Jump to content

ஈழத் தமிழரின் அபிலாசைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு பேரத்தில் negotiation இல் இரு தரப்புக்கும் இரு விடயங்கள் இருக்கும்.

1. நிலை position

2. நலன் interest

உதாரணம்:

ஐந்து ரொட்டி துண்டுகளும் மூன்று கோப்பை நீரும் இருக்கிறது.

இருவர் இதற்கு அடிபடுகிறார்கள்.

இங்கே இருவரின் நிலை : ஐந்து ரொட்டியும், மூன்று கோப்பை நீரும் எனக்கே வேண்டும்.

ஆனால்,

உண்மையில் முதலாமவருக்கு பசிக்கிறது ஆனால் அதிக தாகமில்லை

இரெண்டாமவருக்கு அதிக தாகம், குறைவான பசி.

இங்கே,

முதலாமவரின் நிலை : எனக்கு 5 ரொட்டி+3 கோப்பை நீர் வேண்டும்

முதலாமரின் நலன் : 3 ரொட்டி+1 கோப்பை நீரில் அவர் பசியாறி, தாக சாந்தியும் ஆகி விடுவார்.

இரெண்டாமவரின் நிலை: எனக்கு 5 ரொட்டி+3 கோப்பை நீர் வேண்டும்

இரெண்டாமவரின் நலன்: 2 ரொட்டி+2 கோப்பை நீருடன் இவரும் பசியாறி, தாகசாந்தி அடைந்து விடுவார்.

இங்கே இருவரும் அவரவர் நிலைகளை அடைய வேண்டும் என்றால் பேரம் படியாது.

ஆனால் நலன்களை அடைய வேண்டும் என்றால் பேரம்படியும்.

இதை நலன்சார் முறுகல் முடிப்பு interest based dispute resolution என்பார்கள்.

இப்போ எமது பிரச்சினைக்கு வருவோம்.

ஈழத் தமிழராகிய நமது நெடிய 75 வருட கால போராட்டத்தில் எமது

1. நிலைகள் என்ன?

2. நலன்கள் என்ன ?

அதேபோல் இலங்கையின்

1. நிலைகள் என்ன?

2. நலன்கள் என்ன ?

 

  • Like 9
Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Sasi_varnam

கோஷன்... உங்களை போல ஆழமான அரசியல் பார்வை இல்லை என்ற "டிஸ்கிளேய்மரோடு" மனதில் பட்டத்தை இங்கே எழுதுகிறேன்.  தமிழர் நிலைகளாக நான் பார்ப்பது:  1. சுதந்திர தமிழீழம் - தனிநாடு - [பேரச்சிக்கல் கொண்டது

goshan_che

நன்றி சசி.  எனது அடுத்த பதிவை உங்கள் பதிவில் இருந்து தொடர்வது பொருத்தமாக இருக்கும் என்பதால் - தொடர்கிறேன். அடுத்து என் பார்வையில் எமது நலன்கள் என்றால் என்ன என பார்க்கும் முன், நிலை, நலன் என்

goshan_che

🤣 நன்றி அண்ணை.  இவை எமது நிலைகள். ‘48 முதல் எமது தலைவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் கோரி வந்த வேறுபட்ட “தீர்வுகள்”. நீங்கள் சொன்னது போல் அவர்கள் 75 ஆண்டுகளாய் கதவே திறக்காத கோரிக்கைகள்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கேள்விகள் கோஷன், நேரம் எடுத்து, நாம் எதிர்நோக்கும் அரசியல் அகச்சூழல் /புறச்சூழல் மனதில் கொண்டு யதார்த்தமாக  பதில் எழுதவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Sasi_varnam said:

அருமையான கேள்விகள் கோஷன், நேரம் எடுத்து, நாம் எதிர்நோக்கும் அரசியல் அகச்சூழல் /புறச்சூழல் மனதில் கொண்டு யதார்த்தமாக  பதில் எழுதவேண்டும். 

தயவு செய்து எழுதவும்🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் நிலைகள்

1. சம மொழி அந்தஸ்து ( Parity of  languages)

2. 50:50

3. வடக்கு-கிழக்கு இணைப்பு

4. தனிநாடு

5. பிரிந்து  போகும் உரிமை உள்ள சுயநிர்ணயம்

6. சமஸ்டி

7. பிரிந்து போகா உரிமையுள்ள சுய நிர்ணயம்

 

வேறு ஏதேனும்?

 

 

Edited by goshan_che
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

தமிழரின் நிலைகள்

1. சம மொழி அந்தஸ்து ( Parity of  languages)

2. 50:50

3. வடக்கு-கிழக்கு இணைப்பு

4. தனிநாடு

5. பிரிந்து  போகும் உரிமை உள்ள சுயநிர்ணயம்

6. சமஸ்டி

7. பிரிந்து போக உரிமையுள்ள சுய நிர்ணயம்

 

வேறு ஏதேனும்?

 

 

நீங்கள் குறிப்பிட்ட ஏழு விடயங்களை பார்த்தால் கதவே திறக்கமாட்டார்கள். 😁

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

தமிழரின் நிலைகள்

1. சம மொழி அந்தஸ்து ( Parity of  languages)

2. 50:50

3. வடக்கு-கிழக்கு இணைப்பு

4. தனிநாடு

5. பிரிந்து  போகும் உரிமை உள்ள சுயநிர்ணயம்

6. சமஸ்டி

7. பிரிந்து போக உரிமையுள்ள சுய நிர்ணயம்

 

வேறு ஏதேனும்?

 

 

தமிழகத்தோடு இணைதல்! 🤭

(இது உங்களுக்கு தோன்றவே இல்லையா?)😜 so sad dear! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் குறிப்பிட்ட ஏழு விடயங்களை பார்த்தால் கதவே திறக்கமாட்டார்கள். 😁

🤣

நன்றி அண்ணை. 

