Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐபிஎல் 2023 செய்திகள்


Recommended Posts

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரரானார் சாம் கரன்!

 

Sam-Curran.jpg

டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்ற இங்கிலாந்து வீரர் சாம் கரனை, இந்திய ரூபா மதிப்பில் 18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் எடுத்தது.

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ஜேசன் ஹோல்டரை இந்திய ரூபா மதிப்பில் 5.75 கோடிக்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

https://thinakkural.lk/article/229868

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் ஏலம் 2023: வரலாறு படைத்த சாம் கரன்; கவனிக்க வைத்த 'டாப் 3' வீரர்கள்

சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

3 மணி நேரங்களுக்கு முன்னர்

சுட்டிக்குழந்தை என சி.எஸ்.கே ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சாம் கரன், இன்று ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் எனும் வரலாறை படைத்திருக்கிறார். கொச்சியில் நடைபெற்ற 2023 ஐபிஎல் ஏலத்தில் கடுமையான போட்டிகளுக்கிடையே 18.50 கோடி ரூபாய்க்கு சாம் கரணை ஏலம் எடுத்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றில் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம்போன டாப் - 3 வீரர்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

1. சாம் கரன் - ரூ.18.50 கோடி

சாம் கரனின் அடிப்படை விலை 2 கோடி ரூபாய். முதலில் ஏலம் கேட்டது மும்பை இந்தியன்ஸ். களத்தில் குதித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. 6 கோடி ரூபாய் வரை இரு அணிகள் மட்டுமே மோதின. பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலப்போட்டியில் குதித்தது.

பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சாம் கரனுக்காக போட்டிப்போட்டன. இறுதியில் 18.50 கோடி ரூபாய்க்கு சாம் கரனை வென்றது பஞ்சாப் அணி. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனை படைத்தார் சாம் கரன்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

2022 டி20 உலக கோப்பையை கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் இங்கிலாந்தின் சாம் கரன். பாகிஸ்தானை ரன் குவிக்க விடாமல் செய்து முக்கிய விக்கெட்களை கைப்பற்றிய இடது கை பந்துவீச்சாளர் சாம் கரன் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் மட்டுமின்றி தொடர் முழுவதுமே சிறப்பாக செயல்பட்டதற்காக தொடர் நாயகன் விருதையும் வென்றார். முதல் முறையாக ஒரு பவுலராலும் தொடர் நாயகன் விருதை வெல்ல முடியும் என நிரூபித்தார். பிப்ரவரி 2022ல் நடைபெற்ற மெகா ஏலத்தில் காயம் காரணமாக சாம் கரண் பங்கெடுக்கவில்லை. அது ஒருவகையில் அவருக்கு நல்லதாகவே அமைந்திருக்கிறது. 2019-ல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் மூலம் ஐபிஎல்-லில் அறிமுகமானார் சாம் கரன் 2020, 2021 சீசன்களில் சென்னை அணிக்காக விளையாடினார்.

 

2. கேமரோன் க்ரீன் - ரூ. 17.5 கோடி

சிஎஸ்கே

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏப்ரல் 2022ல் ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகமான அதிரடி ஆல்ரவுண்டருக்கு இன்றைய ஏலத்தில் ஜாக்பாட் அடித்திருக்கிறது. 2 கோடி அடிப்படையில் விலையில் இருந்து ஏலம் தொடங்கியது. பெங்களூரு, மும்பை, டெல்லி அணிகள் போட்டிப்போட்டன. இறுதியில் 17.5 கோடி ரூபாய்க்கு கேமரோனை வாங்கியது மும்பை இந்தியன்ஸ். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 2வது வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.

23 வயதான கேமரோன் க்ரீன், இதுவரை 8 முறை மட்டுமே சர்வதேச டி20 போட்டியில் ஆடியிருக்கிறார். ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் 173.75. இதில் 2 அரைசதங்களும் அடங்கும். அதுவும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலேயே அவர் விளாசியிருந்தார். ஒரு போட்டியில் 30 பந்துகளில் 61 ரன்களும் மற்றொன்றில் 21 பந்துகளில் 52 ரன்களும் குவித்திருந்தார். “2 - 3 ஆண்டுகளாகவே க்ரீனை கவனித்து வருகிறோம். அவர்தான் எங்களுக்கு சரியான இருப்பார் என நினைத்தோம். இளம் வீரர்களை வாங்க முனைப்பு காட்டுகிறோம்” என மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்

3. பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி

2022 டி20 உலக் கோப்பையில் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ். டி20, ஒருநாள், டெஸ்ட் என எந்த ஒரு கிரிக்கெட் ஃபார்மட்டாக இருந்தாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் ஸ்டோக்ஸ் வல்லவர். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கைத்தேர்ந்தவர்.

