Jump to content

‘சிங்கிள் பெண்களாக’ இருப்பதில் பெருமை கொள்ளும் இந்திய பெண்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘சிங்கிள் பெண்களாக’ இருப்பதில் பெருமை கொள்ளும் இந்திய பெண்கள்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,கீதா பாண்டே
  • பதவி,பிபிசி நியூஸ், டெல்லி
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
சிங்கிள் பெண்கள்
 
படக்குறிப்பு,

ஸ்ரீமோயி பியூ குண்டு

சிறந்த மனைவி மற்றும் தாய்மார்களாக இருக்கும் விதத்திலேயே இந்தியப் பெண்கள் பாரம்பர்ய முறைப்படி வளர்க்கப்படுகின்றனர். திருமணம் என்பது மட்டுமே அவர்களுக்கான மிக முக்கிய வாழ்நாள் இலக்காக கருதப்படுகிறது. 

 

ஆனால், இப்போது அதிகளவிலான பெண்கள் சுதந்திரமான தனிமையான பாதையை வகுத்து சிங்கிளாக (Single) இருக்க விரும்புகின்றனர். 

 

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை தெற்கு டெல்லியில் உள்ள கரீபியன் லவுஞ்சில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற மதிய உணவு கூடுகையில் கலந்துகொண்டேன். அரட்டைகளும் சிரிப்பு சத்தத்தாலும் அந்த அறை நிரம்பியிருந்தது. 

 

அப்பென்கள் அனைவரும் ‘ஸ்டேட்டஸ் சிங்கிள்’ (Status Single) என்கிற முகநூல் குழுவைச் சேர்ந்தவர்கள். இக்குழுவில் உள்ளவர்கள், இந்திய நகரங்களைச் சேர்ந்த சிங்கிள் பெண்களாவர். 

 

“விதவைகள், விவாகரத்தானவர்கள் அல்லது திருமணமாகாதவர்கள் என நம்மை மற்றவர்கள் அழைப்பதை நிறுத்துவோம்,” என, எழுத்தாளரும் அக்குழுவை உருவாக்கியவருமான ஸ்ரீமோயி பியூ குண்டு அக்குழுவை நோக்கி கூறினார். “நம்மை சிங்கிள் பெண்கள் என பெருமையாக அழைப்போம்.” என்கிறார் அவர். 

 

அப்போது, அங்கு குழுமியிருந்த பெண்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். 

 

“திருமணம் குறித்தே எப்போதும் சிந்திக்கப்படும்” ஒரு நாட்டில் சிங்கிளாக இருப்பது குறித்து பல தவறான கற்பிதங்கள் நிலவுகின்றன. 

 

இந்திய கிராமங்களில் சிங்கிளாக இருக்கும் பெண்கள் அவர்களின் குடும்பத்தினரால் சுமைகளாக கருதப்படுகின்றனர். கணவனை இழந்த ஆயிரக்கணக்கான பெண்கள் பிருந்தாவனம் மற்றும் வாரணாசி போன்ற புனித நகரங்களுக்கு விரட்டப்பட்டுள்ளனர். 

 

ஸ்ரீமோயி பியூ குண்டுவும் டெல்லி ‘பப்’பில் நான் சந்தித்த பெண்களும் வித்தியாசமானவர்கள். பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுள் ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்குரைஞர்கள், தொழில்முனைவோர், செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். அவர்களுள் சிலர் திருமணமாகி பிரிந்தவர்கள், விவாகரத்தானவர்கள் அல்லது கணவரை இழந்தவர்கள். மற்றவர்கள் திருமணமே செய்து கொள்ளாதவர்கள். 

 

சிங்கிள் பெண்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிங்கிள் பெண்கள் குறித்த கற்பிதங்கள்

நகர்ப்புறங்களைச் சேர்ந்த பணக்கார சிங்கிள் பெண்கள், வங்கிகள், நகை வடிவமைப்பாளர்கள், நுகர்வு நிறுவனங்கள் மற்றும் டிராவல் ஏஜென்சிகளால் ஈர்க்கப்படுகின்றனர்.

