Jump to content

இனப்பிரச்சினையை தீர்த்து புலம்பெயர் தமிழர்களது முதலீட்டைப்பெற்று இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே பேச்சுவார்த்தையின் நோக்கம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினையை தீர்த்து புலம்பெயர் தமிழர்களது முதலீட்டைப்பெற்று இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே பேச்சுவார்த்தையின் நோக்கம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

By DIGITAL DESK 2

12 DEC, 2022 | 11:10 AM
image

இந்த இனப்பிரச்சினையை தீர்த்து புலம்பெயர் தமிழர்களது முதலீட்டையும் நிரப்பி, ஒட்டுமொத்தமாக இந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவற்கு ஒரு மிகப்பெரிய தேவை ஒன்று இருப்பதால் நாங்கள் எங்களுடைய முக்கியத்துவத்தை இந்த சந்தர்ப்பத்தில் விளங்கிக் கொண்டு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படவர்கள் என்ற வகையில் செயற்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

 

கடந்த  வெள்ளிக்கிழமை (டிச. 9) அன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற குறுந்தகவல் ஒன்றில், நாளை செவ்வாய்க்கிழமை (டிச.13)  சர்வகட்சி தலைவர்களின் கூட்டத்துக்கான அழைப்பு ஒன்று கிடைத்ததாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

இதுவரை எழுத்து மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கு முன்பு பல தடவைகள் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருக்கின்றோம். இந்த பேச்சுவார்த்தை தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக குறித்த அறிவித்தலில் இருக்கவில்லை.

ஜனாதிபதி பல தடவைகள் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இது தவிர அது ஆக்கபூர்வமாக  இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை எட்டுவதற்காக மட்டும் நடைபெறும் பேச்சுவார்த்தையாக இது வரை அறிவிக்கவில்லை.

எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடைபெற்று தோல்வியடைந்தன. நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தையிலும் தமிழ் மக்களே ஏமாற்றமடைந்திருக்கின்றார்கள். தொடர்ந்தும் நாங்கள் இந்த பேச்சுவார்த்தையில் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. ஏன் என்றால் இன்றைக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் சாதாரண சந்தர்ப்பம் இல்லை.

இந்த இனப்பிரச்சினையை தீர்த்து புலம்பெயர் தமிழர்களது முதலீட்டையும் நிரப்பி, ஒட்டுமொத்தமாக இந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவற்கு ஒரு மிகப்பெரிய தேவை ஒன்று இருப்பதால் நாங்கள் எங்களுடைய முக்கியத்துவத்தை இந்த சந்தர்ப்பத்தில் விளங்கிக் கொண்டு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படவர்கள் என்ற வகையில் செயற்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் போன்ற தரப்புக்கள் நாங்கள் கூறிய அணுகுமுறையை கடைப்பிடித்து இருந்தால் இந்த அரசாங்கத்துக்கு உண்மைத்தன்மையிலே சிங்கள மக்களிடம் பேச முடியாத நிலை உருவாகும்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர ஏனைய அனைத்து தரப்புக்களும் நிபந்தனை இல்லாமல் சமஷ்டி சமஷ்டி என்று மக்களுக்கு ஒரு முகத்தை காட்டிக் கொண்டு ஒரு நிபந்தனையும் போடாமல் விடப்போகின்றார். அந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு அவர்களுக்கு தேவையான அங்கீகாரத்தை கொடுத்து விடுவதாகத் தான் இருக்கும்.

ஆகவே மக்கள் அனைத்தையும் விளங்கிக் கொண்டு எங்களுடைய அணுகுமுறை மட்டும் தான் இந்த அரசாங்கத்தையும் சிங்கள தேசத்தை இந்த நேரத்திலாவது, தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக ஒரு ஆக்கப்பூர்வமாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ளக்கூடிய ஒரு நிலைமை உருவாக்கும் என்ற விடயத்தையும் கூறி, இதை நாங்கள் நழுவ விட்டால், தமிழ் மக்கள் உடைய இனப்பிரச்சினை என்ற எல்லையை தாண்டி எட்டமுடியாத இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆபத்துக்கள் இருக்கின்றது. அதுக்கு முழு பொறுப்பும் இந்த பேச்சுவார்தையில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நடந்து கொண்ட தரப்புக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/142851

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

உங்களுடைய அணுகுமுறைதான் என்ன?

