Jump to content

புதுச்சேரியில் ரூ.1,000 கோடியை கடந்த மது விற்பனை - அரசுக்கு வருவாய், சர்ச்சையாகிறதா ‘போதை’ வியாபாரம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரியில் ரூ.1,000 கோடியை கடந்த மது விற்பனை - அரசுக்கு வருவாய், சர்ச்சையாகிறதா ‘போதை’ வியாபாரம்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,எஸ். நடராஜன், புதுச்சேரி
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 26 நிமிடங்களுக்கு முன்னர்
புதுச்சேரி போதை மது வியாபாரம்

புதுச்சேரியில் மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்திருக்கும் வருவாய் ரூ. 1000 கோடியை கடந்திருக்கிறது. அதே சமயம், மது விற்பனையால் அரசுக்கு வருவாய் கிடைத்தாலும் மறுபுறம் அதை அருந்தும் மக்களின் போதைப்பழக்கம் மற்றும் அதன் விற்பனையை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு சர்ச்சை ஆகியிருக்கிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மது விற்பனைக்குப் பெயர் பெற்ற பகுதி. தமிழ்நாட்டை ஒப்பிடும்போது புதுச்சேரியில் குறைந்த விலையில், நிறைய பிராண்டுகளில் மதுபான வகைகள் கிடைப்பதும், அழகிய கடற்கரை நகரமாக அது இருப்பதும் தான், மதுப்பிரியர்களை பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி ஈர்க்க முக்கிய காரணம்.

புதுவையின் அடையாளங்களில் மதுவுக்கு ஓர் இடம் உண்டு என்றாலும், கடந்த சில ஆண்டுகளாக மது விற்பனைத் துறையின் வருவாய் அதிகரித்து வருகிறது.

மதுபான விற்பனை மூலமாக அரசுக்குக் கிடைத்த வருவாய், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.600 கோடி முதல் 850 கோடி வரை என்ற அளவில் இருந்தது. கடந்த ஆண்டு அது  ரூபாய்  1,100  கோடியாக  உயர்ந்துள்ளது.

 

இந்த ஆண்டில் மது வியாபாரம் மூலம் கிடைக்கும் வருவாய் ரூபாய் 1,500 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்கிறார் புதுச்சேரி கலால் துறை துணை ஆணையர். 

  தென்னிந்தியாவின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களின் பட்டியலில் புதுச்சேரியும் உள்ளது.    ஆன்மிக சுற்றுலா, உல்லாச சுற்றுலா என்ற இரண்டு வகைகளிலும் புதுச்சேரிக்கு ஓர் ஈர்ப்பு உள்ளது. சுற்றுலா வளர்ச்சியின் தாக்கத்தை தவிர்க்க முடியாத அங்கமாக உள்ளது மது. 

ஒரு காலத்தில் புதுச்சேரி மாநில வருவாய்க்கும்,  புதுச்சேரி வாழ் மக்களின் முன்னேற்றத்திற்கும் பஞ்சாலைகள், கைத்தறி  நெசவு, சர்க்கரை ஆலைகள்,  விவசாயம் ஆகியவை முக்கிய பங்காற்றின. 

ஆனால் தற்போது வணிகம், சுற்றுலா மற்றும் மது விற்பனை மூலம் கிடைக்கும் கலால் வரி  ஆகியவை புதுச்சேரி அரசின் வருவாயின் மையமாக உள்ளன.

எத்தனை மதுபான கடைகள் புதிதாக வந்துள்ளது? 

தமிழ்நாடு
 
படக்குறிப்பு,

சுதாகர், துணை ஆணையர்

புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளில் எவ்வளவு மதுபான கடைகள் அதிகரித்துள்ளன என்பது குறித்து அறியக் கலால் துறையின் துணை ஆணையர் சுதாகரிடம் பிபிசி விளக்கம் கேட்டது.   அது குறித்து விளக்கிய அவர், "புதுச்சேரியைப்  பொருத்தவரை  மதுபான கடைகளுக்கு உரிமம் புதிதாக வழங்குவதில்லை. மொத்த விற்பனை மற்றும்  சில்லறை விற்பனை என இரண்டு  வகையான  மதுபான கடைகளுக்கும் 1989இல் இருந்து உரிமம் வழங்குவதில்லை. ஏற்கெனவே உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லறை மதுபான விற்பனை கடைகள்  இடத்தை மட்டுமே மாற்றியுள்ளன. 

