Jump to content

தீர்வுக்கான வாய்ப்புகள் அதிர்ஸ்டம் நிறைந்தவை – தவறவிடப்பட முடியாதவை  — கருணாகரன் — 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தீர்வுக்கான வாய்ப்புகள் அதிர்ஸ்டம் நிறைந்தவை – தவறவிடப்பட முடியாதவை

தீர்வுக்கான வாய்ப்புகள் அதிர்ஸ்டம் நிறைந்தவை – தவறவிடப்பட முடியாதவை 

 — கருணாகரன் — 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினுடைய அறிவிப்பின்படி அடுத்த சில நாட்களில் (12.12.2022) இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான (ஜனாதிபதியில் அறிவிப்பின்படி அதிகாரப் பரவலாக்கத்துக்கான) பேச்சுகள் ஆரம்பமாக வேண்டும். கிடைக்கின்ற தகவல்களின் அடிப்படையில் அவர் அதற்குத் தயார். இதை அவர் ஏற்கனவே பாராளுமன்றத்திலும் ஓரளவுக்கு வெளிப்படுத்தியிருந்தார் –வெளிப்படையாகப் பேசியிருந்தார். தான் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைவரும் இதற்குச் சம்மதம்தானே என்பதையும் நேரில் கேட்டிருந்தார். ஜே.வி.பி மட்டும் சறுக்கியது. மற்றத் தரப்புகள் விரும்பியோ விரும்பாமலோ தலையாட்டின. 

தமிழ்த்தரப்புகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் தவிர, ஏனையவை பேச்சுகளுக்கு தயார் என்ற நிலையில் உள்ளன. அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உட்பட. 

அப்படியென்றால் பேச்சுகள் குறித்த நாளில் ஆரம்பமாகுமா? 

இதற்கு இந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும் வரையில் தெளிவான பதில் கிடைக்கவில்லை. பேச்சுகள் ஆரம்பிக்கப்படுவதாக இருந்தால் அதற்கான நிகழ்ச்சி நிரல் வேண்டும். அது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதாக இருந்தால், நடக்கவுள்ள பேச்சுகள் எங்கே, எப்பொழுது ஆரம்பமாகும்? எந்த அடிப்படையில் பேச்சுகள் நடக்கும்? அதன் கால அட்டவணை என்ன? அதில் யார் யாரெல்லாம் பங்கேற்பர்? அதாவது தமிழ்த்தரப்பிலிருந்து யார் யார் பங்கேற்பர்? அரசாங்கத் தரப்பிலிருந்து யார் யாரெல்லாம் பங்கேற்பர்? என்ற விடயங்கள் முடிவு செய்யப்பட வேண்டும். 

அது மட்டுமல்ல, முஸ்லிம் தரப்பும் இந்தப் பேச்சுகளில் பங்கேற்குமா? என்பதைப் பற்றியும் எந்தத் தகவலும் இல்லை. இதேவேளை தங்களுடனும் பேச்சுகள் நடத்தப்பட வேண்டும் என மலையகக் கட்சிகளும் கேட்டுள்ளன. இதைப் பற்றியும் எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை. 

அப்படி எல்லாத் தரப்புகளின் கோரிக்கைகளையும் ஏற்று பேச்சுகள் நடத்தப்படுமா? என்பது ஒரு கேள்வி. இன்னொரு கேள்வி, அப்படியில்லை என்றால், தனித்தனியாகப் பேச்சுகள் நடக்குமா? எப்படியென்றாலும் வடக்குக் கிழக்குப் பிரச்சினை பற்றிப் பேசும்போது சமனிலையில் முஸ்லிம்களும் தமிழர்களும் பங்கேற்க வேண்டுமல்லவா! 

இதையெல்லாம் அடுத்து வரும் ஒரு வாரத்திற்குள் விரைந்து முடிவெடுத்தால்தான் பேச்சுகளை ஆரம்பிக்க முடியும். ஆனால் நடைமுறைகள் மந்த கதியிலேயே உள்ளன. 

