Jump to content

நான்கு வயது சிறுவனுக்கு வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு வயது சிறுவனுக்கு வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்!

நான்கு வயது சிறுவனுக்கு வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்!

துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் நெருப்பால் சுட்டதாக, சிறுவனின் பெற்றோரால் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் பிரதேச செயலகத்தினால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் தகாத வார்த்தை பேசியதாக கூறி தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் நாடியிலும் சூடு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து குறித்த ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சங்கானை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1315750

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

குறித்த சிறுவன் தகாத வார்த்தை பேசியதாக கூறி தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் நாடியிலும் சூடு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறுவன் தானாக பேசவில்லை, வீட்டில் கேட்டதை பேசியிருக்கிறான். தண்டிக்கப்படவேண்டியவன் சிறுவனல்ல, இது கூட புரியாத ஆசிரியர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது சின்னனுகள் நல்லாய் தூசணம் கதைக்கிதுகள். பெற்றோரை தவிர வேறு யாரை குறை கூறுவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

சிறுவன் தானாக பேசவில்லை, வீட்டில் கேட்டதை பேசியிருக்கிறான். தண்டிக்கப்படவேண்டியவன் சிறுவனல்ல, இது கூட புரியாத ஆசிரியர்.

பெடியன்ற அம்மா, அப்பாவ கூப்பிட்டு வாத்தி கண்டிச்சிருந்தா ….என்ன வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும்🤣.

# நினைச்சேன், சிரிச்சேன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பெடியன்ற அம்மா, அப்பாவ கூப்பிட்டு வாத்தி கண்டிச்சிருந்தா ….என்ன வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும்🤣.

# நினைச்சேன், சிரிச்சேன்🤣

வீட்டில் பெற்றோர் கதைக்கா விட்டாலும் சில இடத்தில் பிள்ளைகள் கதைக்கிறது சுற்று சூழலிலும் கதைப்பதில்லை என் கிரார்கள் ஆனால் பிள்ளை எப்படி கதைக்கிறது ??  

சிறு வயதில் பிள்ளைகள் 60 மொழிகள் கதைக்கிறதா எங்கோ படிச்ச நிபாகம் வருது அதில் ஒரு மொழியாக இருக்குமோ ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பெடியன்ற அம்மா, அப்பாவ கூப்பிட்டு வாத்தி கண்டிச்சிருந்தா ….என்ன வார்த்தைகள் வந்து விழுந்திருக்கும்

வாத்தியின் சந்தகேம் சந்தகேம் தீர்ந்திருக்கும். குழந்தைகள் தாங்களாக கெட்ட வார்த்தை பேசுவதில்லை, தாங்கள் கேட்டதையே அர்த்தம் புரியாமல் பேசுவார்கள். ஒருதடவை ஒரு சிறுவன் தகாத வார்த்தை பேசி நீர் இறைக்கும் இயந்திரத்தை இயக்குவது போல் பாசாங்கு செய்து விளையாடிக்கொண்டிருந்தானாம். இதை கேட்டுக்கொண்டிருந்தவர் தம்பி! அப்படியென்றால்  என்ன என்று கேட்டாராம், அப்படியென்றார்த்தான் மிசின் இறைக்கும் என்றானாம். அப்படி யார் சொன்னார்? என்று அவர் திருப்பி கேட்டாராம், அதற்கு அந்தச் சிறுவன் சொன்னானாம், மிசின் இறைக்காவிட்டால் அப்பா இதை சொல்லித்தான் கயிறு சுற்றி இழுப்பார் என்றானாம். இதைகேட்டவர் அப்பாவைத் தேடினாராம் தனது சந்தேகத்தை உறுதி செய்துகொள்ள. அப்பா என்ன சொல்லியிருப்பார்?  இப்போ யாரும் தண்ணி இறைக்கும் இயந்திரம் பாவிப்பதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'கண்டிப்பான கை வருங்கால கட்டப்படும்போது, ஆசிரியரின் கை அழ சமுதாயத்தின் நம்பிக் வெட்டப்படுகிறது..! கை''

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2022 at 15:56, தமிழ் சிறி said:

நான்கு வயது சிறுவனுக்கு வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர்!

இது  தண்டிக்கும் விதமல்ல. சிறுவனுக்கு தான் பேசியதின் பொருள் தெரியாது,  தான் யாரிடம் இருந்து அந்த வார்த்தையை கற்றுக்கொண்டாரோ அவர் தண்டிக்கப்படாமல் தான் மட்டும் தண்டிக்கப்படுவது அவனை எதிர்காலத்தில் பல சந்தேகங்களுக்கு, அவநம்பிக்கைகளுக்கு, குழப்பங்களுக்கு ஆளாக்கும். அநேகமாக சிறுவர்கள் தாங்கள் அதிகம் நேசிக்கும் நபர்களையே பின்பற்றி பாவனை செய்வதும், பேசுவதும் உண்டு. இந்தப்பராயத்தில் தண்டிப்பதை விடுத்து அன்பாக எடுத்துக்காட்டி அரவணைத்து அவனது சூழலை தக்க அமைக்க உதவ வேண்டும். நான்கு வயது சிறுவனின் ஆரம்ப பாடசாலை அவனது குடும்பமே. ஆகவே குடும்பத்தினரை அழைத்து பேசியிருக்கலாம், ஆனால் வீட்டில் சிறுவன் தண்டிக்கப்பட வாய்ப்பிருக்கு. ஆகவே சமுதாயத்தில் விழிப்புணர்வு, பொறுப்புணர்வு  அவசியம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.