Jump to content

கடும் குளிரால் இறக்கும் கால்நடைகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடும் குளிரால் இறக்கும் கால்நடைகள்!

நாட்டில் நிலவும் கடும் குளிரால் கால்நடைகள் பல்வேறு நோய் நிலைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கில் ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் பல இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் சிவராசா சிவகாந்தன் என்பவரது பண்ணையில் இருந்த கால்நடைகளே இவ்வாறு உயிரிழந்தும், உயிருக்காக போராடியும் வருகிறது.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளன. கால்நடைகளில் உயிரை பாதுகாக்கும் செயற்பாட்டில் பண்ணையாளரும், அயலவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் குறித்த பண்ணையாளருக்கு பல லட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பு தொடர்பில் கிராம சேவையாளர் ஊடக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் இடம் பெற்ற பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றது.
 

http://www.samakalam.com/கடும்-குளிரால்-இறக்கும்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 நாளாக சூரியனைக் காணவில்லை! கண்டா வரச்சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள் பலி ! பெரும் சோகத்தில் மக்கள்

By T. SARANYA

09 DEC, 2022 | 02:34 PM
image

தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள  கடும் குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் 3 ஆடுகள் என்பன இறந்துள்ளன. 

22.jpg

இந்த இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, ஏனையவற்றின் உயிரை பாதுகாக்க பண்ணையாளர் போராடி வருகின்றனர்.

கிளிநொச்சி கௌதாரிமுனை வெட்டுக்காடு கிராமத்தில் 60 மாடுகளும்,நல்லூர் சாமிபுலத்தில் கிராமத்தில் 75 மாடுகளும்,  பொன்னகர் கிராமத்தில் 13 மாடுகளும், புன்னை நீராவியில் 07 மாடுகளும், நாகேந்திரபுரத்தில் 05 மாடுகளும், பூநகரியில் 05  மாடுகளுமாக 130 க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

54.jpg

அத்தோடு திருவையாறு  கிராமத்தில்  கடும் காற்று காரணமாக மரம்  முறிந்து வீழ்ந்ததில் மூன்று ஆடுகள் இறந்துள்ளதோடு, மேலும் பல ஆடுகள் மற்றும் மாடுகள் என்பன காயங்களுக்குள்ளாகியுள்ளன.

 

23.jpg

கடும் குளிருடன் கூடிய  மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாகவும் இவ்வாறு கால்நடைகள் இறந்துள்ளதாகவும்,  இன்று (09) மதியம்வரை மேற்படி எண்ணிக்கையை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது என்றும் தெரிவித்துள்ள கால்நடை திணைக்களம்  இந்த சீரற்ற காலநிலை காரணமாக இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/142633

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முழுவதும் கடும் குளிரான கால நிலை இயற்கையும் எம்மை உருட்டி பிரட்டிவிட்டு போகிறது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இலங்கை முழுவதும் கடும் குளிரான கால நிலை இயற்கையும் எம்மை உருட்டி பிரட்டிவிட்டு போகிறது  

Bild

சும்மா தமாஷ்.....😂

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சின்ன குளிருக்கு இப்படி கால்நடை இறக்குமா? இது வேறு என்னவோ நோய் போல படுகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இந்த சின்ன குளிருக்கு இப்படி கால்நடை இறக்குமா? இது வேறு என்னவோ நோய் போல படுகிறது?

நேரா குளிருக்கைநின்றால் இறக்கும். முன்பு மாரிநேரம் வேப்பம் புகை போட்டு கொட்டில் முழுக்க ஒதுக்கு அடைச்சுத்தான் ஆடு மாடு விடுறது. கடுமையான வாடைக்காற்று கூடாது

Edited by வாதவூரான்
word mistake
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

Bild

சும்மா தமாஷ்.....😂

Bild

எனக்கு பழகிய ஒன்று  தான் ஆனால் இங்குள்ள பலருக்கு அது புதுசு சாமியார் 

மத்திய கிழக்கில் இதைவிட குளிர் ஐரோப்பாவை விட குறைவு 

13 minutes ago, goshan_che said:

இந்த சின்ன குளிருக்கு இப்படி கால்நடை இறக்குமா? இது வேறு என்னவோ நோய் போல படுகிறது?