இவை எமது நிலைகள்.

‘48 முதல் எமது தலைவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் கோரி வந்த வேறுபட்ட “தீர்வுகள்”.

நீங்கள் சொன்னது போல் அவர்கள் 75 ஆண்டுகளாய் கதவே திறக்காத கோரிக்கைகள்.

ஆனால் - இவை மூலம் நாம் அடைய முனைந்த, முனையும் நலன்கள் என்ன?

என்பதுதான் பெரிய கேள்வி.

எனக்கும் இந்த நலன்கள் பற்றி ஒரு அறுதியான முடிவு இல்லை.

இந்த திரியில் எல்லாருடனும் சேர்ந்து கதைப்பதால் - இதற்கு ஒரு விடையை கண்டால் - நிலைகளை வற்புறுதாமல் நலன்களை அடையலாமா? என்றே யோசிக்கிறேன்.

33 minutes ago, ராசவன்னியன் said:

தமிழகத்தோடு இணைதல்! 🤭

(இது உங்களுக்கு தோன்றவே இல்லையா?)😜 so sad dear! 

🤣 முன்பே சொல்லி உள்ளேன் - be careful with what you wish for, for it may be granted 🤣.

எங்களோடு சேர்ந்து விட்டு, இவனுகளுக்கு பானிபூரி வாயனுகளே தேவல எண்டு நினைக்கும் படி ஆகலாம்.

பகிடிக்கு அப்பால்,

இந்தியாவின் அங்கமான தமிழகத்தோடு இணைய வேண்டும் என்பது ஒரு போதும் ஈழ தமிழரின் நிலைப்பாடாக இருந்ததில்லை. இப்போதும் இல்லை. 1% பேர் கூட இந்த நிலையில் இருப்பதாக நான் கருதவில்லை.

தமிழ் நாடு தனி நாடாகினால் இந்த % உயர கூடும்.

Edited by goshan_che
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

நன்றி அண்ணை. 

இவை எமது நிலைகள்.

‘48 முதல் எமது தலைவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் கோரி வந்த வேறுபட்ட “தீர்வுகள்”.

நீங்கள் சொன்னது போல் அவர்கள் 75 ஆண்டுகளாய் கதவே திறக்காத கோரிக்கைகள்.

ஆனால் - இவை மூலம் நாம் அடைய முனைந்த, முனையும் நலன்கள் என்ன?

என்பதுதான் பெரிய கேள்வி.

எனக்கும் இந்த நலன்கள் பற்றி ஒரு அறுதியான முடிவு இல்லை.

இந்த திரியில் எல்லாருடனும் சேர்ந்து கதைப்பதால் - இதற்கு ஒரு விடையை கண்டால் - நிலைகளை வற்புறுதாமல் நலன்களை அடையலாமா? என்றே யோசிக்கிறேன்.

முதலில் சிங்களத்துடன் சார்ந்திருக்கும் தமிழர்களை உருவி வெளியே எடுக்க அரைவாசி பிரச்சனை தீர்ந்தததிற்கு சமன்.

எமது 70 ஆண்டு கால வரலாற்றை உற்று நோக்கினால் அதில் ஒரு தமிழ் ஒட்டுண்ணியாவது சிங்கள இனவாத்தத்துடன் ஒட்டிக்கொண்டு எட்டப்பர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

முதலில் சிங்களத்துடன் சார்ந்திருக்கும் தமிழர்களை உருவி வெளியே எடுக்க அரைவாசி பிரச்சனை தீர்ந்தததிற்கு சமன்.

எமது 70 ஆண்டு கால வரலாற்றை உற்று நோக்கினால் அதில் ஒரு தமிழ் ஒட்டுண்ணியாவது சிங்கள இனவாத்தத்துடன் ஒட்டிக்கொண்டு எட்டப்பர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்.

இது நடக்கின்ற காரியமா அண்ணா. சிங்களத்தின் வெற்றியே இந்த ஒட்டுக்குழுக்களில் தானே தங்கி இருக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

முதலில் சிங்களத்துடன் சார்ந்திருக்கும் தமிழர்களை உருவி வெளியே எடுக்க அரைவாசி பிரச்சனை தீர்ந்தததிற்கு சமன்.

எமது 70 ஆண்டு கால வரலாற்றை உற்று நோக்கினால் அதில் ஒரு தமிழ் ஒட்டுண்ணியாவது சிங்கள இனவாத்தத்துடன் ஒட்டிக்கொண்டு எட்டப்பர் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்.

மூன்று அவதானங்கள்.

1. மேலே நுணா சொல்லி இருப்பதை போல் இது நடவாத காரியம். இவர்கள் இல்லை என்றால் வேறு சிலர்.

2. தவிரவும். இது எமக்கு மட்டும் உரிய பிரச்சனை இல்லை. ஜிகாதி ஜோன் இன்னும் பல உதாரணக்கள் ஏனைய இனங்களிலும் உண்டு.

3. இப்போ இப்படியானவர்கள் உண்மையான மக்கள் ஆதரவில் (டக்லசுக்கு அப்பவே இருந்தது) தான் எம்பி ஆகியுள்ளனர் என்பதையும் நாம் ஏற்க வேண்டும். நம்மை ஒத்த நிலைப்பாட்டில் 80% மக்கள் இருந்தாலும் இந்த 20% த்தை, அதன் பிரதிநிதிகளை இலங்கை தனக்கு சாதகாமகே பயன்படுத்தும்.

ஆனால் ஜனநாயக மரபுப்படி பெரும்பான்மையான தமிழர்கள் தேசிய கட்சிகளுடனேயே என்பதை உலகும், இந்தியாவும் கூட ஏற்கிறன.

