Jump to content

நிலவுக்கு பயணிக்கப் போகும் இந்திய நடிகர் – அடுத்த ஆண்டில் பயணத் திட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிலவுக்கு பயணிக்கப் போகும் இந்திய நடிகர் – அடுத்த ஆண்டில் பயணத் திட்டம்

தேவ் ஜோஷி

பட மூலாதாரம்,DEARMOON

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தொழில்முறை டிஜே, கொரியாவில் பிரபலமாகிவரும் ராப் பாடகர், விண்வெளி சார் யூட்யூபர் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்தில் நிலவுக்குப் பயணிக்கவுள்ளனர். தனியார் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்திற்காக ஜப்பானிய கோடீஸ்வரரால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொழிலதிபர் யுசாகு மெசாவா, கடந்த ஆண்டு படைப்பாளிகளுக்கான உலகளாவிய தேடலுக்குப் பிறகு வெள்ளிக்கிழமையன்று தனது குழுவில் இருக்கப்போகும் கலைஞர்கள் குறித்துத் தெரிவித்தார்.

அமெரிக்க டிஜே ஸ்டீவ் அயோகி, கொரிய நட்சத்திரமான டாப் என்றழைக்கப்படும் சோய் சூங்-ஹ்யூன் ஆகியோர் அதிலுள்ள முதன்மையான தேர்வுகளாக அறியப்படுகின்றனர்.

அடுத்த ஆண்டில் திட்டமிடப்பட்ட நிலவுக்குச் செல்லும் விமானம், 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு மனிதர்களின் முதல் சந்திர பயணமாக இருக்கலாம்.

 

முன்மொழியப்பட்டுள்ள இந்தப் பயணத்தில், ஒரு விண்கலம் சந்திரனை வட்டமிடுவதோடு, அதன் மேற்பரப்பிலிருந்து 200 கிமீ தொலைவு வரை நெருங்கிச் செல்லும். அந்தப் பயணம் தொடங்கியதிலிருந்து 8 நாட்களுக்குப் பிறகு அவர்கள் திரும்புவர்.

இருப்பினும், இந்தக் குழு பயணிக்க வேண்டிய ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டுக்கு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் இன்னும் அனுமதி வழங்கவில்லை.

இந்த விண்வெளி விமானம் பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு சுற்று பயணிப்பதற்குக் கூட இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. மே 2021இல் சோதனை ஏவுதலை முடித்த பிறகு, கடந்த 18 மாதங்களாக டெக்சாஸில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், யுசாகு மெசாவா தனது டியர் மூன் என்ற அழைக்கப்படும் குழுவில் இருப்பவர்களை அறிவிக்கும் காணொளியில் இந்தத் தாமதம் குறித்துக் குறிப்பிடவில்லை.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

அந்தக் காணொளியின் தொடக்கக் காட்சி, ஜப்பானிய தோட்டம் ஒன்றில் மெசாவா நிலவை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அதன்பிறகு குழுவின் முதல் உறுப்பினரான டிஜே ஆக்கியை அவருடைய நிகழ்ச்சி ஒன்றில் இருப்பதைப் போல் காட்டப்படுகிறது.

“இந்த வாய்ப்பை என்னால் நழுவவிட முடியாது. இதற்காக என் மனம் ஏங்குகிறது,” என்று பில்போர்ட்-சார்ட்டிங் கலைஞர் அந்தக் காணொளியில் கூறுகிறார்.

அடுத்ததாக அறிவிக்கப்பட்ட பயணி, தினசரி விண்வெளி வீரர் என்றறியப்படும் யூட்யூபர் டிம் டாட். விண்வெளி பயணம், வானியற்பியல் தொடர்பான கல்வி வீடியோக்களுக்காக 14 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்ட அவரது சொந்த வீடியோவில், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை நம்ப முடியவில்லை எனக் கூறுகிறார். ஸ்பேஸ் எக்ஸ் 2017ஆம் ஆண்டில் நிலவுக்கு ஒருவரை அனுப்புவதாக அறிவித்தது தான் “நான் உண்மையில் யூட்யூப்பில் காணொளிகளை உருவாக்கி வெளியிட வைத்தது,” என்றும் அவர் கூறுகிறார்.

ஸ்பேஸ் எக்ஸ்: நிலாவுக்கு பயணிக்கப் போகும் இந்திய நடிகர்

பட மூலாதாரம்,SPACEX

அறிவிக்கப்பட்ட டியர்மூன் குழுவின் மற்ற உறுப்பினர்கள்

  • தென் கொரியாவை சேர்ந்த கொரிய ராப் பாடகரும் பாய்பேண்ட் பிக் பேங் குழுவின் முன்னாள் முன்னணி பாடகர் டாப் என்றறியப்படும் சோய் சூங்-ஹ்யூன்
  • செக் குடியரசை சேர்ந்த நடனக் கலைஞரும் நடன அமைப்பாளருமான யெமி ஏ.டி.
  • அயர்லாந்தை சேர்ந்த ஒளிப்படக் கலைஞர் ரியானன் ஆடம்.
  • பிரிட்டனை சேர்ந்த காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் கரீம் இலியா.
  • அமெரிக்காவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் பிரெண்டன் ஹால்
  • இந்தியாவைச் சேர்ந்த நடிகர் தேவ் ஜோஷி
Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

“பூமியை விட்டு வெளியேறுவது, நிலவுக்குப் பயணிப்பது போன்றவற்றில் இருக்கும் பொறுப்புகளை ஒவ்வொருவரும் அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த அனுபவத்திலிருந்து அவர்கள் நிறைய பெறுவார்கள். அவர்கள் அதை பூமிக்கும் மனித குலத்திற்கும் பங்களிக்கப் பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன்,” என்று மெசாவா கூறினார்.