இருந்தாலும் பேச்சுகளை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி விரும்புவதாகத் தெரிகிறது. ஜனாதிபதியின் விருப்பம் எந்தளவுக்கு நிறைவேறும் என்று கேட்போரும் உண்டு. தன்னை இன்னும் பலப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் அவர், எப்படி இந்தப் பெரிய சுமையைத் தனியே தூக்கப்போகிறார்? என்று தமது கேள்விக்கான நியாயத்தை இவர்கள் முன்வைக்கின்றனர். பலமான நிலையில் இருந்த ஆட்சியாளர்களே தீர்வை முன்வைப்பதற்குத் தயங்கினர். இதைக் கடந்து சிலர் முயற்சித்தாலும் எதிர்க்கட்சிகள் அதைத் தடுத்தன. குறிப்பாக சந்திரிகா குமாரதுங்கவினால் முன்னெடுக்கப்பட்ட பேச்சுகளும் முன்வைக்கப்பட்ட தீர்வும் எதிர்த்தரப்பினரால் நிராகரிக்கப்பட்டன. இந்த எதிர்ப்பில் முக்கிய பாத்திரமேற்றவர் இன்றைய ஜனாதிபதியும் அன்றையை எதிர்க்கட்சித் தலைவருமான இதே ரணில் விக்கிரமசிங்கதான் என்றும் கூறுகிறார்கள். 

இப்பொழுது நிலைமை முற்றிலும் வேறாக உள்ளது. அரசாங்கம் மிகப் பலவீனமான நிலையில் உள்ளது. ஒற்றை மனிதராக ரணில் விக்கிரமசிங்க உள்ளார். இந்த நிலையில் இவரால் எப்படி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும்? எனவும் கேட்கின்றனர். 

இதெல்லாம் உண்மைதான். நடந்தவைதான். ஆனால், எப்போதும் ஒரே விதமாக நிலைமை இருப்பதில்லை. அதிலும் அரசியலில் இது முற்றிலும் வேறானது. அது புரிந்து கொள்ளவே கடினமானது. இதனால்தான் அரசியலில் நண்பரும் இல்லை. எதிரியும் இல்லை என்று கூறுவதுண்டு. 

ஏன், அண்மைக்கால இலங்கை அரசியற் சூழலை எடுத்துப் பாருங்கள். மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரசிங்க கூட்டு. அதாவது, 2015 இல் வரலாற்றில் எதிரும் புதிருமாக இருந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றாக இணைந்து ஆட்சியமைத்தன. இதற்காக மகிந்த ராஜபக்ஸவை முழுமையாக எதிர்த்தார் மைத்திரிபால சிறிசேன. அடுத்த சில ஆண்டுகளில் தன்னை எதிர்த்துக் கவிழ்த்த மைத்திரிபால சிறிசேனவுடன் கைகோர்த்து அந்த ஆட்சியிலிருந்த பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவை விரட்டினார் மகிந்த ராஜபக்ஸ. இப்பொழுது அதே மகிந்த ராஜபக்ஸவின் தயவில், ஆதரவில்தான் ஆட்சி நடத்துகிறார், ரணில் விக்கிரமசிங்க. 

இதுதான் அரசியல். உலகம் முழுக்க, வரலாறு முழுக்க அரசியல் இப்படித்தான் உள்ளது. அதிகாரப் போட்டியும் அதற்கான சூழ்ச்சிகளும் குழிபறிப்புகளும் கூட்டணி சேர்தல்களும் கைகுலுக்கல்களும் கால் வாருதல்களுமாக. விதிவிலக்காக, அபூர்வமாக ஒரு சில தலைவர்கள் இதற்கு மாறான முறையில் ஆட்சியை நடத்தியிருக்கலாம். அரசியலை முன்னெடுத்திருக்கக் கூடும். ஆனால், பெரும்போக்கு முன்சொல்லப்பட்ட வகையில்தான் நடந்து வந்திருக்கிறது. அதிலும் ஆசிய, ஆபிரிக்கக் கண்டங்களில் இதைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. இந்த இடத்தில் நமக்கு நன்றாகத் தெரிந்த இன்னொரு உதாரணத்தையும் சொல்லலாம். 

