Jump to content

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

நீங்கள் சொன்னது போல் நடந்தால் ரொம்ப மகிழ்ச்சியடைவேன்....அப்படி நடக்கும் சத்தியம் இருக்குமாயின்  இலங்கையில் தமிழர் பிரச்சனை என்று ஒன்று இருக்க வாய்ப்புகள் இல்லை...முழு புலம்பெயர் தமிழர்களும் பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தினாலும்.  உங்கள் மதுரை விமான நிலையம் வளர்ச்சி அடைந்தது போல் பலாலி விமான நிலையம் வளரப்போவதில்லை ...சிங்கள அரசு ஒத்துழைப்பு வழங்கினாலும்.  சிங்கள இனவாதிகள். விடமாட்டார்கள். ...இன்றைக்குக்கூட  கனடா பிரித்தானியா ஜேர்மனி பிரான்ஸ்   அமெரிக்கா அவுஸ்திரேலியா.....போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக பலாலிக்கு விமானம் இருந்தால் நிறையவே புலம்பெயர் தமிழர்கள் வருவார்கள்’’      ஆனால் கொழும்பு விமான நிலையம் மூடவும் வேண்டி வரலாம்” .....வரும்    மேலும் இங்கே பல இலங்கை தமிழர்கள் குடியுரிமை பெறும் வாய்ப்புகள் இருந்தும் கூட    இலங்கை பாஸ்போர்ட் இல். காலவரையின்றி வதிவிட விசா பெற்று இருக்கிறார்கள்  அவ்வளவு காதல் இலங்கையில்    ஆனால் இங்குள்ள இலங்கை தூதுவராகங்களில்.  புதிய பாஸ்போர்ட் அல்லது பாஸ்போர்ட் இன் காலத்தை நீடிப்பு செய்யும் போது   இலங்கைக்கு போனால் திரும்ப ஜேர்மனி வர முடியாது என்று அடித்து கொடுக்கப்படுவதால் பலர் இலங்கை போக விரும்பியும்  போகவில்லை    கொழும்பு விமான நிலையத்திலும். இதே பிரச்சனை    இவர்களுக்கு இங்கே தங்க.   ....வாழ   விசா உண்டு    இறுதியாக ஈழவன்னியன்.  🤣   இல்லை இல்லை...ராஜாவன்னியன்.  நீங்கள் இவ்வளவு இலங்கை தமிழர்களுடன் நெடுங்காலமாக பழகியும்  இன்னும் இலங்கை தமிழர்கள் பிரச்சனை பற்றிபூரணமாக அறியவில்லையென்பது கவலையளிக்கிறது 😂🤣

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா.

உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உரிமையுடன் வாழ விரும்புவதுண்டு. அவ்வகையில் இலங்கை தமிழர்கள் எம் உணர்வோடும், மனதோடும் மிக நெருக்கமானவர்கள். அந்த மனநிலையிலேயே இக்களத்தில் தொடர்கிறேன், ஈழத்தை பற்றி அதிகம் அறிய விரும்புகிறேன்.

நிற்க, 'சிங்களன் வளரவிடமாட்டான்' என எத்தனை காலம் சொல்லிக்கொண்டே காலம் தள்ளுவது? பல்வேறு வழிகள் முயற்சி செய்ய வேண்டாமா? ஏன் அரும்பிலேயே வளர விடாமல் அதைரியபடுத்துகிறீர்கள்? இந்த மனநிலையிலேயே இருந்தால் எப்படி? 😔

உங்கள் பதில் எமக்கும் கவலையளிக்கிறது. 🙄

  • Like 6
Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு ப

ராசவன்னியன்

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா. உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உ

ராசவன்னியன்

அப்படியல்ல, ஐயா. பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையி

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ராசவன்னியன் said:

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா.

உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உரிமையுடன் வாழ விரும்புவதுண்டு. அவ்வகையில் இலங்கை தமிழர்கள் எம் உணர்வோடும், மனதோடும் மிக நெருக்கமானவர்கள். அந்த மனநிலையிலேயே இக்களத்தில் தொடர்கிறேன், ஈழத்தை பற்றி அதிகம் அறிய விரும்புகிறேன்.

நிற்க, 'சிங்களன் வளரவிடமாட்டான்' என எத்தனை காலம் சொல்லிக்கொண்டே காலம் தள்ளுவது? பல்வேறு வழிகள் முயற்சி செய்ய வேண்டாமா? ஏன் அரும்பிலேயே வளர விடாமல் அதைரியபடுத்துகிறீர்கள்? இந்த மனநிலையிலேயே இருந்தால் எப்படி? 😔

உங்கள் பதில் எமக்கும் கவலையளிக்கிறது. 🙄

உங்கள் பதில் மிக சரியானது வன்னியன். இனப்பிரச்சனை தொடர்நது இழுபடுவதற்கான முக்கிய காரணமே இரு பகுதியினரும் ஒருவரை ஒருவர் பார்தது பயப்படுவதே.  தமிழருக்கு இடம் கொடுத்தால் பக்கதில் உள்ள தமிழ் நாட்டுடன் சேர்ந்து எம்மை அழித்துவிடுவார்கள் என்ற பாரிய பயம் சிங்களவரிடையே அரசியல்வாதிகளால் திணிக்கப்பட்டுள்ளது.  

