Jump to content

"இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களின் உரிமைகள் புறந்தள்ளப்பட முடியாது"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1000066318.jpg

 

(ஊடகப்பிரிவு)
 
வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து 13 ஐ அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும் இதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார பகிர்வு என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டுமென அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
 
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஜனாதிபதி தலைமையில் நடாத்தப்படும் பேச்சுக்களில் (13) அரசியலமைப்பின் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கோரியதையடுத்தே, அமைச்சர் நஸீர் அஹமட் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
 
இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இதில் நாங்கள்
கரிசனையுடன் உள்ளோம். ஆனால், இத்தீர்வுகள் முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினையாகிவிடக்கூடாது. வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து சமஷ்டி கோரும் தரப்புக்கள், இணைந்த வட,கிழக்கில் முஸ்லிம்களுக்கு வழங்கும் அதிகாரம் என்ன? இதுபற்றி அவர்கள் மனம் திறப்பது அவசியம். சூழ்நிலையைச் சமாளிக்கும் அறிக்கைகள் விடாமல், முஸ்லிம்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு பேசுவதே சிறந்தது.
 
இதே நிலைப்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை உள்ளமை ஏற்புடையதல்ல. வடக்கு கிழக்கு இணைய வேண்டுமா? அல்லது வடக்கும் கிழக்கும் வெவ்வேறாக பிரிந்திருக்க வேண்டுமா? என்பதை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை சமூகத்திற்கு தெளிவுபடுத்த வேண்டும். இணைய வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஹக்கீம் இருப்பாரேயானால்,வடக்கு ,கிழக்கு முஸ்லிம்களுக்கு வழங்கப்போகும் அரசியல் தீர்வை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இவ்விடயங்கள்
தொடர்பில், ஹக்கீமுக்கும், சுமந்திரனுக்கும் இதுவரை காலமும் இரகசியமாக நடாத்தப்பட்ட பேச்சுக்கள் வெளிக்கொணரப்படுவது அவசியம்.இவ்விரு மாகாணங்களும் பிரிந்திருக்க வேண்டுமென ஹக்கீம் கூறினால்,அந்தந்த மாகாணங்களில் அபகரிக்கப்பட்ட, கையகப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
 
சிறுபான்மைச் சமூகங்கள் என்ற பொது அடையாளத்துக்குள் முஸ்லிம்களையும் உள்ளீர்க்கவே முயற்சிக்கப்படுகிறது. இப்பொது அடையாளத்துக்குள்ளும் பல பிரச்சினைகள் உள்ளன. எனவே ,13 ஐ முழுமையாக அமுல்படுத்துமாறு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறுவது கள நிலவரங்களுக்குப் பொருந்தாது. இது,அவரது தனிப்பட்ட விருப்பமே தவிர,வடக்கு,கிழக்கு முஸ்லிம்களின் அபிலாஷை இல்லை. எனவே, தீர்வு தொடர்பில் எவரும், எழுமாந்தமாகப் பேசக்கூடாது.
 
வடக்கும், கிழக்கும் பிரிந்த மாகாணங்களாகவே இருப்பதானால், குறிப்பாக கிழக்கில் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை, முஸ்லிம் பிரதேச செயலகங்களிடமோ அல்லது முஸ்லிம்களிடமோ ஒப்படைப்பது அவசியம். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்கள் உள்ளன.அவற்றில் 04 முஸ்லிம் பிரதேச செயலங்களில் 27 வீதமாக உள்ள முஸ்லிம்களுக்கு 1.3 வீதமான காணிகளே உள்ளன. அதிகாரக் கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்களாலே இவர்களின்
காணிகள் அபகரிக்கப்பட்டன, கபடத்தனமாக பறிக்கப்பட்டன. மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுவதற்கு முன்னர், அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகள் மீள ஒப்படைக்கப்படுவது அவசியம். மட்டுமல்ல காணிகளின் எல்லைப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.
 
13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்ட பின்னரே வட,கிழக்கில் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகினர். கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டன.
மட்டக்களப்பில், முஸ்லிம்களின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டன. இதனால்தான்,13 ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இவ்விடயத்தில் கடைப்பிடிக்கும் மௌனமும் கலைக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் உங்களிடம் இருந்து வரும்  எண்டு தெரியும். உங்களுக்கு என்ன தேவையோ, அதை சிங்களவரிடம் நேரடியாக கேளுங்கோ.