2022 மெகா ஏலத்திற்கு முன்பு ராஜஸ்தான் அணியால் கழற்றிவிடப்பட்ட பென் ஸ்டோக்ஸ் இந்த முறை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுவார் என கணிக்கப்பட்டிருந்தது. அதுபோலவே அடிப்படை விலையான 2 கோடி ரூபாயில் இருந்து ஏலத்தொகையை எகிற வைத்து 16.25 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் வந்து சேர்ந்திருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

பெங்களூரு, ராஜஸ்தான், லக்னெள, ஐதராபாத் உள்ளிட்ட அணிகள் பென் ஸ்டோக்ஸை வாங்க ஆர்வம் காட்டின. விடாப்பிடியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக தொகை கொடுத்து அவரை ஏலம் எடுத்திருக்கிறது. சென்னை அணியால் வாங்கப்பட்டதை தொடந்து இங்கிலாந்தின் அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பென் ஸ்டோக்ஸ் மிகச்சிறந்த பக்கபலமாக இருப்பார் என எதிர்பார்க்கலாம்.

https://www.bbc.com/tamil/articles/cn0yl3xjy0xo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் ஏலம் 2023: தோனிக்கு தோள் கொடுப்பாரா பென் ஸ்டோக்ஸ்? கோப்பையை வெல்லுமா சிஎஸ்கே?

கிரிக்கெட்

பட மூலாதாரம்,CSK/TWITTER

49 நிமிடங்களுக்கு முன்னர்

“சென்னை சூப்பர் கிங்ஸில் இணைந்திருப்பதால் பென் ஸ்டோக்ஸ் மகிழ்ச்சியுடன் இருப்பார். காரணம், ஒவ்வொரு வீரரும் எம்.எஸ்.தோனியின் தலைமையில் விளையாட விரும்புவார்கள். அவரை பலரும் நேசிக்கிறார்கள்” - இவை ஐபிஎல் ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் உதிர்த்த வார்த்தைகள்.

பென் ஸ்டோக்ஸை சென்னை அணி ஏலத்தில் எடுத்த அடுத்த கணமே, ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடத் துவங்கி விட்டனர். தோனி - பென் ஸ்டோக்ஸ் காம்போவில் இந்த முறை கோப்பை சென்னைக்குத்தான் என பலரும் உற்சாகத்தில் உள்ளனர்.

பென் ஸ்டோக்ஸுக்கு ரூ. 16.25 கோடி

2019, 50 ஓவர் உலக கோப்பை, 2022 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பென் ஸ்டோக்ஸ்.

டி20, ஒருநாள், டெஸ்ட் என எந்த ஒரு கிரிக்கெட் ஃபார்மட்டாக இருந்தாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றுவதில் ஸ்டோக்ஸ் வல்லவர்.

 

பேட்டிங், பவுலிங் இரண்டிலும் கைத்தேர்ந்தவர். உலகின் டாப் ஆல் ரவுண்டர். அண்மையில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரலாற்று வெற்றியுடன் திரும்பியவர்.

இப்படி பல பெருமைகளுக்குச் சொந்தக்காரரான அதிரடி நாயகனை வலைவீசி தூக்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். பெங்களூரு, ராஜஸ்தான், லக்னெள, ஐதராபாத் உள்ளிட்ட அணிகள் பென் ஸ்டோக்ஸை வாங்க ஆர்வம் காட்டின.

ஆனால் கைக்கு எட்டவில்லை. ஐபிஎல் 2023 ஏலத்தில் அடிப்படை விலையான 2 கோடி ரூபாயில் இருந்து ஏலத்தொகையை எகிற வைத்து 16.25 கோடி ரூபாய்க்கு சி.எஸ்.கே-இடம் வந்து சேர்ந்திருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.

சென்னை சூப்பர் கிங்ஸின் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டவரும் பென் ஸ்டோக்ஸ்தான்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

தோனிக்கு தோள் கொடுப்பாரா பென் ஸ்டோக்ஸ்?

ஐபிஎல் வரலாற்றில் 2017 பென் ஸ்டோக்ஸுக்கு ஒரு முக்கியமான ஆண்டு. முதல்முறையாக ஐபிஎல்லில் ரைசிங் புனா சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியால் 14.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அப்போது விளையாடாததால் புனா அணியில் தோனி விளையாடினார்.

பென் ஸ்டோக்ஸின் ஐபிஎல் பயணத்தில் அந்த ஆண்டுதான் அவர் அதிகபட்ச ரன்களை குவித்திருந்தார். 12 போட்டிகளில் விளையாடி 316 ரன்கள் சேர்த்தார்.

இதில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடங்கும். பந்து வீச்சிலும் 12 விக்கெட்களை சாய்த்தார். அந்த ஆண்டில் புனா அணி இறுதிப்போட்டி வரை சென்று மும்பையிடம் வீழ்ந்தது.

ஏற்கெனவே தோனியுடன் இணைந்து விளையாடிய அனுபவம் கொண்டவர் என்பதால் பென் ஸ்டோக்ஸை கையாளுவது கேப்டன் தோனிக்கு எளிதாகவே அமையலாம்.

அதுமட்டுமின்றி 41 வயதாகும் தோனி எப்போது வேண்டுமென்றாலும் ஓய்வு அறிவிப்பை வெளியிடலாம்.

அவருக்கு மாற்றாக ஒரு கேப்டன் முகமாகவும் பென் ஸ்டோக்ஸை சென்னை அணியால் முன்னிறுத்த முடியும். கூடவே டுவெய்ன் பிராவோ இல்லாத வெற்றிடத்தை அதிக பலத்துடன் நிரப்ப முடியும்.