இந்த சமநிலை மாறமுன்னம் நாம் ஏதாவது ஒரு கெளரவமான தீர்வை அடைய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோஷன்... உங்களை போல ஆழமான அரசியல் பார்வை இல்லை என்ற "டிஸ்கிளேய்மரோடு" மனதில் பட்டத்தை இங்கே எழுதுகிறேன். 

தமிழர் நிலைகளாக நான் பார்ப்பது: 
1. சுதந்திர தமிழீழம் - தனிநாடு - [பேரச்சிக்கல் கொண்டது]
2. "பிரிந்து  போகும்" உரிமை உள்ள சுயநிர்ணயம் 
3. சமஸ்டி (இணைஆட்சி) 
4. இனவழிப்பு, போர் குற்ற விசாரணையும் தண்டனையும்

5. வெறுங்கையாக இருக்கும் இந்நேரத்தில், இடைக்கால தீர்வாக இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையாக வைத்து (13+/-) ஏதாவது ஒரு சில நலன்களை பெற்றுக்கொள்வது. (ஒரு சில அரசியல்வாதிகளின் எண்ணப்பாடு)   

தமிழர் நலன்களாக நான் பார்ப்பது:
1. தமிழர் அரசியலுக்காக உருவாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பு மென்மேலும் பிரிந்து சிதைந்து போகாமல் ஒற்றுமையாக இணைந்து இன்னும் ஒருவரின் / ஒரு நாட்டின் (அஜெண்டா) அரசியலை கையெடுக்காமல் 40 வருட போராட்ட அரசியலை மையமாக கொண்டு மண்ணுக்கும், மக்களுக்குமாக நேர்மையாக பயணிப்பது. 
2. இனவழிப்பு, போர் குற்ற விசாரணையும் தண்டனையும் - "நல்லிணக்கம்" என்ற சொல்லுக்கு அடிப்படையாக நான் இதை பார்க்கிறேன். 
3. முஸ்லீம் மக்களுடனான சுமூகமான இணைந்த அரசியல் பலம் - இன்றைய நிலையில் மிகவும் அவதானமாக முன்னெடுக்கவேண்டிய ஒரு செயல்பாடு. 
4. வடக்கு-கிழக்கு தமிழர் தாயக இணைப்பு - அடிப்படை நகர்வு, ஆனாலும் முஸ்லீம் மற்றும் கிழக்கு வாழ் மக்களின் மனங்களை வென்று நகர்வுகள் மேற்கொள்ளப்படல் வெண்டும். 
5. பிரிந்து  போகும் உரிமை உள்ள சுயநிர்ணயம் - இங்கே இந்த "பிரிந்து போகும்" என்ற சொல்லாடல் சிக்கலாகவே இருக்கும் எனவே அதை வேறுவிதமாக அரசியல் சொல்லாடலாக பிரயோகிக்கலாம். 
6. சமஸ்டி (இணைஆட்சி) - பெரும்பான்மை சமூகம் இன்றுவரையிலும் இந்த ஆட்சிமுறைமையை கிஞ்சித்தும் பார்த்தது கிடையாது. சர்வதேச அழுத்தங்கள் மூலமே இது சாத்தியமாகலாம்.  
7. மலையக இலங்கை தமிழர் நலன் சார்ந்த அரசியல் முன்னெடுப்பு - சுயநல அரசியல்வாதிகளால் நாதி இழந்து நிட்கும் மக்கள் கூட்டம். இவர்கள் சார்ந்தும் எங்கள் அரசியல் குரல் ஒலிக்கவேண்டும், உதவிகள் விரிவடையவேண்டும்.  
6. சம மொழி அந்தஸ்து (Parity of  languages) - அடிப்படை உரிமை. இதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது. ஆனால் சிங்களம் சரியாக புரிந்து கொள்வதாய் இல்லை. 
 
குறிப்பு:
*** தமிழீழம் என்ற ஒரு தனி நாட்டை நான் மானசீகமாக ஆதரித்து தினம் காணும் கனவாக அதை வரித்துக்கொண்டாலும் இன்றைய யதார்த்த சர்வதேச அரசியல் அதை நோக்கி எம்மை நகர முடியாமல் கட்டிவைத்திருக்கிறது.

*** மலையக மக்களின் அரசியல் அல்லது வாழ்வியல் குறித்து போராடும் இனமான எங்களுக்கு இன்னும் கூட சரியான புரிதல் அல்லது அவர்களுக்கான தார்மீக குரல் அரசியல் ரீதியில் எம்மவர் மத்தியில் இருந்து எழும்பாமல் இருப்பதாக உணர்கிறேன்.

*** இப்போதைக்கு தமிழர்களை கோர்த்துவைத்து இருக்கும் ஓர் நூல் தான் மாவீரர்களின் தியாகங்கள், இதனை அடிப்படியாக கொண்டு எமது அரசியல் முன்நகர்வுகளை மேற்கொள்வது. மீண்டும் மீண்டும் இந்தியாவிடம் போய்  மண்டியிடாமல் ஒரு அரசியல் அணுகுமுறையை கையாள்வது.

Edited by Sasi_varnam
  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2022 at 20:30, goshan_che said:

 

ஒரு பேரத்தில் negotiation இல் இரு தரப்புக்கும் இரு விடயங்கள் இருக்கும்.

1. நிலை position

2. நலன் interest

உதாரணம்:

ஐந்து ரொட்டி துண்டுகளும் மூன்று கோப்பை நீரும் இருக்கிறது.

இருவர் இதற்கு அடிபடுகிறார்கள்.

இங்கே இருவரின் நிலை : ஐந்து ரொட்டியும், மூன்று கோப்பை நீரும் எனக்கே வேண்டும்.

ஆனால்,

உண்மையில் முதலாமவருக்கு பசிக்கிறது ஆனால் அதிக தாகமில்லை

இரெண்டாமவருக்கு அதிக தாகம், குறைவான பசி.

