Jump to content

மட்டக்களப்புச் சொல்லாட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்புச் சொல்லாட்சி 

ஈழத்தில் மட்டக்களப்புக்கென்று தனித்துவமான சில சொற்களுண்டு. சில வேளைகளில் அவற்றில் சில சொற்களை ஈழத்தின் பிற பகுதியினரால் கூடப் புரிந்து கொள்ள முடியாது, ஆனாலும் அவை ஆழமான பொருள் பொதிந்த பழந் தமிழ் மரபின் தொடர்ச்சியாகக் காணப்படும். காட்டாக: `பரத்தை` என்ற சொல்லின் `விலைமகள்` என்ற பொருள் எல்லோரும் அறிந்தது; மட்டக்களப்பில் இச் சொல்லுக்கு வேறொரு பொருளுமுண்டு.  வீடுவேய்தல், வேலியடைத்தல் போன்ற வேலைகளினை உறவினர், அயலவர் எல்லோரும் சேர்ந்து செய்வார்கள். அதன் முடிவில்  வேலை செய்து தந்த உறவினருக்கு வழங்கப்படும் உணவும் `பரத்தை` எனப்படும். பரந்த அளவிற் சமைக்கப்படுதல் என்ற பொருளில் `பரத்தை` என அழைக்கப்படுகின்றது. எனவே அங்கு `பரத்தைக்கு வாங்க` எனக் கேட்டால் தவறாகக் கருதக் கூடாது. பரந்தளவில் சமைக்கப்படும் `பரத்தை` போல, `மருங்கை`என்ற ஒன்றுமுண்டு. `மருங்கை’ என்ற பெயரில் உறவினர் மட்டும் கலக்கும் விருந்தும் ஒன்றுமுள்ளது. `கட்டாடி` என்றால் வண்ணான் என்ற பொருள் வேறிடங்களிலுண்டு, மட்டக்களப்பில் பூசாரியினையும் (குறிப்பாக  பெண் கடவுள்களுக்கான பூசாரி) கட்டாடி என்பார்கள். அவ்வாறான ஒரு சொற் பட்டியலினைக் கீழே பார்ப்போம்.  {இவை வேறு பகுதிகளிலும் பயன்பாட்டிலிருக்கலாம்}.

• புற்கை = பொங்கல் {`உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யோனே ’ என்று பழஞ் செய்யுள் கூறும் புற்கை என்னும் சொல்லே இங்குப் புக்கை ஆயிற்று}
• கால்வாங்குதல் என்பது மகனைக் குறிக்கும்.
• போடியார் = நெற் செய்கைக்கு வேண்டிய முதலைப் போடுபவர்.
• குருவிக்காரன் = வயலிற் குருவிகளை ஓட்டிக் காத்தல் போன்ற குற்றேவல்களுக்காக நியமிக்கப்படும் சிறுவன்

• குருவிமூலை வரவை = குருவிக்காரனுக்கு வயலிலேயே தங்க வழங்கப்பட்ட சிறு குடில்/ இடம்.
• வட்டை வளைத்தல் = வயற் காவல் (வட்ட வடிவமாக வயலினைச் சுற்றி சுற்றிக் காவல் காத்தல்)
• அவுரி திரித்தல் = நெல் தூற்றுதல்
• `களவெட்டி` அல்லது `களவட்டி’= சூடு மிதிக்கும் களம்.
{ களவட்டி - வட்டமாக அமைந்த சூடுபோடும் நிலப் பரப்பு. (களம்+வட்டி. வட்டி = வட்டமானது)}