சிங்களவர்கள் எதுவும் தரமாட்டார்கள் இவர்களுடன் வாழ முடியாது. இவர்களுடன் பேசி பயனில்லை என்ற கருத்துருவாக்கம், அவநம்பிக்கை  தமிழரிடையே அரசியல்வாதிகளால் விதைக்கப்பபடுள்ளது. இதனால்  இருபகுதியினரும்   negotiation க்கு வருவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. 

ஒரே நிலப்பகுதியில் வாழும் மக்கள் தமக்குள் எதிரிகளாக வாழும் நிலை அந்த நாட்டில் வாழும் இரு பகுதியினருக்கும் நாசத்தையே ஏற்படுத்தும் என்பதே உண்மை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு போதும் அந்த மண்ணுக்கு போய் வாழப்போவது இல்லை.. அந்த மண்ணில் வாழும் மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.. அந்த மண்ணும் மக்களும் முன்னேறவேண்டும் என்ற எண்ணமும் இல்லை.. இவர்கள் எல்லோரும் 2009 க்கு முன்னம் பாத்துவிட்டு வந்த இலங்கையின் ஞாபகத்திலேயே மிஞ்சி இருக்கும் வயோதிக காலத்தை எழுதியும் வாழ்ந்தும் கழிப்பவர்கள்.. இவர்களின் அடுத்த தலைமுறைக்கு அதைக்கூட நினைக்க நேரம் இருக்கப்போவதில்லை.. அவர்கள் உலகம் வேறு.. அதேபோல்தான் இப்பொழுது ஈழத்தில் இருக்கும் புதிய தலைமுறையின் உலகமும் வேறு.. அவர்களும் இருக்கும் சாத்தியமான வழிகளில் தாமும் தாம் சூழ்ந்திருக்கும் சமூகமும் டெவலப்பாக இருக்கவேண்டும் வேலை  வாய்ப்புகள் என்று அவர்கள் சிந்தனையே வேறு.. இவர்கள் எதிர்பார்ப்பது போல் எந்த நேரமும் போர் போர் என்று வாழ அவர்களால் முடியாது.. அவர்கள் ஏற்கனவே போரால் அனுபவித்து விட்டார்கள்.. உங்களைப்போல் ஒரு மாநில சுயாட்சி கிடைதாலே போதும் உங்களைப்போல் நாங்களும் சந்தோசமாக வாழுவோம்.. பலாலி விமான நிலையத்தை முன்னேற்ற அந்த மண்ணில் அக்கறை உள்ள எல்லா தமிழர்களும் முயற்சி செய்யவேண்டும்.. அதனால் பலன் பெறப்போவது அந்த மண்ணில் வாழும் எம் உறவுகளே.. அதை விடுத்து அந்த மக்களுக்கு நல்லது நடக்ககூடிய விடயங்களில் உதவி செய்ய விருப்பமில்லாதவர்கள் முளையிலையே கிள்ளிவிடுவதுபோலான கருத்துக்களை வைத்து உபத்திரவம் செய்யாமல் அமைதியாக இருந்தாலே அது பெரிய உதவி அம்மக்களுக்கு..

ஓணாண்டியாரே,

எப்படி சுகம்கள். இத மாரி அடிக்கடி ஜோதியில் ஐக்கியமாகிறது?

37 minutes ago, ராசவன்னியன் said:

நிற்க, 'சிங்களன் வளரவிடமாட்டான்' என எத்தனை காலம் சொல்லிக்கொண்டே காலம் தள்ளுவது? பல்வேறு வழிகள் முயற்சி செய்ய வேண்டாமா? ஏன் அரும்பிலேயே வளர விடாமல் அதைரியபடுத்துகிறீர்கள்? இந்த மனநிலையிலேயே இருந்தால் எப்படி?

நியாமான கேள்வி.

இதன் அர்த்தம் அவன் வளர விடுவான் என்பதல்ல. ஆனால் நாம் வளர கிடைக்கும் அத்தனை வாய்ப்புக்களையும் பயன்படுத்த வேண்டும்.

ஆனால் கந்தையா அண்ணையின் பட்டறிவை புறம் தள்ளவும் முடியாது.

மேலே ஒரு இடத்தில் சொல்லி உள்ளார் - புலம் பெயர்ந்தவர் எல்லாம் பலாலியால் வரத் தொடங்கி, கொழும்பில் வியாபாரம் குறைந்தால் இலாபத்தில் ஓடும் பலாலியையும் இழுத்து மூடும் சிங்களம்.

இந்த உண்மைதான் பலரை பின்னுக்கு இழுக்கிறது ஆனால் நீங்கள் சொன்னது போல் இதையும் தாண்டித்தான் நாம் முயல வேண்டும்.

Edited by goshan_che
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ஐலன்ட்,

நீங்கள் யாழின் பெரும்பாலானோர் போக்குக்கு வித்தியாசமாக சிந்திகிறீர்கள் (முன்பு சோழர், இப்போ இந்த திரி) - இதை வரவேற்கிறேன். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

வேறுபட்ட சிந்தனைகள்தான் தெளிவை தரும்.

