Jump to content

நாம் விரும்பிச் சாப்பிடும் இட்லியின் பூர்வீகம் என்ன தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • ஆலமூர் சௌமியா
  • பதவி,பிபிசி
  • 8 டிசம்பர் 2022
இட்லி

பட மூலாதாரம்,GETTY IMAGES

நம்முடைய உணவுப் பழக்கத்தில் இட்லி ஒரு முடிசூடா மன்னன். எத்தனை காலை உணவுகள் இருந்தாலும், வெள்ளை மற்றும் மென்மையான இட்லியுடன் அவற்றை ஒப்பிட முடியாது. சூடான இட்லியுடன் தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது இட்லி பொடி சேர்த்து நம்முடைய நாளை தொடங்கலாம். ஒரே நேரத்தில் 10 முதல் 12 இட்லிகள் அவிக்க முடியும் என்பதால் வேலையும் மிகக் குறைவு. எளிதில் ஜீரணமும் ஆகிவிடக்கூடியது.

இன்று தென்னிந்தியாவில் இட்லி கிடைக்காத இடமே இல்லை. ஆனால், இந்த இட்லி இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

தோசை, அப்பம், வடை, பஜ்ஜி போன்றவை குறித்து தமிழ்ச் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது கி.மு.300ல் இருந்தே இவை நம்மிடம் பழக்கத்தில் உள்ளன. ஆனால், இட்லி?

இட்லியின் கதை

இந்தியாவில் கர்நாடகா பகுதியில் எழுதப்பட்ட கவிதைகளில் இட்லி முதன்முதலில் குறிப்பிடப்பட்டதாகவும், அவை சமஸ்கிருதத்தில் 'இடலிகே' மற்றும் 'இத்தாரிகா' என்று அழைக்கப்பட்டதாகவும் உணவு வரலாற்றாசிரியர் கே.டி. அச்சையா கூறுகிறார்.

அலிகே என்றால் கன்னடத்தில் நீராவி பாத்திரம் என்று பொருள். இதிலிருந்தே 'இடலிகே' என்ற சொல் வந்திருக்கலாம் என்பது அச்சையாவின் ஊகம்.

920ல் கன்னடக் கவிஞர் சிவகோடி ஆச்சார்யா எழுதிய வத்தராதனே என்ற கவிதையில் இட்லி பற்றிய முதல் குறிப்பு உள்ளதாக கே.டி. அச்சையா தனது 'இந்திய உணவு: வரலாற்றுத் துணை' புத்தகத்தில் எழுதியுள்ளார்.

அதன் பின்னர் பல படைப்புகளில் இட்லி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி.1025ல் சவுந்தராயா என்ற கவிஞர் இட்லி செய்யும் முறையை விவரித்துள்ளார்.

அதன்பிறகு, கி.பி.1130ல் 'மனசொல்லாச' என்ற சமஸ்கிருத நூலில் இட்லி பற்றிய குறிப்பு இருப்பதாக அச்சையா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

கி.பி 1235 தேதியிட்ட கர்நாடகக் குறிப்பு இட்லிகளை ஒளி மற்றும் விலைமதிப்பற்ற நாணயம் போன்ற பொருள் என்று குறிப்பிடுகிறது.

தமிழ்நாட்டில் 17ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மச்சபுராணத்தில் 'இட்டலி' என்ற பெயரில் இட்லி பற்றிய குறிப்பு இருப்பதாக அச்சையா குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், மேலே குறிப்பிடப்பட்ட மூன்றிலும், இட்லி தயாரிக்க அரிசி பயன்படுத்தப்பட்டதாக குறிப்பு இல்லை. எனவே முற்காலத்தில் இட்லி உளுந்துடன் சமைக்கப்பட்டிருக்கும் என்று அச்சையா நம்புகிறார்.

அதேபோல நவீன காலத்தில் இட்லி தயாரிக்கப்படும் முறையும் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. எனவே நவீன கால இட்லி தயாரிப்பு செயல்முறைகள் எப்போது நம்மிடம் பழக்கத்திற்கு வந்தன என்பதைச் சொல்ல தெளிவான சான்றுகள் இல்லை என்று அச்சையா தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

இட்லி எங்கிருந்து வந்தது?

இட்லி எங்கிருந்து வந்தது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இட்லி இந்தோனீசியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கே.டி. அச்சையா தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

அவருடைய ஆராய்ச்சியின் படி, இந்தோனீசியாவில் பழங்காலத்திலிருந்தே பொருட்களை வேகவைக்கும் முறை நடைமுறையில் உள்ளது. சோயாபீன்ஸ், வேர்க்கடலை, மீன் போன்றவற்றை அந்த மக்கள் வேகவைத்து உண்டார்கள்.

