Jump to content

நஷ்டத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நிறுவகிக்கப்படும் போதிலும் புதிய விமானங்கள் கொள்வனவு - பந்துல குணவர்தன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நஷ்டத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நிறுவகிக்கப்படும் போதிலும் புதிய    விமானங்கள் கொள்வனவு - பந்துல குணவர்தன

By DIGITAL DESK 2

13 DEC, 2022 | 01:35 PM
image

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நஷ்டத்தில் நிர்வகிக்கப்படுகின்ற போதிலும், அதனை மறுசீரமைப்பதற்காக புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (13)  நடைபெற்ற போது , நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு எந்த அடிப்படையில் 11 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது என்று கேட்கப்பட்ட போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நிறுவனமொன்று வீழ்ச்சியடைந்ததன் பின்னர் அதனை மறுசீரமைக்க முடியாது. இது வரை கொள்வனவு செய்யப்பட்டுள்ள விமானங்களின் வரி காலம் நிறைவடைந்தால் , அதன் பின்னர் மறுசீரமைக்க முடியாது.

எனவே நிறுவனமொன்றை நிர்வகித்துக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே அதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும். அதற்கமையவே புதிய விமானங்களை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/142979

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசு எங்கால?

அடமானம், பிளேன் மேல எண்டால், கடனுக்கு தருவினம். மாதக்காசு கட்டாட்டி, வெளிநாடுகளில் வைத்து அமத்தலாம் எண்டு.🤑

Link to comment
Share on other sites

  • nunavilan changed the title to நஷ்டத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நிறுவகிக்கப்படும் போதிலும் புதிய விமானங்கள் கொள்வனவு - பந்துல குணவர்தன
  • கருத்துக்கள உறவுகள்

எயார் லைன்ஸ் நிறுவனம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 110 பில்லியன் ரூபா நிலுவையை செலுத்தவேண்டியுள்ளது - இந்திக

By DIGITAL DESK 5

13 DEC, 2022 | 02:55 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)  

வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 110 பில்லியன் ரூபா நிலுவை தொகை செலுத்தப்படவுள்ளது. 

மாதாந்தம் 10 மில்லியன் ரூபாவை எயார் லைன்ஸ் நிறுவனம் தற்போது செலுத்தி வருகிறது  என மின் சக்தி மற்றும் வலு சக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

வரையறுக்கப்பட்ட ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 110 பில்லியன் ரூபா நிலுவை தொகை செலுத்தப்படவுள்ளது.

இந்த நிலுவை தொகையை பெற்றுக் கொள்ள பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு மாதாந்தம் 10 மில்லியன் ரூபா நிலுவைத் தொகை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதற்கமைய கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை நிலுவை தொகை செலுத்தப்பட்டுள்ளது.இருப்பினும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் 10 மில்லியன் ரூபா நிலுவை தொகை செலுத்தப்படவில்லை.

ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 30 பில்லியன் ரூபா நிலுவை தொகையை செலுத்தியுள்ளது. கடன் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்க முடியாது என எயார் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன,நட்டமடையும் ஸ்ரீ லங்கன் எயார் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் மாதாந்தம் பல இலட்சம் ரூபா சம்பளம் பெறுகிறார்கள்.

நிலுவை தொகையை பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தை மாத்திரம் முன்னெடுக்க கூடாது நிலுவை கட்டண தாமதத்திற்கு தண்டபணம் அறவிடப்பட வேண்டும்.

ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம் பல பில்லியன் ரூபாவை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தாத காரணத்தினால் கூட்டுத்தாபனம் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது,இந்த சுமை சாதாரண மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, ஸ்ரீ லங்கன் எயார் லைன் நிறுவனம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை பெற்றுக் கொள்ள இந்த அரசாங்கம் தான் உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.தற்போது முறைமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தற்போது கடனுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/143004

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தை ஏன்லே இன்னமும் நடத்துறீங்க?😎

புலத்திலுள்ளோருக்கு வித்துடுங்க. 🫣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

நட்டத்தில் இயங்கும் விமான நிறுவனத்தை ஏன்லே இன்னமும் நடத்துறீங்க?😎

புலத்திலுள்ளோருக்கு வித்துடுங்க. 🫣

காசடிக்கத்தான்…..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதை வைச்சு புலம்பெயர்ஸை அமுக்கிற பிளானோ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, satan said:

உதை வைச்சு புலம்பெயர்ஸை அமுக்கிற பிளானோ?

இல்லை, யாழ் களத்தில் யாரோ புலத்திலிருந்து  “ஈழம் Air” விமான கம்பெனி ஆரம்பிக்க டெண்டர் விட்டார், யாரென ஞாபகம் இல்லை! 🤪 

அவரை அந்த குழாமை ஒரே அமுக்கு..அமுக்கிட வேண்டியதுதான். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழனால்  விமானம் ஓட்டமுடியாது,  ஓட்டமாடான் என்றுமில்லை, விமான கம்பனி நடத்த இயலாது என்றுமில்லை, அவனால் எல்லாம் முடியும். ஆனால் அவன் தொடங்கினால்; காட்டிக் கொடுக்கவும், முட்டுக்கட்டை போட்டு தடுக்கவும், அழிக்கவும் பலபேர் போட்டி போட்டுகொண்டு வருவார்கள்.  கறையான் புத்தெடுக்க கருநாகம் குடி இருக்கும். எதுக்கு வம்பு? அது அதுக்கு தெரிந்ததைத்தானே அதனால் செய்யமுடியும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.