Jump to content

உலகின் முதல் பெண் பிரதமர்! நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட தகவலால் எழுந்துள்ள சர்ச்சை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் முதல் பெண் பிரதமர்! நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட தகவலால் எழுந்துள்ள சர்ச்சை

4-12.jpg

உலகின் முதல் பெண் பிரதமர் தொடர்பில் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள தகவல் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குறித்த நிகழ்ச்சியின்போது மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து பெண்களின் விடுதலை தொடர்பில் கருத்து தெரிவித்த கமல்ஹாசன் உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர் என்று குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கையை சேர்ந்த சிறிமாவோ பண்டாரநாயக்க முதலாவது பெண் பிரதமராக 1960ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21 ஆம் திகதி தேர்வு செய்யப்பட்டார்.இதற்கமைய , உலகின் முதல் பெண் பிரதமர்’ எனும் பெருமை இலங்கைக்குரியதாகும்.

தவறான தகவலால் எழுந்துள்ள சர்ச்சை
இந்நிலையில்,அரசியல்வாதியாகவும்,பலரும் இரசிக்க கூடிய நடிகராகவும் உள்ள கமல்ஹாசன் இவ்வாறு தவறான தகவலை வெளியிட்டுள்ளமை பலர் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இந்தியாவின் முதலாவது பெண் பிரதமரான இந்திரா காந்தியை நினைத்து, ‘உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்’ என்று, கமலஹாசன் கூறியிருக்கக் கூடும் என்றும் சிலர் மாறுபட்ட கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

கமல்ஹாசன் தெரிவித்த இந்த தகவல் தவறானது என்பதால் பலரும் தமது தனிப்பட்ட கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு விவாதித்து வருகின்றனர்.

இருப்பினும், இது தொடர்பில் கமல்ஹாசன் தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பதுடன்,அடுத்த வார நிகழ்ச்சியில் இதற்கு பதிலளிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டார நாயக்கவின் மனைவியான சிறிமாவோ பண்டார நாயக்க கணவரின் மரணத்தை அடுத்து பிரமதராக தெரிவு செய்யப்பட்ட நிலையில், ‘உலகின் முதலாவது பெண் பிரதமர்’ எனும் பெருமை அவருக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://akkinikkunchu.com/?p=232596

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

இதேவேளை, இந்தியாவின் முதலாவது பெண் பிரதமரான இந்திரா காந்தியை நினைத்து, ‘உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்’ என்று, கமலஹாசன் கூறியிருக்கக் கூடும் என்றும் சிலர் மாறுபட்ட கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஒருவர் தவறான கருத்தை தெரிவித்தால்... 
சம்பந்தப் பட்டவர் அதற்கு விளக்கம் கொடுப்பதுதான் முறை.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்... தாம் விரும்பும் ஆட்களுக்கு  முட்டுக் கொடுப்பதை  
பல இடங்களில் காண்பது வெறுப்பை தருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

ஒருவர் தவறான கருத்தை தெரிவித்தால்... 
சம்பந்தப் பட்டவர் அதற்கு விளக்கம் கொடுப்பதுதான் முறை.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்... தாம் விரும்பும் ஆட்களுக்கு  முட்டுக் கொடுப்பதை  
பல இடங்களில் காண்பது வெறுப்பை தருகின்றது.

இது பரவாயில்லை. மணி என்ற மூத்த பத்திரிகையாளராம்.

இந்த மனிதர், யூடீபில் உருட்டு கண்களுடன் நியாயம் பிளப்பார்.

ஏதோ விசயம் தெரிந்தவர் என்று பார்த்தால், இந்த வருசம் இலங்கை போராட்டங்களின் போது, இந்தியாவுடன், பாகிஸ்தான், பர்மா போல சேர்ந்திருந்த இலங்கையை, பிரிட்டிஷ்காரர் 1923ல் பிரித்தார்கள். அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், இந்தியாவில், சிங்களவர்கள் வேறு மாநிலம், தமிழர்கள் வேறு மாநிலமாக இருந்திருப்பார்கள் என்றார்.

அதன் பின்னர் அந்தாள், வீடியோக்களை பார்ப்பதில்லை.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

இது பரவாயில்லை. மணி என்ற மூத்த பத்திரிகையாளராம்.

இந்த மனிதர், யூடீபில் உருட்டு கண்களுடன் நியாயம் பிளப்பார்.

ஏதோ விசயம் தெரிந்தவர் என்று பார்த்தால், இந்த வருசம் இலங்கை போராட்டங்களின் போது, இந்தியாவுடன், பாகிஸ்தான், பர்மா போல சேர்ந்திருந்த இலங்கையை, பிரிட்டிஷ்காரர் 1923ல் பிரித்தார்கள். அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், இந்தியாவில், சிங்களவர்கள் வேறு மாநிலம், தமிழர்கள் வேறு மாநிலமாக இருந்திருப்பார்கள் என்றார்.