—————

17 minutes ago, island said:

இனப்பிரச்சனை தொடர்நது இழுபடுவதற்கான முக்கிய காரணமே இரு பகுதியினரும் ஒருவரை ஒருவர் பார்தது பயப்படுவதே.

இதை ஆமோதிக்கிறேன்.

17 minutes ago, island said:

தமிழருக்கு இடம் கொடுத்தால் பக்கதில் உள்ள தமிழ் நாட்டுடன் சேர்ந்து எம்மை அழித்துவிடுவார்கள் என்ற பாரிய பயம் சிங்களவரிடையே அரசியல்வாதிகளால் திணிக்கப்பட்டுள்ளது.

இதை மேலும் வளர்த்து அரசியல்வாதிகள் குளிர்காய்வது உண்மை. ஆனால் இதை குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாய் உருவாக்கி, போசித்து, இன்றும் ஊட்டி வருவது பெளத்த-சிங்கள மேலாதிக்க சமய-இன தலைமை.

இது எங்கோ வானத்தில் இருந்து விழவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் இருந்துதான் இந்த நஞ்சு வருகிறது.

ஆகவே சிங்கள மக்கள் அப்பாவிகள் - அரசியல்வாதிகள் நஞ்சூட்டுகிறார்கள் என்பது மேலோட்டமான பார்வை.

ஒவ்வொரு தேர்தலிலும் இனவாதத்தில் யார் ஒப்பீட்டளவில் பெரியவரோ அவரைத்தான் அந்த மக்கள் தேர்ந்துல்ளார்கள்.

இதற்கு தமிழர் மீதான பயம் காரணமாக இருக்கலாம், ஆனால் துட்டு கெமுனு விகாரமாதேவியிடம் கூறியது போல் “தெற்கே இந்துமாகடல், வடக்கே தமிழர் நான் எப்படி நிமிர்ந்து படுப்பேன்” என்ற பயமும் அந்த பயத்தை தீர்க்க கைக்கொள்ளும் மஹாவம்ச மனோநிலையும் - சிங்கள மனங்களில் psyche இல் ஊறியது.

25 minutes ago, island said:

சிங்களவர்கள் எதுவும் தரமாட்டார்கள் இவர்களுடன் வாழ முடியாது. இவர்களுடன் பேசி பயனில்லை என்ற கருத்துருவாக்கம், அவநம்பிக்கை  தமிழரிடையே அரசியல்வாதிகளால் விதைக்கப்பபடுள்ளது. இதனால்  இருபகுதியினரும்   negotiation க்கு வருவதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. 

👆🏼இது மிக தவறான புரிதல்.

தமிழரிடம் எந்த மதமும், எந்த நிறுவனமும் ஒற்றை செல்வாக்கை புலிகள் வரும் வரை செலுத்தியதில்லை. நாம் ஒரு கூட்டு இன பிரஞ்ஞை இன்றி சந்தர்பத்து வாக்கு போட்டு, சுயநலமாக வாழ்ந்த கூட்டம். 

என்று தமிழர்களின் அடிப்படை மொழி உரிமையும், தொழில் செய்யும் உரிமையும் பறிக்கப்படாதோ அன்றுதான் தமிழர் ஒன்றாக தொடங்கினர்.

அதன் பின் ஒவ்வொரு முறை அவர்கள் தம் உரிமையை கேட்ட போது வன்முறை ஏவப்பட்டது.

பண்டா-செல்வா, டட்லி-செல்வா, 87, 95, 2002 என ஒவ்வொரு பேச்சுவார்தையிலும் இலங்கை அரசு தம்மை நம்பமுடியாத இதய சுத்தி இல்லலாத பங்காளி என நிரூபித்துள்ளது.

ஆகவே அரசியல்வாதிகள் பேச்சை கேட்டு 50,000 இளையோரை காவு கொடுக்க தமிழர் ஒன்றும் அடிமை சமூகம் இல்லை.

நாம் சிங்களவரை நம்ப முடியாது என்ற நிலைக்கு வர 75 வருட காலமாக நாம் தொடர்சியாக ஏமாற்றுபட்ட “பட்டறிவே” காரணம்.

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ராசவன்னியன் said:

கோடு போட்டுக்கொடுத்தால் அதையே ரோடாக மாற்ற முயற்சிக்கோணும்.

மனமிருந்தால் மார்க்கபந்து ச்சீ.. மார்க்கமுண்டு, முன்னேற்றமும் உண்டுடூடூடூ

சிறப்பான கருத்துக்கள் அய்யா.
பாலபத்ர ஓணாண்டி அவர்களின் கருத்து தான் எனதும்.
[உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு போதும் அந்த மண்ணுக்கு போய் வாழப்போவது இல்லை.. அந்த மண்ணில் வாழும் மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.. அந்த மண்ணும் மக்களும் முன்னேறவேண்டும் என்ற எண்ணமும் இல்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

நாங்களாவது சிங்களரோட சிங்கள சிறீ கார் நம்பர் பிளேட்டில போடு என்டதுக்கே சண்டை பிடித்தோம்.

