Jump to content

உதயநிதி-விஜய்- அண்ணாமலை: முக்கோண மோதலாகுமா தமிழக அரசியல்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உதயநிதி-விஜய்- அண்ணாமலை: முக்கோண மோதலாகுமா தமிழக அரசியல்?

AaraDec 16, 2022 09:47AM
WhatsApp-Image-2022-12-16-at-9.25.12-AM.

தமிழ்நாட்டு அரசியல் களம் அடுத்த தலைமுறையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதன் அறிகுறிகள் மிக வெளிச்சமாக தெரிகின்றன. டிசம்பர் 14ஆம் தேதி திமுக இளைஞரணி செயலாளரும் முதல்வர் ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

ஏற்கனவே அவர் கட்சி அடிப்படையில் ஸ்டாலினுக்கு அடுத்த முகம் என்று முன்னிறுத்தப்பட்டு விட்ட நிலையில்,  ஆட்சி  ரீதியான நிர்வாகத்திலும் ஸ்டாலினுக்கு அடுத்தது உதயநிதி தான் என்று சொல்லும் அளவுக்கு அவரது அமைச்சர் பதவி ஏற்பும்,  அதற்கு அடுத்தடுத்து நிகழ்ந்த நிகழ்வுகளும் அமைந்துள்ளன.

உதயநிதிக்கு கிடைத்த உயரம்

இந்த அமைச்சரவையில் மிக இளையவன் என்று உதயநிதி ஸ்டாலின் தன்னை அழைத்துக் கொண்டாலும் மொத்தமுள்ள 35 அமைச்சர்களில் தற்போது சீனியாரிட்டி அடிப்படையில் 10-வது இடத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார் உதயநிதி.

triangle politics in tamilnadu

அமைச்சரவையில் சேர்ந்த ஒரே நாளில் 25 இடங்களை பின்னுக்குத் தள்ளி 10வது இடத்துக்கு முன்னேறி இருப்பவருக்கு தனக்கு முன்னுள்ள சீனியர்களை விட முக்கியமான இடத்தை பிடிப்பதற்கு வெகு காலம் ஆகாது என்கிறார்கள். அதாவது துணை முதல்வராகவே உதயநிதி ஸ்டாலின் முடிசூட்டப்படுவதற்கான முன்னோட்டம்தான் இது என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

வாரிசுக்காக காத்திருந்த வாரிசு

திமுக தனது அடுத்த தலைமுறை அரசியலை தெளிவாக தொடங்கி நடத்தி வரும் நிலையில் உதயநிதிக்காக காத்திருந்த நடிகர் விஜய்யும் சமீப நாட்களாக தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்.  விஜய் வாரிசு படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிடும் நிலையில் அதற்கு முன்பாக இந்த மாதத்திலேயே தனது இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து சந்தித்திருக்கிறார்.  அவர்களுக்கு பிரியாணி சமைத்து போட்டு அவர்களை குஷிப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார் விஜய்.  

triangle politics in tamilnadu

இது ஏதோ வாரிசு படத்துக்காக நடத்தப்படக்கூடிய சந்திப்பு அல்ல, அரசியலில் அழுத்தமாகக் காலூன்றுவதற்கான ஆலோசனைகளும் இந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சந்திப்பில் நடத்தப்பட்டிருக்கிறது  என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்க வட்டாரத்தினர்.

அவர்களிடம் நாம் பேசும்போது,  “ஏற்கனவே மின்னம்பலம் இணைய இதழில் தெளிவாக குறிப்பிட்டு இருந்தீர்கள்.  ஜெயலலிதா கலைஞர் ஆகியோருக்கு சற்றும் குறையாத தலைமை பண்பாக ஸ்டாலின் இருக்கிறார் என்று கருதுகிறார் விஜய்.  அவரை எதிர்த்து அரசியல் செய்வதற்கு விஜய்க்கு விருப்பமும் இல்லை, தனக்கு தகுதியும்  இல்லை என நினைக்கிறார் விஜய்.” என்கிறார்கள்.