அது தானே முறையானது. அதை விடுத்து, பிச்சைக்கு நிக்கிற வேறு ஒரு கோஸ்டியிடம், நீ என்ன பிச்சை கேட்கிறாய், அதில என் பங்கென்ன என்பது நியாயமா படவில்லை.

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:
குறிப்பாக கிழக்கில் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகளை, முஸ்லிம் பிரதேச செயலகங்களிடமோ அல்லது முஸ்லிம்களிடமோ ஒப்படைப்பது அவசியம். உதாரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்கள் உள்ளன.அவற்றில் 04 முஸ்லிம் பிரதேச செயலங்களில் 27 வீதமாக உள்ள முஸ்லிம்களுக்கு 1.3 வீதமான காணிகளே உள்ளன. அதிகாரக் கெடுபிடிகள் மற்றும் அச்சுறுத்தல்களாலே இவர்களின்
காணிகள் அபகரிக்கப்பட்டன,

அதென்ன கொசுறு.. ரவுண்டா மொத்தமாக கேட்கலாமல்லொ..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

இதெல்லாம் உங்களிடம் இருந்து வரும்  எண்டு தெரியும். உங்களுக்கு என்ன தேவையோ, அதை சிங்களவரிடம் நேரடியாக கேளுங்கோ.

அது தானே முறையானது. அதை விடுத்து, பிச்சைக்கு நிக்கிற வேறு ஒரு கோஸ்டியிடம், நீ என்ன பிச்சை கேட்கிறாய், அதில என் பங்கென்ன என்பது நியாயமா படவில்லை.

இதை நேரடியாக இவர்களிடம் சொல்ல தமிழ்த் தலைமைகளுக்கு திராணி/வக்கு இருக்கா?

இப்பவும் பிட்டும் தேங்காப்பூவும் என்று அலம்புவார்கள். கேட்க விசர்தான் வரும்.

தமிழராக தமிழர் தாயகத்துக்குள் சகல அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எடுத்துக்காட்டாக சமஷ்டி என்று வந்தால் அந்த அலகின் தலைவராக அல்லது முதல்வராக வருவதற்கு வடக்கு கிழக்கில் வாழும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஜன்நாயக வழியில் சகல உரிமையும் உண்டு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, வாலி said:

இதை நேரடியாக இவர்களிடம் சொல்ல தமிழ்த் தலைமைகளுக்கு திராணி/வக்கு இருக்கா?

இப்பவும் பிட்டும் தேங்காப்பூவும் என்று அலம்புவார்கள். கேட்க விசர்தான் வரும்.

தமிழராக தமிழர் தாயகத்துக்குள் சகல அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எடுத்துக்காட்டாக சமஷ்டி என்று வந்தால் அந்த அலகின் தலைவராக அல்லது முதல்வராக வருவதற்கு வடக்கு கிழக்கில் வாழும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஜன்நாயக வழியில் சகல உரிமையும் உண்டு.

 

எல்லாம் சுயநலம் தான். கிழக்கு முதல்வராக இருந்து அனுபவித்தவர். ஒன்றாக இணைந்தால், அது கிடைக்காது.

தமிழ் பேசும் மக்களாக அரசியல் செய்து, வரலாம் என்ற நோக்கம் இல்லை.

மத ரீதியாக, சிந்தித்து, போகாத ஊருக்கு வழி கேட்க்கிறார். இன்றய உலக நியதியில், ஐஸ் குண்டும் இலங்கையில் வெடித்த பின்னர், இவர்களுக்கு தனி அலகு கிடைக்காது என்று தெரிந்து, தமிழர்களிடம், கதை விடுகிறார்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இதெல்லாம் உங்களிடம் இருந்து வரும்  எண்டு தெரியும். உங்களுக்கு என்ன தேவையோ, அதை சிங்களவரிடம் நேரடியாக கேளுங்கோ.

அது தானே முறையானது. அதை விடுத்து, பிச்சைக்கு நிக்கிற வேறு ஒரு கோஸ்டியிடம், நீ என்ன பிச்சை கேட்கிறாய், அதில என் பங்கென்ன என்பது நியாயமா படவில்லை.

