Jump to content

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

கோடு போட்டுக்கொடுத்தால் அதையே ரோடாக மாற்ற முயற்சிக்கோணும். பலரும் சென்னை மூலமாக யாழ்ப்பாணம் வர ஆரம்பித்தால் தானாகவே பெரிய விமானங்கள் வந்து செல்ல அடிகோலும், அதற்கேற்ப பயணப் பொதிகளின் எடையையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனக்கு தெரிந்து மதுரை விமான நிலையத்துக்கு ஆவ்ரோ ரக விமானங்களே சில வருடங்கள் வரை வந்து சென்றன. இப்பொழுதுதான் ஏர்பஸ் A320 ரக பெரிய விமானங்கள் சர்வதேச அளவில் (துபாய், சிங்கப்பூர்) போன்ற நாடுகளுக்கு செல்கின்றன. ஆகவே புலம்பெயர்தவர்களில் வருகையை ஒட்டியே யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமாக மாற வாய்ப்புள்ளது, இல்லையேல் மத்தள விமான நிலையம் மாதிரி நெல் காயப்போட, வைக்கோல் பொதிகளை அடுக்க யாழ்ப்பாண விமான நிலையத்தை பயன்படுத்த நேரிடும்.

நீங்கள் சொன்னது போல் நடந்தால் ரொம்ப மகிழ்ச்சியடைவேன்....அப்படி நடக்கும் சத்தியம் இருக்குமாயின்  இலங்கையில் தமிழர் பிரச்சனை என்று ஒன்று இருக்க வாய்ப்புகள் இல்லை...முழு புலம்பெயர் தமிழர்களும் பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தினாலும்.  உங்கள் மதுரை விமான நிலையம் வளர்ச்சி அடைந்தது போல் பலாலி விமான நிலையம் வளரப்போவதில்லை ...சிங்கள அரசு ஒத்துழைப்பு வழங்கினாலும்.  சிங்கள இனவாதிகள். விடமாட்டார்கள். ...இன்றைக்குக்கூட  கனடா பிரித்தானியா ஜேர்மனி பிரான்ஸ்   அமெரிக்கா அவுஸ்திரேலியா.....போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக பலாலிக்கு விமானம் இருந்தால் நிறையவே புலம்பெயர் தமிழர்கள் வருவார்கள்’’      ஆனால் கொழும்பு விமான நிலையம் மூடவும் வேண்டி வரலாம்” .....வரும்    மேலும் இங்கே பல இலங்கை தமிழர்கள் குடியுரிமை பெறும் வாய்ப்புகள் இருந்தும் கூட    இலங்கை பாஸ்போர்ட் இல். காலவரையின்றி வதிவிட விசா பெற்று இருக்கிறார்கள்  அவ்வளவு காதல் இலங்கையில்    ஆனால் இங்குள்ள இலங்கை தூதுவராகங்களில்.  புதிய பாஸ்போர்ட் அல்லது பாஸ்போர்ட் இன் காலத்தை நீடிப்பு செய்யும் போது   இலங்கைக்கு போனால் திரும்ப ஜேர்மனி வர முடியாது என்று அடித்து கொடுக்கப்படுவதால் பலர் இலங்கை போக விரும்பியும்  போகவில்லை    கொழும்பு விமான நிலையத்திலும். இதே பிரச்சனை    இவர்களுக்கு இங்கே தங்க.   ....வாழ   விசா உண்டு    இறுதியாக ஈழவன்னியன்.  🤣   இல்லை இல்லை...ராஜாவன்னியன்.  நீங்கள் இவ்வளவு இலங்கை தமிழர்களுடன் நெடுங்காலமாக பழகியும்  இன்னும் இலங்கை தமிழர்கள் பிரச்சனை பற்றிபூரணமாக அறியவில்லையென்பது கவலையளிக்கிறது 😂🤣

Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு ப

ராசவன்னியன்

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா. உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உ

ராசவன்னியன்

அப்படியல்ல, ஐயா. பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையி

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

 

கூரியர் மூலம் அனுப்பும் பொருட்கள் கொழும்புக்கு போய் சுங்க இலாகா வரிகள்கட்டி எடுக்கணுமா?