பென்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். ஒரு அணியை வழிநடத்தும் அனுபவம் அவருக்கு இருக்கிறது.

தோனிக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை அழங்கரிக்கும் வகையில் கூட ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என கிரிக்கெட் முன்னணி ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

“பென் ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு மிகவும் பொருத்தமானவர்” என ஐபிஎல் ஜாம்பவான் கிறிஸ் கெய்லும் கூறியுள்ளார்.

இதேபோன்று, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, “எம்.எஸ்.தோனி ஸ்டோக்ஸை சிறப்பாக வழிநடத்துவார்.

ஸ்டோக்ஸ் ஒரு உலக சாம்பியன். டி20 உலக கோப்பையில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர். அவரது கிரிக்கெட் மூளை சென்னையின் இளம் வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சென்னை ரசிகர்கள் அவரை மிகவும் விரும்புவார்கள்.

ஸ்டோக்ஸ், ரஹானே இருவருமே தோனியுடன் விளையாடியுள்ளார்கள். பிராவோவுக்கு மாற்றாக பென் ஸ்டோக்ஸ் நல்லதொரு தேர்வு” என தெரிவித்தார்.

சென்னை அணியின் புது முகங்கள்

'ஐபிஎல் 2023' ஏலத்தில் சென்னை அணி தனக்கான 7 காலி இடங்களையும் முழுமையாக நிரப்பியது. இதில் பென் ஸ்டோக்ஸை தவிர்த்து இதர 6 பேரும் குறைந்த தொகையில் எடுக்கப்பட்டவர்கள். நியூசிலாந்து பவுலர் கைல் ஜேமிசன் 1 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இதைதவிர்த்து 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த ஆல் ரவுண்டர் நிஷாந்த் சிந்து 60 லட்ச ரூபாய்க்கு சென்னை அணியால் வாங்கப்பட்டார்.

இந்திய வீரர் அஜின்கியா ரஹானே 50 லட்ச ரூபாய்க்கு தனது முதல் ஏலப்பட்டியலில் சேர்த்தது சி.எஸ்.கே. இதை தவிர்த்து, இளம் வீரர்கள் ஷேக் ரஷீத், அஜய் மண்டல், பகத் வர்மா ஆகியோர் தலா 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர்.

5வது முறையாக கோப்பையை வெல்லுமா சிஎஸ்கே?

கத்தார் உலக கோப்பை

பட மூலாதாரம்,BCCI/IPL

கடந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாக தோனி சி.எஸ்.கே. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் ஜடேஜா புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

ஜடேஜா தலைமையில் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனால் மீண்டும் கேப்டனானார் தோனி. இருப்பினும் சென்னை அணியால் பிளே ஆஃப் சுற்றுக்குக்கூட நுழைய முடியவில்லை.

14 போட்டிகளில் விளையாடி 10 தோல்விகளை சந்தித்தது. புள்ளிப்பட்டியலில் 9ம் இடத்தை பிடித்தது. இந்த முறை சென்னை அணி தோனி தலைமையில் தொடக்கம் முதலே உத்வேகத்துடன் களமிறங்கக்கூடும். 2020ல் மோசமான தோல்விகளை எதிர்கொண்ட சென்னை அணி 2021-ல் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

தற்போது அணியில் பென் ஸ்டோக்ஸ் இணைந்திருப்பது கூடுதல் பலமாக அமையும். அதே சமயம், தோனியின் வியூகம், இதர வீரர்களின் கன்சிஸ்டன்ஸி உள்ளிட்ட அம்சங்களே சி.எஸ்.கே.வின் கோப்பை கனவை தீர்மானிக்கும்.

https://www.bbc.com/tamil/articles/c804rpk1k39o

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்கள் .......நன்றி ஏராளன் .........!  👍

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2023: தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூட இல்லாத சிஎஸ்கே

Dhoni at IPL

பட மூலாதாரம்,BBCI/IPL

3 மணி நேரங்களுக்கு முன்னர்

மும்பை இந்தியன்ஸ் அணியின் முகமாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரோகித் சர்மாவும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமாக அதே மாநிலத்தைச் சேர்ந்த ஹர்திக் பட்டேலும் இருக்கும் ஐபிஎல் தொடரில், 15 ஆண்டுகள் ஆன பின்னரும் சென்னை அணிக்கு மட்டும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் யாரும் முன்னிலைப்படுத்தபடுவதில்லை.

2023ஆம் ஆண்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இறுதி வீரர்கள் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்த யாருமே இல்லை என்பது சிஎஸ்கே ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

ஐபிஎல் 'மினி' ஏலம்

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 16வது ஐபிஎல் தொடருக்கான 'மினி' ஏலம் சில நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக புதிதாக 7 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு சென்னைக்காக ஆடிய 18 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். இதையடுத்து 16வது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடும் 25 வீரர்கள் அடங்கிய பட்டியலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி செய்தது.

