Jump to content

கோட்டா அமெரிக்கா பயணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

துபாய் என்று சொல்கிறார்கள். துபாய், அமெரிக்கா வாழும் நம் கள உறவுகள் உறுதிப்படுத்தலாம். 

சாத்தான்… துபாய் என்றால், ஷேக்கு மார்களை காணவில்லை.
ஆன படியால் இது அமெரிக்கா போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

சாத்தான்… துபாய் என்றால், ஷேக்கு மார்களை காணவில்லை.
ஆன படியால் இது அமெரிக்கா போலுள்ளது.

சுற்றுலாப்பயணிகள் கூடும் இடம்போலுள்ளது. கோஷான், வன்னியருக்கு ஒருவேளை தெரிந்திருக்கும். அண்மையில் அமெரிக்காவில் பனிப்புயல் என்று அறிந்தேன், ஆனால் இந்தப்படத்திலுள்ளவர்கள் கோடைகால உடையோடு காணப்படுகிறார்கள் சிறி. அவர்கள் எங்கேயிருந்தாலும்   கண்டம் ஒன்று எங்களைவிட்டு கடந்துபோனதில் சந்தோஷமே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டுபாய் விமான நிலையத்தில் கோட்டாபயவுக்கு ஏற்பட்ட நிலைமை

8.jpg

டுபாய் விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாய் விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனையத்தை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

இது தொடர்பான தொகையை கோட்டாபய ராஜபக்ஷ செலுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இலங்கை நாணயத்தில் 260,000 ரூபாவை செலுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

https://akkinikkunchu.com/?p=234029

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

டுபாய் விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனையத்தை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

அரசியலில் இருந்து எல்லா சுகங்களையும், வரப்பிரசாதங்களையும் இலவசமாக அனுபவித்த விதம் போற இடங்களிலும் எதிர்பார்க்குது, இல்லையென்றால் வாய்விட்டுகேக்குது. தன் மக்களின் வரிப்பணத்தை எங்கிருந்தோ வந்த ஒருவர் அனுபவிக்க அவர்கள் அனுமதிப்பார்களா? இதிலிருந்தே இவர்களின் செல்வாக்கையும், வசதிகளையும் உலகம் அறிந்துகொள்ளும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் எமிரேட்ஸ் பிசினஸ் கிளாஸ்(Bushiness Class) லவுஞ்சில் பயணத்திற்கு முன் ஓய்வெடுத்திருக்கிறேன். வசதிகள், உணவுகள் மிக நன்றாக இருக்கும். ஆனால் கட்டணம் மிக அதிகம்.

கீழுள்ள அட்டவணையை பார்த்தால் புரியும்.

முதல் தர (First Class) வகுப்பென்றால் அமெரிக்க நாணயப்படி ஒரு ஆளுக்கு $300 கட்டணம் செலுத்த வேண்டும். இது இலங்கை நாணயத்தில், ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கணக்கீடு சொல்கிறது. 😲

https://www.emirates.com/ae/english/experience/our-lounges/paid-lounge-access/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

 

டுபாய் விமான நிலையத்தின் விசேட பிரமுகர் முனையத்தை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

இது தொடர்பான தொகையை கோட்டாபய ராஜபக்ஷ செலுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இலங்கை நாணயத்தில் 260,000 ரூபாவை செலுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலவசம் என்றால்... வாயை பிளந்து கொண்டு நிற்பார்கள்.
சொகுசு பயணம் வேண்டுமென்றால்... சொந்தக் காசில் 
அந்த இரண்டரை லட்சம் ரூபாவை கட்டி போகிறதுதானே.
பிறகேன் மற்றவனிடம், பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கிறார்கள்.
சொகுசும் வேணும், அதுகும்... ஓசியிலை வேணுமாம். பைத்தியக்காரங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

சொந்தக் காசில் 
அந்த இரண்டரை லட்சம் ரூபாவை கட்டி போகிறதுதானே.

