Jump to content

இந்தியாவை ரஷ்யா திடீரென அதிகம் புகழ என்ன காரணம்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை ரஷ்யா திடீரென அதிகம் புகழ என்ன காரணம்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,தீபக் மண்டல்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்தியா, ரஷ்யா

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியா இயல்பிலேயே பன்முனை உலகில் முக்கியமான தூண் ஆக இருக்க விரும்புவது மட்டுமின்றி, அது பன்முனை உலக அமைப்பை உருவாக்குவதற்கான மையமாகவும் இருக்கிறது என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் சமீபத்தில் கூறினார்.

இது குறித்து பேசி லாவ்ரோவ், யுக்ரேனுக்கு எதிரான போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு நடுநிலையானது என்று கூறி அதன் வெளியுறவுக் கொள்கையையும் பாராட்டினார்.

ப்ரிமகோவ் ரீடிங்ஸ் சர்வதேச மன்றத்தில் பேசிய அவர், மேற்கு நாடுகள், தங்களுடைய ஆதிக்கம் செலுத்தும் வகையிலான சர்வதேச முறையை ஒரு போதும் விட்டுக் கொடுக்காது. மேலும் பன்முனை அமைப்பின் யதார்த்தத்தையும் அவை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று கூறினார்.

புதிய சக்திகள் அமெரிக்கா தலைமையிலான உலகை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதை இது தெளிவுபடுத்துகிறது.

 

ஆனால், மேற்கு நாடுகள் இந்த 'முறையை' வலுக்கட்டாயமாக நிர்வகிக்க விரும்புகின்றன. 5 தசாப்தங்களாக தொடர்ந்து கொண்டிரும் இந்த பழக்கத்தை விட்டுக்கொடுக்க அவை தயாராக இல்லை.

 

ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும்போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளை நிரந்தர உறுப்பு நாடுகளாக ஆக்க வேண்டும் என்பதையும் லாவ்ரோவ் வலியுறுத்தினார்.

இதற்காக இரண்டு நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்றும் கூறினார். பன்முனை உலக ஒழுங்கமைப்பில் இந்த நாடுகள் முக்கிய பங்கு வகிப்பதற்கான விருப்பம் அதிகரித்திருப்பதற்கு இதுவே சான்றாக இருக்கிறது என்றும் கூறினார்.

ப்ரிமகோவ் மற்றும் அவரது பல்முனை உலகம் பற்றிய கோட்பாடு

யெவ்கெனி ப்ரிமகோவ் ஒரு ரஷ்ய அரசியல்வாதியும், ராஜதந்திரியும் ஆவார். 1998 முதல் 1999ஆம் ஆண்டு வரை அவர் ரஷ்யாவின் பிரதமராக இருந்திருக்கிறார். அதற்கு முன்பு அவர் ரஷ்யாவின் வெளியவுறவுத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார்.

1996ஆம் ஆண்டு அவர் வெளியவுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, ரஷ்ய அரசின் முன்னிலையில் சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய கூட்டணி நாடுகள் அடிப்படையிலான ஒரு பன்முனை உலக ஒழுங்கு அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட ஒருமுனை உலக ஒழுங்குமுறைக்கு மாற்றாக இது கூறப்பட்டது.

செர்ஜி லாவ்ரோவ்

பட மூலாதாரம்,EPA

 
படக்குறிப்பு,

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்

அமெரிக்காவை மையப்படுத்திய வெளியவுறவு கொள்கையில் இருந்து ரஷ்யா மாற வேண்டிய தேவை இருக்கிறது என்று அவர் கூறினார்.

இந்தியா மற்றும் சீனாவுடன் ரஷ்யா தனது நட்புறவை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

பன்முக உலக அமைப்பு என்பதானது ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

மேற்கு நாடுகளை பின்பற்றுவதற்கு பதில் தங்களுக்கு என சொந்தமான சுதந்திரமான பாதையில் கூட்டணி அமைக்க விரும்பும் நாடுகள் ஓரளவு பாதுகாப்பு அளித்துக் கொள்ளும் திறன் கொண்டதாக இருக்கும் என்றும் கூறினார்.