• ஆயம் = காணிக்குரிய குத்தகை
• அத்திமடக்கு = அரிக்கன்சட்டி (அரித்துக் கல்லே நீக்கும் வகையில் உள்வரிகளமைந்த சட்டி)
• அளைதல் - கைவிரலால் தொடுதல்
• ஆணம் = நீர்த்தன்மையான கறி      (சொதி போன்ற)
• ஆண்டார் = நிலா (இரவினை ஆளுபவர்)
• இட்டறுதி = (இட்ட+அறுதி) கடைசிக் காலம்
• எழுவான் = கிழக்கு  (எழுவான் கரை- படுவான் கரை ஊர்ப் பெயர்கள்).
• படுவான் = மேற்கு
• கட்டாடியார் = பூசாரி (குறிப்பாக பெண் தெய்வங்களுக்கான பூசாரிகள்)
• கட்டுச் சொல்லுதல் = தெய்வ வாக்குச் சொல்லுதல் (`கட்டுவிச்சி`பழந் தமிழ்ச்சொல்)
• உருவேறுதல்/ சன்னதம் கொள்ளுதல்= சாமி இறங்குதல் (`வெறியாடல்` பழந் தமிழ்ச்சொல்)
• கதியால் (கதி + கால்) = கூரிய அடியை உடையதாக வெட்டப்பட்ட (காட்டுக்)கம்பு.

• கப்புகன் = மண்டூர் முதலிய குறிப்பிட்ட சில ஊர்க் கோவில்களிற் பூசை செய்யும் பார்ப்பனரல்லாத பூசாரி
{ தெய்வத்தினிடம் மக்கள் வேண்டிய தைப் பெறுதற்கு வழிசெய்து கொடுக்கும் `கற்பகதரு` போன்றவன்}

• கப்புகக்குடி = கப்புகன் தோன்றும் மரபு (சாதி அல்ல)
• கமம் = வேளாண்மைச் செய்கை , வயல்.
• கலத்தில் போடுதல் = மண மகனுக்கு மணமகள் முதல் முதல் சோறு உண்பித்தல்.
• கள்ளறை = வீட்டில் மறைவிடமாக உள்ள சிறிய அறை.
• கழிசறை = பலராலும் கழிக்கப்பட்ட நடத்தையுடையவன்.
• கறுவித்தல் = பழிவாங்கக் காத்திருத்தல். {“ கறுவு கொள் நெஞ்சமொடு’ என்னும் திருமுருகாற்றுப்படையிற் போல}

• குச்சிக்குடில் =சிறியவிடு.

• குஞ்சப்பு=சிறிய தந்தை.

• குஞ்சாத்தை =சிற்றன்னை.

• குடக்குழி = கிணற்றின் நடுவில் (நீர் குறைந்த காலத்து) குடம்/ வாளி.

• குமுதம் = பேரொலிசெய்து விளையாடுதல்
• குளையடித்தல் = ஒருவரது மனத்தை மாற்றுதல்.
• கெளித்தல் = கவிழ்த்து ஊற்றுதல் (கெளுத்தி – கெளிற்றுமீன்..)
• சூம்புதல் = மெலிதல்
• செக்கல் = மாலைநேரம்.
• செத்தை :- ஒலையாற் கட்டப்பட்ட வேலி / சுவர்.
• தப்பிலி = தப்புள்ளவன் { தப்பு+இலி}.
['மங்கலம்' எனப்படும் வழக்கு] 
• தயிலாப்பெட்டி = மரத்தாற் செய்யப்பட்டதும் கள்ள அறைகள் உள்ளதுமான சிறுபெட்டி

• தாயதி = வழிவழி வந்த பழஞ் சொத்து; (`தாயம்` என்பதிலிருந்து வந்த சொல்).
• தாயம் = நல்ல தருணம்
• துமித்தல் =  மழை தூறுதல்
• ஆண் மாரி / பெண்மாரி = பாலினம் மாறியோர் { மாறி என்பதன் திரிபு ஆக வழங்கும். பெண்ணுய்ப் பிறந்து, ஆண் தன்மையும், ஆணாய்ப் பிறந்து பெண் தன்மை யும் உடையோர்}
• முளிவிசளம் = வீட்டைவிட்டு வெளிக்கிடும்போது ஒருவர் முதலில் சந்திக்கும் நிமித்தம் (சகுனம்).