முந்தியென்றால் மக்கள் வரிப்பணத்தில், கொள்ளையடிச்ச பணத்தில கேள்வியே கேக்காமல் அள்ளி வீசிவிட்டு போயிருப்பார். அதெல்லாத்தையும் பயத்தில, அவசரத்தில விட்டிட்டு இவர் ஓட, போராட்டக்காரர் கைப்பற்றி நீதிமன்றத்திடம் கையளிச்சாச்சு. இனி எங்கிருந்து வரும் பணம்? அரசியல்வாதிகளின் தனிச் சிறப்புச் சலுகையும் கிடையாது ராஜினாமா செய்திட்டார். "கேடுவரும் பின்னால் மதிகெட்டு வரும் முன்னால்" பிறந்த நாட்டில் பதவியிழந்து அந்நியர் போல வாழப்பிடிக்கேல, அரசியலை நம்பி  குடியுரிமை கொடுத்த நாட்டையும் துறந்து இப்போ போக முடியேல. இப்போ சொந்தப்பணமுமில்லை, அரசியல் சொகுசுமில்லை. பேசிய பேச்சென்ன, விட்ட சவாலென்ன, கட்டிய அறைகளென்ன, கூடிய கூட்டமென்ன, முறுக்கிய முஸ்டியென்ன? அத்தனையும் கைவிட்டு நிக்கதியில். இனிவருங்காலங்களில் சொந்தநாட்டிலேயோ, வெளிநாட்டிலேயோ கைதும் செய்யப்படலாம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

முந்தியென்றால் மக்கள் வரிப்பணத்தில், கொள்ளையடிச்ச பணத்தில கேள்வியே கேக்காமல் அள்ளி வீசிவிட்டு போயிருப்பார். அதெல்லாத்தையும் பயத்தில, அவசரத்தில விட்டிட்டு இவர் ஓட, போராட்டக்காரர் கைப்பற்றி நீதிமன்றத்திடம் கையளிச்சாச்சு. இனி எங்கிருந்து வரும் பணம்? அரசியல்வாதிகளின் தனிச் சிறப்புச் சலுகையும் கிடையாது ராஜினாமா செய்திட்டார். "கேடுவரும் பின்னால் மதிகெட்டு வரும் முன்னால்" பிறந்த நாட்டில் பதவியிழந்து அந்நியர் போல வாழப்பிடிக்கேல, அரசியலை நம்பி  குடியுரிமை கொடுத்த நாட்டையும் துறந்து இப்போ போக முடியேல. இப்போ சொந்தப்பணமுமில்லை, அரசியல் சொகுசுமில்லை. பேசிய பேச்சென்ன, விட்ட சவாலென்ன, கட்டிய அறைகளென்ன, கூடிய கூட்டமென்ன, முறுக்கிய முஸ்டியென்ன? அத்தனையும் கைவிட்டு நிக்கதியில். இனிவருங்காலங்களில் சொந்தநாட்டிலேயோ, வெளிநாட்டிலேயோ கைதும் செய்யப்படலாம். 

அவர் அமெரிக்கா போகும் முன், அளித்த கடைசி பேட்டியில்...
தான், தமிழ் மக்களுக்கு தீர்வு கொடுக்க தயாராக இருந்ததாகவும்,
தமிழ் தலைமைகள்... தன்னில்   நம்பிக்கை வைக்கவில்லை என, 
போற போக்கில்... அடித்து விட்டுட்டுத்தான், விமானம் ஏறினவர்.  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

அவர் அமெரிக்கா போகும் முன், அளித்த கடைசி பேட்டியில்...
தான், தமிழ் மக்களுக்கு தீர்வு கொடுக்க தயாராக இருந்ததாகவும்,
தமிழ் தலைமைகள்... தன்னில்   நம்பிக்கை வைக்கவில்லை என, 
போற போக்கில்... அடித்து விட்டுட்டுத்தான், விமானம் ஏறினவர்.  😂

