Jump to content

மையம் கொண்டுள்ள மாண்டஸ் சூறாவளி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மையம் கொண்டுள்ள மாண்டஸ் சூறாவளி

By T. SARANYA

08 DEC, 2022 | 04:46 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து 4 நாட்களாக மாலைவேளை வரையும் கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதோடு, ஓரளவான மழையும், பலத்த சுழல் காற்றும் வீசிவருதை அவதானிக்க முடிகின்றது.

பலத்த சுழல் காற்றினால், மாவட்டத்தின் பல இடங்களிலும், மரங்கள் முறிந்துள்ளதையும், மக்களின் இயல்பு வாழ்வில் சற்று தளம்பல் நிலமை ஏற்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது, நேற்று புதன்கிழமை(07) இரவு 11.30 மணியளவில் சூறாவளிப் புயலாக தீவிரமடைந்துள்ளது. அச்சூறாவளிப் புயலுக்கு “மாண்டஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. இது திருகோணமலையிலிருந்து கிழக்காக 370 கிலோ மீற்றர் தூரத்திலும், நெட்டாங்கு 9.2 பாகை வடக்காகவும், அகலாங்கு 84.6 பாகை கிழக்காகவும், மையம் கொண்டுள்ளது.

இப்புயல் மேற்கு, வடமேற்குத்திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையை 9 ஆம் திகதி இரவு ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், மேகமூட்டமான வானம் காணப்படும்.

வடக்கு வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும், மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில், 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மணிக்கு 50 தொடக்கம், 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று அவ்வப்போது வீசக்கூடும். மேல் மாகாணத்திலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மன்னார் முதல் காங்கேசங்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற் பிராந்தியங்களிலும், தென்மேற்கு வங்காள விரிகுடா கடற் பிராந்தியங்களிலும், மீனவ சமூகத்தினரும் கடலில் பயணம் செய்வோரும், நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். மேற்குறிப்பிட்ட கடற் பிராந்தியங்களில் கடல் அலை 2.5 மீற்றரிலிருந்து, 3.5 மீற்றர் வரை எழக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டல திணைக்களத்தின் மட்டக்களப்பு நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான குளங்களின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளன. அந்த வகையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 26 அடி 10 அங்குலமும், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 11அடி 9 அங்குலமும்,  வாகனேரிக்குளத்தின் நீரமட்டம் 15 அடியும், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11 அடி 7 அங்குலமும், கித்துள்வெவ குளத்தின் நீர்மட்டம் 7 அடி 2 அங்குலமும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீரமட்டம் 13 அடியும், வடமுனைக் குளத்தின் நீர்மட்டம் 8 அடி 7 அங்குலமும், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 23 அடி 8 அங்குலமும், தும்பங்கேணிக் குளத்தின் நீர்மட்டம் 12 அடி 6 அங்குலமுமாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/142553

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி வீதிக்கு குறுக்கே மரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு!

பலாலி வீதிக்கு குறுக்கே மரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், காற்றினால் யாழ்ப்பாணம் கந்தர் மடம் பகுதியில் பலாலி வீதிக்கு குறுக்கே வாகைமரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வியாழக்கிழமை வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக குறித்த மரம் வீதியில் விழுந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட குறித்த பகுதியில் மரத்தினை அகற்றுவதற்கு மாநகர சபையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1314730

############    ############

 @goshan_che@Nathamuni, @nilmini , @ஈழப்பிரியன்@suvy🤗

Edited by தமிழ் சிறி
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடும் குளிர் காரணமாக கால்நடைகள் உயிரிழப்பு!

கடும் குளிர் காரணமாக கால்நடைகள் உயிரிழப்பு!

கடும் குளிரால் 10க்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்ததுடன், ஏனையவற்றின் உயிரை பாதுகாக்க பண்ணையாளர் போராடி வருகின்றார்.