ஆடு மாடு இறப்பது வழமை குளிர் , மழைக்கு  மாட்டுக்கு புகை வைப்பார்கள் ஆட்டை திறக்காமல் கொட்டகைக்குள் ஒரு ஓரத்தில் நெருப்பை எரிப்பார்கள் அதன் சூடு ஆட்டை  சூடாக வைத்திருக்கும் என்பதால் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாதவூரான் said:

நேரா குளிருக்கைநின்றால் இறக்கும். முன்பு மாரிநேரம் வேப்பம் புகை போட்டு கொட்டில் முழுக்க ஒதுக்கு அடைச்சுத்தான் ஆடு மாடு விடுறது. கடுமையான வாடைக்காற்று கூடாது

ஓ..அப்படியா? எனக்கு இதில் அனுபவம் இல்லை. தகவலுக்கு நன்றி🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வாதவூரான் said:

நேரா குளிருக்கைநின்றால் இறக்கும். முன்பு மாரிநேரம் வேப்பம் புகை போட்டு கொட்டில் முழுக்க ஒதுக்கு அடைச்சுத்தான் ஆடு மாடு விடுறது. கடுமையான வாடைக்காற்று கூடாது

ம்ம் எங்க பக்கமும் இதுதான் செய்வார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரிலை இருக்கேக்கை  குளிர் நேரம் தென்னம் கோம்பை மூட்டி குளிர் காய்ஞ்சிருக்கிறன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் மாண்டஸ் சூறாவளியால் 40 குடும்பங்கள் பாதிப்பு

By T. SARANYA

09 DEC, 2022 | 04:53 PM
image

மன்னார் மாவட்டத்தில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக நான்கு பிரதேச செயலகப் பிரிவிகளில் 40  குடும்பங்கள் பாதிப்புகளுக்குள்ளாகி இருப்பதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் திலீபன் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (08) இரவு  மாண்டஸ் சூறாவளியின் தாக்கத்தால் மன்னார் ,  மாந்தை மேற்கு, நானாட்டான், மடு ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. மீன்பிடி வலைகள் என்பன கடல் நீரால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல்போய் உள்ளன.

இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் 40 குடும்பங்களைச் சார்ந்த 159 நபர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளார்கள்.

11 வீடுகள், ஒரு சிறு வியாபார குடிசை மற்றும்  கடை  சேதமடைந்துள்ளதோடு,  100 வாழை மரங்களும் சேதமாகியுள்ளன. மீன்பிடி படகுகள் பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளது. அத்தோடு, 10 மீன்பிடி வலைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/142675

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேப்பம் இலை போட்டு நெருப்பு மூட்டினால் நுளம்பு வராது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எனக்கு பழகிய ஒன்று  தான் ஆனால் இங்குள்ள பலருக்கு அது புதுசு சாமியார் 

மத்திய கிழக்கில் இதைவிட குளிர் ஐரோப்பாவை விட குறைவு 

ஆடு மாடு இறப்பது வழமை குளிர் , மழைக்கு  மாட்டுக்கு புகை வைப்பார்கள் ஆட்டை திறக்காமல் கொட்டகைக்குள் ஒரு ஓரத்தில் நெருப்பை எரிப்பார்கள் அதன் சூடு ஆட்டை  சூடாக வைத்திருக்கும் என்பதால் 

நன்றி தனி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

நான் ஊரிலை இருக்கேக்கை  குளிர் நேரம் தென்னம் கோம்பை மூட்டி குளிர் காய்ஞ்சிருக்கிறன்....

பாவம் மனுசன் அங்க எந்த மட்டை வச்சி பத்த வைக்குதோ தெரியல🤔🤣

39 minutes ago, குமாரசாமி said:

வேப்பம் இலை போட்டு நெருப்பு மூட்டினால் நுளம்பு வராது

ம்  தேங்காய் உரிச்ச மட்ட ( உரிமட்டை என்பார்கள் சாமி ) அதை எரித்து அதனுள் இலையை போட்டு எரிப்பம் இப்பவும் நுளம்புக்கு அதை விட எந்த  மருந்தும் இல்ல 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பாவம் மனுசன் அங்க எந்த மட்டை வச்சி பத்த வைக்குதோ தெரியல🤔🤣

வெக்கைக்கும்,சுடுதண்ணிக்கும் வருசம் 2000 ஈரோவுக்கு மேலை வேணும் 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

வெக்கைக்கும்,சுடுதண்ணிக்கும் வருசம் 2000 ஈரோவுக்கு மேலை வேணும் 🙃

ஆக 2000 மோ,இங்கை இந்தமுறை £5000 மேலை பொகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

பாவம் மனுசன் அங்க எந்த மட்டை வச்சி பத்த வைக்குதோ தெரியல🤔🤣

ரொமேனியன் மட்டை இதுக்கெண்டு சொல்லி எடுக்கிறவர்🤣. Wood burner 

Just now, வாதவூரான் said:

ஆக 2000 மோ,இங்கை இந்தமுறை £5000 மேலை பொகும்

அது போன வருசம். இந்த வருசம் …அவ்….

