Jump to content

மொரோக்கோவும் போர்த்துக்கலும் இலங்கை சோனகராகிய நாமும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மொரோக்கோவும் போர்த்துக்கலும் இலங்கை சோனகராகிய நாமும்.
இலங்கை முஸ்லிம்களின் இன உருவாக்கத்தின் சிக்கலான வரலாற்றுப் பின்னணியை சமூக கலாச்சார மற்றும் அரசியல் அம்சங்களுடன் விரிவாக விளங்கிக்கொள்தல் எமக்கும் மொரோக்கோவிற்கும் போர்த்துக்கலுக்குமான தொடர்பை ஓரளவு விபரிக்கும் என நம்பலாம்.
மூர் என்ற பெயரின் சொற்பிறப்பியல் தோற்றம் உலகளவில் அறியப்படுகிறது. இது லத்தீன் மூலமான மவுரியிலிருந்து வந்தது.
இன்றைய மேற்கு அல்ஜீரியா மற்றும் வடகிழக்கு மொராக்கோவை உள்ளடக்கிய ரோமானிய மாகாணமான மவுரேட்டானியாவில் வசிப்பவர்களின் சந்ததியினரே உலகெங்கும் மூர் என முதலில் அழைக்கப்பட்டனர்.
இலங்கையைப் பற்றிய போர்த்துகீசிய வரலாற்றாசிரியர், ஃபெர்னாவோ டி குய்ரோஸ்(Portuguese
historian Fernao De Queyroz) இலங்கை முஸ்லிம்கள் "முரிட்டானியாவைச் சேர்ந்தவர்கள்" என்பதால் 'மௌரோஸ்' என்று அழைக்கப்பட்டதாகக் கூறினார். இறுதியில் 'மௌரோஸ்' பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் 'மூர்ஸ்' ஆனது.
இலங்கையின் முதல் பிரதம நீதியரசர்
சேர் அலெக்ஸாந்தர் ஜொன்ஸ்டனும் (Sri Alexander Johnston) இலங்கை சோனகர்கள் முரிட்டானியாவைச் (Mauretania) சேர்ந்த அறபுக்களின் வழித் தோன்றல்கள் என்பதாகக் கூறுகின்றார். வேறு சில வரலாற்றாசிரியர்களின் கருத்தும் இதை உறுதிப்படுத்துகிறது.
வட ஆப்பிரிக்காவின் அல்ஜீரியா, மாரிட்டானியா,லிபியா மற்றும் மொராக்கோ பகுதிகளை உள்ளடக்கிய மக்ரெப் பிராந்தியத்தில் இருந்த வணிக குழுவினருக்கும் மத்திய தரைக்கடல் மற்றும் அரபு வணிகர்களுக்குமான வியாபாரத்தொடர்புகளை பற்றிய கிபி 11ம் நூற்றாண்டின் அரபு புவியியலாளரான அல் பக்ரியின் பதிவுகள், அதேபோல கிபி 8ம் நூற்றாண்டில் சோனிங்கே மக்களின் வணிகத்தொடர்புகள் குறித்து அரபு புவியியலாளர் முஹம்மது இப்னு இப்ராஹிம் அல் ஃபஸாரி என்பவரின் பதிவுகள் இவர்களின் வணிக நோக்கத்திற்கான மரக்கலத்திலான இலங்கை நோக்கிய பயணம், திமிலரிடமிருந்து முக்குவர்களை பாதுகாப்பதில் பட்டாணியர், துலுக்கர் அல்லது சோனகர் என தமிழர்களாலும் மரக்கல மினிசு என சிங்களவர்களாலும் அறியப்பட்ட இவர்களின் தமிழ் பெண்களின் திருமண பந்தத்தால் உருவான இலங்கை சோனக முஸ்லீம்கள் ( Ceylon Moors) பற்றிய விரிவான ஆராய்ச்சி என்பன நமக்கும் மொரோக்கோவிற்குமான தொடர்பை விரிவாக எடுத்தியம்புகிறது.
எனவே இலங்கை முஸ்லீம்களை குறிக்கும் சொற்களான மூர், சோனகர் அல்லது மரக்கல மினிசு என்கிற சொற்களின் அடிப்படை நம்முள் ஆப்பிரிக்க வணிகர்களின் குறிப்பாக மரிட்டானிய மற்றும் மொரோக்கோ இனக்கலப்பினை காட்டுவதாக உள்ளது.
இதனால் நாமும் மொரோக்கோவின் வெற்றியை கொண்டாடலாம். 🤣.
-கியாஸ் சம்சுடீன் -
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிக்கொடுப்பதும் கூட்டிக்கொடுப்பதும் கைவந்தகலை.