மாவட்டத்தில் கடும் குளிருடன் மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதார தாக்கமும் ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவரது பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்தும், உயிருக்காக போராடியும் வருகிறது.

இந்த நிலையில், அவற்றை மீட்டு, தீ மூட்டி உயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் பண்ணையாளரும், அயலவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த பண்ணையாளருக்கு பல லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு தொடர்பில் கிராம சேவையாளர் ஊடக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் இடம் பெற்ற பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றது.

https://athavannews.com/2022/1314736

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/jayarajan.rajan.58/videos/1559820264480765  👈

அம்பாறை, காரைதீவு பகுதியில்.. புயலுடன்  கடலின் சீற்றம்.
காணொளி எடுத்த @தனிக்காட்டு ராஜா  வுக்கு நன்றி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல்நீர் கரையை அரிக்கிறது கவனமாக இருத்தல் வேண்டும்........! 

வீடியோ நன்றாக இருக்கின்றது, நன்றி தனி.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

பலாலி வீதிக்கு குறுக்கே மரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு!

பலாலி வீதிக்கு குறுக்கே மரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், காற்றினால் யாழ்ப்பாணம் கந்தர் மடம் பகுதியில் பலாலி வீதிக்கு குறுக்கே வாகைமரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வியாழக்கிழமை வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக குறித்த மரம் வீதியில் விழுந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட குறித்த பகுதியில் மரத்தினை அகற்றுவதற்கு மாநகர சபையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1314730

############    ############

 @goshan_che@Nathamuni, @nilmini , @ஈழப்பிரியன்@suvy🤗

சிறி @nilmini    க்கு ஒரு போனைப் போட்டு பாருங்க.இப்ப தான் நிறைய பணத்தைக் கொட்டி வீடு கட்டியிருந்தா.

7 hours ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/jayarajan.rajan.58/videos/1559820264480765  👈

அம்பாறை, காரைதீவு பகுதியில்.. புயலுடன்  கடலின் சீற்றம்.
காணொளி எடுத்த @தனிக்காட்டு ராஜா  வுக்கு நன்றி.

என்ன சிறி ஆள்மாறாட்டம் போல இருக்கு.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன சிறி ஆள்மாறாட்டம் போல இருக்கு.

ஈழப்பிரியன்... இந்தக் காணொளி  தனிக்காட்டு ராஜாவின் முகநூல் பக்கத்தில் இருந்தது. 🙂

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சிறி @nilmini    க்கு ஒரு போனைப் போட்டு பாருங்க.இப்ப தான் நிறைய பணத்தைக் கொட்டி வீடு கட்டியிருந்தா.

என்ன சிறி ஆள்மாறாட்டம் போல இருக்கு.

சிறி , கிருபா அண்ணா 1௦௦ வருடம் நின்று பிடித்த வீடு. புயலுக்கு அசையாமல் இருக்கு.

9 hours ago, தமிழ் சிறி said:

பலாலி வீதிக்கு குறுக்கே மரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு!

பலாலி வீதிக்கு குறுக்கே மரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், காற்றினால் யாழ்ப்பாணம் கந்தர் மடம் பகுதியில் பலாலி வீதிக்கு குறுக்கே வாகைமரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் வியாழக்கிழமை வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக குறித்த மரம் வீதியில் விழுந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட குறித்த பகுதியில் மரத்தினை அகற்றுவதற்கு மாநகர சபையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1314730

############    ############

 @goshan_che@Nathamuni, @nilmini , @ஈழப்பிரியன்@suvy🤗

சங்கக்கடைக்கு பக்கத்துக்கு வீடு போல இருக்கு சிறி. ரோட்டும் மாறி, கடைகளும் புது வீடுகளும் வந்து இடமே உரு மாறுகிறது

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/jayarajan.rajan.58/videos/1559820264480765  👈

அம்பாறை, காரைதீவு பகுதியில்.. புயலுடன்  கடலின் சீற்றம்.
காணொளி எடுத்த @தனிக்காட்டு ராஜா  வுக்கு நன்றி.

