Jump to content

திடீர் மாரடைப்பும் உடனடி மரணமும் அதிகரிக்க என்ன காரணம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திடீர் மாரடைப்பும் உடனடி மரணமும் அதிகரிக்க என்ன காரணம்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,சுசீலா சிங்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்
மாரடைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

பலருக்கும் திடீர் மாரடைப்பு ஏற்படும் வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதைப் பார்க்க முடிகிறது.

ஒரு வீடியோவில் திருமணத்தில் நடனமாடிக்கொண்டிருக்கும் நபர் திடீரென தரையில் விழுவதைக் காண்கிறோம். மற்றொரு வீடியோவில், ஒரு விழாவில் கையில் பூங்கொத்தை ஏந்திச்சென்றுகொண்டிருக்கும் ஒரு பெண் திடீரென்று கீழே சரிகிறார்.

மற்றொரு வீடியோவில் ஒரு நபர் தனது நண்பர்களுடன் நடந்து செல்லும்போது தரையில் விழுந்துவிடுகிறார்.

இந்த சம்பவங்களுக்குப் பிறகு, ஹேஷ்டாக் heartattack, ட்விட்டரில் ட்ரெண்டாக்கத் தொடங்கியது. இதுபோன்ற திடீர் மரணங்கள் குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களையும், கவலையையும் வெளிப்படுத்தினர்.

 

சமீபத்தில் கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்தார். அவர் அப்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா, ஜிம்மில் டிரெட் மில்லில் ஓடிக்கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக பின்னர் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு அவர் காலமானார்.

 

திடீரென ஏற்படும் இதுபோன்ற நிகழ்வுகளை, கார்டியாக் அரெஸ்ட் என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர்.

இதயத்தின் அளவு மற்றும் தசைகள் பெரிதாவதால், அதன் ரத்த நாளங்களில் அடைப்பு மற்றும் இதயம் ரத்தத்தை பம்ப் செய்வதை நிறுத்திவிடுவது போன்ற காரணங்களால் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மரபணு காரணங்களாலும் இது ஏற்படலாம்.

கார்டியாக் அரெஸ்ட்டின் அறிகுறிகள்

மாரடைப்பு அறிகுறிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

டாக்டர் ஓ.பி. யாதவ், நேஷனல் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை இருதய அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். உங்கள் உடலில் காரணம் சொல்லமுடியாத அறிகுறிகளை நீங்கள் கண்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

அத்தகைய அறிகுறிகளில் இவை அடங்கும்

  • வயிற்றுப் பிடிப்பு
  • மேல் வயிறு உப்புவது மற்றும் கனமான உணர்வு . இதை வாயு அல்லது நெஞ்சரிச்சல் என்று கருதி அலட்சியப்படுத்தாதீர்கள்
  • மார்பில் அழுத்த உணர்வு
  • தொண்டையில் ஏதோ சிக்கியுள்ளது போன்ற உணர்வு
  • உடலின் செயல்படும் திறனில் திடீர் மாற்றம். உதாரணமாக உங்களால் ஒரு நாளைக்கு மூன்று மாடிகள் ஏற முடியும். ஆனால் திடீரென்று முடியாமல் போவது மற்றும் சோர்வாக உணர்வது.
  • பல வலிகள் பரவக்கூடியதாக உள்ளன.அதாவது வலி இதயத்திலிருந்து முதுகு வரை பயணிக்கிறது. சில நேரங்களில் இது பல் அல்லது கழுத்து வலி என்று புறக்கணிக்கப்படுகிறது. அப்படி செய்யக்கூடாது.
  • குடும்பத்தில் யாராவது 30-40 வயதில் இறந்திருந்தால் அல்லது திடீர் மரணம் அடைந்திருந்தால், உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.

”மாரடைப்பு ஏற்படும்போது நோயாளி அரை மணி நேரம் அல்லது அதற்கு மேல் நெஞ்சு வலியை அனுபவிக்கிறார். வலி இடது கைக்கு பரவுகிறது. அவருக்கு அதிகம் வியர்க்கிறது. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அது கார்டியாக் அரெஸ்டாக மாறும்,” என்று டெல்லியில் உள்ள மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூத்த இதயநோய் நிபுணர் டாக்டர் விவேகா குமார் தெரிவித்தார்.

மேலும், மருத்துவமனைக்கு வெளியே ஏற்படும் மாரடைப்பில் மூன்று முதல் எட்டு சதவிகிதம் பேர் மட்டுமே உயிர் பிழைப்பார்கள் என்று அவர் கூறினார்.

கொரோனா, தடுப்பூசி மற்றும் கார்டியாக் அரெஸ்டுக்கு இடையேயான தொடர்பு

கொரோனா மற்றும் கார்டியாக் அரெஸ்டுக்கு தொடர்பு

பட மூலாதாரம்,KATERYNA KON/SCIENCE PHOTO LIBRARY

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் இதுபோன்ற கார்டியாக் அரெஸ்ட் அதிகம் ஏற்படுகின்றன என்ற செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. அது குறித்த விவாதமும் சூடு பிடித்துள்ளது.