 

தோனி தலைமையிலான இந்த அணியில் பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி உள்ளிட்ட 8 வெளிநாட்டு வீரர்களும், 17 இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

2023ஆம் ஆண்டுக்கான 16வது ஐபிஎல் தொடர் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், ஒவ்வோர் அணியும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தின் மூலம் எடுத்து முடித்துள்ளன. இந்நிலையில், 25 பேர் அடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் கூட இடம்பெறவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆதங்கத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடும் முக்கிய வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின், தங்கராசு நடராஜன், தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர் என யாருமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏன் ஏலம் எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்புகின்றனர் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

ஏலத்தில் என்ன நடந்தது?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை, 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய சென்னை அணியில் இடம்பெற்று இருந்த ஜெகதீசன் மற்றும் ஹரி நிசாந்த் ஆகிய இருவரையும் இந்த ஆண்டு தக்கவைக்கவில்லை.

மாறாக சமீபத்தில் நடந்த ஏலத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரரான ஜெகதீசனை மட்டும் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்தது சென்னை அணி. கொல்கத்தா அணிக்கும், சென்னை அணிக்கும் இடையே ஜெகதீசன் நாராயணை ஏலத்தில் எடுக்க போட்டி நிலவிய நிலையில், இறுதியில் கொல்கத்தா அணி ஜெகதீசனை 90 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.சென்னை அணி தனது கையிருப்பில் இன்னும் 1.5 கோடி ரூபாய் மீதம் வைத்திருக்கும் நிலையில், ஜெகதீசனை ஏலத்தில் எடுக்க 85 லட்சம் வரை கேட்டது.

சென்னை அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக தோனி விளையாடும் நிலையில், மற்றொரு விக்கெட் கீப்பரான ஜெகதீசனை கடந்த ஆண்டு வரை சென்னை அணி விளையாட வாய்ப்பு வழங்காமல் பென்ச்சில் அமர வைத்து இருந்தது.

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஜெகதீசனைத் தவிர தமிழ்நாட்டை சேர்ந்த வேறு எந்த வீரர்களையும் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யவில்லை.

"ஐபிஎல் என்பது பொழுதுபோக்கை மையப்படுத்தி நடத்தப்பட்டு வரும் கிரிக்கெட் போட்டி. அதனால் சென்னைக்கு அணிக்கோ, வேறு எந்த அணிக்கோ ஒரு மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை தங்கள் அணிக்கு எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை" என்கிறார், சென்னையை சேர்ந்த தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகருமான செல்வ முத்துகுமார். ஆனால் சென்னை அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களை பெயரளவில் கூட எடுக்காமல் இருப்பது இளம் கிரிக்கெட் வீரர்களிடம் தவறான முன்னுதாரணமாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

Selva Muthukumar
 
படக்குறிப்பு,

செல்வ முத்துகுமார்

இந்த ஆண்டு விளையாடும் தமிழக வீரர்கள் யார்?

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் யாரும் இல்லை என்றாலும், வேறு சில அணிகள் தமிழக வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளன.

குஜராத் டைட்டன்ஸ் அணி

  • விஜய் சங்கர்
  • சாய் கிஷோர்
  • சாய் சுதர்ஷன்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

  • ஜெகதீசன் நாராயண்
  • வருண் சக்ரவர்த்தி

ராஜஸ்தான் ராயல்ஸ்

  • முருகன் அஸ்வின்
  • ரவிச்சந்திரன் அஸ்வின்

சன் ரைசர்ஸ் ஐதராபாத்

  • தங்கராசு நடராஜன்
  • வாஷிங்டன் சுந்தர்

பஞ்சாப் கிங்ஸ்

  • ஷாருக் கான்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ

  • தினேஷ் கார்த்திக்
Link to comment
Share on other sites

  • இணையவன் changed the title to ஐபிஎல் 2023 செய்திகள்
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

சன்ரைசர்ஸ் அணிக்கு புதிய தலைவர்!

Aiden-Markram.jpg

2023ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவராக எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக சன்ரைசர்ஸ் அணியின் தலைவராக கேன் வில்லியம்சன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://thinakkural.lk/article/241587

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் 2023 அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே – குஜராத் டைட்டன்ஸ் மோதல்

 

ipl-2023-1.jpg

கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மார்ச் 31ஆம் திகதி தொடங்கி மே 28ஆம் திகதி வரை போட்டி நடைபெறுகிறது.

ipl-match.jpeg

முதல் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.

இப்போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது.

இரண்டாவது நாளில் இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரு ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

மற்றொரு ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த சீசனில் மொத்தம் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.

மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. லீக் ஆட்டங்கள் மே 21ஆம் திகதி நிறைவடைகின்றன.

இறுதிப்போட்டி மே 28ஆம் திகதி அகமதாபாத்தில் நடைபெறும்.

https://thinakkural.lk/article/240501

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌பிஎல் தொட‌ங்க‌ முத‌ல் ம‌க‌ளிர் ஜ‌பிஎல் ந‌ட‌க்க‌ போகுது இன்னும் இர‌ண்டு கிழ‌மையில்..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன்

என்ன‌ பெரிய‌ப்பா இந்த‌ முறையும் ஜ‌பிஎல் போட்டிய‌ ந‌ட‌த்துவிங்க‌ள் தானே..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2023 at 09:07, பையன்26 said:

@கிருபன்

என்ன‌ பெரிய‌ப்பா இந்த‌ முறையும் ஜ‌பிஎல் போட்டிய‌ ந‌ட‌த்துவிங்க‌ள் தானே..............

