Jump to content

ஈழத் தமிழரின் அபிலாசைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nochchi said:

கோசன் - சே அவர்களே, இங்கே யாரும் தமது கருத்துகளை அல்லது ஆலோசனைகளைப் பதியவில்லை என்று கருதாது கருத்துகளை முன்வைத்தால் வாசிப்பார்களென்றே எண்ணுகின்றேன். மற்றும் இங்கு கருத்தாடும் அனைவருக்கும் நன்றி. 

சத்தியாக்கிரகம் - அடிதடி – ஒப்பந்தம் - ஒப்பந்தம் கிழிப்பு – தமிழின அழிப்பு  - போர் - சமாதான ஒப்பந்தம் - தமிழின அழிப்பு என்று ஒரே வட்டமாகச் சுழன்றடிக்கும் தமிழர் வாழ்வு தந்த பட்டறிவு, விரக்திகூட எழுதத் தடையாக இருக்கலாம். தற்போதைய பேச்சுவார்தைகூட சிங்களம் தன்னை நிலைநிறுத்தத் தமிழரை ஏமாற்றும் மற்றொரு நகர்வென்பதே பெரும்பாலான தமிழரது நிலை. நிற்க....

நன்றி நொச்சி.

கருத்து வைக்கவில்லை என்ற கவலையை விட, நான் சொல்வதை சீர்தூக்கி (scrutinize) பார்ப்பது குறைவாக உள்ளதே என்பதே என் அங்கலாய்ப்பு.

ஏமாற்று பட்டதான்பாலான “விரக்தி” எனக்கும் உண்டு. எனக்கும் தீர்வு வரும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் நம் தெரிவுகளை இட்டு நமக்குள் பேசி தெளிவதில் பிழையில்லை என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

1 hour ago, Justin said:

கோசான், எனக்கும் இந்தக் குறைந்த பங்களிப்பு அதிசயம் தருகிறது. நாங்கள் மூன்று தசாப்தங்களாகப் பேசிக் கொண்டும், யாசித்துக் கொண்டும் இருக்கும் சில lofty தீர்வுகளின் துல்லியமான கூறுகளைப் பேச அனேகர் தயாராக இல்லை, அயர்ச்சியா அல்லது வேறெதும் காரணமா தெரியவில்லை.

"ஒற்றை ஆட்சி" "எக்க ராஜ்ஜிய" "சமஷ்டி" ஆகிய சில சொற்களை வைத்துக் கொண்டு பக்கக் கணக்காக doctoral theses எழுதிய மக்கள்  granular details என்று வந்தால் பட்டியலிடத் தயங்குகிறார்கள்!

ஆனால், தொடருங்கள், நானும் எனக்குத் தெரிந்ததைப் பதிகிறேன். நேரத்திற்கு நன்றி! 

நன்றி அண்ணா.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Sasi_varnam

கோஷன்... உங்களை போல ஆழமான அரசியல் பார்வை இல்லை என்ற "டிஸ்கிளேய்மரோடு" மனதில் பட்டத்தை இங்கே எழுதுகிறேன்.  தமிழர் நிலைகளாக நான் பார்ப்பது:  1. சுதந்திர தமிழீழம் - தனிநாடு - [பேரச்சிக்கல் கொண்டது

goshan_che

நன்றி சசி.  எனது அடுத்த பதிவை உங்கள் பதிவில் இருந்து தொடர்வது பொருத்தமாக இருக்கும் என்பதால் - தொடர்கிறேன். அடுத்து என் பார்வையில் எமது நலன்கள் என்றால் என்ன என பார்க்கும் முன், நிலை, நலன் என்

goshan_che

🤣 நன்றி அண்ணை.  இவை எமது நிலைகள். ‘48 முதல் எமது தலைவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் கோரி வந்த வேறுபட்ட “தீர்வுகள்”. நீங்கள் சொன்னது போல் அவர்கள் 75 ஆண்டுகளாய் கதவே திறக்காத கோரிக்கைகள்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nochchi said:

மாகாண எல்லைக்குட்பட்ட ஆட்சிப் பிரதேசத்தில் மாகாண காவற்றுறை முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் ஒரு முதன்மைக் காவல்துறை ஆணையர், முன்று துணை ஆணையர்கள், பிராந்திய ஆணையர்கள் கொண்டதொரு பொறிமுறையின் கீழான காவற்றுறைக் கட்டமைப்பும், மத்திய அரசின் கீழ் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு, போதைப்பொருள் கடத்தல் போன்ற விடயங்களையும் கையாள இணைந்த காவற்றுறைக் கட்டமைப்பும் அமைதல் பொருத்தமானது.
எந்தவகைக் காவற்றுறைக் கட்டமைப்பாயினும் சமத்துவமான சட்ட ஒழுங்குபேணல் தொடர்பான வரைவுகள் அவசியமாகும். இவையனைத்தையும் கட்டமைத்தல், கட்டுப்படுத்தல், நெறிப்படுத்துதல், கற்பித்தல் போன்றவற்றை அணியம் செய்ய தலைசிறந்த காவற்றுறை ஆணைக் குழு ஒன்று இருக்க வேண்டும். அது தமிழ், முஸ்லீம், சிங்கள உறுப்பினர்களைக் கொண்டதாக இருத்தல் ஐயமற்ற அல்லது அச்சமற்ற செயற்பாடுகளுக்குத் துணைபுரியலாம்.

நன்றி,

நான் இங்கே வேணும் என்றே அலகின் தலைமைபீடத்தையும் (முதலமைச்சர்), உள்ளூர் பொலிசின் அரசியல் தலைமை பீடத்தையும் வெவெவ்வேறாக வைத்திருக்க பிரேரித்தேன். 

இதன் அடிப்படையாக நான் கொள்வது பொலீசின் சுயாதீனத்துவத்தையே.

உதாரணமாக வட அயர்லாந்து பொலிசை எடுத்தால். தீர்வுக்கு முன்னதாக அது மாகாண (வட அயர்லாந்து), மத்திய (யூகே) அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டில் அது இருந்தமை ஒரு தவறாக கருதப்பட்டது. பின்னர் மேலே உள்ளதை ஒத்த ஒரு பொறிமுறை தீர்வின் அம்சமாக ஆகியது.

அதே போல் இங்கிலாந்திலும் படிப்படியாக உள்ளூர் பொலிஸ் சேவைகளின் அரசியல் தலைமைதுவத்தை முழுநேர அரசியல்வாதிகளிடம் இருந்து விலத்தும் போக்கு உள்ளது.

இலங்கையில் இப்போ பொலிஸ் அதிகாரம் முழுவதும் உள்நாட்டு அமைச்சர், ஜனாதிபதியிடம் குவிந்துள்ளதை நான் ஒரு தவறாக காண்கிறேன்.

அதன் பிரதி போல், உள்ளூர் பொலிஸ் அதிகாரங்களை கட்டாயம் முதல் அமைச்சரிடம் கொடுக்த்தான் வேணுமா?

பொலிஸ் ஆணையாளரை + குழாமை மக்கள் நேரடியாக தேர்வது, அல்லது தேர்தெடுக்க பட்ட மக்கள் பிரதிநிதிகள் கூடி ஒரு ஆணையமாக செயல்படுத்தும் போது, கூடிய ஜனநாயக பொறுப்பு கூறலும், ஓருவரிடத்தில் அதிகாரம் குவிவதும் தடுக்கப்படும். 

அதாவது முதல்வர் அரச பரிபாலனத்தை செய்ய, ஆணையர் அல்லது ஆணையம் சுயாதீனமாக பொலிஸ் வேலையை செய்யலாம் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் நன்றிகள்

தொடர்ந்து வாசித்து வருகிறேன்

எனக்கு பேச்சு என்றாலே அலர்ஜி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

முற் குறிப்பு

இதில் அநேகம் பேர் கருத்து சொல்வதாக காணோம்.

கோசான் லூஸ்தனமா கற்பனை காண்கிறார் எண்டு நினைக்கிறார்களோ தெரியவில்லை🤣. அல்லது மேற்கின் திட்டத்தை கோஷான் விக்கிறார் என்ற ஐயமோ?  