விஜய்யின் குரலாக ஒலித்த தில் ராஜூ

இந்த நிலையில் திமுகவில் விரைவில் உதயநிதி ஸ்டாலின் தலை எடுப்பார்,  அப்போது அவரை எதிர்த்து நேரடியாக அரசியல் செய்வது தான் தனக்கு சரியானதாக இருக்கும் என்று விஜய் தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவந்தார்.  

ஏனென்றால் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தால்  தற்போதைய வாரிசு வரை பாதிக்கப்பட்டிருப்பவர் விஜய். வாரிசு படத்தின் முழு விநியோக உரிமையை கைப்பற்ற  உதயநிதி சார்பில் சில காய் நகர்த்தல்கள் நடந்தன. ஆனால் விஜய் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. 

ஏற்கனவே மாஸ்டர் படத்தை விநியோகித்த செவன் ஸ்டுடியோவிடமே கொடுத்திருக்கிறார். ஆனாலும் சென்னை, கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் வாரிசு படத்தை ரெட் ஜெயின்ட்  வெளியிடுகிறது.  இப்படி செய்யாவிட்டால் தமிழகத்தின் மீதமுள்ள பகுதிகளில் இருக்கும் தியேட்டர்களில் வாரிசு படத்தின் ரிலீஸ் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று விஜய்க்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

ஏற்கனவே காவலன், தலைவா என்று அரசியல் அழுத்தங்களுக்கு ஆளான விஜய் இப்போது நேரடியாகவே உதயநிதியால்  அழுத்தத்துக்கு ஆளாகியிருக்கிறார். இதை விஜய்யின் வாய்ஸாக  வாரிசு படத்தின்  தயாரிப்பாளர் தில் ராஜூவே தெலுங்கு பேட்டியொன்றில் தெளிவாக சொல்லியிருக்கிறார்.

 

“தமிழ்நாட்டில் அஜீத்தை விட விஜய்  நம்பர் ஒன் ஸ்டாராக இருக்கிறார். இதை நான் சொல்லவில்லை, புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ஆனால் அஜீத்தின் துணிவை வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் துணிவு படத்துக்கு அதிக தியேட்டர்களை ஒதுக்கீடு செய்துவிட்டு வாரிசுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்கவிடாமல் செய்கிறார்கள்.

இது பிசினஸ். யாருக்கு லாபம் அதிகம் வருகிறதோ அவர்களுக்கே அதிக தியேட்டர்கள் தரப்பட வேண்டும். துணிவுக்கு நிகராக வாரிசை ரிலீஸ் செய்ய போதுமான தியேட்டர்களை ஒதுக்கினாலே போதும்” என்று விஜய் பட தயாரிப்பாளர் தில் ராஜூ வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இது பிசினஸ் என்று தயாரிப்பாளர் சொன்னாலும்… இது முழுக்க முழுக்க அரசியல் என்பதுதான் விஜய் சொல்லும் உண்மை. அதனால்தான் இதில் தான் வெளிப்படையாக பேசாமல் தன்னுடைய தயாரிப்பாளரை பேச வைத்திருக்கிறார் விஜய்.

ரெட் ஜெயன்ட்- விஜய் ஆராய்ச்சி 

இந்த நிலையில் உதயநிதி அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில்… அவரது ரெட் ஜெயன்ட்நிறுவனத்தின் தொடர்புகள் பற்றியும் விஜய் தரப்பில் ஆராயத் தொடங்கியுள்ளனர். ஏனெனில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி  அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்திருப்பவர் இன்னொரு நிறுவனத்தில் ஊழியராகவோ பங்குதாரராகவோ உரிமையாளராகவோ இருக்கக் கூடாது.  

