Jump to content

'மேன்டோஸ்’ புயல் - எங்கு, எப்போது கரையைக் கடக்கும்? சென்னையில் மழை பெய்யுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'மேன்டோஸ்’ புயல் - எங்கு, எப்போது கரையைக் கடக்கும்? சென்னையில் மழை பெய்யுமா?

மேன்டோஸ் புயல்

பட மூலாதாரம்,IMD

8 டிசம்பர் 2022, 05:13 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு மேன்டோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புயல் தற்போது காரைக்காலில் இருந்து 560 கி.மீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 640 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டுள்ளது.

நாளை நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இன்று கடலோரப் பகுதிகளில் கன முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும் நாளை தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பும்படியும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் தண்டையார் பேட்டை, திருவெற்றியூர் உட்பட பல்வேறு பகுதிகளில் லேசான சாரலுடன் கூடிய மழை பெய்துவருகிறது.

 

புயல் எதிரொலியாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதேபோல, வேலூர் மாவட்டத்தில் இன்று மதியமும் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்னேற்பாடு நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு பேரிடர் மீட்புப் படை குழு அனுப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களும் மீட்புப் பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேன்டோஸ் புயலின் தாக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், மேன்டோஸ் புயலின் விளைவாக காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்க தொடங்கும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று தெரிவித்தார்.

''வரும் 10ம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் இருக்கும். கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றின் வேகம் இன்று 40கிமீ முதல் 50 கி மீவரை இருக்கும். ஒரு சில சமயம் காற்றின் வேகம் 60கிமீ வரை இருக்கும். சென்னை நகரத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும். செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுவை ஆகிய இடங்களில் அதிகனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளன,'' என்றார் பாலச்சந்திரன்.

சென்னையில் மழை சாரலுடன் தொடங்கியிருந்தாலும், அடுத்த இரண்டு நாட்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்கிறார். வடக்கு திசையில் இருந்து காற்று வீசுவதால், சென்னை நகரத்தில் குளிர் அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தற்போதுவரை பதிவாகியுள்ள வானிலை தரவுகளை கொண்டு பார்க்கையில், மேன்டோஸ் புயல், புயலாக மட்டுமே கரையைக் கடக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாளை நள்ளிரவு நேரத்தில், புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடைப்பட்ட பகுதியில் 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். மேலும் இன்று இரவு 11 மணிக்கு புயல் கரையை கடப்பது குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

புயலுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது?

பட மூலாதாரம்,IMD

புயலுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது?

ஒவ்வொரு புயலுக்கும் ஒவ்வொரு பெயர் சூட்டப்படும் வழக்கம் உண்டு. அந்த வகையில் இந்த முறை உருவாகியிருக்கும் புயலுக்கு மேன்டோஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சூட்டியுள்ளது. இதற்கு அரபு மொழியில் புதையல் பெட்டி என்று பொருள்.

புயலுக்கு யார் பெயர் வைக்கிறார்கள் என்ற பின்ணணி சுவாரஸ்யமானது. உலக வானிலை அமைப்பின் வழிகாட்டுதலின்படி, இயற்கை சீற்றங்களின் தகவல்களை பெறுவதில் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக புயலுக்கும் பெயரிடும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. உலகம் முழுவதும், ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்கள் மற்றும் ஐந்து பிராந்திய வெப்பமண்டல புயல் எச்சரிக்கை மையங்கள் இதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கும், பெயரிடுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஆறு பிராந்திய சிறப்பு வானிலை மையங்களில் இந்திய வானிலை ஆய்வு மையமும் ஒன்றாகும். இந்திய வானிலை ஆய்வு மையம் இந்தியா மற்றும் 12 நாடுகளுக்கு ஆலோசனைகளை வழங்குகிறது. அவை வங்கதேசம், இரான், மாலத்தீவு, மியான்மார், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய நாடுகள் ஆகும்.

 

மேன்டோஸ்’ புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதன்படி, ஏப்ரல் 2020ல் இந்திய வானிலை ஆய்வு மையம் புயலுக்கு பயன்படுத்தக்கூடிய 169 பெயர்களை அறிவித்துள்ளது. இந்தியா உள்பட 13 நாடுகள் தலா 13 பெயர்களை வழங்குகின்றன. மொத்தம் 169 பெயர்கள் கொண்ட அந்தப் பட்டியலின்படி இயற்கை சீற்றங்களுக்கு பெயர் சூட்டப்படுகிறது.

பெயர் பட்டியல் தரும் நாடுகளின் பெயர்கள் அகரவரிசையில் வகைப்படுத்தப்படும். அந்த பட்டியலில் உள்ளபடி அவற்றின் பரிந்துரைக்கப்பட்ட தலைப்புகள் இந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு பசிஃபிக் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு வைக்கப்படுகின்றன.