இது நிஞாயமான கேள்வி நாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாலி said:

இதை நேரடியாக இவர்களிடம் சொல்ல தமிழ்த் தலைமைகளுக்கு திராணி/வக்கு இருக்கா?

இப்பவும் பிட்டும் தேங்காப்பூவும் என்று அலம்புவார்கள். கேட்க விசர்தான் வரும்.

தமிழராக தமிழர் தாயகத்துக்குள் சகல அதிகாரங்களும் வழங்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எடுத்துக்காட்டாக சமஷ்டி என்று வந்தால் அந்த அலகின் தலைவராக அல்லது முதல்வராக வருவதற்கு வடக்கு கிழக்கில் வாழும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஜன்நாயக வழியில் சகல உரிமையும் உண்டு.

 

அய்யா ஒருக்கா விட்டுக்கொடுத்த காக்காதான் இப்ப இந்தக் கதை கதைக்குது..அதுவின் ஆட்சியில் பறிச்ச காணீ கோவில் காணாதாம்..அதுதான் மிச்சம் பிடிக்கிறதுக்கு இப்பவும் அய்யாவின் வண்டியில் கை வைத்தபடி இருக்கிறார்( யாழில் உள்ள படம் பார்க்கவும்) சவூதி எண்ணெய் அமைச்சர் என்ரை கிளஸ்மேட்தான்.. இந்த எண்ணெய் கொண்டுவாறன் என்று போனவர் ..இன்னும் எண்ணெயைக் காணவில்லை..இப்ப பார்த்தால் தமிழரோடை உரிமைக்கு சண்டை பிடிக்கிறார்..காக்காவுக்கு அடுத்த தேர்தலில் சீற் வேணுமில்லே...பழைய கலர் போட்டோ கொப்பியோடை திரிவார் இனி..

Link to comment
Share on other sites

இந்த ஒம்பத்தி தொண்ணூத்தி எட்டுக்கு ஒரே தொணதொணப்புத்தான். நொய் நொய் எண்டபடி.குள்ளநரியன் அள்ளிக் கொடுத்திருப்பான் கள்ளன் இவனுக்குப் பள்ளம் தோண்டச்சொல்லி.ஒருவன் இடையில் நுழைந்து பஞ்சாயத்தைக் குழப்பிவிட்டால் சரிதானே. அதுதான் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் அரசியல்வாதிகளால் பறிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள், துரத்தியடிப்புகள் பற்றிய அவலங்களை  சற்று இப்போதைக்கு நிறுத்திவிட்டு (Park this issue temporarily for now)
உண்மையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள், அமைப்புகள், மக்களால் அங்கே வாழ்ந்த முஸ்லீம் மக்களின் காணிகள் அடாத்தாக பறிக்கப்பட்டுள்ளதா?

அல்லது அவர்களுக்கு கிடைக்கவேண்டிய ஞாயமான சரியான காணி பங்கீடுகள் நடந்தேறாமல் இருக்கிறதா?
இது பற்றி விபரங்கள் தெரிந்தவர்கள் யாரும் இங்கே பகிருவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, colomban said:

13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்பட்ட பின்னரே வட,கிழக்கில் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகினர்.

இது எப்போ நடந்தது?

11 hours ago, colomban said:

இதனால்தான்,13 ஆவது திருத்தத்துக்கு முஸ்லிம்கள் அஞ்சுகின்றனர்.

இனிமேற்தானா? இவர் எடுத்து விடுறதெல்லாம் மற்றவர்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறாரா?

11 hours ago, colomban said:

சிறுபான்மைச் சமூகங்கள் என்ற பொது அடையாளத்துக்குள் முஸ்லிம்களையும் உள்ளீர்க்கவே முயற்சிக்கப்படுகிறது.

அப்போ...... பெரும்பான்மையோடு இணையிறது, யார் இவர்களை இழுத்து பிடிச்சது? பொறுங்கோ! பொறுத்த நேரம் கக்கீம் இழுப்பார் கயிறு, அப்போ தலைகீழாய் வீழ்வது சம்பந்தரும், சுமந்திரனும், சாணக்கியனும் விழுகிற அதிர்வில இருந்து சம்பந்தர் மீண்டும் எழுந்திருக்கப்போவதில்லை.   

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.