இங்கே,

முதலாமவரின் நிலை : எனக்கு 5 ரொட்டி+3 கோப்பை நீர் வேண்டும்

முதலாமரின் நலன் : 3 ரொட்டி+1 கோப்பை நீரில் அவர் பசியாறி, தாக சாந்தியும் ஆகி விடுவார்.

இரெண்டாமவரின் நிலை: எனக்கு 5 ரொட்டி+3 கோப்பை நீர் வேண்டும்

இரெண்டாமவரின் நலன்: 2 ரொட்டி+2 கோப்பை நீருடன் இவரும் பசியாறி, தாகசாந்தி அடைந்து விடுவார்.

இங்கே இருவரும் அவரவர் நிலைகளை அடைய வேண்டும் என்றால் பேரம் படியாது.

ஆனால் நலன்களை அடைய வேண்டும் என்றால் பேரம்படியும்.

இதை நலன்சார் முறுகல் முடிப்பு interest based dispute resolution என்பார்கள்.

இப்போ எமது பிரச்சினைக்கு வருவோம்.

ஈழத் தமிழராகிய நமது நெடிய 75 வருட கால போராட்டத்தில் எமது

1. நிலைகள் என்ன?

2. நலன்கள் என்ன ?

அதேபோல் இலங்கையின்

1. நிலைகள் என்ன?

2. நலன்கள் என்ன ?

 

இதில் விரிவாக இப்போது எழுத நேரமின்மைக்கு வருந்துகிறேன், ஆனால் சுருக்கமாக:

1. சிறி லங்கா வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கான காட்டாப்பாகத் தான் பேச்சு வார்த்தை முஸ்தீபு செய்கிறது, எனவே தற்போது இருக்கும் சிங்களவரின் Achilles heel வெளிநாட்டு உதவி. முதலிடக் கூடிய தமிழர்கள் அதை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த வேண்டும், ஏனையோர் அமெரிக்கா, ஐ. ஒ ஆகியவை உதவியை உள்நாட்டுத் தீர்வோடு முடிச்சுப் போட வைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

2. இந்தியா எப்போதுமே எங்களோடு சேர்ந்து வரும் ஒரு செய்வினை (ஊர் பாசையில் தரித்திரம்😂!) எப்படியாவது, கை நீளத் தூரத்தில் இந்தியாவை வைத்துக் கொண்டு அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளோடு தமிழர் தலைமைகள் நெருங்க வேண்டும். எப்படி செய்வது இதை என எனக்குத் தெரியாது!

மேலும் உரையாடலாம் பின்னர்!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இதில் விரிவாக இப்போது எழுத நேரமின்மைக்கு வருந்துகிறேன், ஆனால் சுருக்கமாக:

1. சிறி லங்கா வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதற்கான காட்டாப்பாகத் தான் பேச்சு வார்த்தை முஸ்தீபு செய்கிறது, எனவே தற்போது இருக்கும் சிங்களவரின் Achilles heel வெளிநாட்டு உதவி. முதலிடக் கூடிய தமிழர்கள் அதை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்த வேண்டும், ஏனையோர் அமெரிக்கா, ஐ. ஒ ஆகியவை உதவியை உள்நாட்டுத் தீர்வோடு முடிச்சுப் போட வைக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

2. இந்தியா எப்போதுமே எங்களோடு சேர்ந்து வரும் ஒரு செய்வினை (ஊர் பாசையில் தரித்திரம்😂!) எப்படியாவது, கை நீளத் தூரத்தில் இந்தியாவை வைத்துக் கொண்டு அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளோடு தமிழர் தலைமைகள் நெருங்க வேண்டும். எப்படி செய்வது இதை என எனக்குத் தெரியாது!

மேலும் உரையாடலாம் பின்னர்!

நன்றி அண்ணா. நேரம் கிடைக்கும் போது எழுதவும்🙏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் - சே மற்றும் சசிவர்ணம் ஆகியோரால் சுட்டப்படும் சமகால அரசியற் கருத்தாய்வு விடயங்கள் சிறப்பு. ஏனையவர்களது கருத்துகளும் ஏமாற்றங்கள் மற்றும் பட்டறிவின் வழியே மனங்களை ஊடறுத்து நிற்பவையே. யாழ் களத்தினது நோக்குநிலையிலானதொரு திரியாக நகர்கிறது. இவை வெவ்வேறாகவும் தனித்தனியாகவும் பேசப்பட்டாலும், ஒரு விழிப்பு நிலைக்கானதும், கூட்டிணைந்த கருத்தாடலுக்கும், சமகால அரசியற் புரிதலுக்கும் தமிழரது எதிர்கால நலன் நோக்கிலான குறைந்தபட்சத் தெளிவை அடையவும் இதுபோன்ற கருத்தாடல்கள் அவசியமானது.  அனைவருக்கும் நன்றி.


தமிழர்கள் நூறு ஆண்டுகளாகச் சிங்களத் தலைமைகளால் ஏமாற்றப்பட்டுவருகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nochchi said:

கோசான் - சே மற்றும் சசிவர்ணம் ஆகியோரால் சுட்டப்படும் சமகால அரசியற் கருத்தாய்வு விடயங்கள் சிறப்பு. ஏனையவர்களது கருத்துகளும் ஏமாற்றங்கள் மற்றும் பட்டறிவின் வழியே மனங்களை ஊடறுத்து நிற்பவையே. யாழ் களத்தினது நோக்குநிலையிலானதொரு திரியாக நகர்கிறது. இவை வெவ்வேறாகவும் தனித்தனியாகவும் பேசப்பட்டாலும், ஒரு விழிப்பு நிலைக்கானதும், கூட்டிணைந்த கருத்தாடலுக்கும், சமகால அரசியற் புரிதலுக்கும் தமிழரது எதிர்கால நலன் நோக்கிலான குறைந்தபட்சத் தெளிவை அடையவும் இதுபோன்ற கருத்தாடல்கள் அவசியமானது.  அனைவருக்கும் நன்றி.