சம்சும் கோஷ்டிய ஒதுங்கி இருக்கச்சொல்லுங்கோ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சம்சும் கோஷ்டிய ஒதுங்கி இருக்கச்சொல்லுங்கோ....

சொன்னால் கேட்டத்தானே.

ஆனால் உப்பிடி அவைய இவைய கை காட்டி…தப்பிப்பது நேர்மையான அரசியலா?

அவர்கள் செய்வதை விட எப்படி நாம் வித்தியாசமாக விடயத்தை அணுகுவோம் என சொல்லி நிலைபாட்டு அரசியல் செய்வதுதானே கீரை கடைக்கு எதிர் கடை போடுவோர் செய்ய வேண்டியது?

அவை கடையை மூடினாத்தான் நாம் விற்பனையை துவக்குவம் எண்டால்?

பிகு

சம்+சும் = சுத்துமாத்து = கஜே+கஜே

என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

சொன்னால் கேட்டத்தானே.

ஆனால் உப்பிடி அவைய இவைய கை காட்டி…தப்பிப்பது நேர்மையான அரசியலா?

அவர்கள் செய்வதை விட எப்படி நாம் வித்தியாசமாக விடயத்தை அணுகுவோம் என சொல்லி நிலைபாட்டு அரசியல் செய்வதுதானே கீரை கடைக்கு எதிர் கடை போடுவோர் செய்ய வேண்டியது?

அவை கடையை மூடினாத்தான் நாம் விற்பனையை துவக்குவம் எண்டால்?

பிகு

சம்+சும் = சுத்துமாத்து = கஜே+கஜே

என்பது என் கருத்து.

வாறவன் போறவன் சிங்களவன் எண்டு எல்லாரும் தமிழர் பிரச்சனைக்கு சம்பந்தனை மட்டும் தானே  தேடிப்போயினம். தமிழர் பிரதிநிதிகள் எண்டு உத்தியோகபூர்வமாக அவையளத்தானே சிங்களமும் கையை காட்டுது. 

வாறவன் போறவன் வெளிநாட்டு பிரமுகர்களை குறிப்பதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

வாறவன் போறவன் சிங்களவன் எண்டு எல்லாரும் தமிழர் பிரச்சனைக்கு சம்பந்தனை மட்டும் தானே  தேடிப்போயினம். தமிழர் பிரதிநிதிகள் எண்டு உத்தியோகபூர்வமாக அவையளத்தானே சிங்களமும் கையை காட்டுது. 

வாறவன் போறவன் வெளிநாட்டு பிரமுகர்களை குறிப்பதாகும்.

இவை வாறவன் போறவனுக்கு அரசியல் செய்யினமோ? அல்லது தம் மக்களுக்கோ?

அவன் எங்க போனால் உவைக்கு என்ன?

உங்கள் மக்களுக்கு உங்கள் நிலை என்ன, என்ன அணுகுமுறை, தீர்வை பெற என்ன பாதை திட்டம் (road map) வச்சிருக்கிறியள் எண்டு சொல்ல வேண்டாமோ?

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இவை வாறவன் போறவனுக்கு அரசியல் செய்யினமோ? அல்லது தம் மக்களுக்கோ?

அவன் எங்க போனால் உவைக்கு என்ன?

உங்கள் மக்களுக்கு உங்கள் நிலை என்ன, என்ன அணுகுமுறை, தீர்வை பெற என்ன பாதை திட்டம் (road map) வச்சிருக்கிறியள் எண்டு சொல்ல வேண்டாமோ?

 எல்லாரும் பிழை எண்டால் உங்கள் தெரிவு என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

 எல்லாரும் பிழை எண்டால் உங்கள் தெரிவு என்ன?

எல்லாரும் பிழை என்பதால் இப்போதைக்கு எவரும் இல்லை.

நான் நினைக்கிறேன் எனது மட்டும் அல்ல பலரின் நிலையும் இதுவே.