கோசான் உங்கள் அளவுக்கு அளவுக்கு அரசியல் நுண்ணறிவு எனக்கு இல்லாததால் அதிகம் எழுதவில்லை. ஆனால் தொடர்ந்து வாசிக்கிறேன். அதே போல்  பலரும் வாசிக்கிறார்கள்.

அதேவேளை இப்படியான சட்ட விளக்கங்களுடன் கூடிய அரசியற்தீர்வு முன்மொழிவுக் கருத்துக்களுக்கு பதிலளிப்பது என்பது, ஊர்பபுதினத்தில் ஒரு செய்தியை வாசித்து அதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதியை திட்டி அவதூறு பண்ணி நாலு வசனம் எழுதுவது போல் இலகுவானதல்ல.   அதனால் இங்கு கருத்துகள் குறைவாக உள்ளது.

இருந்தாலும் தொடர்ந்து எழுதுங்கள். நான் உட்பட  பலர் வாசிப்பார்கள். இவ்வாறான கருத்துக்கள் பலருக்கும் அரசியல் தெளிவை பெறவும் பரந்துபட்ட அரசியல் அறிவைப் பெறவும்  உதவியாக இருக்கும். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

முற் குறிப்பு

இதில் அநேகம் பேர் கருத்து சொல்வதாக காணோம்.

கோசான் லூஸ்தனமா கற்பனை காண்கிறார் எண்டு நினைக்கிறார்களோ தெரியவில்லை🤣. அல்லது மேற்கின் திட்டத்தை கோஷான் விக்கிறார் என்ற ஐயமோ?  

அல்லது எழுதுவதை குழப்ப வேண்டாம் என்ற நல்லெண்ணமாகவும் இருக்கலாம்.

தர்க்கம்தான் ஒரு விடயத்தை வழுக் களையும். ஆகவே கருத்துக்களை சொல்லுங்கள்.

எது எப்படியோ 1.3 K பார்திருக்கிறார்கள்.  அந்த நம்பிக்கையில் தொடர்கிறேன்.

—————-

நாங்கள் இங்கு கருத்து எழுதினால், உங்களுக்கு காதாலை புகை போகும் பரவாயில்லையா. 😂
ஆக்கபூர்வமான திரியை… கேலிக் கூத்தாக்க விரும்பாததால் கருத்து பகிரவில்லை. 😎
நீங்கள் சோர்வடையாமல்…. ✍️எழுதுங்கள் கோசான்.🤗
நாங்கள், வாசித்துக் கொண்டு இருக்கின்றோம். 🙂

Edited by தமிழ் சிறி
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

நாங்கள் இங்கு கருத்து எழுதினால், உங்களுக்கு காதாலை புகை போகும் பரவாயில்லையா. 😂
ஆக்கபூர்வமான திரியை… கேலிக் கூத்தாக்க விரும்பாததால் கருத்து பகிரவில்லை. 😎
நீங்கள் சோர்வடையாமல்…. ✍️எழுதுங்கள் கோசான்.🤗
நாங்கள், வாசித்துக் கொண்டு இருக்கின்றோம். 🙂

அதே......👍🏼

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

கருத்து வைக்கவில்லை என்ற கவலையை விட, நான் சொல்வதை சீர்தூக்கி (scrutinize) பார்ப்பது குறைவாக உள்ளதே என்பதே என் அங்கலாய்ப்பு.

ஏமாற்று பட்டதான்பாலான “விரக்தி” எனக்கும் உண்டு. எனக்கும் தீர்வு வரும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் நம் தெரிவுகளை இட்டு நமக்குள் பேசி தெளிவதில் பிழையில்லை என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

 

On 14/12/2022 at 18:52, nochchi said:

கோசான் - சே மற்றும் சசிவர்ணம் ஆகியோரால் சுட்டப்படும் சமகால அரசியற் கருத்தாய்வு விடயங்கள் சிறப்பு. ஏனையவர்களது கருத்துகளும் ஏமாற்றங்கள் மற்றும் பட்டறிவின் வழியே மனங்களை ஊடறுத்து நிற்பவையே. யாழ் களத்தினது நோக்குநிலையிலானதொரு திரியாக நகர்கிறது. இவை வெவ்வேறாகவும் தனித்தனியாகவும் பேசப்பட்டாலும், ஒரு விழிப்பு நிலைக்கானதும், கூட்டிணைந்த கருத்தாடலுக்கும், சமகால அரசியற் புரிதலுக்கும் தமிழரது எதிர்கால நலன் நோக்கிலான குறைந்தபட்சத் தெளிவை அடையவும் இதுபோன்ற கருத்தாடல்கள் அவசியமானது.  அனைவருக்கும் நன்றி.