கடைசியாக கடந்த அக்டோபரில் உருவான புயலுக்கு சிட்ராங் எனப் பெயரிடப்பட்ட நிலையில், அந்த வரிசையில் அடுத்ததாக உள்ள மேன்டோஸ் என்ற பெயர் தற்போது சூட்டப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cmjy1dg2x40o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேண்டோஸ் புயல்: 85கிமீ வேகத்தில் பலத்த காற்றோடு கரையைக் கடக்கும் - முக்கியத் தகவல்கள்

மேண்டோஸ் புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

17 நிமிடங்களுக்கு முன்னர்

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் காலை (டிச. 07) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில், நேற்று நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு மேண்டோஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இன்று (டிச. 09) நள்ளிரவு புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேண்டோஸ் புயல் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள் இங்கே.

  • தென் - மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும் தீவிரப் புயலான மாண்டோஸ் புயல் தற்போது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. தற்போது சென்னையிலிருந்து தெற்கு - தென் கிழக்கு திசையில் 270 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டிருக்கிறது.
  • இது அடுத்த மூன்று மணி நேரத்தில் சாதாரண புயலாக வலுவிழந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழ்நாடு - புதுச்சேரி, தெற்கு ஆந்திர பிரதேசத்தை ஒட்டிய பகுதிகளில், குறிப்பாக மகாபலிபுரத்திற்கு அருகில் கரையைக் கடக்கும்.
  • புயல் கரையைக் கடக்கும்போது, அதாவது இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரை 75-85 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
  • இந்தப் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களிலும் அதை ஒட்டிய உள் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும். சில இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும்.
  • இந்தப் புயலின் காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளுக்குத் தீவிர கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களுக்கு கன முதல் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேண்டோஸ் புயல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திர பிரதேசம், மன்னார் வளைகுடாவைச் சேர்ந்த மீனவர்கள் டிசம்பர் 10ஆம் தேதிவரை கடலுக்குச் செல்ல வேண்டாமென எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர்.
  • கடல் சீற்றத்தின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னை மெரீனா கடற்கரையில், மணல் பகுதிகளில் கடல் நீர் புகுந்துள்ளது. கடற்கரையில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகள் இறக்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு எனப் புதிதாக அமைக்கப்பட்ட பாதை சேதமடைந்துள்ளது.
  • சென்னை நகரில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் அவசியமான காரணங்களுக்காக மட்டுமே பொதுமக்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என சென்னை நகர போக்குவரத்துக் காவல்துறை எச்சரித்துள்ளது.  
  • இந்தப் புயலின் காரணமாக, தமிழ்நாட்டிலேயே சென்னையில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு, மீட்பு பணியில் 16,000 போலீசார்: மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் சென்னை காவல் துறை

By RAJEEBAN

09 DEC, 2022 | 04:48 PM
image

மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள 12 மாவட்ட பேரிடர் மீட்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

912421.jpg

மாண்டஸ் புயலை எதிர்கொள்ள சென்னை பெருநகர காவல்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மற்றும் மின்வாரியம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளது. இதன்படி பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் சென்னை பெருநகர காவல் சார்பில் 12 மாவட்ட பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் அனுபவம் உள்ள 1 உதவி ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள் இடம்பெற்றுள்ளனர். மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இக்குழுவினரிடம் தயார் நிலையில் உள்ளன.

 

மேலும், படகுகளில் சென்று மீட்புப் பணிகள் மேற்கொள்ள 5 காவலர்கள் கொண்ட ஒரு குழு என 4 குழுக்கள் அமைக்கப்பட்டு படகு, கயிறு, உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் 40 நபர்கள் அடங்கிய தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவும் பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளது. 

https://www.virakesari.lk/article/142673

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேன்டோஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் என்னென்ன?

மேண்டோஸ் புயல்
3 மணி நேரங்களுக்கு முன்னர்

மேன்டோஸ் புயல் மகாபலிபுரத்தில் கரையை கடந்த பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. சூறைக்காற்றால் மின்சார கம்பங்களும் மரங்களும் விழுந்து கிடக்கின்றன. மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

கடலோரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன. கட்டடங்கள், கடைகள் உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

சென்னை நகரில் மரங்கள் விழுந்து பல வாகனங்கள் சேதமடைந்திருக்கின்றன. இரவு நேரத்தில் பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

மேன்டோஸ் புயல்

மேன்டோஸ் புயல் வலுவிழந்து வட தமிழகக் கடலோரப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என்றும் ஏறக்குறைய மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து டிசம்பர் 10 ஆம் தேதி நண்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புயலின் தாக்கம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கடற்கரைக்கு மக்கள் வருவதை தவிர்க்கவேண்டும் என தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைதுறை அறிவுறுத்தியுள்ளது. இரவு முழுவதும் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக பேருந்துகள் இயக்குவதும் தடை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பல இடங்களில் மரங்கள் முறிந்து, சாலைகளில் விழுந்துள்ளன. நள்ளிரவில் புயல் கரையை கடக்கும் நேரத்தில் 60க்கும் மேற்பட்ட சாலையோர மரங்கள் விழுந்துள்ளன என்பதால், மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியில் வருவதை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளது.