 
👉👉👇சில சொற்கள் திரிபடைந்த நிலையிலும் இன்று காணப்படுகின்றன. அவை வருமாறு.

** தலை வழித்தல் >> `மழித்தல்’ என்பதின் சிதைவு
`மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் ’

** சிரைத்தல்>> சிதைத்தல் என்பதின் சிதைவு

** வட்டை>> (வயற் பரப்பு முழுவதும்) வெட்டை  என்பதின் சிதைவு

** அத்தக்கூலி >> அற்றைக் கூலி என்பதன் திரிபு ((அன்று + ஐ+கூலி) = நாட்கூலி

**கம்மாலை >> கம்மசாலை என்பதன் திரிபு (பட்டறை)

** கலம்பக்கயிறு >> கதம்பைக்கயிறு என்பதன் திரிபு (தென்னம் தும்பினல் செய்த கயிறு)

**காத்தாடி >> காவுதடி ’ என்பதின் சிதைவு. (கா+தடி)
சுமையினைத் தோளில் வைத்துச் சுமக்க உத வும் கம்பு. இதுவே இன்றைய மதம் சார் `காவடி` ஆக்கப்பட்டுவிட்டது.
🙏🙏🙏

நன்றி - மட்டக்களப்புத் தமிழகம்

இலங்கநாதன் குகநாதன்

@suvy@குமாரசாமி@goshan_che

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஈழத்தில் மட்டக்களப்புக்கென்று தனித்துவமான சில சொற்களுண்டு. சில வேளைகளில் அவற்றில் சில சொற்களை ஈழத்தின் பிற பகுதியினரால் கூடப் புரிந்து கொள்ள முடியாது, ஆனாலும் அவை ஆழமான பொருள் பொதிந்த பழந் தமிழ் மரபின் தொடர்ச்சியாகக் காணப்படும்.

எல்லாச்சொல்லும் தனித்துவமென்றல்ல.

இதில் உள்ள சில சொற்கள் வட தமிழீழத்திலும் பரவாலன பயன்பாட்டில் உள்ளது. அவையாவன, 

  1. • புற்கை = பொங்கல் {`உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யோனே ’ என்று பழஞ் செய்யுள் கூறும் புற்கை என்னும் சொல்லே இங்குப் புக்கை ஆயிற்று} - புக்கை என்று வடக்கில் பயன்பாட்டிலுள்ளது.
  2. • உருவேறுதல்/ சன்னதம் கொள்ளுதல்= சாமி இறங்குதல் (`வெறியாடல்` பழந் தமிழ்ச்சொல்)
  3. • கதியால் (கதி + கால்) = கூரிய அடியை உடையதாக வெட்டப்பட்ட (காட்டுக்)கம்பு.

  4. • கமம் = வேளாண்மைச் செய்கை , வயல்.

  5. கழிசறை = பலராலும் கழிக்கப்பட்ட நடத்தையுடையவன். // பேச்சுவழக்கில் கழிசடை என்று வழங்கப்படுகிறது

  6. • கறுவித்தல் = பழிவாங்கக் காத்திருத்தல். {“ கறுவு கொள் நெஞ்சமொடு’ என்னும் திருமுருகாற்றுப்படையிற் போல}

  7. குஞ்சப்பு=சிறிய தந்தை.

  8. • குஞ்சாத்தை =சிற்றன்னை.

  9. • சூம்புதல் = மெலிதல்// வடக்கில், கால் ஒரு மாதிரி நோயால் மெலிந்து வளைந்து போயிருந்தால் இச்சொல்லால் குறிப்பிடுவோம்.

  10. • செத்தை :- ஒலையாற் கட்டப்பட்ட வேலி / சுவர்.