தமிழ் மக்களுக்கு அறணைப்புத்தி என்று எல்லோருக்கும் தெரியும். விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம், அவர்களுக்கு அரசியல் தீர்வு என்கிற பேச்சுக்கே இடமில்லை, விரும்பினால் இந்தநாட்டில் அவர்கள்  இருக்கலாம் அரசியல் தீர்வென்று கேட்கமுடியாது என்று சொன்ன வாய் எந்த வாய்? ராஜ பக்ஸ குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் நாமல் உட்பட பதவியிழந்த பின் வைக்கும் குற்றச்சாட்டு; தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க தாம் (ராஜ பக்ஷக்கள்) தயாராக இருந்ததாகவும் கூட்டமைப்பினரே பின்னடித்ததாகவும், வேறு சிங்கள அரசியல்வாதிகளும் இதையே கூறுகின்றனர் அதாவது "த. தே. கூட்டணி சரியான அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை, தமிழ் மக்களுடைய பிரச்சனையைப்பற்றி அவர்களுக்கு உண்மையான அக்கறையில்லை, அவர்கள்  சுய அரசியல் லாபம் தேடுகின்றனர்." இவர்களோ மௌனம் சாதிக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

தமிழ் மக்களுக்கு அறணைப்புத்தி என்று எல்லோருக்கும் தெரியும். விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம், அவர்களுக்கு அரசியல் தீர்வு என்கிற பேச்சுக்கே இடமில்லை, விரும்பினால் இந்தநாட்டில் அவர்கள்  இருக்கலாம் அரசியல் தீர்வென்று கேட்கமுடியாது என்று சொன்ன வாய் எந்த வாய்? ராஜ பக்ஸ குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் நாமல் உட்பட பதவியிழந்த பின் வைக்கும் குற்றச்சாட்டு; தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க தாம் (ராஜ பக்ஷக்கள்) தயாராக இருந்ததாகவும் கூட்டமைப்பினரே பின்னடித்ததாகவும், வேறு சிங்கள அரசியல்வாதிகளும் இதையே கூறுகின்றனர் அதாவது "த. தே. கூட்டணி சரியான அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை, தமிழ் மக்களுடைய பிரச்சனையைப்பற்றி அவர்களுக்கு உண்மையான அக்கறையில்லை, அவர்கள்  சுய அரசியல் லாபம் தேடுகின்றனர்." இவர்களோ மௌனம் சாதிக்கிறார்கள். 

உங்களுக்கு தீர்வு குடுக்க ஆசையெண்டால் குடுத்திட்டுப் போய்க்கொண்டே இருக்க வெண்டியதானே கூட்டமைப்பைப் பற்றி உங்களுக்கென்ன கவலை. கேட்கிறவன் எல்லாம் கேனையன் எண்டநினைப்பு

2 hours ago, satan said:

தமிழ் மக்களுக்கு அறணைப்புத்தி என்று எல்லோருக்கும் தெரியும். விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம், அவர்களுக்கு அரசியல் தீர்வு என்கிற பேச்சுக்கே இடமில்லை, விரும்பினால் இந்தநாட்டில் அவர்கள்  இருக்கலாம் அரசியல் தீர்வென்று கேட்கமுடியாது என்று சொன்ன வாய் எந்த வாய்? ராஜ பக்ஸ குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் நாமல் உட்பட பதவியிழந்த பின் வைக்கும் குற்றச்சாட்டு; தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க தாம் (ராஜ பக்ஷக்கள்) தயாராக இருந்ததாகவும் கூட்டமைப்பினரே பின்னடித்ததாகவும், வேறு சிங்கள அரசியல்வாதிகளும் இதையே கூறுகின்றனர் அதாவது "த. தே. கூட்டணி சரியான அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை, தமிழ் மக்களுடைய பிரச்சனையைப்பற்றி அவர்களுக்கு உண்மையான அக்கறையில்லை, அவர்கள்  சுய அரசியல் லாபம் தேடுகின்றனர்." இவர்களோ மௌனம் சாதிக்கிறார்கள். 

உங்களுக்கு தீர்வு குடுக்க ஆசையெண்டால் குடுத்திட்டுப் போய்க்கொண்டே இருக்க வெண்டியதானே கூட்டமைப்பைப் பற்றி உங்களுக்கென்ன கவலை. கேட்கிறவன் எல்லாம் கேனையன் எண்டநினைப்பு

  • Like 1
Link to comment
Share on other sites

டுபாய் விமான நிலையத்தில் கோட்டாவுக்கு சிக்கல்!