அடுத்த போட்டி ஆரம்பமா?🤨

பத்துப் பேருக்கு மேல் பங்குபற்றினால் நடாத்தலாம். கேள்விக்கொத்தைப் பார்க்கவேண்டும் @பையன்26

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அடுத்த போட்டி ஆரம்பமா?🤨

பத்துப் பேருக்கு மேல் பங்குபற்றினால் நடாத்தலாம். கேள்விக்கொத்தைப் பார்க்கவேண்டும் @பையன்26

உந்த‌ ப‌த்துப் பேர் என்ற‌த‌ கை விடுங்கோ...........நீங்க‌ள் கேள்வி கொத்த‌ தயார் செய்யூங்கோ..........போட்டிபியில் குறைந்த‌து 20பேர் த‌ன்னும் க‌லந்து கொள்ளுவின‌ம்.................

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஐபிஎல் அணியின் வீரர் விலகல்!

 
1678588926-IPL-2-586x365.jpg

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார் ஜை ரிச்சர்ட்சன். கடந்த ஜனவரி மாதம் பிபிஎல் போட்டியில் விளையாடியபோது ஜை ரிச்சர்ட்சனுக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதிலிருந்து மீண்டு வந்ததால் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டார். எனினும் காயத்தினால் உண்டான பாதிப்பு மீண்டும் ஏற்பட்டிருப்பதால் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் தொடரிலிருந்து விலகினார். ஜை ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக ஆஸி. ஒருநாள் அணியில் நாதன் எல்லீஸ் தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் தனது காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார் ஜை ரிச்சர்ட்சன். இத்தகவலை சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஐபிஎல் போட்டியிலிருந்து அவர் விலகியிருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், ஆஷஸ் தொடரிலும் அவரால் பங்கேற்கமுடியாது எனத் தெரிகிறது.
ஐபிஎல் ஏலத்தில் ஜை ரிச்சர்ட்சனை ரூ. 1.50 கோடிக்குத் தேர்வு செய்தது மும்பை அணி.

https://oosai.lk/12567/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ல‌மான‌ இங்லாந் அணி வ‌ங்க‌ளாதேஸ்சிட‌ம் இர‌ண்டு தோல்வி

 

ஜ‌பிஎல்ல‌ அதிக‌ விலைக்கு வேண்ட‌ ப‌ட்ட‌ சாம் க‌ர‌ன் வ‌ங்ளாதேஸ் தொட‌ரில் பெரிசா சாதிக்க‌ வில்லை.............ஜ‌பிஎல்ல‌ இவ‌ரின் விளையாட்டு எப்ப‌டி இருக்குதுன்னு பாப்போம் 🤣😁😂..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் பாடலுக்கு நடனமாடிய டோனி- வைரலாகும் வீடியோ

ms.jpg

16ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பிக்க உள்ள நிலையில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தீவிரமாக வலை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

வரும் 31ஆம் திகதி தொடங்கும் இந்தப் போட்டியில் நடப்பு சம்பியன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இதன் காரணமாக இந்த அணிகளின் ஹோம் மைதானங்களில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் பீஸ்ட் பட பாடலுக்கு டோனி உள்பட 4 வீரர்கள் நடனமாடுவது போல உள்ள வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் டோனி கிட்டார் வாசிப்பது போன்றும் அருகில் ருதுராஜ், சிவன் துபே, தீபக் சாஹர் ஆகியோர் நடனமாடுவது போன்று இருந்தது.

கடந்த 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜஸ்தான் செல்லும் வியாஸ்காந்த்

Published By: DIGITAL DESK 5

21 MAR, 2023 | 09:47 AM
image

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார். 

யாழ்பாணத்தில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த் இந்த விடயத்தை தெரியப்படுத்தினார். 

மேலும் தெரிவிக்கையில், 

பங்களாதேஷில் விளையாடியது எனக்கு நிறைய அனுபவங்களும் , சர்வதேச விளையாட்டு வீரர்களின் அறிமுகங்களும் கிடைக்கப்பெற்றன. 

தற்போது IPL இல் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சு வீரராக எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடன் குமார் சங்கக்கார கதைத்து இருந்தார். எனது கிரிக்கெட்டை அடுத்து கட்டத்திற்கு எடுத்து செல்ல கவனிக்கிறேன் என்றார். அது தொடர்பில் சிலருடன் கதைத்து எனக்கான வாய்ப்புக்களை பெற்று தந்துள்ளார். அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். 

எனக்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை நான் முடிந்தளவு பயன்படுத்தி என்னை வளர்த்துக்கொள்வேன் என்றார். 

அதேவேளை ஜூன் மாதம் தொடக்கம் யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் அக்கடமி ஆரம்பிக்கப்பட்டு , கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக கிரிக்கெட் அக்கடமியின் இயக்குனர்களில் ஒருவரான வைத்தியர் சிறிதரன் தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், 

கிரிக்கெட்டை உயர்த்த உதவி செய்கிறோம். தரமான வீரர்களை உருவாக்கி, சர்வதேச தரத்தில் வீரர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் நோக்குடன் , யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு முன்பாக அக்கடமி உருவாக்கப்பட்டுள்ளது. 