மொரோக்கோவின் வெற்றியை கொண்டாடலாமாம். ஆனால் தமிழை பேசிக்கொண்டு தமிழரின் தோல்வியை கொண்டாடிய இனமல்லவா இது! 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாலி said:

காட்டிக்கொடுப்பதும் கூட்டிக்கொடுப்பதும் கைவந்தகலை.

மொரோக்கோவின் வெற்றியை கொண்டாடலாமாம். ஆனால் தமிழை பேசிக்கொண்டு தமிழரின் தோல்வியை கொண்டாடிய இனமல்லவா இது! 

எங்கேயாவது வீழ்ந்து தொழுதால் அவன் இனம் அண்ணன் தம்பி ஆவான்

நாம் வீழ்ந்தால் நம்மவர்கள் எட்டி உதைத்து விட்டு போவார்கள் இது தான் நம்ம இனம் 

இதுவே சவுதியாக இருந்தால் உருட்டு இதை விட பல மடங்காக இருக்கும்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மாவனெல்ல காக்காவின் கட்டுரையா?

அமீர் நானா, கப்பலில் இருந்து இறங்கி ஓடிப் போய் கக்கா இருந்ததால் அமெரிக்கா என்று அடித்து விட்ட கோஸ்ட்டியின் கதை போல இருக்குதே...

அடேயப்பா... மொரோக்கோ வெண்டது குவாட்டர் பைனல்.

இனி செமி, பைனல் எண்டு கணக்க விசயம் இருக்கு

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி அடைந்தவன் பக்கம் போய்… ஒட்டிக் கொள்வது இந்த இனம்.
பாலஸ்தீனத்துக்கு… இஸ்ரேல் தினமும் அடிக்கிறான்.
அதைப் பற்றி இவர்கள், கவலைப் படுவது கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

வெற்றி அடைந்தவன் பக்கம் போய்… ஒட்டிக் கொள்வது இந்த இனம்.
பாலஸ்தீனத்துக்கு… இஸ்ரேல் தினமும் அடிக்கிறான்.
அதைப் பற்றி இவர்கள், கவலைப் படுவது கிடையாது.

இப்பவும் பதுங்குகினம் ..ரணில் வென்றால் ...நானாமார் எல்லாம் அமைச்சுப்பதவிக்கு ரெடி...அது ரத்தத்தில்

ஊறியது...அது ஆவியாகாமல் இருக்க தொப்பியும் போடுவினம்...தேவையென்றால் மாத்தியும் போடுவினம்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொரோக்கோவும் போர்த்துக்கலும் இலங்கை சோனகராகிய நாமும்.

சவுதி அரேபியாவை இப்போது விட்டாச்சா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வந்தவன் போனவன் எல்லாம் இலங்கை சோனகரை ஏறிமிதிச்சுட்டு போயிருக்கான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

வெற்றி அடைந்தவன் பக்கம் போய்… ஒட்டிக் கொள்வது இந்த இனம்.
பாலஸ்தீனத்துக்கு… இஸ்ரேல் தினமும் அடிக்கிறான்.
அதைப் பற்றி இவர்கள், கவலைப் படுவது கிடையாது.

என்ன சிறித்தம்பி......எம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா? 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இது மாவனெல்ல காக்காவின் கட்டுரையா?

அமீர் நானா, கப்பலில் இருந்து இறங்கி ஓடிப் போய் கக்கா இருந்ததால் அமெரிக்கா என்று அடித்து விட்ட கோஸ்ட்டியின் கதை போல இருக்குதே...

அடேயப்பா... மொரோக்கோ வெண்டது குவாட்டர் பைனல்.