அதன் பின்னர் அந்தாள், வீடியோக்களை பார்ப்பதில்லை.

அந்த மணியை… சவுக்கு சங்கர் எடுத்த பேட்டியில்,
விடுதலைப் புலிகள் பற்றி… சவுக்கு சங்கர் கேட்க,
மணியோ…. உருட்டு கண்களுடன் சொன்ன பதில்களை பார்த்த பின்…
இருவரின் “யூ ரியூப்” விடியோக்களையும் நான் பார்ப்பதில்லை. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேமதாச தவிர்ந்த சுதந்திரத்துக்கு பின்  இலங்கையை ஆண்ட கூட்டம்கள் அனைத்தும் கண்டிய மேல்குடி சிங்கள கூட்டம் இதுக்குள் ஆண் ஆண்டாள் என்ன பெண் ஆண்டாள் என்ன தமிழனுக்கு விடிவு வந்ததா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

ஒருவர் தவறான கருத்தை தெரிவித்தால்... 
சம்பந்தப் பட்டவர் அதற்கு விளக்கம் கொடுப்பதுதான் முறை.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்... தாம் விரும்பும் ஆட்களுக்கு  முட்டுக் கொடுப்பதை  
பல இடங்களில் காண்பது வெறுப்பை தருகின்றது.

கமலகாசன் நல்ல நடிகர். கெட்டிக்காரன். நடிகனாக அவரை மெச்ச வேண்டும்.😂
எனைய பொது விடயங்களில் திரும்பியும் பார்க்கப்படாது. ஒரு கோதாரியும் தெரியாது.😎

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

கமலகாசன் நல்ல நடிகர். கெட்டிக்காரன். நடிகனாக அவரை மெச்ச வேண்டும்.😂
எனைய பொது விடயங்களில் திரும்பியும் பார்க்கப்படாது. ஒரு கோதாரியும் தெரியாது.😎

சரியாக சொன்னீர்கள்.
அரசியலில் கூட… அவருடன் சேர்ந்து இருந்தவர்கள் பலர் விலத்தி விட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கமலகாசன் நல்ல நடிகர். கெட்டிக்காரன். நடிகனாக அவரை மெச்ச வேண்டும்.😂
எனைய பொது விடயங்களில் திரும்பியும் பார்க்கப்படாது. ஒரு கோதாரியும் தெரியாது.😎

கமல் மட்டுமா, ரசனியும் தான்...🤦‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

இது பரவாயில்லை. மணி என்ற மூத்த பத்திரிகையாளராம்.

இந்த மனிதர், யூடீபில் உருட்டு கண்களுடன் நியாயம் பிளப்பார்.

ஏதோ விசயம் தெரிந்தவர் என்று பார்த்தால், இந்த வருசம் இலங்கை போராட்டங்களின் போது, இந்தியாவுடன், பாகிஸ்தான், பர்மா போல சேர்ந்திருந்த இலங்கையை, பிரிட்டிஷ்காரர் 1923ல் பிரித்தார்கள். அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால், இந்தியாவில், சிங்களவர்கள் வேறு மாநிலம், தமிழர்கள் வேறு மாநிலமாக இருந்திருப்பார்கள் என்றார்.

அதன் பின்னர் அந்தாள், வீடியோக்களை பார்ப்பதில்லை.

🤣 நம்ம உடான்ஸ் சாமிக்கே டப்ஹ் கொடுப்பார் போல இருக்கே மணி🛎️

9 hours ago, தமிழ் சிறி said:

அந்த மணியை… சவுக்கு சங்கர் எடுத்த பேட்டியில்,
விடுதலைப் புலிகள் பற்றி… சவுக்கு சங்கர் கேட்க,
மணியோ…. உருட்டு கண்களுடன் சொன்ன பதில்களை பார்த்த பின்…
இருவரின் “யூ ரியூப்” விடியோக்களையும் நான் பார்ப்பதில்லை. 😂

யாழிலும் மணியை அந்த நேரம் எல்லாரும் போட்டு அடித்தது நியாபகம் இருக்கும்.

9 hours ago, பெருமாள் said:

பிரேமதாச தவிர்ந்த சுதந்திரத்துக்கு பின்  இலங்கையை ஆண்ட கூட்டம்கள் அனைத்தும் கண்டிய மேல்குடி சிங்கள கூட்டம் இதுக்குள் ஆண் ஆண்டாள் என்ன பெண் ஆண்டாள் என்ன தமிழனுக்கு விடிவு வந்ததா ?