தமிழ்நாட்டு அரசியலை எடுத்துப் பாருங்கள். கடந்த இருபது ஆண்டுகளில் தி.மு.க யார், யாருடன் எல்லாம் கூட்டு வைத்தது என்று. அதைப்போல, அ.தி.மு.க. ஒரு தடவை காங்கிரசுடன். மறுதடவை பாரதீய ஜனதாவுடன். இதெல்லாம் கொள்கையின் அடிப்படையில்தான் நடந்தா? நிலைமைகளின் –சூழ்நிலையின் விளைவானவை. அதாவது சூழலை, நிலைமையைத் தமக்குச் சார்பாகக் கையாள்வதற்கான உத்தியாக ஒவ்வொரு தரப்பும் இதைச் செய்துள்ளன. தி.மு.க, அ.தி.மு.க மட்டுமல்ல, வை.கோ, திருமாவளவன் போன்றோரும் அங்குமிங்குமாக தேவைக்கு ஏற்ற மாதிரித்தான் கூட்டுச் சேர்ந்துள்ளனர். 2008 இல் அ.தி.மு.க + பாரதீய ஜனதாக் கூட்டணியில் பங்கேற்றிருந்தன வை.கோ. அவை இரண்டையும் எதிர்த்து தி.மு.கவுடன் நிற்கிறார். 

இதுதான் அரசியல் யதார்த்தம். இதெல்லாம் சரியென்று இங்கே வாதிடவில்லை. ஆனால் இதுதான் நடைமுறையாக உள்ளது. 

வெளிப்பார்வைக்கு ரணில் விக்கிரமசிங்க தனி நபர்தான். கடந்த தேர்தலில் மக்கள் நிராகரித்த ஒருவர்தான். ஆனால், அவர்தான் இன்று நாட்டின் தலைவர். இதுதான் அரசியல் யதார்த்தம்.. இது எப்படி நடந்தது? இதே அரசியலமைப்பின் வழியாக, இதே அரசியற் சூழலில், இதே எதிர்க்கட்சிகளின் பலவீனமான நடத்தைகளின் ஊடாக. இதே மக்கள் சாட்சியத்தின் முன்பாக. 

சரியோ பிழையோ இந்தத் தனிநபர்தான் இன்று நாட்டைக் கட்டியாள்கிறார். இன்றுள்ள பொருளாதாரப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை, இனப்பிரச்சினை எல்லாவற்றுக்கும் தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளார். இந்தத் தனி நபருடன்தான் உலகம் பேசுகிறது. உறவாடுகிறது. இந்தத் தனியாள்தான் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்கும் அரசியற் கட்சிகளை வென்று நிற்கிறார். இந்தத் தனியாளைத் தவிர்க்க முடியாமல்தான் பொதுஜன பெரமுனவும் ராஜபக்ஸவினரும் உள்ளனர். இந்தத் தனியாளுக்கு  முன்னேதான் இப்பொழுது இனப்பிரச்சினைக்கான தீர்வும் முன்நிற்கிறது. 

இது நமக்கு விருப்பமாக இருக்கலாம். இல்லாமல் போகலாம். ஆனால் இதுதான் அரசியல் யதார்த்தம். இந்த அரசியல் யதார்த்தில்தான் நாம் வேலை செய்ய வேண்டும். 

இதை விடுத்து, ரணில் நல்லவரா? கெட்டவரா? அவர் நம்பிக்கையானவரா? இல்லையா? அவர் சொல்வது நடக்குமா? இல்லையா? என்று குழம்பிக் கொண்டிருக்க முடியாது. இதைச் சரிபார்த்துக் கொள்வதற்கு பூவா தலையா என்று நாணயத்தைச் சுற்றிப் போட்டுப் பார்க்க முடியாது. 

நம் முன்னே உள்ள களத்தை ஆட வேண்டும். அதற்குத் தயாராக வேண்டும். 

