Jump to content

கவிஞர் கா மு ஷெரிப் - பாட்டும் நானே,பாவமும் நானே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"பாட்டும் நானே,பாவமும் நானே என்று சிவ பெருமான் பாடியதாக வரும் பாடலை எழுதியவர் ஒரு இஸ்லாமியர். கவிஞர் கா மு ஷெரிப்.

கலைஞரை திருவாரூரிலிருந்து அழைத்து வந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்து விட்டவரும் இவர்தான்.தமிழ் திரையுலகில் குறைந்த பாடல்களே எழுதினாலும் சிறப்பான பாடல்கள் எழுதியவர்.


கீழே அவர் பற்றி இரண்டு செய்திகள்.
எப்பேர்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் நம் தாய் தமிழ் நாட்டில்!
---+++++-------

கா.மு.ஷெரீப் ...

இந்தக் கவிஞரின் பெயரை , நம்மில் ஒரு சிலர் மட்டுமே கேள்விப்பட்டிருப்போம் ..!

ஆனால் , அவர் எழுதிய ஒரு திரைப் படப் பாடலை, 
நம்மில் பலரும் கேட்டு மகிழ்ந்திருப்போம் ..!

அந்தப் பாடல் :
“ஏரிக்கரையின் மேலே 
போறவளே பெண்மயிலே…!”
.
ஆம்...
இப்படி ஒரு சில தேர்தெடுத்த திரைப்படப் பாடல்களை மட்டுமே எழுதி இருக்கிறார் கா.மு.ஷெரீப் !
.
சுமார் இருபது வருடங்களுக்குமுன் மறைந்து விட்ட கா.மு.ஷெரீப் குறித்து , சில இனிய நினைவுகளை , சமீபத்தில் தற்செயலாக படிக்க நேர்ந்தது .
.
சொன்னவர் சன் டி.வி. வீரபாண்டியன் !

இதோ , வீரபாண்டியன் சொன்ன சில விஷயங்கள் :
.
“இளமையின் கோளாறால், வழிதவறிப் போய் கருவுற்றுக் கலங்கினாள் மணமாகாத ஓர் இந்துப் பெண் ; காதலன் கைவிட்டுவிட்டான்.
.
பெண்ணின் தகப்பனார் கவி கா.மு.ஷெரீப்பின் நேசத்துக்குரிய நண்பர். 
இவரிடம் வந்து சொல்லி நொந்தழுதார். 
"குடும்ப மானம் கப்பலேறிவிடும்!" என்று குமைந்தார்.
.
" வேறு வழியில்லை. கருவைக் கலைக்க மருத்துவச்சி உதவியை நாட இருக்கிறேன் ” என்று கதறினார்.
.
ஷெரிப் என்ன சொன்னார் தெரியுமா ?

"உண்டான உயிரை அழிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. கருவைக் கலைப்பதை எங்கள் மார்க்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. 

ஆனால், உருவான அந்தக் கருவைக் காக்கும் பொறுப்பை கடவுள் கடமையாக்கியிருக்கிறான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்" 

என்று சொல்லி , தன் மனைவியையும் கருவுற்ற அந்தப் பெண்ணையும் லெட்சுமாங்குடிக்குப் பக்கத்திலிலிருக்கும் வேலுக்குடி என்னும் தன் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தார்.
.
குழந்தை பிறந்ததும் , அந்தப் பெண்ணைச் சத்தமின்றி அவளுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பிவைத்தார். 
.
பிறந்த அந்தக் குழந்தையைத் தன் மனைவி ஈன்ற மகவாகக் கூறி , வளர்த்து ஆளாக்கினார். 
.
அப்போது, "இந்த வயதிலும் உனக்குக் குழந்தை தேவையா?' என ஏகடியம் புரிந்தவர்களின் வசையையும் மௌனமாக ஏற்றுக்கொண்டார்.”
.
# நெகிழ்ந்து போனேன் 
வீரபாண்டியன் சொன்னதைப் படித்து விட்டு !
.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் , 
பிற சமயத்தாரையும் மதித்துப் போற்றக்கூடிய பக்குவமான அன்பு இதயம் கொண்டவராக , 
அன்னை மனம் கொண்டவராக இருந்திருக்கிறார் கா.மு. ஷெரிப்.

"அன்னையைப் போலொரு தெய்வமில்லை- அவள் 
அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை.”
.
இதுவும் கா. மு. ஷெரிப் எழுதிய பாடல்தான் ..!
.
# அந்தப் பாடலில் கா. மு. ஷெரிப் எழுதியிருப்பார் :

“துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே – நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்”
.
# இந்த வார்த்தைகள் அன்னைக்கு மட்டும் அல்ல..!
மதம் தாண்டி மனித நேயம் கொண்ட கா. மு. ஷெரிப் போன்ற அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் பொருந்தும் !

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.

 ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ – இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.

 ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?’, ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே’ ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தில், யார் எழுதியது என்று ‘குவிஸ்’ நடத்தாமல் ரசிக்கிறோம்.

 இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.
.
# வாழ்க
 கா.மு.ஷெரிப் புகழ் ..!
வளர்க மனித நேயம்.!
--------++++---------

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எழுதிய இன்னும் சில பாடல்கள்:
ஆடும் மயிலே ஆட்டம் எங்கே பாடும் குயிலே பாட்டு எங்கே - துளசி மாடம்
வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன் - சிவகாமி
மல்லியக்கா மல்லியக்கா எங்கடிபோறே - மக்களை பெற்ற மகராசி
என்னைபோலே பாக்யசாலி யாரே உலகிலே - நல்ல தங்கை
எங்கிருந்தோ இங்கு வந்தரதியே - முல்லை வனம்
சரியென்று நீயே ஒருவார்த்தை சொன்னால் சந்தோசமாக வாழலாம் - முல்லை வனம்
வேட்டி கட்டின பொம்பளே - கல்யாணம் செய்துக்கோ
எங்கும் நிறை பரம்பொருள் ஒன்றே - கல்யாணம் செய்துக்கோ
வாழ்வது போனாலும் வறுமையே வந்தாலும் நீ துயர்கொள்ளாதே - மாங்கல்யம்
வாங்க எல்லோருமே சேர்ந்து ஒன்றாகவே தீபநன்நாளை அன்பாக கொண்டாடுவோம் - கூண்டுக்கிளி

இப்படி பல ....

பொதுவாக கவி கா.மு. செரிப் அவர்களின் "வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் எசும் வையகம் இது தானடா" என்ற பாடல் உட்பட அனைத்து பாடல்களும் சிறப்பானவை. ஆயினும் திருவிளையாடல் படத்தில் வரும் "பாட்டும் நானே பாவமும் நானே" என்ற பாடலை செரிப் அவர்கள்தான் இயற்றினார் என்பதை மறுக்கும் பல எதிர் கருத்துகளும் உண்டு.

 

 

Edited by vanangaamudi
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.