இந்தி தவிர்ந்த மாநிலம், தமிழகத்தில் கூட, ரயில் நிலையங்களில், இந்தி..... இந்தியே தான்...🥴

ஓம் நானும் கேள்விபட்டேன்.

3 hours ago, goshan_che said:

அப்பா சுகவீனமாய் இருந்தார? நான் செய்தியை காணவில்லை. இப்போ சுகமா?

பிரபா சிதம்பரநாதனின் அப்பா சுகம் இன்றி இருந்த செய்தியை நானும் யாழ்களத்தில் காணவில்லை.நலம் பெற விரும்புகின்றேன்.

9 hours ago, goshan_che said:

மக்கள் ஜேபிவ்பிக்கு தயார் என எழுதுகிறார்.

அது இப்போ இருப்பதை விட மோசமாக இருக்க கூடும்.

💯

படு மோசம் அடையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில். 5 மாடிக்குமேல். கட்டிடம் கட்டக்கூடாது. என்று இலங்கை சட்டம் சொல்லுது   ஆனால் கொழும்புக்கு இந்த சட்டம் இல்லை கொழும்பு இல்20. மாடி கட்டிடமும் உண்டு”   ஏன் இந்த பாரபட்சம்?.   யாழ்ப்பாணக்கு தனியா இப்படி சட்டம் இயற்றவேண்டியது அவசியமா ? இலங்கை அரசுக்கு இதனால் என்ன லாபம் உண்டு”?. இந்த சட்டம் இல்லையென்றால் யாழ்ப்பாணம் 20 மாடி கட்டிடத்தை. பெற்று இருக்குமா ?இல்லையா?. யாழ்ப்பாணத்தில். குச்சி ஒழுங்கையிலும். மாடி வீடுகள் உண்டு”    கட்டிடத்துறையில்  யாழ்ப்பாணம் குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது....இதை எதிர்பபவார்கள்.  உங்கள் கருத்துகளை முன் வையுங்கள் வாசித்து பார்ப்போம்  

இலங்கை வாழ் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும். இணைந்து தனிநாடு கோரி போராடினார்கள்  ...[கருத்து வேறுபாடு காட்டி கொடுப்பது புறக்கணித்து விடுவோம் ] இலங்கைக்கு பலநாடுகள் உதவி செய்தன  ...ஆயுதம் சென்று அடைவதை தடை செய்யாமல்...ஆயுதக்கப்பல்கள். முழ்கடிக்கப்படாமலும். இருந்திருந்தால் போராட்டம் 2009 முடிவடைந்து இருக்காது..இன்றும் தொடர்ந்து இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் அள்ளி அள்ளி கொடுத்து இருப்பார்கள்   

பலாலி விமான நிலையம் சுயாதீனமாக. இயங்க விட்டால் ....சர்வதேச விமானங்கள் நேரடியாக வந்து போனால்   கண்டிப்பாக இந்த பிரதேசத்தில் யாழ்ப்பாணம் முக்கிய கேத்திர நிலையமாக மாறும்    ...இப்படி ஒரு நிலை எற்பட இலங்கை இந்தியா....போன்ற அரசுகள் அனுமதிக்குமா   ?  இந்தியா தமிழ்நாடு கொழும்பு......பாதிப்பு இல்லையா   ?கருத்துகளை எழுதுங்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விளங்க நினைப்பவன் said:
3 hours ago, goshan_che said:

அப்பா சுகவீனமாய் இருந்தார? நான் செய்தியை காணவில்லை. இப்போ சுகமா?

பிரபா சிதம்பரநாதனின் அப்பா சுகம் இன்றி இருந்த செய்தியை நானும் யாழ்களத்தில் காணவில்லை.நலம் பெற விரும்புகின்றேன்

On 19/10/2022 at 22:21, பிரபா சிதம்பரநாதன் said:

வணக்கம்!!

எனது தந்தையின் உடல்நிலை கொஞ்சம் சீரற்று இருக்கிறது அதனால் இலங்கைக்கும் அவுஸிற்கும் பயணங்கள் இருப்பதால் என்னால் கொஞ்ச காலத்திற்கு தொடர்ந்து யாழில் இணைத்திருக்க முடியாதுள்ளது.

இவ்வளவுகாலமும் என்னையும், எனது கருத்துக்களையும் மதித்து ஆதரவு தந்தமைக்கு நன்றிகள்! 

மீண்டும் ஒருநாள் சந்திப்போம்

நன்றி

நீங்கள் இருவரும் அப்போ உக்ரேனில் இருந்தபடியால் தவறவிட்டுவிட்டீர்கள்.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவர்கள் ஒரு போதும் அந்த மண்ணுக்கு போய் வாழப்போவது இல்லை.. அந்த மண்ணில் வாழும் மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.

 

ஓணாண்டி நாங்கள் அங்கே போய் வாழப் போவதில்லை என்பது ஏதோ உண்மை தான்.

ஆனால் அந்த மண்ணில் வாழும் மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை என்று வாய்க்கு வந்தபடி கதைக்காமல் இருந்தால் நல்லது.

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் இருவரும் அப்போ உக்ரேனில் இருந்தபடியால் தவறவிட்டுவிட்டீர்கள்.

