Jump to content

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

விடுங்கோ சாமியார்! நாட்டை விட்டு ஓடும்போது ஒரு காரணம், மீண்டும் ஓய்வெடுக்க நாட்டுக்கு திரும்பும்போது வேறொரு காரணம். அதுக்குள்ள மற்றவர்களை வசதியாய் வம்புக்கு இழுத்து  தங்கள் காரணத்தை போத்து மூடுவது. இதென்ன புதுசா எங்களுக்கு?

சம்பிக்க ரணவக்க "தமிழரை புறந்தள்ளியமையால் படுகுழியில் நாடு வீழ்ந்துள்ளது." உதயன் கம்மன்பில "நாங்கள் உழைத்துச்சாப்பிடவில்லை 1950ல்இருந்து கடன் வாங்கியே வாழ்ந்தோம்." மைத்திரி "நிரந்தர பகிர்வு பொறிமுறையை நடைமுறைப்படுத்த இலங்கை தவறிவிட்டது." மஹிந்தா "நாட்டில் பிரச்சனையை தீர்க்க நான் தயாராகவே உள்ளேன் ஆனால் எனக்கு வாக்களித்த மக்கள் அதற்காக எனக்கு வாக்களிக்கவில்லை, நான் பிரச்சனையை தீர்க்க முயற்சித்தால்  நாட்டில் வன்முறை ஏற்பட்டு இனங்களுக்கிடையில் (இல்லாத) நல்லிணக்கம் கெட்டுவிடுமாம்." என்று பகிடி விடுகிறார்.   தன் பங்குக்கு நேற்று முழைச்ச நாமல் உதிர்த்தது "தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க ராஜபக்சக்கள் தயாராக இருந்தனர், கூட்டமைப்பினரே பின்னடித்தனர், சுயலாப அரசியலே அவர்களின் இலக்கு."  இவர்கள் யாரும் சாதாரண குடிமக்கள் கிடையாது, அரசியல் கதிரையில் இருந்து சுகம் அனுபவித்தவர்கள், நாடு அழிவதற்கு காரணம் தெரிந்தும் அழித்தவர்கள். இன்று இவர்கள் பேசும் வேதாந்தம் தீர்வு என்று வரும்போது எப்படி கையாள்வார்கள் என்று கடந்தது போக இன்னும் சிலநாளில் வெளிவரும். இதை துரும்புசீட்டாக வைத்தே அடுத்தமுறை தேர்தலில் பக்சக்கள் வெல்லலாம், தமிழரின் உரிமைகளை மறுப்பதற்காக ரணிலே அவர்களை ஊக்குவிக்கலாம். இழிச்ச வாயன் தமிழன், அவன்மேல் எல்லா பழியையும் போட்டு அமைதியாகி விடுவோம். கொழும்பில் இருந்து துரத்தியடித்தான், வந்து எம்பாட்டில் இருந்த எம்மை தேடி வந்து அழித்து விட்டு இப்போ நாட்டை கட்டியெழுப்ப அவன்தான் வரவேணும். அதற்காக அப்பப்போ ஏற்றும் நாடகம்! பேச்சுவார்த்தை, காலத்தை இழுத்தடித்து, உடன்படிக்கையை கிழித்தெறிந்து, அடித்துக்கலைப்பு அதற்கே வெளிநாட்டுதலையீடு வேண்டாமாம்!

உங்கள் ஆதங்கம் புரியும் அதேவேளை, இம்முறை தீர்வு, இலங்கை பொருளாதார நிலைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுவிட்டது.

இழுத்தால் கடன் இல்லை. இலங்கையும் இல்லை.

ஆகவே முக்கி, முனகி சிங்களம் ஒரு தீர்வுக்கு வரும். 

அதேவேளை, கக்கீம் போன்ற தலைகள், அமைதியாக இருக்க, ஆளும் கட்சி அமைச்சர் நசீரை, சிங்களம் எப்படி பேச வைத்திருந்தது என்றும் பார்த்தோம்.

