Jump to content

யாழ்ப்பாணத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்!

யாழ்ப்பாணத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்!

போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) “இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

சர்வ மத தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வில் போராளிகள், சட்டத்தரணி தவராசா மற்றும் சர்வ மத தலைவர்கள், வர்த்தக பிரதிநிதிகள், முன்னாள் போராளிகள் என பலரும் கலந்து கொண்டிந்தனர்.

https://athavannews.com/2022/1314985

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மாற்று சிந்தனையோடு பயணிப்பவர்கள் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள்-மூத்த போராளி ஈஸ்வரன்

மாற்று சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள் என விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளி ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போராளிகள் நலம்புரிச் சங்க அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அங்கு தெரிவிக்கையில் ,எங்களைப் பொறுத்தவரை தேசம் சார்ந்து தேசியத்தோடு பயணித்த போராட்ட அமைப்புகளின் போராளிகள் அதாவது விடுதலைக்காக பிற்பட்ட காலங்களிலே சில போராட்ட அமைப்புக்கள் எமது போராட்ட அமைப்போடு ஒரே கொள்கையில் இணைந்து பயணித்தவர்கள் இதில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.

ஆனால் மாற்று சிந்தனையோடு பயணித்தவர்கள் யாரும் இந்த எமது அமைப்பில் இணைத்து பயணிக்கப் போவதில்லை.

நாங்கள் சிந்தித்து செயல்படுகின்ற விடயங்களை தொடர்ந்து பயணிக்காமல் முடியாமல் போய்விடும் எனவே மாற்று சிந்தனையுடையவர்களை இதில் உள்ளடக்க முடியாது என்பது எமது நிலைப்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1315010

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“ மாற்று சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள்”

👆எங்கள் எல்லோரையும் ஒன்றுசேரவிடால் பிரித்து வைத்திருப்பது இந்தச் 👆சிந்தனை முறைதான்.(இதன் அர்த்தம் மேலே பேட்டி கொடுத்தவரின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதல்ல)

எல்லோரையும் ஒன்றுசேர்ப்பதே இப்போது உள்ள பணிகளில் முதன்முறையானது. 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

“ மாற்று சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள்”

👆எங்கள் எல்லோரையும் ஒன்றுசேரவிடால் பிரித்து வைத்திருப்பது இந்தச் 👆சிந்தனை முறைதான்.(இதன் அர்த்தம் மேலே பேட்டி கொடுத்தவரின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதல்ல)

எல்லோரையும் ஒன்றுசேர்ப்பதே இப்போது உள்ள பணிகளில் முதன்முறையானது. 

அதேதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரையும் ஒன்றிணைக்கனும் என்று காத்திருந்தால் எந்த வேலைத்திட்டத்தையும் எக்காலத்திலும் கொண்டு செல்ல முடியாது.

ஒத்த சிந்தனையுள்ள அநேகரை ஒன்றிணைக்கலாம்.. எல்லாரையும் ஒன்றிணைக்க முடியாது. ஏனெனில் சிலர் மாற்றுச் சிந்தனை என்பதையே சொந்த சுயலாபத்திற்காக கையில் எடுத்திருப்பவர்கள். அவர்களை எந்த வழியில் முயன்றாலும் தேசியத்தின் பெயரால் தேசத்தின் பெயரால் ஒன்றிணைக்க முடியாது. இந்த யதார்த்தத்தில் இருந்து தான்.. அந்தப் புரிதலோடுதான்.. எந்தப் பயணமும் சாத்தியமாக்கப்படலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

யாழ்ப்பாணத்தில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்!

என்ன சிந்தனையுடனாவது பயணியுங்கள்.