தமிழர்கள் நூறு ஆண்டுகளாகச் சிங்களத் தலைமைகளால் ஏமாற்றப்பட்டுவருகிறார்கள். 

நன்றி நொச்சி.

இதனால் ஏதும் நன்மை விளையுமா தெரியவில்லை. ஆனால் பலர் கூடி ஆராயும் போது எழுதுபவர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும், நடைமுறை படுத்தும் இடத்தில் இருப்போர்க்கும் ஒரு தெளிவை கொடுக்குமாய் இருந்தால் அதுவே பெரிது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொழி மற்றும் அரசியற் புலமையுள்ள,கடமைஉணர்வோடு இனநலன் நோக்கிச் சிந்திப்போரை இனங்கண்டு ஒருங்கிணைத்துச் சமகாலத்தில் புலத்திலே ஒரு அழுத்தக்குழுவாகச் செயற்பட வைத்தல் குறித்தும் சிந்திக்க வேண்டும். 

1 minute ago, goshan_che said:

நன்றி நொச்சி.

இதனால் ஏதும் நன்மை விளையுமா தெரியவில்லை. ஆனால் பலர் கூடி ஆராயும் போது எழுதுபவர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும், நடைமுறை படுத்தும் இடத்தில் இருப்போர்க்கும் ஒரு தெளிவை கொடுக்குமாய் இருந்தால் அதுவே பெரிது.

சாதாரண மக்களாக இருந்து யாழிலாவது நாம் உரையாடுகின்றோமே. இது குறைந்தபட்சம் களஉறவுகளிடையேயாவது இது குறித்த வாதப்பிரதிவாதங்களை(எழுதாவிட்டாலும்) மனதளவிலாவது ஏற்படுத்தினாற்கூட நன்றே. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2022 at 18:19, Sasi_varnam said:

கோஷன்... உங்களை போல ஆழமான அரசியல் பார்வை இல்லை என்ற "டிஸ்கிளேய்மரோடு" மனதில் பட்டத்தை இங்கே எழுதுகிறேன். 

தமிழர் நிலைகளாக நான் பார்ப்பது: 
1. சுதந்திர தமிழீழம் - தனிநாடு - [பேரச்சிக்கல் கொண்டது]
2. "பிரிந்து  போகும்" உரிமை உள்ள சுயநிர்ணயம் 
3. சமஸ்டி (இணைஆட்சி) 
4. இனவழிப்பு, போர் குற்ற விசாரணையும் தண்டனையும்

5. வெறுங்கையாக இருக்கும் இந்நேரத்தில், இடைக்கால தீர்வாக இலங்கை இந்திய ஒப்பந்த அடிப்படையாக வைத்து (13+/-) ஏதாவது ஒரு சில நலன்களை பெற்றுக்கொள்வது. (ஒரு சில அரசியல்வாதிகளின் எண்ணப்பாடு)   

தமிழர் நலன்களாக நான் பார்ப்பது:
1. தமிழர் அரசியலுக்காக உருவாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பு மென்மேலும் பிரிந்து சிதைந்து போகாமல் ஒற்றுமையாக இணைந்து இன்னும் ஒருவரின் / ஒரு நாட்டின் (அஜெண்டா) அரசியலை கையெடுக்காமல் 40 வருட போராட்ட அரசியலை மையமாக கொண்டு மண்ணுக்கும், மக்களுக்குமாக நேர்மையாக பயணிப்பது. 
2. இனவழிப்பு, போர் குற்ற விசாரணையும் தண்டனையும் - "நல்லிணக்கம்" என்ற சொல்லுக்கு அடிப்படையாக நான் இதை பார்க்கிறேன். 
3. முஸ்லீம் மக்களுடனான சுமூகமான இணைந்த அரசியல் பலம் - இன்றைய நிலையில் மிகவும் அவதானமாக முன்னெடுக்கவேண்டிய ஒரு செயல்பாடு. 
4. வடக்கு-கிழக்கு தமிழர் தாயக இணைப்பு - அடிப்படை நகர்வு, ஆனாலும் முஸ்லீம் மற்றும் கிழக்கு வாழ் மக்களின் மனங்களை வென்று நகர்வுகள் மேற்கொள்ளப்படல் வெண்டும். 
5. பிரிந்து  போகும் உரிமை உள்ள சுயநிர்ணயம் - இங்கே இந்த "பிரிந்து போகும்" என்ற சொல்லாடல் சிக்கலாகவே இருக்கும் எனவே அதை வேறுவிதமாக அரசியல் சொல்லாடலாக பிரயோகிக்கலாம். 
6. சமஸ்டி (இணைஆட்சி) - பெரும்பான்மை சமூகம் இன்றுவரையிலும் இந்த ஆட்சிமுறைமையை கிஞ்சித்தும் பார்த்தது கிடையாது. சர்வதேச அழுத்தங்கள் மூலமே இது சாத்தியமாகலாம்.  
7. மலையக இலங்கை தமிழர் நலன் சார்ந்த அரசியல் முன்னெடுப்பு - சுயநல அரசியல்வாதிகளால் நாதி இழந்து நிட்கும் மக்கள் கூட்டம். இவர்கள் சார்ந்தும் எங்கள் அரசியல் குரல் ஒலிக்கவேண்டும், உதவிகள் விரிவடையவேண்டும்.  
6. சம மொழி அந்தஸ்து (Parity of  languages) - அடிப்படை உரிமை. இதில் கேட்பதற்கு என்ன இருக்கிறது. ஆனால் சிங்களம் சரியாக புரிந்து கொள்வதாய் இல்லை. 
 