டுபாய் விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாய் விமான நிலையத்தின் விசேட விஐபி முனையத்தை இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்திருந்தனர்.

இது தொடர்பான தொகையை கோட்டாபய செலுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இலங்கை நாணயத்தில் 260,000 ரூபாவை செலுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://thinakkural.lk/article/231138

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாணத்தில்260,000 ரூபா கோட்டபாயவுக்கு பாரிய பிரச்சனையாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, nunavilan said:

டுபாய் விமான நிலையத்தில் கோட்டாவுக்கு சிக்கல்!

டுபாய் விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாய் விமான நிலையத்தின் விசேட விஐபி முனையத்தை இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்திருந்தனர்.

இது தொடர்பான தொகையை கோட்டாபய செலுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இலங்கை நாணயத்தில் 260,000 ரூபாவை செலுத்துமாறு விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://thinakkural.lk/article/231138

இதென்ன செய்தி? ஊகம் போல உள்ளதே...

நான், இலங்கை ஜனாதிபதியாக இருந்தவர். எனக்கு, இந்த VIP lounge பயன்படுத்த முடியுமா என்று விசாரிக்க, இல்லை பயன்படுத்துவதால் நீங்கள் இவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள்.

அவர்கள் சொல்லி இருக்க கூடிய பணத்தினை, இலங்கை நாணயத்தில் மாத்தி சொல்லி இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

டுபாய் விமான நிலையத்தின் விசேட விஐபி முனையத்தை இலவசமாகப் பயன்படுத்த அனுமதிக்குமாறு கோட்டாபய ராஜபக்கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அந்த கோரிக்கையை டுபாய் அதிகாரிகள் நிராகரித்திருந்தனர்.

மொழி புரிதலில் ஏற்பட்ட தவறாய் இருக்குமோ? செய்தி சேகரித்தவருக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாதவூரான் said:

உங்களுக்கு தீர்வு குடுக்க ஆசையெண்டால் குடுத்திட்டுப் போய்க்கொண்டே இருக்க வெண்டியதானே கூட்டமைப்பைப் பற்றி உங்களுக்கென்ன கவலை. கேட்கிறவன் எல்லாம் கேனையன் எண்டநினைப்பு

தேவையென்றால்; கூட்டமைப்பை கூட்டியணைப்பது, தேவை முடிந்தால் மாட்டிவிடுவது. அதெப்படி .... சேர்ந்து விளையாடியவர்களை விட்டிட்டு தான் மட்டும் தோல்வியில் பங்கெடுப்பது, பழிசுமப்பது அதுதர்மமாகாது! நாங்கள் மக்களை நம்பி களமிறக்கினோம், அவர்கள் விளையாடிவிட்டு இவர்களுக்கு களமே இல்லாமல் செய்கிறார்கள், அரசியல் தர்மம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, satan said:

முந்தியென்றால் மக்கள் வரிப்பணத்தில், கொள்ளையடிச்ச பணத்தில கேள்வியே கேக்காமல் அள்ளி வீசிவிட்டு போயிருப்பார். அதெல்லாத்தையும் பயத்தில, அவசரத்தில விட்டிட்டு இவர் ஓட, போராட்டக்காரர் கைப்பற்றி நீதிமன்றத்திடம் கையளிச்சாச்சு. இனி எங்கிருந்து வரும் பணம்?