அதை விவேகத்துடன் பயன்படுத்த வேண்டிய தமிழர் பொறுப்பு.

இல்லாவிடின், சுஜநிர்ணய தேர்தல் என்று நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு ப

ராசவன்னியன்

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா. உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உ

ராசவன்னியன்

அப்படியல்ல, ஐயா. பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

நன்றி நாதம்.

இதில் போவதாயின் வெளிநாடு-சென்னை, சென்னை-யாழ் டிக்கெட்டுகள் கொனெக்க்சன் சரியா புக் பண்ண வேண்டும் அல்லது பிளைட் மிஸ் ஆனால் ஏர்போர்ட்டில் ரெண்டுநாள் நிக்க வேண்டி வரும்🤣. அடுத்த யாழ் பிளைட் வரைக்கும்🤣

லண்டன் -சென்னை கூட அதிக விமான பறப்புகள் இல்லை. கனக்க நியூடெல்லி தொட்டுத்தான் போகுது.

ஆகவே 2 டிரான்சிட், 20 மணி பயணம். உடம்பு தாங்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் புலம்பெயர் தமிழர் இப்படி சென்னை ஊடாக செல்வதில் பல நடைமுறை சிக்கல்கள் உண்டு.

1. சென்னைக்கான நேரடி டிக்கெட் அல்லது மத்திய கிழக்கு டிரான்சிட் டிக்கெட் கொழும்புக்காக டிக்கெட்டின் விலையயை விட கொஞ்சம்தான் குறைவு. இதில் மேலதிகமாக சென்னை- யாழ் செலவு வேற உண்டு.

2. இதுவரைக்கும் ஒரே புக்கிங் ஆக லண்டன்-சென்னை-யாழ் புக் பண்ண முடியவில்லை. நாம் தனி தனியே புக் பண்ணி கொனெக்டிங் பிளைட் தவறினால் - மற்ற பிளைட்காரன் புது டிக்கெட் வாங்கு என்பான்.

3. சென்னையில் தங்கி செல்லலாம். ஆனால் போகும் போதும், வரும் போதும் தங்கி செல்ல வேண்டும். 

4. சென்னையில் தேவையில்லாமல் தங்குவதால் வரும் செலவு. 

5. சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள் “சிறிலிங்கனா - புடுங்குடா பணத்தை” என காத்திருப்பார்கள். இந்த இம்சை கொழும்பில் ஒப்பீட்டளவில் குறைவு.

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

நன்றி நாதம்.

இதில் போவதாயின் வெளிநாடு-சென்னை, சென்னை-யாழ் டிக்கெட்டுகள் கொனெக்க்சன் சரியா புக் பண்ண வேண்டும் அல்லது பிளைட் மிஸ் ஆனால் ஏர்போர்ட்டில் ரெண்டுநாள் நிக்க வேண்டி வரும்🤣. அடுத்த யாழ் பிளைட் வரைக்கும்🤣

லண்டன் -சென்னை கூட அதிக விமான பறப்புகள் இல்லை. கனக்க நியூடெல்லி தொட்டுத்தான் போகுது.

ஆகவே 2 டிரான்சிட், 20 மணி பயணம். உடம்பு தாங்குமா?காலை 3 க்கு போய் இறங்கும். அப்படியே 9.20 க்கு யாழ்ப்பாண பிளேனை பிடித்தால், மத்தியான சாப்பாடுக்கு வீட்ட போயிடலாம்.

British Airways - Direct Flights to Chennai.

காலை 3 க்கு போய் இறங்கும். அப்படியே 9.20 க்கு யாழ்ப்பாண பிளேனை பிடித்தால், மத்தியான சாப்பாடுக்கு வீட்ட போயிடலாம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி, சரி குடும்பத்தோட தாயகத்துக்கு மீள வரும்போது வசதிதான் முக்கியம். இல்லையெனில்  மனுசியிடமும், பிள்ளைகளிடமும் யார் வாங்கிக் கட்டுவது?