 

மேலும், பிரபலமான கலாசார கூறுகளிலும் சிங்கிள் பெண்கள் பிரதிநிதித்துவம் பெறுகின்றனர். சிங்கிள் பெண்கள் முதன்மை கதாபாத்திரமாக தோன்றிய குயின், பிகு போன்ற பாலிவுட் திரைப்படங்களும், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ் (Four More Shots Please) உள்ளிட்ட வெப் சீரீஸ்களும் வணிக ரீதியாக வெற்றியடைந்துள்ளன.  

 

திருமணமாகாத பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்வதற்கு சம உரிமை இருக்கிறது என, உச்ச நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு, சிங்கிளாக இருக்கும் பெண்களின் உரிமைகளை உச்ச நீதிமன்றம் அங்கீகரிக்கும் வகையில் இருப்பதாக பாராட்டப்பட்டது. 

 

இத்தகைய வரவேற்கத்தக்க மாற்றங்கள் இருந்தாலும் சிங்கிளாக இருப்பவர்களை சமூகம் அணுகுவது இன்னும் இறுக்கமாகவே இருக்கிறது. மேலும், ஸ்ரீமோயி சொல்பது போல வசதி படைத்த பெண்களுக்கும் சிங்கிளாக இருப்பது எளிதாக இருப்பதில்லை, மேலும் அவர்கள் எந்நேரமும் மற்றவர்களால் மதிப்பிடப்படுகின்றனர். 

 

“ஓர் சிங்கிள் பெண்ணாக நான் பாகுபாட்டையும் அவமரியாதையையும் சந்தித்துள்ளேன். மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் நான் வாடகை வீட்டை தேடிய போது, அங்கிருந்த ஹவுசிங் சொசைட்டியை சேர்ந்தவர்கள் நீங்கள் மது அருந்துவீர்களா, பாலியல் உறவில் ஈடுபாடு கொண்டவரா? ஆகிய கேள்விகளை கேட்டனர்,” என்கிறார், ஸ்ரீமோயி. 

 

“மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் அண்டை வீட்டார் போல” நடந்துகொண்ட மகப்பேறு மருத்துவர்களை ஸ்ரீமோயி சந்தித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய சார்பாக அவரின் தாய் திருமண மேட்ரிமோனியல் இணையதளத்தில் விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார். இதன்மூலமாக தான் சந்தித்த நபர் ஒருவர் தன்னை சந்தித்த 15 நிமிடங்களிலேயே “நான் கன்னித்தன்மையுடன் உள்ளேனா?” என கேட்டதாக கூறுகிறார் அவர். 

 

“சிங்கிளாக இருக்கும் பெண்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் கேள்வி இது,” என்கிறார் அவர். 

 

 

திருமணத்தை வெறுக்கும் பெண்கள்

ஆனால், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 7.1 கோடி பெண்கள் சிங்கிளாக இருக்கும் ஒரு நாட்டில் அவர்களை அவமதிப்பது பொருத்தமாக இல்லை. இந்த 7.1 கோடி என்பது பிரிட்டன் அல்லது பிரான்ஸின் ஒட்டுமொத்த மக்கள்தொகையை விட அதிகம். 

 

இந்த எண்ணிக்கை கடந்த 2001ல் 5.12 கோடியாக இருந்ததிலிருந்து தற்போது 39 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு கோவிட் பெருந்தொற்றால் தாமதமாகியுள்ளது. ஆனால், “இப்போது வரை, “எங்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்திருக்கும்” என்கிறார் ஸ்ரீமோயி. 

 

இந்தியாவில் திருமண வயது அதிகரித்திருப்பது இந்த எண்ணிக்கை அதிகமானதற்கு ஓர் காரணம். அதாவது, சிங்கிளாக இருக்கும் பெரும்பாலான பெண்கள் தற்போது பதின்பருவத்தின் இறுதியிலோ அல்லது 20களின் தொடக்கத்திலோ இருப்பார்கள். மேலும், கணவரை இழந்த பெரும்பாலான பெண்களும் இதில் அடங்குவர். ஆண்களை விட பெண்கள் அதிகமான வாழ்நாளை கொண்டிருப்பதை இதற்கு காரணமாக சொல்லலாம். 

 

ஆனால், “தற்போது சூழ்நிலைகளால் மட்டுமல்லாமல் தாங்களாகவே விரும்பி பல பெண்கள் சிங்கிளாக இருப்பதை” தான் காண்பதாக ஸ்ரீமோயி கூறுகிறார். 