அது தான் காரணம் 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து  தமிழ் ஈழ விமான Air என்று தொடங்குவோமா.?

நல்ல விடயம் .

7 hours ago, Kandiah57 said:

உங்கள் மதுரை விமான நிலையம் வளர்ச்சி அடைந்தது போல் பலாலி விமான நிலையம் வளரப்போவதில்லை

சிரிப்பு சிரிப்பாய் வருகுது மதுரை விமான நிலையம் வளர்ச்சியா ?  அரும்பிலே கருக்கி விட்டார்கள் மலையாளிகள் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் இருவரும் அப்போ உக்ரேனில் இருந்தபடியால் தவறவிட்டுவிட்டீர்கள்.

ஒரு கையில ஹிமார்ஸ் செலுத்தி, மறுகையில் ATACMS கண்டிரோலர், காதுக்க ஹெட்போனில ஆஸ்டின் கொடுக்கும் உத்தரவுகள். 

இந்த பிசியில இதை கவனியாமல் விட்டது ஒரு தப்பா அண்ணை🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

யாழ்ப்பாணத்தில். 5 மாடிக்குமேல். கட்டிடம் கட்டக்கூடாது. என்று இலங்கை சட்டம் சொல்லுது   ஆனால் கொழும்புக்கு இந்த சட்டம் இல்லை கொழும்பு இல்20. மாடி கட்டிடமும் உண்டு”   ஏன் இந்த பாரபட்சம்?.   யாழ்ப்பாணக்கு தனியா இப்படி சட்டம் இயற்றவேண்டியது அவசியமா ? இலங்கை அரசுக்கு இதனால் என்ன லாபம் உண்டு”?. இந்த சட்டம் இல்லையென்றால் யாழ்ப்பாணம் 20 மாடி கட்டிடத்தை. பெற்று இருக்குமா ?இல்லையா?. யாழ்ப்பாணத்தில். குச்சி ஒழுங்கையிலும். மாடி வீடுகள் உண்டு”    கட்டிடத்துறையில்  யாழ்ப்பாணம் குறுகிய காலத்தில் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது....இதை எதிர்பபவார்கள்.  உங்கள் கருத்துகளை முன் வையுங்கள் வாசித்து பார்ப்போம்  

இலங்கை வாழ் தமிழர்களும் புலம்பெயர் தமிழர்களும். இணைந்து தனிநாடு கோரி போராடினார்கள்  ...[கருத்து வேறுபாடு காட்டி கொடுப்பது புறக்கணித்து விடுவோம் ] இலங்கைக்கு பலநாடுகள் உதவி செய்தன  ...ஆயுதம் சென்று அடைவதை தடை செய்யாமல்...ஆயுதக்கப்பல்கள். முழ்கடிக்கப்படாமலும். இருந்திருந்தால் போராட்டம் 2009 முடிவடைந்து இருக்காது..இன்றும் தொடர்ந்து இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் அள்ளி அள்ளி கொடுத்து இருப்பார்கள்   

பலாலி விமான நிலையம் சுயாதீனமாக. இயங்க விட்டால் ....சர்வதேச விமானங்கள் நேரடியாக வந்து போனால்   கண்டிப்பாக இந்த பிரதேசத்தில் யாழ்ப்பாணம் முக்கிய கேத்திர நிலையமாக மாறும்    ...இப்படி ஒரு நிலை எற்பட இலங்கை இந்தியா....போன்ற அரசுகள் அனுமதிக்குமா   ?  இந்தியா தமிழ்நாடு கொழும்பு......பாதிப்பு இல்லையா   ?கருத்துகளை எழுதுங்கள் 

யதார்த்தபூர்வமான கருத்துக்கள் கந்தையர்....👌🏼
ஆசிய நாட்டின் பிராந்திய அரசியலையும்  சிங்களத்தின் அரசியலையும் புலம்பெயர் தமிழரின் பலத்தையும் உள்ளடக்கிய உங்கள் கருத்து அபாரம்.👍🏼

தங்களைத்தாங்களே  ஒழுக்க சீலர்களாகவும் நாட்டு பற்றாளர்களாகவும் காட்டிக்கொள்பவர்கள்  உங்கள் கருத்தை வாசிப்பார்கள் என நினைக்கின்றேன். 😁

நன்றி.🙏🏼

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

வணக்கம் ஐலன்ட்,

நீங்கள் யாழின் பெரும்பாலானோர் போக்குக்கு வித்தியாசமாக சிந்திகிறீர்கள் (முன்பு சோழர், இப்போ இந்த திரி) - இதை வரவேற்கிறேன். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.

வேறுபட்ட சிந்தனைகள்தான் தெளிவை தரும்.

—————

இதை ஆமோதிக்கிறேன்.

இதை மேலும் வளர்த்து அரசியல்வாதிகள் குளிர்காய்வது உண்மை. ஆனால் இதை குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாய் உருவாக்கி, போசித்து, இன்றும் ஊட்டி வருவது பெளத்த-சிங்கள மேலாதிக்க சமய-இன தலைமை.

இது எங்கோ வானத்தில் இருந்து விழவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் இருந்துதான் இந்த நஞ்சு வருகிறது.