அதனூடாக வீரர்களுக்கு உயர் தர பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அத்துடன் கொழும்புக்கு வீரர்களை அழைத்து சென்று, புற்தரைகளில் விளையாட வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கவும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

தேசிய சர்வதேச வீரர்களுடன் விளையாடும் அவர்களின் அனுபவங்களை பெற்று கொள்ளும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி கொடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/151009

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறித்தம்பி!  நல்ல வடிவாய் பாருங்கோ அவர் மண்ணெண்ணை தகரத்தோட எல்லோ திரியிறவர்? என்ன விசர்க்கதை கதைக்கிறியள் ? புட்டின்  அருமை தெரியாதவர் யாரிருக்கிறார்கள்?   
    • தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023-24: முக்கிய அம்சங்கள் - விரிவான தகவல்கள்   படக்குறிப்பு, தமிழ்நாடு அரசின் 2023-2024ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் மாநில வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆற்.கே. பன்னீர்செல்வம். 21 மார்ச் 2023, 09:07 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் சிறு தானிய உற்பத்தியை அதிகரிப்பது, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், தென்னை வளர்ச்சியை மேம்படுத்த திட்டம், பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் திட்டம், சேமிப்புக் கிடங்குகளை மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவைக்கு செல்லும் வழியில், அந்த அறிக்கையை முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். பச்சைத் துண்டு அணிந்தபடி வந்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பத்து மணியளவில் வேளாண் துறைக்கான நிதி நிலை அறிக்கையை வாசிக்க ஆரம்பித்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 முக்கிய அம்சங்கள் தமிழ்நாட்டில் மொத்த சாகுபடி பரப்பு 93 ஆயிரம் ஹெக்டேர் அதிகரித்து 63 லட்சத்து 48 ஆயிரம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. 2021-22ஆம் ஆண்டில் 119 லட்சத்து 97 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 11 லட்சத்து 73 டன் அதிகம். டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. இது கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவு உற்பத்தியாகும். வரும் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயத்திற்காக புதிதாக ஒன்றரை லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 சிற்றூர்களில் வேளாண்மை முழுமையாக வளர்வதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளையும் மற்ற பணிகளையும் மேற்கொள்ள, 'கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்' செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்காக, 2504 ஊராட்சிகளுக்கு ரூ. 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் இலவச பம்புசெட்டுகள், இலவச பண்ணைக் குட்டைகள் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள், உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தித்தரப்படும். தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ஏற்கனவே 20 மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு சிறுதானிய மண்டலங்கள் இருந்த நிலையில், தற்போது நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய ஐந்த மாவட்டங்களும் இந்த மண்டலங்களில் சேர்த்துக்கொள்ளப்படும். நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பொது விநியோக அட்டைகளுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறு தானிய திருவிழாக்களும் நடத்தப்படும். இந்த இயக்கத்திற்கு 82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் விவசாயிகளின் உடனடித் தேவைகளை நிறைவேற்றவும் வருவாயை அதிகரிக்கவும் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் 64 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். அதில் கிராம வேளாண் முன்னேற்றக் குழு அமைக்கப்படும். தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாக்க 200 ஏக்கர் பரப்பளவில் அந்த ரகங்களின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதற்கு 50 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாடு பட்ஜெட் 2023: "குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்.15 முதல் தொடங்கும்"20 மார்ச் 2023 'தமிழ்நாடு அரசு கடன் வாங்குவதை தவிர வேறு வழியில்லை' - ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பேட்டி21 மார்ச் 2023 உடலில் உரசுபவரைக் குத்துவதற்கு இந்தியப் பெண்கள் பயன்படுத்தும் சின்னஞ்சிறு ஆயுதம்6 மணி நேரங்களுக்கு முன்னர் பாரம்பரிய நெல் விதைகளை விதை வங்கியில் பராமரித்துவரும் 10 விவசாயிகளுக்கு தலா மூன்று லட்சம் வீதம் 30 லட்ச ரூபாய் வழங்கப்படும். குறுவைப் பருவத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்ய ஊக்குவிக்க 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நெல்லுக்குப் பின் மாற்றுப் பயிர் சாகுபடி செய்வதை ஊக்குவிக்க 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். Twitter பதிவை கடந்து செல்ல, 3 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 சிறு, குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கு வேளாண் கருவிகளை வாங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. 