கொழும்பு போய் யாழ்ப்பாணமே போங்கள். 👍

ஏதாவது போத்தீஸ், மருத்துவ வசதிக்கு மட்டும்  யாழ் விமான நிலையத்தை ( அதுவரை பொது பாவனைக்கு இருந்தால்)பயன்படுத்தலாம்!

ஓக்கே? 🥱

 

2 minutes ago, Nathamuni said:

British Airways - Direct Flights to Chennai.

காலை 3 க்கு போய் இறங்கும். அப்படியே 9.20 க்கு யாழ்ப்பாண பிளேனை பிடித்தால், மத்தியான சாப்பாடுக்கு வீட்ட போயிடலாம்.

பிராங்போர்ட் - சென்னை நேரடி விமான சேவையும் உண்டென நினைக்கிறேன். சென்னை விமான நிலையத்தில் பார்த்த ஞாபகம் உள்ளது. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

British Airways - Direct Flights to Chennai.

காலை 3 க்கு போய் இறங்கும். அப்படியே 9.20 க்கு யாழ்ப்பாண பிளேனை பிடித்தால், மத்தியான சாப்பாடுக்கு வீட்ட போயிடலாம்.

1. சென்னை ஏர்போர்ட்ட்டில் 6 மணி நேரம் டிரான்சிட்? (கட்டார், டுபாய், குவைத் - 45 நிமிசம்-2 மணி)

2. போட்டுப்பார்த்தான் லண்டன்-சென்னை டிரைக்ட் 965£. (ஓவ் சீசன்). அதே நாளில் லண்டன்-கொழும்பு டைரக்ட் 750 அளவில்தான் போகுது. அம்மா+அப்பா+2 பிள்ளையள் - பெரிய வித்தியாசம் காட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

சென்னை ஏர்போர்ட் அதிகாரிகள் “சிறிலிங்கனா - புடுங்குடா பணத்தை” என காத்திருப்பார்கள். இந்த இம்சை கொழும்பில் ஒப்பீட்டளவில் குறைவு.

 

நான் ஒருமுறை சென்னை ஊடாக வந்த போது, தமிழக பாதுகாப்பு அதிகாரி, 'டாக் ஓட்டல, பைசா கொடு' என்றார். கைப்பையில் டாக் போடாதது airline பிரச்சனை. இவர்கள் எல்லை மீறி போகின்றனர் என்று விகடனில் கட்டுரையே வந்தது. பணம் புடுங்குபவர்கள், துப்பாக்கி, குண்டுகளையே விடுவார்களே என்று எழுதினார்கள். அடுத்த முறையில் இருந்து, மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பில் இருப்பதை பார்க்கிறேன். அவர்கள் பணம் கேட்பதில்லை. சில அதிகாரிகளை பொறி வைத்து பிடித்ததால், இப்போது, பணம் பறிப்பதாக தெரியவில்லை. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

சரி, சரி குடும்பத்தோட தாயகத்துக்கு மீள வரும்போது வசதிதான் முக்கியம். இல்லையெனில்  மனுசியிடமும், பிள்ளைகளிடமும் யார் வாங்கிக் கட்டுவது?

கொழும்பு போய் யாழ்ப்பாணமே போங்கள். 👍

ஏதாவது போத்தீஸ், மருத்துவ வசதிக்கு மட்டும்  யாழ் விமான நிலையத்தை ( அதுவரை பொது பாவனைக்கு இருந்தால்)பயன்படுத்தலாம்!

ஓக்கே? 🥱

🤣 உண்மைதான் ஒரு முறை காசு மிச்சம் என குவைத் ஏர்வேசில் டிக்கெட் போட்டு - அந்த கொலிடே முடிந்து 10 வருடமாக போகுது, இன்னும் கதை கேட்கிறேன்🤣.