தமிழர்கள் நூறு ஆண்டுகளாகச் சிங்களத் தலைமைகளால் ஏமாற்றப்பட்டுவருகிறார்கள். 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, நான் ஏலவே சுட்டியதுபோல் ஒரு தெளிவான உரையாடலாக வளர்வதுகூட இன்றைய சூழலில் தேவையானதே. 
நன்றி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் பாதுகாப்பு/ பொலிஸ் அதிகாரம்….தொடர்ச்சி -4

உள்ளூர், தேசிய பொலிஸ் சேவைகளின் சேர்மானமும் ஆட்சி கூம்பும்

1. உள்ளூரியல் (localism) தத்துவத்தின் அடிப்படையாக கொண்டு, உள்ளூர் பொலிஸ் சேவையில் இருப்போர் அந்த அலகின் மக்கள் தொகையின் இன விகிதாசாரப்படி அமைய வேண்டும் என அமைத்தும்.

2. இலங்கயில் எப்பாகத்தில் பொலிஸ் சேவையில் சேரவும் இரு மொழிகளும் பேசும் அளவுக்கு தேர்சியும், அதிகாரிகள் தரத்தினர் குறைந்தது இரு பாடங்களிலும் சாதாரண தர சித்தியும் அடைந்திருத்தால் அவசியம் என அமைத்தும்.

3. பொலிஸ் சேவையில் சேரும் போதும் தொடர்ந்தும் கொடுக்கப்படும் பயிற்சியின் போது நாட்டின் வேறுபட்ட கலாச்சார, மொழி, பண்பாட்டியல், சமய, சமூக வேறுபாடுகளை பற்றிய முறைசார் கற்கை நெறிகளை கொடுத்து, பொலிசாரின் நிறுவன நடத்தை, கலாச்சாரத்தில் (institutional behavior and culture) நாட்டின் பல்லினதுவத்தை மதிக்கும், பேணும் பாங்கை அதிகரிக்க செய்வதன் மூலமும்.

 நவீன, உள்ளூர்-நட்பான, இலகுவில் அணுக கூடிய உள்ளூர், தேசிய பொலிஸ் சேவைகளை அமைத்து கொள்ளலாம்.

4. இந்த சேவைகளின் ஆட்சி கூம்பை பொறுத்தவரை தற்போது உள்ள பொலிஸ் சேவை கமிசனை இன்னும் சுயாதீனமாக்கி, தேசிய அரசின் வலுவை குறைத்து, உள்ளூர் அலகின் தலைவரின் வலுவை கூட்டி ஒரு பொறிமுறையை கோரலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உயிர் பாதுகாப்பு/ பொலிஸ் அதிகாரம்….தொடர்ச்சி -4

உள்ளூர், தேசிய பொலிஸ் சேவைகளின் மீதான முறைப்பாடுகள் பொறுப்புகூறல்

1. ஒரு சுயாதீன முறைப்பாட்டு அமைப்பை நிறுவி (independent police complaints commission) - இதை சட்ட வலு மிக்கதாக்கி, பொலிஸாரின் நடத்தை மீது சாதாரண குடிகளும் முறைப்பாடு செய்யும், அதை விரைந்து விசாரித்து, தகுந்த தண்டனையும் கொடுக்கும் அதிகாரத்தை இந்த அமைபுக்கு கொடுக்கலாம்.