ஆனால் இந்தியாவின் சிந்தனையுடன் மட்டும் பயணிக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

“ மாற்று சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள்”

👆எங்கள் எல்லோரையும் ஒன்றுசேரவிடால் பிரித்து வைத்திருப்பது இந்தச் 👆சிந்தனை முறைதான்.(இதன் அர்த்தம் மேலே பேட்டி கொடுத்தவரின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதல்ல)

எல்லோரையும் ஒன்றுசேர்ப்பதே இப்போது உள்ள பணிகளில் முதன்முறையானது. 

அதற்கு முதலில் மாற்றுக்கருத்து என்பது என்ன என்று தெரியணும் இல்லையா?

டக்ளஸ் மாமா என்றால்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அதற்கு முதலில் மாற்றுக்கருத்து என்பது என்ன என்று தெரியணும் இல்லையா?

டக்ளஸ் மாமா என்றால்??

விளங்கவில்லையா அண்ணை?

RAW 87 இல் சொன்ன அதே விடயம்தான், தங்கள் அல்லகைகளையும் சேர்த்து கொள்ள வேண்டுமாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இவர்களின் பின்புலம் பற்றித் தெரியாது. ஆனால் முன்னாள் போராளிகளின் நலன்களுக்காக அரசியல் இல்லாத நிறுவனமயப்பட்ட ஓர் அமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்பது எனது விருப்பம். அந்தவகையில் இது நல்லதொரு தொடக்கம் என நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

“ மாற்று சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படமாட்டார்கள்”

👆எங்கள் எல்லோரையும் ஒன்றுசேரவிடால் பிரித்து வைத்திருப்பது இந்தச் 👆சிந்தனை முறைதான்.

பாகுபாடின்றி  அணைத்துபோக அவர்கள் ஆரம்பிக்கபோவது அரசியல் கட்சியோ அல்லது மிக பெரும் பொருளாதார நிறுவனமோ அல்ல,  மாறாக நலிந்துபோன முன்னாள் போராளிகளின் நலன்களை கவனிக்கும் ஒரு அமைப்பாகவே நினைக்கின்றேன்.

இறுதி யுத்தம்வரை இந்த போராளிகளையும் அவர்கள் சார்ந்த அமைப்பையும் தலைமையையும் அழிப்பதையே முழுமூச்சாக கொண்ட அரச இயந்திரங்களுடன் சேர்ந்து இயங்கியவர்கள், இன்று அதே போராளிகளின் நலன் சார்ந்த கட்டமைப்புக்குள் உள் வாங்கபட வேண்டும் எனும் கருத்தில் என்ன வலுவான நியாயம் இருக்கிறது?

ஒருவேளை மாற்று கொள்கைகளில் இயங்கியவர்கள் இன்று நலிந்து போயிருந்தால் அவர்கள்  அன்று பின்னால் நின்ற அரசும் அரசியலும் நன்றிக்கடனுக்காக இன்று இவர்களை அணைத்து போகவேண்டியது அவர்களின் தார்ப்பரிய கடமை. அது  போராளிகளின் நலன் சார்ந்த அமைப்புக்களின் கடமைகளில் ஒன்றல்ல,

அனைவரையும் அணைத்துபோவது காலத்தின் கடமையென்றால், அன்று மாற்று கொள்கைகளுடன் இயங்கி அரச சுகபோகமும் அமைச்சர் பதவியும் பெற்று இன்றும் இயங்கும் பணபலம் அரசியல் பலம் கொண்ட மாற்று அரசியல் தலைவர்கள், போராளிகள் நலன்களை கவனித்து அவர்களை அணைத்து போயிருக்கலாமே?

ஒன்று சேரும் கொள்கை என்பது ஒருபக்கத்திலிருந்து மட்டுமா சிந்திக்கபடவேண்டும்?

இது இஸ்லாமியர்கள் காலம் முழுவதும் அரசுடன் சேர்ந்து இயங்குவதும், தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு பேச்சுக்கள் ஆரம்பித்தால் அதற்குள் தம்மையும் சேர்க்கவேண்டும் என்று திடீர் குரல் எழுப்பும் சபை குழப்பு  கோட்பாடு.