நன்றி அண்ண அந்த கடற்படை முகாம் அமைந்திருப்பது நான் பிறந்து வளர்ந்த காணி சுனாமியின் பின்னர் கடற்படை கைப்பற்றியது (அரச காணியென அறிவித்தது அரசு) தினம் அங்க போவது வழமை ஏதோ ஓர் நிம்மதி போல. ஊரை காக்க எல்லையில் ஒரு கோவிலையும் கட்டி வைத்தோம் இன்று அதுவும் கடலுக்குள்வீழ்ந்துள்ளது மதில் 30 வருடத்திற்கு மேலாக இருந்த பூவரசும் சாய்ந்துள்ளது கடலில். தொழில் செய்வதும் இனி சவாலே கரைவலை இழுப்பது. 

4 hours ago, suvy said:

கடல்நீர் கரையை அரிக்கிறது கவனமாக இருத்தல் வேண்டும்........! 

வீடியோ நன்றாக இருக்கின்றது, நன்றி தனி.......!  👍

நன்றி அண்ணை  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nilmini said:

சிறி , கிருபா அண்ணா 1௦௦ வருடம் நின்று பிடித்த வீடு. புயலுக்கு அசையாமல் இருக்கு.

சங்கக்கடைக்கு பக்கத்துக்கு வீடு போல இருக்கு சிறி. ரோட்டும் மாறி, கடைகளும் புது வீடுகளும் வந்து இடமே உரு மாறுகிறது

நில்மினி… சங்கக் கடைக்கு பக்கத்து வீடு போல்தான் தெரிகின்றது.
அவ்விடத்தில் ஒரு Pharmacy‘ம் புதிதாக  உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

8 hours ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/jayarajan.rajan.58/videos/1559820264480765  👈

அம்பாறை, காரைதீவு பகுதியில்.. புயலுடன்  கடலின் சீற்றம்.
காணொளி எடுத்த @தனிக்காட்டு ராஜா  வுக்கு நன்றி.

ஆஹ.. நீங்களும் தனியின் முக நூலில் உள்ளீர்கள்...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

ஆஹ.. நீங்களும் தனியின் முக நூலில் உள்ளீர்கள்...

கன காலமாக…. “டம்மி”  பெயரில், பல யாழ்.கள உறவுகளின் முகநூலில் உள்ளேன். 😁

Link to comment
Share on other sites

Just now, தமிழ் சிறி said:

கன காலமாக…. “டம்மி”  பெயரில், பல யாழ்.கள உறவுகளின் முகநூலில் உள்ளேன். 😁

என் புல நாயை அவிழ்த்து விட்டு வேவு பார்க்கும் நேரம் வந்துட்டுது... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

என் புல நாயை அவிழ்த்து விட்டு வேவு பார்க்கும் நேரம் வந்துட்டுது... 

புல நாய் கண்டு பிடிக்காது. அதுக்கே… அல்வா கொடுத்து விடுவோம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of ocean and nature

2001 என நினைக்கிறன் திருவாதிரை தீர்த்ததில் சக நண்பர்கள் 6 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள் அவர்கள் நினைவாக கட்டியது இந்த நினைவு தூபி 

May be an image of nature, ocean, tree and beach

கடற்படை முகாம் 

May be an image of 5 people, tree, body of water and text that says 'A T KTV-KTV'

May be an image of 6 people, ocean, beach and text that says 'KTV-KTV KTV'

May be an image of 6 people, beach, ocean, tree and text that says 'KTV-KTV KTV S'

அரித்து செல்லப்பட்டது இதுவரைக்கும் 100 மீற்றருக்கு மேல்

1 hour ago, ஈழப்பிரியன் said:

என்ன சிறி ஆள்மாறாட்டம் போல இருக்கு.