தன்னுடைய உரையில் பன்முனை உலக முறையை குறிப்பிட்டு, சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளைக் கொண்ட அமைப்பை மீண்டும் லாவ்ரோவ் வலியுறுத்தினார்.

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகள் கூட்டணி எனும் ப்ரிமகோவின் யோசனையானது பின்னர், பிரிக்ஸ் நாடுகள் என மாற்றமடைந்தது. மிகவும் சிலருக்கு மட்டுமே ரிக் (ரஷ்யா, இந்தியா, சீனா) இன்னும் செயல்படுவது தெரியும்.

இந்த கூட்டணியின் அடிப்படையில்தான் இந்த மூன்று நாடுகளின் வெளியவுறவுத்துறை அமைச்சர்கள் தொடர்ந்து சந்தித்துப் பேசுகின்றனர்.

இந்தியாவை அதிகமாக பாராட்டுவது ஏன்?

நரேந்திர மோதியுடன் புதின்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஷ்ய வெளியவுறவுத்துறை அமைச்சர் என்ற முறையில் ப்ரிமகோவின் பன்முனை உலக ஒழுங்கமைவு கோட்பாடு குறித்து லாவ்ரோஃப் நன்றாக அறிந்திருக்கிறார்.

இந்த முறையில் இந்தியாவுக்கு முக்கியமான பங்கிருப்பதை இப்போது அவர் பார்க்கிறார். ஆகவே, இதற்கு என்ன காரணம்?

ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பதில் இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் நாடுகளாக ஆக வேண்டும் என்று ஏன் அவர் வலியுறுத்துகிறார்?

இந்தியா பெரும் பொருளாதார சக்தியாக மாற வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் உலகின் முன்னணி பொருளாதார நாடாக மாற முடியும் என்று நீங்கள் ஏன் சொல்கிறீர்கள்?

இந்தியாவின் பரந்த அளவிலான ராஜதந்திர அனுபவம், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதாக இருக்கும் மற்றும் ஆசியாவில் அதன் தலைமை குறித்து கவனத்தை ஈர்த்து வருகிறது என்று ஏன் அவர் கூறுகிறார்.

 

இந்த அனைத்து கேள்விகளுக்கும் பதில்களைத் தெரிந்து கொள்ள பிபிசி இந்தி, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய ஆய்வுகளுக்கான பேராசிரியர் சஞ்சய் குமார் பாண்டேவிடம் பேசியது.

"லாவ்ரோவின் இந்த கருத்து குறித்த பொருளை புரிந்து கொள்வதற்கு, நாம் கொஞ்சம் பின்னோக்கி பயணிக்க வேண்டும். இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்து ரஷ்யா புகழ்ந்து பேசுவது முதன்முறை அல்ல.

1955-56 மற்றும் 1971 ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின் போதிருந்தே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவை சோவியத் யூனியன் வைத்திருக்கிறது," என்று சஞ்சய் குமார் பாண்டே கூறினார்.

"அணிசேரா கொள்கை வடிவமைக்கப்பட்டபோதில் இருந்து கூட, சோவியத் யூனியன் இதனை அங்கீகரித்திருக்கிறது. இந்த அணிசேகராக் கொள்கை நாடுகள் ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கொண்டிருக்க வேண்டும் என்று நம்புகிறது.

சோவியத் யூனியன் அவர்களுடனான உறவை முன்னெடுக்க வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.

"சோவியத் யூனியன்(இந்த யூனியனில் ரஷ்யா ஒரு பகுதியாக இருக்க வேண்டும்) அணிசேரா நாடுகளில் கூட இந்தியாவுடனான உறவுகளை முன்னெடுப்பது பற்றி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

லியோனிட் இலிச் காலகட்டத்தின்போது, இந்தியாவுடன் சோவியத் யூனியன் முக்கியமான ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இருந்தபோதிலும் 1990களில் ரஷ்யா, மேற்கு நாடுகளை நோக்கிய ஒரு பாணியை சிறிதளவு கொண்டிருந்தது.