குறிப்பு:
*** தமிழீழம் என்ற ஒரு தனி நாட்டை நான் மானசீகமாக ஆதரித்து தினம் காணும் கனவாக அதை வரித்துக்கொண்டாலும் இன்றைய யதார்த்த சர்வதேச அரசியல் அதை நோக்கி எம்மை நகர முடியாமல் கட்டிவைத்திருக்கிறது.

*** மலையக மக்களின் அரசியல் அல்லது வாழ்வியல் குறித்து போராடும் இனமான எங்களுக்கு இன்னும் கூட சரியான புரிதல் அல்லது அவர்களுக்கான தார்மீக குரல் அரசியல் ரீதியில் எம்மவர் மத்தியில் இருந்து எழும்பாமல் இருப்பதாக உணர்கிறேன்.

*** இப்போதைக்கு தமிழர்களை கோர்த்துவைத்து இருக்கும் ஓர் நூல் தான் மாவீரர்களின் தியாகங்கள், இதனை அடிப்படியாக கொண்டு எமது அரசியல் முன்நகர்வுகளை மேற்கொள்வது. மீண்டும் மீண்டும் இந்தியாவிடம் போய்  மண்டியிடாமல் ஒரு அரசியல் அணுகுமுறையை கையாள்வது.

நன்றி சசி. 

எனது அடுத்த பதிவை உங்கள் பதிவில் இருந்து தொடர்வது பொருத்தமாக இருக்கும் என்பதால் - தொடர்கிறேன்.

அடுத்து என் பார்வையில் எமது நலன்கள் என்றால் என்ன என பார்க்கும் முன், நிலை, நலன் என்றால் என்ன என வரையறுத்தால் நல்லம் என நினைக்கிறேன்.

நாம் ஒரு உத்தியை வகுக்கும் முன் எமக்கு எது எம் நலன், எது நிலை என்ற தெளிவு வேண்டும். 

ஏனெனில் மேலே சொன்ன ரொட்டி உதாரணம் போல் எளிமையானவை அல்ல நிஜ வாழ்வின், குறிப்பாக அடையாளம்-சார் அல்லது இனம் சார் பிணக்குகள்.

ரொட்டி உதாரணத்தில் இருவருக்கும் ரொட்டி மேல் ஒரு உணர்வு பூர்வமான பிணைப்பும் இல்லை, ஆனால் நிலம், உரிமை சம்பந்த பட்ட பிணக்குகள் அப்படி அல்ல. இத்தோடு வரலாற்று காரணிகளான பயம், வெறுப்பு, பரஸ்பர அவநம்பிக்கையும் சேர்ந்திருக்கும் (நியாயமான காரணங்கள்தான்). 

ஆகவே எது நலன், எது நிலை என்ற தெளிவு முக்கியமானது எனக்கருதுகிறேன்.

———————-

நிலை, நலன் இரெண்டுமே - தேவையின் அடிப்படையில்தான் உருவாகின்றன.

ரொட்டி உதாரணத்தில் பசி ஆறல், தாகசாந்தி அடைதல்தான் இருவரினதும் தேவை.

நான் அறிந்ததின் படி,

நிலை என்பது - ஒரு தேவையை (need) அடைய, இது ஒன்றுதான் வழி - என ஒரு வழியை சொல்லி, அதில் விடாப்பிடியாக இருப்பது.

நலன் என்பது அதே தேவையை சற்றே வேறுபட்ட ஒரு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் மூலம் அடைவது.

ரொட்டி உதாரணத்தில் இருவரும் தாகம் தீர்ப்பது, பசி ஆறுவதுதான் தேவை.

ஆனால் முழுவதையும் நானே எடுத்துத்தான் பசி ஆறுவேன், தாகம் தீர்ப்பேன் என்பது நிலை.

அவரவர் தேவைக்கு ஏற்ப ரொட்டியையும், நீரையும் பங்கிட்டு, இருவரும் தேவையை பூர்த்தி செய்வது நலன்.

(இது மிக எளிய உதாரணம் என்பதை மனதில் வைக்கவும்).

இப்போ மீண்டும் நம் நிலைகளுக்கு வருவோம்.

கீழ்காணும் லிஸ்ட் என்பது ஒவ்வொரு காலகட்டதிலும் எமது பிரச்சனைக்கு தீர்வாக எமது தலைவர்கள் முன் வைத்த “நிலைகள்”. 

தமிழரின் நிலைகள்

1. சம மொழி அந்தஸ்து ( Parity of  languages)

2. 50:50

3. வடக்கு-கிழக்கு இணைப்பு

4. தனிநாடு

5. பிரிந்து  போகும் உரிமை உள்ள சுயநிர்ணயம்

6. சமஸ்டி

7. பிரிந்து போகா உரிமையுள்ள சுய நிர்ணயம்

தமிழரின் தேவைகள்

நலன்களை பார்க்க முன்னம், இந்த நிலைகளை எம் தலைவர்கள்/மக்கள் எடுக்க என்ன தேவைகள் காரணமாயின என ஒரு பட்டியல் இடுவோம்.

நான் எனக்கு மனதில் பட்டவற்றை எழுதுகிறேன். 

ஏனையோரும் எழுதுங்கள். இன்னும் ஒரு கிழமைக்கு (அடுத்த புதன் வரை) - தேவைகளை பட்டியல் இடுவோம்.

இந்த தேவைகள் உரிமை, அபிவிருத்தி, சமூகம்-சார் - எதுவாகவும் இருக்கலாம்.

இதை தொடர்ந்து இந்த தேவைகளை வகை பிரித்து, திரட்டி, அதன் அடிப்படையில் நம் நலன்களை பட்டியல் இடலாம்.

நலன்களை வரிசை படுத்தி விட்டோம் என்றால் - இப்போ எது சாத்தியமானது என கண்டு, அதன் அடிப்படையில் இந்த நலன்களை பூர்த்தி செய்யும் தீர்வு என எமக்கு ஏற்புடையதாக எது இருக்கும் என்ற தெளிவை பெறலாம்.