இல்லை என்று நினைக்கிறேன். 

சிறீமா, விஜேதுங்க மட்டும்தான் உண்மையான கண்டியர். சேனாநாயக்ககள், பண்டாஸ், ராஜபக்சாஸ், கொத்தலாவல, ஜே ஆர் ….கீழ் நாட்டு சிங்களவர் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

கமலகாசன் நல்ல நடிகர். கெட்டிக்காரன். நடிகனாக அவரை மெச்ச வேண்டும்.😂
எனைய பொது விடயங்களில் திரும்பியும் பார்க்கப்படாது. ஒரு கோதாரியும் தெரியாது.😎

வெளிவேசத்தில் ரஜனியை மிஞ்சி விடுவார்.  தன்னை ஒரு அறிந்தவராக, முற்போக்குவாதியாக காட்டி கொள்ளும் பக்கா சங்கி. வயது போக, போக அவரை மீறி நூல் பாசம் வெளிக்காட்டி விடுகிறது.

 

# நூலிபான்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

யாழிலும் மணியை அந்த நேரம் எல்லாரும் போட்டு அடித்தது நியாபகம் இருக்கும்.

Glockenerneuerung in St.Marien Marienberg  Kollywood Journalist Mani Biography, News, Photos, Videos | NETTV4U

 

🔔  மணி  என்றால்.... அடிக்கத்தானே வேணும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

நூலிபான்  பூநூல்களுக்கு சரியான பெயர்.🤣

எனதல்ல. ஏலவே புழக்கத்தில் உள்ள சொல்லாடல்தான்.

1 hour ago, தமிழ் சிறி said:

மணி  என்றால்.... அடிக்கத்தானே வேணும். 🤣

இந்த மணியை உதைக்கோணும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இந்த மணியை உதைக்கோணும்🤣

இவரும் நூலிபான் என நினைக்கின்றேன். 😂
பிராமணருக்கு உதைத்தால்… மறு பிறப்பில் நரகலோகம் என்று அடித்து சொல்கிறார்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

இவரும் நூலிபான் என நினைக்கின்றேன். 😂
பிராமணருக்கு உதைத்தால்… மறு பிறப்பில் நரகலோகம் என்று அடித்து சொல்கிறார்கள். 🤣

மணின்னாலே புரியணுமோன்னோ🤣

பராவாயில்லை அங்க நீங்க வந்து மணி அடிக்காதவரை நாங்க அங்கயே இருந்துகரோம் எண்டு சொல்லி உதையுங்கோ🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

இவரும் நூலிபான் என நினைக்கின்றேன். 😂
பிராமணருக்கு உதைத்தால்… மறு பிறப்பில் நரகலோகம் என்று அடித்து சொல்கிறார்கள். 🤣

இப்படி சொல்லியே எங்களை லூசர் ஆக்கிவிட்டார்கள் நூலிபான்.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் முதலாவது பெண் பிரதமர் என்பது பிழை. உலகில் முதலாவது பெண் பிரதமர் என்பதே சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் அரசியல்வாதிகளில்

இருக்கும் கூத்தாடிகளின் 

கமல்ஹாசன் அறிவார்ந்தவரே. 

இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை 

மேடையில் பேசும் போது இவ்வாறான தவறுகள் வருவது சாதாரணம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிக் பாஸில் தன் தவறை ஒப்புக் கொண்ட கமல்ஹாசன்

பிக்பாஸ்: நடிகர் கமல் ஹாசன்

பட மூலாதாரம்,VIJAY TV

2 மணி நேரங்களுக்கு முன்னர்

"உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்" என, கடந்த வாரம் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில், அதன் தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த பிழையான தகவலை, நேற்றைய (18) நிகழ்ச்சியில் அவர் திருத்திக் கொண்டார்.

விஜய் டிவியில் ஒளிபாரப்பாகும் 'பிக் பாஸ் தமிழ் சீசன் 6' நிகழ்ச்சியில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் போட்டியாளர்களைச் சந்தித்து கமல்ஹாசன் பேசினார்.

அப்போது 'பிக்பாஸ்' வீட்டிலுள்ள போட்டியாளர்களிடம் கடந்த வாரம் கேட்கப்பட்ட பொது அறிவுக் கேள்விகளுக்கு, அவர்கள் வழங்கிய பிழையான பதில்களை அவர் நினைவுபடுத்தி நகைச்சுவையாகப் பேசினார்.

இதன்போது ஒரு கட்டத்தில், உலகின் பெண் பிரதமர் தொடர்பாக, தான் கடந்த வாரம் தெரிவித்த பிழையான தகவல் பற்றியும் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.   