  11. • துமித்தல் =  மழை தூறுதல்

  12. • முளிவிசளம் = வீட்டைவிட்டு வெளிக்கிடும்போது ஒருவர் முதலில் சந்திக்கும் நிமித்தம் (சகுனம்). // முழுவியளம் என்று நாம் வழங்குகிறோம்

  13. ** சிரைத்தல்>> சிதைத்தல் என்பதின் சிதைவு

 

  • அளைதல் - கைவிரலால் தொடுதல்

இதில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் அளைதல் என்பதன் பொருள் பிழையாக வழங்கப்பட்டுள்ளது: 
இதன் சரியான பொருள் யாதெனில் ஒன்றை கையால் தொட்டு அதன் எல்லாப் பகுதிகளிலும் தடவுதல் ஆகும். இன்னும் விதப்பாக விளங்கும்படியாகச் சொல்ல வேண்டுமெனில் கையால் ஒருவரது உடம்பின் பல பகுதிகளைத் தொட்டுத் தொடர்ந்து இடைநிறுத்தாது தடவுதல்; சில வேளை காமத்தின் போது என்றும் கொள்ளலாம். இதுவே இதன் சரியான பொருள்; கைவிரலால் தொடுதல் என்பதல்ல. 

இச்சொல்லின் பொருளானது ம.த. புத்தகத்தில் இருப்பதற்கு மாறாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நன்னிச் சோழன் said:
  • அளைதல் - கைவிரலால் தொடுதல்

இதில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் அளைதல் என்பதன் பொருள் பிழையாக வழங்கப்பட்டுள்ளது: 
இதன் சரியான பொருள் யாதெனில் ஒன்றை கையால் தொட்டு அதன் எல்லாப் பகுதிகளிலும் தடவுதல் ஆகும். இன்னும் விதப்பாக விளங்கும்படியாகச் சொல்ல வேண்டுமெனில் கையால் ஒருவரது உடம்பின் பல பகுதிகளைத் தொட்டுத் தொடர்ந்து இடைநிறுத்தாது தடவுதல்; சில வேளை காமத்தின் போது என்றும் கொள்ளலாம். இதுவே இதன் சரியான பொருள்; கைவிரலால் தொடுதல் என்பதல்ல. 

இச்சொல்லின் பொருளானது ம.த. புத்தகத்தில் இருப்பதற்கு மாறாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது

அளைதல் என சொல்வது ஒரு சாப்பாட்டு பண்டங்களை கொஞ்சமாக சாப்பிடுவது அல்லது சாப்பிட்டு இடைநடுவில் விடுவது அளைஞ்சு போட்டு விடுவது என்பார்கள்.

நீங்க சொன்ன காமத்தில் தொடுதல் என்பது மேய்தல்  (மேஞ்ச) தடவுதல்,திறாவுதல் எனவும் பேச்சு மொழியிலும் சொல்வார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அளைதல் என சொல்வது ஒரு சாப்பாட்டு பண்டங்களை கொஞ்சமாக சாப்பிடுவது அல்லது சாப்பிட்டு இடைநடுவில் விடுவது அளைஞ்சு போட்டு விடுவது என்பார்கள்.

நீங்க சொன்ன காமத்தில் தொடுதல் என்பது மேய்தல்  (மேஞ்ச) தடவுதல்,திறாவுதல் எனவும் பேச்சு மொழியிலும் சொல்வார்கள்.

தனி, அளைதல் என்பதை நீங்கள் சொல்லும் பொருளில் தான் வடபகுதியிலும் சொல்லுவினம்

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அளைதல் என சொல்வது ஒரு சாப்பாட்டு பண்டங்களை கொஞ்சமாக சாப்பிடுவது அல்லது சாப்பிட்டு இடைநடுவில் விடுவது அளைஞ்சு போட்டு விடுவது என்பார்கள்.

நீங்க சொன்ன காமத்தில் தொடுதல் என்பது மேய்தல்  (மேஞ்ச) தடவுதல்,திறாவுதல் எனவும் பேச்சு மொழியிலும் சொல்வார்கள்.

