Jump to content

மகாராஷ்டிரா: 250 நாய்க்குட்டிகளைக் கொன்ற குரங்குகள் - மிருகங்களுக்கும் பழிவாங்கும் குணம் இருக்கிறதா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
குட்டியைக் கொன்றதற்காக நாய்களை ஸ்கெட்ச் போட்டு குரங்குகள் கொல்லும் சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியிருக்கிறது. பழிவாங்குவது மனிதனுக்கே உரியக் குணம் என நாம் நினைத்துக்கொண்டிருக்க மற்ற விலங்கினங்களிடம் இந்தப் பழிவாங்கும் உணர்வு காணப்படுகிறது என அவ்வப்போது சில சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

'கோவில்' படத்தில் புல்லட் பாண்டியை ஞாபகம் வைத்து விலங்குகள் பழிவாங்குவது போல் உண்மையிலும் சில சம்பவங்கள் நடந்திருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவில் பெண் புலியைக் கொன்ற வேட்டைக்காரனைத் தேடிவந்து ஆண் புலி கொன்றதாகச் செய்திகள் வெளியாகின. பழிதீர்க்கவே இதை அந்தப் புலி செய்ததாக அந்த ஊர் மக்கள் தெரிவித்தனர். ஆனால், விலங்கு ஆர்வலர்கள் அப்படித் திட்டம் போட்டுக் கொல்லும் திறன் புலிகளுக்கு இருக்க வாய்ப்பில்லை என்றனர்.

பழிவாங்கும் குரங்குகள்!

 

பழிவாங்கும் குரங்குகள்!

 

இதே போன்று இமாச்சல் பிரதேசத்திலிருந்து உத்தரப்பிரதேசம் வரை பயணம் செய்த ஒரு பெண் சிறுத்தை பிடிபட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுத்தையின் இந்த நீண்ட பயணத்தின் நோக்கம் என்னவென்று முதலில் யாருக்கும் தெரியவில்லை. தனது குட்டிகளைக் கடத்தி கொன்ற வேட்டைக்காரனைத் தேடியே இந்தப் பாதையில் சிறுத்தை பயணித்திருக்கக்கூடும் என பின்பு தெரியவந்தது.

இப்படிச் சில சம்பவங்கள் இருந்தாலும் இந்த விலங்குகளுக்குப் பழிவாங்கும் உணர்வு இருக்கிறது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்க போதிய ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. முதல்கட்டமாகப் பரிணாம வளர்ச்சியில் மனிதர்களுக்கு முந்தைய படிநிலையில் இருக்கும் குரங்கினங்களில் இந்த பழிவாங்கும் உணர்வு இருக்கிறதா என ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சிம்பன்சி உட்பட சில இனங்களில் அது நிச்சயம் இருப்பதாக இந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சரி இப்போது சம்பவத்திற்கு வருவோம்!

மகாராஷ்டிரா மாநிலத்தின் லாவூல் கிராமத்தில் நாய்களைக் குரங்குகள் தேடிச் சென்று கொல்லும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு குரங்கு குட்டி ஒன்றைச் சுற்றிவளைத்துக் கடித்துக் கொன்றிருக்கிறது ஒரு நாய் கூட்டம். அன்றிலிருந்து தொடங்கியிருக்கிறது குரங்குகளின் இந்த வேட்டை. கண்ணில் படும் நாய்க்குட்டிகளை எல்லாம் பெரும் கட்டடங்கள், மரங்கள் போன்ற உயரமான இடங்களுக்குத் தூக்கிச்சென்று கீழே வீசிக் கொன்று வருகின்றன இந்தக் குரங்குகள்.

சுமார் 250 நாய்க்குட்டிகளை இதுவரை இப்படிக் கொன்றிருக்கலாம் என்கிறார்கள். இதனால் ஒவ்வொரு நாளும் இந்தக் கிராமத்தில் நாய்களுக்கும் குரங்குகளுக்கும் இடையே பெரும் யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் கிராம மக்கள் இதைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட அவர்கள் மீதும் கோபத்தைக் காட்ட ஆரம்பித்திருக்கின்றன இந்தக் குரங்குகள். குரங்குகளின் இந்த போக்கால் சிலர் காயமடைந்துள்ளனர். இப்போது பள்ளி செல்லும் குழந்தைகளையும் குரங்குகள் அச்சுறுத்தத் தொடங்கியதால் மக்கள் வனத்துறையிடம் புகாரைக் கொண்டு சென்றனர்.

இதனையடுத்து லாவூல் கிராமத்திற்கு வந்த நாக்பூர் வனத்துறையினர் இந்தக் கொலைகளில் ஈடுபடும் முக்கியமான குரங்குகள் இரண்டையும் பெரும் போராட்டத்திற்குப் பிறகு பிடித்துச் சென்றுள்ளனர். பிடிபட்ட இந்தக் குரங்குகளை அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்துள்ளனர். இந்த விசித்திர சம்பவம் உலக கவனம் பெற்றிருக்கிறது. #MonkeyvDoge என்ற ஹேஷ்டேக்கில் செம கலாட்டாவான மீம்ஸ் பகிரப்பட்டு வருகின்றன.

https://www.vikatan.com/living-things/animals/monkeys-take-revenge-on-dogs-kills-250-puppies

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

குட்டியைக் கொன்றதற்காக நாய்களை ஸ்கெட்ச் போட்டு குரங்குகள் கொல்லும் சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியிருக்கிறது.

ஆனந்த விகடன் என்று திமுகாவின் கையில் போனதோ அன்றே தமிளின்கிளிஸ் புகுத்தப்பட்டு விட்டது .

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.