Jump to content

ஈழத் தமிழரின் அபிலாசைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விவாததுக்காக எனக்கு தோன்றுவதை வைக்கிறேன் @goshan_che

இன்று இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் சர்வதேச நாணய நிதியமோ அல்லது இந்தியாவோ இருந்துவிட்டு போகட்டும். 

கிடைக்கிறதை வாதிட்டு எடுக்க கூடிய ஒரு தீர்வுக்கு நகர்ந்து அதை சட்டமாக்கி அரசியல் திருத்தமாக்கி மாற்றமுடியாதவாறு செய்துவிட்டு தொடந்து போராட முடியாதா.?

நேரடி முதலீடு,தாயக பொருளாதார அபிவிருத்தியில் தலையிட முடியாத ஒரு தீர்வுக்கு நகர்ந்து ஒரு பொருளாதார சமநிலையற்ற நிலையை உருவாக்கி எங்களை வளப்படுத்த முடியாதா.?

இன்று எங்கள் பரம்பரை இருக்கும் மட்டுமே இந்த தாயக அபிவிருத்தியும் புலம்பெயர் முதலீடும் சாத்தியம் என்பதை உணர்ந்து அதை நோக்கி நகர்ந்து தொடர்து உரிமைக்காக போராட முடியாதா.?

வந்தால் மலை என்ற ஒரே எண்ணத்தில் தான் நகரவேண்டுமா.?

இப்போ ஒரு தீர்வு கிடைத்துவிட்டால் இனி தமிழினம் எதற்குமே போராடமாட்டோம் என்று ஒதுங்கிவிடும் என்ற பயம் இருந்தால் மட்டுமே இறுதித்தீர்வை பற்றி இப்போ யோசிக்க வேண்ட்டும். 

இல்லையெனில் …..

  • Like 5
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Sasi_varnam

கோஷன்... உங்களை போல ஆழமான அரசியல் பார்வை இல்லை என்ற "டிஸ்கிளேய்மரோடு" மனதில் பட்டத்தை இங்கே எழுதுகிறேன்.  தமிழர் நிலைகளாக நான் பார்ப்பது:  1. சுதந்திர தமிழீழம் - தனிநாடு - [பேரச்சிக்கல் கொண்டது

goshan_che

நன்றி சசி.  எனது அடுத்த பதிவை உங்கள் பதிவில் இருந்து தொடர்வது பொருத்தமாக இருக்கும் என்பதால் - தொடர்கிறேன். அடுத்து என் பார்வையில் எமது நலன்கள் என்றால் என்ன என பார்க்கும் முன், நிலை, நலன் என்

goshan_che

🤣 நன்றி அண்ணை.  இவை எமது நிலைகள். ‘48 முதல் எமது தலைவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் கோரி வந்த வேறுபட்ட “தீர்வுகள்”. நீங்கள் சொன்னது போல் அவர்கள் 75 ஆண்டுகளாய் கதவே திறக்காத கோரிக்கைகள்

  • கருத்துக்கள உறவுகள்

1....முதலில் இப்படி ஒரு பேச்சுவார்த்தை தமிழர்களின் பெயரில் நடப்பதை நான் விரும்பவில்லை......வரவேற்கவில்லை  காரணம் இதன் முடிவு பேச்சுவார்த்தை தொடங்க முதலே   எனக்கு மிகவும் தெளிவாக தெரியும்    இது பேச்சுவார்த்தை இல் பங்கேற்பவரர்களுக்கும். தெரியும்  ......முடிவு தெரிந்தும்  ஏன்   இவர்கள் பேசுகிறார்கள் ?.     இப்படி பேச்சுவார்த்தை நடத்து.வது1...பிழை இல்லையா....?.2...குற்றம் இல்லையா....?..3...இந்த குற்றவாளிகளுக்கு  தண்டனை” வழங்க முடியாத.....  ?

2....எங்கள் பெயரில் ...இலங்கை தமிழர்கள் பெயரில்   ....அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்துவோர்.1...ஒரு தீர்வுக்கு உடன்படிக்கை எட்டாத போதும்.....2...ஒரு உடன்படிக்கைக்கு வந்தும்   அதனை அமுல் செய்யாத போதும் ...இதில் ஈடுபட்ட அனைவரும் மிகவும் கடுமையாக தண்டிப்படவேண்டியவார்கள்  

3...தண்டனை”...1..அரசியலில் ஈடுபடமுடியாத.....அதாவது பாராளுமன்ற...மாநகரசபை...நகரசபை...கிராமசபை....போன்றவற்றிற்கான தேர்தலில் பங்கு பற்றக்கூடாது...2..செத்துகள் பறிக்கப்படவேண்டும்.  ....3. வெளிநாட்டு பயணம் செய்ய முடியாது 

4....பேச்சுவார்த்தை ஆரம்பிக்க முதல் ..ஒரு சுற்றறிக்கை வழங்கப்படவேண்டும். ...பேச்சுவார்த்தை நடத்துபவரும்.   பங்கேற்பர்வார்களும்...கண்டிப்பாக தீர்வு ஒன்றுக்கு வரவேண்டும் ...இல்லையென்றால் தண்டனை” உண்டு”....

பிறகு தொடர்ந்து எழுதுகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2022 at 14:09, முதல்வன் said:

ஒரு விவாததுக்காக எனக்கு தோன்றுவதை வைக்கிறேன் @goshan_che

இன்று இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் சர்வதேச நாணய நிதியமோ அல்லது இந்தியாவோ இருந்துவிட்டு போகட்டும். 

கிடைக்கிறதை வாதிட்டு எடுக்க கூடிய ஒரு தீர்வுக்கு நகர்ந்து அதை சட்டமாக்கி அரசியல் திருத்தமாக்கி மாற்றமுடியாதவாறு செய்துவிட்டு தொடந்து போராட முடியாதா.?

நேரடி முதலீடு,தாயக பொருளாதார அபிவிருத்தியில் தலையிட முடியாத ஒரு தீர்வுக்கு நகர்ந்து ஒரு பொருளாதார சமநிலையற்ற நிலையை உருவாக்கி எங்களை வளப்படுத்த முடியாதா.?

இன்று எங்கள் பரம்பரை இருக்கும் மட்டுமே இந்த தாயக அபிவிருத்தியும் புலம்பெயர் முதலீடும் சாத்தியம் என்பதை உணர்ந்து அதை நோக்கி நகர்ந்து தொடர்து உரிமைக்காக போராட முடியாதா.?

வந்தால் மலை என்ற ஒரே எண்ணத்தில் தான் நகரவேண்டுமா.?

இப்போ ஒரு தீர்வு கிடைத்துவிட்டால் இனி தமிழினம் எதற்குமே போராடமாட்டோம் என்று ஒதுங்கிவிடும் என்ற பயம் இருந்தால் மட்டுமே இறுதித்தீர்வை பற்றி இப்போ யோசிக்க வேண்ட்டும். 

இல்லையெனில் …..

இது தான் என் கருத்தும். இதே கருத்தைத் தான் யதீந்திரா இன்னொரு கட்டுரையில் வெளிப்படுத்தியிருகிறார்.