சொந்தப் பணம் இல்லாமல் அல்ல. இது போன்ற ஆடம்பரங்களை ஏன் சொந்தப்பணத்தில் செய்ய வேண்டும் என்ற தொலைநோக்குச் சிந்தனையின் விளைவு. அதைவிட அவர்களிடம் இல்லாத பணமா? ராயபக்ச அன்ட் கொம்பனி மற்றும் சக கொம்பனிகளின் முதலீடுகளை சிறிலங்கா அரசு என்ன முடக்கியாவிட்டது. சும்மா நாடகம் ஆடுகிறார்கள். அவர்கள் 15 -20 ஆண்டுகளுக்குள் அரசின் உயரடுக்குப் பதவிகளிலும், 80வீதத்துக்கு மேற்பட்ட அரச நிறுவனங்களில் தமது உறவுகளையும்  கொண்டவர்கள் மட்டுமன்றித் தனியார் நிறுவனங்களிற் பங்குதாரர்களாகவும் இருந்தவர்களிடம் இல்லாத செல்வமா? வன்னியிற் தமிழீழ நடைமுறை அரசினது வைப்பகத்தில் இருந்து கையகப்படுத்திய வெளிநாட்டுப் பணமுட்பட தங்க ஆபரணங்களின் கணக்கே காட்டப்படவில்லை. 

 பலவீனமான நாடுகளைச் சுரண்டலுக்கேற்ப வளைத்தெடுத்தல் அல்லது முறித்துவிடுதல் என்பதே  கோட்பாடு என்ற அமெரிக்காவினது சனநாயகத்தை உலகமே அறிந்ததுதானே. இதில் கோத்தாவையும் தேவைக்கேற்ப கையாளும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கோட்டாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது.

பயணிகளின் Lounge ற்கு போவதற்கு பயம், அதனாலேயே அரசியல்வாதிகள் Celebrities பயன்படுத்தும் Lounge ஐ கேட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, road and text

 🙂எப்படி  இருந்த  நான்... இப்படி ஆயிட்டேன். - கோத்தா.-  🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சுவார்ஷ்யமான செய்தி படித்தேன். கோத்தா நாடில்லாமல் அந்தரிக்கிறாராம் அமெரிக்கா கருணை காட்டவேண்டுமாம்! பிறந்த நாடு, ஆண்டு அதிகாரம் செலுத்திய நாடு, சொத்து சுகம் உறவுகள் சூழ உள்ள நாடு, யாரும் அவரை விரட்டவில்லை, தானே முடிவெடுத்து வெளியேறினார். பாருங்கள் காலம் எங்கே கொண்டுவந்து விட்டிருக்கு! பாரம்பரியமாக வாழ்ந்த மக்களை அதிகார செருக்கினால் நாட்டை விட்டு விரட்டினார், அது அவர்களுக்கு சொந்தமானதில்லை என்று முழங்கினார். இன்று அந்நிய நாட்டிடம் தங்க இடம் கேட்டு காத்திருக்கிறார். விடுமுறையில் சென்றார் என்கிறது ஒரு செய்தி, நாடில்லாமல் அந்தரிக்கிறார் என்கிறது வேறொரு செய்தி. இவருக்கு அமெரிக்கா விஷா கொடுத்தாலும் நிம்மதியாக இருப்பாரா என்பது அடுத்த கேள்வி. இருப்பதெல்லாம் இழந்து, இன்று நம் பெற்றோர் தெருவில் நிற்பது போல் நிலையும் வரலாம் யார் கண்டா விதியின் விளையாட்டை? "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துபாய் சென்றுள்ள கோட்டாபய நாடு திரும்பும் திகதி தொடர்பில் வெளியான தகவல்!

By Digital Desk 5

03 Jan, 2023 | 12:06 PM
image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை மீளப்பெற விண்ணப்பித்துள்ளதாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அவர் கடந்த  ஜூலையில் நாட்டை விட்டு வெளியேறி  சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர்  நாடு திரும்பினார்.

பின்னர் அவர் சமீபத்தில் துபாய் நாட்டுக்குச்  சென்றுள்ள  நிலையில், குடியுரிமையை தொடர்பான அவரது கோரிக்கையை அமெரிக்கா  இதுவரை பரிசீலிக்கவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவிக்கையில்,

'முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அமெரிக்க குடியுரிமையை மீளப்பெறுவதற்கான எந்தக்   கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. கோட்டாபய ராஜபக்க்ஷவும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் துபாய் சென்றுள்ளனர். இந்நிலையில்    இம்மாதம் 6 அல்லது 7 ஆம் திகதி அவர்  நாடு திரும்புவார்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

 

https://www.virakesari.lk/article/144827

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப்பணமே என்கின்றார் கோட்டா !!

அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்தார் கோட்டா !!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் எந்த நாட்டிலும் புகலிடம் கிடைகாதமை காரணமாக அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அமெரிக்க அரசாங்கம் இன்னும் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் கோட்டபாய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1318449

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  இது, 26.12.2022´ல்  வந்த செய்தி. 👇

குடும்ப உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்கு பயணம்!

குடும்ப உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்கு பயணம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள்  அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று (திங்கட்கிழமை) இவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே.- 649 என்ற விமானம் மூலம் அதிகாலை 02.55 க்கு பயணமாகியுள்ளனர்.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மனைவி அயோமா ராஜபக்ஷ, மருமகள் செவ்வந்தி ராஜபக்ஷ, மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் பேரக் குழந்தைகள் ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1317405

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா செல்ல முயன்ற, கோத்தா... இடையில் நின்றது ஏனோ. 
இவர்... விசா இல்லாமல், செல்ல முயற்சித்து இருக்க மாட்டார்.
துபாயில் நிற்கும் போது... இவர் அமெரிக்காவில் கைது செய்யப்படலாம் 
என்ற தகவல் கிடைத்திருக்கலாம் என்பது
எனது ஊகம்.
அதனால்... நாட்டுக்கு திரும்புகின்றார் என நினைக்கின்றேன்.

புது மொழி: 
"கற்றவனுக்கு... சென்ற இடம் எல்லாம் சிறப்பு, 
கோத்தாவுக்கு.. சென்ற இடம் எல்லாம் செருப்பு."  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலையாளி உல்லாச பயணம்! சிங்கள தேசம் ஒன்று சேர்ந்து காப்பாற்றியிருக்கிறது! தேசத்தின் மீதுள்ள இயற்கையின் சாபம் எப்படி தீரும்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/12/2022 at 07:31, தமிழ் சிறி said:

ஷேக்கு மார்களை காணவில்லை.

அதான் பெரிய உடுப்பா போட்டு மறைச்சிருக்காங்க இல்ல. எப்படி தெரியும்?🤣

2 hours ago, தமிழ் சிறி said:

அமெரிக்கா செல்ல முயன்ற, கோத்தா... இடையில் நின்றது ஏனோ. 
இவர்... விசா இல்லாமல், செல்ல முயற்சித்து இருக்க மாட்டார்.
துபாயில் நிற்கும் போது... இவர் அமெரிக்காவில் கைது செய்யப்படலாம் 
என்ற தகவல் கிடைத்திருக்கலாம் என்பது
எனது ஊகம்.
அதனால்... நாட்டுக்கு திரும்புகின்றார் என நினைக்கின்றேன்.

புது மொழி: 
"கற்றவனுக்கு... சென்ற இடம் எல்லாம் சிறப்பு, 
கோத்தாவுக்கு.. சென்ற இடம் எல்லாம் செருப்பு."  😂

டுபாய்க்கு கிரிஸ்மஸ் சொப்பிங் போனதை, ஊடகங்களும், ஆய்வாளரும் சேர்ந்து அமெரிக்கா போறார், யுரேனஸ் போறார் எண்டு வசந்திய கிளப்பி விட்டிருக்கானுவோ?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
    • தேர்தல் வருகின்றது என்பதற்காகவா.............🙃.........சரத் வீரசேகர உட்பட இன்னும் பலர் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்களே. நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல் முறை என்று நினைக்கின்றேன். தேர்தல் முடிந்த பின், இவருக்கு ஒரு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் திட்டமும் இருக்கலாம். அமெரிக்கா, இந்தியா, இலங்கை - இந்த மூன்று இடங்களில் இருந்து வரும் அரசியல் செய்திகள் ஒரே மாதிரியே இருக்கின்றன......😀
    • ஸ்கன்டினேவிய நாடுகளில் மத ரீதியாக பதற்றத்தை ஏற்படுத்தும் புட்டினின் முயற்சியாக இருக்குமோ?  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.