கடந்த ஐந்து மாதத்தில் ரணில் தன்னை முன்னிலைக்குக் கொண்டு வந்துள்ளார். கடந்த ஆண்டு அவர் மக்களால் நிராகரிக்கப்பட்ட –தோற்கடிக்கப்பட்ட ஒருவர். பின்னர் ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர். அதிலிருந்து அதிரடியாக பிரதமரானார். அதிலிருந்து ஜனாதிபதியாகினார். இதெல்லாம் எப்படி நடந்தது? 

சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் திறனால், அதற்கான துணிவினால்தான் இவையெல்லாம் சாத்தியமாகின. இதனால்தான் அவரை அரசியல் ரீதியாக எதிர்ப்போரும் விமர்சிப்போரும் பாராட்டுகிறார்கள். இதெல்லாம் யாரும் நினைப்பதைப் போல இலகுவானதல்ல. மக்களின் பேராதரவைப் பெற்றவர்கள், பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவ அடிப்படையில் பலமான தரப்பாக இருப்பவர்கள் எல்லாம் பின்னிற்க, ரணில் எப்படி முன்னுக்கு வந்தார்? 

இதையெல்லாம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

ஆகவே இன்றுள்ள அரசியல் யதார்த்தத்தின்படி நம்முன்னுள்ள சவால்களை ஏற்போம். பேச்சுகள் வெற்றியளிக்குமா இல்லையா என்பதை இப்பொழுதே தீர்மானிக்க முடியாது.. 

பேச்சுக்கு ஜனாதிபதி அழைக்கும்போது அவர் ஏதோ ஒரு திட்டத்தை மனதிற் கொண்டுதான் அழைத்திருப்பார். அந்தத் திட்டம் என்ன என்பதை அறிவது ஒரு பக்கமாக இருக்கட்டும். நாம் என்ன திட்டத்தை முன்வைப்பது? எப்படி இந்தப் பேச்சுகளை எதிர்கொள்வது? நடத்துவது என்று சிந்திப்போம். அது உடனடியாக நிகழ வேண்டும். செல்வம் அடைக்கலநாதனும் முருகேசு சந்திரகுமாரும் பிள்ளையானும் டக்ளஸ் தேவானந்தாவும் மெய்யாகவே தீர்வை நோக்கிச் சிந்திப்போரும் சொல்லியிருப்பதைப்போல இது இன்னொரு வாய்ப்பான சூழல். இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாய்ப்புகள் அதிர்ஷ்ட தேவதைகள். அவை எப்போதும் மலிவாகக் கிடைப்பதில்லை. அபூர்வமானவை.  

 

 