ஆபீஸ் ஆஃப் பிராஃபிட் என்ற அடிப்படையில் அரசு சம்பளம் வாங்குபவர் இன்னொரு தனியார் நிறுவனத்திடம் இருந்து ஆதாயம் பெற்றால், தனது அமைச்சக அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த தனியார் நிறுவனத்துக்கு அவர் பாரபட்சமாக உதவி செய்வதற்கு வாய்ப்புண்டு என்பதால் எந்த நிறுவனத்திலும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கக் கூடாது. இது உதயநிதிக்கும் பொருந்தும். எனவே ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் இருந்து உதயநிதி தன்னை முற்றிலும் விடுவித்துக் கொண்டாரா என்பது பற்றியும் விசாரித்து வருகிறார் விஜய்.

triangle politics in tamilnadu

இதற்கு அச்சாரமிடும் வகையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியிருக்கும் போஸ்டர்கள் அரசியல் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றன.
மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு அழைக்கும் வகையில், ’எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே’ என்று போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

கமலாலயத்தில் விஜய் 

இதற்கிடையே கடந்த வாரம் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட தலைவர் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, திமுக-அதிமுக பற்றியெல்லாம் கடுமையாக பேசிவிட்டு, ‘விஜய் எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர் அரசியலுக்கு வந்துவிட்டால் எல்லாமே மாறிவிடும்’ என்றும் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே  விஜய்க்கும் பாஜகவுக்கும் கடுமையான மோதல்கள் நடந்திருக்கின்றன. 

triangle politics in tamilnadu

பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா  ஜோசப் விஜய் என்று தான் விஜய்யை அழைப்பார். இந்த  நிலையில் கமலாலயத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம் வரை விஜய் பெயர் அடிபட்டுள்ளது. ஒருவேளை ரஜினியை விட்டு விஜய்யை பிடிக்க பாஜக முயற்சித்தாலும் முயற்சிக்கலாம். ஆனால் அதற்கு விஜய் பிடிகொடுப்பாரா என்பது பலத்த கேள்விக்குறி.

விஜய் ஏற்கனவே தனது மக்கள் இயக்கத்தினரை அரசியலுக்கு தயார் செய்து அவர்களில் சிலரை தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற வைத்திருக்கிறார். இந்நிலையில் அனேகமாக அடுத்த 2026 சட்டமன்றத் தேர்தலின்போது விஜய் 50 வயதை நெருங்குவார். அப்போது ஆக்டிவ்வான தீவிர அரசியலில் இறங்குவதற்கு அவருக்கு சரியான நேரமாக இருக்கும் என்கிறார்கள் விஜய் மக்கள் இயக்கத்தினர்.

அப்படி நடந்தால் உதயநிதி – விஜய் – அண்ணாமலை என்று தமிழகம் இளைஞர்களின் முக்கோண அரசியலைக் காண வேண்டியிருக்கும்!


 

https://minnambalam.com/political-news/vijay-udhayanidhi-stalin-annamalai-triangle-politics-in-tamilnadu/

 

Edited by கிருபன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமெடி நடிகர், சின்னவர் உதயநிதியை….
விஜய், அண்ணாமலை போன்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

மகிந்த குடும்ப அரசியலுக்கும் ஸ்ராலின் குடுப்ப அரசியலுக்கும் வித்தியாசம் உண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

மகிந்த குடும்ப அரசியலுக்கும் ஸ்ராலின் குடுப்ப அரசியலுக்கும் வித்தியாசம் உண்டா?

ஓம்.
மகிந்த, கட்சியை… தானே ஆரம்பித்து…. தனது குடும்பங்களை கொண்டு நிரப்பியவர்.
😎மற்றவர்… ஆரோ ஆரம்பித்த கட்சியில், தனது குடும்பங்களை கொண்டு  நிரப்பியவர். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே ஸ்டாலின் தன் மகனோ அல்லது மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று உறுதியாகச் சொன்னவர்.