புலிகள் அமைப்பு பாடசாலைகளில் பிரச்சாரத்திற்கு வரும் காலங்களில் பேசுபவர் ஒரு கேள்வி கேட்பார்:

"தனி நாட்டுக்குக் குறைவான தீர்வை ஏற்றுக் கொண்டு சமாதானமாக வாழலாமா?"

ஓரிருவர் மிக கமுக்கமாக "ஓம்" என்பர்.

"அப்ப இது வரை உயிர்த்தியாகம் செய்த ஆயிரக்கணக்கான மாவீரர்களுக்கு என்ன பதில் சொல்லலாம்?" என்று பேச்சாளர் மீள ஆரம்பிப்பார்.

இதே  sunken cost theory அடிப்படையிலான கேள்வி தான் இடைக்காலத் தீர்வு/நிவாரணம் எதையும் சில தமிழ் தரப்புகள் ஏற்றுக் கொள்ளத் தடையாக இருக்கிறதென நினைக்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1...பண்டா-செல்வா. ஒப்பந்தம் 

2...டல்லி -செல்வா ஒப்பந்தம் 

3....1987 இல் இந்தியா -இலங்கை ஒப்பந்தம் 

4....திம்புவில்.   இயக்கங்கள் இலங்கை உடன் சேர்ந்து செய்த ஒப்பந்தம் 

5.....நோர்வே....சுவிற்சர்லாந்து.....போன்ற நாடுகளில் பறுந்து திரிந்து செய்த ஒப்பந்தம் 

6....ஜே..ஆரின். வட்டமேசை. மாகாநாடு 

 இப்படி நிறைய பேச்சுவார்த்தைகள்.....தீர்வுகள்   கண்டுயிருக்கிறோம...இவற்றுக்கு என்ன நடந்தது ஏன் அமுல் செய்யப்படவில்லை?.  இந்த ரணில் இதற்கு பதில் கூற வேண்டும்    இவற்றை விட நாங்கள் பெரிதாக யோசனைகள் வைத்து விட முடியாது....அப்படி வைத்தாலும் அவை அமுலுக்கு வரபோவதில்லை...

வரவிடமாட்டார்கள்...அது அவர்களின் கொள்கை தமிழருக்கு தீர்வு வழங்கப்போவதில்லை என்று பலதடவைகள் வெளிப்பாடாய் சொல்லி விட்டார்கள்  அப்படியென்றால் ரணில் ஏன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்?.    

1....தமிழர்களை மேலும் சிறு சிற....பிரிவுகளாக்கலாம்

2....இலங்கை தமிழராகிய உங்களுக்கு இலங்கையில் நாங்கள் ஒருபோதும் தீர்வு வழங்கப்போவதில்லை என்பதை தமிழருக்கு உறுதியாக புரிய வைத்தால் 

3....பேசி பிரச்சனை தீருங்கள் என்று சொல்லும் வெளிநாடுகளுக்கு...பேச்சுவார்த்தை வைத்தேன் தமிழர்களில் பல  முரண்பாடுகள் இருப்பதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என பதில் கொடுக்கலாம் 

4....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுடன் பேச்சுவார்த்தைக்கு போகக்கூடாதா.  ?. நிச்சயம் போக வேண்டும்    

பேச்சுவார்த்தை மேசையில்...காணி அதிகாரம்........பொலிஸ் அதிகாரம்....

இப்படியாக    கோரக்கூடாது.   ஏனென்றால் அவர்கள் தரப்போவதில்லை   மாறாக ஒற்றை ஆட்சியில் சட்டம் அனைவருக்கும் சமனாக. அமுல்படுத்தப்படவேண்டும் .....இலங்கை நீதிமன்ற தீர்ப்புகளில்.  நம்பிக்கை இல்லை  ...இந்தியாவில் அல்லது சீனாவில்...மேல் முறையீடு.  செய்யக்கூடிய வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவேணடும். ...   தமிழரின் தீர்வு விடயத்தில்  இந்தியா இலங்கை சீனா     ஒன்றுமையாக.  இருக்க கூடாது   முரண்பாடு எற்படவேண்டும்.   

1...இந்தியா சீனா முரண்பாடுகள் 

2....இந்தியா இலங்கை முரண்பாடுகள் 

3...இலங்கை சீனா முரண்பாடுகள்     

4...எந்த மதங்களும் இலங்கை நிதியுதவி வழங்க கூடாது 

5.  ...பேச்சுவார்த்தை எப்போதும் தமிழர்....சிங்களவர் அடிப்படையில் தான் நடைபெறவேண்டும்     முஸ்லிம்களும் தமிழர்கள் தான்   ....விரும்பினால் சிங்களவராகவும்.   இருக்கட்டும்     😄😄

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகு
1. கருத்துகள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. அனைவரின் கருத்துக்களையும் உள் எடுத்து கீழே உரையாடலை தொடர்கிறேன். 

குறிப்பாக @புலவர் @முதல்வன்@Kandiah57 @Justin  அண்ணைகள் சொன்னவற்றில் சிலதை தேவைகளின் பட்டியல் என்ற தொனிப்பொருள் அலசப்பட்டபின் அலசுவது பொருத்தமாய் இருக்கும் என்பதால் இப்போதைக்கு அந்த விடயங்களை தரித்து வைக்கிறேன் ( parking them for the time being). 

2. இடையில் வந்த கண்நோய், வேலையில் எதிர்பாராமல் வந்த பழு காரணமாக புதனன்று தொடர முடியாமல் போய்விட்டது. பரவாயில்லை எப்படியும் பெப்ரவரி 4 ம் திகதி வரைக்கும் டைம் இருக்குத்தானே🤣.

3. எனது ஜனநாயகம், மேற்கு நாடுகள், தனி நாட்டு கோரிக்கை பற்றிய நிலைப்பாடு இங்கே அநேகர் அறிந்ததே. ஆகவே கோஷான் எவரிடமோ (மேற்கு) காசு வாங்கி கொண்டு ஏலவே தீர்மானிக்கப்பட்ட திட்டம் ஒன்றை தமிழர் தலையில் கட்ட, ஒரு “நிலத்தை பண்படுத்தும்” (preparing the ground) செயலில் இறங்கி உள்ளார் என யாரும் நினைக்க கூடும். அது நியாயமான சந்தேகம்தான். ஆனால் அப்படி எதுவும் இல்லை. என்று சொல்வதை தவிர என்னால் வேறு ஏதும் செய்யமுடியாது என்பதால். 

“அப்படி எந்த உள் நோக்கமும் இல்லை” என சொல்லி தொடர்கிறேன்.
 

 

தேவைகளின் பட்டியல் (திரட்டப்படாதது - non-consolidated)

1. உயிர் பாதுகாப்பு - இலங்கையில் அரச, அரசு சாரா வன்முறையில் இருந்து தனியாகவும், ஒரு இன குழுவாகவும், நாட்டின் எப்பாகத்திலும், குறிப்பாக வடக்கு-கிழக்கில் பாதுகாக்கப்படல். வன்முறை நிகழின் அதற்குரிய தகுந்த சட்ட நிவாரணத்தை பெற கூடியதாக இருந்தல்.