“இதுதான் சிங்கிளாக இருப்பதில் நிகழ்ந்துள்ள தற்போதைய மாற்றம்” என்றும் அதனை அங்கீகரிப்பது முக்கியம் என்றும் அவர் கூறுகிறார்.

 

“தாங்களாகவே விரும்பி சிங்கிளாக இருக்கும் பல பெண்களை நான் பார்க்கிறேன். அவர்கள் திருமணம் எனும் கருத்தியலையே புறக்கணிக்கின்றனர். ஏனெனில் திருமணம் என்பது பெண்களுக்கு அநீதி இழைக்கும் அவர்களை ஒடுக்கும் ஆணாதிக்க நிறுவனம்” என்றார். 

சிங்கிள் பெண்கள்

பட மூலாதாரம்,SREEMOYEE PIU KUNDU

சிங்கிளாக இருப்பதென்பதை, 29 வயதில் கணவரை இழந்த தன்னுடைய தாய் சந்தித்த பாகுபாட்டின் வாயிலாகவே அவர் அணுகுகிறார். 

 

“ஆண் துணை இல்லாத ஒரு பெண் எவ்வாறு இந்த ஆணாதிக்க, பெண் வெறுப்பு அமைப்பில் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டார் என்பதை பார்த்தே நான் வளர்ந்தேன். வளைகாப்பு, உறவினரின் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் என் அம்மா புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்.

மணப்பெண்ணிடம் இருந்து விலகி நிற்குமாறு அவரிடம் கூறியுள்ளனர். ஏனெனில், கணவரை இழந்த பெண்ணின் நிழல் அபசகுணமாக கருதப்படுகிறது.” என்கிறார் ஸ்ரீமோயி. 

 

44வது வயதில் அவருடைய தாய் காதலித்து மறுதிருமணம் செய்துகொண்டபோதும் “அவர் சமூகத்தின் கோபத்திற்கு ஆளானார்” - “வருத்தம், அழுகை, பாலியல் இன்பம் அற்ற, ஆசைகளற்ற - இவை அனைத்தும் இல்லாத பெண்ணாக ஓர் விதவைப் பெண் எப்படி இருக்க முடியும்? எப்படி அவர் மீண்டும் ஒரு துணையை ஏற்றுக்கொள்ள முடியும்?” என கேட்டனர். 

 

 

"நேர்மறையான மாற்றம்"

தன் தாய் சந்தித்த அவமானங்கள், தன் மீது பெரும் தாக்கத்தை செலுத்தியதாக அவர் கூறுகிறார். 

 

“திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற மிகுந்த ஆசையுடன் நான் வளர்ந்தேன். கதைகளில் வரக்கூடியது போன்ற திருமணம் ஏற்றுக்கொள்ளுதலை வழங்கும் என்றும் இருட்டை விலக்கும் என்றும் நம்பினேன்,” என்கிறார் அவர். 

 

ஆனால், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்துவதாக இருந்த இரண்டு தோல்வியுற்ற உறவு மற்றும் 27 வயதில் முடிவடைந்த திருமண உறவு ஆகியவற்றால், ஆண்களுக்கு அடிபணியக்கூடிய வழக்கமான திருமண முறை தனக்கானது அல்ல என்பதை அவர் உணர்ந்தார். 

 

கலாசாரம், மதம் அல்லது சமூகம் ஆகியவற்றால் அல்லாமல், “மரியாதை, அங்கீகாரம்” ஆகியவற்றால் வருவதே தனக்கு பொருத்தமான உறவு முறை என்கிறார் அவர். 

 

ஞாயிற்றுக்கிழமை நான் சந்தித்த பெரும்பாலான சிங்கிள் பெண்கள் இதனை ஒப்புக்கொண்டனர்.

 

ஆணாதிக்க சமூகமாக நீடிக்கும் இந்தியாவில் 90 சதவீத திருமணங்கள் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இந்த திருமணங்களில் தான் யாரை திருமணம் செய்கிறோம் என்றோ அல்லது தங்களுக்கு திருமணம் செய்வதில் விருப்பம் இருக்கிறதா என்றோ பெண்களிடம் கேட்கப்படுவதில்லை. 