சம்+சும் தலைமையிலான தமிழரசு, கஜே+கஜே, இவர்கள் இருசாராரையிம் தவிர்ந்த ஒரு தலைமை, கட்டமைப்பு வந்தால் - அவர்கள் செயல்பாடு, கொள்கை விளக்கத்தை பார்த்து ஆதரிக்கலாம்.

இப்போதைக்கு நான் ஒரு அரசியல் அநாதை.

#Political orphan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதானே  வெண்ணெய் வந்திருக்கு..
 
இனி கொக்கை தேடிப்பிடிச்சு 
தலையில வெண்ணெய் வைச்சி '
உருகி கண்ணுக்குள்ள போகும் வரை காத்திருந்து '
பின்னர் கொக்கை லபக்கெண்ண்டு பிடிக்கிறத்துக்கு 
கொஞ்ச நாளாகும் பாய்ஸ் ...😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

எல்லாரும் பிழை என்பதால் இப்போதைக்கு எவரும் இல்லை.

நான் நினைக்கிறேன் எனது மட்டும் அல்ல பலரின் நிலையும் இதுவே.

சம்+சும் தலைமையிலான தமிழரசு, கஜே+கஜே, இவர்கள் இருசாராரையிம் தவிர்ந்த ஒரு தலைமை, கட்டமைப்பு வந்தால் - அவர்கள் செயல்பாடு, கொள்கை விளக்கத்தை பார்த்து ஆதரிக்கலாம்.

இப்போதைக்கு நான் ஒரு அரசியல் அநாதை.

#Political orphan

விக்கியர்ரை வாடை அடிக்குது....ஏதும் நினைச்சனீங்களே? இல்லைத்தானே 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

விக்கியர்ரை வாடை அடிக்குது....ஏதும் நினைச்சனீங்களே? இல்லைத்தானே 😂

நான் 2013 இல் வரும் போது அவரின் முழு வாடையோடுதானே வந்தனான்🤣. அதை மறைக்கவும் இல்லை.

அப்ப அதை எதிர்த்து “சிங்கள சம்பந்தி” என போர் முழக்கம் செய்த ஆட்கள் எல்லாம் நாட் செல்ல, செல்ல அவர் அவ்வளவு மோசம் இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு வந்தவைதானே.

பிறகு வடமாகாண சபை பிரேரணைகள் நிறைவேற்ற அவர் அவர்களின் ஹீரோவும் ஆகி போனார் 🤣.

தனிப்பட்டு, விக்கியர் பெட்டி வாங்க மாட்டார், களவு எடார், பணத்துக்கு விலை போகார் என்பதில் இன்று வரை மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் இந்தியாவை, இலங்கையை, மேற்கை வெட்டி ஆடும் தகமையோ, ஒரு இராஜதந்திரிக்கு வேண்டிய நுண்ணறிவோ அவரிடம் இருக்கிறாதா என்பதில் பாரிய சந்தேகம் உண்டு. 

இது உள்ளோரை சூழ வைத்திருபதாயும் தெரியவில்லை.

ஆனால் - சம்+சும், கஜே+கஜே போல் கடைந்தெடுத்த சுயநலமிகள் என அவரை நான் சொல்லமாட்டேன் (இன்னும்).

ஆனால் ஆதரவும் இல்லை.

ஆகவே இன்னும் அநாதைதான்.

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கசப்பான உண்மை என்ன என்றால் தமிழ் அரசியல் கட்ச்சிகளுக்கும சில புலம்பெயர்ந்தோருக்கும இனப்பிரச்சனைக்கு தீர்வு வருவதில் விருப்பம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஏராளன் said:

இனப்பிரச்சினையை தீர்த்து புலம்பெயர் தமிழர்களது முதலீட்டையும் நிரப்பி, ஒட்டுமொத்தமாக இந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவற்கு ஒரு மிகப்பெரிய தேவை

IMG-20221213-114653.jpg

இன்பநிதி போல கொள்ளு பேரப்பிள்ளையின்ர அரசியலுக்கும் அடிபோடுறார் போல..

யார் குத்தி அரிசியானாலும் சரி..👍 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.