2. காணி உரிமை - இப்போ நாம் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளை தக்க வைத்தல் (கவனிக்க இது ஒரு தேவை, நிலை அல்ல - எமது நிலை ஒட்டு மொத்த வடக்கு கிழக்கும் எமது என்பது).

3. நிதிச் சுதந்திரம் - எமது பகுதிகளில் (இவை எவை என இன்னும் வரையறுக்கவில்லை, இதில் நிலை/நலன் மயக்கம் ஏற்படும் -பிறகு வருவோம்) நாம் வரி அறவிடவும், வெளிநாட்டு அரச, தனியார் நேரடி உதவிகளை பெறவும், நிதி சம்பந்தமான சட்டங்களை இயற்றவும், மாற்றவும் (இதில் வரையறை கட்டாயம் இருக்கும் - பூரண நிதிச் சுதந்திரம் = தனிநாடு) அதிகாரம் உடையோராய் இருத்தல்.

4. உயிர் அச்சமும் இன்றி, வன்முறை, அடக்குமுறை இன்றி இயங்கும் வாழ்வியல். 

5. பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், கல்வி  / பொருளாதார,  சுதந்திரம்.

6. என்னுடைய பாரம்பரிய நிலம், சுற்றுச்குழல், இயற்கை வளம் இவற்றை அடாத்தாக யாரும் ஆக்கிரமிக்காமல் பாதுகாக்கும் உரிமை.

7. என்னுடைய பிறந்த மண்ணில்  இரண்டாம் பிரஜையாக நடாத்தப்படாமல் கௌரவமாக வாழ ஒரு அரசியல்.

8. என்னுடைய மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு விழுமியங்கள் நான் விரும்பும் படியே ஒழுகி கடைபிடிக்கும்  தடையில்லாத வாழ்வியல். 

9. ஆண், பெண், மற்றும் இதர வர்க்கங்களுக்கிடையே சமூக ஒடுக்கு முறைகள்/வேறுபாடுகள்  கலைந்த தமிழ் தேசியம்.

10. வன்முறையில், உயிர்பயத்திலிருந்து பாதுகாப்பு
11.  நிலம் மீது உரிமை
12.  மொழி  

13. இணைந்த வடகிழக்கு

14. காணி 

15. பொலிஸ்

16. கல்வி அதிகாரங்கள் உள்ள ஒரு அலகு.

17. எந்த மதங்களும் இலங்கை நிதியுதவி வழங்க கூடாது

Edited by goshan_che
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ளதில் ஓரளவுக்கு எமது தேவைகளை பட்டியல் இட்டு உள்ளோம் என நான் நினைக்கிறேன்.

இனி இவற்றை ஒரு தலைப்பில் திரட்டி, ஒவ்வொன்றாக ஆராய்வோம். 

திரட்டப்பட்ட தேவைகளின் பட்டியலும், அலசலும்

(List of needs (consolidated), discussion)

உயிர் பாதுகாப்பு/பொலிஸ் அதிகாரம்

மேலே உள்ள பட்டியலில் 1, 4,5, 7, 10, 15 புள்ளிகளை இது தொட்டு நிற்கிறது.

எனது கருத்து

நாம் ஏன் பொலிஸ் அதிகாரம் கோருகின்றோம்?

ஏனென்றால் இலங்கை பொலீஸ் இனவாதமானது. எம்மை இன அடிப்படையில் முன்னர் பல ஆண்டுகளாக வஞ்சித்தது.

நம்மை நாமே ஒழுங்கு படுத்த விரும்புகிறோம். எம்மை ஒழுங்கு படுத்துவோர், எம்மை போன்றோராக, எம்மில் இருந்து வருவோராக, எம் கூட்டு மக்கள் விருப்புக்கு கட்டுப்பட்டோராக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

பொலீஸ் அதிகாரம் எம்மிடம் வந்தால் முன்பை விட எப்படி நிலைமை மாறும்?

எமது ஊரில் இருக்கும் பொலிஸ் எமது மக்கள் பிரதி நிதிகளுக்கு கட்டுப்பட்டதாக இருக்கும். இனவாதம் இராது. சிங்களவர் என்பதால் யாருக்கும் எந்த சிறப்புரிமையும் கொடாது. தமிழர், முஸ்லிம் என்பதால் புறம் தள்ளியும் நடவாது.

ஏன் சிங்களவர்கள் எமக்கு பொலிஸ் அதிகாரம் பகிர மறுக்கிரார்கள்?

அது தம் கட்டுப்பாட்டில் இருந்து இந்த மண்ணை அகற்றி விடும் என நினைக்கிறார்கள். 

தனிநாட்டின் முதல் படியாகி விடும் என நினைக்கிறார்கள்.

அப்படி ஒரு பொலிஸ் சேவை சிங்களவருக்கு அநியாயம் செய்யும் என நினைக்கிறார்கள்

சரி இங்கே இரு பகுதியின் நலன்களும் என்ன?

தமிழர் - இனவாதம் அற்ற, உள்ளூர் மக்கள் சேவையில் இருக்கும், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும், ஆனால் சுயாதீனமான பொலிஸ் சேவை.

சீங்களவர் - இலங்கை அரசுக்கு கட்டுப்பட்ட, பச்சையாக சொல்வதானால் ஒரு சிங்களவரின் மேற்பார்வையில், அநேகம் சிங்களவர் இருக்கும், ஒரு பொலீஸ் சேவை.

இங்கே இரு பகுதியின் நலன்களும் ஒன்றோடு ஒன்று 180 பாகையில் முரண்படுவதாக தெரிகிறது?

இதில் இருந்து இருபகுதி நலன்களும் நிறைவாகும் ஒரு நிலையை எப்படி அடையலாம்?

உங்கள் கருத்துகளை பிரேரியுங்கள்.

கவனத்தில் எடுக்கவும்:

1. பொலிஸ் சேவை என்பது, அவர்கள் கட்டுப்படுத்தும் உள்ளூர் சமூகம் பரிச்சயமான மனிதர்களால், உள்ளூர் சமூகத்தின் அணைவுடன் நடத்தப்படவேண்டும் என்பதே உலக நடைமுறை.

2. நீங்கள் வாழும் நாடுகளில் எப்படி பொலிஸ் சேவை உள்ளூரியல் (localism), சுயாதீனம் (independence), அதிகார பரவலாக்கல் (decentralisation), போன்ற இயல்புகளை உள்வாங்குகிறது என்பதை கவனத்தில் எடுக்கலாம். 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/12/2022 at 13:21, goshan_che said:

மேலே உள்ளதில் ஓரளவுக்கு எமது தேவைகளை பட்டியல் இட்டு உள்ளோம் என நான் நினைக்கிறேன்.

இனி இவற்றை ஒரு தலைப்பில் திரட்டி, ஒவ்வொன்றாக ஆராய்வோம். 

திரட்டப்பட்ட தேவைகளின் பட்டியலும், அலசலும்

(List of needs (consolidated), discussion)

உயிர் பாதுகாப்பு/பொலிஸ் அதிகாரம்

மேலே உள்ள பட்டியலில் 1, 4,5, 7, 10, 15 புள்ளிகளை இது தொட்டு நிற்கிறது.