கொரோனா காரணமாக உடலில் ரத்தக் கட்டிகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. நுரையீரல், இதயம், கால்களின் நரம்புகள் மற்றும் மூளையில் இந்தக் கட்டிகள் உருவாகலாம் என்று டாக்டர். ஓ.பி. யாதவ் மற்றும் டாக்டர் விவேகா குமார் ஆகிய இருவரும் கூறுகிறார்கள். ரத்தத்தை நீர்க்கச்செய்ய மருந்துகளும் நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

“சமீபத்தில் உங்களுக்கு கோவிட் வந்திருக்கலாம், அதன் பிறகு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம். எனவே இரண்டுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகச் சொல்லலாம். ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆனால் கொரோனா இருந்த ஒருவருக்கு ரத்தம் உறைவதற்கான சாத்தியக்கூறு அதிகமாகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நோயாளிக்கு ப்ளட் தின்னரை கொடுக்கிறோம். உடற்பயிற்சி செய்யவும், நடை பயிற்சி செய்யவும் அறிவுறுத்துகிறோம். ஆனால் ஒவ்வொரு மாரடைப்பும் கொரோனாவால் ஏற்படுகிறது என்று சொல்வது தவறு,”என்று டாக்டர். ஓ.பி. யாதவ் குறிப்பிட்டார்.

“கொரோனா தடுப்பூசியும் ஒரு வகையில் கொரோனா தொற்று போன்றதுதான். கொரோனா மிகவும் கடுமையான தொற்று நோய். மேலும் அதன் காரணமாக ரத்த உறைவு ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. ரத்த உறைவு இதயத்தில் இருந்தால் மாரடைப்பு அல்லது கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இது மூளையில் ஏற்பட்டால் ப்ரெயின் ஸ்ட்ரோக் ஏற்படும். இத்தகைய நிகழ்வுகள் இளைஞர்களிடையே அதிகம் காணப்படுகின்றன. மன அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவையும் இதற்குக் காரணமாகும்,” என்கிறார் டாக்டர் விவேகா குமார்.

பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் ஏற்படும் மாரடைப்பு

பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும், ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் இருக்கும் வரை, அவரது உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு அதிகமாக இருக்கும்.

அத்தகைய சூழ்நிலையில் பெண்ணுக்கு மாதவிடாய் இருக்கும் வரை இந்த ஹார்மோன் அவளைப் பாதுகாக்கிறது, ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு, மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கிறது.

மாரடைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

“45 வயது பெண்களை ஒப்பிடும்போது ஆண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகம். இதன் விகிதம் 10:1. அதாவது பத்து ஆண்களுடன் ஒப்பிடுகையில் ஒரு பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது,”என்று டாக்டர் ஓ.பி.யாதவ் குறிப்பிட்டார்.

ஒரு பெண்ணுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து, மாதவிடாய் நின்றவுடன், மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கிறது. அதே நேரத்தில், 60 வயதில், மாரடைப்பு என்ணிக்கை ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாக மாறுகிறது. 65 வயதுக்குப் பிறகு ஆண்களை விட பெண்களிடையே அதிக மாரடைப்பு ஏற்படுகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், பெண்கள் மற்றும் ஆண்கள் இருவருமே தங்கள் உணவு மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

இளம் பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணத்தை விளக்கும் டாக்டர் ஓ.பி.யாதவ், “பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்படும் மாற்றங்கள் இதுபோன்ற நோய்களை நோக்கி அவர்களைத் தள்ளுகிறது. புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் மைதாவால் செய்யப்பட்ட உணவு போன்றவற்றால் இத்தகைய நோய்களின் ஆபத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மறுபுறம் வீட்டில் இருக்கும் பெண்கள் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துவதில்லை,”என்று குறிப்பிட்டார்.

ஜிம், சப்ளிமெண்ட்ஸ் மற்றும் கார்டியாக் அரெஸ்ட் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு

திடீரென ஜிம்மிற்கு செல்ல ஆரம்பித்து, பழக்கமில்லாத உடற்பயிற்சிகளை செய்தால், பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

உடற்பயிற்சி செய்யும் போது படிப்படியாக அதன் அளவை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். நீங்கள் ஏதேனும் போட்டியில் பங்குகொள்ள தயாராகி வருகிறீர்கள் என்றால் அதற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

அதிகமாக வியர்த்தால், அதிக தண்ணீர் குடிக்கவும், உடலில் உப்பு பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். ஆல்கஹால், புகையிலை மற்றும் போதைப்பொருள் நுகர்வு ஆரோக்கியத்தை பாதிக்கலாம். கூடவே ஆபத்தையும் அதிகரிக்கலாம்.

"எனர்ஜியை உருவாக்கும் அல்லது தசையை மேம்படுத்தும் பானங்களை குடிக்க வேண்டாம். ஏனெனில் உங்களுக்கு மனஎழுச்சியை ஏற்படுத்தும் மருந்துகள் இவற்றில் உள்ளன. உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை கலவைகளும் இவற்றில் உள்ளன,”என்று டாக்டர் விவேகா கூறுகிறார்.

பணிஓய்வுக்குப் பிறகு மட்டுமல்ல, இளமையிலும் உங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக இரு மருத்துவர்களும் அறிவுறுத்துகிறார்கள். கட்டுப்பாடான உணவு மற்றும் உடற்பயிற்சி நல்ல ஆரோக்கியத்திற்கான மூல மந்திரமாகும்.

https://www.bbc.com/tamil/articles/c727qe9dd1no

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.