 (இப்படி நாம் நினிக்கக்கூடாது தான்) ஸ்டாலினுக்கு ஒரு திடீர் மரணம் வந்து திமுகவுக்குள் ஏற்படும் தலைமைத்துவப் போட்டியில் கட்சி பிளவுற்றால் புதிய நபர்களுக்கு வாய்ப்பு உண்டு. இதை இயற்கை தான் செய்யவேண்டும். இல்லாவிட்டால் இன்பநிதிக்குப் பிறகு அவர் மகன் துன்பநிதியிடம் தான் தலைமை போகும்.

திமுகவின் செங்குத்தான பிளவுதான் நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

காமெடி நடிகர், சின்னவர் உதயநிதியை….
விஜய், அண்ணாமலை போன்றவர்களுடன் ஒப்பிடாதீர்கள்.

விஜய் அடுத்த ரஜனி.

அரசியல் வரப்போவதில்லை. படம் ஓடவைக்க அரசியல் மட்டும் பேசுவார்கள்.

பாஜக காத்திருந்த தருணம் கனிந்துள்ளது.

ஸ்ராலின் முதல்வராகி இரண்டு வருடமாக, இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் மக்கள் வெறுப்பை மட்டுமல்ல, மருமகன் சபேசன், மகன் உதயநிதி, மணைவி துக்க்கா என்று குடு்ம்பம் மட்டுமே கொள்ளையடித்து சுருட்டுவதால் திமுக எம்எல்ஏக்கள் வெறுப்பையும் சம்பாதித்து வி்ட்டது.

ஆக, பாஜக, சில எம்எல்ஏக்களை வாங்கி, அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆட்சி அமைக்கும் அல்லது ஆமாம் சாமி பன்னீர் தலைமையில் ஆட்சி அமைக்கும்.

இது பாஜகவுக்கு புதிதல்ல. வேறு வடமாநிலங்களில் செய்துள்ளது. இது பாராளுமன்ற தேர்தலுக்கு முன் நடக்கும்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசர அவசரமாக உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்திருப்பதில் பல சந்தேகங்கள் இருக்கின்றன. ஸ்டாலின் கருணாநிதி போல் நீண்ட ஆரோக்கியம் உள்ளவர் அல்ல. இப்டபொழுதே அடிக்கடி மெடிக்கல் செக்கப்பிற்கு அடிக்கடி லண்டன் வந்து போகிறார். அதுதான் முற்கூட்டியே ஆயத்தப்படுத்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

விஜய் அடுத்த ரஜனி.

அரசியல் வரப்போவதில்லை. படம் ஓடவைக்க அரசியல் மட்டும் பேசுவார்கள்.

பாஜக காத்திருந்த தருணம் கனிந்துள்ளது.

ஸ்ராலின் முதல்வராகி இரண்டு வருடமாக, இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் மக்கள் வெறுப்பை மட்டுமல்ல, மருமகன் சபேசன், மகன் உதயநிதி, மணைவி துக்க்கா என்று குடு்ம்பம் மட்டுமே கொள்ளையடித்து சுருட்டுவதால் திமுக எம்எல்ஏக்கள் வெறுப்பையும் சம்பாதித்து வி்ட்டது.

ஆக, பாஜக, சில எம்எல்ஏக்களை வாங்கி, அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆட்சி அமைக்கும் அல்லது ஆமாம் சாமி பன்னீர் தலைமையில் ஆட்சி அமைக்கும்.

இது பாஜகவுக்கு புதிதல்ல. வேறு வடமாநிலங்களில் செய்துள்ளது. இது பாராளுமன்ற தேர்தலுக்கு முன் நடக்கும்.

பா.ஜ.க. வடக்கில், எம்பிக்களை வாங்கி ஆட்சிகளை  கவிழ்க்க 
25 கோடியிலிருந்து 50 கோடிவரை செலவளித்துள்ளது.
தமிழ்நாட்டிலும்  இது விரைவில் நடக்கும் என்று தான் நினைக்கின்றேன்.
தகுந்த சந்தர்ப்பத்துக்காக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.