எனது கருத்து

நாம் ஏன் பொலிஸ் அதிகாரம் கோருகின்றோம்?

ஏனென்றால் இலங்கை பொலீஸ் இனவாதமானது. எம்மை இன அடிப்படையில் முன்னர் பல ஆண்டுகளாக வஞ்சித்தது.

நம்மை நாமே ஒழுங்கு படுத்த விரும்புகிறோம். எம்மை ஒழுங்கு படுத்துவோர், எம்மை போன்றோராக, எம்மில் இருந்து வருவோராக, எம் கூட்டு மக்கள் விருப்புக்கு கட்டுப்பட்டோராக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

பொலீஸ் அதிகாரம் எம்மிடம் வந்தால் முன்பை விட எப்படி நிலைமை மாறும்?

எமது ஊரில் இருக்கும் பொலிஸ் எமது மக்கள் பிரதி நிதிகளுக்கு கட்டுப்பட்டதாக இருக்கும். இனவாதம் இராது. சிங்களவர் என்பதால் யாருக்கும் எந்த சிறப்புரிமையும் கொடாது. தமிழர், முஸ்லிம் என்பதால் புறம் தள்ளியும் நடவாது.

ஏன் சிங்களவர்கள் எமக்கு பொலிஸ் அதிகாரம் பகிர மறுக்கிரார்கள்?

அது தம் கட்டுப்பாட்டில் இருந்து இந்த மண்ணை அகற்றி விடும் என நினைக்கிறார்கள். 

தனிநாட்டின் முதல் படியாகி விடும் என நினைக்கிறார்கள்.

அப்படி ஒரு பொலிஸ் சேவை சிங்களவருக்கு அநியாயம் செய்யும் என நினைக்கிறார்கள்

சரி இங்கே இரு பகுதியின் நலன்களும் என்ன?

தமிழர் - இனவாதம் அற்ற, உள்ளூர் மக்கள் சேவையில் இருக்கும், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும், ஆனால் சுயாதீனமான பொலிஸ் சேவை.

சீங்களவர் - இலங்கை அரசுக்கு கட்டுப்பட்ட, பச்சையாக சொல்வதானால் ஒரு சிங்களவரின் மேற்பார்வையில், அநேகம் சிங்களவர் இருக்கும், ஒரு பொலீஸ் சேவை.

இங்கே இரு பகுதியின் நலன்களும் ஒன்றோடு ஒன்று 180 பாகையில் முரண்படுவதாக தெரிகிறது?

இதில் இருந்து இருபகுதி நலன்களும் நிறைவாகும் ஒரு நிலையை எப்படி அடையலாம்?

உங்கள் கருத்துகளை பிரேரியுங்கள்.

கவனத்தில் எடுக்கவும்:

1. பொலிஸ் சேவை என்பது, அவர்கள் கட்டுப்படுத்தும் உள்ளூர் சமூகம் பரிச்சயமான மனிதர்களால், உள்ளூர் சமூகத்தின் அணைவுடன் நடத்தப்படவேண்டும் என்பதே உலக நடைமுறை.

2. நீங்கள் வாழும் நாடுகளில் எப்படி பொலிஸ் சேவை உள்ளூரியல் (localism), சுயாதீனம் (independence), அதிகார பரவலாக்கல் (decentralisation), போன்ற இயல்புகளை உள்வாங்குகிறது என்பதை கவனத்தில் எடுக்கலாம். 

 

பொலிஸ் சேவை நகர மட்டத்தில் நிர்வகிக்கப் படுவது தான் சிறந்த தெரிவாக இருக்கிறது. ஆனால் இலங்கை போன்ற நாட்டில் நிதி ரீதியாக இதைச் செய்ய இயலாது (அரசியலும் இடம் கொடுக்காது என்பது இன்னொரு காரணம்). இலங்கையில் நகரங்களுக்கு மத்திய அரசு போல வருமானங்கள் இருப்பதில்லை.

எனவே, குறைந்தது மாகாண மட்ட பொலிஸ் தான் உள்ளூர் மக்களைத் திருப்தி செய்யும் நிலைக்குக் கிட்டவாக வர முடியும் இலங்கையில்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Justin said:

பொலிஸ் சேவை நகர மட்டத்தில் நிர்வகிக்கப் படுவது தான் சிறந்த தெரிவாக இருக்கிறது. ஆனால் இலங்கை போன்ற நாட்டில் நிதி ரீதியாக இதைச் செய்ய இயலாது (அரசியலும் இடம் கொடுக்காது என்பது இன்னொரு காரணம்). இலங்கையில் நகரங்களுக்கு மத்திய அரசு போல வருமானங்கள் இருப்பதில்லை.

எனவே, குறைந்தது மாகாண மட்ட பொலிஸ் தான் உள்ளூர் மக்களைத் திருப்தி செய்யும் நிலைக்குக் கிட்டவாக வர முடியும் இலங்கையில்.

நன்றி

உங்களுக்கும் (ஏனையோருக்கும்). மேலே ஜஸ்டின் அண்ணா பொலீஸ் அலகின் பூகோள வீச்சு (geographical reach) பற்றி சொல்லி உள்ளார்.

இதை போலவே அந்த பொலிஸ் அலகின் சேர்மானம், ஆட்சி கூம்பு (composition and command structure)

அதிகாரப்புலம் (jurisdiction)

இந்த பொலிஸ் அலகை யார் மேற்பார்வை செய்வார்கள் ( supervise )

யார் முறைப்பாடுகளை விசாரிப்பார்கள் 

என்பவை பற்றியும் கருத்துக்களை எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

Quote

எந்த மதங்களும் இலங்கை நிதியுதவி வழங்க கூடாது

எந்த மதங்களுக்கும் இலங்கை அரசு நிதியுதவி அளிக்கக்கூடாது என்பது தானே?? (சிறு கருத்து மயக்கம்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

எந்த மதங்களுக்கும் இலங்கை அரசு நிதியுதவி அளிக்கக்கூடாது என்பது தானே?? (சிறு கருத்து மயக்கம்)

ஓம், அரச/முடிக்குரிய மதம் என்ற நிலை இருக்கக் கூடாதென்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

நன்றி

உங்களுக்கும் (ஏனையோருக்கும்). மேலே ஜஸ்டின் அண்ணா பொலீஸ் அலகின் பூகோள வீச்சு (geographical reach) பற்றி சொல்லி உள்ளார்.

இதை போலவே அந்த பொலிஸ் அலகின் சேர்மானம், ஆட்சி கூம்பு (composition and command structure)

அதிகாரப்புலம் (jurisdiction)

இந்த பொலிஸ் அலகை யார் மேற்பார்வை செய்வார்கள் ( supervise )

யார் முறைப்பாடுகளை விசாரிப்பார்கள் 

என்பவை பற்றியும் கருத்துக்களை எழுதுங்கள்.