நான் அந்தக் காமத்தை ஒரு விளக்கத்திற்காகத்தான் கொடுத்தேன். பொருளாக அன்று("விளங்கும்படியாக"). 

எங்கள் ஊரில் ஏதேனும் ஒரு பொருளை/பொருட்களை (உணவோ இல்லை வேறு ஏதாவதாகவோ) சும்மா கையால் எல்லாவிடங்களிலும் தொடுவதை, "அந்தப்பொடியன் அந்தச் சாமானுக்ளுக்கு மேலையெல்லாம் கைவைச்சு அளைஞ்சுகொண்டு திரியுது. எங்க வைச்ச கையளோ!" என்பர்.

இங்கே ஒருவர் ஒரு பொருளின்/பொருட்களின் மேல் குறித்த பொடியன் கைவைத்து அளைவதைக் குறிப்பிடுகிறார்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 14/12/2022 at 17:11, தனிக்காட்டு ராஜா said:

மட்டக்களப்புச் சொல்லாட்சி 

ஈழத்தில் மட்டக்களப்புக்கென்று தனித்துவமான சில சொற்களுண்டு. சில வேளைகளில் அவற்றில் சில சொற்களை ஈழத்தின் பிற பகுதியினரால் கூடப் புரிந்து கொள்ள முடியாது, ஆனாலும் அவை ஆழமான பொருள் பொதிந்த பழந் தமிழ் மரபின் தொடர்ச்சியாகக் காணப்படும். காட்டாக: `பரத்தை` என்ற சொல்லின் `விலைமகள்` என்ற பொருள் எல்லோரும் அறிந்தது; மட்டக்களப்பில் இச் சொல்லுக்கு வேறொரு பொருளுமுண்டு.  வீடுவேய்தல், வேலியடைத்தல் போன்ற வேலைகளினை உறவினர், அயலவர் எல்லோரும் சேர்ந்து செய்வார்கள். அதன் முடிவில்  வேலை செய்து தந்த உறவினருக்கு வழங்கப்படும் உணவும் `பரத்தை` எனப்படும். பரந்த அளவிற் சமைக்கப்படுதல் என்ற பொருளில் `பரத்தை` என அழைக்கப்படுகின்றது. எனவே அங்கு `பரத்தைக்கு வாங்க` எனக் கேட்டால் தவறாகக் கருதக் கூடாது. பரந்தளவில் சமைக்கப்படும் `பரத்தை` போல, `மருங்கை`என்ற ஒன்றுமுண்டு. `மருங்கை’ என்ற பெயரில் உறவினர் மட்டும் கலக்கும் விருந்தும் ஒன்றுமுள்ளது. `கட்டாடி` என்றால் வண்ணான் என்ற பொருள் வேறிடங்களிலுண்டு, மட்டக்களப்பில் பூசாரியினையும் (குறிப்பாக  பெண் கடவுள்களுக்கான பூசாரி) கட்டாடி என்பார்கள். அவ்வாறான ஒரு சொற் பட்டியலினைக் கீழே பார்ப்போம்.  {இவை வேறு பகுதிகளிலும் பயன்பாட்டிலிருக்கலாம்}.

• புற்கை = பொங்கல் {`உப்பின்று புற்கை உண்கமா கொற்கை யோனே ’ என்று பழஞ் செய்யுள் கூறும் புற்கை என்னும் சொல்லே இங்குப் புக்கை ஆயிற்று}
• கால்வாங்குதல் என்பது மகனைக் குறிக்கும்.
• போடியார் = நெற் செய்கைக்கு வேண்டிய முதலைப் போடுபவர்.
• குருவிக்காரன் = வயலிற் குருவிகளை ஓட்டிக் காத்தல் போன்ற குற்றேவல்களுக்காக நியமிக்கப்படும் சிறுவன்