இல்லை யாழில் வீடு வந்து சேருமா?

நான் முந்தி அனுப்பும் போது (2020 முன்) புதிய சாமன்கள், எலெக்டிரோனிக் இருக்கா என கேட்பார்கள் இல்லை என்றால் தனியாக வரி ஏதும் இல்லை.

வரி ஏதும் இல்லை, இருந்தாலும் அவர்கள் அறவிடும் தொகையில் வரிகளும் அடக்கம் என நினைக்கிறேன்.    வீட்டில் கொண்டு போய் கொடுப்பார்கள்.

பாவித்த (நல்ல நிலையில் உள்ள) சாறிகள், புத்தகங்கள், உலர் உணவுகள், புதிய விளையாட்டு சாமன்கள், ஒரு தரம் 2 மாதம் நிற்கும் போது குழந்தைக்கு தேவையான பொருட்கள் (பம்பர்ஸ்), புதிய விளையாட்டு உபகரணங்கள் (பேட், பாட்ஸ்) அனுப்பி உள்ளேன். 

அதே போல் ஒரு மணப்பெண் “இலக்கியா” பலகாரம்தான் வேணும் எண்டு அடம்பித்து, அதையும் கொழும்புக்கு அனுப்பி உள்ளேன்.

ஒரு போதும் வரி கட்டிய நியாபகம் இல்லை.

நான் சொல்வது சரிதானே @பெருமாள்@Nathamuni?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேக்கில தமிழும் இல்லை, சிங்களமும் இல்லை. 😁
நாங்களாவது சிங்களரோட சிங்கள சிறீ கார் நம்பர் பிளேட்டில போடு என்டதுக்கே சண்டை பிடித்தோம்.

இந்தி தவிர்ந்த மாநிலம், தமிழகத்தில் கூட, ரயில் நிலையங்களில், இந்தி..... இந்தியே தான்.... 🥴

 

4 hours ago, ராசவன்னியன் said:

முதலில் விமான நிலையத்தை லாபகரமானதாக நடத்த ஜெர்மனியிலிருந்து சென்னை மூலமாகவேனும் யாழ்ப்பாணம் வரப்பாருங்கள். எடுத்த எடுப்பிலேயே அத்தனை விமானங்களும் வந்திடுமா? புலத்திலிருக்கும் அத்தனை சனங்களும் உபயோகிக்க வெளிக்கிட்டால் யாழ் விமான நிலையம் சர்வதேசமாகாதா ஐயா?

மனமிருந்தால் மார்க்கபந்து ச்சீ.. மார்க்கமுண்டு, முன்னேற்றமும் உண்டுடூடூடூ…😎 

நான் நிச்சயம் வருவேன், ஆனால் அங்கே எனக்கு யாரையும் தெரியாதே? சுற்றுலா பயணமாக ஓரிரு நாள் தங்கி பார்க்கலாம்.

ஏன் தெரியாது?

யாழில் ஏராளன். மட்டக்கிளப்பில தனி.....

அது சரி..... சென்னை வழியே வர ரிராண்சிற் விசா தேவையில்லை என்றால் தான் சனம் வரும். இலங்கைப் பாஸ்போட் விசா கட்ணம் குறைவு.

நமக்கு £153 தேவையில்லா தண்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

கேக்கில தமிழும் இல்லை, சிங்களமும் இல்லை. 😁
நாங்களாவது சிங்களரோட சிங்கள சிறீ கார் நம்பர் பிளேட்டில போடு என்டதுக்கே சண்டை பிடித்தோம்.

இந்தி தவிர்ந்த மாநிலம், தமிழகத்தில் கூட, ரயில் நிலையங்களில், இந்தி..... இந்தியே தான்.... 🥴

 

அஸ்கு புஸ்கு, இப்போதைக்கு டாட்டா இந்திதான் போடுவான். தமிழ் நாட்டு பாங்கிலயே சேட்டை விட்டவனுகள், வெளிநாட்டு விமான சேவையில்? 