தற்போது சுற்றுலாவை மையப்படுத்தி இயங்கக் கூடிய உணவும், மதுபானமும் வழங்கும்  ரெஸ்ட்ரோ பார்களுக்கும்  உரிமங்கள் வழங்கியுள்ளோம்.    குறிப்பாக, புதுச்சேரி சுற்றுலா பகுதி என்பதால் இங்கே வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி, வெளிநாட்டவர்களும் அதிகம் வருகை தருகின்றனர். அதிலும் புதுச்சேரிக்கு வருவாய் தருவதில் சுற்றுலா முக்கிய பங்காற்றுகிறது.  அதன் காரணமாக சுற்றுலாவை  மேம்படுத்த,  சுற்றுலாவை மையப்படுத்தி இயங்கக் கூடிய  மதுபான வசதிகளுடன் இயங்கக்கூடிய  உணவகங்களுக்கு மட்டுமே தற்போது உரிமம் வழங்கப்படுகிறது," என்றார் அவர்.

மதுக்கடைகள் திறக்க விதிகள் என்ன?

மது பாட்டில்கள்

"மொத்தம் மற்றும் சில்லறையாக மதுபானம் விற்பனை செய்யக்கூடிய கடைகள் நகரப் பகுதிகள், வளர்ச்சியடைந்த பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலிருந்து 50 மீட்டர் தொலைவில் அமைத்திருக்க வேண்டும். கிராமப் பகுதிகளில் இத்தகைய இடங்களில் இருந்து 100 மீட்டர் தொலைவில்  அமைத்திருக்க  வேண்டும்.

இந்த நிபந்தனைகள் அடிப்படையில் மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் உணவகம் மற்றும் மதுபான வசதிகளுடன் இயங்கக்கூடிய ரெஸ்டோ பார்களுக்கு  சில்லறையை  மதுபானங்கள்  விற்பனை  செய்யக்கூடாது  என்ற  நிபந்தனை  தவிர  மேற்கூறிய  நிபந்தனைகள்  பொருந்தாது,"  என்றார்  துணை ஆணையர்.   சுற்றுலாவை மையப்படுத்திய ரெஸ்டோ பார்கள் அரசின் வழிகாட்டுதல் படியே இயங்க அனுமதிக்கப்படுகின்றன. புதுச்சேரி, கோவா ஆகிய இடங்களுக்கு சுற்றுலாவை பொருத்தவரை  நிறைய ஒற்றுமைகள்  உள்ளன. அவ்வாறு நினைத்துத்தான் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளும் வருகை தருவதாகக் கூறுகிறார். 

ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி 

மதுபாட்டில்கள்

மதுபான கடைகள் இடம்பெயரும் போது கல்வி நிலையம் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலிருந்து கொடுக்கப்பட்ட இடைவெளியில் அமைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்த பின்னரே அனுமதியும் வழங்குகிறோம். 

இதில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இடையூறு இருப்பதாகக் கூறினால், அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வோம். அது உறுதியானால், அதனை கலால் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் 

முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவருடைய பரிந்துரைக்கு ஏற்ப வேறு இடத்திற்கு மாற்றுவதற்குப் பரிசீலனை செய்வதாக கலால் துறை துணை ஆணையர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் எத்தனை மதுபான கடைகள் உள்ளன?

"புதுச்சேரியில் 39 மொத்த விற்பனை மதுபான கடைகள், சுமார் 150  சில்லறை விற்பனை மதுபான கடைகள், 170 ரெஸ்டோ பார்கள் ஆகியவற்றுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.   புதுவை ஆட்சிக்கு உட்பட்ட காரைக்காலில், 12 மொத்த விற்பனை  மற்றும்  36 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன.  மஹேவில், 27 மொத்த விற்பனை மற்றும் 33 சில்லறை விற்பனை கடைகளும் உள்ளன. ஏனாமில், 7 மொத்த விற்பனை மற்றும் 7 சில்லறை விற்பனை கடைகள் உள்ளன," என்றார் அவர்.

"ரூபாய் 1500 கோடி வருவாய் இலக்கு"

"புதுச்சேரியில் 2019ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய 5 ஆண்டுகள் வரை சராசரியாக மதுபான விற்பனை மூலமாக வரக்கூடிய வருவாயானது ரூபாய் 600-லிருந்து  850 கோடி வரை  இருந்தது.

 பின்னர் கொரோனா காலத்தில் ரூபாய் 750 கோடியாக குறைந்தது. தொடர்ந்து மதுபான விற்பனையை ஒழுங்குமுறை செய்து, விலையை முறையாக நெறிமுறைப்படுத்தினோம். 