மேன்டோஸ் புயலின் தாக்கத்தால் காசிமேடு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 150 படகுகள் சேதமடைந்துவிட்டதாகவும் தேசிய மீனவர் பேரவையை சேர்ந்த எம். இளங்கோ தெரிவித்துள்ளார்.

''கடந்த இரண்டு நாட்களாக காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், பல படகுகள் சேதமாகியுள்ளன. கடந்த ஒரு வார காலமாக மீனவர்கள் கடலுக்கும் செல்லவில்லை என்பதால், பலரும் வருமானமின்றி தவிக்கின்றனர். அரசின் கவனம் எங்கள் மீது படவேண்டும்,'' என இளங்கோ பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/c97q4gg642qo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேன்டோஸ் புயல் படங்கள்: சென்னையில் முறிந்த மரங்கள், சேதமான படகுகள்

மேன்டோஸ்
30 நிமிடங்களுக்கு முன்னர்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான ‘மேன்டோஸ்' புயல் நேற்று இரவு மாமல்லபுரத்தில் கரையைக் கடந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக  60க்கும் மேற்பட்ட சாலையோர மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

படகுகள் சேதம்

காசிமேடு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுமார் 150 படகுகள் புயலின் தாக்கத்தால் சேதமடைந்துள்ளன.

படகுகள் சேதம்

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகளை கரையில் பாதுகாப்பாக மீனவர்கள் நிறுத்தியிருந்த போதிலும், பலத்த காற்று காரணமாக பல படகுகள் தலைகீழாக கவிழ்ந்துள்ளன. புயலின் தாக்கம் குறைந்த பிறகே, படகுகள், வலைகள் மற்றும் மோட்டார்கள் எவ்வளவு சேதமடைந்தன என்ற முழுவிவரம் தெரியவரும் என கோவளம் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தெரிவிக்கிறார். வெள்ளத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது போல தங்களுக்கு புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைக்கிறார்.

மேன்டோஸ் புயல்

பிரதான சாலையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

 
மேன்டோஸ் புயல்

அதே நேரத்தில், சாலைகளில் முறிந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகளில் காலை முதலே சென்னை மாநகராட்சி ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேன்டோஸ் புயல்

புயலின் தாக்கம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், கடற்கரைக்கு மக்கள் வருவதை தவிர்க்கவேண்டும் என தமிழ்நாடு அரசின் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது. 

மேன்டோஸ் புயல்

மேன்டோஸ் புயல் வலுவிழந்து வட தமிழ்நாட்டுக் கடலோரப் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது என்றும் ஏறக்குறைய மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து டிசம்பர் 10 ஆம் தேதி நண்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

https://www.bbc.com/tamil/articles/c1endp8gj34o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் மேன்டோஸ் புயல் ஏற்படுத்திய சேதம் என்ன?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
மேன்டோஸ் புயல்

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களைத் தாக்கிய மேன்டோஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கடந்துசென்றிருக்கிறது. இந்தப் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசும் உள்ளாட்சி நிர்வாகங்களும் மேற்கொண்ட முயற்சிகள் என்ன?

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த மேன்டோஸ் புயல் சனிக்கிழமை அதிகாலையில் மாமல்லபுரத்திற்கு அருகில் கரையைக் கடந்து, வலுவிழந்து மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தப் புயல் மாமல்லபுரத்திற்கு அருகில் கரையைக் கடந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. மேலும், புயல் கரையைக் கடந்தபோது சென்னை, மாமல்லபுரம் ஆகிய பகுதிகளில் 70 கி.மீ. வேகத்திற்கு காற்று வீசியது.

இந்த மேன்டோஸ் புயலின் காரணமாக சென்னை நகரத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்திருக்கின்றன. 150க்கும் மேற்பட்ட மரங்கள் தெரு விளக்குகளின் மீது சாய்ந்திருப்பதால், அந்தக் கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

 

உயிரிழப்புகளைப் பொறுத்தவரை, மின்சாரம் தாக்கியதிலும் சுவர் இடிந்து விழுந்ததிலும் குறைந்தது நான்கு பேர் பலியாகியுள்ளனர். 98 கால்நடைகளும் 181 வீடுகளும் இந்த மழையால் சேதமடைந்திருக்கின்றன.

