Jump to content

அரசியல்வாதிகளின் ‘இலட்சணங்கள்’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகளின் ‘இலட்சணங்கள்’

மொஹமட் பாதுஷா

ஆசிரியர்கள் தவறான பழக்கவழக்கங்கள் கொண்டவர்களாக இருந்துகொண்டும் ஒழுக்கக் கேடான காரியங்களைத் தொடர்ச்சியாகச் செய்துகொண்டும், தங்களது மாணவர்களை நல்வழிப்படுத்துவது என்பது முடியாத காரியமாகும். 

அதேபோல் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், அதிகாரத்தில் இருப்பவர்களில் கணிசமானவர்கள், பொதுவெளியிலும் திரைமறைவிலும்  குற்றங்களை இழைப்பவர்களாக, சமூகவிரோதிகளாக, ஊழல் பெருச்சாளிகளாக, ஒழுக்கம் கெட்டவர்களாக வாழ்கின்ற நாட்டில், சட்டத்தையும் மக்களையும் நெறிப்படுத்துவது அவ்வளவு சாத்தியமில்லை.   

‘கள்வனைப் பிடித்து விதானைக்கு வைத்தல்’ என்று கிராமப் புறங்களில் ஒரு பழமொழியை சொல்வார்கள். அதாவது, குற்றமிழைப்பவனை ஒரு பதவிக்கு நியமித்தல் என இது பொருள்படும். இங்கே குற்றம் என்பது களவுமட்டுமல்ல; எல்லா வகையான சமூகவிரோத செயல்களும் அடங்கும். 

குற்றவாளியையே அதனைக் கட்டுப்படுத்தும் பதவியில் அமர்த்தினால், குற்றங்களைக் குறைக்கலாம் என்ற அர்த்தத்திலேயே இந்தப் பழமொழி பிரயோகிக்கப்படும். ஆனால், இதற்கு தலைகீழாக, அதாவது அந்தப் பதவி என்ற முகமூடிக்குள் ஒழிந்துகொண்டு குற்றமிழைக்கும் போக்கையே, இலங்கையில் குறிப்பாக அரசியலில் அவதானிக்க முடிகின்றது. 

ஜனாதிபதின் ஆலோசகராக பதவி வகித்தவரும் பேராசியர் ஆஷு மாரசிங்கவை ஒரு வளர்ப்புப் பிராணியுடன் தொடர்புபடுத்தி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், நாட்டில் தற்போது பேசுபொருளாகியுள்ளன. பிரபல வர்த்தகர் தினேஸ் சாப்டரின் கொலையை விட, மக்கள் மட்டத்தில் இந்த விடயம் பரபரப்பாகப் பேசப்படுவதையும் காணமுடிகின்றது. 

மக்களை ஆள்வதற்கு பொருத்தமற்ற பண்புகளைக் கொண்ட அரசியல்வாதிகள்,  அதிகாரத் தரப்பினர் செய்த காரியங்களைப் பட்டியலிட்டுப் பார்த்தால், இந்தச் சம்பவம் கடைசியில் தான் இணைந்து கொண்டுள்ளது. இந்தச் சம்பவமோ அல்லது இவரோ முதலும் அல்ல; கடைசியுமல்ல. 

இலங்கை அரசியலில், இப்படியான சாயல்களைக் கொண்டவர்களின் வகிபாகம் தொடர்ச்சியாக இருந்து வருவதைக் காண்கின்றோம். 

தலைசிறந்த பண்பாடுள்ள அரசியல் தலைவர்கள், விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இலங்கை அரசியலில் இருக்கின்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. 
ஆயினும், படிப்பறிவு அற்றவர்கள், ஒழுக்கம் கெட்டவர்கள்,  ஊழல் பெருச்சாளிகள், போதைப்பொருள் வியாபாரிகள், மதுக்கடை உரிமையாளர்கள், குற்றச் செயல்களுடன் தொடர்பைக் கொண்ட பலரும் இலங்கை அரசியலில் அங்கம் வகிக்கின்றார்கள். 

இன்னும் கண்டுபிடிக்கப்படாத ‘சிங்கங்களும் பிராணிகளும்’ இருக்கலாம். ஆனால், இந்த விவகாரத்தைத் தவிர்த்து விட்டு நோக்கினாலும் இலங்கை அரசியலில் கேடுகெட்ட அரசியல்வாதிகள் நிரம்பி இருப்பதை மக்கள் அறிவார்கள். 