60,000 வேளாண் கருவிகள் இதன் மூலம் வழங்கப்படும். அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க சமீபத்தில் கொள்கை வெளியிடப்பட்டது. விவசாயிகள் அங்ககச் சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்க 10 ஆயிரம் ஹெக்டேருக்கு சான்றிதழைப் பெற மானிய உதவி அளிக்கப்படும். இதற்காக இந்த ஆண்டில் 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க ஐந்தாண்டுகளுக்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பிற அங்கக விவசாயிகளுக்கு கைகொடுக்கும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் குடியரசு தினத்தன்று ஐந்து லட்ச ரூபாய் பணப்பரிசுடன் விருது வழங்கப்படும். ஆதிதிராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிட சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.10 கோடியும், பழங்குடியின சிறு குறு விவசாயிகளுக்கு 1 கோடி ரூபாயும் என 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வேளாண் இயந்திரங்கள், சூரிய சக்தி பம்ப் செட்கள் வாங்க இந்த மானியம் பயன்படும். தமிழ்நாட்டில் உள்ள நில உரிமையாளர்கள், விவசாயிகளின் அடிப்படைத் தகவல்களான ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைச் சேமித்துவைக்க GRAINS (Grower Online Registration of Agriculture Inputs System) என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் பயறு வகைகளின் பரப்பளவையும் உற்பத்தியையும் அதிகரிக்க பயறு பெருக்குத் திட்டம் 30 கோடி ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய துவரை மண்டலத்தில் துவரை சாகுபடிக்கு 18 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். எண்ணெய் வித்துக்கான சிறப்புத் திட்டம்: சூரியகாந்திப் பயிரின் உற்பத்தித் திறனை உயர்த்தவும் நிலக்கடலை, எள், சோயா, மொச்சை போன்ற பயிர்களை பரவலாக்கம் செய்யவும் 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். தென்னை உற்பத்தியில் தேசிய அளவில் முதலிடம் பெற, மறுநடவு - புத்தாக்கத் திட்டம் 20 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். குட்டை - நெட்டை வீரிய ஒட்டுரக தென்னைக்கு விவசாயிகளிடம் வரவேற்பு இருப்பதால் இந்த ஆண்டில் 10,000 குட்டை - நெட்டை ஒட்டுரக நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும். பயிர் காப்பீட்டுத் திட்டங்களுக்குச் செலுத்த மாநில அரசின் மானியமாக இந்த ஆண்டு 2,337 கோடி ரூபாய் செலுத்தப்படும். கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்யப்படும் கரும்பு சாகுபடி பரப்பு 2022-23 காலகட்டத்தில் 55,000 ஹெக்டேர் அதிகரித்துள்ளது. கரும்புக்கு டன் ஒன்றுக்கு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாய விலையான 2,821 ரூபாயுடன் 195 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். இதற்கென 253 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர்.   படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் மு. கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழ்நாட்டு விவசாயிகளின் இயற்கை உரத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக, சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆலைக்கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும். மல்லிகை பூ மதுரையில் மட்டுமின்றி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 4,300 எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டு முழுவதும் மல்லிகைப் பூக்கள் கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டில் இத்திட்டம் ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். பலா மரங்களின் உற்பத்தியை அதிகரிக்க ஐந்து ஆண்டுகள் தொடர் திட்டமாக பலா இயக்கம் செயல்படுத்தப்பட்டு, 2,500 ஹெக்டர் பரப்பளவில் பலா சாகுபடி மேற்கொள்ளப்படும். இத்திட்டம், அரியலூர், கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தேனி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். வரும் ஆண்டில் இவ்வியக்கத்திற்கு மூன்று கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாட்டில் இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் 35,200 ஹெக்டர் பரப்பில் மிளகாய் பயிரிடப்படுகிறது. இப்பரப்பை 40,000 ஹெக்டேராக உயர்த்தி, உற்பத்தியினை அதிகரிக்க இம்மாவட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளில் மிளகாய் மண்டலமாக மாற்றப்படும். மிளகாயின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களைத் தயாரிக்க ஏதுவான கட்டமைப்பை உருவாக்க ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000: திமுக அரசின் அறிவிப்பும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பும்20 மார்ச் 2023 பொள்ளாச்சி அருகே காகங்கள் வேட்டையாடப்பட்டது ஏன்? - எச்சரிக்கும் மருத்துவர்கள்21 மார்ச் 2023 பாலியல் தொழிலாளியாக இருந்த திருநங்கை அலிஷா வாழ்க்கையில் நடந்த திடீர் மாற்றம்20 மார்ச் 2023 வரும் ஆண்டு 1,000 ஹெக்டேர் பரப்பில் முருங்கை சாகுபடி ஊக்குவிக்கப்படுவதோடு, பதப்படுத்துதலுக்கும் மதிப்புக்கூட்டுதலுக்கும் உரிய வசதிகள் ஏற்படுத்தப்படும். முருங்கையில் ஏற்றுமதி வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும் வகையில் இதற்கென 11 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக தக்காளி, வெங்காயம் கிடைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தைப்பு இயந்திரங்கள், சேமிப்புக் கட்டமைப்புகள், அறுவடை இயந்திரங்கள், வெங்காயத்தாள் பிரித்தெடுக்கும் கருவிகள் ஆகிய உதவிகள் வழங்க 29 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வெங்காய வரத்து நிலைப்படுத்தப்படும். தக்காளியின் உற்பத்தித் திறனை அதிகரிக்க, சொட்டு நீர்ப் பாசனம் அமைத்தல், தடுக்கு அமைத்தல், அதிக மகசூல் தரும் இரகங்களைப் பயிரிடுதல், மூடாக்கு இடுதல் போன்ற உத்திகள் ஊக்குவிக்கப்படும். 