Jump to content

லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன், கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன், கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்!

லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன், கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்!

இந்தியாவின் டொக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் லைக்கா ஹெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

தெலுங்காணா மாநில ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த கௌரவ கலாநிதிப்பட்டத்தை  வழங்கி  கௌரவித்துள்ளார்.

P9-600x433.jpeg

லைக்கா ஹெல்த்தின் (lyca Health) நிறுவனரும் தலைவருமான திருமதி பிரேமா சுபாஸ்கரன் வைத்தியத் துறைசார் சேவையில் பிரதான இடத்தை தக்கவைத்துள்ளார்.

லைக்கா ஹெல்த்தின் (lyca Health) தலைவரான பிரேமா சுபாஸ்கரன் ஒரு முக்கிய தொழில்முனைவோராகவும், பரோபகாரியாகவும் விளங்குகிறார். வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவ சேவையை அணுகுவதில் குறிப்பாக கவனம் செலுத்துகிறார். 2015 இல் Lyca Health ஐ நிறுவி அதன் தலைவராகவும் தொடர்கிறார்.

பிரேமா சுபாஸ்கரன்  வைத்திய துறைசார்ந்த புதிய சந்தைகளில் விரிவாக்கம் மற்றும் மையங்களின் ஒட்டுமொத்த இயக்கம் உட்பட வணிகத்தின் செயல்பாட்டு மற்றும் மூலோபாய வளர்ச்சியை மேற்பார்வையிடுகிறார்.

2015 ஆம் ஆண்டில் Lyca Health இன் கனரி வார்ஃப் கிளினிக்கை ஆரம்பித்தார. அப்போது லண்டன் மேயராக இருந்த பிரிட்டனின் முன்னாள் பிரதமரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பொரிஸ் ஜோன்சன்   திறந்து வைத்திரு்தார்.

1Poris-600x368.jpg

இதேவேளை  Lyca Health, இலங்கை மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கையில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு ஏற்கனவே நன்கொடை  வழங்கியுள்ளது.

Lyca Group இன் நோக்கத்தின் ஒரு பகுதியாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் இரண்டு வெவ்வேறு திட்டங்களுக்கு LycaHealth இன் நன்கொடை ஆதரவளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

4-600x424.jpg

2021 செப்டம்பரில் பிரிட்டனின் முக்கிய வைத்தியசாலைகளில் ஒன்றான Kent உள்ள, 100 படுககைகள கொண்ட    KIMS Hospital ஐ வாங்கியதன் மூலம்  Lyca Health ஐ மேலும் விரிவாக்கி உள்ளார்.  . (KIMS Hospital, the largest independent hospital in Kent, has today, Thursday 14th October 2021 announced that Lyca Health, has invested in KIMS Hospital.)

P5-400x600.jpeg

பிரேமா சுபாஸ்கரன் 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஆவார், இது உலகெங்கிலும் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் சமூகங்களுக்கு, குறிப்பாக இந்தியா, இலங்கை மற்றும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளுக்கு வாய்ப்புகளையும் ஆதரவையும் வழங்குவதற்காக நிறுவப்பட்டது.

2mrs-subaskaran--600x339.jpg

Lyca குழுமத்தின் CSR முன்முயற்சிகளுக்கு அவர்  தலைமையும்  தாங்குகிறார், இதில், அண்மையில், UK அல்சைமர்ஸ் ஆராய்ச்சியின் முக்கிய பணிகளுக்கான நிதியுதவி, கறுப்பு இன மக்கள் உள்ளிட்ட  சிறுபான்மை இன (BAME) சமூகங்களுக்கு நோய், அதன் அடையாளம் மற்றும் தடுப்பு பற்றிய கல்வி மற்றும் அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது.

பிரேமா சுபாஸ்கரன் யாழ் மருத்துவ பீட மாணவியாக பயின்றபோது இடைவிலகி பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தார். பிரித்தானியாவில் தனது கல்வியை தொடர்ந்த அவர்,  பயோமெடிக்கல் அறிவியலில் முதுகலைமானிப் பட்டம் பெற்றவர்.

3mrs-subaskaran-1-600x338.jpg

மனிதாபிமான சேவைகளுக்காக சிறந்த பெண்மணி விருதுகளான (G.O.D) ஹவுஸ் ஆஃப் கொமன்ஸ் மற்றும் சர்வதேச உத்தியோகபூர்வ டிக்னிட்டி விருது (G.O.D), அரசியல், பொது வாழ்க்கை மற்றும் வணிகம் என்பவற்றிற்கான ஆசியாவின் குரல்  விருது 2018, மற்றும் மனிதாபிமான சேவைகளுக்கான ஐநாவின் சிறந்த பெண்மணிக்கான விருது 2017 ஆகிய விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. (Winner of the Asian Voice Political and Public Life Businessperson of the Year Award 2018 at the House of Commons and Global Officials of Dignity Awards (G.O.D)

un-prema-338x600.jpeg

Distinguished Woman of the Year 2017 at UN for humanitarian services.)

UN-600x315.jpg

டொக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.

DR-MGR-UNi-568x600.png

P2-1-600x400.jpeg

P3-600x400.jpeg

P4-600x400.jpeg

P6-600x401.jpeg

P7-400x600.jpeg

P8-600x400.jpeg

P9-1-600x433.jpeg

P10-600x400.jpeg

P11-600x400.jpeg

P12-600x400.jpeg

P13-600x400.jpeg

P14-600x400.jpeg

P16-600x400.jpeg

P17-397x600.jpeg

https://athavannews.com/2022/1314880

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் லைக்கா குழுமத்துக்கு.........!  💐

நன்றி சிறியர்.......!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இவர்களால் 5 மாடிக்  கட்டடம் கட்டப்படுகிறது. 

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேமா சுபாஸ்கரனுக்கு.வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.