ஆன்லைன் ஃபேஷன் சில்லறை விற்பனையாளரான ஜோசோவில் தனது செல்வத்தை ஈட்டிய மெசாவா, வணிகரீதியிலான விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு ரஷ்ய ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 12 நாட்கள் பயணம் சென்றார்.

2018ஆம் ஆண்டில், ஸ்பேஸ் எக்ஸ் மூலம் நிலவைச் சுற்றிப் பறக்கும் முதல் தனியார் பயணியாக அவர் பெயரிடப்பட்டார். மேலும், விண்வெளி விமானத்திலுள்ள மற்ற எட்டு பயணிகளின் செலவை தானே ஸ்பான்சர் செய்வதாகக் கூறினார்.

மெசாவா தனது விண்வெளி பயண டிக்கெட்டுக்கு செலுத்த ஒப்புக்கொண்ட விலை வெளியிடப்படவில்லை. ஆனால், ஈலோன் மஸ்க்கின் கூற்றுப்படி அது “நிறைய பணம்.”

2020ஆம் ஆண்டில், தனது நிலவுப் பயணத்தில் தன்னுடன் சேர்ந்துகொள்ள புதிய காதலிக்கான தேடலையும் தொடங்கினார். பிறகு “கலவையான உணர்வுகள்” காரணமாக அந்த முயற்சியை நிறுத்தினார்.

https://www.bbc.com/tamil/articles/c84gx420l23o

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன், SpaceX இன் starship and super heavy booster இரண்டுமே static fire status இல்தான் உள்ளது. அதிலும் SH boosterஆனது 33 என்ஜின்( engine ) status fire முயற்சி இதுவரை நடைபேறவில்லை. இதுவரை 7 engine status fire மட்டிமே நடந்துள்ளது. இதுவரை நடந்த அத்தனை status fire test களில் Raptor 2 engine இன் மூலம் வரும் வெப்பம் stage 0 ( launch system) ஐ சேதப்படுத்தியுள்ளது. 
 

இப்போதுதான் SpaceX starship and boosterஐ ஸ்டாக்கிங்கை ( stacking) வெற்றிகரமாக முடித்துள்ளனர். எனி 33 engine static fireஐ முடித்துத்தான் முதலாவது விண்வெளிப்பறப்பு நடைபெறும். அந்த முயற்சியில் booster மற்றும் starship ஐ Hawaiian கடலில் இழுத்துவது தான் அவர்கள் திட்டம். அதன் பின் பல முயற்சியின்பின் தான் human space flight FAA சான்றிதழ் வழங்கப்படும். அடுத்தவருடம் human flight ஒரு கேள்விக்குறியே

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2023 at 05:07, ragaa said:

ஏராளன், SpaceX இன் starship and super heavy booster இரண்டுமே static fire status இல்தான் உள்ளது. அதிலும் SH boosterஆனது 33 என்ஜின்( engine ) status fire முயற்சி இதுவரை நடைபேறவில்லை. இதுவரை 7 engine status fire மட்டிமே நடந்துள்ளது. இதுவரை நடந்த அத்தனை status fire test களில் Raptor 2 engine இன் மூலம் வரும் வெப்பம் stage 0 ( launch system) ஐ சேதப்படுத்தியுள்ளது. 
 

இப்போதுதான் SpaceX starship and boosterஐ ஸ்டாக்கிங்கை ( stacking) வெற்றிகரமாக முடித்துள்ளனர். எனி 33 engine static fireஐ முடித்துத்தான் முதலாவது விண்வெளிப்பறப்பு நடைபெறும். அந்த முயற்சியில் booster மற்றும் starship ஐ Hawaiian கடலில் இழுத்துவது தான் அவர்கள் திட்டம். அதன் பின் பல முயற்சியின்பின் தான் human space flight FAA சான்றிதழ் வழங்கப்படும். அடுத்தவருடம் human flight ஒரு கேள்விக்குறியே

 

உங்கள் கருத்துகளிற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலவுக்கு…. விஞ்ஞானிகளை அனுப்பாமல்,  
இந்தியா அங்கும் நடிகரையா அனுப்புது.
விளங்கீடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

நிலவுக்கு…. விஞ்ஞானிகளை அனுப்பாமல்,  
இந்தியா அங்கும் நடிகரையா அனுப்புது.
விளங்கீடும்.

இந்தியா அல்ல அண்ணை, ஜப்பானிய தொழிலதிபர் இலவசமாக லொத்தரில் தெரிவு செய்தவர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இந்தியா அல்ல அண்ணை, ஜப்பானிய தொழிலதிபர் இலவசமாக லொத்தரில் தெரிவு செய்தவர்.

ஜப்பானிய தொழிலதிபர்  லொத்தரில் தெரிவு செய்தவரும், நடிகராக வந்தது அதிசயம்தான். 🙂

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.