ஆனால், 1996ஆம் ஆண்டில் ப்ரிமகோவ் ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் மூன்று நாடுகள் கூட்டமைப்பு பற்றி அதாவது RIC குறித்து பெரிதும் குரல் கொடுத்தார்," என்றார்.

"யூரேசியாவின் அச்சாணியாக இருக்கும் வெளியவுறவுக் கொள்கை போல ரஷ்யாவின் சுதந்திரமான மற்றும் தனிப்பட்ட வெளியுறவுக் கொள்கைக்கு ப்ரிமகோவ் ஆதரவாக இருந்தார்.

ஆனால், இந்தியா மற்றும் சீனாவுடனும் சிறப்பான உறவுகளை உருவாக்குவது குறித்தும் வலியுறுத்தப்பட்டது," என குறிப்பிட்டார்.

இந்திய வெளியவுறவுக்கொள்கை சுதந்திரமானதா?

இந்தியாவின் வெளியவுறவுக்கொள்கை

பட மூலாதாரம்,ANI

இப்போது ரஷ்யா மீண்டும் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அடங்கிய மூன்று நாடுகள் கூட்டணி மற்றும் பன்முனை சர்வதேச ஒழுங்கமைவு குறித்து பேசியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவை இந்த அமைப்பின் மையமாக லாவ்ரோவ் ஏன் கருதுகிறார்?

"2014ஆம் ஆண்டு முதன்முறையாக கிரைமியா மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியபோது இந்தியா அதனை ஆதரிக்கவோ அல்லது கண்டனம் தெரிவிக்கவோ இல்லை.

கிரைமியாவில் ரஷ்யாவிற்கு சில நியாயமான பாதுகாப்பு கவலைகள் மற்றும் நலன்கள் இருக்கலாம் என்று அவர் கூறினார்.கிரைமியா காலகட்டத்தில் இருந்து இப்போது யுக்ரேன் தாக்குதல் ஆகியவற்றில் மேற்கு நாடுகளில் இருந்து இந்தியாவின் கொள்கை என்பது எப்போதும் வித்தியாசமாகவே இருக்கிறது.

"இந்தியா ரஷ்யாவை ஆதரிக்கவில்லை. ஆனால், மேற்கத்திய நாடுகளின் மொழியையும் அதன் தடைகளையும் பார்த்து, இந்த வழியில் இந்த விவகாரத்துக்கு தீர்வுகாணக்கூடாது என்று சொல்கிறது," என்றார். ரஷ்ய அதிபர் புதினுடன் பேசும்போது பிரதமர் நரேந்திரமோதி, இது போருக்கான தருணம் அல்ல என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

ஆனால், ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராக மேற்கு நாடுகள் முன்மொழிந்த கண்டனங்களுக்கு இந்தியா ஆதரவு கூடத் தரவில்லை.

அவரது கூற்றின்படி," இந்த விவகாரங்களில் மேற்கு நாடுகளைப் போல அல்லாமல், இந்தியா அதன் சுந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருக்கிறது என்று ரஷ்யாவுக்கு இதை தெளிவுபடுத்தியிருக்கிறது," பன்முனை அமைப்பில் இந்தியாவை ஒரு மையமாக ரஷ்யா பார்ப்பதற்கு இதுவே காரணம்.

2014-ஆம் ஆண்டு மோதி அரசு வந்த பிறகு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் திருப்பம் ஏற்பட்டு, சுதந்திரமாகத் தோற்றமளிக்கிறது என்று சொல்லப்படுகிறது?