• குருவிமூலை வரவை = குருவிக்காரனுக்கு வயலிலேயே தங்க வழங்கப்பட்ட சிறு குடில்/ இடம்.
• வட்டை வளைத்தல் = வயற் காவல் (வட்ட வடிவமாக வயலினைச் சுற்றி சுற்றிக் காவல் காத்தல்)
• அவுரி திரித்தல் = நெல் தூற்றுதல்
• `களவெட்டி` அல்லது `களவட்டி’= சூடு மிதிக்கும் களம்.
{ களவட்டி - வட்டமாக அமைந்த சூடுபோடும் நிலப் பரப்பு. (களம்+வட்டி. வட்டி = வட்டமானது)}

• ஆயம் = காணிக்குரிய குத்தகை
• அத்திமடக்கு = அரிக்கன்சட்டி (அரித்துக் கல்லே நீக்கும் வகையில் உள்வரிகளமைந்த சட்டி)
• அளைதல் - கைவிரலால் தொடுதல்
• ஆணம் = நீர்த்தன்மையான கறி      (சொதி போன்ற)
• ஆண்டார் = நிலா (இரவினை ஆளுபவர்)
• இட்டறுதி = (இட்ட+அறுதி) கடைசிக் காலம்
• எழுவான் = கிழக்கு  (எழுவான் கரை- படுவான் கரை ஊர்ப் பெயர்கள்).
• படுவான் = மேற்கு
• கட்டாடியார் = பூசாரி (குறிப்பாக பெண் தெய்வங்களுக்கான பூசாரிகள்)
• கட்டுச் சொல்லுதல் = தெய்வ வாக்குச் சொல்லுதல் (`கட்டுவிச்சி`பழந் தமிழ்ச்சொல்)
• உருவேறுதல்/ சன்னதம் கொள்ளுதல்= சாமி இறங்குதல் (`வெறியாடல்` பழந் தமிழ்ச்சொல்)
• கதியால் (கதி + கால்) = கூரிய அடியை உடையதாக வெட்டப்பட்ட (காட்டுக்)கம்பு.

• கப்புகன் = மண்டூர் முதலிய குறிப்பிட்ட சில ஊர்க் கோவில்களிற் பூசை செய்யும் பார்ப்பனரல்லாத பூசாரி
{ தெய்வத்தினிடம் மக்கள் வேண்டிய தைப் பெறுதற்கு வழிசெய்து கொடுக்கும் `கற்பகதரு` போன்றவன்}

• கப்புகக்குடி = கப்புகன் தோன்றும் மரபு (சாதி அல்ல)
• கமம் = வேளாண்மைச் செய்கை , வயல்.
• கலத்தில் போடுதல் = மண மகனுக்கு மணமகள் முதல் முதல் சோறு உண்பித்தல்.
• கள்ளறை = வீட்டில் மறைவிடமாக உள்ள சிறிய அறை.
• கழிசறை = பலராலும் கழிக்கப்பட்ட நடத்தையுடையவன்.
• கறுவித்தல் = பழிவாங்கக் காத்திருத்தல். {“ கறுவு கொள் நெஞ்சமொடு’ என்னும் திருமுருகாற்றுப்படையிற் போல}

• குச்சிக்குடில் =சிறியவிடு.

• குஞ்சப்பு=சிறிய தந்தை.

• குஞ்சாத்தை =சிற்றன்னை.

• குடக்குழி = கிணற்றின் நடுவில் (நீர் குறைந்த காலத்து) குடம்/ வாளி.