ஆகவே சிங்கள மக்கள் அப்பாவிகள் - அரசியல்வாதிகள் நஞ்சூட்டுகிறார்கள் என்பது மேலோட்டமான பார்வை.

ஒவ்வொரு தேர்தலிலும் இனவாதத்தில் யார் ஒப்பீட்டளவில் பெரியவரோ அவரைத்தான் அந்த மக்கள் தேர்ந்துல்ளார்கள்.

இதற்கு தமிழர் மீதான பயம் காரணமாக இருக்கலாம், ஆனால் துட்டு கெமுனு விகாரமாதேவியிடம் கூறியது போல் “தெற்கே இந்துமாகடல், வடக்கே தமிழர் நான் எப்படி நிமிர்ந்து படுப்பேன்” என்ற பயமும் அந்த பயத்தை தீர்க்க கைக்கொள்ளும் மஹாவம்ச மனோநிலையும் - சிங்கள மனங்களில் psyche இல் ஊறியது.

👆🏼இது மிக தவறான புரிதல்.

தமிழரிடம் எந்த மதமும், எந்த நிறுவனமும் ஒற்றை செல்வாக்கை புலிகள் வரும் வரை செலுத்தியதில்லை. நாம் ஒரு கூட்டு இன பிரஞ்ஞை இன்றி சந்தர்பத்து வாக்கு போட்டு, சுயநலமாக வாழ்ந்த கூட்டம். 

என்று தமிழர்களின் அடிப்படை மொழி உரிமையும், தொழில் செய்யும் உரிமையும் பறிக்கப்படாதோ அன்றுதான் தமிழர் ஒன்றாக தொடங்கினர்.

அதன் பின் ஒவ்வொரு முறை அவர்கள் தம் உரிமையை கேட்ட போது வன்முறை ஏவப்பட்டது.

பண்டா-செல்வா, டட்லி-செல்வா, 87, 95, 2002 என ஒவ்வொரு பேச்சுவார்தையிலும் இலங்கை அரசு தம்மை நம்பமுடியாத இதய சுத்தி இல்லலாத பங்காளி என நிரூபித்துள்ளது.

ஆகவே அரசியல்வாதிகள் பேச்சை கேட்டு 50,000 இளையோரை காவு கொடுக்க தமிழர் ஒன்றும் அடிமை சமூகம் இல்லை.

நாம் சிங்களவரை நம்ப முடியாது என்ற நிலைக்கு வர 75 வருட காலமாக நாம் தொடர்சியாக ஏமாற்றுபட்ட “பட்டறிவே” காரணம்.

தமிழ் மக்கள் பல வகையிலும்  சிங்களத்தால் காலத்துக்கு காலம் ஏமாற்றப்பட்டதால்  சிங்களவர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது. தற்போது கூட ரனில்  பேச்சுவார்த்தைக்கு தமிழ் கட்சிகளை அழைப்பதை கபட எண்ணத்துடன் அழைப்பதாகவே என்னை போன்றவர்கள் நம்புகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

தமிழ் மக்கள் பல வகையிலும்  சிங்களத்தால் காலத்துக்கு காலம் ஏமாற்றப்பட்டதால்  சிங்களவர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படுகிறது. தற்போது கூட ரனில்  பேச்சுவார்த்தைக்கு தமிழ் கட்சிகளை அழைப்பதை கபட எண்ணத்துடன் அழைப்பதாகவே என்னை போன்றவர்கள் நம்புகிறார்கள்.

உண்மை.

அத்தோடு இப்போ இருக்கும் எந்த தமிழ் அரசியல்வாதியையும் நம்பி தமது பிய்ந்த செருப்பை கூட கொடுக்க ஒரு ஈழ தமிழரும் தயாராக இல்லை.

ஆகவே நாம் சிங்களவர் மீது கொண்டுள்ள அவ நம்பிக்கைக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிக தொடர்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

வணக்கம் பிரபா நீண்ட நாட்களின் பின் காண்பது சந்தோசம்.

உங்கள் அப்பாவின் உடல்நிலை எப்படி?

வணக்கம் அங்கிள்,

முழுமையாக குணமடையவில்லை.. காலம் எடுக்கும் என நினைக்கிறேன். 

நன்றி அங்கிள். 

 

6 hours ago, goshan_che said:

 வணக்கம் பிரபா. 

அப்பா சுகவீனமாய் இருந்தார? நான் செய்தியை காணவில்லை. இப்போ சுகமா?

ஓம் நீங்கள் சொன்ன கடற்கரை மிக அழகானதுதான். இன்னும் கொஞ்சம் தூரம் போனால் மணல் கும்பான்கள் எல்லாம் இருக்கும். இலங்கை மாதிரியே இருக்காது.

வணக்கம் Goshan,

கொஞ்ச காலம் எடுக்கும் அவர் குணமடைய. நன்றி. 

உண்மைதான், அந்த இடங்களைப் பார்த்திருக்கிறேன். குறிப்பிட்ட இடத்திற்கு அப்பால் போக கொஞ்ச தயக்கமாக இருந்தமையால் போகவில்லை. 

 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

வணக்கம் அங்கிள்,

முழுமையாக குணமடையவில்லை.. காலம் எடுக்கும் என நினைக்கிறேன். 