குற்றங்களைத் தடுப்பதற்கு போதுமானளவுக்கு சட்டங்கள் இலங்கையில் இருக்கின்றன. அத்துடன் மக்களை நல்வழிப்படுத்துவதற்கான மதக்கோட்பாடுகளும் நிறையவே உள்ளன. ஆனாலும், குற்றச் செயல்களையும்  ஒழுக்கக் கேடான காரியங்களையும், இன்றுவரை கட்டுக்குள் வைத்திருக்க முடியாது போயுள்ளது. உண்மையில், இந்த நவீன உலகில் இது ஏறுமுகமாக உள்ளதைக் காண்கின்றோம்.  

இலங்கையின் அரசியலில் அல்லது பாராளுமன்றத்தில் பல கல்வியியலாளர்கள், துறைசார் வல்லுநர்கள், சமூக சிந்தனையாளர்கள் இருக்கின்றார்கள். ஆயினும், 225 லீற்றர் பாலில் சில துளி விசம் விழுந்ததைப் போல, ஒரு சிலரால் எல்லாம் கெட்டுநாசமாகி உள்ளது என்றுதான் தோன்றுகின்றது. 

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், எம்.பிக்களின் கல்வித் தகைமை பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தன. அதன்படி, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் 90 பேர் க.பொ.த உயர்தரம் சித்தியடையாதவர்களாக உள்ளனர் என்றும் கணிசமானவர்கள் சாதாரண தரம் கூட சித்தியடையவில்லை என்றும் பரபரப்பான தகவல் வெளியானது. 

அதுமட்டுமன்றி, குற்றங்களுடன் தொடர்புபட்டவர்கள், போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்பைக் கொண்டவர்கள், முறைகேடாகப் பணம் உழைப்பவர்கள் எனப்பலர், மக்கள் பிரதிநிதிகளாக இருந்துள்ளனர். சண்டியர்கள் முதற்கொண்டு, பாதாள உலகக் குழுக்களுடன் திரைமறைவு உறவைக் கொண்டவர்களும் அரசியல்வாதிகளாக வலம் வந்தனர்; வருகின்றனர். 

இதைத் தவிர, நாட்டையே கொள்ளையடித்த அரசியல்வாதிகளையும் ஆட்சியாளர்களையும் நாம் கண்டிருக்கின்றோம். நாடும் மக்களும் இந்த நிலைமைக்கு வருவதற்குக் காரணமானவர்கள் கூட, இப்போது சுதந்திரமாக நடமாடித் திரிவதையும் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம்.

பொலிஸ் துறையில் கணிசமானவர்கள் இலஞ்சத்தில் மூழ்கிக் கிடந்தால், சட்டத்தை எப்படி முறையாக நடைமுறைப்படுத்த முடியும்? குற்றங்களை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? அதேபோல், அரசியல்வாதிகளே இந்த இலட்சணத்தில் இருந்தால், நாட்டுப் பிரஜைகளை எப்படித் திருத்த முடியும்?

பாராளுமன்ற உறுப்பினராக, அரசியல்வாதியாக வருவதற்கு கல்வித் தகைமை முக்கியமானதாக ஆக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்படுகின்றது. ஆனால், கல்வித் தகைமை மட்டும் போதாது; அதைவிட, தனிமனித ஒழுக்கமும் சமூகசிந்தனையும் சட்டத்தை மதிக்கும் தன்மையும் பல்லினங்கள் பற்றிய புரிதலும் அவசியமாகும். 

‘பேராசியர்’ என்ற அடைமொழி கொண்ட ஒருவர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை, இன்னும் விசாரணையில் நிரூபிக்கப்படவில்லை. ஆனால், அவ்வாறு நிரூபிக்கப்படுமாயின், கல்விக்கும் அப்பாலான ஒழுக்க விழுமியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற விடயம் இன்னுமொரு முறைவலுப்பெறுவதாக அமையும். 

ஓர் அரசியல்வாதிக்கு தனிப்பட்ட வாழ்க்கையும் பொதுவாழ்க்கையும் உள்ளது. ஆனால், இலங்கை போன்ற நாடுகளில், இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்ததாகவே இருக்கின்றது. அத்துடன், அரசியல்வாதிகளின் தனிப்பட்ட பண்பியல்புகளும், ஏதோ ஒருவகையில் பொது அரசியலிலும் செல்வாக்கு செலுத்தலாம் என்பதையும் மறுக்கமுடியாது. அத்துடன் இப்போர்ப்பட்டவர்கள் சமூகத்தை நல்வழிப்படுத்தவே முடியாது. 
ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட அடிப்படையில் குறை நிறைகளோடுதான் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, அதற்கு அரசியல்வாதிகள் விதிவிலக்காக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், பொதுவாழ்வு என்று வந்துவிட்டால், தம்மை அவர்கள் மாற்றிக் கொள்வது தவிர்க்க முடியாதது.