பாதுகாப்பு மற்றும் வெளியுறவு தொடர்பான விவகாரங்களை கையாளும் பிரபல இந்திய பத்திரிகையாளர் நயனிமா பாசு, இந்த கேள்விக்கு பதில் அளித்தார். "தொடக்கத்தில் இருந்தே இந்தியா சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்ற முயற்சிக்கிறது. முன்பு இந்த கொள்கை அணி சேராக் கொள்கை என அழைக்கப்பட்டது. இப்போது இந்த கொள்கை உத்தி ரீதியிலான தன்னாட்சிக் கொள்கையாக மாறியுள்ளது.

அண்மைகாலமாக இதில் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என நயனிமா கூறினார். மோதி அரசின் கீழ், இந்தியா அமெரிக்காவை நோக்கி தீர்க்கமாகத் திரும்புவதைக் காணலாம். இருப்பினும், விதிகள் அடிப்படையிலான உலகளாவிய ஒழுங்கை ஆதரிக்கும் அதன் நிலைப்பாடு அப்படியே உள்ளது.

இந்தியா - சீனா இடையிலான முரண்பாடு

இந்தியா, சீனா

பட மூலாதாரம்,GETTY IMAGES

2014ஆம் ஆண்டில் இருந்து சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை ஊக்குவிப்பதில் இந்தியா வெற்றி பெற்றதா அல்லது மிகைப்படுத்தப்பட்டதா என்பதுதான் கேள்வி.

"முந்தைய அரசுகளும் பெரும் அளவுக்கு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கொண்டிருப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால், கிரைமியாவை பற்றிய கண்ணோட்டம் மற்றும் அதன்பிறகு யுக்ரேன் மோதல் ஆகியவற்றில் மோதி அரசு, அதன் வெளியுறவுக் கொள்கையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது," என சஞ்சய் குமார் பாண்டே கூறினார்.

"இந்தியாவின் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மிகைப்படுத்துவதாக இருக்கிறது என்பது அல்ல. இதற்கான உதாரணங்கள் வெளிப்படையானவை.

இரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்ததற்கு இடையே, இந்தியா தொடர்ந்து அதன் சாபஹர் திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளித்தது. இந்தியா 2016-17ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக சேர்ந்தது.

அதாவது எஸ்சிஓ அமைப்பு சீனாவின் தாக்கம் கொண்ட அமைப்பாக நம்பப்படுகிறது.இன்னொருபுறம், குவாடில் இந்தியாவின் பங்கேற்பை மேற்கத்திய நாடுகளுடனான ஒத்துழைப்புக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்," என்றும் அவர் கூறினார்.

ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் புதிய உலகளாவிய முக்கோண வரிசையில் அதாவது RIC நாடுகளை ஒரு பெரிய பங்காக லாவ்ரோவ் காண்கிறார், ஆனால், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள இறுக்கமான உறவுகளால் அதன் முக்கியத்துவம் குறைந்து விடாதா?

இந்தியா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்னைகள், வணிக ரீதியான பிரச்னைகள் இருப்பது சரிதான்.

ஆனால், சுற்றுச்சூழல், சர்வதேச அளவில் வணிக ஒப்பந்தங்கள் குறித்த கேள்வி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பு நிலவுகிறது," என சஞ்சய் குமார் பாண்டே கூறினார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்த உறுப்பினர் பதவி

ப்ரிமகோவ் ரீடிங்ஸ் சர்வதேச மன்றத்தில் பேசிய லாவ்ரோவ், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்திர உறுப்பினர் ஆவதற்கு ஜெர்மனி, ஜப்பான் நாடுகளை விடவும் இந்தியா, பிரேஸிலுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். சர்வதேச மற்றும் பிராந்திய முன்னோக்குகள் காரணமாக இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அதிக மதிப்புகளை சேர்க்க முடியும் என்று கூறினார்.

ஆனால், "இந்த தீர்மானம் என்பது ரஷ்யாவின் முடிவை மட்டும் சார்ந்த ஒன்றாக இருக்காது. இந்தியாவின் கோரிக்கையை சீனாவால் தடுத்து நிறுத்த முடியும்", என நயனிமா பாசு கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/cd1lp9eznz4o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.