https://arangamnews.com/?p=8375

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
    • மகிழ்சசியான சுற்றுலா மனித வாழ்விற்கு இன்றியமையாதது. தொடருங்கள். 
    • கடைசி இடத்தில் ஆர்சிபி; தவறு நடந்தது எங்கே? கேப்டன் கூறுவது என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வீடியோ கேம்ஸிஸ் கிரிக்கெட் பார்த்த, விளையாடிய உணர்வு ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தின்போது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம். ஆட்டத்தைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கு கழுத்துவலி கூட வந்திருக்கலாம். ஏனென்றால், கிட்டத்தட்ட 40 ஓவர்களில் 9 ஓவர்களில் வெறும் சிக்ஸர், பவுண்டரிகளாகவே அடிக்கப்பட்டது. மிகச்சிறிய மைதானமான சின்னசாமி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் எப்படி வீசினாலும் பேட்டை நோக்கித்தான் வந்தது என்பதால் பேட்டர்கள் கருணையற்றவர்களாக மாறினர். யாருக்கு எப்படி பந்துவீசுவது எனத் தெரியாமல் ஆர்சிபி பந்துவீச்சாளர்களும், சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களும் திணறி நின்றதைக் காண முடிந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. 288 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறியது. நிகர ரன்ரேட்டிலும் பெரிய ஸ்கோர் அடித்தும் பெரிய முன்னேற்றமில்லாமல் 0.502 ஆக இருக்கிறது. டி20 போட்டிகளில் 250ரன்களுக்கு மேல் அதிகமுறை அடித்த அணி என்ற பெருமையை சன்ரைசர்ஸ் அணி நேற்று பெற்றது. ஆர்சிபி அணியைப் பொருத்தவரை இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்தும் தோல்வி அடைந்த முதல் அணியாக மாறிவிட்டது. 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி கடைசி இடத்தில் நீடிக்கிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய ஹைதராபாத் வீரர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக் கொடுத்தவர்களில் முக்கியமான பேட்டர் டிராவிஸ் ஹெட் 102 (41பந்துகள், 8சிக்ஸர், 9பவுண்டரி). ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப், உலகக் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த ஹெட், நேற்றைய ஆட்டத்தில் முதல் சதத்தைப் பதிவு செய்து ஆட்டநாயகன் விருது வென்றார். 39 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்த 4வது பேட்டர் என்ற பெயரை ஹெட் பதிவு செய்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக அதிவேகமாக சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெயரை ஹெட் பெற்றார். இதற்கு முன் வார்னர் 43 பந்துகளில் சதம் அடித்திருந்தார். மற்றொரு பேட்டர் ஹென்ரிச் கிளாசன் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சீசன் முழுவதும் பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்னமாக திகழ்ந்துவரும் கிளாசன் 31 பந்துகளில் 67 ரன்கள்(7சிக்ஸர், 2 பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். இது தவிர மார்க்ரம் 32(17பந்துகள், 2சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்), அப்துல் சமது37(10 பந்துகள் 3 சிக்ஸர்கள், 4பவுண்டரிகள்) என ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த 4 பேட்டர்கள் அடித்த ஸ்கோர்தான் மற்றவகையில் பெரிதாக எந்த பேட்டரும் ஸ்கோர் செய்யவில்லை.   பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் கேப்டன் கூறியது என்ன? சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “ நானும் பேட்டராக இருந்திருக்கலாம் என நினைக்க வைக்கிறது. மும்பைக்கு எதிரான ஆட்டத்துக்குப் பிறகு இப்போது மீண்டும் பெரிய ஸ்கோர் அடித்துள்ளோம். போட்டி பேட்டர்கள் ராஜ்ஜியமாகமாறி வருகிறது. இந்த ஆடுகளத்தை படிக்க நானும் முயற்சித்தேன். எங்கள் ஆட்டம் மகிழ்ச்சியாக இருக்கிறது. 