ரூட் நல்லா ஓடினால் லைக்காட்ட சொல்லி ஒரு பிளைட்டை இறக்குங்கோ, கேக் என்ன தமிழ்ல பாயாசமே ஊத்துவோம்🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

அதே போல் ஒரு மணப்பெண் “இலக்கியா” பலகாரம்தான் வேணும் எண்டு அடம்பித்து, அதையும் கொழும்புக்கு அனுப்பி உள்ளேன்.

 

சரிதான்....

அதுசரி....

யாரப்பா அடம் பிடித்த மணப்பெண், இலண்டன் பலகாரம் கேட்டு அடம் பிடிச்சது?

மனிசன் துளைஞ்சார்...

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

கேக்கில தமிழும் இல்லை, சிங்களமும் இல்லை. 😁
நாங்களாவது சிங்களரோட சிங்கள சிறீ கார் நம்பர் பிளேட்டில போடு என்டதுக்கே சண்டை பிடித்தோம்.

இந்தி தவிர்ந்த மாநிலம், தமிழகத்தில் கூட, ரயில் நிலையங்களில், இந்தி..... இந்தியே தான்.... 🥴

 

ஏன் தெரியாது?

யாழில் ஏராளன். மட்டக்கிளப்பில தனி.....

அது சரி..... சென்னை வழியே வர ரிராண்சிற் விசா தேவையில்லை என்றால் தான் சனம் வரும். இலங்கைப் பாஸ்போட் விசா கட்ணம் குறைவு.

நமக்கு £153 தேவையில்லா தண்டம்.

புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து  தமிழ் ஈழ விமான Air என்று தொடங்குவோமா.?

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

சரிதான்....

அதுசரி....

யாரப்பா அடம் பிடித்த மணப்பெண், இலண்டன் பலகாரம் கேட்டு அடம் பிடிச்சது?

மனிசன் துளைஞ்சார்...

🤣 எல்லாம் லண்டன் பார்ட்டிதான்,  கலியாணம் ஊரில நடந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அது கொழும்பு போறது?

எங்கட அமைச்சர்மார் வந்திருப்பினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இந்தியன் போட்ட ரன்வேயில் சீன விமானம் இறங்கினால் அதன் கற்புக்கு களங்கம்🤣.

ஆகவே சன்ஹாய் - சங்கானைய் தான் சரி வரும்

 யூ மீன் ஈழத்து சங்காய் நம்ம சங்கானை? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

வரி ஏதும் இல்லை, இருந்தாலும் அவர்கள் அறவிடும் தொகையில் வரிகளும் அடக்கம் என நினைக்கிறேன்.    வீட்டில் கொண்டு போய் கொடுப்பார்கள்.

நீங்கள் வீடு என்று குறிப்பிடுவது கொழும்பா?யாழா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் வீடு என்று குறிப்பிடுவது கொழும்பா?யாழா?

மட்டக்களப்பு. 😂🤣   என்று  @ரதி சொன்னவ. 
தமிழ்சிறி…. எஸ்கேப்பு. 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

எங்கட அமைச்சர்மார் வந்திருப்பினம்.

ஓம்

38 minutes ago, குமாரசாமி said:

 யூ மீன் ஈழத்து சங்காய் நம்ம சங்கானை? :cool:

அதேதான். முன்னர் எங்கட தோழர்கள் சீனாவில் மழை பிடித்தால் சங்காணையில்தானாமே குடை பிடிப்பார்கள்🤣

31 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் வீடு என்று குறிப்பிடுவது கொழும்பா?யாழா?

கொழும்பு, யாழ், மட்டகளப்பு

26 minutes ago, தமிழ் சிறி said:

மட்டக்களப்பு. 😂🤣   என்று  @ரதி சொன்னவ. 
தமிழ்சிறி…. எஸ்கேப்பு. 😁

🤣. முல்லைதீவு வீட்டுக்கு சாமான் அனுப்பியதில்லை🤣

@ஈழப்பிரியன் அண்ணா, முன்பு கொழும்பில் ராஜசிங்க ரோட்டில் போ எடுக்கோணும். பிறகு மேல் மாகாணத்தில் டோர் டிலிவரி. 2020 க்கு சற்று முன்னான காலப்பகுதியில் வட கிழகிலும் டோர் டிலிவரி வந்து விட்டிருந்தது. இப்போ தெரியாது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