2. இந்த அமைப்புக்கு ஆட்சேர்க்கும் போது தற்போது உள்ள  தேசிய பொலிஸ் முறைப்பாட்டு ஆணையத்தை சேவை  இன்னும் சுயாதீனமாக்கி, தேசிய அரசின் வலுவை குறைத்து, உள்ளூர் அலகின் தலைவரின் வலுவை கூட்டி ஒரு பொறிமுறையை கோரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இடைக்கால முடிவுரை

மேலே திரட்டபடாத தேவைகளின் பட்டியலில் இருந்து பொலிஸ் அதிகாரம் என்ற திரட்டப்பட்ட தேவையையும்,

அந்த தேவையை எவ்வாறு நிலைகளுக்குள் சிக்கிகொள்ளாமல், நாம் நலன்களை அடையாளம் கண்டு அதனை அடைவதன் மூலம் பூர்த்தி செய்யலாம் என்பதையும் ஓரளவு விலாவாரியாகவே அலசி இருக்கிறோம்.

இதை போலவே, காணி, கல்வி, பூகோள எல்லை ஏனைய திரட்டப்பட்ட தேவைகளையும் இதை ஒத்த அணுகுமுறை மூலம் அணுகுவதால் நாம் சாதிக்ககூடியதாக இருக்க கூடும்.

நிற்க:

இதை ஒரு திரியாக அன்றி கருத்தாகவே நான் எழுத ஆரபித்தேன் என்பது தெரிந்ததே.  

ஆனால் இதை எழுத தொடங்கியதன் பின் எனக்கு சிலது மனதில் சற்றே தெளிவாக விளங்கியது.

அவையாவன;

1. ஒரு தேசிய இனமாக அபிலாசைகளை கொண்டிருப்பது தவறல்ல. ஆனால் அந்த அபிலாசைகளை அடையும் தகமை அந்த தேசிய இனத்துக்கு இருக்க வேண்டும்.

2. இந்த தகமைகளில் முக்கியமானது. ஒரு தேசிய இனம் உள்ளும், புறமுமாக தாம் ஒரு கூட்டம் என உணர வேண்டும்.

உதாரணமாக சிங்கள தேசிய இனத்தை எடுத்தால், பல வேறுபாடுகளை கடந்து கிட்டதட்ட அனைவருமே சிங்கள மொழி அதன் பால்பட்ட சிங்கள இன அடையாளத்தை தமது என உணருகின்றனர். 

மலைநாட்டு சிங்களவர் தான் சிங்களவர் கீழ்நாட்டு சிங்களவர் சற்றே சிங்களத்துவம் குறைந்த சிங்களவர் என அவர்கள் நினைப்பதில்லை.

மதவிடயத்திலும் அப்படியே.

அவர்கள் மத்தியில் வேறுபாடுகள், நான் பெரிது நீ பெரிது போட்டிகள் இல்லாமல் இல்லை.  

ஆனால் நாம் எல்லோரும் சம-சிங்களவர் என்ற அற்புதமான புரிதல் இருக்கிறது. பெளத்ததுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டாலும் கூட.

இதனால்தான் அவர்கள் அரசியல்வாதிகள் எவ்வளவு பிடுங்கு பட்டாலும், இனம் என்று வரும் போது ஆளையாள் மேவி நடந்து இன நலனை காத்து நிற்க முடியுமாய் இருக்கிறது.

நாமும் இப்படி ஒரு இனமாமக ஒரு காலத்தில் இருந்தோம்.

2005 வாக்கில் ஒரு தேசமாக தேவைப்பட கூடிய தகமைகள் அனைத்தையும் கொண்டு, நம்மை ஒரு இனமாக ஒற்றை அடையாளமாக உள்ளும் புறமுமாக உணர்ந்து - ஒரு தேசிய இனமாக பரிணமித்து நின்றோம்.

அன்று நாம் சிங்களவரை விட ஒரு படி மேல் போய், எந்த மதத்துக்கும், பிரதேசத்துக்கும் முன்னுரிமை கொடாத ஒரு நவீன தேசிய இனமாக மிளிர்ந்தோம்.

அன்று நாம் ஒற்றை இன அடையாளத்தை ஏற்றது போலவே எமது தலைமையும் அந்த ஒற்றை அடையாளத்தின் பால் ஒழுகி நின்றது.

அன்று நாம் இந்த உயரிய அபிலாசைகளுக்கு (higher aspirations) தகுதி உடையவராய் இருந்தோம்.

ஆனால் இன்று?