 

"எனக்கே கூட பிழைகள் நேரும். அவற்றைச் சுட்டிக் காட்டும் போது மறுத்துப் பேசாமல், உடனடியாக ஒத்துக் கொள்வது சிறப்பு. ஏனென்றால் அது நம்மை மேம்படுத்தும்” என அப்போது கமல் கூறினார்.  

”இங்கே பேசிக் கொண்டிருக்கும் போது, உலகத்தின் முதல் பெண் பிரதமர் என்று, இந்திரா காந்தியைச் சொல்லி விட்டேன். அதன்பிறகு எனக்கு திருத்தம் சொல்லி பல பேர் செய்தியனுப்பினார்கள். சமூக ஊடகங்களில் நிறையப்பேர் சொன்னார்கள். உலகின் முதல் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க என்பது எனக்கு தெரியாமல் போனமைக்கு வயதுதான் காரணம்".

"எனக்கு அரசியலில் சின்னப் புரிதல் வரும் நேரத்தில் அந்த வரலாற்றை மறந்துவிட்டேன். என் நாட்டு பிரதமர் பற்றி பேச வேண்டுமென்று, பக்கத்து 'தங்கச்சி' நாட்டை மறந்து விட்டேன். அது ஒரு நினைவுப் பிழைதான்" என்றார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்; "நான் செய்த அந்தத் தவறு காரணமாக, சில பெண் தலைவிகள் பற்றி - சமூக ஊடகங்களில் நிறைய விவாதங்கள் நடந்தன. அடுத்த தலைமுறை என்னைப் போல் இவ்வாறு மறதியில் தவறு செய்யாமலிருக்க அது உதவும்” என்றார்.

big boss kamal

பட மூலாதாரம்,VIJAY TV

நடந்த பிழை என்ன?

'உலகின் முதல் பெண் பிரதமர் இந்தியர்' என, கடந்த வாரம் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்த தினத்தை நினைவுகூர்ந்து, அந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பேசிய கமல்ஹாசன், ஒரு கட்டத்தில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

பெண் விடுதலை தொடர்பாக பாரதியின் செயற்பாடுகள் குறித்து, அந்த நிகழ்ச்சியில் சிலாகித்த கமல்ஹாசன், ”பாரதி வெறும் வாய்ப்பேச்சில் வீரம் பேசாமல் 'சக்கரவர்த்தினி' என்ற ஒரு பத்திரிகையைத் துவங்கி - நடத்தி, அதில் பெண்களைக் கொண்டு எழுத வைத்தார்" என்று கூறியதோடு, "உலகத்தின் முதல் பெண் பிரதமர் என்பதை இந்தியாதான் செய்தது” என்றார்.  

ஆனால் கமல்ஹாசன் தெரிவித்த அந்த தகவல் பிழையானது. உலகின் முதல் பெண் பிரதமரைப் பெற்றுக் கொண்ட பெருமை இலங்கைக்குரியதாகும். இலங்கையின் முதல் பெண் பிரதமராக 1960ஆம் ஆண்டு தெரிவான சிறிமாவோ பண்டாரநாயக்க, 'உலகின் முதல் பெண் பிரதமர்' எனும் சிறப்பையும் பெற்றார்.

indira gandhi sirimavo bandaranayake

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

1973இல் இலங்கை பயணம் மேற்கொண்ட அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் அப்போதைய இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க.

தெரியவில்லையா? மறந்து விட்டாரா?

நடிகர் கமல்ஹாசன் கடந்தவாரம் பேசும் போது இந்திரா காந்தியின் பெயரைக் குறிப்பிடவில்லை. என்றாலும், அவர் இந்திராவை மனதில் வைத்தே அந்தத் தகவலைக் கூறியிருந்தார்.

இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பிரதமராவார். அவருக்கும் பின்னர் எந்தவொரு பெண்ணும் இந்தியப் பிரதமர் பதவியை இதுவரை வகிக்கவில்லை.

எது எவ்வாறாயினும், 'உலகின் முதல் பெண் பிரதமர் யார்' எனும் தகவலை கமல் பிழையாக கூறினாரா? அல்லது மறந்து தவறாகப் பதிவு செய்தாரா என்பதை அவர் நேற்றைய நிகழ்ச்சியில் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

https://www.bbc.com/tamil/articles/clj3dxwxnywo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

இலங்கையின் முதல் பெண் பிரதமராக 1960ஆம் ஆண்டு தெரிவான சிறிமாவோ பண்டாரநாயக்க, 'உலகின் முதல் பெண் பிரதமர்' எனும் சிறப்பையும் பெற்றார்

பலரை கொன்று அவர்களின் இரத்ததில் பிரதமராகினவர்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.