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

வெக்கைக்கும்,சுடுதண்ணிக்கும் வருசம் 2000 ஈரோவுக்கு மேலை வேணும் 🙃

ம் அதிக தொகைதான் இஞ்ச இப்ப கரண்டுக்கு , தண்ணிக்கும் , கேசுக்கும் , பெற்றல் , மண்ணெண்ணெய்)  

1 minute ago, goshan_che said:

ரொமேனியன் மட்டை இதுக்கெண்டு சொல்லி எடுக்கிறவர்🤣. Wood burner 

செம கட்டையா இருக்கும் போல நான் கட்டையைத்தான் சொன்னன் பிளீஸ் நம்புங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாதவூரான் said:

ஆக 2000 மோ,இங்கை இந்தமுறை £5000 மேலை பொகும்

இது இவ்வளவு காலமும் வந்த நோர்மல் கணக்கு 😁

இனி வாற கணக்கு வேற லெவல்.....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

வெக்கைக்கும்,சுடுதண்ணிக்கும் வருசம் 2000 ஈரோவுக்கு மேலை வேணும் 🙃

இது மாண்புமிகு உக்ரேனில இறங்க முதலா, பிறகா?

ஆனால் ஐரோப்பாவிலேயே வீடுகள் வெப்பத்தை தக்க வைக்காமல் கட்டி இருப்பது யூகேயில்தான்.

ஸ்கெண்டிநேவியா, ஜேர்மன் வீடுகள் அமைப்பு 👌

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ம் அதிக தொகைதான் இஞ்ச இப்ப கரண்டுக்கு , தண்ணிக்கும் , கேசுக்கும் , பெற்றல் , மண்ணெண்ணெய்)  

செம கட்டையா இருக்கும் போல நான் கட்டையைத்தான் சொன்னன் பிளீஸ் நம்புங்க

ரஷ்யன் கட்டையும் ரஷ்யன் வொட்காவும் வைச்சிருந்தால் வீட்டு கீற்றர் செலவு குறையும்.....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ரஷ்யன் கட்டையும் ரஷ்யன் வொட்காவும் வைச்சிருந்தால் வீட்டு கீற்றர் செலவு குறையும்.....😂

நான் நம்ப மாட்டன் படத்த போடுங்க பார்க்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

இது மாண்புமிகு உக்ரேனில இறங்க முதலா, பிறகா?

மா  உ இ மு.....🤣

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Vetti - Discover & Share GIFs | Gif,  Cute gif, Discover

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

500 கால்நடைகள் வடக்கில் உயிரிழப்பு ; நாட்டில் 10 ஆயிரம் பேர் சீரற்ற காலநிலையால் பாதிப்பு

By T. SARANYA

10 DEC, 2022 | 05:41 PM
image

(எம்.மனோசித்ரா)

தென்மேல் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மாண்டஸ் சூறாவளி  சனிக்கிழமை (10) அதிகாலை வடக்கு தமிழ்நாடு, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கரையைக் கடந்தது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடும் காற்றுடன் கூடிய குளிர் காலநிலை நிலவியது.

கடும் காற்று மற்றும் குளிருடனான காலநிலை காரணமாக வடக்கில் ஆடுகள் மற்றும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கள் 500 ஐ கடந்துள்ளன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் சுமார் 358 மாடுகளும், 141 ஆடுகளும் உயிரிழந்துள்ளன.

இதேவேளை, கடும் காற்று மற்றும் மழை காரணமாக 16 மாவட்டங்களைச் சேர்ந்த 10,000 இற்கும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 2,000 இற்கும் அதிக வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, மொனராகலை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, இரத்தினபுரி, கேகாலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், அம்பாந்தோட்டை, அநுராதபுரம் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய மேற்கூறப்பட்ட மாவட்டங்களில் 3,006 குடும்பங்களைச் சேர்ந்த 10,434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 15 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இரு வீடுகள் முழுமையாகவும் 2,721 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் மாண்டஸ் சூறாவளி தமிழகத்தை கடந்து சென்றுள்ளமையினால் இதனால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை படிப்படியாக சீராகும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் காற்று காரணமாக வடக்கு மற்றும் தெற்கு கடற் பிரதேசங்களில் கொந்தளிப்பான நிலை காணப்படும் என்பதோடு, காற்றின் வேகமானது மணித்தியாலயத்திற்கு 40 - 50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/142732

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.