4 வெற்றிகள் பெற்றுள்ளோம். பேட்டர்களுக்கு முழுசுதந்திரம் அளித்துள்ளோம். அதனால்தான் பெரிய ஸ்கோர் வருகிறது” எனத் தெரிவித்தார் ஆர்சிபி கொடுத்த பதிலடி ஆர்சிபி அணியிலும் கேப்டன் டூப்பிளசிஸ் 28 பந்துகளில் 62 ரன்கள்(4சிக்ஸர், 7பவுண்டரி), விராட் கோலி 42 (2சிக்ஸர், 6பவுண்டரி), தினேஷ் கார்த்திக் 35 பந்துகளில் 85(7சிக்ஸர், 5 பவுண்டரி) என விளாசினர். இதில் ஆர்சி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ரஜத் பட்டிதார், வில் ஜேக்ஸ், சவுகான் ஆகிய மூவவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்காமல் தங்களின் பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தால், ஆர்சிபி அணி ஒருவேளை வென்றிருக்கலாம். சன்ரைசர்ஸ் அடித்த ஸ்கோருக்கு தாங்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்று ரீதியில்தான் கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகழ்த்தப்பட்ட சாதனைகள் இந்த ஆட்டத்தில் சில சுவையான சம்பவங்கள் நடந்துள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி சேர்த்த அதிகபட்ச ஸ்கோரான 287 ரன்களை சன்ரைசர்ஸ் அணி பதிவு செய்தது. இதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த சீசனில் 277 ரன்கள் சேர்த்ததுதான் சாதனையாக இருந்தது, தன்னுடைய சாதனையை அந்த அணியை முறியடித்தது. ஆடவர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஓட்டுமொத்தமாக நேற்றைய ஆட்டத்தில் 549 ரன்கள் சேர்க்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன் ஹைதராபாத்தில் இந்த சீசனில் நடந்த மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் இடையிலான ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக 523 ரன்கள் சேர்க்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தநிலையில் அந்த சாதனை முறியடிக்கப்பட்டது. ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 22 சிக்ஸர்களை விளாசி, ஒரு இன்னிங்ஸில் ஒரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டஅதிகபட்ச சிக்ஸர்களைப் பதிவு செய்தது. இதற்கு முன் 2013-இல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 21 சிக்ஸர்களை அடித்த நிலையில் அதை சன்ரைசர்ஸ் முறியடித்துவிட்டது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்களை விளாசின. டி20 போட்டியில் அதிக பட்சமாக 262 ரன்கள் சேர்த்தும் தோல்வி அடைந்த முதல் அணி என்ற பெயரை ஆர்சிபி பெற்றது. இதற்குமுன் 2023ம் ஆண்டில் செஞ்சூரியனில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 258 ரன்களை மேற்கிந்தியத்தீவுகள் சேர்த்தும் தோல்வி அடைந்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. ஆர்சிபி அணியில் பந்துவீச்சாளர்கள் டாப்ளி(68), யாஷ் தயார்(51), லாக்கி பெர்குஷன்(52), விஜயகுமார்(64) என 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். ஒரு போட்டியில் 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தது இதுதான் முதல்முறை. சன்ரைசர்ஸ் அணியில் நேற்று மட்டும் 4 பேட்டர்கள் ஒரு சதம் பார்ட்னர்ஷிப்பும் உள்பட, 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஐபிஎல் வரலாற்றில் இது 2வது முறையாக நடக்கிறது. இதற்கு முன் 2008-இல் ஆர்சிபிக்கு எதிராக கொல்கத்தா அணியின் 4 பேட்டர்கள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.   பட மூலாதாரம்,SPORTZPICS ஆர்சிபி இதயத்தை உடைத்த ஹெட் ஆர்சிபி அணி நேற்றைய ஆட்டத்தில் முறையான சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களமிறங்கியது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா என இரு இடதுகை பேட்டர்கள் களத்துக்கு வந்ததும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான ஜேக்ஸை பந்துவீசச் செய்து சோதிதித்துப் பார்த்தது. முதல் இரு ஓவர்கள் மட்டும் பொறுமை காத்த ஹெட், அபிஷேக் அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரி, சிக்ஸர்களாக அடிக்கத் தொடங்கினர். எந்தப் பந்துவீச்சாளர் பந்துவீசினாலும் ஹெட், அபிஷேக் பேட்டிலிருந்து பவுண்டரி, சிக்ஸர்களாக பறந்தன. ஆர்சிபிக்காக முதல்முறையாக களமிறங்கிய பெர்குஷன் 5-ஆவது ஓவரில் ஹெட் சிக்ஸர்களாக விளாசி 18 ரன்களையும், யாஷ் தயால் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என 20 ரன்களையும் சேர்த்தார். 20 பந்துகளில் ஹெட் அரைசதம் அடித்தார். பவர்ப்ளே ஓவரில் சன்ரைசர்ஸ் 76 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் சேர்த்த 3வது அதிகபட்ச ரன்களாகும். இதற்குமுன் மும்பை அணிக்கு எதிராக 81 ரன்கள், சிஎஸ்கேவுக்கு எதிராக 77ரன்களும் சேர்த்திருந்தது. 7.