Jump to content

வண்ண உள்ளாடை முதல் கரடி ஆட்டம் வரை – விநோதமான புத்தாண்டு பாரம்பரியங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வண்ண உள்ளாடை முதல் கரடி ஆட்டம் வரை – விநோதமான புத்தாண்டு பாரம்பரியங்கள்

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி மீது நமக்கு ஒவ்வொரு புத்தாண்டிலும் நம்பிக்கை வருகிறது. ஆண்டின் முதல் நாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுடன் அதிர்ஷ்டத்தை வரவேற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக கடைபிடிக்கப்படும் விசித்திரமான பாரம்பரிய கொண்டாட்டாங்களைப் பார்க்கலாம்.
New Year 2023 : வண்ண உள்ளாடை முதல் கரடி ஆட்டம் வரை - விநோதமான புத்தாண்டு பாரம்பரியங்கள்

 

புத்தாண்டு கொண்டாட்டம் என்பது நாம் ஒரு வருடத்தைத் தொடங்குவதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வருடத்தின் முதல் நாள் என்பதால் அந்த நாளை மிகவும் மகிழ்ச்சியாக கழிக்க விரும்புகிறோம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்களுக்கு தெரிந்த கொண்டாட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.

ஆனால் இப்படியெல்லாமா புத்தாண்டை தொடங்குவார்கள் என வினோதமாக பார்க்க வைக்கும் சில நிகழ்வுகளும் உலகம் முழுவது நடைபெறுகிறது.

 
 

சோளக்காட்டு பொம்மை எரிப்பு

தென்னமெரிக்க நாடான ஈக்குவடோரில் புத்தாண்டை கொண்டாட சோளக்காட்டு பொம்மைகளை எரிக்கும் வினோத பழக்கம் இருக்கிறது.

அந்த சோளக்காட்டு பொம்மைகளுடன் பழைய கெட்ட நினைவுகளை வெளிப்படுத்தும் புகைப்படங்களையும், காகிதங்களையுன் எரிக்கின்றனர்.

இவ்வாறு நள்ளிரவில் சோளக்காட்டு பொம்மைகளை எரித்து நெருப்பின் ஒளியில் புத்தாண்டை வரவேற்பதன் மூலம், பழைய மோசமான நிலையை எரித்து புதிதாக பிறக்க முற்படுவது தான் இந்த கொண்டாட்டம்.

 

உடைந்த தட்டுகள்

டென்மார்கில் ஒருவர் புத்தாண்டு அன்று எழும் போது அவரது வீட்டு வாசலில் எத்தனை உடைந்த தட்டுகளைப் பார்கிறாரோ அவ்வளவு அதிர்ஷ்டம் எந்த ஆண்டு அவருக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த உடைந்த தட்டுகாள் எங்கிருந்து வரும்?

அவரவர் வீடுகளில் இருக்கும் பயன்படுத்தப்படாத தட்டுகளை இவ்வாறு நண்பர்கள் மற்றும் விருப்பமான உறவினர்கள் வீட்டு வாசலில் உடைத்து போடுவர்.

அதிகமான நண்பர்களைக் கொண்டவர் வாசலில் அதிக தட்டு இருப்பது லாஜிக். அதிக தட்டுகள் அதிக அதிர்ஷ்டத்தை அழைத்துவரும் என்பது நம்பிக்கை.

 
 
108 மணியோசைகள்

ஜப்பானில் புத்தாண்டு அன்று 108 முறை மணி அடிக்கப்படுகிறது. இப்படி 108 மணியோசையைக் கேட்பவர்களின் பாவங்கள் கழுவப்பட்டு அனைவருக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இது ஒரு புத்த பாரம்பரியம்.

தவிர, சிரித்தபடி மகிழ்வாக இருப்பது ஆண்டு முழுவதும் நம்மை மகிழ்வாக இருக்கச் செய்யும் என்பது அவர்களின் நம்பிக்கை.

newssensetn%2F2022-12%2F01bae7bb-7676-4a
 

கலர் உள்ளாடைகள் அணிவது

புத்தாண்டு குறித்து உலகம் இருக்கும் நம்பிக்கைகளில் இது விநோதமான ஒன்று.