மாகாண பொலிஸ் என்று வைத்துக் கொண்டால், பணிக்குச் சேர அந்த மாகாணங்களில் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதி வாழ்ந்திருக்க வேண்டும், அந்த மாகாணங்களில் பெரும்பான்மையான மொழியில் தேர்ச்சி இருக்க வேண்டும், இரண்டாவது மொழியில் ஒரு குறிப்பிட்ட நிலைப் பரீட்சயம் இருக்க வேண்டும் என்பன தகுதிகளாக இருக்கும்.

மாகாண பொலிஸ் ஆணையாளர் (commissioner) அல்லது பொலிஸ்மா அதிபர் (IG) தான் படைக்குப் பொறுப்பு.

ஆனால், மாகாணங்களிடையேயான குற்றத் தடுப்பிற்கு எப்படியும் ஒரு மத்திய பொலிஸ் படை தேவை, CBI, FBI, Carabinieri போல. அதை மத்திய அரசே இயக்கும்.

பொலிஸ் ஆணைக்குழு (Police Commission) என்ற ஒன்று இப்போது இலங்கையில் இருக்கிறது, இது IOPC போல பொலிசை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பா எனத் தெரியாதெனக்கு. ஆனால், IOPC போல ஒன்று உருவாக வேண்டும் இலங்கையில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

மாகாண பொலிஸ் என்று வைத்துக் கொண்டால், பணிக்குச் சேர அந்த மாகாணங்களில் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதி வாழ்ந்திருக்க வேண்டும், அந்த மாகாணங்களில் பெரும்பான்மையான மொழியில் தேர்ச்சி இருக்க வேண்டும், இரண்டாவது மொழியில் ஒரு குறிப்பிட்ட நிலைப் பரீட்சயம் இருக்க வேண்டும் என்பன தகுதிகளாக இருக்கும்.

மாகாண பொலிஸ் ஆணையாளர் (commissioner) அல்லது பொலிஸ்மா அதிபர் (IG) தான் படைக்குப் பொறுப்பு.

ஆனால், மாகாணங்களிடையேயான குற்றத் தடுப்பிற்கு எப்படியும் ஒரு மத்திய பொலிஸ் படை தேவை, CBI, FBI, Carabinieri போல. அதை மத்திய அரசே இயக்கும்.

பொலிஸ் ஆணைக்குழு (Police Commission) என்ற ஒன்று இப்போது இலங்கையில் இருக்கிறது, இது IOPC போல பொலிசை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பா எனத் தெரியாதெனக்கு. ஆனால், IOPC போல ஒன்று உருவாக வேண்டும் இலங்கையில்.

நன்றி அண்ணா. எனது கருத்தையும் விரைவில் இடுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

எந்த மதங்களுக்கும் இலங்கை அரசு நிதியுதவி அளிக்கக்கூடாது என்பது தானே?? (சிறு கருத்து மயக்கம்)

நன்றி நுணா. அரச நிதி உதவியோ, முதன்மை/மத அந்தஸ்தோ, எந்த மதத்துக்கும் இருக்க கூடாது என்பதுதான் அந்த புள்ளி என நினைக்கிறேன். 

ஆனால் இது எமது “தேவையா”? அவர்கள் பெளத்தத்துக்கு அள்ளி கொடுப்பதா எம் பிரச்சனை ? அல்லது பெளத்தம் எமது பகுதியில் அத்துமீறி நுழைவதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nunavilan said:

எந்த மதங்களுக்கும் இலங்கை அரசு நிதியுதவி அளிக்கக்கூடாது என்பது தானே?? (சிறு கருத்து மயக்கம்)

இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காக தீர்வு பல முறை எட்டப்பட்டபோதும்.     குழப்பத்தில் முடிந்துள்ளது     குழப்பத்தில் முக்கிய பங்கு பௌத்த மதத்துக்கு உண்டு”      எனவேதான் அந்த மதத்துக்கு நிதியுதவி செல்லும் வழிகளை தடுக்க வேண்டும்         இதை நேரடியாக சொல்ல முடியவில்லை    எனவே மேற்படி முறையில்   நாகரிகமாக சொல்லியுள்ளோம்.  எதேயினும். பிழையுண்டா  ?   கைதடியன்.   🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

   எனவேதான் அந்த மதத்துக்கு நிதியுதவி செல்லும் வழிகளை தடுக்க வேண்டும்

அண்ணை, இதை விட தனி நாடு அமைப்பது இலகுவான விடயமாயிருக்கும்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அண்ணை, இதை விட தனி நாடு அமைப்பது இலகுவான விடயமாயிருக்கும்?

 

எனக்கு பிரச்சனையில்லை எடுங்கள் 🤣 எனது நம்பிக்கை அரசியல்வாதிகள் உடன்பாட்டாலும்.   பௌத்தமதம். ஒருபோதும் விடாது    எனவேதான் முதலில் ஒழிக்கவேண்டியது    அரசாங்கம் மதங்களுக்கு நிதியுதவி வழங்குவது    மக்கள் பங்களிப்புடன். மதங்கள் இயங்கலாம.....வளர்ச்சி அடையலாம்”    ஏன் அரசாங்கம் மதத்தை வளர்க்க வேண்டும் ஒரு மதத்தை வளர்த்து கொண்டு எப்படி நல்ணிணக்கம். பேச முடியும்  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

எனக்கு பிரச்சனையில்லை எடுங்கள் 🤣 எனது நம்பிக்கை அரசியல்வாதிகள் உடன்பாட்டாலும்.   பௌத்தமதம். ஒருபோதும் விடாது    எனவேதான் முதலில் ஒழிக்கவேண்டியது    அரசாங்கம் மதங்களுக்கு நிதியுதவி வழங்குவது    மக்கள் பங்களிப்புடன். மதங்கள் இயங்கலாம.....வளர்ச்சி அடையலாம்”    ஏன் அரசாங்கம் மதத்தை வளர்க்க வேண்டும் ஒரு மதத்தை வளர்த்து கொண்டு எப்படி நல்ணிணக்கம். பேச முடியும்  ?

நல்லிணக்கம் சாத்தியமில்லாமல் இருக்கலாம், போகலாம். ஆனால் பெளத்தத்தின் முன்னுரிமையை,  நிதி உதவியை தடுத்துத்தான் எமக்கு தீர்வு வரும் என காத்திருந்தால் - 3023 வரை காத்திருப்பதே ஒரே வழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

நல்லிணக்கம் சாத்தியமில்லாமல் இருக்கலாம், போகலாம். ஆனால் பெளத்தத்தின் முன்னுரிமையை,  நிதி உதவியை தடுத்துத்தான் எமக்கு தீர்வு வரும் என காத்திருந்தால் - 3023 வரை காத்திருப்பதே ஒரே வழி.