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன்களை தொட்டது. அபிஷேக் சர்மா 34 ரன்களில் டாப்ளே பந்துவீச்சில் பெர்குஷனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு ஹெட், அபிஷேக் 108 ரன்கள் என வலுவான அடித்தளம் அமைத்தனர். கிளாசன் சிக்ஸர் மழை 2-ஆவது விக்கெட்டுக்கு கிளாசன் களமிறங்கி ஹெட்டுடன் சேர்ந்தார். முதல் 5 பந்துகளில் 3 ரன்கள் சேர்த்து மெதுவாகத் தொடங்கிய கிளாசன், அதன்பின் வாண வேடிக்கை நிகழ்த்தினார். டி20 போட்டிகளில் ஆபத்தான பேட்டராக கருதப்படும் கிளாசன், ஆர்சிபி பந்துவீச்சாளர்களை நேற்று வதம் செய்தார். பெர்குஷன், யாஷ் தயால் ஓவரில் சிக்ஸர்களும், பவுண்டரிகளும் கிளாசன் பேட்டிலிருந்து பறந்தன. மறுபுறம் டிராவிஸ் ஹெட்டும் சிக்ஸர், பவுண்டரி மழை பொழிந்து, 39 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். டிராவிஸ் ஹெட் 102 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 57 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதிரடியாக ஆடிய கிளாசன் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார். 14.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 200 ரன்களைத் தொட்டது. கிளாசன் 67 ரன்கள் சேர்த்தநிலையில் பெர்குஷன் பந்துவீ்ச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த கிளாசன், ஹெட் ஆகிய இரு பேட்டர்களும் ஆட்டமிழந்து சென்றபின் ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். கடைசி நேரத்தில் களமிறங்கிய அப்துல் சமது, மார்க்ரம் இருவரும் சூப்பர் கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் இருவரும் 46 ரன்களைக் குவித்தனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி வரை போராடியது பெருமை ஆர்சிபி கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “இது முறையான டி20 ஆடுகளம். இன்று சேர்த்த ரன்களை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. அதுவே சாதனையாக மாறிவிட்டது. இந்த ஆடுகளத்தில் 270 ரன்கள்கூட சேஸிங் செய்யக்கூடியதுதான். இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவது கடினம். பாவம் பந்துவீச்சாளர்கள் பல நுணுக்கங்களை பயன்படுத்தி வீசியும் பயன் இல்லை. பேட்டர்கள் பக்கமே ஆட்டம் தொடர்ந்து போவது கடினம்தான். வித்தியாசமாக சந்திக்க வேண்டும். எங்கள் பேட்டிங்கில் சில தவறுகள் உள்ளன. அதை சரிசெய்வோம். பவர்ப்ளேக்குப்பின் நாங்கள் தவறுகளைத் திருத்த வேண்டியுள்ளது. ஆனால் கடைசிவரை எங்கள் வீரர்கள் போராடியது பெருமையாக இருந்தது. பந்துவீச்சைப் பொருத்தவரை பந்துவீச்சாளர்கள் எப்போதும் மனதை உற்சாக வைத்திருக்கவேண்டும்” எனத் தெரிவித்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு நம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக் ஆர்சிபியும் பதிலடி கொடுக்க முயன்று, விக்கெட்டுகளை இழந்திருந்த தருணத்தில் தினேஷ் கார்த்திக் களமிறங்கி, அரங்கில் இருந்த ரசிகர்களுக்கு தனது பேட்டால் விருந்தளித்தார். லாம்ரோருடன் சேர்ந்து 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த டிகே, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். உனத்கட், மர்கண்டே வீசிய 13 மற்றும் 14வது ஓவர்களில் மட்டும் தினேஷ் கார்த்திக், லாம்ரோர் சேர்ந்து 46 ரன்கள் சேர்த்தனர். டிகே அடித்த ஷாட்களால் ரன்ரேட்டும் வேகமாக உயர்ந்தது, ரசிகர்களுக்கும் ஆர்சிபி வென்றுவிடும் என்ற நம்பிக்கை வந்தது. 23 பந்துகளில் டிகே அரைசதம் அடித்தார். லாம்ரோர் 19 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் போல்டாகினார். அடுத்துவந்த ராவத்துடன் சேர்ந்து தினேஷ் கார்த்திக் வெளுத்துவாங்கினார். அனுஜ் ராவத்துடன் சேர்ந்து 7-வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் 83 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். தினேஷ் கார்த்திக் களத்தில் இருந்தவரை ஆர்சிபி ரசிகர்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தனர். ஆனால் அவர் வெளியேறியபின், ரசிகர்களும் கலையத் தொடங்கினர். தினேஷ் கார்த்திக் கடைசிவரை போராடியும், ஆர்சிபி 25 ரன்களில் தோற்றது. https://www.bbc.com/tamil/articles/cj5l2j16y69o
    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.