நன்றி அங்கிள். 

 

வணக்கம் Goshan,

கொஞ்ச காலம் எடுக்கும் அவர் குணமடைய. நன்றி. 

உண்மைதான், அந்த இடங்களைப் பார்த்திருக்கிறேன். குறிப்பிட்ட இடத்திற்கு அப்பால் போக கொஞ்ச தயக்கமாக இருந்தமையால் போகவில்லை. 

 

என் பிரார்தனைகள் உங்களோடும் அப்பாவோடும் 🙏🏾

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை - ஜிகர்தண்டா,பன் புரோட்டா ,கறி தோசை

திண்டுக்கல் -  பூட்டு , புரியாணி

சிறிவில்லிபுத்தூர் -  பால்கோவா

பழனி - விபூதி , பஞ்சாமிர்தம்

ஆம்பூர் , நாகூர்- புரியாணி

தூத்துக்குடி -  மக்ரோன் 

ஊட்டி -  வர்க்கி

ராமநாதபுரம்- மஸ்கோத் அல்வா

தஞ்சாவூர்- லெஸ்சி ,சர்பத்

கும்பகோணம் - பால்பசந்தி, சூரிய கலா ,சந்திர கலா 

கூத்தாநல்லூர் -  தம்ரூட்

திருவையாறு- அசோகா அல்வா

திருநெல்வேலி- இருட்டுகடை அல்வா

சாத்தூர் -  காரா சேவு

அருப்புகோட்டை - சீவல்

மணப்பாறை-  நெய் முறுக்கு

செஞ்சி - முட்டை மிட்டாய்

சிதம்பரம் - கொத்சு

மாயவரம் -  கடப்பா..

காஞ்சிபுரம் ,சிறுவந்தாடு ,திருபுவனம் - பட்டு சேலை

ஆலங்குடி -பால் திரட்டு

......

டிஸ்கி 

கள உறவுகள்  அங்க உள்ளதையும்  எடுத்துப்போட்டு ஆக்கப்பூர்வமா உரையாடுங்கப்பா..😢

 

5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

வணக்கம் அங்கிள்,

முழுமையாக குணமடையவில்லை.. காலம் எடுக்கும் என நினைக்கிறேன். 

நன்றி அங்கிள். 

 

வணக்கம் Goshan,

கொஞ்ச காலம் எடுக்கும் அவர் குணமடைய. நன்றி. 

உண்மைதான், அந்த இடங்களைப் பார்த்திருக்கிறேன். குறிப்பிட்ட இடத்திற்கு அப்பால் போக கொஞ்ச தயக்கமாக இருந்தமையால் போகவில்லை. 

 

எனது வேண்டுதல்களும்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தயார் !

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தயார் !

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தமைக்கு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலாலி விமான நிலையத்திற்கு நேற்று மூன்று வருடங்களின் பின்னர் விமானம் வந்திறங்கியதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே கோபால் பாக்லே இதனைத் தெரிவித்துள்ளார்.

காங்கசந்துறை துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு பின்னர், அங்கிருந்து காரைக்கால் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே படகு சேவையை விரைவில் தொடங்குவது குறித்து அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1315250

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தயார் !

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியா தயார் !

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தமைக்கு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலாலி விமான நிலையத்திற்கு நேற்று மூன்று வருடங்களின் பின்னர் விமானம் வந்திறங்கியதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே கோபால் பாக்லே இதனைத் தெரிவித்துள்ளார்.

காங்கசந்துறை துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு பின்னர், அங்கிருந்து காரைக்கால் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே படகு சேவையை விரைவில் தொடங்குவது குறித்து அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

https://athavannews.com/2022/1315250

தமிழ் நாட்டுக்கு படகு சேவை அதுவும் காரைக்காலுக்கு?

கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு படகு சேவை ஏன் பாதியில் நின்று போனது?

புளுகுவதற்கும் ஒரு அளவு வேண்டாமா? முதலில் ராமேசுவரம் (உங்கள் மொழியில் “தமிழக”) மீனவர்கள் பிரச்சனையை முடிக்கப் பாருங்கள். 😌

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மதுரை - ஜிகர்தண்டா,பன் புரோட்டா ,கறி தோசை

திண்டுக்கல் -  பூட்டு , புரியாணி

சிறிவில்லிபுத்தூர் -  பால்கோவா

பழனி - விபூதி , பஞ்சாமிர்தம்

ஆம்பூர் , நாகூர்- புரியாணி

தூத்துக்குடி -  மக்ரோன் 

ஊட்டி -  வர்க்கி

ராமநாதபுரம்- மஸ்கோத் அல்வா

தஞ்சாவூர்- லெஸ்சி ,சர்பத்

கும்பகோணம் - பால்பசந்தி, சூரிய கலா ,சந்திர கலா 

கூத்தாநல்லூர் -  தம்ரூட்

திருவையாறு- அசோகா அல்வா

திருநெல்வேலி- இருட்டுகடை அல்வா

சாத்தூர் -  காரா சேவு

அருப்புகோட்டை - சீவல்

மணப்பாறை-  நெய் முறுக்கு

செஞ்சி - முட்டை மிட்டாய்

சிதம்பரம் - கொத்சு

மாயவரம் -  கடப்பா..