எதையுமே பெற்று கொண்டு தமிழர்களின் ராஜதந்திர திறமைமூலம் அடுத்த கட்டத்திற்கு நகருவதே சரியானதாக இருக்கும். எடுத்த எடுப்பில் எல்லாவற்றையும் நிராகரித்து செல்லம் மனநிலை தொடருமானால் நீங்கள் கூறியதுபோல் 3023 வரை காத்திருக்கலாம் அதற்கு மேலும் காத்திருக்கலாம். 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காக தீர்வு பல முறை எட்டப்பட்டபோதும்.     குழப்பத்தில் முடிந்துள்ளது     குழப்பத்தில் முக்கிய பங்கு பௌத்த மதத்துக்கு உண்டு”      எனவேதான் அந்த மதத்துக்கு நிதியுதவி செல்லும் வழிகளை தடுக்க வேண்டும்         இதை நேரடியாக சொல்ல முடியவில்லை    எனவே மேற்படி முறையில்   நாகரிகமாக சொல்லியுள்ளோம்.  எதேயினும். பிழையுண்டா  ?   கைதடியன்.   🤣

இது உண்மை. ஆனால் பௌத்த முன்னுரிமையை இல்லாமலாக்குவது நமக்கு நடைமுறையில் அவசியமான ஆணியா என்று யோசிக்க வேண்டும். இல்லையென்றே நினைக்கிறேன்:

1. இந்தியா மதச்சார்பற்ற, உலகாயத (secular) ஜனநாயகம் என சட்டத்தில் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் இன்று இந்து மதத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் நாடு. 75% பௌத்தர்கள் கொண்ட சிறிலங்காவில் சட்டத்தை மாற்றி பௌத்த மேலாண்மையை பெயரளவில் இல்லாமல் ஆக்கினாலும், மதச்சார்பின்மைச் சட்டம் ஏனைய மதங்களைக் குறி வைக்கும், பௌத்த மேலாண்மை குறையாது - இது என் கணிப்பு.

2. பௌத்த மேலாண்மை எங்கள் மாகாணங்கள் அல்லது அலகுகளில் உள் நுழையாமல் இருக்க வேறு நுட்பங்களைப் பாவிக்கலாம். உதாரணம்: காணி உரிமை. காணிகளை எந்த மதக் கட்டுமானத்திற்கும் வழங்க முன்னர் அந்த மாகாண அதிகார அமைப்பின் ஆய்வு, அனுமதி தேவையென்று ஒரு சட்டம் இருந்தால் இதைச் செய்யலாம். இது pie in the sky தான். ஆனால், உதாரணமாகச் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

இது உண்மை. ஆனால் பௌத்த முன்னுரிமையை இல்லாமலாக்குவது நமக்கு நடைமுறையில் அவசியமான ஆணியா என்று யோசிக்க வேண்டும். இல்லையென்றே நினைக்கிறேன்:

1. இந்தியா மதச்சார்பற்ற, உலகாயத (secular) ஜனநாயகம் என சட்டத்தில் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் இன்று இந்து மதத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் நாடு. 75% பௌத்தர்கள் கொண்ட சிறிலங்காவில் சட்டத்தை மாற்றி பௌத்த மேலாண்மையை பெயரளவில் இல்லாமல் ஆக்கினாலும், மதச்சார்பின்மைச் சட்டம் ஏனைய மதங்களைக் குறி வைக்கும், பௌத்த மேலாண்மை குறையாது - இது என் கணிப்பு.

2. பௌத்த மேலாண்மை எங்கள் மாகாணங்கள் அல்லது அலகுகளில் உள் நுழையாமல் இருக்க வேறு நுட்பங்களைப் பாவிக்கலாம். உதாரணம்: காணி உரிமை. காணிகளை எந்த மதக் கட்டுமானத்திற்கும் வழங்க முன்னர் அந்த மாகாண அதிகார அமைப்பின் ஆய்வு, அனுமதி தேவையென்று ஒரு சட்டம் இருந்தால் இதைச் செய்யலாம். இது pie in the sky தான். ஆனால், உதாரணமாகச் சொல்கிறேன்.

சரி தான் ....1...காணி

2..பொலிஸ்..

3....நிதி.....

இப்படியாக.    கேட்டதையோ.   திரும்பத்.   திரும்பக்  கேட்க்கிறோம்.    அவர்களும்...இல்லை   இல்லை என்கிறார்கள்    இது ஒரு காலவரையின்றி பேசப்படும் பேச்சுவார்த்தை        ஆனால் எதுவுமே நடக்க போவதில்லை எனவேதான் விரைவில் கிடைக்கும்படியானவற்றைக் கேட்க்கலாம்.  உதாரணமாக   நாடு முழுவதும்   ஒரே சட்டத்தின் ஆட்சி        குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி தண்டணை   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து கருத்துக்கள் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. இன்னும் பலர் வாசிப்பார்கள் என நம்புகிறேன். 

அதிகம், அதுவும் மாறுபட்ட கருத்துகளை எதிர்பார்க்கிறேன். 

உயிர் பாதுகாப்பு/ பொலிஸ் அதிகாரம்….தொடர்ச்சி -2

என் கருத்து

அதிகாரப்புலம்

1. இன்னும் என்ன அலகை கோருவது என நாம் சிந்திக்கவில்லை. அது நகர, மாவட்ட, மாகாண போலிஸ் படையாக இருக்கலாம். இப்போதைக்கு இந்த பூகோள வீச்செல்லையை - அலகு என அழைப்போம்.

2. இலங்கயில் மேலே ஜஸ்டின் அண்ணா சொன்னது போல் ஒரு தேசிய பொலிஸ் படையும், பல உள்ளூர் பொலிஸ் படைகளும் இருக்கலாம்.

3. உள்ளூர் பொலிஸ் படைகள் - அவர்களின் அலகுகளினுள் குறித்த வகையான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்தும் முழு அதிகாரம் உடையவராய் இருப்பர். உதாரணமாக - முழு நாட்டிற்கும் பொதுவான வீதி கோவை, போக்குவரத்து விதிகளை, அந்தந்த அலகுகளில் அவர்களின் உள்ளூர் படையே 100% அமல் படுத்தும். இதே போல் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல், குற்றங்களை விசாரித்தல் போன்றவற்றையும் இந்த பொலிஸ் படையே செய்யும். அதாவது உள்ளூர் மக்களோடு முகத்துக்கு-முகம் கொடுக்கும், நாளாந்த பொலிஸ் சேவையின் 90% ஆனவை (day to day policing) இந்த உள்ளூர் அலகினாலேயே நடத்தப்படும். ஒவ்வொரு ஊரிலும் இந்த சேவைக்கு ஒரு நிலையம் இருக்கும். இவர்கள் ஆயுதம் ஏந்தாத பொலிசாராக இருப்பர் (தமிழீழ காவல்துறையும், லண்டன் மெட் பொலிசும் 90% நேரம் அளவில் ஆயுதம் ஏந்துவதில்லை, ஏந்தியதில்லை).

4. அப்போ தேசிய பொலிஸின் அதிகாரப்புலம் என்ன? பயங்கரவாத எதிர் நடவைக்கைகள், நாட்டின் இறைமைக்கு எதிரான குற்றங்கள், கிளாஸ் A வகை போதை பொருள் எதிர் நடவடிக்கை, போன்றவற்றை இவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கலாம். தேவைப்பட்டால், கொலை உட்பட்ட, 5 வருடத்துக்கு மேல் தண்டனை கிடைக்க கூடிய குற்றங்களையும் இவர்கள் கையாளலாம். மாவட்டத்துக்கு ஒரு நிலையத்தில் இவர்கள் நிலை கொள்ளலாம். இவர்களுடன் உள்ளூர் பொலிசின் இணைப்பதிகாரிகளும் இருப்பர். மக்கள்-முக (public-facing) நடவடிக்கைக்கு இவர்கள் போகும் போது இந்த இணைப்பதிகாரிகளுடன் போக வேண்டும்.