நாமே பிரதேச ரீதியிலும், சமய ரீதியிலும் நமது ஒற்றை இன அடையாளத்தில் இருந்து விலகி ஓடுகிறோம். நாளைக்கு சாதியும் இந்த பட்டியலில் சேரக்கூடும்.

2023 இல் ஒரு வெளியார் ஈழ தமிழரை உற்று நோக்குவாராயின் - ஒரு தேசிய இனத்துக்கான தகமைகள் எதையும் எம்மிடையே காண மாட்டார்.

மக்கள் எவ்வழியோ, தலைவர்களும் அவ்வழியே.

இதையே எமது சுயநலமான, விலைபோன, பொய்யான, கோமாளி தலைவர்களும் பிரதிபலிக்கிறார்கள்.

3. ஆகவே இந்த அபிலாசைகளை பற்றி எழுதுவது இப்போ எனக்கு அசந்தர்பமாக தெரிகிறது. கொஞ்சம் கற்பனாவாதமாகவும் கூட.

4. ஆகவே  இப்போதைக்கு ஒரு இடைக்கால முடிவுரையை எழுதுகிறேன்.

புறச்சூழல் மாற்றங்கள் தொடர்ந்தும் எழுத வேண்டிய தேவையை உணர்தினால் தொடர்ந்து எழுதுகிறேன்.

வேறு யாரும் தொடர விரும்பினால் தொடரவும். 

இதுவரை பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி.

 

 

 

 

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

உதாரணமாக சிங்கள தேசிய இனத்தை எடுத்தால், பல வேறுபாடுகளை கடந்து கிட்டதட்ட அனைவருமே சிங்கள மொழி அதன் பால்பட்ட சிங்கள இன அடையாளத்தை தமது என உணருகின்றனர். 

மலைநாட்டு சிங்களவர் தான் சிங்களவர் கீழ்நாட்டு சிங்களவர் சற்றே சிங்களத்துவம் குறைந்த சிங்களவர் என அவர்கள் நினைப்பதில்லை.

மதவிடயத்திலும் அப்படியே.

அவர்கள் மத்தியில் வேறுபாடுகள், நான் பெரிது நீ பெரிது போட்டிகள் இல்லாமல் இல்லை.  

ஆனால் நாம் எல்லோரும் சம-சிங்களவர் என்ற அற்புதமான புரிதல் இருக்கிறது.

தமிழர்களை வெளியிலிருந்தே பிரித்துவிடுகிறார்கள்.

சிங்களவர்களை பிரிக்க எவருமே முயலவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

தமிழர்களை வெளியிலிருந்தே பிரித்துவிடுகிறார்கள்.

சிங்களவர்களை பிரிக்க எவருமே முயலவில்லை.

100% உண்மை.

ஒரு காலத்தில் அவர்களை மேல் நாடு கீழ் நாடு, பெளத்தம், கிறிஸ்தவம் என பிரித்து வைத்துள்ளார்கள்.

ஆனால் அநகாரிக தர்மபால போன்றோர் வந்து ஒற்றை அடையாளத்தை கட்டி எழுப்ப - அதை அப்படியே பிடித்து அதன் வழி நிற்கிறார்கள்.

தலைவர் அதையே எமக்கு செய்ய விழைந்தார் - ஆனால் அவரை project ஐ முடிக்க முதல் விரைந்து அனுப்பிவிட்டார்கள்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இடைக்கால முடிவுரை

மேலே திரட்டபடாத தேவைகளின் பட்டியலில் இருந்து பொலிஸ் அதிகாரம் என்ற திரட்டப்பட்ட தேவையையும்,

அந்த தேவையை எவ்வாறு நிலைகளுக்குள் சிக்கிகொள்ளாமல், நாம் நலன்களை அடையாளம் கண்டு அதனை அடைவதன் மூலம் பூர்த்தி செய்யலாம் என்பதையும் ஓரளவு விலாவாரியாகவே அலசி இருக்கிறோம்.

இதை போலவே, காணி, கல்வி, பூகோள எல்லை ஏனைய திரட்டப்பட்ட தேவைகளையும் இதை ஒத்த அணுகுமுறை மூலம் அணுகுவதால் நாம் சாதிக்ககூடியதாக இருக்க கூடும்.