———

தமிழரின் தேவைகள் என நான் கருதுபவை (முற்றான பட்டியல் அல்ல).

1. உயிர் பாதுகாப்பு - இலங்கையில் அரச, அரசு சாரா வன்முறையில் இருந்து தனியாகவும், ஒரு இன குழுவாகவும், நாட்டின் எப்பாகத்திலும், குறிப்பாக வடக்கு-கிழக்கில் பாதுகாக்கப்படல். வன்முறை நிகழின் அதற்குரிய தகுந்த சட்ட நிவாரணத்தை பெற கூடியதாக இருந்தல்.

2. காணி உரிமை - இப்போ நாம் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளை தக்க வைத்தல் (கவனிக்க இது ஒரு தேவை, நிலை அல்ல - எமது நிலை ஒட்டு மொத்த வடக்கு கிழக்கும் எமது என்பது).

3. நிதிச் சுதந்திரம் - எமது பகுதிகளில் (இவை எவை என இன்னும் வரையறுக்கவில்லை, இதில் நிலை/நலன் மயக்கம் ஏற்படும் -பிறகு வருவோம்) நாம் வரி அறவிடவும், வெளிநாட்டு அரச, தனியார் நேரடி உதவிகளை பெறவும், நிதி சம்பந்தமான சட்டங்களை இயற்றவும், மாற்றவும் (இதில் வரையறை கட்டாயம் இருக்கும் - பூரண நிதிச் சுதந்திரம் = தனிநாடு) அதிகாரம் உடையோராய் இருத்தல்.

4. …..

பிகு

1. முரண்படும் கருத்துகள் வரவேற்கப்படுகிறன

2. இதை எழுத எந்த உள்நோக்கமும் இல்லை - 2009 ற்கு பின் ஒட்டு மொத்த இனமுமே சம்ஸ்டி, சுயநிர்ணயம், பிரிந்து போகா, வடக்கு-கிழக்கு இணைப்பு போன்ற தெளிவான அர்த்தம் இல்லாத வார்த்தைகளின் பின்னால் அலைவதாயும். இதை இலங்கை பயன்படுத்துவதாயும் உணர்கிறேன்.

எந்த முன் முடிவும் கூட என் மனதில் இல்லை. சில சிந்தனைகள் உள்ளது. ஆனால் அவை சரிதானா என்று எனக்கும் தெரியாது.

Edited by goshan_che
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

3. நாம் இனமா, இனக்குழுவா போன்ற சர்ச்சைகளை தவிர்க விரும்புகிறேன். இனம் எண்டுதான் எழுத வேண்டும் என்றாலும் சரிதான். 

ஆனால் நிலைகளுக்குள் இழுபடாமல், தேவைகள், நலன்கள் மீது கவனம் வைக்க விரும்புகிறேன்.

4.  சசி மேலே தெளிவாக தன் ஆசை எது என்பதை காட்டியுள்ளார். அது ஏன் இப்போ பொருத்தமற்றது எனவும் கோடிகாட்டியுள்ளார்.

அதை ஒட்டியே,

நான் கேட்பதும் ஆசைகளின் பட்டியல் அல்ல, தேவைகளின் பட்டியல். 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக்கிழமை போடப்பட்ட செய்தி அதன் பின்னர் கோஷன் பதிவுசெய்த சிந்தனை அலை (Brainstorming) பெரிதாக இன்னும் உள்வாங்கப்படாமல் இருக்குதோ என்ற ஆதங்கம் எழுகிறது. மீண்டும் இப்போதைய தேவைகளாக எனக்கு சட்டென மனதில் படுவதை பகிர்கின்றேன் . 
அலசி ஆராய்வது சரி/ பிழை பின்னர் நடக்கட்டும்.  🙂

எனது தேவைகளின் பட்டியல்:

  • உயிர் அச்சமும் இன்றி, வன்முறை, அடக்குமுறை இன்றி இயங்கும் வாழ்வியல். 
  • பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், கல்வி  / பொருளாதார,  சுதந்திரம்.
  • என்னுடைய பாரம்பரிய நிலம், சுற்றுச்குழல், இயற்கை வளம் இவற்றை அடாத்தாக யாரும் ஆக்கிரமிக்காமல் பாதுகாக்கும் உரிமை.
  • என்னுடைய பிறந்த மண்ணில்  இரண்டாம் பிரஜையாக நடாத்தப்படாமல் கௌரவமாக வாழ ஒரு அரசியல்.
  • என்னுடைய மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு விழுமியங்கள் நான் விரும்பும் படியே ஒழுகி கடைபிடிக்கும்  தடையில்லாத வாழ்வியல். 
  • ஆண், பெண், மற்றும் இதர வர்க்கங்களுக்கிடையே சமூக ஒடுக்கு முறைகள்/வேறுபாடுகள்  கலைந்த தமிழ் தேசியம்.
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்ற ஒரு உரையாடல் முதல்வன் தனியான திரி ஆரம்பித்தும் முன்னகர முடியாமல் இருக்கிறது. அரூபமான (abstract) விடயங்கள் பற்றிப் பேசுவது ஏனைய சம்பவங்கள், இடங்கள் பற்றிப் பேசுவதை விடக் கடினமான விடயம் தான். ஆனால், விடயங்களை வரையறை செய்வதற்காகப் பேச வேண்டும்.

தேவைகள்:

தமிழருக்குப் பிரத்தியேகமான தேவைகள் என்று நான் கருதுவது உயிர்பாதுகாப்பு, உடமை - சிறப்பாக நிலப்- பாதுகாப்பு, தங்கள் மொழியில் எல்லாக் காரியங்களையும் வாழுமிடத்தில் செய்து கொள்ளக் கூடிய மொழிச் சேவை வசதி.