அதிலிருந்து நிறைய வேறுபாடு ஏதுமில்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, valavan said:

பாகுபாடின்றி  அணைத்துபோக அவர்கள் ஆரம்பிக்கபோவது அரசியல் கட்சியோ அல்லது மிக பெரும் பொருளாதார நிறுவனமோ அல்ல,  மாறாக நலிந்துபோன முன்னாள் போராளிகளின் நலன்களை கவனிக்கும் ஒரு அமைப்பாகவே நினைக்கின்றேன்.

இறுதி யுத்தம்வரை இந்த போராளிகளையும் அவர்கள் சார்ந்த அமைப்பையும் தலைமையையும் அழிப்பதையே முழுமூச்சாக கொண்ட அரச இயந்திரங்களுடன் சேர்ந்து இயங்கியவர்கள், இன்று அதே போராளிகளின் நலன் சார்ந்த கட்டமைப்புக்குள் உள் வாங்கபட வேண்டும் எனும் கருத்தில் என்ன வலுவான நியாயம் இருக்கிறது?

ஒருவேளை மாற்று கொள்கைகளில் இயங்கியவர்கள் இன்று நலிந்து போயிருந்தால் அவர்கள்  அன்று பின்னால் நின்ற அரசும் அரசியலும் நன்றிக்கடனுக்காக இன்று இவர்களை அணைத்து போகவேண்டியது அவர்களின் தார்ப்பரிய கடமை. அது  போராளிகளின் நலன் சார்ந்த அமைப்புக்களின் கடமைகளில் ஒன்றல்ல,

அனைவரையும் அணைத்துபோவது காலத்தின் கடமையென்றால், அன்று மாற்று கொள்கைகளுடன் இயங்கி அரச சுகபோகமும் அமைச்சர் பதவியும் பெற்று இன்றும் இயங்கும் பணபலம் அரசியல் பலம் கொண்ட மாற்று அரசியல் தலைவர்கள், போராளிகள் நலன்களை கவனித்து அவர்களை அணைத்து போயிருக்கலாமே?

ஒன்று சேரும் கொள்கை என்பது ஒருபக்கத்திலிருந்து மட்டுமா சிந்திக்கபடவேண்டும்?

இது இஸ்லாமியர்கள் காலம் முழுவதும் அரசுடன் சேர்ந்து இயங்குவதும், தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு பேச்சுக்கள் ஆரம்பித்தால் அதற்குள் தம்மையும் சேர்க்கவேண்டும் என்று திடீர் குரல் எழுப்பும் சபை குழப்பு  கோட்பாடு.

அதிலிருந்து நிறைய வேறுபாடு ஏதுமில்லை.

இந்த்ச் சிந்தனை முறை இவர்களுக்கும் மட்டுமே உரித்தானது அல்ல. 

"இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள்”

என்பதன் ஊடாக நாங்களாகவே எமக்கு முன்னால் ஒரு தடையைப் போட்டுவிடுகிறோம். இது எப்போதும் எங்களைப் பிரித்து வைத்திருக்கும் என்பதை தாங்கள் உணரவில்லையா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

விளங்கவில்லையா அண்ணை?

RAW 87 இல் சொன்ன அதே விடயம்தான், தங்கள் அல்லகைகளையும் சேர்த்து கொள்ள வேண்டுமாம்🤣

இதுகள் எப்பவுமே அழிவையும் பலத்தை சிதைப்பதையும் சுயநலங்களை மட்டும் முன்னிறுத்துபவர்களாகவும் மட்டுமே உள்ளனர்

போராளிகளுக்கு ஒரே நாளில் அஞ்சலிக்கலாம் என்றபடி மாவீரர் நாளை மாற்றணும் என்பதில் மட்டும் பிடிவாதமாக இருப்பவர்களும் இவர்களே. கொஞ்சம் பழகியதால் களை எடுத்தலை அனுபவம் ஊடாக உணர்ந்ததுண்டு.😭

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.