தனியாக வரும் போது நிச்சயம் இந்த வழியைத்தான் பாவிப்பேன். 

குடும்பத்தோட என்றால் - தமிழ்நாடு + இலங்க இரெண்டு இடத்திலும் நிண்டு வாறதாக பிளான் பண்ணி புக் பண்ணினால் ஓகே.

இந்த ரூட் ஓட வேண்டும் என ஆசை இருந்தாலும், மொத்த பிரயாண செலவு இருமடங்கு ஆகும் என்றால் இந்த பாதையால் வந்து போக முடியாது.

I am just being honest.

 

1 minute ago, Nathamuni said:

நான் ஒருமுறை சென்னை ஊடாக வந்த போது, தமிழக பாதுகாப்பு அதிகாரி, 'டாக் ஓட்டல, பைசா கொடு' என்றார். கைப்பையில் டாக் போடாதது airline பிரச்சனை. இவர்கள் எல்லை மீறி போகின்றனர் என்று விகடனில் கட்டுரையே வந்தது. பணம் புடுங்குபவர்கள், துப்பாக்கி, குண்டுகளையே விடுவார்களே என்று எழுதினார்கள். அடுத்த முறையில் இருந்து, மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் பொறுப்பில் இருப்பதை பார்க்கிறேன். அவர்கள் பணம் கேட்பதில்லை. சில அதிகாரிகளை பொறி வைத்து பிடித்ததால், இப்போது, பணம் பறிப்பதாக தெரியவில்லை. 

ஏர்போர்ட்களில் எப்போதும் சென்ரல் ரிசேர்வ் படையும், அதிகாரிகளும்தான்.

ஆள், போகும் இடம் onward destination பார்த்துத்தான் வேலையை காட்டுவார்கள்.

பல ஆங்கிலம் அதிகம் தெரியாத, இந்தியாவும் பழக்கம் இல்லாத, ஐரோப்பா வாழ் தமிழ் குடும்பங்களை சிப்பிலியாட்டுவதை கண்டுள்ளேன். ஓரிரு சமயம் தலையிட்டதும் உண்டு (2019 கடைசி). 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விமான வழியில் முதலில் பறந்து யாழில் அதை பகிரப்போகும் உறவு யார்?

ஆவலோடு ஆருடங்களை சொல்லுங்கள்.

எனது ஆரூடம் @பாலபத்ர ஓணாண்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இந்த விமான வழியில் முதலில் பறந்து யாழில் அதை பகிரப்போகும் உறவு யார்?

ஆவலோடு ஆருடங்களை சொல்லுங்கள்.

எனது ஆரூடம் @பாலபத்ர ஓணாண்டி

எனது ஆரூடம் @நுணாவிலன். (கள பொறுப்பாளர் முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா?)😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

சரி, சரி குடும்பத்தோட தாயகத்துக்கு மீள வரும்போது வசதிதான் முக்கியம். இல்லையெனில்  மனுசியிடமும், பிள்ளைகளிடமும் யார் வாங்கிக் கட்டுவது?

கொழும்பு போய் யாழ்ப்பாணமே போங்கள். 👍

ஏதாவது போத்தீஸ், மருத்துவ வசதிக்கு மட்டும்  யாழ் விமான நிலையத்தை ( அதுவரை பொது பாவனைக்கு இருந்தால்)பயன்படுத்தலாம்!

ஓக்கே? 🥱

முழுமையாக விளங்கி கொண்டு சரியாகச் சொன்னீர்கள்.

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ராசவன்னியன் said:

எனது ஆரூடம் @நுணாவிலன். (கள பொறுப்பாளர் முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா?)😎

👍🏿. இப்ப ஊரில் இன்னும் இரு யாழ் உறவுகள் நிக்கிறார்கள். ஒரு எட்டு போய் பார்ப்போம் என நினைக்க கூடும். 