மேன்டோஸ் புயல்

இந்தப் புயல் வரப்போவதை ஒட்டி, மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், பெரும் எண்ணிக்கையிலான படகுகள் சேதத்திலிருந்து தப்பின. ஆனால், சென்னை காசிமேடு பகுதியில் நாட்டுப் படகுகள் வெகுவாகச் சேதமடைந்திருப்பதாக அங்குள்ள மீனவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் இந்தப் புயலில் சேதமடைந்திருப்பதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவரும் நாட்டுப்படகு மற்றும் ஃபைபர் படகு சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவருமான கேசவராமன் பிபிசியிடம் தெரிவித்தார். "எங்களில் நிறைய பேர் எங்கள் படகுகளை இழந்துவிட்டோம். அவற்றைச் சரிசெய்ய முடியாது. சில படகுகளை தண்ணீர் இழுத்துச் சென்றுவிட்டது. அவற்றின் சில பாகங்கள்தான் கிடைத்திருக்கின்றன" என்கிறார் கேசவராமன்.

காசிமேட்டைச் சேர்ந்த பக்தவத்சலம் ஐந்து லட்ச ரூபாய் கடன் வாங்கி இரண்டு படகுகளை வாங்கியிருக்கிறார். அவற்றுக்கு வட்டியைக் கட்டிவருகிறார். இப்போது அவை சேதமடைந்துவிட்ட நிலையில், வட்டியையும் முதலையும் எப்படிச் செலுத்துவது என்ற கவலையோடு, வேறு வேலை கிடைக்குமா என்ற கவலையும் அவரை ஆட்கொண்டிருக்கிறது.

"வேறு படகுகளில் வேலை கிடைக்க இன்னும் ஒரு மாதமாவது ஆகும். இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்கிறார் பக்தவத்சலம்.

தமிழ்நாடு அரசு இழப்பீடு தரவேண்டுமெனக் கோரியிருக்கிறார்கள் மீனவர்கள். சேதமடைந்த படகுகள் குறித்து கணக்கெடுப்பு நடந்து வருவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இதேபோல, பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள கடைகளில் பெரும் பகுதி சேதமடைந்திருக்கிறது. பல கடைகளின் மேற்கூரைகள் புயல் காற்றில் பறந்துவிட்டன. சென்னை தியாகராய நகரில் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 கார்கள் முழுமையாக நொறுங்கிவிட்டன.

மேன்டோஸ் புயல்

நிவாரண ஏற்பாடுகள்

இந்த மேன்டஸ் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசும் சென்னை மாநகராட்சியும் விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தன. 17 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்தப் பணிகளைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டனர். புயல் கரையைக் கடந்துகொண்டிருந்த வெள்ளிக்கிழமையன்று ஐயாயிரம் பணியாளர்களும் ஒட்டுமொத்தமாக 25,000 பணியாளர்களும் புயல் தொடர்பான நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.

சென்னையில் உள்ள 22 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும் பிற இடங்களில் தேங்கும் தண்ணீரை அகற்றவும் 900 மோட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், சுரங்கப் பாதைகள் எதிலும் தண்ணீர் தேங்கவில்லை. பிற இடங்களில் தேங்கிய தண்ணீரை அகற்ற சுமார் 300 மோட்டர்கள் பயன்படுத்தப்பட்டன.

ஒட்டுமொத்தமாக 600 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை மதியத்திற்குள் பாதி இடங்களுக்கு மேல் மின் இணைப்புகள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன. மீதி இடங்களிலும் விரைவில் மின்சாரம் தரப்படுமென தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 355 துணை மின் நிலையங்களில், புயலால் ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக 10 துணை மின் நிலையங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சென்னையிலும் பல இடங்களிலும் மின்வாரியமே மின்சாரத்தை நிறுத்தி வைத்தது. புயல் கரையைக் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, மின் வாரியத்தைச் சேர்ந்த 1,100 பணியாளர்களும் ஒட்டுமொத்தமாக 11,000 பணியாளர்களும் புயல் தொடர்பான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.

மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட இடங்களில் சனிக்கிழமை காலை முதல் படிப்படியாக மின்சாரம் தரப்பட்டுவருகிறது.

மழையின் காரணமாகவும் பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டதாலும் சென்னையின் மின்தேவை வெகுவாகக் குறைந்தது. இரவு 9 மணியளவில் 2,200 மெகாவாட்டாக இருந்த மின் தேவை, நள்ளிரவு ஒரு மணியளவில் வெறும் 750 மெகாவாட்டாக குறைந்தது. சனிக்கிழமை மாலையில் மீண்டும் 2,178 மெகாவாட் என்ற அளவுக்கு மின்தேவை அதிகரித்துள்ளது.

கடந்த 121 ஆண்டுகளில் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையில் 12 புயல்கள் கடந்து சென்றுள்ளன. தற்போது கடந்து சென்ற மேன்டோஸ் புயல், 13வது புயலாகும்.

https://www.bbc.com/tamil/articles/cw4nd884kydo

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.