'கெட்லி' என்பது இந்தோனீசியாவில் புளிக்கவைக்கப்பட்டு வேகவைக்கப்படும் ஒரு பொருள் என்று அச்சையா கூறுகிறார்.

சீனாவிலும் பழங்காலத்திலிருந்தே வேகவைத்தல் முறை நடைமுறையில் உள்ளது. ஏழாம் நூற்றாண்டில் இந்தியா வந்த சீன புத்த துறவி ஹுயன் சாங் இந்தியாவில் நீராவி பாத்திரங்களே இல்லை என்று கூறினார்.

8 ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை இந்தோனீசியாவை ஆண்ட இந்து மன்னர்களிடம் பணிபுரிந்த இந்திய சமையல்காரர்கள் இந்தியா திரும்பிய போது நொதித்தல் செயல்முறையை இங்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்று கே.டி. அச்சையா கூறுகிறார்.

பிற்காலத்தில், தினையுடன் அரிசியைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்ற யோசனை தோன்றி, இட்லி தயாரிப்பில் அரிசி சேர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.

இந்தோனீசியாவில் கெட்லி இருந்தது போலவே செக்கோஸ்லோவாக்கியாவில் நீட்லீக் என்ற பொருள் சமைக்கப்பட்டது.

புளிக்கவைப்பது மற்றும் இட்லி செய்வது எப்படி என்பது தெரியாவிட்டாலும், இந்தியர்களுக்கு ஆவியில் சமைக்கத் தெரியும் என்று அச்சையா கூறுகிறார்.

"இந்தியாவில் நீராவி பாத்திரங்கள் இல்லை என்று சீனப் பயணி ஹுயென் சாங் கூறினார். அதற்கு நீராவியில் சமைக்கத் தெரியாது என்று அர்த்தமல்ல. இந்தியர்களுக்கு எளிமையான முறையில் ஆவியில் வேக வைக்கத் தெரியும். அடுப்பில் தண்ணீரைக் கொதிக்க வைத்த பிறகு மெல்லிய துணிஅல்லது மூங்கில் கூடைகளில் பண்டம் மூடப்பட்டு மேலே இருந்து தொங்கவிடப்பட்டது. கேரளாவில் புட்டு இந்த முறையில் சமைக்கப்படும். மேலும், சிந்து பள்ளத்தாக்கு பகுதிகளில், ஒரு நீண்ட துளையிடப்பட்ட மண் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது நாம் நீராவியில் சமைத்ததைக் குறிக்கிறது" என்று கே.டி. அச்சையா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

எத்தனை வகை இட்லி உள்ளது?

எத்தனை வகை இட்லி உள்ளது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தோனீசியாவிலிருந்து நம் நாட்டில் குடியேறியதாக நம்பப்படும் இட்லி, நவீன காலத்தில் பல மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. இட்லி சமைப்பதில் நிறைய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எம்டிஆர் இட்லியும், காஞ்சிபுரம் இட்லியும் மிகவும் பிரபலமாகிவிட்டன.

இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே இட்லி மிக முக்கியமான உணவுப் பொருள் என்கிறார் பிரபல உணவு எழுத்தாளர் வீர் சிங்வி.

ரவா இட்லி, ராகி இட்லி, பொடி இட்லி எனப் பல வகையான இட்லிகள் உள்ளன.

சமீபத்தில், மற்றொரு புதிய வகை இட்லியாக கரி இட்லிகள் எனப்படும் கருப்பு இட்லிகள் பிரபலமாகின. இது சமூக வலைதளங்களில் விமர்சனங்களைச் சந்தித்தது.

“இந்திய பாதுகாப்பு உணவு ஆராய்ச்சி ஆய்வகம் இந்தியாவின் முதல் மனிதர்கள் கொண்ட விண்கலமான ககன்யானில் பயணிக்க இருக்கும் விண்வெளி வீரர்களுக்காக சில உள்நாட்டு உணவுகளை தயாரித்துள்ளது. அதில் ஒன்று சாம்பார் இட்லி” என கடந்த 2020ஆம் ஆண்டு ஏஎன்ஐ செய்தி முகமை ட்வீட் செய்தது.

எனினும், கொரோனா காரணமாக ககன்யான் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கடந்த ஜூன் மாதம் தெரிவித்தார். அதாவது, இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இட்லியும் விண்வெளியை அடையும்.

உணவு வரலாறு - இட்லி: நாம் விரும்பிச் சாப்பிடும் உணவின் பூர்வீகம் என்ன தெரியுமா? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு காலமும் நினைத்தது தோசை தமிழரின் /தமிழ்நாட்டு உணவென்று அண்மையில் தான் தெரிந்து கொண்டேன் கர்நாடகாவில் தான் தோசை அதிகமாய் சாப்பிடுவார்கள் என்று😄

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.