மேலே சசி குறிப்பிட்டிருக்கும் சில தேவைகள் இலங்கையர் எல்லாருக்கும் இருப்பவை: பொருளாதார வாய்ப்புகள், ஊழலின்மை, பால் சமத்துவம், இவையெல்லாம் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இல்லை - அதன் நீட்சியாக வடக்கு கிழக்கிலும் இல்லை!

எனவே மிக அடிப்படையாக எங்களுக்குத் தேவை:

1. வன்முறையில், உயிர்பயத்திலிருந்து பாதுகாப்பு
2. நிலம் மீது உரிமை
3. மொழி  

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை சிங்கள மற்றும் தமிழரின் மனங்களில் மாற்றம் வரணும். அது வராது எதுவும் சாத்தியம் இல்லை. 

வெறும் காலம் கடத்துதலும் முதுகில் குத்துதலுமே தொடரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

என்னைப் பொறுத்தவரை சிங்கள மற்றும் தமிழரின் மனங்களில் மாற்றம் வரணும். அது வராது எதுவும் சாத்தியம் இல்லை. 

வெறும் காலம் கடத்துதலும் முதுகில் குத்துதலுமே தொடரும்.

மனங்களில் மாற்றம் வரவேண்டும் ஏற்றுக்கொள்கிறேன் அண்ணா.
சிங்களவர், தமிழர், முஸ்லீம் இந்த இனங்களுக்கிடையே  மன மாற்றம் நிகழ்வதென்றால் கூட அவரவர் தேவையை நாங்கள் சரியாக புரிந்துகொண்டால் மட்டுமே சாத்தியமாகும் இல்லையா? 
அதைத்தான் இங்கே கோஷன் (இப்போதைக்கு நம்முடைய உண்மையான தேவைகளை) பட்டியலிட விரும்புகிறார் என நினைக்கிறன். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2022 at 10:23, goshan_che said:

🤣

நன்றி அண்ணை. 

இவை எமது நிலைகள்.

‘48 முதல் எமது தலைவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் கோரி வந்த வேறுபட்ட “தீர்வுகள்”.

நீங்கள் சொன்னது போல் அவர்கள் 75 ஆண்டுகளாய் கதவே திறக்காத கோரிக்கைகள்.

ஆனால் - இவை மூலம் நாம் அடைய முனைந்த, முனையும் நலன்கள் என்ன?

என்பதுதான் பெரிய கேள்வி.

எனக்கும் இந்த நலன்கள் பற்றி ஒரு அறுதியான முடிவு இல்லை.

இந்த திரியில் எல்லாருடனும் சேர்ந்து கதைப்பதால் - இதற்கு ஒரு விடையை கண்டால் - நிலைகளை வற்புறுதாமல் நலன்களை அடையலாமா? என்றே யோசிக்கிறேன்.

🤣 முன்பே சொல்லி உள்ளேன் - be careful with what you wish for, for it may be granted 🤣.

எங்களோடு சேர்ந்து விட்டு, இவனுகளுக்கு பானிபூரி வாயனுகளே தேவல எண்டு நினைக்கும் படி ஆகலாம்.

பகிடிக்கு அப்பால்,

இந்தியாவின் அங்கமான தமிழகத்தோடு இணைய வேண்டும் என்பது ஒரு போதும் ஈழ தமிழரின் நிலைப்பாடாக இருந்ததில்லை. இப்போதும் இல்லை. 1% பேர் கூட இந்த நிலையில் இருப்பதாக நான் கருதவில்லை.

தமிழ் நாடு தனி நாடாகினால் இந்த % உயர கூடும்.

கோஷான் மிக அருமையான கருத்துக்களை இந்தத்திரியில் சொல்லியிருக்கிறீர்கள்.இந்தத்திரியில் அலசப்படும் விடயங்களை எமது அரசியல்வாதிகள் கருத்திற்கெடுப்பார்களா என்பது சந்தேகம். 
எமது அரசியல் நிலைப்பாடு. அடைய முனையும் தீர்வு பற்றிய தெளிவான திட்டம் வகுக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் கட்சிக்கு அப்பால் அரசியல் சட்ட வல்லுநர்களைக் கொண்ட ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு அவர்களால் எழுத்து வடிவில் கொடுக்கப்பட வேண்டும். எந்த அரசியல் கட்சியின் பிரதிநிதிகளும்  அதற்குள் தலையை நுழைக்கக் கூடாது. ஆனால் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை எழுத்து வடிவில் அந்த அமைக்கு வழங்கலாம். அந்த அமைப்பு அரசியல்கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்கி இறுதியானதும் உறுதியானதுமான தீர்வுத்திட்ட கொள்கையை எழுத்து வடிவில் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களே பேச்சு மேசைக்குப் போக வேண்டும். இதுவே அனைத்து அரசியல்கட்சிகளின் பங்களிப்போடு ஆதரவோடு ஆனால் அவர்களின் தலயீடு இன்றி வகுக்கப்படும் தீர்வுத்திட்டமாக அமையும்.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் விரும்புவது

இணைந்த வடகிழக்கு

காணி

பொலிஸ்

கல்வி

அதிகாரங்கள் உள்ள ஒரு அலகு.

இதற்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம்.

ஒரு சிங்கள மகன் இலங்கையில் எப்படி வாழ்கிறானோ அதே மாதிரி உரிமையுடன் தமிழ் முஸ்லீம் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2022 at 10:55, ராசவன்னியன் said:

தமிழகத்தோடு இணைதல்! 🤭

(இது உங்களுக்கு தோன்றவே இல்லையா?)😜 so sad dear! 

ஈழத்தமிழ் மக்கள் அன்றும் இன்றும் என்றும் இதயபூர்வமாக தமிழகத்தோடுதான் இணைந்திருக்கின்றார்கள்.
 

  • Like 3
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.