* எல்லாம் என் வீடுகள் அல்ல - தங்கும் வீடுகள் 🤣

நமக்கு ஒரே வீடுதான் - யூகேயில் - துரத்தி பிடித்து கட்டியது🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி ஊருக்கு வந்து சுத்தி போற ஆட்கள் லிஸ்ட போடுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சரி ஊருக்கு வந்து சுத்தி போற ஆட்கள் லிஸ்ட போடுங்கள்

இப்ப என்ன சீன் எண்டா,

Wizz Air எண்டு ஒரு செக் கொம்பனி அபுதாபில இருந்து மத்தளக்கு பிளேன் ஓட்டுறான். அபுதாபி போய் அத பிடிச்சி வந்தா, van ஐ சியம்பாலாண்டுவைக்கால விட்டா, 4 மணதியாலதில கண்ணகை அம்மன் கோவில்ல நிக்கலாம்.

பலாலியா, மத்தளவா🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

நான் நிச்சயம் வருவேன், ஆனால் அங்கே எனக்கு யாரையும் தெரியாதே? சுற்றுலா பயணமாக ஓரிரு நாள் தங்கி பார்க்கலாம்.

யாழ்ப்பாணத்தில் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உண்டு..

👇🏽இந்த கடற்கரையும் அதன் சுற்றுப்புற சூழலும் மிகவும் அமைதியான ஒன்று. ஆனால் கவனிப்பாராற்று இருக்கிறது. இது போல இன்னமும் சில.. இந்த இடம் தாளையடி, இங்கே உள்ள கடற்கரை அழகான ஒன்று. தாளையடிக்கு அருகில் உள்ள மணற்காடும் சரி நாகர் கோவிலும் சரி.. கவனிப்பாராற்று இருக்கிறது. இப்படி பல உள்ளன. நல்லூர், யாழ்ப்பாணக் கோட்டை என்பதை விட இந்த மாதிரி இடங்களையும் பார்க்கலாம். 

large.6D47BF44-DE38-403B-83DB-0AEAE1B537C3.jpeg.eb2b0dcd802d6ec31d0ca195286bb207.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

நான் நிச்சயம் வருவேன், ஆனால் அங்கே எனக்கு யாரையும் தெரியாதே? சுற்றுலா பயணமாக ஓரிரு நாள் தங்கி பார்க்கலாம்.

கீரிமலை உச்சியில், ஏறி நின்று பார்த்தால்….
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தெரியும் என்று பலர் சொல்வார்கள்.
ஆனால் நான் ஏறி நின்று பார்த்த போது…
வானம், மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

கீரிமலை உச்சியில், ஏறி நின்று பார்த்தால்….
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தெரியும் என்று பலர் சொல்வார்கள்.
ஆனால் நான் ஏறி நின்று பார்த்த போது…
வானம், மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. 😁

இது யார் விட்ட புலுடா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

கீரிமலை உச்சியில், ஏறி நின்று பார்த்தால்….
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தெரியும் என்று பலர் சொல்வார்கள்.
ஆனால் நான் ஏறி நின்று பார்த்த போது…
வானம், மப்பும் மந்தாரமுமாக இருந்ததால் ஒன்றும் தெரியவில்லை. 😁

மப்பில ஏறி நிண்டு பார்த்தன், ஒரே மந்தாரமா இருந்தது எண்டெல்லே நான், பிழையா வாசிச்சுப் போட்டன். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

யாழ்ப்பாணத்தில் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உண்டு..

வணக்கம் பிரபா நீண்ட நாட்களின் பின் காண்பது சந்தோசம்.

உங்கள் அப்பாவின் உடல்நிலை எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இது யார் விட்ட புலுடா? 

 

2 minutes ago, Nathamuni said:

மப்பில ஏறி நிண்டு பார்த்தன், ஒரே மந்தாரமா இருந்தது எண்டெல்லே நான், பிழையா வாசிச்சுப் போட்டன். 😎

இதைப் பார்த்திட்டு… @ராசவன்னியன் பலாலிக்கு, ரிக்கற் போடப் போறார். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

 

இதைப் பார்த்திட்டு… @ராசவன்னியன் பலாலிக்கு, ரிக்கற் போடப் போறார். 😁

இஞ்ச இருந்த என் மலைய காணோம் சார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இஞ்ச இருந்த என் மலைய காணோம் சார்🤣

ராசவன்னியன், கீரி மலையில் ஏறிப் பார்க்க முன்னம்,
மலையை ஆட்டையை போட்டுட்டாங்க சார். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

யாழ்ப்பாணத்தில் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உண்டு..