ஏனெனில், சட்டத்தை மதிக்கின்ற, நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்ட மக்கள் சமுதாயத்தை உருவாக்க வேண்டுமென்றால், அதற்குமேலே இருப்பவர்கள் அதாவது ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள், அதைவிடச் சிறந்த பண்பியல்புகளைக் கொண்டவர்களாக இருக்கவேண்டும். 

இல்லாவிட்டால், நாம் யாரால் ஆளப்படுகின்றோம் என்பதை மக்கள் மீள்வாசிப்புச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை, இப்படியான மோசமான சம்பவங்கள் ஏற்படுத்திவிடுகின்றன. 

மக்களுக்கு முன்மாதிரியாகச் செயற்படுவதற்குப் பதிலாக, நமது மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளே, அடிப்படை ஒழுக்கம் கூட இல்லாமல் ‘சண்டித்தனம்’ காட்டியதையும் நாட்டுமக்கள் கண்கூடாகக் கண்டார்கள். பாராளுமன்றுக்கு வெளியே, அவர்கள் செய்கின்ற கேடுகெட்ட செயல்களையும் அறிவார்கள். 

வறுமைக்காக தேங்காய் திருடிய பிள்ளை கைதான சந்தர்ப்பங்கள் நடந்துள்ளன. அறியாத்தனமாக குற்றத்தைப் புரிந்த நபர்களும் தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் இலாவகமாகத் தப்பித்துக் கொண்டார்கள் என்பதே நிதர்சனம். 

அதேபோன்று, எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய தரப்பினர், எல்லாம் தெரிந்துகொண்டு  குற்றமிழைப்பதும் அருவெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவதும் அதைச்சட்டம் வேறுவிதமாகக் கையாள்வதும் ஏற்புடையதல்ல; என்றாலும், அது நமக்குப் புதிதல்ல. 

‘விபச்சாரி’ விபச்சாரத்தில் ஈடுபடுவதும், பரவலாக ‘கள்வன்’ என அறியப்பட்டவன் களவில் ஈடுபடுவதும் ஆச்சரியமான விடயமல்ல. ஆனால்,  தன்னை ஒரு பெரிய ஆளாக,  சமூக அந்தஸ்து உள்ளவராக, ஒழுக்கமுள்ளவராகக் காட்டிக் கொண்டு, திரைமறைவில் தலைகீழாகச் செயற்படுகின்ற ‘பசுத்தோல் போர்த்திய புலிகள்’தான் இங்கு ஆபத்தானவர்கள். 
இவ்வாறவர்கள் அரசியலில் மட்டுமல்ல, சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் இருக்கின்றார்கள். ஊரில் பெரியவர், ஆசிரியர், மதபோதகர், சாமியார், பரிகாரி....எனப் பலவேடங்களில் அவர்கள் திரிகின்றார்கள். 

ஆனால், இவர்கள் எல்லோரையும் விட, ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் முக்கியமானவர்கள். ஏனெனில், அவர்கள் சமூகத்தில் ஏற்படுத்துகின்ற தாக்கம் அதிகமானது. எனவே, முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள், படித்தவர்களாக இருப்பது மட்டுமன்றி, சட்டத்தை மதிப்பவர்களாகவும் மக்களை, நேசிப்பவர்களாகவும் தனிமனித ஒழுக்கத்தை எல்லாத் தருணங்களிலும் பேணுவர்களாகவும், தமது இலட்சணங்களை வகுத்துக் கொள்ளவேண்டியது அவசியமாகும். 

அந்தவகையில்,  இலங்கையில் கணிசமான அரசியல்வாதிகளின் நடத்தைக் கோலங்கள், இலட்சணங்கள் தொடர்ச்சியாக முகம் சுழிக்கும் வண்ணம் இருந்து வருவதைக் காணமுடிகின்றது. இப்போது பேசப்படும் செல்லப் பிராணி விவகாரம் இதில் ஒரு சம்பவம் மட்டுமே!

இதற்குமுன்னர் இடம்பெற்ற குற்றங்கள்,  ஒழுக்கக் கேடுகள், ஊழல்களுக்கு எதிராக அரசாங்கமும் சட்டமும், சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தி இருந்தால், பிராணிகள் மட்டுல்ல, மக்களும் நாடும் கூட காப்பாற்றப்பட்டிருக்கும்.  
 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசியல்வாதிகளின்-இலட்சணங்கள்/91-309875

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.