பிரச்சனை சிவலிங்கம் அல்ல. அதன் அமைவிடம் மட்டுமே. பல்வேறு, சைவ சமய, பிற சமயம் தொடர்பான கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அது தொடர்பாக யாரும் அலட்டிக்கொள்வதில்லை.  ஆனால் இங்கு செம்மணியில் எங்கள் இரத்த வரலாறு புதைக்கப்பட்டுள்ளது

நீங்கள் குறிப்பிடும் செம்மணி இரத்த வரலாறு இடம்பெற்றது 1996 இல். 

07/09/1996 இல் இருந்து  08/12/22 வரை செம்மணி இரத்த வரலாறு தொடர்பாக, அந்த இடம் தொடர்பாக நீங்களோ அல்லது நீங்கள் முட்டுக் கொடுப்பவர்களோ எதனை செய்தீர்கள்? விடை பூச்சியம்.

வெறுமனே உங்கள் மதவாதத்தை வாந்தி எடுக்காமல் &  விதண்டாவாதம் செய்யாமல் உருப்படியாகா ஏதாவது செய்யுங்கள்.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

நீங்கள் குறிப்பிடும் செம்மணி இரத்த வரலாறு இடம்பெற்றது 1996 இல். 

07/09/1996 இல் இருந்து  08/12/22 வரை செம்மணி இரத்த வரலாறு தொடர்பாக, அந்த இடம் தொடர்பாக நீங்களோ அல்லது நீங்கள் முட்டுக் கொடுப்பவர்களோ எதனை செய்தீர்கள்? விடை பூச்சியம்.

வெறுமனே உங்கள் மதவாதத்தை வாந்தி எடுக்காமல் &  விதண்டாவாதம் செய்யாமல் உருப்படியாகா ஏதாவது செய்யுங்கள்.

 

 

ஐயா,

தாங்கள் சைவ சமயமா அல்லது இந்து மதமா? உத முதலில சொல்லுங்கோ. பிறகு மதவாந்தியை யார் எடுப்பது என்பதைப்பற்றித் தீர்மானிக்கலாம். 

😏

மேரி மாதாவையும், யேசுநாதரையும் ஏற்றுக்கொண்டதுபோல, அனுமானையும் ஐயப்பனையும் கும்பிட ஆயத்தம், ஆனால் உள்ளூர் அண்ணமாரையும் சிறு தெய்வங்களையும் ஏற்றுக்கொள்ள  மாட்டோம் என்கிறீர்களா?  ஏன்  அப்படி ? 

1 hour ago, MEERA said:

நீங்கள் குறிப்பிடும் செம்மணி இரத்த வரலாறு இடம்பெற்றது 1996 இல். 

07/09/1996 இல் இருந்து  08/12/22 வரை செம்மணி இரத்த வரலாறு தொடர்பாக, அந்த இடம் தொடர்பாக நீங்களோ அல்லது நீங்கள் முட்டுக் கொடுப்பவர்களோ எதனை செய்தீர்கள்? விடை பூச்சியம்.

வெறுமனே உங்கள் மதவாதத்தை வாந்தி எடுக்காமல் &  விதண்டாவாதம் செய்யாமல் உருப்படியாகா ஏதாவது செய்யுங்கள்.

 

 

செம்மணி என்பது இரத்த வரலாற்றைக் கொண்டது என்பதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 

அந்த இரத்தத்தின் மீது இதுவரை யாரும் எதுவுமே செய்யவில்லை என்பது உண்மைதான். 

ஆனால் தற்போது அந்த இரத்தத்தின் மீதுதான் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதையும் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 

😉

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

செம்மணி என்பது இரத்த வரலாற்றைக் கொண்டது என்பதை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 

அந்த இரத்தத்தின் மீது இதுவரை யாரும் எதுவுமே செய்யவில்லை என்பது உண்மைதான். 

ஆனால் தற்போது அந்த இரத்தத்தின் மீதுதான் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதையும் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. 

😉

வடக்கு கிழக்கே இரத்த வரலாற்றைக் கொண்டது. அதற்காக கட்டடம் கட்டாமலா இருக்கிறீர்கள்? 

மேலும் கிருசாந்தி புதைக்கப்பட்ட இடம் மட்டுந்தான் செம்மணி அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

ஐயா,

தாங்கள் சைவ சமயமா அல்லது இந்து மதமா? உத முதலில சொல்லுங்கோ. பிறகு மதவாந்தியை யார் எடுப்பது என்பதைப்பற்றித் தீர்மானிக்கலாம். 

😏

மேரி மாதாவையும், யேசுநாதரையும் ஏற்றுக்கொண்டதுபோல, அனுமானையும் ஐயப்பனையும் கும்பிட ஆயத்தம், ஆனால் உள்ளூர் அண்ணமாரையும் சிறு தெய்வங்களையும் ஏற்றுக்கொள்ள  மாட்டோம் என்கிறீர்களா?  ஏன்  அப்படி ? 

நான் எந்த சமயம் என்பது உங்களுக்கு தேவையற்ற விடயம்.

சிறு தெய்வ வழிபாடு வெள்ளையர்களின், அன்நியர்களின் வருகையோடு சீரழிந்தது. 

சிறு தெய்வ வழிபாட்டோ சைவ சமய வழிபாடோ நிறுவன மயப்படுத்தப்பட்ட முறையில் இடம்பெறவில்லை.

ஆனால் நாடு விட்டு நாடு வந்த கொள்ளையர்கள் தமது சமய வழிபாட்டு இடங்களை அமைத்து அதனை சட்டரீதியாக பதிவு செய்து ( சட்டத்தை கொண்டு வந்ததே அவர்கள்) எமது நிலங்களை அபகரித்தர்கள்.

அதன் தொடர்ச்சியே  சைவ சமயமும் நிறுவன மயப்பட்டு இன்று இந்து சமயத்தால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. இனியும் சிறு தெய்வ வழிபாடு என்று நீலிக் கண்ணீர் வடிக்காமல் காத்திரமாக ஏதாவது செய்யுங்கள்.

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.