👇🏽இந்த கடற்கரையும் அதன் சுற்றுப்புற சூழலும் மிகவும் அமைதியான ஒன்று. ஆனால் கவனிப்பாராற்று இருக்கிறது. இது போல இன்னமும் சில.. இந்த இடம் தாளையடி, இங்கே உள்ள கடற்கரை அழகான ஒன்று. தாளையடிக்கு அருகில் உள்ள மணற்காடும் சரி நாகர் கோவிலும் சரி.. கவனிப்பாராற்று இருக்கிறது. இப்படி பல உள்ளன. நல்லூர், யாழ்ப்பாணக் கோட்டை என்பதை விட இந்த மாதிரி இடங்களையும் பார்க்கலாம். 

large.6D47BF44-DE38-403B-83DB-0AEAE1B537C3.jpeg.eb2b0dcd802d6ec31d0ca195286bb207.jpeg

 வணக்கம் பிரபா. 

அப்பா சுகவீனமாய் இருந்தார? நான் செய்தியை காணவில்லை. இப்போ சுகமா?

ஓம் நீங்கள் சொன்ன கடற்கரை மிக அழகானதுதான். இன்னும் கொஞ்சம் தூரம் போனால் மணல் கும்பான்கள் எல்லாம் இருக்கும். இலங்கை மாதிரியே இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு போதும் அந்த மண்ணுக்கு போய் வாழப்போவது இல்லை.. அந்த மண்ணில் வாழும் மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.. அந்த மண்ணும் மக்களும் முன்னேறவேண்டும் என்ற எண்ணமும் இல்லை.. இவர்கள் எல்லோரும் 2009 க்கு முன்னம் பாத்துவிட்டு வந்த இலங்கையின் ஞாபகத்திலேயே மிஞ்சி இருக்கும் வயோதிக காலத்தை எழுதியும் வாழ்ந்தும் கழிப்பவர்கள்.. இவர்களின் அடுத்த தலைமுறைக்கு அதைக்கூட நினைக்க நேரம் இருக்கப்போவதில்லை.. அவர்கள் உலகம் வேறு.. அதேபோல்தான் இப்பொழுது ஈழத்தில் இருக்கும் புதிய தலைமுறையின் உலகமும் வேறு.. அவர்களும் இருக்கும் சாத்தியமான வழிகளில் தாமும் தாம் சூழ்ந்திருக்கும் சமூகமும் டெவலப்பாக இருக்கவேண்டும் வேலை  வாய்ப்புகள் என்று அவர்கள் சிந்தனையே வேறு.. இவர்கள் எதிர்பார்ப்பது போல் எந்த நேரமும் போர் போர் என்று வாழ அவர்களால் முடியாது.. அவர்கள் ஏற்கனவே போரால் அனுபவித்து விட்டார்கள்.. உங்களைப்போல் ஒரு மாநில சுயாட்சி கிடைதாலே போதும் உங்களைப்போல் நாங்களும் சந்தோசமாக வாழுவோம்.. பலாலி விமான நிலையத்தை முன்னேற்ற அந்த மண்ணில் அக்கறை உள்ள எல்லா தமிழர்களும் முயற்சி செய்யவேண்டும்.. அதனால் பலன் பெறப்போவது அந்த மண்ணில் வாழும் எம் உறவுகளே.. அதை விடுத்து அந்த மக்களுக்கு நல்லது நடக்ககூடிய விடயங்களில் உதவி செய்ய விருப்பமில்லாதவர்கள் முளையிலையே கிள்ளிவிடுவதுபோலான கருத்துக்களை வைத்து உபத்திரவம் செய்யாமல் அமைதியாக இருந்தாலே அது பெரிய உதவி அம்மக்களுக்கு..

  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.