பயங்கர குழப்பம் போல இருக்கு அண்ணைக்கு

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றி அண்ண அந்த கடற்படை முகாம் அமைந்திருப்பது நான் பிறந்து வளர்ந்த காணி சுனாமியின் பின்னர் கடற்படை கைப்பற்றியது (அரச காணியென அறிவித்தது அரசு) தினம் அங்க போவது வழமை ஏதோ ஓர் நிம்மதி போல. ஊரை காக்க எல்லையில் ஒரு கோவிலையும் கட்டி வைத்தோம் இன்று அதுவும் கடலுக்குள்வீழ்ந்துள்ளது மதில் 30 வருடத்திற்கு மேலாக இருந்த பூவரசும் சாய்ந்துள்ளது கடலில். தொழில் செய்வதும் இனி சவாலே கரைவலை இழுப்பது. 

நேற்று நீங்கள் இணைத்த காணொளியை பார்த்த போது…
கடலின் சீற்றத்தைப் பார்த்த எங்களுக்கே அச்சமாக இருந்தது.

பிறந்து வளர்ந்த காணியை… சுனாமியுடன்,
கடற்படை தமது உடமையாக்கிக் கொண்டது சோகமான விடயம். 😥

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நிழலி said:

என் புல நாயை அவிழ்த்து விட்டு வேவு பார்க்கும் நேரம் வந்துட்டுது... 

 கண்டு பிடிங்களன் பார்ப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை புயலாக மாறுகிறது மாண்டஸ் : 8 மாவட்டங்களில் 4 ஆயிரம் பேர் பாதிப்பு : மூவர் பலி

By T. SARANYA

09 DEC, 2022 | 04:47 PM
image

(எம்.மனோசித்ரா)

தென்மேல் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மாண்டஸ் சூறாவளி காரணமாக கடந்த இரு தினங்களாக நிலவும் குளிரான வானிலை இன்றிலிருந்து படிப்படியாகக் குறைவடையும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

குறித்த சூறாவளி நாளை காலை புயலாக மாறி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கரையைக் கடந்தது.

இதன் காரணமாக இலங்கையின் வடக்கில் தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை நிலவியதோடு சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியது.

மாண்டஸ் சூறாவளியின் தாக்கத்தினால் பதுளை, மொனராகலை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் வீசிய கடும் காற்றினால் சுமார் 4,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இம் மாவட்டங்களில் 1,305 குடும்பங்களைச் சேர்ந்த 4,335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை மூன்று உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

உடப்புஸ்ஸல்லாவை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் 55 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இதேபோன்று நுவரெலியா - ராகலை பகுதியில் முச்சக்கரவண்டியொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை - தெனியாய பிரதேசத்தில் மரம் முறிந்து வீழ்ந்ததில் 54 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு மரம் முறிந்து வீழ்ந்தமையின் காரணமாக மேற்கூறப்பட்ட மாவட்டங்களில் 1,302 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்த 58 பேர் பாதுகாப்பு முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் , அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு 60 - 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், திருகோணமலை, பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்படும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/142669

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

நேற்று நீங்கள் இணைத்த காணொளியை பார்த்த போது…
கடலின் சீற்றத்தைப் பார்த்த எங்களுக்கே அச்சமாக இருந்தது.

பிறந்து வளர்ந்த காணியை… சுனாமியுடன்,
கடற்படை தமது உடமையாக்கிக் கொண்டது சோகமான விடயம். 😥

ம்ம்  சொல்லப்போனால் இரண்டு நாள் சரியான தூக்கம் இல்லை கடும் காற்று கடல் சீற்றம்  எனது வீடும் மிக அருகாமையில் உள்ளதால் ஒரு வித பயத்துடன் இரவைக் கழிக்க நேர்ந்தது  
கடலில் இருந்து ஒரு 100 மீற்றர் அருகிலே தற்போதும் வசிக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம்  சொல்லப்போனால் இரண்டு நாள் சரியான தூக்கம் இல்லை கடும் காற்று கடல் சீற்றம்  எனது வீடும் மிக அருகாமையில் உள்ளதால் ஒரு வித பயத்துடன் இரவைக் கழிக்க நேர்ந்தது  
கடலில் இருந்து ஒரு 100 மீற்றர் அருகிலே தற்போதும் வசிக்கிறேன் 

