Jump to content

கடும் குளிரால் இறக்கும் கால்நடைகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் மாற்றங்களுக்கு மக்கள் விரைந்து இசைவாக்கத்தக்க வகையில் ஊடகங்களும்.. சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களும்... உயர்கல்வி நிறுவனங்களும் செயற்படனும்.

நான் அறிய ஊரில் கடும் மழை காலத்தில் கால்நடைகளை மேடை அமைந்த கொட்டகைகளில் கட்டுவதோடு.. உலர்ந்த சாக்கை விரித்து விடுவார்கள். உலர்ந்த சாக்கால் அதன் உடலை போர்த்திக் கட்டுவதோடு.. நிறை உணவை வழங்குவார்கள். கழிவுகளால் ஏற்படும் ஈரத்தன்மையை நீக்கும் வகையில் தினமும் காலையில் சுத்தம் செய்வார்கள். மீண்டும் உலர்ந்த சாக்கை நிலத்தில் விரிப்பது அல்லது வைக்கோல் போட்டு விடுவார்கள்.

இதே தான் மேற்கு நாடுகளிலும் கொஞ்சம் மேம்படுத்திய வகையில் செய்வதோடு.. கூடிய குளிர் என்பதால் மூடிய கொட்டகைகளில் கால் நடைகளை வைத்துக் கொள்வார்கள் குளிர்காலத்தில். மேலும் கால்நடைகளின் உடலைச் சுற்றி போர்வை போர்த்தி விடுவார்கள்.

இது ஊருக்கும் பொருந்தும். 

Raising calves that thrive in the winter | UMN Extension

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2022 at 15:55, குமாரசாமி said:

நான் ஊரிலை இருக்கேக்கை  குளிர் நேரம் தென்னம் கோம்பை மூட்டி குளிர் காய்ஞ்சிருக்கிறன்....

என்னண்ண சொல்லுறீங்க.. இந்த திருவெம்பாவைக்குள்ள குளிருக்க நடுங்கிக் கொண்டு தானே கோயிலுக்கு போறது. விடிய சுடுதண்ணி வைச்சு தானே குளிக்கிறது. 

ஏதோ ஊரில.. இப்ப தான் இதெல்லாம் என்ற மாதிரி சனம் படோபகாரம்.. பண்ணுது. மாசிப் பனி மூசிப் பெய்யும் என்ற பழமொழி கூட உண்டு. 

என்ன முந்திய தலைமுறை பெரியவர்களின் வழிநடத்தலில் காலநிலைக்கு ஏற்ப தன்னை தயார் செய்து கொள்ளும். இப்ப ஆக்கள் எல்லாம்.. ஒரு முன்னேற்பாடும் செய்வதில்லை. முன்னர் மாரி காலம் என்றால்.. விறகு சேகரித்து வைப்பார்கள். உலர் ஊமல்.. கோம்பை சேகரித்து வைப்பார்கள். வைக்கோல் சேகரித்து வைப்பார்கள். மாடு ஆடுகளை மேடை போட்டு கொட்டகை அமைச்சு கட்டுவினம். இதெல்லாம் எல்லாம் வீட்டிலும் ஒரு நடைமுறையா இருந்திச்சு. சனம் ஒருவருக்கு ஒருவர் இதுக்கு இன்னதுதான் நடைமுறை என்பதை அறிந்து கொள்ளுவினம். ஊர் கிழவிங்க.. கூடிக் கதைச்சு பரிமாறிக் கொள்ளுவினம். இதில் திண்ணைப் பேச்சினால் நன்மைகள் விளைவதும் உண்டு. 

Edited by nedukkalapoovan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுளம்புக்காக வேப்பம் கொட்டைகளை கூட சேர்த்து வைப்பார்கள். இப்ப இதைச் சொல்லிக் கொடுக்க ஆக்களும் இல்லை.. நாட்டமும் இல்லை. இவற்றின் பாதிப்புக்களை சமூகத்தில் பல வகைகளில் காணலாம். அதில் இவையும் அடங்கும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கால் நடைகள்pன் இறப்பு வன்னியில்தான் இறப்பு அதிகாமாகி இருக்கிறது. அங்கே கால்நடைகளும் அதிகம். அத்துடன் திறந்த வெளிகளில் அவற்றை விடுவதும் ஒரு காரணம். எனைய இடங்கில் மழைக்காலங்களில் கொட்டில்களில் விடுவதால் மழையில் நனைவதும் அந்த ஈரத்தன்மை காரணமாக குளிரில் தவிப்பதும் தடுக்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கில் 1660 கால்நடைகள் உயிரிழப்பு - விவசாயத்துறை அமைச்சு

By VISHNU

12 DEC, 2022 | 07:55 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் கடந்த வாரம் நிலவிய கடும் குளிருடனான காலநிலை காரணமாக இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரை 1660 மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள கடைகள் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்தன.

கிழக்கு மாகாணத்தில் இறந்த கால்நடைகள் மற்றும் ஆடுகளை மனித நுகர்வுக்கு விற்க முயற்சிப்பதாக வதந்திகள் பரவின.

இதன்மூலம், இவ்வாறான முயற்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலசிய சீரற்ற காலநிலை காரணமாக இன்று நண்பகல் 12 மணி வரை மாடுகள் மற்றும் ஆடுகள் உட்பட மொத்தம் 1660 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/142935

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

வடக்கு, கிழக்கில் 1660 கால்நடைகள் உயிரிழப்பு - விவசாயத்துறை அமைச்சு

இயற்கை கூட….. தமிழ்ப் பகுதிகளைத்தான் வஞ்சிக்கின்றது.
சுனாமி, புயல், குளிர், மக்களின் வாழ்வாதரமான கால்நடைகள் இறப்பு என்று 
ஓரே தொடர்கதைதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கால்நடைகளின் அழிவைப் பார்க்க மனசை என்னவோ செய்கிறது......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவலையான விடயங்கள்.

இருந்தாலும் ஒரு கேள்வி
இலங்கையில் இப்போது என்ன வெப்ப நிலை? இணையத்தில் தேடிய போது இப்போது 23 - 24 பாகை என காட்டுகின்றதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

கவலையான விடயங்கள்.

இருந்தாலும் ஒரு கேள்வி
இலங்கையில் இப்போது என்ன வெப்ப நிலை? இணையத்தில் தேடிய போது இப்போது 23 - 24 பாகை என காட்டுகின்றதே?

போன 6ம் திகதி வவுனியாவில் 8 டிகிரிக்கு குறைந்துள்ளது. வன்னியின் ஏனைய பகுதியிலும் இப்படி ஆகீருக்கலாம்.

https://www.accuweather.com/en/lk/vavuniya/308927/december-weather/308927

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.