இதையடுத்து கடந்த ஆண்டு வருவாய் ரூபாய் 1,100 கோடியை எட்டியது. இந்த ஆண்டு ரூபாய் 1400லிருந்து 1500 கோடி ரூபாய் வரை இலக்கு வைத்துள்ளோம்," என்று கூறினார் சுதாகர்.    இதற்கிடையே மொத்த மற்றும் சில்லறை விற்பனை மதுபான கடைகள் இடம்பெயரும் போது அதனால் மக்களுக்கு இடையூறுகள் ஏற்படாத வகையில் அரசு  நடவடிக்கைகள் மேற்கொள்வதாகக் கலால் துறை துணை ஆணையர் சுதாகர் தெரிவித்துள்ளார்.   புதுச்சேரி ஒரு மலிவான சுற்றுலா நகரம். சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வருவதற்குக் கரணம் தங்கும் விடுதிகள், உணவுகள் மற்றும் மதுபானங்கள் அனைத்தும் மலிவான விலையில் கிடைக்கின்றன. மேலும் தமிழ்நாட்டில் சுமார் 250 வகையான மதுபானங்கள் கிடைக்கின்றன. ஆனால் புதுச்சேரியில் 1000-கும் மேற்பட்ட மதுபான வகைகள் கிடைக்கின்றன.  இவையும் புதுவைக்கு மதுபானத்தை நாடி பயணிகள் வருவதற்கு காரணமாகின்றன.

"மலிவான விலையில் மதுபானம்"  

மது பானம்

மலிவான விலையில் மதுபானம், உணவு, தங்கும் விடுதிகள் கிடைப்பதால் சுற்றுலா பயணத்துக்குப் புதுச்சேரியைத் தேர்வு செய்வதாக சுற்றுலா பயணி விஷ்ணு ஆதித்யா கூறுகிறார்.

இதுகுறித்து பேசிய அவர், "புதுச்சேரியில் சுற்றுலாவுக்கான வாய்ப்புகள் இருப்பது மட்டுமின்றி இங்கே மலிவான மதுபானங்கள் கிடைக்கின்றன. பிற பகுதிகளைக் காட்டிலும் நிறைய விதவிதமான மதுபானங்கள் மற்ற பகுதிகளைக் காட்டிலும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

புதுச்சேரியை தென் இந்தியாவின் கோவா போலதான் பார்க்கிறோம். பிற சுற்றுலாத் தளங்களை காட்டிலும் புதுச்சேரியில் செலவு குறைவாகவே உள்ளது. குறிப்பாக ஹோட்டலில் தங்குவது, வெளியே சென்று உணவு சாப்பிடுவது, மது அருந்துவது ஆகிய அனைத்துக்குமான செலவு இங்கே குறைவு.

பிரெஞ்சு டவுன் பகுதிகளுக்குச் சென்று உணவு மற்றும் மது அருந்த விரும்பினாலும் அதிக பணம் செலவழிக்காமல் அதை மிதமான விலையில் பெற முடிகிறது. இதனால்தான் விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் புதுச்சேரி வர விரும்புகிறோம்," என்று கூறுகிறார் விஷ்ணு.

கலாசாரம் முற்றிலுமாக சீரழிந்துவிட்டது

புதுச்சேரி போதை மது வியாபாரம்
 
படக்குறிப்பு,

எஸ். காயத்ரி

ஒருபுறம் புதுவை அரசின் வருவாய்க்கு சுற்றுலாத்துறை பெரிய அளவில் பங்களித்தாலும், பிற மாநிலத்தவர்களை ஈர்க்கும் ஒரே விஷயமாக மதுபானம் உள்ளதாக தமது கவலையைப் பகிர்ந்து கொள்கிறார் தனியார் தகவல் தொழில்நுட்ப துறையில் மனிதவள மேலாளரும், 'பெண்கள் சமூகத்தை மேம்படுத்துதல்' அமைப்பின் நிறுவனருமான எஸ்.காயத்ரி பிபிசியிடம் பகிர்ந்துள்ளார். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அதிகப்படியான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரிக்கு வருவதற்குக் காரணம் இங்குள்ள இயற்கை வளம் அல்ல. அவ்வாறு அவர்கள் ரசிக்க விரும்பினால் அதற்கு நிறைய இடங்கள் உள்ளன.

ஆனால் சுற்றுலா பயணிகள் புதுச்சேரி மற்றும் கோவாவை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றனர். இதற்குக் காரணம் இங்கு மதுபானங்கள் மலிவான விலைக்குக் கிடைப்பதுதான். மற்றொன்று இங்கே எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.

இங்கே தான் அனைத்து விதமான மது அருந்தும் இடங்கள் உள்ளன. அதற்கேற்ப மகிழ்ச்சி தரக்கூடிய இடங்களும் உள்ளன. முக்கியமாகப் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மட்டுமே வருகின்றனர். அப்படி வரும்போது அவர்கள் இங்குள்ளவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி புதுச்சேரி நகரத்தில் கலாச்சாரத்தைக் கெடுக்கின்றனர்," என்கிறார். புதுச்சேரியில் பிறந்த வளர்ந்த தனக்கு தற்போது 45 வயதாகிறது என்று கூறும் காயத்ரி, ஆனால் தனது இளமையில் தாம் மகிழ்ந்து அனுபவித்த புதுவையைப் போல இப்போது இல்லை என்கிறார்.

https://www.bbc.com/tamil/articles/c72ndzew8y7o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.