• குமுதம் = பேரொலிசெய்து விளையாடுதல்
• குளையடித்தல் = ஒருவரது மனத்தை மாற்றுதல்.
• கெளித்தல் = கவிழ்த்து ஊற்றுதல் (கெளுத்தி – கெளிற்றுமீன்..)
• சூம்புதல் = மெலிதல்
• செக்கல் = மாலைநேரம்.
• செத்தை :- ஒலையாற் கட்டப்பட்ட வேலி / சுவர்.
• தப்பிலி = தப்புள்ளவன் { தப்பு+இலி}.
['மங்கலம்' எனப்படும் வழக்கு] 
• தயிலாப்பெட்டி = மரத்தாற் செய்யப்பட்டதும் கள்ள அறைகள் உள்ளதுமான சிறுபெட்டி

• தாயதி = வழிவழி வந்த பழஞ் சொத்து; (`தாயம்` என்பதிலிருந்து வந்த சொல்).
• தாயம் = நல்ல தருணம்
• துமித்தல் =  மழை தூறுதல்
• ஆண் மாரி / பெண்மாரி = பாலினம் மாறியோர் { மாறி என்பதன் திரிபு ஆக வழங்கும். பெண்ணுய்ப் பிறந்து, ஆண் தன்மையும், ஆணாய்ப் பிறந்து பெண் தன்மை யும் உடையோர்}
• முளிவிசளம் = வீட்டைவிட்டு வெளிக்கிடும்போது ஒருவர் முதலில் சந்திக்கும் நிமித்தம் (சகுனம்).

 
👉👉👇சில சொற்கள் திரிபடைந்த நிலையிலும் இன்று காணப்படுகின்றன. அவை வருமாறு.

** தலை வழித்தல் >> `மழித்தல்’ என்பதின் சிதைவு
`மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் ’

** சிரைத்தல்>> சிதைத்தல் என்பதின் சிதைவு

** வட்டை>> (வயற் பரப்பு முழுவதும்) வெட்டை  என்பதின் சிதைவு

** அத்தக்கூலி >> அற்றைக் கூலி என்பதன் திரிபு ((அன்று + ஐ+கூலி) = நாட்கூலி

**கம்மாலை >> கம்மசாலை என்பதன் திரிபு (பட்டறை)

** கலம்பக்கயிறு >> கதம்பைக்கயிறு என்பதன் திரிபு (தென்னம் தும்பினல் செய்த கயிறு)

**காத்தாடி >> காவுதடி ’ என்பதின் சிதைவு. (கா+தடி)
சுமையினைத் தோளில் வைத்துச் சுமக்க உத வும் கம்பு. இதுவே இன்றைய மதம் சார் `காவடி` ஆக்கப்பட்டுவிட்டது.
🙏🙏🙏

நன்றி - மட்டக்களப்புத் தமிழகம்

இலங்கநாதன் குகநாதன்

@suvy@குமாரசாமி@goshan_che

நன்றி தனி. 

இந்த புத்தகம் சில வருடங்களுக்கு முன் ஒருவர் இந்த புத்தகத்தை எனக்கு பரிசளித்தார்.

On 14/12/2022 at 17:11, தனிக்காட்டு ராஜா said:

ஆண் மாரி / பெண்மாரி = பாலினம் மாறியோர் { மாறி என்பதன் திரிபு ஆக வழங்கும். பெண்ணுய்ப் பிறந்து, ஆண் தன்மையும், ஆணாய்ப் பிறந்து பெண் தன்மை யும் உடையோர்}

இது பாலினம் மாறியோர் என்பதை விட - எதிர்பால் குணங்களை வெளிப்படுத்துவோர் என்பதே சரி?

அடக்க ஒடுக்கமாக இல்லாமல் dominant ஆக இருக்கும் பெண் - ஆண்மாரி.

இதுவும் வடக்கிலும் பாவனையில் உள்ள சொல்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இட்டறுதி - தனியே அந்திம காலம் மட்டும் இல்லை? 

எகா: இட்டறுதியா சொல்லுறன் இந்த சைக்கிளுக்கு 10000 ரூபாதான் விலை.

கம்மாலை - இதுவும் கூட வடக்கிலும் புழக்கத்தில் உள்ளது.

ஆனால் மட்டகளப்பில் இதை ஒரு ஆச்சரிய குறியீடாக பயன்படுத்துவார்.

