Jump to content

"வெற்றிக்கனி"


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"வெற்றிக்கனி"

எட்டுத்திக்கும் முட்டட்டுமே பகை!!

உடைத்தே எறிவோம் எம் கைவிலங்கை!

அடிமையாய் வாழ்வது ஈனம்! வீரம்

தமிழரின் மானம்!.

எட்டடா! எட்டு வெற்றிக்கனி!- பகை

ஓட்டி வெல்வோம்! நாங்கள் புலி!

கட்டுண்டு கிடப்பதோ இன்னும்?!

எழுந்துவிட்டால் எம்கொடி விண்ணில்!

ஈழம் எங்கள் உடமை தமிழா

காப்பது நம் கடமை! உரிமை

மறுக்கும் சிங்களத்தின் வேரை

அறுத்தே நாட்டு உந்தன் பேரை!

'விதி வசம் என்பதை விட்டு! தடை

உடைத்தே புறப்படு இது நம்நாடு!

எரிமலையாய் இருடா! தமிழா!

இருட்டினை விரட்டத் தீயாய் எழடா!.

Link to comment
Share on other sites

"எட்டடா! எட்டு வெற்றிக்கனி!- பகை

ஓட்டி வெல்வோம்! நாங்கள் புலி!

கட்டுண்டு கிடப்பதோ இன்னும்?!

எழுந்துவிட்டால் எம்கொடி விண்ணில்!"__________

அம்மாடி தாயே இதை நாம் கட்டுண்டு கிடப்பதாக கருதக்கூடாது, அதாவது எதிரிக்கு கொடுக்கப்பட்ட இறுதியான நெடிய காலக்கெடு என்றுதான் இதை சொல்ல முடியும்.

இதை அவன் சரியான முறையில் தனக்கு சாதகமான முறையில் பயன்படுத்த தவறிக்கொண்டிருக்கின்றான் என்பது தான் உண்மை.

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் தெரிந்தோ தெரியாமலோ தமிழினம் பிரிந்து செல்லக்கூடிய வழியை அமைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதுதான் உண்மை.

Link to comment
Share on other sites

ஒளவை..அக்கா

நீங்கள் மூதாட்டி இப்படி முட்டி மோதி நிற்கலாமா..

உங்கள் வீரம் எண்ணி மயிர்கூச்செரிகிறது... :P

பாட்டியை எண்ணி பயமாகவும் இருக்கிறது

Link to comment
Share on other sites

'விதி வசம் என்பதை விட்டு! தடை

உடைத்தே புறப்படு இது நம்நாடு!

எரிமலையாய் இருடா! தமிழா!

இருட்டினை விரட்டத் தீயாய் எழடா!.

ஒவ்வொரு ஈழ தமிழருதும் வரலாற்று கடமை. யாரும் பாராமுகமாக இருக்கமுடியாது.பார்வையாளராக இருப்பதை விட்டு பங்காளியாக மாற வேண்டும்.

Link to comment
Share on other sites

'விதி வசம் என்பதை விட்டு! தடை

உடைத்தே புறப்படு இது நம்நாடு!

எரிமலையாய் இருடா! தமிழா!

இருட்டினை விரட்டத் தீயாய் எழடா!.

தமிழ்தங்கை அக்காவின் வெற்றிகனி கவிதை மிகவும் நன்றாக இருகிறது அதிலும் இந்த வரிகள் மிகவும் நன்றாக இருகிறது வாழ்த்துகள் அக்கா.............. :icon_idea:

Link to comment
Share on other sites

விகடகவி சொன்ன மாதிரி ஒளவையார் மாதிரி தமிழ்தங்கை எழுதுறீங்கள்..

ஒரு பக்கம் காதல் கவிதைகள் எழுதிறீங்கள். மற்றப்பக்கம் இப்படியும் எழுதுறீங்கள். நீங்கள் உண்மையில் சிறந்த ஒரு கவிஞர் தான்!

'விதி வசம் என்பதை விட்டு! தடை

உடைத்தே புறப்படு இது நம்நாடு!

எரிமலையாய் இருடா! தமிழா!

இருட்டினை விரட்டத் தீயாய் எழடா!.

நீங்கள் கவிதை எழுத யாரிடமாவது பழகினீங்களா? இல்லாட்டி கைப்பழக்கமா? பாட்டுக்களும் பாடுவீங்களோ? உங்கள் பல கவிதைகள் பாட்டு ஸ்டைலில் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
"எட்டடா! எட்டு வெற்றிக்கனி!- பகைஓட்டி வெல்வோம்! நாங்கள் புலி!கட்டுண்டு கிடப்பதோ இன்னும்?!எழுந்துவிட்டால் எம்கொடி விண்ணில்!"__________அம்மாடி தாயே இதை நாம் கட்டுண்டு கிடப்பதாக கருதக்கூடாது, அதாவது எதிரிக்கு கொடுக்கப்பட்ட இறுதியான நெடிய காலக்கெடு என்றுதான் இதை சொல்ல முடியும்.இதை அவன் சரியான முறையில் தனக்கு சாதகமான முறையில் பயன்படுத்த தவறிக்கொண்டிருக்கின்றான் என்பது தான் உண்மை.<<<வல்வை அண்ணா, கட்டுண்டு கிடப்பது மக்கள்!! தமிழ் மக்கள்! நாம் விழித்தெழ வேண்டும் என்பதே இன்றைய தலைமையின் விருப்பம்!!...இன்னும் தெளிவாக சொல்லப்போனால் தெரிந்தோ தெரியாமலோ தமிழினம் பிரிந்து செல்லக்கூடிய வழியை அமைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதுதான் உண்மை.
<<எம் தலைவனின் ஆணைக்காக காத்திருக்கின்றார்கள் களத்தில்!! அது மட்டுமே நிதர்சனம்.
ஒளவை..அக்காநீங்கள் மூதாட்டி இப்படி முட்டி மோதி நிற்கலாமா..<<இது என்ன கேள்வி தம்பி கவி?!! நாங்கள் எல்லாம் ஔவையாரின் தோல் போர்த்த பாரதிகள் என்று அறிய மாட்டீர்களோ?! ஔவை தோற்றத்தில் மட்டுமே மூதாட்டி! பிள்ளையாரிடம் வரம் வாங்கி அல்லவா அத்தோற்றத்தைப் பெற்றுக்கொண்டாள் :icon_idea:! அறிவில் முதிர்ச்சி என்பதால் ஔவை ஆனாள் ! அனைவருக்கும்!! :huh:உங்கள் வீரம் எண்ணி மயிர்கூச்செரிகிறது... :P பாட்டியை எண்ணி பயமாகவும் இருக்கிறது
<<ச்ச்ச்சோ!! பயமா? அது அகராதியிலேயே இருக்க கூடாத வார்த்தை ஆயிற்றே!அச்சம் தவிர்!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடகவி சொன்ன மாதிரி ஒளவையார் மாதிரி தமிழ்தங்கை எழுதுறீங்கள்..

ஒரு பக்கம் காதல் கவிதைகள் எழுதிறீங்கள். மற்றப்பக்கம் இப்படியும் எழுதுறீங்கள். நீங்கள் உண்மையில் சிறந்த ஒரு கவிஞர் தான்!<<<

முதலெல்லாம் காதல் கவிதை எழுதியதில்லை நம்பிக்கைக் கவிதைகளும், எம் தேசியத்துக்கான கவிதைகளும், சமூக அவலங்களும்,இயற்கையைப்பற்றிய

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.