இவர்களிடம் ஒரு ஆயுதப்படை இருக்கும். தேவைப்படும் போது இவர்களின் அதிகாரிகளும், உள்ளூர் படையின் அதிகாரிகளும் இந்த ஆயுதபடையின் உதவியை கோரலாம் (வாள்வெட்டு குழுவை சமாளிக்க). 

மேலே சொன்ன இரு பொலிஸ் படைகளும், அதிகாரிகள் தற்காலிக இடப்பெயர்வு (secondment), கூட்டு பயிற்சி, பட்டறைகள் மூலம் தமது ஒருங்கிணைப்பை, பரஸ்பர நம்பிக்கையை அதிகரித்து கொள்ளலாம்.

இந்த முறையை நான் ஏன் பிரேரிக்கிறேன்?

இங்கே முடிந்தளவு எதிர் எதிர் துருவங்களாக இருக்கும்,

தமிழரின் தேவையான, நம்மை நாமே ஒழுங்கு படுத்துதல், அந்நியர் எம்மை அதிகாரம் செய்யது தவிர்த்தல், இதன் மூலம் ஏற்படும் இனவாத விழைவுகளை தவிர்த்தல், முதலியனவை,

சிங்களவரின் தேவை அல்லது பயமாக இருக்கும், பயங்கரவாதம் வளர்வதை கண்காணிக்க முடியாமல் போய்விடும், ஒரு ஆயுதம் தரித்த தமிழர் பொலீஸ் தனி தமிழ் அரசின் இராணுவத்தின் முதல்படியாகி விடும், வடக்கு-கிழக்கில் சிங்களவர் இரெண்டாம் தரமாக நடத்தப்படுவர் 

இரெண்டையும் சமாளிக்க முயல்கிறேன்.

இந்த அணுகுமுறையில் பல நிலை விட்டு கொடுப்புகள் இருக்கிறன. உதாரணமாக முழு அதிகாரம் உள்ள, ஆயுதம் தாங்கிய உள்ளூர் பொலிஸ் என்ற நிலையை நாமும், நாட்டின் சகல பகுதியிலும் சர்வ அதிகாரம் கொண்ட, ஜனாதிபதிக்கு கீழான ஒற்றை பொலிஸ் படை என்ற நிலையில் இருந்து சிங்களவரும் இறங்கி வர வேண்டி இருக்கும்.

ஆனால் நான் மேலே கூறிய இரு பக்க நலன்களிலும் அதிக இறக்கம் இல்லாமல் - ஒரு அணைவை எட்ட முடியும்.

இங்கே பல சர்ச்சையான விடயங்களை கூறி உள்ளேன். குறிப்பாக புள்ளி 4இல். இதை அப்படியே இனவாதிகள் ஏற்று பாலும் தேனும் ஓட விடுவார்கள் என்று அப்பாவி தனமான நம்பிக்கை ஏதும் எனக்கு இல்லை.

ஆனால் முன்பே சொன்னது போல் இது எம் தெரிவுகள் பற்றி நாம், நமக்குள் அலசுவது மட்டுமே.

கருத்துகள் - எதிர் கருத்துகள், சவால்கள் வரவேற்கப்படுகிறன.

அடுத்து,  உள்ளூர் படையில் சேர்மானம், பூகோள வீச்சு, அதிகார கூம்பு, இரு படைகளுக்குமான மேற்பார்வை, அரசியல் தலைமைதும் (political Leadership) எப்படி அமைந்தால் - இந்த “நலன்களை இணைக்கும்” முயற்சி வெற்றி அடைய கூடும் என ஆராய்வோம்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற் குறிப்பு

இதில் அநேகம் பேர் கருத்து சொல்வதாக காணோம்.

கோசான் லூஸ்தனமா கற்பனை காண்கிறார் எண்டு நினைக்கிறார்களோ தெரியவில்லை🤣. அல்லது மேற்கின் திட்டத்தை கோஷான் விக்கிறார் என்ற ஐயமோ?  

அல்லது எழுதுவதை குழப்ப வேண்டாம் என்ற நல்லெண்ணமாகவும் இருக்கலாம்.

தர்க்கம்தான் ஒரு விடயத்தை வழுக் களையும். ஆகவே கருத்துக்களை சொல்லுங்கள்.

எது எப்படியோ 1.3 K பார்திருக்கிறார்கள்.  அந்த நம்பிக்கையில் தொடர்கிறேன்.

—————-

உயிர் பாதுகாப்பு/ பொலிஸ் அதிகாரம்….தொடர்ச்சி -3

என் கருத்து

உள்ளூர், தேசிய பொலிஸ் படைகளின் அரசியல் தலைமை

1. உள்ளூர் பொலிஸ் சேவையின் அரசியல் தலைமை பொறுப்பை இருவகையில் கைக்கொள்ளலாம்.

அ. மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் பொலிஸ் கமிசனர்கள், இரண்டு அல்லது மூன்று உதவி கமிசனர்கள்.

இந்த முறையில் கட்சி சார்ந்து அல்லது சாராமல் யாரும் நான்கு பேர் சேர்ந்து ஒரு அணியாக (candidate +3 running mates) போட்டியிடலாம். ஆனால் நால்வரில் தலா ஒரு தமிழர், முஸ்லிம், சிங்களவர் இருக்க வேண்டும்.

ஆ. அல்லது அலகின் தேர்தெடுக்க பட்ட அரசியல் சபையின் உறுப்பினர்களில் இருந்து கட்சி விகிதாசார அடிப்படையிலும், பெரும்பான்மை இனம்: சிறுபான்மை இனங்களின் கூட்டு 50:50 ஆக இருக்கும் படியும் ஒரு பொலீஸ் ஆணையத்தை அமைக்கலாம்.

மேலே உள்ள (அல்லது இதை ஒத்த) பொறிமுறைகள் - ஒரு அலகில் வாழும் சிறுபான்மைக்கும் தம்மை ஒழுங்கு படுத்தும் பொலிஸ் மீது நம்பிக்கை, எமது என்ற உணர்வை கொடுக்கும் (confidence and sense of ownership). உதாரணமாக தற்போதைய வடக்கு மாகாணம் ஒரு “அலகு” எனில் அதன் உள்ளூர் பொலிஸ் மீது சோனகரும், சிங்களவரும். அதே போல் தற்போதைய மத்திய மாகாணம் ஒரு “அலகு” எனில் அதன் உள்ளூர் பொலிஸ் மீது தமிழரும், சோனகரும் நம்பிக்கை வைக்க, எமது என உணர இது வழிகோலும். 

2. மேலே போல்ட் செய்யபட்ட “நம்பிக்கை” “எமது என உணர்தல்” என்ற தத்துவங்களின் (principles) அடிப்படையில் தேசிய பொலிசின் அரசியல் தலைமையையும் உருவாக்கலாம் (ஏலவே பொறிமுறை பற்றி சொன்னதால் - நீட்டி முளக்கவில்லை). 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

முற் குறிப்பு

இதில் அநேகம் பேர் கருத்து சொல்வதாக காணோம்.