இனி செமி, பைனல் எண்டு கணக்க விசயம் இருக்கு

போர்துகேயர் வட ஆபிரிக்க அரபிகளை Mores என அழைத்ததும் அதன் ஆங்கில வடிவம் Moores என்பது உண்மைதான்.

லிஸ்பனில் இருந்து 1 மணி நேர ஓட்டத்தில் Castelo dos Mouros என்ற இஸ்லாமியரின் 9ம் நூற்றாண்டு கோட்டை உண்டு. நான் போய் பார்த்துள்ளேன்.

ஒரு காலத்தில் போர்துகல், ஸ்பெயின் என தெற்கு ஐரோப்பா முழுவதும் (ஐபீரியா) இஸ்லாமிய நாடாக இருந்தபோது கட்டப்பட்டது.

ஆனால்…..

Mores, Moores என்ற பதங்களை தனியே வட ஆபிரிக்க அரபிகளை (மெஹ்ரப்) மட்டும் குறிக்க ஐரோப்பியர் பயன் படுத்தவில்லை. மாறாக இதை முகமதியர் (Mohamaddians, Muslims ) என்பதற்கு மாற்று சொல்லாகவே பயன்படுத்தினர்.

அதாவது போர்த்துகேயர் தாம் 9-12 ம் நூற்றாண்டில் முதலில் போரிட்ட அரபி முஸ்லிம்களை மோரெஸ் என அழைத்தனர். பின் ஆசியா, ஆபிரிக்கா வந்து நாடுகள் பிடித்த போது அங்கே இருந்த முஸ்லிம்களையும் அதே பேரில் அழைத்தனர்.

ஆகவே இலங்கை முஸ்லிம்களுக்கும் மொரொக்கோவுக்கும் உள்ள தொடர்பு, மொட்டந்தலைக்கும் முக்காபுலாவுக்கும் உள்ள முடிச்சுத்தான்.

10 hours ago, colomban said:

பட்டாணியர்

இவர்கள் பஸ்தூன் எனப்படும் வடக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் தெற்கு அரைப்பகுதிக்கும் மேலாக வசிக்கும் இனக்குடி. இவர்கள் அரபிகள் அல்ல. ஒரு காலத்தில் இந்து, பின் பெளத்தர், அலக்சாண்டர் வந்து போன பின் இஸ்லாத்தை தழுவினர்.

10 hours ago, colomban said:

துலுக்கர்

துருக்கியர் என்பதன் திரிபு. இவர்களும் அரபிகளோ, மஹ்ரப் பகுதியினரோ அல்ல.

10 hours ago, colomban said:

சோனகர்

யவனர் என முதலில் கிரேக்கர்களை, பின் ரோமர்களை, பின் அரபி, பேர்சியர்களை, அதாவது தோல் நிறம் பழுத்தவர்களை விபரிக்க தமிழர் பயன்படுத்திய சொல். அதன் திரிபே சோனகர்.

யவனர்  என்பது பல இடங்களில் சங்க இலக்கியத்தில் வருகிறது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

மரக்கல மினிசு

மரக்கலத்தில் வந்ததாலா இல்லையே?

ஒரு சிங்கள மன்னனை சோனகர் படை காப்பாற்றியதாயும் அதனால் “என்னை காத்த இரத்தம்” “மா ரக்க லே” என்று அவர் சொன்னதாவும் அல்லவா பல முஸ்லிம் தலைவர்கள் உட்பட “சிங்க லே” கலவர காலத்தில் சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

வெற்றி அடைந்தவன் பக்கம் போய்… ஒட்டிக் கொள்வது இந்த இனம்.
பாலஸ்தீனத்துக்கு… இஸ்ரேல் தினமும் அடிக்கிறான்.
அதைப் பற்றி இவர்கள், கவலைப் படுவது கிடையாது.

யார் சொன்னது 
இலங்கையில் நின்று இஸ்ரேலுக்கு  கல் எறிந்தவர்கள் நீங்க பார்க்கவில்லையா ...
ஷைத்தானையே கல் எறிந்து விரட்டும் கூட்டமல்லவோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் ஒர் நாடு வெற்றி பெற்றால் அதை மதத்துடன் கலப்பார்கள்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.