நாம் எந்த நிற உள்ளாடை  அணிகிறோம் என்பது கூட நமக்கு அந்த ஆண்டு எப்படி அமையும் என்பதைத் தீர்மானிக்குமாம்.

இந்த ஆண்டில் நாம் அதிக அன்பை நாடுகிறோம் என்றால் சிகப்பு நிற உள்ளாடை அணிய வேண்டுமாம்.

நமக்கு செல்வம் வேண்டுமென்றால் மஞ்சள் நிறமும் அமைதி வேண்டுமென்றால் வெள்ளை நிறத்திலும் உள்ளாடை அணிய வேண்டுமாம்!

 

வட்டமான பொருட்கள்

பிலிப்பைன்ஸ் மக்களின் நம்பிக்கையும் மிகவும் வினோதமானது தான்.

புத்தாண்டு பிறக்கும் இரவில் தங்களைச் சுற்றி வட்டமான பொருட்களை வைத்துக்கொள்வது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்பது அவர்களின் நம்பிக்கை.

நாணயங்கள் முதல் வளையங்கள் வரை பல வகையான பொருட்களை தங்களை சுற்றி வைத்துக்கொள்வது அதிர்ஷ்டம் தான்.

வீட்டு உபயோக பொருட்களை தூக்கி எரியும் பழக்கம்

புத்தாண்டு அன்று புதிதாக வாழ்க்கையைத் தொடங்க பழைய பொருட்களை தூக்கி எரியும் பழக்கம் என்பது பரவலாக உலக நாடுகளில் பார்க்க முடியும்.

இத்தாலியில் மக்கள் தங்களது பழைய சோபா, பீரோ, நாற்காலி என உபயோகமற்ற வீட்டு உபயோக பொருட்களை தூக்கி எரிவது வழக்கமாம்.

பொருட்களை ஜன்னல் வழியாக வீசி அது உடைவதைப் பார்த்து சந்தோஷப்படுகின்றனர்.

 

காகித குப்பையை எரியும் மக்கள்

வெள்ளைக் காகிதங்களையும் வண்ண வண்ண சிறிய காகிதங்களையும் தங்களது ஜன்னல் வழியாக வீசி எரிந்து புத்தாண்டை வரவேற்கின்றனர் அர்ஜென்டினா மக்கள்.

இது போல காகிதங்களை எரிவது பழைய விஷயங்களைத் துறந்துவிட்டு புதிய வாழ்க்கைகுள் நுழைவதைத்தான் குறிக்கிறது.

 

மிருகங்களிடம் பேசுங்கள்; கரடி ஆட்டம் போடுங்கள்

ரோமானிய விவசாயிகள் புத்தாண்டு அன்று தங்களது விலங்குகளுடன் நேரம் செலவிடுகின்றனர்.

அவற்றுடன் பேசி அவற்றை மகிழ்வாக வைத்திருந்தால் தங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம்புகின்றனர்.

ரோமானிய மக்கள் புத்தாண்டு அன்று கரடி வேஷமிட்டு ஆடுவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர். இப்படி ஆடினால் தீய சக்திகள் தங்களை அண்டாது என்பது அவர்களின் நம்பிக்கை.

ரோமானியாவின் இதிகாச கதைகளில் கரடிகள் மக்களைக் காக்கும் ஹீரோக்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

பிரேசில் பருப்பு – ஸ்பெயின் திராட்சை

பிரேசிலில் புத்தாண்டு அன்று லென்டில் (மைசூர் பருப்பு) எனப்படும் பருப்பை சாப்பிட்டால் செல்வம் கிடைக்கும் என நம்புகின்றனர்.

அது தவிர மாதுளை மற்றும் சிக்கன் உண்பதையும் பாரம்பரியமாக கடைபிடிக்கின்றனர்.

இதேப் போல ஸ்பெயின் மக்கள் புத்தாண்டு பிறந்ததும் திராட்சை சாப்பிட்டால் அதிர்ஷ்டம் பிறக்கும் என நம்புகின்றனர்.

Thinakkural.lk

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.