காஞ்சிபுரம் ,சிறுவந்தாடு ,திருபுவனம் - பட்டு சேலை

ஆலங்குடி -பால் திரட்டு

......

டிஸ்கி 

கள உறவுகள்  அங்க உள்ளதையும்  எடுத்துப்போட்டு ஆக்கப்பூர்வமா உரையாடுங்கப்பா..😢

 

எனது வேண்டுதல்களும்..

மட்டகளப்பு - முந்திரி விதை, முந்திரி பழம், எருமைத்தயிர், காட்டுத்தேன், சோளம், சூட்டிறைச்சி, பொரித்த மரவெள்ளி+ஆனம். அப்பம். பிறகு முஸ்லிம் ஊர்களுக்கு போனால், சமோசா, கொத்துரொட்டி, பாபத், பாலாண்டி, “டல்” கோப்பி. 

யாழ்பாணம் - மாம்பழம், திராட்சை, வெற்றிலை, புகையிலை, பனாட்டு, பனங்கட்டி, கள்ளு, சகல பனம்பொருட்களும் (பனை பியர் உள்ளடங்கலாக). நெல்லி ரசம். எள்ளு பலகாராம்.

வன்னி - மான், மரை, நாவல் பழம், காட்டுத்தேன், சூட்டிறைச்சி, அவித்த கச்சான், சோளம்

மன்னார் - முத்து, கருவாடு, 

எல்லா மாவட்டத்திலும் கடலுணவு, புட்டு, இடியப்பம் நன்றாக கிடைக்கும். 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

மதுரை - ஜிகர்தண்டா,பன் புரோட்டா ,கறி தோசை

திண்டுக்கல் -  பூட்டு , புரியாணி

சிறிவில்லிபுத்தூர் -  பால்கோவா

பழனி - விபூதி , பஞ்சாமிர்தம்

ஆம்பூர் , நாகூர்- புரியாணி

தூத்துக்குடி -  மக்ரோன் 

ஊட்டி -  வர்க்கி

ராமநாதபுரம்- மஸ்கோத் அல்வா

தஞ்சாவூர்- லெஸ்சி ,சர்பத்

கும்பகோணம் - பால்பசந்தி, சூரிய கலா ,சந்திர கலா 

கூத்தாநல்லூர் -  தம்ரூட்

திருவையாறு- அசோகா அல்வா

திருநெல்வேலி- இருட்டுகடை அல்வா

சாத்தூர் -  காரா சேவு

அருப்புகோட்டை - சீவல்

மணப்பாறை-  நெய் முறுக்கு

செஞ்சி - முட்டை மிட்டாய்

சிதம்பரம் - கொத்சு

மாயவரம் -  கடப்பா..

காஞ்சிபுரம் ,சிறுவந்தாடு ,திருபுவனம் - பட்டு சேலை

ஆலங்குடி -பால் திரட்டு

 

14 minutes ago, goshan_che said:

மட்டகளப்பு - முந்திரி விதை, முந்திரி பழம், எருமைத்தயிர், காட்டுத்தேன், சோளம், சூட்டிறைச்சி, பொரித்த மரவெள்ளி+ஆனம். அப்பம். பிறகு முஸ்லிம் ஊர்களுக்கு போனால், சமோசா, கொத்துரொட்டி, பாபத், பாலாண்டி, “டல்” கோப்பி. 

யாழ்பாணம் - மாம்பழம், திராட்சை, வெற்றிலை, புகையிலை, பனாட்டு, பனங்கட்டி, கள்ளு, சகல பனம்பொருட்களும் (பனை பியர் உள்ளடங்கலாக). நெல்லி ரசம். எள்ளு பலகாராம்.

வன்னி - மான், மரை, நாவல் பழம், காட்டுத்தேன், சூட்டிறைச்சி, அவித்த கச்சான், சோளம்

மன்னார் - முத்து, கருவாடு, 

எல்லா மாவட்டத்திலும் கடலுணவு, புட்டு, இடியப்பம் நன்றாக கிடைக்கும். 

பருத்தித்துறை -  வடை, அப்பம்.
சாவகச்சேரி - பிலாப்பழம் 
பூநகரி - மொட்டைக்  கருப்பன் அரிசி 
ஆனைக் கோட்டை - செக்கில் ஆட்டின சுத்தமான நல்லெண்ணெய். .
உரும்பிராய் - மரவள்ளிக்கிழங்கு.
திருநெல்வேலி - கீரை.
வசாவிளான் - கப்பல் வாழைப்பழம்.
மட்டுவில் - கத்தரிக்காய்.
மானிப்பாய் - பனங்கிழங்கு 
கீரிமலை -  கூவில்  பனங்கள்ளு
யாழ்ப்பாணம் - மொக்கன் கடை புட்டு

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தமிழரை நிமிர விடாது என்பதை யாராவது விளங்கப்படுத்தி  எழுதி விடுங்கப்பா....

புலம்பெயர் தமிழரின் பலம் தமிழர்களுக்கு தெரியாது. ஆனால் உலகத்திற்கும் சிங்களத்திற்கும் நன்றாகவே தெரியும்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.