நிற்க:

இதை ஒரு திரியாக அன்றி கருத்தாகவே நான் எழுத ஆரபித்தேன் என்பது தெரிந்ததே.  

ஆனால் இதை எழுத தொடங்கியதன் பின் எனக்கு சிலது மனதில் சற்றே தெளிவாக விளங்கியது.

அவையாவன;

1. ஒரு தேசிய இனமாக அபிலாசைகளை கொண்டிருப்பது தவறல்ல. ஆனால் அந்த அபிலாசைகளை அடையும் தகமை அந்த தேசிய இனத்துக்கு இருக்க வேண்டும்.

2. இந்த தகமைகளில் முக்கியமானது. ஒரு தேசிய இனம் உள்ளும், புறமுமாக தாம் ஒரு கூட்டம் என உணர வேண்டும்.

உதாரணமாக சிங்கள தேசிய இனத்தை எடுத்தால், பல வேறுபாடுகளை கடந்து கிட்டதட்ட அனைவருமே சிங்கள மொழி அதன் பால்பட்ட சிங்கள இன அடையாளத்தை தமது என உணருகின்றனர். 

மலைநாட்டு சிங்களவர் தான் சிங்களவர் கீழ்நாட்டு சிங்களவர் சற்றே சிங்களத்துவம் குறைந்த சிங்களவர் என அவர்கள் நினைப்பதில்லை.

மதவிடயத்திலும் அப்படியே.

அவர்கள் மத்தியில் வேறுபாடுகள், நான் பெரிது நீ பெரிது போட்டிகள் இல்லாமல் இல்லை.  

ஆனால் நாம் எல்லோரும் சம-சிங்களவர் என்ற அற்புதமான புரிதல் இருக்கிறது. பெளத்ததுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டாலும் கூட.

இதனால்தான் அவர்கள் அரசியல்வாதிகள் எவ்வளவு பிடுங்கு பட்டாலும், இனம் என்று வரும் போது ஆளையாள் மேவி நடந்து இன நலனை காத்து நிற்க முடியுமாய் இருக்கிறது.

நாமும் இப்படி ஒரு இனமாமக ஒரு காலத்தில் இருந்தோம்.

2005 வாக்கில் ஒரு தேசமாக தேவைப்பட கூடிய தகமைகள் அனைத்தையும் கொண்டு, நம்மை ஒரு இனமாக ஒற்றை அடையாளமாக உள்ளும் புறமுமாக உணர்ந்து - ஒரு தேசிய இனமாக பரிணமித்து நின்றோம்.

அன்று நாம் சிங்களவரை விட ஒரு படி மேல் போய், எந்த மதத்துக்கும், பிரதேசத்துக்கும் முன்னுரிமை கொடாத ஒரு நவீன தேசிய இனமாக மிளிர்ந்தோம்.

அன்று நாம் ஒற்றை இன அடையாளத்தை ஏற்றது போலவே எமது தலைமையும் அந்த ஒற்றை அடையாளத்தின் பால் ஒழுகி நின்றது.

அன்று நாம் இந்த உயரிய அபிலாசைகளுக்கு (higher aspirations) தகுதி உடையவராய் இருந்தோம்.

ஆனால் இன்று?

நாமே பிரதேச ரீதியிலும், சமய ரீதியிலும் நமது ஒற்றை இன அடையாளத்தில் இருந்து விலகி ஓடுகிறோம். நாளைக்கு சாதியும் இந்த பட்டியலில் சேரக்கூடும்.

2023 இல் ஒரு வெளியார் ஈழ தமிழரை உற்று நோக்குவாராயின் - ஒரு தேசிய இனத்துக்கான தகமைகள் எதையும் எம்மிடையே காண மாட்டார்.

மக்கள் எவ்வழியோ, தலைவர்களும் அவ்வழியே.

இதையே எமது சுயநலமான, விலைபோன, பொய்யான, கோமாளி தலைவர்களும் பிரதிபலிக்கிறார்கள்.

