Jump to content

16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரை பணியில் இருந்து நீக்கும் இலங்கை அரசாங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

16,000 இராணுவ வீரர்களை பணியில் இருந்து நீக்க இலங்கை இராணுவம்  தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு முன்னதாக அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இராணுவத்தினருக்கான செலவினங்களைக் குறைப்பதற்காகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கு மனித வளத்தைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை கடந்த மாதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்மொழிந்திருந்தார்.

16ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

 

16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினரை பணியில் இருந்து நீக்கும் இலங்கை அரசாங்கம் | Government To Reduce 16 000 Soldiers

அதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை முப்படையில் இல்லாதவர்களை அந்தந்த சேவைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றும் வகையில் பொது மன்னிப்பு காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தில் சரியான அறிவிப்பை வழங்காத வெளிநாட்டில் இருப்பவர்களும் தத்தமது சேவைகளில் இருந்து சட்டப்பூர்வமாக வெளியேற்றப்படுவார்கள் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

தானாக முன்வந்து சேவையை விட்டு வெளியேறுவதற்கு அரசாங்கம் அனுமதித்தமைக்கு இணங்க தற்போது இராணுவப் பேச்சாளர்  உட்பட இதுவரை 16,141 பேர் அதற்காக விண்ணப்பித்துள்ளனர்.  

https://tamilwin.com/article/government-to-reduce-16-000-soldiers-1671360958

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16,141 பேர்…. இரணுவத்திலிருந்து விலக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
15,000 பேரை அரசாங்கம் நீக்கப் போகின்றதாம்.
மொத்தம்… 31,141 பேர் குறையப் போகின்றார்களா?
அப்ப…. நாட்டை, யார் காப்பாற்றுவது. 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

16,141 பேர்…. இரணுவத்திலிருந்து விலக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
15,000 பேரை அரசாங்கம் நீக்கப் போகின்றதாம்.
மொத்தம்… 31,141 பேர் குறையப் போகின்றார்களா?
அப்ப…. நாட்டை, யார் காப்பாற்றுவது. 😂

அரசே அனுப்ப முன்னம்,அவர்களே கழன்று கொண்டால், காசு கிடைக்கலாம் எனடெல்லே கதையை கட்டி விட்டார்கள். 😁
 

தல்லாம், தல்லாம்....... முதல்ல, கிளம்புங்கோ... மோடிஜி பதினைந்து இலட்சம் கதை தான்.... 🤗

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னவோ முன்னாள் இராணுவ வீரர்கள் முலம் நாட்டில் ஏற்கனவே உள்ள குற்றச்செயல்கள் அதிகரிக்காவிட்டால் சரி. 

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

16,141 பேர்…. இரணுவத்திலிருந்து விலக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
15,000 பேரை அரசாங்கம் நீக்கப் போகின்றதாம்.
மொத்தம்… 31,141 பேர் குறையப் போகின்றார்களா?
அப்ப…. நாட்டை, யார் காப்பாற்றுவது. 😂

கருணாவும் பிள்ளையானும்  பாஸ் . மேலதிகமாக கேபியும் .

50 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

என்னவோ முன்னாள் இராணுவ வீரர்கள் முலம் நாட்டில் ஏற்கனவே உள்ள குற்றச்செயல்கள் அதிகரிக்காவிட்டால் சரி. 

உலக வங்கியின் முக்கிய நிபந்தனையே படை குறைப்பு இவ்வளவு ராணுவமும் தமிழர் பகுதிகளில் இருந்து நல்லது நடந்ததா ?இனி அவர்களின் ஊர்களில் வீரத்தை கண்பிக்கட்டும். 

Edited by பெருமாள்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

கருணாவும் பிள்ளையானும்  பாஸ் . மேலதிகமாக கேபியும் .

கே.பி. இப்ப எங்கே. வருடக் கணக்காக ஒரு செய்தியும் வரவில்லை.
தாய்லாந்து பெண்ணை திருமணம் செய்திருந்ததாக முன்பு செய்தி வந்திருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

கே.பி. இப்ப எங்கே. வருடக் கணக்காக ஒரு செய்தியும் வரவில்லை.
தாய்லாந்து பெண்ணை திருமணம் செய்திருந்ததாக முன்பு செய்தி வந்திருந்தது.

கிளிநொச்சியில் ஓர் அனாதை இல்லம் நடாத்துவதாக கேள்வி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேற்தான் இராணுவத்தினரின் வீர தீர செயல்களை தெற்கு கண்டுணரும். அரசாங்கத்திற்கு பெரிய தலையிடி அது. இனி அரசாங்க காணிகள், விவசாயம் என்று சொல்லி வடக்கில் கட்டி வைத்திருக்கவே விரும்பும். இதுகளுக்கு கற்றுக்கொடுத்ததே அரசாங்கத்தான், கட்டுப்படுத்துவது இனி கஷ்ரந்தான்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.