19 கோடி ரூபாய் நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். வரும் ஆண்டில், பத்து இலட்சம் குடும்பங்களுக்கு மா, கொய்யா, பலா, நெல்லி, எலுமிச்சை, சீதாப்பழம் போன்ற பல்லாண்டு பழச் செடிகள் அடங்கிய தொகுப்பு 15 கோடி ரூபாய் நிதியில் வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திலும், 300 குடும்பங்களுக்கு இத்தொகுப்புகள் வழங்கப்படும். 150 முன்னோடி விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கென மத்திய, மாநில அரசு நிதியிலிருந்து மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். Twitter பதிவை கடந்து செல்ல, 4 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 4 வரும் ஆண்டில் வேளாண் இயந்திரங்கள், மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள், கரும்பு சாகுபடிக்கு ஏற்ற இயந்திரங்கள், கிராம அளவிலான வேளாண் இயந்திர வாடகை மையங்கள் ஆகியவற்றுக்காக மத்திய, மாநில அரசின் நிதியிலிருந்து 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதோடு பயனாளிகள் தேர்வும் கணினிமயமாக்கப்படும். காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 22 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உள்ள 27 சேமிப்புக் கிடங்குகளில் 34,000 மெட்ரிக் டன் கொள்ளளவு ஏற்படும் வகையில், வரும் ஆண்டில் 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மறு கட்டமைப்பு மேற்கொள்ளப்படும். வரும் ஆண்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகளான குடிநீர், கழிப்பறை வசதி, கடைகள் புனரமைப்பு, நடைபாதை வசதிகள் போன்ற பணிகள் ஒன்பது கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். மேலும், 50 உழவர் சந்தைகளுக்கு 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி, உணவு பாதுகாப்புத் தர நிர்ணய ஆணையத்தின் சான்று (FSSAI Certificate) பெற வரும் ஆண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கோயம்புத்தூர் வளாகத்தில் உள்ள பூச்சிகள் அருங்காட்சியகத்தை மெருகேற்றவும், மேம்படுத்தவும், மேலும் கட்டமைப்புகளை உருவாக்கவும் மூன்று கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 2022-23 ஆம் ஆண்டில் இது வரை 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 12,648 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் 14,000 கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும். அதேபோல் ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கூட்டுறவு கடனாக 1,500 கோடி ரூபாய் அளவில் வழங்கப்படும். வரும் ஆண்டில் காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்களில் தூர்வாரும் பணிகள் 90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ’மதி-பூமாலை’ வளாகத்திலும் சிறுதானியங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காக, சிறுதானிய சிற்றுண்டி உணவகம் (Millet Cafe) உருவாக்கப்படும். Twitter பதிவை கடந்து செல்ல, 5 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 5 2023-24 ஆம் ஆண்டில் வேளாண்மை, அதன் தொடர்புடைய துறைகளான கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை, எரிசக்தி, ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவு, உணவுத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, பட்டு வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் மானிய கோரிக்கைகளின் கீழ் 38 ஆயிரத்து 904 கோடியே 46 லட்சத்து ஆறு ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்றைய வேளாண் நிதி நிலை அறிக்கையில் இலக்கியத்திலிருந்து பல்வேறு மேற்கோள்கள் இடம்பெற்றிருந்தன. தமிழ் இலக்கிய மேற்கோள்கள் உட்பட கலீல் ஜிப்ரான், சேக்ஸ்பியர் உள்ளிட்ட சர்வதேச கவிஞர்களிடமிருந்தும் மேற்கோள்காட்டிப் பேசினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். https://www.bbc.com/tamil/articles/cye4d4jwgn1o
    • பையன் நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன். சரி,  மேற்குலக நாடுகளின் இந்த பாரபட்சமான அணுகு முறைக்கு எதிர்பபு தெரிவித்து புலம் பெயர் தமிழராகிய நாங்கள் அனைவரும் மேற்கத்தய நாடுகளில் இருந்து வெளிநடப்பு செய்து, ரஷ்யா, வட கொரியா போன்ற நாடுகளில் குடிபெயரும் ஒரு போராட்டத்தை தொடங்கினால், அதற்கு ஆதரவாக அதை நடைமுறையில் செய்ய குறைந்தது யாழ் இணைய உறுப்பினர்களாகிய நாமாவது தயாரா நண்பா?  ஒப்பீட்டு ரீதியில் ரஷ்யா போன்ற நாடுகளை விட மனித உரிமைகளும் ஜனநாயக விழுமியங்களும் பேணப்படுவதால் தானே லட்சக்கணக்கான தமிழர்கள் இங்கு புலம் பெயர்ந்து அடுத்த தலைமுறையை கூட உண்டாக்கி அந்த தலைமுறை இங்கு மேற்கு நாடுகளில் உயர் பதவிகளில் கூட இருக்கின்றனரே! 
    • இந்த மா ஸ்காபாரோவில்  எங்கு எடுக்கலாம்.? நில்மினி உங்களுக்கு எங்கு இருந்து தருவிக்கிறார்கள்.  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.