3. ஆகவே இந்த அபிலாசைகளை பற்றி எழுதுவது இப்போ எனக்கு அசந்தர்பமாக தெரிகிறது. கொஞ்சம் கற்பனாவாதமாகவும் கூட.

4. ஆகவே  இப்போதைக்கு ஒரு இடைக்கால முடிவுரையை எழுதுகிறேன்.

புறச்சூழல் மாற்றங்கள் தொடர்ந்தும் எழுத வேண்டிய தேவையை உணர்தினால் தொடர்ந்து எழுதுகிறேன்.

வேறு யாரும் தொடர விரும்பினால் தொடரவும். 

இதுவரை பங்கெடுத்த அனைவருக்கும் நன்றி.

 

 

 

 

இந்திய இராணுவம் எமது பகுதியில் நிலை கொண்டிருந்த காலம்; இரண்டு ஊர்களுக்க்கிடையே சண்டை, இளைஞர் ஒருவர் அவருடன் படிக்கும் மாணவியினை நக்கலாக எதோ சொல்ல  ஆரம்பித்த பிரச்சினை இரண்டு ஊர்களுக்கிடையேயான சண்டையாக பரிணமிக்க இருந்தது சரியான நேரத்தில் போராளிகள் தலையிட்டமையால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

இரண்டு ஊர் மக்களையும் விசாரனைக்கு அழைத்த போராளிகள்; ஒரு ஊரில் உள்ள கூட்டத்தில் ஒரு முன்னால் போராளியினை அடையாளங்கண்டுவிட்டார்கள்.

அவரைதான் முதலில் கூப்பிட்டு எந்தவித விசாரணையுமின்றி அவரை அடித்து நொருக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கும் நிலைக்கு உள்ளாக்கிவிட்டார்கள்.

இந்த வகையில் மக்களை கடும் தண்டனை மூலம் மக்களை ஓரணியில் தற்காலிகமாக இணைக்கலாம், ஆனால் நீண்டகாலத்திற்கு அது பயன்படாது.

மக்கள் உணர்வு ரீதியாக உணரவேண்டும், அதுதான் நீண்டகால தீர்வாக இருக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இந்திய இராணுவம் எமது பகுதியில் நிலை கொண்டிருந்த காலம்; இரண்டு ஊர்களுக்க்கிடையே சண்டை, இளைஞர் ஒருவர் அவருடன் படிக்கும் மாணவியினை நக்கலாக எதோ சொல்ல  ஆரம்பித்த பிரச்சினை இரண்டு ஊர்களுக்கிடையேயான சண்டையாக பரிணமிக்க இருந்தது சரியான நேரத்தில் போராளிகள் தலையிட்டமையால் உயிரிழப்பு ஏற்படவில்லை.

இரண்டு ஊர் மக்களையும் விசாரனைக்கு அழைத்த போராளிகள்; ஒரு ஊரில் உள்ள கூட்டத்தில் ஒரு முன்னால் போராளியினை அடையாளங்கண்டுவிட்டார்கள்.

அவரைதான் முதலில் கூப்பிட்டு எந்தவித விசாரணையுமின்றி அவரை அடித்து நொருக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கும் நிலைக்கு உள்ளாக்கிவிட்டார்கள்.

இந்த வகையில் மக்களை கடும் தண்டனை மூலம் மக்களை ஓரணியில் தற்காலிகமாக இணைக்கலாம், ஆனால் நீண்டகாலத்திற்கு அது பயன்படாது.

மக்கள் உணர்வு ரீதியாக உணரவேண்டும், அதுதான் நீண்டகால தீர்வாக இருக்கும்.

இதே யாழில் ஒரு காலத்தில் இந்த அணுகுமுறை பிழை என பக்கம் பக்கமாக வாதிட்டவன் நான்.

எதிர்மறையான மனோதத்துவ சிகிச்சை (reverse psychology) மூலம்  யாழ்கள உறவுகள் எனக்கு இந்த அணுகுமுறை சரியானது என புரியவைத்து விட்டனர் 🤣.

Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்+

இந்தளவு தூரம் எனக்கு ஆழமான அரசியல் பார்வை எல்லாம் இப்போதைக்குத் தெரியாது.

பெரியவர்களின் முடிவே நல்லம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.