Jump to content

31 விடுதலைப் புலி போராளிகளை விடுதலை செய்து வட - கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் - சம்பிக்க அதிரடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய பிரபலங்கள் வெளியில் சுதந்திரமாக உள்ள போது 31 விடுதலை புலிகள் போராளிகளை தொடர்ந்து சிறையில் தடுத்து வைப்பது பயனற்றது.

ஆகவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுத்தியுள்ளேன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

யதார்த்த நிலைக்கு அமைய தீர்மானம் எடுக்கும் சூழல் தோற்றம் பெற்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கண்டி நகரில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற 43ஆவது படையணியின் நிகழ்வில்  கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு கொள்கை அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.

நிகழ்காலத்தில் காணப்படும் பிரச்சினையை எதிர்காலத்திற்கு கொண்டு செல்ல முடியாது. மாகாண சபை தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சர்வ கட்சி கூட்டத்தில் வலியுறுத்தினேன்.

நாட்டில் முதலாவது அரசியல் கட்சி தோற்றம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.

அவர்களுக்கு அரசியல் அபிலாசைகள் உள்ளன எனக் குறிப்பிட்டுக் கொண்டு பொன்னம்பலம் இராமநாதன் இலங்கை தேசிய சங்கத்தில் இருந்து விலகி தமிழ் மக்கள் சபை என்பதொன்றை ஸ்தாபித்தார்.

பொன்னம்பலம் இராமநாதன் அரச அதிகாரம் 50:50 பகிரப்பட வேண்டும் என குறிப்பிட்டார். எஸ்.டி. செல்வநாயகம் தனி இராச்சியம் அமைக்க சமஷ்டி முறைமையை கோரினார்.

இவ்வாறான தன்மை காலம் காலமாக இடம்பெற்றது. பிரபாகரன் பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக பலவந்தமான முறையில் தனி இராச்சியத்தை அமைக்க முயற்சித்தார். ஆகவே இலங்கையின் அதிகார பகிர்வில் இவ்வாறான பின்னணி காணப்படுகிறது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா ஆரம்பத்தில் இருந்து அவதானம் செலுத்தியுள்ளது. இலங்கை இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அது அரசியலமைப்பில் ஒரு பகுதியாக உள்வாங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் யதார்த்தத்துக்கு சாதகமான விடயங்களை செயற்படுத்த வேண்டும். நாடு வங்குரோத்து நிலை அடைந்ததன் பின்னர் இலங்கை மக்கள் இன, மத பேதமில்லாமல் படகு ஊடாக நாட்டை விட்டு வெளியேறிச் செல்கிறார்கள். வசதி படைத்தவர்கள் விமான நிலையங்களை நோக்கி செல்கிறார்கள்.

விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய பிரபலங்களான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட தரப்பினர் வெளியில் சுதந்திரமாக உள்ள போது 31 விடுதலை புலிகள் போராளிகளை தொடர்ந்து சிறையில் தடுத்து வைப்பது பயனற்றது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்ட தரப்பினர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆகவே விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களை விடுதலை செய்து இந்த பிரச்சினையை மறக்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்.தொல்பொருள் மற்றும் வனவளபாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காணிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

31 விடுதலைப் புலி போராளிகளை விடுதலை செய்து வட - கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் - சம்பிக்க அதிரடி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மணமாக ஓடும் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் , அவை விளக்குமாற்றையும் காவிக்கொண்டா   ஓடுகின்றன என அவதானிப்பது சுவாராஸ்யமாகக இருக்கும் ....😜

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.