Edited by goshan_che
உறவுகளின் பெயர் நீக்கம் - ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கைதான்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

👍🏿. இப்ப ஊரில் இன்னும் இரு யாழ் உறவுகள் நிக்கிறார்கள். ஒரு எட்டு போய் பார்ப்போம் என நினைக்க கூடும். 

நீங்க சொன்ன அண்ணை பயணம் போயிற்றார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

இந்த விமான வழியில் முதலில் பறந்து யாழில் அதை பகிரப்போகும் உறவு யார்?

ஆவலோடு ஆருடங்களை சொல்லுங்கள்.

எனது ஆரூடம் @பாலபத்ர ஓணாண்டி

குண்டு பயபுள்ள.. கோத்து உடுது பாரு.. வெசம்.. வெசம்..😂

spacer.png

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த விமான வழியில் முதலில் பறந்து யாழில் அதை பகிரப்போகும் உறவு யார்?

ஆவலோடு ஆருடங்களை சொல்லுங்கள்.

எனது ஆரூடம் @பாலபத்ர ஓணாண்டி

எனது ஆரூடம்.  வாத்தியார்.....அவர் தை மாதம் ஊர்.  போவதாகவும்.  ....ஏராளனை சந்திப்பதகாவும்.    எங்கே வாசித்த ஞாபகம் உண்டு   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இந்த விமான வழியில் முதலில் பறந்து யாழில் அதை பகிரப்போகும் உறவு யார்?

ஆவலோடு ஆருடங்களை சொல்லுங்கள்.

எனது ஆரூடம் @பாலபத்ர ஓணாண்டி

ஏற்க்கனவே நம்ம விவசாயி விக் கொரனாவுக்கு முன் பயனித்தவர்.தனது அனுபவத்தை பகிர முன் கோவித்துக் கொண்டு போட்டார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, சுவைப்பிரியன் said:

ஏற்க்கனவே நம்ம விவசாயி விக் கொரனாவுக்கு முன் பயனித்தவர்.தனது அனுபவத்தை பகிர முன் கோவித்துக் கொண்டு போட்டார்.

ஒ…சா…

நல்ல சீவன் வி.வி.

நானும் அவரும் கட்டி உருண்டு பின் ஆளை ஆள் - “நீங்கள் அப்ப சொன்னதிலும் நியாயம் இருக்கு” என்று ஏற்றுகொள்ளும் நிலைக்கு வந்திருந்தோம்.

கொஞ்சநாள் யாழுக்கு வரேல்ல. திரும்பி வந்து அவர் திரியில், அவர் கேட்ட ஒரு விசயம் சம்பந்தமா எழுதினே. பெருமாள் தான் வந்து இனி அவர் வரார் எண்டு விபரம் சொன்னார்.

எங்கிருந்தால் நல்லது செய்து, நலமாய் இருக்கட்டும்.

பிகு

யாழுக்கு சண்டை பிடிச்சொண்டு போய், வெக்கம் இல்லாமல் திரும்பி, திரும்பி வாறது நான் மட்டும்தான் போல🤣

3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

குண்டு பயபுள்ள.. கோத்து உடுது பாரு.. வெசம்.. வெசம்..😂

spacer.png

தம்பி அந்த யாழ்-சென்னை பயணகட்டுரை இன்னும் வரல்ல🤣

2 hours ago, Kandiah57 said:

எனது ஆரூடம்.  வாத்தியார்.....அவர் தை மாதம் ஊர்.  போவதாகவும்.  ....ஏராளனை சந்திப்பதகாவும்.    எங்கே வாசித்த ஞாபகம் உண்டு   

எங்கோ எண்டால்? இதை என்ன வீரகேசரி, உதயன்லயா எழுதுவாங்க அண்ணை🤣. திண்ணையில்தான் பேசிக்கொண்டார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

13 minutes ago, goshan_che said:

ஒ…சா…

நல்ல சீவன் வி.வி.