எச்சரிக்கையாய் இருங்கள் தனி.
இரவு வீசிய காற்றால் தகரங்கள் எழுப்பிய சத்தத்தால் நிம்மதியா நித்திரை கொள்ள முடியவில்லை.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம்ம்  சொல்லப்போனால் இரண்டு நாள் சரியான தூக்கம் இல்லை கடும் காற்று கடல் சீற்றம்  எனது வீடும் மிக அருகாமையில் உள்ளதால் ஒரு வித பயத்துடன் இரவைக் கழிக்க நேர்ந்தது  
கடலில் இருந்து ஒரு 100 மீற்றர் அருகிலே தற்போதும் வசிக்கிறேன் 

சற்று முன் மேலே நீங்கள் இணைத்த படங்கள்… இரண்டு மீற்றருக்கு மேல் கடல்….
தரை மண்ணை, வாரி எடுத்துக் கொண்டு போயுள்ளது. மிகவும் ஆபத்தான அறிகுறி.
வேறு நாடுகளில் என்றால்… கடல் அரிப்புக்கு, எப்போதோ முன் நடவடிக்கைகளை
அரசு எடுத்திருக்கும். தமிழ் நிலம் என்றபடியால்… கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

எச்சரிக்கையாய் இருங்கள் தனி.
இரவு வீசிய காற்றால் தகரங்கள் எழுப்பிய சத்தத்தால் நிம்மதியா நித்திரை கொள்ள முடியவில்லை.

நன்றி ஏராளன் 

இங்கயும் அதுமட்டும் இல்லை நுவரேலியா போல கடும் குளிர்  பெரியவர்கள் , சிறியவர்கள் கடும் அவதியுற்றார்கள் மூச்சு பிரச்சினை உள்ளவர்கள் பலர் ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:
2 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன சிறி ஆள்மாறாட்டம் போல இருக்கு.

பயங்கர குழப்பம் போல இருக்கு அண்ணைக்கு

தெளிந்துவிட்டது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சற்று முன் மேலே நீங்கள் இணைத்த படங்கள்… இரண்டு மீற்றருக்கு மேல் கடல்….
தரை மண்ணை, வாரி எடுத்துக் கொண்டு போயுள்ளது. மிகவும் ஆபத்தான அறிகுறி.
வேறு நாடுகளில் என்றால்… கடல் அரிப்புக்கு, எப்போதோ முன் நடவடிக்கைகளை
அரசு எடுத்திருக்கும். தமிழ் நிலம் என்றபடியால்… கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.

அநேகமாக இந்த பகுதிகள் அனைத்தும் கடற்தொழிலுக்கு மிக முக்கியமான பிரதேசங்கள் அண்ண கல்லும் போட முடியாது தோணி படகு கரைக்கு இழுக்க முடியாது அதனால்  கடல் பின்னுக்கு போனால் தான் உண்டு சில இடங்களில் கல்லை இட்டு நிரப்பியுள்ள்ளார்கள் நிரப்பிய பகுதியை விட்டு மற்ற பகுதிக்குள் கடல் உள் வருகிறது அதில் எனது ஊரும் உண்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றி ஏராளன் 

இங்கயும் அதுமட்டும் இல்லை நுவரேலியா போல கடும் குளிர்  பெரியவர்கள் , சிறியவர்கள் கடும் அவதியுற்றார்கள் மூச்சு பிரச்சினை உள்ளவர்கள் பலர் ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார்கள்

மாரிகாலம் தொடங்கியதற்கு நேற்றுத் தான் போர்வை போர்த்தி படுத்தது. 2 நாளா சூரியனை காணேல, நாளைக்கு உங்க வருவார்! எங்கட பக்கமும் அனுப்பிவிடுங்கோ.🤪

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.