இது “அம்மாளே” அல்லது இதை ஒத்த ஒரு தூசண வார்த்தையிம் திரிபாக இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி தனி.......மேலும் தொடர்ந்து இணைக்கலாமே........!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/12/2022 at 07:07, தனிக்காட்டு ராஜா said:

அளைதல் என சொல்வது ஒரு சாப்பாட்டு பண்டங்களை கொஞ்சமாக சாப்பிடுவது அல்லது சாப்பிட்டு இடைநடுவில் விடுவது அளைஞ்சு போட்டு விடுவது என்பார்கள்.

சும்மா கண்டபடி அளையாதை எண்டு நான் கனதரம் பேச்சு வாங்கியிருக்கிறன்.😎

On 14/12/2022 at 18:11, தனிக்காட்டு ராஜா said:

கட்டாடியார் = பூசாரி (குறிப்பாக பெண் தெய்வங்களுக்கான பூசாரிகள்)

நம்ம ஊர்ப்பக்கம் கட்டாடியார் எண்டால் துணி வெளுக்கிறவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சும்மா கண்டபடி அளையாதை எண்டு நான் கனதரம் பேச்சு வாங்கியிருக்கிறன்.😎

நம்ம ஊர்ப்பக்கம் கட்டாடியார் எண்டால் துணி வெளுக்கிறவர்.

"கண்டால் கட்டாடி காணாட்டில் ------ " என்றொரு சொலவடையும் சாதாரணமாக பேச்சு வழக்கில் உண்டு......!  😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/1/2023 at 03:49, குமாரசாமி said:

சும்மா கண்டபடி அளையாதை எண்டு நான் கனதரம் பேச்சு வாங்கியிருக்கிறன்.😎

நம்ம ஊர்ப்பக்கம் கட்டாடியார் எண்டால் துணி வெளுக்கிறவர்.

ஓ நன்றி தகவலுக்கு இஞ்ச வேற பெயர் அதை ஏன் பேசுவான் இங்கு👋👋

On 7/1/2023 at 23:00, goshan_che said:

இது “அம்மாளே” அல்லது இதை ஒத்த ஒரு தூசண வார்த்தையிம் திரிபாக இருக்குமோ?

வாய்ப்பில்ல 😋😋

  • Haha 3
Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா ஒரு  வருசத்துக்கு பிறகு லைக்க தட்டீருக்கு 

அதுசரி இஞ்ச பழைய பதிவுக்ளை கிளற முடியாமல் இருக்கே என்ன  காரணம் 
 
பதில் எழுத முடியல 2006,2007,2008,2009,2010  உள்ள பதிவுகளுக்கு என்ன காரணம்?? 

Edited by தனிக்காட்டு ராஜா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

யாரப்பா ஒரு  வருசத்துக்கு பிறகு லைக்க தட்டீருக்கு 

அதுசரி இஞ்ச பழைய பதிவுக்ளை கிளற முடியாமல் இருக்கே என்ன  காரணம் 
 
பதில் எழுத முடியல 2006,2007,2008,2009,2010  உள்ள பதிவுகளுக்கு என்ன காரணம்?? 

பதில் எழுதப்படாத/பின்னூட்டம் போடாத திரிகள் 2 ஆண்டுகளில் தானாக கருத்தெழுத முடியாதவாறு மூடப்படும் என நினைக்கிறேன்.

தற்போது சில திரிகளை மோகண்ணா கருத்தெழுத திறந்துவிடுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

பதில் எழுதப்படாத/பின்னூட்டம் போடாத திரிகள் 2 ஆண்டுகளில் தானாக கருத்தெழுத முடியாதவாறு மூடப்படும் என நினைக்கிறேன்.

தற்போது சில திரிகளை மோகண்ணா கருத்தெழுத திறந்துவிடுகிறார்.

ஓ அப்படியா நன்றி ஏராளன் 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.