 

டெல்லிக்கு அருகே உள்ள குர்கோவனை சேர்ந்த 44 வயதான வாழ்வியல் பயிற்சியாளராக உள்ள பாவனா தாஹியா, இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. பலவிஷயங்கள் மாறி வருவதாகவும் சிங்கிளாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது கொண்டாட்டத்திற்கான ஓர் காரணம் என்றும் கூறுகிறார் அவர். 

 

“நாங்கள்  கடலின் சிறுதுளியாக இருக்கலாம், ஆனால், இப்போது சிறுதுளியாவது இருக்கிறது,” என்கிறார் அவர். 

 

“சிங்கிள் பெண்களாக இருப்பதற்கான உதாரணங்கள் அதிகமாக உள்ளன, அவை சிறந்ததாக உள்ளன. வழக்கமாக, கணவரின் வேலை, அவருடைய திட்டங்கள், குழந்தைகளின் பள்ளி உள்ளிட்டவை குறித்தே உரையாடல்கள் இருக்கும். பெண்களின் விருப்பங்கள் மீது கவனம் செலுத்தப்படவில்லை. ஆனால், இப்போது இந்த உரையாடல்கள் மாறிவருகின்றன.

 

“நாங்கள் இப்போது நேர்மறையான மாற்றத்தை உருவாக்கி வருகிறோம்.”

https://www.bbc.com/tamil/articles/cqv47n0092vo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

சிங்கிள் பெண்களாக’ இருப்பதில் பெருமை கொள்ளும் இந்திய பெண்கள்

வருங்கால சந்ததியை பார்த்து ஐயோ பாவம் என்று சொல்வதை தவிர வேறொன்றுமில்லை.

இனிவரும் காலங்களில் எல்லாம் முரட்டு சிங்கிள்ஸ் தான் 😁

கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.😁

கஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி.   🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

வருங்கால சந்ததியை பார்த்து ஐயோ பாவம் என்று சொல்வதை தவிர வேறொன்றுமில்லை.

இனிவரும் காலங்களில் எல்லாம் முரட்டு சிங்கிள்ஸ் தான் 😁

அது கொஞ்சம் நல்லது போலவும் இருக்கு! ஏறிக் கொண்டு போற சனத்தொகையும் குறையும் தானே அண்ணை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

அது கொஞ்சம் நல்லது போலவும் இருக்கு! ஏறிக் கொண்டு போற சனத்தொகையும் குறையும் தானே அண்ணை?

அதுக்காகத்தான் ஓரினச்சேர்க்கையை பல அரசுகள் ஆதரிப்பதாகவும் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அதுக்காகத்தான் ஓரினச்சேர்க்கையை பல அரசுகள் ஆதரிப்பதாகவும் சொல்கிறார்கள்.

ஒருபாலின சேர்க்கையாளரான பிரிட்னி கிறைனர், தனது சக கூடைப்பந்தாட்ட வீராங்கனையான குளோறி ஜோன்சனை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். .வி.பி. முறையில் குளோறி ஜோன்சன் இரட்டைக் குழந்தைகளை பிரசிவித்தார். 2016 ஆம் ஆண்டு குளோறியும் பிரிட்னியும் விவாகரத்து செய்தனர். குழந்தைகளுக்காக குளோறிக்கு நிதியுதவி வழங்குமாறு பிரிட்னிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

வருங்கால சந்ததியை பார்த்து ஐயோ பாவம் என்று சொல்வதை தவிர வேறொன்றுமில்லை.

இனிவரும் காலங்களில் எல்லாம் முரட்டு சிங்கிள்ஸ் தான் 😁

கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.😁

கஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி.   🤪

கடையில பொம்மை  பொரு ட் கள் வந்ததன் விளைவாக கூட இருக்கலாம்  இதுகள் சிங்கிளாகவே சிங்கி அடிக்க 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கடையில பொம்மை  பொரு ட் கள் வந்ததன் விளைவாக கூட இருக்கலாம்  இதுகள் சிங்கிளாகவே சிங்கி அடிக்க 

 

இரசாயனம் கலந்த உணவுகளால் ஹோர்மோன்  திருவிளையாடல்கள். மற்றும் திறந்த வெளி பாலியல் கலாச்சாரம் 😂

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.