கோசான் லூஸ்தனமா கற்பனை காண்கிறார் எண்டு நினைக்கிறார்களோ தெரியவில்லை🤣. அல்லது மேற்கின் திட்டத்தை கோஷான் விக்கிறார் என்ற ஐயமோ?  

அல்லது எழுதுவதை குழப்ப வேண்டாம் என்ற நல்லெண்ணமாகவும் இருக்கலாம்.

தர்க்கம்தான் ஒரு விடயத்தை வழுக் களையும். ஆகவே கருத்துக்களை சொல்லுங்கள்.

எது எப்படியோ 1.3 K பார்திருக்கிறார்கள்.  அந்த நம்பிக்கையில் தொடர்கிறேன்.

—————-

உயிர் பாதுகாப்பு/ பொலிஸ் அதிகாரம்….தொடர்ச்சி -3

என் கருத்து

உள்ளூர், தேசிய பொலிஸ் படைகளின் அரசியல் தலைமை

1. உள்ளூர் பொலிஸ் சேவையின் அரசியல் தலைமை பொறுப்பை இருவகையில் கைக்கொள்ளலாம்.

அ. மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்படும் பொலிஸ் கமிசனர்கள், இரண்டு அல்லது மூன்று உதவி கமிசனர்கள்.

இந்த முறையில் கட்சி சார்ந்து அல்லது சாராமல் யாரும் நான்கு பேர் சேர்ந்து ஒரு அணியாக (candidate +3 running mates) போட்டியிடலாம். ஆனால் நால்வரில் தலா ஒரு தமிழர், முஸ்லிம், சிங்களவர் இருக்க வேண்டும்.

ஆ. அல்லது அலகின் தேர்தெடுக்க பட்ட அரசியல் சபையின் உறுப்பினர்களில் இருந்து கட்சி விகிதாசார அடிப்படையிலும், பெரும்பான்மை இனம்: சிறுபான்மை இனங்களின் கூட்டு 50:50 ஆக இருக்கும் படியும் ஒரு பொலீஸ் ஆணையத்தை அமைக்கலாம்.

மேலே உள்ள (அல்லது இதை ஒத்த) பொறிமுறைகள் - ஒரு அலகில் வாழும் சிறுபான்மைக்கும் தம்மை ஒழுங்கு படுத்தும் பொலிஸ் மீது நம்பிக்கை, எமது என்ற உணர்வை கொடுக்கும் (confidence and sense of ownership). உதாரணமாக தற்போதைய வடக்கு மாகாணம் ஒரு “அலகு” எனில் அதன் உள்ளூர் பொலிஸ் மீது சோனகரும், சிங்களவரும். அதே போல் தற்போதைய மத்திய மாகாணம் ஒரு “அலகு” எனில் அதன் உள்ளூர் பொலிஸ் மீது தமிழரும், சோனகரும் நம்பிக்கை வைக்க, எமது என உணர இது வழிகோலும். 

2. மேலே போல்ட் செய்யபட்ட “நம்பிக்கை” “எமது என உணர்தல்” என்ற தத்துவங்களின் (principles) அடிப்படையில் தேசிய பொலிசின் அரசியல் தலைமையையும் உருவாக்கலாம் (ஏலவே பொறிமுறை பற்றி சொன்னதால் - நீட்டி முளக்கவில்லை). 

கோசான், எனக்கும் இந்தக் குறைந்த பங்களிப்பு அதிசயம் தருகிறது. நாங்கள் மூன்று தசாப்தங்களாகப் பேசிக் கொண்டும், யாசித்துக் கொண்டும் இருக்கும் சில lofty தீர்வுகளின் துல்லியமான கூறுகளைப் பேச அனேகர் தயாராக இல்லை, அயர்ச்சியா அல்லது வேறெதும் காரணமா தெரியவில்லை.

"ஒற்றை ஆட்சி" "எக்க ராஜ்ஜிய" "சமஷ்டி" ஆகிய சில சொற்களை வைத்துக் கொண்டு பக்கக் கணக்காக doctoral theses எழுதிய மக்கள்  granular details என்று வந்தால் பட்டியலிடத் தயங்குகிறார்கள்!

ஆனால், தொடருங்கள், நானும் எனக்குத் தெரிந்ததைப் பதிகிறேன். நேரத்திற்கு நன்றி! 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

முற் குறிப்பு

இதில் அநேகம் பேர் கருத்து சொல்வதாக காணோம்.

கோசன் - சே அவர்களே, இங்கே யாரும் தமது கருத்துகளை அல்லது ஆலோசனைகளைப் பதியவில்லை என்று கருதாது கருத்துகளை முன்வைத்தால் வாசிப்பார்களென்றே எண்ணுகின்றேன். மற்றும் இங்கு கருத்தாடும் அனைவருக்கும் நன்றி. 

சத்தியாக்கிரகம் - அடிதடி – ஒப்பந்தம் - ஒப்பந்தம் கிழிப்பு – தமிழின அழிப்பு  - போர் - சமாதான ஒப்பந்தம் - தமிழின அழிப்பு என்று ஒரே வட்டமாகச் சுழன்றடிக்கும் தமிழர் வாழ்வு தந்த பட்டறிவு, விரக்திகூட எழுதத் தடையாக இருக்கலாம். தற்போதைய பேச்சுவார்தைகூட சிங்களம் தன்னை நிலைநிறுத்தத் தமிழரை ஏமாற்றும் மற்றொரு நகர்வென்பதே பெரும்பாலான தமிழரது நிலை. நிற்க....
------------------------------------------------------------------------------------------------
மாகாண எல்லைக்குட்பட்ட ஆட்சிப் பிரதேசத்தில் மாகாண காவற்றுறை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் ஒரு முதன்மைக் காவல்துறை ஆணையர், முன்று துணை ஆணையர்கள், பிராந்திய ஆணையர்கள் கொண்டதொரு பொறிமுறையின் கீழான காவற்றுறைக் கட்டமைப்பும், மத்திய அரசின் கீழ் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு, போதைப்பொருள் கடத்தல் போன்ற விடயங்களையும் கையாள இணைந்த காவற்றுறைக் கட்டமைப்பும் அமைதல் பொருத்தமானது.
எந்தவகைக் காவற்றுறைக் கட்டமைப்பாயினும் சமத்துவமான சட்ட ஒழுங்குபேணல் தொடர்பான வரைவுகள் அவசியமாகும். இவையனைத்தையும் கட்டமைத்தல், கட்டுப்படுத்தல், நெறிப்படுத்துதல், கற்பித்தல் போன்றவற்றை அணியம் செய்ய தலைசிறந்த காவற்றுறை ஆணைக் குழு ஒன்று இருக்க வேண்டும். அது தமிழ், முஸ்லீம், சிங்கள உறுப்பினர்களைக் கொண்டதாக இருத்தல் ஐயமற்ற அல்லது அச்சமற்ற செயற்பாடுகளுக்குத் துணைபுரியலாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.