நானும் அவரும் கட்டி உருண்டு பின் ஆளை ஆள் - “நீங்கள் அப்ப சொன்னதிலும் நியாயம் இருக்கு” என்று ஏற்றுகொள்ளும் நிலைக்கு வந்திருந்தோம்.

கொஞ்சநாள் யாழுக்கு வரேல்ல. திரும்பி வந்து அவர் திரியில், அவர் கேட்ட ஒரு விசயம் சம்பந்தமா எழுதினே. பெருமாள் தான் வந்து இனி அவர் வரார் எண்டு விபரம் சொன்னார்.

 

கனடாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு சார்பாக யாழ் இணையத்தில் எழுதுகின்றனர்/ யாழ் இயங்குகின்றது என்று கூறி, தான் எழுதிய அனைத்து கருத்துகளையும் மறைத்து விடும்படி கோரியிருந்தார். நாம் அவற்றை மறைத்து விட்டோம். அதன் பின்னர் அவர் எழுதுவதற்கும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருந்தோம். 

என்னுடைய Career இனை நாசமாக்குவேன் என்று சூளுத்துரைத்தும் இருந்தார். இன்னும் கொஞ்சம் எழுதலாம், ஆனால் இப்போதைக்கு வேண்டாம்.

எங்கிருந்தாலும் அவர் வாழ்க.

Edited by நிழலி
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

கனடாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு சார்பாக யாழ் இணையத்தில் எழுதுகின்றனர்/ யாழ் இயங்குகின்றது என்று கூறி, தான் எழுதிய அனைத்து கருத்துகளையும் மறைத்து விடும்படி கோரியிருந்தார். நாம் அவற்றை மறைத்து விட்டோம். அதன் பின்னர் அவர் எழுதுவதற்கும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருந்தோம். 

இன்னும் கொஞ்சம் எழுதலாம், ஆனால் இப்போதைக்கு வேண்டாம்.

எங்கிருந்தாலும் அவர் வாழ்க.

😳 வி.வி, இப்படி ஒரு நிலை எடுத்தாரா த.வி.பு பற்றி? வாவ்.

ஏதோ பிசகு எண்டு மட்டும் புரிகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

😳 வி.வி, இப்படி ஒரு நிலை எடுத்தாரா த.வி.பு பற்றி? வாவ்.

ஏதோ பிசகு எண்டு மட்டும் புரிகிறது.

 

சமூக நலனில் அதிக அக்கறை கொண்டவர்.
ஒரு சில விடயங்களில் ஆள் ஓட்டைவாய்  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சமூக நலனில் அதிக அக்கறை கொண்டவர்.
ஒரு சில விடயங்களில் ஆள் ஓட்டைவாய்  😁

ம்…ம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

ம்…ம்..

இதை யாராவது மொழிபெயர்க்க முடியுமா? கூகிளிலும் முடியவில்லை 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

இதை யாராவது மொழிபெயர்க்க முடியுமா? கூகிளிலும் முடியவில்லை 😎

ஒரு நபர் தான் அறிந்த அதிர்ச்சியான தகவல்களை உள்வாங்கி, ஆழ்ந்து யோசித்து கொண்டிருக்கிறார் என்பதை இப்படி குறிக்கலாம் 🤣.

- உடான்ஸ் சாமி அருளிய, உரைத்தமிழ் அகராதி -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

இதை யாராவது மொழிபெயர்க்க முடியுமா? கூகிளிலும் முடியவில்லை 😎

'சில்க்' சுமிதா தான் இதற்கு வரவேணும். 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

'சில்க்' சுமிதா தான் இதற்கு வரவேணும். 😉

அவதான் @Kandiah57 அண்ணைக்கு முதலே டிக்கெட் எடுத்துட்டாவே 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.